கஞ்சமலையார்

கஞ்சமலையார் நல்லதே நடக்கும்

என் வினையை ஏற்ற அப்பா! மாரடைப்பு சிகிச்சை முடிந்து நலமானார்!வணக்கம்,நடந்தது அதிசயம் ஆனாலும் கொடுமையான மனநிலையை அடைந்தேன்...
13/09/2025

என் வினையை ஏற்ற அப்பா!

மாரடைப்பு சிகிச்சை முடிந்து நலமானார்!

வணக்கம்,
நடந்தது அதிசயம் ஆனாலும் கொடுமையான மனநிலையை அடைந்தேன்.

கடந்த 8 ம் தேதி காலையில் தூங்கி எழமுடியாமல் படுக்கையிலேயே போராட்டம்.

ஒருவழியாக எழுந்து நடக்க முயன்றால் அடியெடுத்து வைக்க போராட்டம். உடம்பெல்லாம் வியர்வை. சிறிது நேரத்தில் மெல்ல நடந்தேன்.

வியர்வையை துடைத்துவிட்டு அங்கும் இங்குமாக நண்பகல் வரை எங்கே விழுவேன்னு தெரியாமல் மன கட்டுப்பாட்டோடு, உடலோடு பேசியவாறு அங்கும் இங்கும் நடந்துகொண்டே இருந்தேன்.

திரும்ப திரும்ப வியர்த்து கொட்டியது. வாலை அம்மா , சிவலிங்கம் முன்பு நின்று பேசினேன்....

" எதுவாக இருந்தாலும் சில மாதங்களுக்கு ஒத்திவையுங்கள். அதை மனப்பூர்வமாக ஏற்கிறேன். தோல்வி நிலையில் போனால் அவமானம். அதை எனக்கு கொடுக்காதீர்கள்" என்று வேண்டிய நேரம் 11.00 - 12.00 மணியளவு.

12 மணிக்கு பிறகு உடல் இயல்பான நிலைக்கு வந்தது.

ஊரிலிருந்து தம்பியின் அழைப்பு. இராமேஸ்வரம் கடலுக்கு போனோம்... அப்பாவுக்கு லேசான மாரடைப்பு. மயங்கிய நிலையில் இராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்.

அவசர சிகிச்சையாக ஊசி போட்டுள்ளார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவமனை போகிறோம் என்றார்.

போட்டிருந்த உடையோடு காலை 2 மணிக்கு மருத்துவமனை சென்றடைந்தேன்.

மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்றார்கள். ரிப்போர்ட் எல்லாம் எடுத்து பார்த்தால் நான் எனக்கு எடுத்த சமீபத்திய ரிப்போர்ட் படியே இருந்தது.

அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. விவசாயி உடம்பு. அப்பா ஒரு விசித்திரமான நபர். மிகவும் தெளிவானவர். அரிச்சந்திரன் வேடத்தில் நடித்த நாடக நடிகர். உண்மையிலும் அரிச்சந்திரன். அழகான பாடகர்.

அதிகம் பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால் இருவருக்குமான அன்பின் பிணைப்பை சிறு சிறு சொற்கள் முடிந்துவிடும்.

மருத்துவம் நடக்கிறது. ஆன்ஜியோ நடந்தது. இதயத்தில் 3 பிளாக் உள்ளது என்று ஸ்டன்ட் வைத்துள்ளார்கள். நலமாக வீட்டில் இருக்கிறார்.

சிகிச்சையில் இருக்கும்போது அவரை பார்க்க சென்றேன். அவர் படுத்திருந்த காட்சியை சிவ சிவா னு பார்த்துவிட்டு....

அப்பா உங்களுக்கு எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாதிங்க என்றேன்.

அழுது விட்டார். அவரின் கண்ணீரை பார்த்ததே இல்லை . கண்ணீரோடு என் கையைப்பிடித்து கவலை என்னைப்பற்றி இல்லை. உன்னை நினைத்துதான் என்றார்... விவரம் தெரிந்து என் கையை தொட்டது அன்றுதான். என்னை உருக்குலைய வைத்துவிட்டது.

என்னை பெற்றவர் என்பதை தாண்டி அவர் மகனை பார்த்து மகிழ்ந்த, பெருமைப்பட்ட காலங்கள் மாறிய சூழ்நிலைகளை ஏற்க முடியாத குமுறல் இதயத்தை பாதித்துவிட்டது.

இறுதி :

போராட்டம், புரட்சி, மக்கள் நலன் , அது இதுனு எதையும் எவன் சொன்னாலும் செய்யாதீர்கள்.

அதை செய்யும் முறையை அறிந்து செய்யும் வரை அமைதியாக குடும்பத்தை கவனியுங்கள். பொருளாதாரத்தை ஒருபோதும் இழந்து விடாதீர்கள். முன்னேறி சென்றுகொண்டே காத்திருங்கள்.

நல்ல அனுபவம் வந்தபின் சுயமாக முடிவெடுத்து பிறருக்கு உதவுங்கள். சுய முடிவு எடுக்கும் நிலையில் என்னிடம் தொடர்புக்கு வரவும்.

வாட்சப் எண்: 098948 53920
அதுவரை நான் செய்த தவற்றை செய்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வணக்கம்.
அக்கறையுடன்
ஏனாதி பூங்கதிர்வேல்

இளைஞர்களுக்குஎச்சரிக்கை பதிவு∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆அரசின் செயல்பாடு மீது கோபம் உள்ளதா?உணவு, மருத்துவ மாஃபியா மீது கோபம் இருக்கா? ...
12/09/2025

இளைஞர்களுக்கு
எச்சரிக்கை பதிவு
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

அரசின் செயல்பாடு மீது கோபம் உள்ளதா?

உணவு, மருத்துவ மாஃபியா மீது கோபம் இருக்கா?

சாதி, மொழி, மதம், நாடு, எல்லை, இராணுவம், போர்கள், மரணங்கள் பற்றி கோபம் வருதா?

அதை நண்பர்கள், வீட்டு உறவுகள், போராட்டம், வழக்கு , சமூக வலைதளங்களில் பதிவு என இப்படி ஏதோ ஒன்று உங்கள் மனதில் உள்ளது வெளியே போகிறது என்றால் நீங்கள் உங்களை புதைக்கும் புதை குழியை உங்களாலேயே தோண்ட வைப்பார்கள்.

சரி.... நிற்க.

மேலே கூறிய அனைத்து கோபமும் எனக்கும் இருந்தது. உயிருள்ளவரை இருக்கும்.

இதை உளவுத்துறை சிதைக்கும் வழிகள் பல உண்டு. யார் ? அவன் பின்னணி? அறிந்து வியூகம் வகுத்து எல்லாம் நடக்கும்.

உதாரணமாக, சொல்லக்கூடாது என்று இருந்த ஒன்றை சொல்கிறேன்.

எனக்கு கல்யாணம் என்று ஒரு பெண்ணை கொடுத்தார்கள். நானும் இரண்டு குழந்தைகள் பெற்றேன்... தேவைகள் எல்லாம் முடிந்தது ... அவ்வளவுதான் முடிந்தது.

அந்த பெண் வீட்டிற்கு போனால் சுவற்றில் போலிஷ் , உளவுத்துறை && டேஸ் எண்கள் எழுதி போட்டிருக்கும்.

ஏனாதி பூங்கதிர்வேல் மூலம் எதாவது உங்களுக்கு தொந்தரவு என்றால் உடனே அழைக்கவும் என்று தாயுள்ளம் கொண்ட போலிஷ் சொன்னதாம்.

என்னிடம் குழந்தை பெற்ற பெண்ணே இடையில் ஒரு சூழ்நிலையில் கூறினார்.

இது எனக்கு மட்டும் நடந்தால் எதோ இருவருக்கும் பிடிக்கல முடிந்தது என்று போகலாம்.

சமூக அக்கறையை தீவிரமாக கொண்ட அனைவருக்கும் நடந்துள்ளது.

மிகப்பெரிய வலை இது.
அந்த பெண்ணின் அப்பாவை முதலில் ஒரு பாலியல் வழக்கில் சிக்க வைத்து, அவரின் பொருளாதாரத்தை சுரண்டி விடுதலை கொடுத்து , அதற்கு இடையில் என்னென்ன செய்யனுமோ எல்லாம் சிறப்பாக செய்துவிட்டார்கள்.

அந்த பெண் நினைத்தாலும் அப்பா கட்டுப்பாட்டு வலை விடாது. அவரே பாவம் " உளவுதுறை கட்டுப்பாடு ".
இது எல்லாம் மர்மமான செயல்பாடு. பாதிப்புக்கு உள்ளானவரே புரிவது கடினம்.

இது இன்னும் சிலருக்கு கதை போல் இருக்கும்.

" நீங்கள் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிட்டு , சாக்லேட் சாப்பிட்டு பணத்தை கொடுத்துட்டு போய்டுவிங்க... ஆனால் உற்பத்தி நடக்க சேர்க்கப்படும் கெமிக்கல்ஸ் & மற்ற மூலப்பொருட்கள், உண்மை, பொய் எல்லாம் மறைந்தே இருக்கும். உங்களுக்கு ஜில்லென்று ஒரு கிரீம். "

இதுபோல் சமூக ஆர்வலர்களின் வாழ்க்கை பல மூளைகளில் பதிவு செய்து, பரப்பப்பட்டு , யாரிடம் சேர்க்க வேண்டுமோ அங்கு போய் நிற்கும்.

என் வயதில் தெரிந்த ஒன்று , மிகப்பெரிய சாட்சி....
தோழர் முகிலன்.

ஆற்று மணல் குவாரிகளுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுப்பட்டார். அவரது நிலை இப்போது என்ன? உயிரோடு இருக்கிறாரா? என்றுகூட தெரியவில்லை.

என் வாழ்க்கையில்
பல்வேறு கொலை முயற்சி, போதைப்பொருள் மூலம் அடிமையாக்கும் முயற்சி, பொம்பளய வச்சு முயற்சி, பொருளாதார அடிமைத்தன முயற்சி,
எல்லாத்தையும் கடந்து வாகன விபத்தில் சாவு முயற்சி....

நான் யாரென்று எனக்கு தெரியும். எனக்கு உள்ள " அருள் காப்பு " பற்றி பூச்சி புழு அறிய முடியாது.

சமூக அக்கறை உள்ள இளைஞர்கள் எதாவது பெரிய புரட்சி செய்வதுபோல் அவர்களுக்கு இரையாகிட வேண்டாம்.

சமகால உலக அரசியல் புரிந்த நபர்களை தேடுங்கள். அவர்களுடன் பயணம் செய்யுங்கள்.

என்னோடு பயணம் செய்ய விரும்பும் நபர்கள் வாட்ஸ்அப் மூலம் பேசுங்கள். எண் : 098948 53920

வணக்கம் நண்பர்களே...நான் ஏனாதி பூங்கதிர்வேல் பேசுகிறேன்.இதுவரை கண்ட அரசியல், செயல், சவால்களை தந்த தொடக்கம் ... லட்சிய தம...
10/09/2025

வணக்கம் நண்பர்களே...
நான் ஏனாதி பூங்கதிர்வேல் பேசுகிறேன்.

இதுவரை கண்ட அரசியல், செயல், சவால்களை தந்த தொடக்கம் ...

லட்சிய தமிழ் தன்னாட்சி இயக்கம், தமிழ் மாணவர் பேரவை, மாவேள், சீமை கருவேல மரம் ஒழிப்பு இயக்கம்,
தற்சார்பு மக்கள் கட்சி , உழவர் விடுதலைக் கழகம்,
கஞ்சகம் என்பதில் களத்தில் உடன் இருந்தவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக வலைதள நண்பர்கள் அறிவீர்கள்.

இனியும் தனித்து நின்று இயன்றதை செய்வதைவிட இந்த மக்கள் மீது அக்கறையான கட்சியோடு இணையவும், நல்லோரை இணைத்து விடவும் விரும்புகிறேன்.

மிகப்பெரிய இணைப்பு விழாவாக இருக்கும். இருக்கனும். எம்மீது நம்பிக்கை உள்ளவர்கள் வாட்சப்பில் உங்கள் விவரங்களை அனுப்பவும். எண் : 098948 53920

மனித இனம் அழிவை தேடி வேகமாக ஓடுகிறது!நல்ல உணவை கொடுப்பது குற்றம்!நஞ்சு உணவாலே வரும் நோய்களை மூலிகை மருத்துவம் மூலம் சரி ...
08/09/2025

மனித இனம் அழிவை தேடி வேகமாக ஓடுகிறது!

நல்ல உணவை கொடுப்பது குற்றம்!

நஞ்சு உணவாலே வரும் நோய்களை மூலிகை மருத்துவம் மூலம் சரி செய்வது குற்றம்!

உடன் பணியாற்றிய ஊழியர்களை வைத்தே நிர்வாகத்தை சிதைத்தார்கள்.

உடல் , மன நலத்தை கெடுக்க
குடும்பத்தை வைத்தே சிதைத்தார்கள்.

இப்போது ஒரு இடத்தை காலி செய்வதாக கட்டிட உரிமையாளரிம் கூறிய பின் 10 நாட்கள் கழித்து கதவை திறந்தால் கதவு திறக்கவில்லை . பூட்டையே மாத்திட்டான். சாவி திறக்கவில்லை.

உள்ளே வைத்திருந்த 3 நோயாளிகள் படுக்கை, ஒரு மசாஜ் டேபிள் காணோம். கேட்டால் சாவி உங்களிடம் தானே இருந்தது என்று கதை சொல்றான்.

மொத்த பொருளோட மதிப்பே 50 ஆயிரத்தை தான்டாது. இதை திருடி என்ன செய்ய போறானுங்க தெரியவில்லை.

என்ன செய்தாலும் சாகவும் மாட்றான்...
எவ்வளவு மன அழுத்தம் கொடுத்தாலும் திரும்ப திரும்ப வரான்...

இதுதான் உங்கள் பிரச்சனை....
உங்களோடு கொலைகாரன், கொள்ளைக்காரன், விபச்சார வியாபாரிகள் இருக்கான்னு ஆடுறிங்க....

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்... என்னோடு அந்த இறைவனே இருக்கான்....

நான் ஒரு அரை மென்டல்....
ஒருநாள் இரவில் ஆடுறவன் மொத்த வீடும் கரியாகிடும்!

#கஞ்சமலையார்

08/09/2025

#திருக்குறள்1111, #காமத்துப்பால், #களவியல், #நலம்புனைந்துரைத்தல்,

திருக்குறள் 1111 📜✨, காமத்துப்பாலில் உள்ள களவியல் 🗝️🪄, நலம்புனைந்துரைத்தல் 🙌💬 என்ற பகுதியில் இடம்பெறுகிறது.
இதன் வரிகள் "நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ์ பவள்" என்பதாகும். 🗣️🎶 இது ஒரு உவமையாகப் பயன்படுத்தப்படுகிறது. 🪷💞
இந்தப் குறள், அனிச்சப் பூவை உவமையாகப் பயன்படுத்துவதைக் காட்டுகிறது 🌸➡️💖. அனிச்சப் பூ மிகவும் மென்மையானது எனினும், காதலியோ அதைவிட மென்மையானவர் என்று கூறுவதன் மூலம் தன் காதலியின் மென்மையை மிகைப்படுத்திக் கூறுகிறாள். 🪻✨ இது நலம்புனைந்துரைத்தல் என்பதன் கீழ் வரும், அதாவது ஒருவர் தன் காதலியின் நலத்தை புனைந்துரைப்பது ஆகும். 🤝💑

குறளின் விளக்கம் 📖:

நன்னீரை வாழி அனிச்சமே: மிகவும் மென்மையான மலரான அனிச்சப் பூவே, நீ நெடுங்காலம் வாழ்வாயாக. 🌷⏳
நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பवள்: உன்னை விட மிகவும் மென்மையான தன்மையைக் கொண்டவள் நான் விரும்பும் என் காதலி. 💗👩‍❤️‍💋‍👨
பொருள் 📝:

இந்தக் குறள், ஒரு பெண், தன் காதலியை விவரிக்கும்போது அனிச்சப் பூவை உவமையாகப் பயன்படுத்துவதை காட்டுகிறது. 🌸🪶
அனிச்சப் பூ மிகவும் மென்மையானது எனினும், காதலியோ அதைவிட மென்மையானவர் என்பதைச் சொல்லுவது ద్వారా அவர் காதலியின் மென்மையை உயர்த்திக் கூறுகிறார். 🌼💖
இது நலம்புனைந்துரைத்தல் என்பதன் கீழ் வரும், அது ஒருவர் தன் காதலியின் நலத்தை புனைந்துரைப்பது ஆகும். 🫶😊

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

#திருக்குறள்1111, #காமத்துப்பால், #களவியல், #நலம்புனைந்துரைத்தல், #அனிச்சப்பூ, #அனிச்சமே, #நன்னீரైవாழி, #நின்னினும், #மேன்மை, #பெண்காதல், #காதலியின் மென்மை, #உவமை, #புள்ளிவிவரம், #குறள் விளக்கம், #பொருள், #உவமை, #தமிழ்கவிதை, #காமசிஷு, #அனித்தி, #மலர், #அனிச்சப்பூவின் மென்மை, #திருக்குறள்_இலக்கியம், #தமிழ்_愛, #காதலின்அடம்

08/09/2025

சீமைக் கருவேல மரம்

Anti Asthma Herbal Powder | 100% Natural Supplement | MaavelIngredients (Herbal Composition): Tulsi, Mint, Coriander See...
25/08/2025

Anti Asthma Herbal Powder | 100% Natural Supplement | Maavel

Ingredients (Herbal Composition):

Tulsi, Mint, Coriander Seeds, Black Pepper, Cumin Seeds, Cardamom, Cloves, Dry Ginger Powder, Adathodai 🪴🌱🌾🫚🟤🎯🌿

Dosage: Daily twice or as advised by a physician. ⏱️

Target Use: Supports respiratory comfort and easy breathing.

Sale Price : ₹950.00

Buy Online : https://maavel.com/product/anti-asthma-herbal-powder-100-natural-supplement-maavel/

WhatsApp Oder : 9894853920

Ingredients (Herbal Composition) Tulsi (Holy Basil) 🪴 Mint 🌱 Coriander Seeds 🌾 Black Pepper 🫚 Cumin Seeds 🟤 Cardamom 🎯 Cloves 🌿 Dry Ginger Powder 🫚 Adathodai (Andrographis paniculata) 🌿

காலாங்கி நாதன் கூற்று ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆விசுவாசிவம் -  #கஞ்சமலையார் மண் தின்று பிழைக்கும் ஒன்று நன்றேபுண் தின்று பிழைக்க...
23/08/2025

காலாங்கி நாதன் கூற்று
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
விசுவாசிவம் - #கஞ்சமலையார்

மண் தின்று பிழைக்கும் ஒன்று நன்றே
புண் தின்று பிழைக்கும் ஒன்றும் நன்றே
உன் தின்று பிழைக்கும் ஒன்றா நன்று?

நெறியறியா குறியிரண்டு கூடி ஒழுகிப் போடுவது
சுற்றம் குற்ற ஐயம் ஈனுவதே அன்றி
மற்றது இல்லை பிள்ளை என்றானே காலங்கியே !

புரிந்தது குறியில் விழுந்தது நெறியில் அறுந்தது
அறிந்தது அருந்துது சுனையின் அமிழ்து
அறியா உயிரும் அருந்துது வினையின் விசமது!

ஓம் நம சிவா ய !

தேன்பூ தேடேனும் தேனி அமர்த்திவான் சுருக்கி ஊண் காத்ததேனே! திரவியமே! நலமே !சிவமே!உன் மக்களும் வாழ்க!- கஞ்சமலையார்
22/08/2025

தேன்பூ தேடேனும் தேனி அமர்த்தி
வான் சுருக்கி ஊண் காத்த
தேனே! திரவியமே! நலமே !சிவமே!

உன் மக்களும் வாழ்க!
- கஞ்சமலையார்

தூமையும் தாயும்!∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆தூமை யான தூமை தொன்னூற்று ஒன்பதிலேதூமை யடக்கிய மரபும் சேர்ந்தன ஆனனநரம்பு உடம்பு விதிமதி வினை...
22/08/2025

தூமையும் தாயும்!
∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆

தூமை யான தூமை தொன்னூற்று ஒன்பதிலே

தூமை யடக்கிய மரபும் சேர்ந்தன ஆனன

நரம்பு உடம்பு விதிமதி வினை எனவே

தொன்னூற்று ஒன்பதிலே
தொழுவீர் தம் தேவனையே!

- விசுவாசிவம்
- கஞ்சமலையார்

இந்த கிராமத்து இறைவா MKR நாடகம் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.முறைப்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப...
21/08/2025

இந்த கிராமத்து இறைவா MKR நாடகம் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

முறைப்படி சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாலும் சம்பந்தப்பட்ட துறையினர் கவனிக்க வேண்டும்.

தமிழர் மற்றும் உலக அளவில் நடக்கும் பாலியல் துஷ்பிரயோக கலாச்சார சீர்கேட்டை ஆதரிக்கும் பேச்சுக்களை பேசுவதும், பாவனைகள் செய்வதும் இவர்கள் குழுவில் முக்கியமாக நடக்கிறது.

மற்றதும் கவனிக்க வேண்டும். பலவருடங்கள் பல கோடியில் எடுக்கும் படங்களுக்கு தனிக்கை உண்டு. ஒருநாள் கூத்துக்கு வரும் நபர்கள் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவது சட்ட அமைப்புக்கே அவமானம்.

இது குழந்தைகள் & மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு வழிவகுக்கும் மிகவும் அச்சுறுத்தல் தரும் செயல்.

மேலும், குறிப்பிட்ட சாதி துஸ்பிரயோகமும் நடக்கிறது. இந்திய சினிமா துறையில் பேசப்படாத கேவலம் கிராமங்களில் செய்கிறார்கள்.

அரசு கவனிக்க வேண்டும் என்று அக்கறையுடனும், இதை அரசியல் படுத்த விரும்பாமலும் கேட்டுக்கொள்கிறேன்.

- கஞ்சமலையார் எனும் ஏனாதி பூங்கதிர்வேல்,







Address

Kanjagam Foodicine Hospital, RC CHETTYPATTY, Kamalapuram Near
Omalur
636455

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 12pm

Telephone

+919994010235

Alerts

Be the first to know and let us send you an email when கஞ்சமலையார் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to கஞ்சமலையார்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram