Sammatham Health Foundation And Research Center

Sammatham Health Foundation And Research Center We are reputed manufacturer of Indian traditional medicines of Siddha at Pondicherry, Striving for Global Wellness through Herbal Health Care Products

https://m.facebook.com/SHFARC/photos/a.451440701729717/645086405698478/?type=3&mibextid=Nif5oz
06/02/2023

https://m.facebook.com/SHFARC/photos/a.451440701729717/645086405698478/?type=3&mibextid=Nif5oz

நினைவாற்றலை தூண்டும் உத்தான பாதாசனம் :

யோகா செய்தால் மனதை ஒருநிலை படுத்தலாம். அதே போல உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ளலாம். ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு பலன் உண்டு. இதில் உத்தான பாதாசனம் செய்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

செய்முறை :

விரிப்பில் மல்லாந்து படுக்கவும். கால்களை ஒட்டி வைத்துக்கொண்டு கைகளையும் உடலோடு சேர்த்து வைத்துக்கொள்ளவும். இப்போது மெல்ல மெல்ல முழங்கால்களை மடிக்காமல் பாதங்களை மட்டும் தரையில் இருந்து ஓரடி உயரத்துக்குத் தூக்கவும்.

நன்கு செங்குத்தாக 90* கோணத்தில் தூக்குவது எளிது. ஆகையால் அவ்வாறு தூக்காமல் தரையிலிருந்து ஒன்றரை அடிக்கு மேல் தூக்காமல் பார்த்துக்கொள்ளவும். அதிக நேரம் இவ்வாறு இருப்பது கஷ்டமானது. அடி வயிற்றில் நடுக்கம் போல் உணர ஆரம்பிப்போம்.

அப்போது மெல்ல மெல்லப் பாதங்களைக் கீழே இறக்கவும். பாதங்களை மேலே தூக்குகையில் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு பாதங்களைக் கீழே இறக்குகையில் மெல்ல மெல்ல மூச்சை விட வேண்டும். பின்னர் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு மீண்டும் முயல வேண்டும். இம்முறை கொஞ்சம் அதிக நேரம் பாதங்களை உயரத் தூக்கி வைக்கப் பழகலாம். இந்த ஆசனம் செய்வது உண்மையில் கடினமான ஒன்று.

பயன்கள் :

அடி வயிற்றில் அதிகம் இருக்கும் தசைகள் குறையும். கர்ப்பப்பைக்கு வலுக்கொடுக்கும் சிறுநீர்ப்பை தூண்டப்பட்டு தொந்தி இருந்தால் குறையும். இளம் மாணாக்கர்களுக்கு இது நல்லதொரு பயிற்சி. நினைவாற்றல் தூண்டப்படும்.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்...
https://www.facebook.com/SHFARC/

எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும...
17/11/2022

எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய். நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும். உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே.

பலவீனமடையும் எலும்புகள்
ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.

இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் "D" குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரை புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

மெனோபாஸ் பருவம்
மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் "மெனோபாஸ்" எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கல்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.

வைட்டமின் "D" குறைபாடு
கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம்.

கல்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருமுன் காப்போம்
குறிப்பாக குந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகம். பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கல்சியம் சத்து கடுமையாக குறையும். எனவே குழந்தைகள் இந்த குளிப்பானங்களை குடிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது. மேலும் எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகின்றனர்.

மனிதன் முதுமை அடையும் போது உடல் உறுப்புகளின் ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் எமக்கு ஏற்படும் பக்க வீளைவுகளில் இருந்து உணர முடியும். வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாக நோயின் தீவிரம் ஆளைக் முடக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றது. நோய்க்கான காரணங்களை அறிந்து அவற்றிக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதன் மூலம் முதுமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.

எலும்பு தேய்யமானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கல்சியம் என்ற தாது உப்பு.அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத் தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கல்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது..

எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு:
1 . எலும்பு முறிவு
2 . மூட்டு வலி
3 . மூட்டு வாதம்
4 . கழுத்து எலும்பு தேய்மானம்
5 . முதுகு எலும்பு தேய்மானம்
6 . முதுகு வலி
7 . உடல் சோர்வு
8. அசதி
9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 . நடையில் தளர்வு இதுபோன்ற பக்க விளைவுகளால் பலரும் தமது சிரமத்திற்குள்ளாகிறார்கள்

எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.

மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதன் நீட்டம், ஒடுக்கமே ஒருவரின் உயரம், பருமன் என்பனவற்றை நிர்ணயிக்கின்றது. ஒருவரை நகர வைப்பதும், செயல்பெறச் செய்வதும், உறுதியான தோற்றத்தைக் கொடுப்பதும் எலும்புகள்தான். இவைகள் பாதிக்கப்பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.

எலும்புகள் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய இரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.

பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு அமைந்துள்ளன.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந் துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.

மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது

மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

எலும்பில் கல்சியம், பொஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கல்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்பெறுகின்றன. இந்த கல்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு "மூட்டுகள்" என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன. தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையாமூட்டுகள் ஆகும்.

அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும்.
* பந்துக்கிண்ண மூட்டு
* கீழ் மூட்டு
* வழுக்கு மூட்டு
* செக்கு மூட்டு

இந்த நால்வகை அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழு வழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.

எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள"ஏந்தி" என்ற எலும்பாகும். மிகப் பெரிய எலும்பு"தொடை எலும்பாகும்". மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன. இவை 12 ஜோடியாக முள்ளந்தண்டுடன் இணைக்கப்பெற்று ஒரு கூடுபோல் காட்சியளிக்கும். இக்கூட்டினுள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கப்பெறுகின்றன.

சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306எலும்புகள் காணப்படும். பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும். நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.

தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.
மண்டையறை எலும்புகள் – 8
முக எலும்பு – 14
காது எலும்புகள் – 6
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு – 1
தோள்பட்டை எலும்பு – 4
(காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில் – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண் – 24
மேற்கைகளில் – 6
கைகளில் – 54
இடுப்புக்கூடு – 4
கால்களில் – 8
கால்களின் கீழ் பகுதியில் – 52

இவ் நோய் வராது தடுப்பது ஒன்றே சரியான தீர்வு, அதை எப்படி செய்வது?
1 . எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.
2 . வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம்.
3 . நடைப்பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.
4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.
5 . குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.
6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
7 . பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.
8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.
9 . காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.
10 . மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.
11 . புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
12 . பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வதால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்கலாம்.
13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை நாம் சரி செய்து கொள்ள மேலே கூறப்பெற்ற அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்த்து மகிழ்வாக வாழலாம்.
மனித எலும்புகள்
மனித உடலில் எலும்புகள் இரண்டு பகுதிகளைக் கொண்டவை.

நீண்ட கால், தோள் எலும்புகள் கடினமானதாகவும், கனமானதாகவும் இருக்கும்.

உட்புறம் பஞ்சு போன்றிருக்கும். அதனால், இந்த எலும்புகளின் மேற்புறம் ரப்பர் போன்ற குருத்தெலும்புகளால் மூடப்பெற்றிருக்கும்.

சிறுவர், சிறுமியரின் வளர்ச்சி குறிப்பிட்ட வயதில் நிறைவடையும். உடற்பயிற்சி செய்வது எலும்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் உதவுகிறது.

உடலுக்குத் தகுந்த பயிற்சி அளிக்காவிட்டால், எலும்பிலுள்ள தாதுக்கள் குறைந்து, எலும்பு பலவீனமடைந்து விடும்.

உட‌லி‌லேயே கா‌ல் தொடை‌ப் பகு‌தி எலு‌ம்புதா‌ன் ‌மிகவு‌ம் ‌நீளமானதாகவு‌ம், வ‌லிமையாகவு‌ம் காண‌ப்படு‌கிறது.

மார்பெலும்பு
மார்பு எலும்பு மார்பின் நடுப்பகுதியில் அமைந்துள்ள நீண்ட, தட்டையான எலும்பாகும். இது குருத்தெலும்புகள் வழியாக விலா எலும்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உருவாகும் விலா எலும்புக் கூடு, நுரையீரல், இதயம், முக்கியமான இரத்தக் குழாய்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது.

மனித மண்டையோடு
மனிதர்களில், வளர்ந்தவர்களின் மண்டையோடு பொதுவாக 22 எலும்புகளால் ஆனது. இவற்றுள், கீழ்த் தாடை எலும்பு தவிர்ந்த எனையவை அசையாத, தையல் மூட்டுக்களால் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டவை.

மூளையையும், மூளைத் தண்டையும் சுற்றி அமைந்த பாதுகாப்புக் கவசமான மண்டை அறை எட்டு எலும்புகளைக் கொண்டது. முகத்தைத் தாங்கும் எலும்புகள் பதினான்கு ஆகும். நடுக்காதுச் சிற்றெலும்புகள் ஆறு, பொட்டு எலும்புகளினால் மூடப்பட்டுள்ளன. பிற மண்டையோட்டு எலும்புகளுடன் பொருத்தப்படாது இருப்பதனால், குரல்வளையைத் தாங்கும் எலும்பு பொதுவாக மண்டையோட்டின் ஒரு பகுதியாகக் கணிக்கப்படுவதில்லை.

மண்டையோட்டில், மூச்சுத் தோலிழைமங்களால் மூடப்பட்டனவும், வளி நிரம்பியனவுமான குழிப்பைகள் காணப்படுகின்றன. இக் குழிப்பைகளின் செயற்பாடு என்ன என்பது விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. எனினும் இவை, மண்டையோட்டின் பலத்தை அதிகம் குறைக்காமல் அதன் நிறையைக் குறைக்க உதவுகின்றன. இவை குரலில் ஏற்படுகின்ற ஒத்ததிர்வுக்கும் உதவுவதுடன், மூக்கு வழியாக உள்ளிழுக்கப்படும் வளியை வெப்பமாகவும், ஈரப்பற்றுடனும் வைத்திருக்கவும் பயன்படுகின்றன.

தோள் எலும்பு
உடற்கூற்றியலில், தோள் எலும்பு என்பது மேற்கை எலும்பை காறை எலும்புடன் இணைக்கும் எலும்பாகும். தோள் எலும்பு தோள் பட்டையின் பின் பகுதியாக அமைந்துள்ளது. மனிதர்களில் இது ஏறத்தாள முக்கோண வடிவிலானதும், தட்டையானதுமான எலும்பாகும்.

தொண்டை எலும்பு
தொண்டை எலும்பு அல்லது நாவடி எலும்பு என்பது மனிதரின் கழுத்தில் காணப்படும் எலும்பு ஆகும். எலும்புக்கூட்டில் வேறெந்த எலும்புடனும் இணைக்கப்பட்டிராத ஒரே எலும்பு இதுவாகும். இது கழுத்திலுள்ள தசைகளால் தாங்கப்பட்டு, நாக்கின் அடிப்பகுதியை இது தாங்குகின்றது.
தொண்டை எலும்பு ஒரு குதிரை லாடத்தைப் போன்ற வடிவுடையது.

தொடை எலும்பு (Femur)
தொடையெலும்பு (Femur) இடுப்பெலும்புடன் இணைப்பு கொண்டிருக்கும் மேற்கால் எலும்பு. நடு உடலுடன், இடுப்பெலும்புடன், தொட்டுக்கொண்டிருப்பதால் மேற்கால் பகுதிக்குத் தொடை என்று பெயர்.

தொடையெலும்பு மனித உடம்பில் வலிமையானதும் நீளமானதுமான எலும்பு ஆகும். சராசரி மனிதனின் தொடையெலும்பு 48 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. இதன் குறுக்கு வெட்டு விட்டம் சராசரியாக 2.34 செமீ (0.92 in) இருக்கும். மாந்தரின் தொடை எலும்பு முழுவளர்ச்சி அடைந்த ஓராளின் எடையைப் போல 30 மடங்கு எடையைத் தாங்கும் மிகு வலுவுடையது.

நடக்கவல்ல, குதிக்கூடிய, பாலூட்டிகள், பறவைகள் போன்ற முதுகெலும்பு உள்ள விலங்குகளிலும், பல்லி போன்ற ஊர்வன இனங்களிலும் தொடையெலும்பே உடலுக்கு மிக அருகாமையில் உள்ள (most proximal) கால் அமைப்புப் பகுதியாகும்.

தாடையெலும்பு
தாடையெலும்பு மண்டையோட்டைச் சேர்ந்த எலும்பு ஆகும். இதுவும், முக எலும்பும் சேர்ந்து முகத்திலுள்ள மிகப்பெரியதும், மிகப் பலமுள்ளதுமான எலும்பை உருவாக்குகின்றன. இது முகத்தில் கீழ்த் தாடையை உருவாக்குவதுடன், கீழ் வரிசைப் பற்களையும் தாங்கியுள்ளது.

குருத்தெலும்பு
குருத்தெலும்பு (cartilage) என்பது பல விலங்கு இனங்களின் உடலில் உள்ள வளையக்கூடிய மென்மையான எலும்பு ஆகும். இது ஒரு வகை புரத நார்களாலும், வளைந்தால் மீண்டும் தன் நிலையைப் பெறும் மீண்ம நார்களாலும் (elastin) ஆன அடர்த்தியான இணைப்புத் திசு ஆகும். இது சவ்வு இழை மற்றும் வேறு பொருட்களினால் ஆனது. இவை அனைத்தும் திசுக்கூழ் எனப்படும் பாகுத் தன்மை கொண்ட பொருளில் அடக்கப்பட்டிருக்கும். குருத்தெலும்புக்குள் குருதிக் குழாய்கள் ஏதும் இருப்பதில்லை. இவற்றுக்குத் தேவையான சத்துப்பொருட்கள், திசுக்கூழ் ஊடாக அடர்த்தி வேறுபாடால் பரவல் முறையில் உறிஞ்சப்படுகின்றன. திசுக்கூழ் பல செயற்பாடுகளைக் கொண்டது. எலும்பின் இயக்கத்துக்கு வேண்டிய மழமழப்பான மேற்பரப்பை வழங்குவதும், எலும்புப் படிவுக்கான சட்டகமாகத் தொழிற்படுவதும் இவற்றுள் அடங்கும்.

சுறா மீனின் உடல் முழுவதிலும் உள்ள எலும்பு இவ்வகை குருத்தெலும்பால் ஆனது. மனிதர்களின் உடலில் பல இடங்களில் குருத்தெலும்பு உள்ளது. எடுத்துக்காட்டாக தொண்டைப்பகுதியில் மூச்சுக்குழாயைச் சூழ்ந்திருக்கும் தைராய்டு குருத்தெலும்பு (Thyroid cartilage) என்னும் தொண்டைச் சுரப்பி குருத்தெலும்பு அவற்றில் ஒன்றாகும்.

காறை எலும்பு
மனித உடற்கூற்றியலில், காறை எலும்பு (Clavicle) என்பது ஒரு நீண்ட எலும்பாக வகைப்படுத்தப் பட்டுள்ளது. இது தோள் பட்டையின் ஒரு பகுதியாக அமைகின்றது. இது தனது சொந்த அச்சில் சுழலக்கூடியது. சிலரில், சிறப்பாகப் பெண்களில், தோளின் இப்பகுதியில் கொழுப்புக் குறைவாக இருப்பதன் காரணமாக, இவ்வெலும்பு கண்ணுக்குத் தெரியும் விதமாகப் புடைத்து இருப்பதைக் காணலாம்.

காறை எலும்பு, இரட்டை வளைவு கொண்ட நீண்ட எலும்பாகும். மனித உடலில் கிடையாக உள்ள ஒரே நீண்ட எலும்பு இதுவே. இது மேற் கையை, முதல் விலா எலும்புக்குச் சற்று மேலே உடலுடன் இணைக்கின்றது. இதன் மறு முனை, தோள் எலும்பின் (scapula) உச்சியுடன், உச்சிக்காறை மூட்டில் இணைந்துள்ளது. இதன் உட்புற முனை உருண்டை வடிவிலும், வெளிப்புற முனை தட்டையாகவும்

எலும்பு மச்சை
எலும்பு மச்சை (Bone marrow) என்பது எலும்புகளின் உட்பகுதியில் காணப்படும் மென்மையான இழையமாகும். வளர்ந்தவர்களின் பெரிய எலும்புகளிலுள்ள எலும்பு மச்சை குருதிக் கலங்களை (செல்களை, கண்ணறைகளை) உற்பத்தி செய்கிறது. என்பு மச்சையில் சிவப்பு என்பு மச்சை, மஞ்சள் என்பு மச்சை என இருவகைகள் உண்டு. சிவப்பு என்பு மச்சையிலிருந்து குருதிச் சிவப்பணுக்கள், குருதி வெள்ளை அணுக்கள் மற்றும் குருதிச் சிறுதட்டுக்கள் உற்பத்தியாகின்றன. சில வெள்ளை அணுக்கள் மஞ்சள் என்பு மச்சையிலிருந்து உருவாகின்றன. மஞ்சள் என்பு மச்சையின் நிறத்துக்குக் காரணம் கொழுப்புக் கலங்கள் அதிகம் உள்ளமை ஆகும். பிறக்கும் போது எல்லா எலும்பு மச்சையும் சிவப்பு ஆகும். வளர்ந்தவர் ஒருவரில் சராசரியாக 2.6 கிலோகிராம் என்பு மச்சை இருக்கும். இதில் ஏறத்தாழ அரைப்பங்கு சிவப்பு என்பு மச்சையாகும்.

சில வகையான குருதிப் புற்றுநோயால் தாக்குண்டவர்கள் தாங்கள் உயிர்பிழைக்க, சில குறிப்பிட்ட இணக்கம் உடைய எலும்பு மச்சையைப் பிறரிடம் இருந்து பெற்று உள் செலுத்தினால் புற்றுநோய் உற்றவர்கள் முற்றிலும் குணம் அடையக்கூடும். இது சில வகையான புற்றுநோய்க்குத் தீர்வுதரும் ஒரு நல்ல வழி. இதற்காக என்பு மச்சை கொடைக்காக பதிவகங்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன

விலா எலும்பு
முள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் என்பன மார்புக் கூட்டை உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும். பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன. சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.

மனித விலா எலும்புகள்
மனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே 24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் தொங்கு விலா எலும்புகள் எனப்படுகின்றன

இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.

சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.

மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சி யம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்க இயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.

சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் முக்கியமானது.

மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சி யம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

எல்லா நோய்களையும் நம்மால் குணப்படுத்துவதை விட எளிதாக தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.

எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசைநார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன. இந்த எலும்புகளில்தான் கசியம் பொ

மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். எலும்புகளைச் சுற்றி நரம்

https://m.facebook.com/SHFARC/photos/a.451440701729717/549213698619083/?type=3
16/10/2022

https://m.facebook.com/SHFARC/photos/a.451440701729717/549213698619083/?type=3

குழந்தைகள் பிரளி (பேதி)

இது அசீரணத்தால் வரக்கூடியது தாய்பால் கொடுக்கும் பெண்கள் புருஷனோடு சையோகம் செய்து விட்டு பிறகு பிள்ளைக்கு பாலுட்டினால் அந்தப்பால் காமப்பால் ஆவதால் குழந்தைகளுக்கு வயிறுப்பசம் வந்து பல நிறங்களில் பேதியாகும் இப்பிணி எந்த மருந்துக்கும் வசப்படாது

இதர்க்கு மருந்து :

வேலிப்பருத்தி இலை ஒரு கைப்பிடி சேற்றுப்பு இரண்டு சிடிகைகள் சேர்த்து இடித்து கசக்கிப் பிழிந்த சாறு 5 '6 சொட்டுக்கள் தாய்ப்பால் அல்லது பசும்பாலில் விட்டு காலை மாலை கொடுக்கே 3 நாட்களில் குணமாகும்

மற்றும் ஒரு மருந்து :

கரி மஞ்சள் பொடி அரை தேக்கரண்டி ஓரு கோப்பைத் தண்ணீரிலிட்டு காய்ச்சி அரை கோப்பையாய் சுண்டியவுடன் எடுத்து வேளைக்கு ஓரு சங்கு வீதம் அரை மணிக்கொரு முறை ஓரு சிடிக்கை பவழ பற்பம் கூட்டி கொடுக்க இரண்டு நாட்களில் குணமாகும் பவழ பற்பம் கிடைக்காதவர்கள் மஞ்சள் பொடியுடன் அதனளவு வெத்திலையில் சேர்க்கும் சுண்ணாம்பை உலர்த்தி சேர்த்து அரைத்துக்கொண்டு வெண்ணீரில் கலக்கி அரை மணிக்கொருமுறை உள்ளுக்குக் கொடுக்கவும்

மற்றொரு முறை :

வசம்பை சுட்டுக் கரியாக்கி தூள் செய்து கால் தேக்கரண்டி அளவு வென்னீரில் கலக்கி நாள் ஒன்றுக்கு 4 முறை கொடுக்கவும் சிசுக்களுக்கு 2 சிடிகை முதல் வயதிற்கேற்றவாறு கூட்டிக் குறைத்துக் கொடுக்கவும் நன்றி திருசிற்றம்பலம்

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்...
https://www.facebook.com/SHFARC/

https://www.facebook.com/SHFARC/photos/a.451440701729717/535835333290253/?type=3
25/06/2022

https://www.facebook.com/SHFARC/photos/a.451440701729717/535835333290253/?type=3

நட்சத்திர பழம்

பழங்களின் மருத்துவப் பயன்கள் எண்ணற்றவை. உடலுக்கு நேரடியாக பலனை கொடுப்பவையும் இவையே. நட்சத்திரப் பழத்தின் மருத்துவக்
குணங்களை தெரிந்துகொள்வோம். நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தப் பழம் தாய்லாந்து, மலேசியா சிங்கப்பூர், மியான்மர், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப் படுகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சில இடங்களில் மட்டுமே இது விளைகிறது.

இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் குணம் கொண்டதால் இது ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா , ஹவாய், பிளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.
இப்பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாகச் சாப்பிடலாம்.

மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.
குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும்.

மலச்கிக்கலைப் போக்க

ஸ்டார் பழத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டு வந்தால் குடலில் உள்ள அசடுகளையும், பழைய மலக்கட்டுகளையும்
வெளியேற்றும். இப்பழம் கிடைக்கும் காலங்களில் அதிகளவு சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கலின்றி வாழலாம்.

மூல நோயின் பாதிப்பு குறைய

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாயுவின் சீற்றம் அதிகமாகி மூலப் பகுதியைத் தாக்குகிறது. இதனால் மூலநோய் உண்டாகிறது. இந்த மூல
நோயின் பாதிப்பிலிருந்து விடுபட ஸ்டார் பழத்தை இரவு உணவுக்குப் பின் இரண்டு துண்டுகள் சாப்பிட்டு வந்தால் மூல நோயின் தாக்கம்
குறையும்.

சரும பாதுகாப்பு

மழைக் காலத்தில் சருமத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். ஸ்டார் பழம் சாப்பிட்டு வந்தால் சரும நோயின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சக்தி ஸ்டார் பழத்திற்கு உண்டு. ஸ்டார் பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நரம்புகள் பலப்பட

ஸ்டார் பழம் நரம்புகளைப் பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும்.

10 கிராம் ஸ்டார் பழத்தில்

கார்போஹைட்ரேட்ஸ் – 6.73 கிராம்
சர்க்கரை – 3.98 கிராம்
கொழுப்பு – 0.33 கிராம்
புரோட்டீன் – 1.04 கிராம்
பான்தோதினிக் அமிலம் – .39 கிராம் %
போலேட் – 12 கிராம்
வைட்டமின் சி – 34.4 கிராம்
பாஸ்பரஸ் – 12 மிலி கிராம்
பொட்டாசியம் – 133 மிலி கிராம்
துத்தநாகம் – 12 மிலிகிராம்

ஸ்டார் பழம் தற்போது சென்னை, மதுரை போன்ற நகரங்களில் உள்ள பழக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஸ்டார் பழத்தை அனைவரும் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்...

https://www.facebook.com/SHFARC/

வெள்ளை விஷம்.!உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம்...
21/06/2022

வெள்ளை விஷம்.!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
வெள்ளை விஷம்.!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.

குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.

2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.

4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.

5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.

6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.

7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.

8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.

குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Address

Cittapuri , Moratandi, Vanur T. K
Pattanur
605101

Opening Hours

Monday 9:30am - 7pm
Tuesday 9:30am - 7pm
Wednesday 9:30am - 7pm
Thursday 9:30am - 7pm
Friday 9:30am - 7pm
Saturday 9:30am - 7pm
Sunday 9:30am - 7pm

Telephone

08838287358

Alerts

Be the first to know and let us send you an email when Sammatham Health Foundation And Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sammatham Health Foundation And Research Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram