13/09/2025
என் வினையை ஏற்ற அப்பா!
மாரடைப்பு சிகிச்சை முடிந்து நலமானார்!
வணக்கம்,
நடந்தது அதிசயம் ஆனாலும் கொடுமையான மனநிலையை அடைந்தேன்.
கடந்த 8 ம் தேதி காலையில் தூங்கி எழமுடியாமல் படுக்கையிலேயே போராட்டம்.
ஒருவழியாக எழுந்து நடக்க முயன்றால் அடியெடுத்து வைக்க போராட்டம். உடம்பெல்லாம் வியர்வை. சிறிது நேரத்தில் மெல்ல நடந்தேன்.
வியர்வையை துடைத்துவிட்டு அங்கும் இங்குமாக நண்பகல் வரை எங்கே விழுவேன்னு தெரியாமல் மன கட்டுப்பாட்டோடு, உடலோடு பேசியவாறு அங்கும் இங்கும் நடந்துகொண்டே இருந்தேன்.
திரும்ப திரும்ப வியர்த்து கொட்டியது. வாலை அம்மா , சிவலிங்கம் முன்பு நின்று பேசினேன்....
" எதுவாக இருந்தாலும் சில மாதங்களுக்கு ஒத்திவையுங்கள். அதை மனப்பூர்வமாக ஏற்கிறேன். தோல்வி நிலையில் போனால் அவமானம். அதை எனக்கு கொடுக்காதீர்கள்" என்று வேண்டிய நேரம் 11.00 - 12.00 மணியளவு.
12 மணிக்கு பிறகு உடல் இயல்பான நிலைக்கு வந்தது.
ஊரிலிருந்து தம்பியின் அழைப்பு. இராமேஸ்வரம் கடலுக்கு போனோம்... அப்பாவுக்கு லேசான மாரடைப்பு. மயங்கிய நிலையில் இராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.
அவசர சிகிச்சையாக ஊசி போட்டுள்ளார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவமனை போகிறோம் என்றார்.
போட்டிருந்த உடையோடு காலை 2 மணிக்கு மருத்துவமனை சென்றடைந்தேன்.
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றார்கள். ரிப்போர்ட் எல்லாம் எடுத்து பார்த்தால் நான் எனக்கு எடுத்த சமீபத்திய ரிப்போர்ட் படியே இருந்தது.
அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. விவசாயி உடம்பு. அப்பா ஒரு விசித்திரமான நபர். மிகவும் தெளிவானவர். அரிச்சந்திரன் வேடத்தில் நடித்த நாடக நடிகர். உண்மையிலும் அரிச்சந்திரன். அழகான பாடகர்.
அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால் இருவருக்குமான அன்பின் பிணைப்பை சிறு சிறு சொற்கள் முடிந்துவிடும்.
மருத்துவம் நடக்கிறது. ஆன்ஜியோ நடந்தது. இதயத்தில் 3 பிளாக் உள்ளது என்று ஸ்டன்ட் வைத்துள்ளார்கள். நலமாக வீட்டில் இருக்கிறார்.
சிகிச்சையில் இருக்கும்போது அவரை பார்க்க சென்றேன். அவர் படுத்திருந்த காட்சியை சிவ சிவா னு பார்த்துவிட்டு....
அப்பா உங்களுக்கு எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாதிங்க என்றேன்.
அழுது விட்டார். அவரின் கண்ணீரை பார்த்ததே இல்லை . கண்ணீரோடு என் கையைப்பிடித்து கவலை என்னைப்பற்றி இல்லை. உன்னை நினைத்துதான் என்றார்... விவரம் தெரிந்து என் கையை தொட்டது அன்றுதான். என்னை உருக்குலைய வைத்துவிட்டது.
என்னை பெற்றவர் என்பதை தாண்டி அவர் மகனை பார்த்து மகிழ்ந்த, பெருமைப்பட்ட காலங்கள் மாறிய சூழ்நிலைகளை ஏற்க முடியாத குமுறல் இதயத்தை பாதித்துவிட்டது.
இறுதி :
போராட்டம், புரட்சி, மக்கள் நலன் , அது இதுனு எதையும் எவன் சொன்னாலும் செய்யாதீர்கள்.
அதை செய்யும் முறையை அறிந்து செய்யும் வரை அமைதியாக குடும்பத்தை கவனியுங்கள். பொருளாதாரத்தை ஒருபோதும் இழந்து விடாதீர்கள். முன்னேறி சென்றுகொண்டே காத்திருங்கள்.
நல்ல அனுபவம் வந்தபின் சுயமாக முடிவெடுத்து பிறருக்கு உதவுங்கள். சுய முடிவு எடுக்கும் நிலையில் என்னிடம் தொடர்புக்கு வரவும்.
வாட்சப் எண்: 098948 53920
அதுவரை நான் செய்த தவற்றை செய்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வணக்கம்.
அக்கறையுடன்
ஏனாதி பூங்கதிர்வேல்