Sri Agathiyar Acu Care

Sri Agathiyar Acu Care Cure All Kind of Diseases, No Side effect.

31/12/2023

அனைவருக்கும்இனிய 2024 புத்தாண்டு வாழ்த்துகள்

Human body Normal leavel மருத்துவ அளவீடுகள்.-1.இரத்தத்தின் pH அளவு 7.35 - 7.45  என்ற அளவில் இருக்கும்.2.சிறுநீரின் pH அள...
06/07/2020

Human body Normal leavel
மருத்துவ அளவீடுகள்.-

1.இரத்தத்தின் pH அளவு 7.35 - 7.45 என்ற அளவில் இருக்கும்.

2.சிறுநீரின் pH அளவு 4.5 - 8.0 என்ற அளவில் இருக்கும்.

3.இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

4.இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

5.இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

6.இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

7.உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

8. ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

9. ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

10.இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

11.நடுவயதினரின் இரத்த அழுத்தம் (Blood Pressure)சுமார் 120/80 மி.மி. மெர்குரி என்ற அளவில் இருக்கும்.

12.நாடித்துடிப்பு (Pulse Rate)ஒரு நிமிட நேரத்தில்சுமார் 60க்குக் கீழே இருந்தால்அது பிராடிகார்டியா (Bradycardia)எனப்படும்.

13.டேக்கிகார்டியா (tachycardia)என்னும் நிலையில் நாடித்துடிப்பு ஒரு நிமிட நேரத்தில்சுமார் 100க்கு மேல் இருந்திடும்.

14.சுவாசத்தின் இயக்கம் (Respiratory Activities)ஓய்வு நிலையில் ஒரு நிமிட நேரத்தில்சுமார் 15 முதல் 18 வரை என்ற அளவில் இருந்திடும்.

15. சாதாரணமாக எப்போதும் போல சுவாசிக்கும் போது(உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில்(Inspiratory Air) வாயுமாற்றத்திற்கு பயண்படுத்தப்பட்டகாற்றின் அளவு டைடல் வால்யூம் (Tidal Volume) எனப்படும்) டைடல் வால்யூம் என்பவைசுமார் 500 மில்லி என்ற அளவில் இருந்திடும்.

16. உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில் வாயுமாற்றத்திற்குபயண்படுத்தப்படாத காற்றின் அளவு டெட்ஸ்பெஸ் (Dead Space Air)என்பது சுமார் 150 மில்லி லிட்டர் என்றஅளவில் இருந்திடும்.

17.ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (Carbohyrate)என்னும் மாவுப்பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

18.ஒரு கிராம் புரதப் பொருளில் இருந்து 4 கிலோ

கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

19.ஒரு கிராம் கொழுப்பு பொருளில் இருந்து 9 கிலோ

கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

20.நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டின்

விகித அளவு சுமார் 55 முதல் 75 சதவிகிதம் வரை

இருந்திட வேண்டும்.

21. நாம் சாப்பிடும் உணவில் புரோட்டின் வகை உணவின் விகித அளவு சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.

22.சிறுநீரின் அடர்த்தி எண் (Specific Gravity )சுமார் 1.020 முதல் 1.030வரை இருந்திடும்.

23.தினசரி வடிக்கப்படும் சிறுநீரின் அளவு (Daily Urine Out put)தினசரிசுமார் 1000 முதல் 1500 மில்லி வரை இருந்திடும்.

24.சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை(Body Temporature) சுமார் 36.8 Degree Centigrade என்ற அளவில் இருந்திடும்.

25.சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 98.4 Degree Foreinheitஎன்ற அளவில் இருந்திடும்.

26.ஹைப்போதைராய்டு (Hypothyroidism)நோய் நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 32O C DEGREES என்ற அளவில் இருந்திடும்.

27.ஹைப்போதைராய்டு நோய் (Hypothyroidism)நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 89.6O F DEGREES என்ற அளவில் இருந்திடும்.

28. உடல் வெப்பம் 25O C DEGREES கீழேஇறங்கினால் மரணம் நிகழும்.

29. உடல் வெப்பம் 77O F DEGREES கீழே இறங்கினால் மரணம் நிகழும்.

30. செரிபுரோஸ்பைனல் திரவம் (Cerebro Spinal Fluid)என்னும் மூளை நரம்பு திரவத்தின் அழுத்தம் சுமார் 50முதல் 180 mm Hg என்ற அளவில் இருந்திடும்.

31.கண்கோளத்தின் அழுத்தம் (Intra Occular Pressure)சுமார் 10-20 mm Hg -மெர்க்குறி -என்ற அளவில் இருந்திடும்.

32.ஆண்விதையில் (Testis)சுமார் 200 முதல் 300 வரை லோபுயுல்கள் (Lobules)என்னும் துணை அமைப்புகள் உள்ளன.

33.ஆண்களில்ஸ்பெர்மெட்டோசோவா (Spermatozoa)என்னும் விந்தணுக்கள் உடல் வெப்ப நிலையினைவிட 3O C DEGREES குறைவாக இருந்திடல் வேண்டும்.

34.ஆண் விதை(Testis) 4.5 C.M. நீளமும் 2.5 C.M. முதல் 3 C.M.தடிமனும் கொண்டதாகும்.

35.பெரும்பாலோரில் மாதவிலக்கு (Menstrual period)சுமார் 45 முதல் 55 வயதிற்குள் நின்று போகலாம்.

36.மாதவிலக்கு பெரும்பாலோரில் சுமார் 28 நாட்களில் ஏற்படுகிறது.

37.மாதவிலக்கின் மென்ஸ்ட்ருவல் நிலை (Menstrual Stage)4 நாட்கள்கொண்டதாகும்.

38. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் முதலாவது நிலையான புரோலிபரேட்டிவ் நிலை(Prolifertive Stage) சுமார் 10 நாட்கள் கொண்டதாகும்.

39. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் இரண்டாவது நிலையான செக்ரீட்டரி நிலை (Secretory Phase)சுமார் 14 நாட்கள் கொண்டதாகும்.

40. ஒரு பெண்னின் ஓவுலோவன்(Ovulation) எனப்படும் பெண் கருமுட்டை (Ovum)உற்பத்தி ஒவ்வொரு 40 நாட்களில் நடைபெறுகிறது.

41.காலும் வயிறும் இணையும் இடத்தில் உள்ள இங்குவனைல் கேனால் (Inguinal Canal)என்னும் வளையம் சுமார் 2.5 செ.மி. முதல் 4 செ.மி. வரை இருந்திடும்.

42.காலர்போன் (Collar Bone)என்னும் கழுத்து எலும்பு கருவின்எட்டாவது வாரத்தில் அமைகிறது.

43.எலும்புகளில் ஆசிபிகேஸன் (Ossification)என்னும் எலும்பு வளர்ச்சி 21 வயதிற்குள் முடிந்துபோகிறது.

44.சிறுநீரில் (Urine)சுமார் 96 சதவிகிதம் நீரும் 2 சதவிகிதம்யூரியாவும் (Urea)மீதம் 2 சதவிகிதம் மற்ற பொருள்களும் சேர்ந்திருக்கும்.

45.சிறுநீரின் அளவு தினசரி 500 மில்லிக்கு குறைந்திடாமல் இருந்திடல் வேண்டும்.

46.இரத்தத்தில் 160 மி.கி / மில்லி லிட்டர் என்ற

அளவிற்குமேல்குளுக்கோஸ்(Glucose)இருந்திட்டால் இந்நிலையில்சிறுநீரில்குளுக்கோஸ் (Glycosuria)
வெளிப்படும்.

47.சிறுநீரகம் (Kidneys)ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்கள் (Nephrons)என்னும் நுண்வடிப்பான்கள் உள்ளன.

48.சிறுநீரகம் சுமார் 11 C.M நீளம் கொண்டதாகும்.

49.சிறுநீரகம் சுமார் 6 CM. அகலம் கொண்டதாகும்.

50.சிறுநீரகம் சுமார் 3 C.M. தடிமன் கொண்டதாகும்.

51.சிறுநீரகம் (kidneys)சுமார் 150 கிராம் எடை கொண்டதாகும்.
52. A வகை ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் (Hepatitis)உடலில்புகுந்த
பிறகு சுமார் 15 முதல் 40 நாட்களில்நோயினை வெளிப்படுத்திடுகிறது.
53.இதுவரை சுமார் 20 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)கண்டறியப்பட்டுள்ளன.
54.சுமார் 9 வகை அமினோ அமிலங்கள் (Amino acids)நமது உடலில் தயாரிக்கப்படுவதில்லை.
55.தினசரி சுமார் 500 மில்லி லிட்டர் பித்த நீர் (Bile Acids)சுரக்கிறது.

56.கனையம்(Pancreas)சுமார் 60 கிராம் எடை கொண்டது
57.கனையத்தின் நீளம் 12 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை இருந்திடும்.
58.குடலில் (Intestines)உள்ள எப்பிதீலியம் செல்கள்(Epithelial Cells)3 முதல் 5 நாட்களில் உதிர்வடைகிறது.
59.ஜிஜனம் (Jejunum)என்னும் சிறுகுடல் (Small Intestine)பகுதி சுமார் 2 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
60.டியோடினம் (Duodenum)என்னும் குடல் பகுதி சுமார் 25 செ.மீ.நீளமுள்ளது
61.வயிற்றில் (Stomach)சுமார் 2 லிட்டர் கேஸ்ட்ரிக் அமிலம்(Gastric Acid)தினசரி சுரக்கப்படுகிறது.
62.ஈசோபேகஸ் (Esophagus)என்னும் விழுங்குழல் சுமார் 25 செ.மீ. நீளம்
கொண்டதாகும்.
63.விழுங்குழல் (Osophagus)சுமார் 2 செ.மீ. அகலம் கொண்டதாகும்.
64.உமிழ்நீரின் (Saliva)pH சுமார் 5.8 முதல் 7.4 வரை இருக்கும்.
65.உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளன.

66. 65 கிலோ எடை கொண்ட நபர்களின் உடலில் சுமார் 40 லிட்டர் நீர் (Body Water)அமைந்திருக்கும்.
67.உடலில் உள்ள செல்களின் உள்ளே (Intracellular)உள்ள மொத்த நீரின் (Total Body Water)அளவு சுமார் 28 லிட்டர் அளவிற்கு இருந்திடும். *🦚மலையமுது🦚*
68.உடலில் உள்ள செல்களுக்கு வெளியே (Extracellular)உள்ள செல்கள் சுமார் 12 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.
69.வாயு மாற்றத்தில் (Gas Exchange)பங்கெடுத்திடும் நுரையீரல் (Lung)திசுக்களின் பரப்பளவு(Surface Area) சுமார் 70 முதல் 80 சதுர மீட்டர் அளவிற்கு இருந்திடும்.
70.உள்ளிழுக்கப்படும் காற்றில் (Inspired Air)சுமார் 21 சதவிகித ஆக்ஸிஜன் (Oxygen)உள்ளன.

71.வெளிவிடப்படும் காற்றில் (Expired Air)சுமார் 16 சதவிகிதம்ஆக்ஸிஜன் அமைந்துள்ளது.
72.நமது உடலில் விலா எலும்புகள் (Ribs)சுமார் 12 ஜோடிகள் உள்ளன.
73.20 முதல் 20000 ஹெர்ட்ஸ் (Hertz)அளவுகொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்டிட இயலும்.
74.மூளைக்கு (Brain)இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் (Cardiac Output)இரத்தத்தில் சுமார் 15 சதவிகிதம்அளவு தேவைப்படுகிறது.
75.மூளைத்தண்டுவடம் (Spinal Cord)சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது.

76.மூளைக்கு நிமிடத்திற்கு சுமார் 700 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது.
77.மூளைத்திரவத்தின் (Cerebrospinal Fluid)அடர்த்தி (Specific Gavity)எண் 1.005 ஆகும்.
78.மேலேரும் மகாதமனி (Ascending Aorta)சுமார் 5 செ.மீ. நீளமுள்ளதாகும்.
79.சிஸ்டாலிக் அழுத்தத்திற்கும்(Systolic Pressure)டயஸ்டாலிக் அழுத்தத்திற்கும் (Diastolic Pressure)உள்ள வேறுபாடு பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)எனப்படும்.
80.பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)சுமார் 40.மி.மீ. மெர்குரி (Mercury)என்ற அளவில் இருந்திடும்.

81.குளுக்கோகார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கையான ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் அதிகாலை 4 A.M. to 8 A.M.நேரத்தில் அதிகளவு இருந்திடும்.
82.குளுக்கோ கார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கை ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் நடு இரவு முதல் அதிகாலை 3 மணிவரை மிகக் குறைந்த அளவே இருந்திடும்.
83.தைராய்டு சுரப்பி (Thyroid Gland)சுமார் 20 கிராம் எடை கொண்டதாகும்.
84.பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland)சுமார் 500 மில்லி கிராம் எடை கொண்டதாகும்.
85.கண்ணீர் சுரப்பியின் வடிகுழாய் (Lacrymal Gland)சுமார் 2மி.மீ. நீளம் கொண்டதாகும்.

86. ஒளியின் வேகம் (Velocity of Light)1800000 கி.மீ. ஒரு நிமிடத்தில் (3.00000 K,M/SEC).
87.கண்கோளம்(Eye Ball)சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்டதாகும்.
88.மூளை திரவம் (Cerebrospinal Fluid)ஒரு நிமிடத்திற்கு சுமார் 0.5 மில்லி சுரக்கப்படுகிறது.
89.மூளை திரவம் தினசரி சுமார் 720 மில்லி சுரக்கிறது.
90.மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் படுத்தநிலையில்சுமார் 10செ.மீ. (நீர்) அளவிற்கு இருந்திடும்.

91.மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் நின்ற நிலையில்சுமார் 30செ.மீ. (நீர்) அளவு இருந்திடும்.
92.இதய பெருவறைகள்(Left Ventricle)ஒரு முறை சுருக்கமடைந்திடும் பொழுது சுமார் 70 மில்லி
இரத்தம் பெரும் இரத்தக் குழாய்களில் வெளியேற்றப்படுகிறது(Stroke Volume).
93.இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 5 லிட்டர்
இரத்தத்தை வெளியேற்றுகிறது(Cardiac Output).
94.உடற்பயிற்சியின்(Exertion)போது இதயம் ஒரு நிமிடநேரத்தில் சுமார் 25 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.
95.நல்ல விளையாட்டு வீரர்களின் (Athletic)இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 35 லிட்டர் வரை இரத்தத்தை வெளியேற்றுகிறது.

96.இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 60 தடவைகள்
முதல் 80 தடவைகள் வரை சுருக்கமடைகிறது.
97.இதய பெருவறைகள் சுருக்கமடைந்திட(Cardiac Contraction)சுமார் 0.3 செகண்ட் காலம் ஆகிறது.
98.இதய பெருவறைகள் விரிவடைந்திட (Cardiac Dilatation)சுமார் 0.4 செகண்ட் காலம் ஆகிறது.
99.இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex )இடது மார்பின் (Left Chest)5 வது விலா எலும்பு இடைவெளியில் (Intercostal Space)அமைந்துள்ளது.
100.இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex)மார்பின் மையப் பகுதியிலிருந்து (Midline)இடது பக்கம் சுமார் 9செ.மீ. தள்ளி இருக்கிறது.

நன்றி மருத்துவ அளவீட்டு குறிப்பிலிருந்து .

நன்றி ..... வாழ்க வளமுடன் .... %

31/05/2020

காய்ச்சலால் அவதியா? இதோ எளிய நிவாரணம் பப்பாளி இலை சாறு போதுமே !

நாம் எல்லோரும் பப்பாளி பழத்தைதான் சாப்பிடுவோம். பப்பாளி பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.

பப்பாளி மரத்தில் கிடைக்கும் காய், பழம் அனைத்தும் நமக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம். அதிலும் பப்பாளி இலைக்குதான் விசேஷ மருத்துவக் குணம் நிறைந்துள்ளது.

பைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்கள் பப்பாளி இலையில்தான் நிறைந்து காணப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் எப்பேர் பட்ட காய்ச்சலை குணப்படுத்தும் சக்தி பப்பாளி இலைக்கு உண்டு என்று சொல்லப்படுகிறது. பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, மற்றும் வைட்டமின் பி, வைட்டமின் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றி, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிக்கட்டி 10 மில்லி வீதம் நாளொன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். இப்படி அருந்தி வந்தால் எந்த நோயாலும் நம்மலை ஒன்றும் செய்ய முடியாது.

பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டில் உள்ள அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

இந்த இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருந்தி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

ஈடிசு ஈஜிப்டை என்ற கொசு மனிதனை கடிப்பதால்தான் சிக்குன்குனியா என்ற நோய் பரவியது. ஈடிசு ஈஜிப்டை, ஈடிசு அல்போபிக்டசு என்ற இரு வகை கொசுக்கள் உள்ளன. பெரும்பாலும் இந்த வகை கொசுக்கள் பகல் நேரங்களிலும், அதிலும் காலை, மாலை என இரு நேரங்களில் அதிகமாக மனிதனை கடிக்கும். இப்படிப்பட்ட கொசுக்களால் ஏற்படும் சிக்கன் குனியாவை பப்பாளி இலைச்சாற்றை மனிதன் குடித்தால் நோய் குணமாகும்.

வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனைகள், அலர்ஜி போன்ற சருமபிரச்சனைகளுக்கு இந்த பப்பாளி இலை அரைத்து குடித்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.

ஒழுங்கற்ற மாத விடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக பப்பாளி இலை உள்ளது.

பப்பாளி இலையை நன்கு சுத்தமான நீரில் அலசி, பின் அதனை கைகளால் கசக்கி, சாற்றை எடுத்தால், ஒரு டேபிள் ஸ்பூன் சாறு கிடைக்கும்.

காய்ச்சல் போன்ற நோய் ஏற்படும் போது ஒரு நாளைக்கு மூன்று முறை வீதம் சாப்பிட கொடுத்தால் பிளேட்டுலெட்டுகள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதுடன் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

தினமும் நாம் பப்பாளி இலைச் சாற்றினை சிறிய அளவில் குடித்து வந்தால், அது நமது உடலில் ஏற்படும் உடல் சோர்வை சரி செய்து ஆரோக்கியத்தை கொடுக்கும்.

பப்பாளி இலையை நன்றாக அரைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி வடிகட்டி அந்த எண்ணையை தினமும் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

பப்பாளி இலைச்சாற்றை கட்டி மேல் தடவி வந்தால் கட்டி சீக்கிரம் உடையும்.

உடலில் ஏற்படும் வீக்கங்கள் மீது பப்பாளி இலைச்சாறை பூசி வர வீக்கங்கள் குறையும்.

ஏதாவது உடலில் தீக்காயம் ஏற்பட்டால் அந்த இடத்தில் பப்பாளி இலை அரைத்து பூசினால் காயங்களுக்கு விரைவில் குணமடையும்.

31/05/2020

உங்கள் ஜாதகத்தில் உண்டாகும் எப்படிப்பட்ட தோஷங்களையும் நீக்கும் ரகசியம்

நம்முடைய முன்னோர்கள் பசுவிற்கு கீரை, பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்தால் கொடுப்பதால், நாம் செய்த பாவங்கள் அழியும் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் எந்தெந்த விலங்குகளுக்கு நாம் உணவு அளித்தால் கிரகப் பிரச்சனைகள் தீரும் என்பதை இங்கு பார்ப்போம்.

சூரியன் :-

சூரிய பகவானின் கிரகப் பிரச்சனைகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தால், குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் அந்த பிரச்சனை தீரும்.

வியாழன் :-

உங்கள் ஜாதகத்தில் குருபகவானால் பிரச்சனைகள் இருந்தால் திருமணம் மற்றும் கல்வி பாதிக்கப்படும். அதை நிவர்த்தி செய்ய மாடுகளுக்கு தீவனம் அல்லது யானைக்கு உணவு அளிக்கலாம்.

சந்திரன் :-

சந்திர பகவானின் பார்வை உங்கள் ஜாதகத்தில் உக்கிரமாக இருந்தால், அதை சரிசெய்ய நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம். அதாவது மீன், ஆமை உள்ளிட்ட நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கலாம்.

செவ்வாய் :-

செவ்வாய் கிரகம் திருமண விஷயத்தில் முக்கியமான தடையாக பார்க்கப்படுகின்றது. நாம் ஆடு அல்லது செம்மறி ஆட்டுக்கு உணவு கொடுப்பதன் மூலம் நம் கெட்ட வினைகள் குறைகின்றது. மேலும், குரங்குகளுக்கு தானியங்களையும் அளிக்கலாம்.

புதன் :-

உங்கள் ஜாதகத்தில் புதன் அதிபதியாக இருக்கும் பட்சத்தில் அவர் மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார். புதன் திசை பிரச்சனையாக உள்ளவர்கள், கிளிகளுக்கு உணவு வைப்பது சிறந்தது. அப்படி இல்லையெனில், தங்கள் வீட்டின் மேல் கூரையில் பறவைகளுக்கு உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

சுக்கிரன் :-

செல்வத்தை அளிக்கக்கூடிய கிரகம் சுக்கிரன். இந்த கிரகம் நல்ல முறையில் வலுப்பெற புறா உள்ளிட்ட பறவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுக்கலாம்.

சனி :-

நாம் அனைவரும் மிகவும் பயப்படும் ஒரு கிரகம் சனி. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கலாம். உதாரணமாக எருமை, கருப்பு நிற நாய், காகம் உள்ளிட்டவை.

ராகு - கேது :-

ராகு - கேது உங்கள் ஜாதகத்தில் வலுப்பெற நாய்களுக்கு ரொட்டி கொடுப்பதும், எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

நன்றி:- ஓம் நமச்சிவாய

02/05/2020

மிக, மிக அவசரம்

கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள். இதுபோல் ஒருநாளைக்கு 2,3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டிரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது. நாட்டு மருந்து கடை லாம் மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு யாரும் கவலைப்பட வேண்டாம். இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்ஷன் உருவாகும். அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றி கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி பிதுங்கி இருக்கிறது. அத்தகைய இந்த கொரோனா மாயாவி போல் எத்தனை புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அணைத்து மாய அசுரர்களையும் அழிக்கும் மும்மூர்த்திகள் தான் இஞ்சி, மிளகு, எலுமிச்சை. மூன்றையும் தனித்தனியாக சாப்பிடாமல் இதுபோல் ஒன்றாக சேர்த்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும்.

இஞ்சி, எலுமிச்சை, கருப்பு மிளகு லாம் சர்வ சாதாரணமாக நம்ப வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் அண்ணாச்சி கடைகளில் கிடைக்கும். மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்.

அதனால் நாட்டுமருந்து கடைகள் நிறைய மூடி இருக்கே கபசுரம் கிடைக்கலையே, நிலவேம்பு கிடைக்கலையே னு கவலைப்படாதீங்க உங்கள் வீட்டு சமயலறையில் இருக்கும் அஞ்சறை பெட்டியை முதலில் திறந்து பாருங்கள். இஞ்சி, மிளகு, எலுமிச்சை இந்த மூன்றும் இப்பகூட உங்க வீட்டில் இருக்கும்.

தமிழர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அஞ்சறை பெட்டி யும் ஒரு மருத்துவமனைக்கு சமானம்.
அதை புரிந்து கொள்ளாமல் நாம் நமது பாரம்பர்ய உணவை கைவிட்டதாலும் மேலும் எந்தெந்த பொருளை எதோடு சேர்த்து உண்டால் என்ன பலன் என்பது குறித்த புரிதல் இன்றைய தலைமுறையினர் பலருக்கு இல்லாததாலும் தான் இதுபோன்ற பிரச்சனைகள் நமக்கு வருகிறது.

இஞ்சி, மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள் எனும் செய்தியை நான் கேள்விப்பட்டேன். உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்.

இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி, பேஸ்ட் செய்யலாம் என்ன வேணாலும் பண்ணலாம். காப்பி, பேஸ்ட் செய்யும் பொழுது எனது பெயரை நீங்கள் குறிப்பிட வேண்டும் எனும் அவசியம் கூட இல்லை. எனக்கு வேண்டியது ஒண்ணே ஒன்னு தான். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பக்ஷம் சென்னையில் வாழும் அணைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு.

இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்.

இந்த பதிவை எவ்ளவு மொழிகளில் மொழி பெயர்க்க முடியுமோ மொழி பெயருங்கள்.

இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அணைத்து உலக நாடுகளுக்கும் போய் சேர்ந்தால் அதன்மூலம் 2,3 வாரங்களில் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடுவோம்.

அதனால் குறைந்த பக்ஷம் இந்த பயனுள்ள பதிவை அணைத்து உலக நாடுகளிடமும் கொண்டு செல்லும் அந்த முயற்சியிலாது அனைவரும் ஒன்று படுவோம், வென்று காட்டுவோம்.

ஜெய்ஹிந்த்.

02/05/2020

ஹோமியோபதியில் கொரானா விற்கு தடுப்பு மருந்து
அர்சனிக் ஆல்ப் 30 வீர்யம்
--- இது கொரானா தடுப்பிற்கு நன்றாக வேலை செய்கிறது.

Arsenic Alb 30 pills. காலையில் 5 பில்ஸ் வெறும் வயிற்றில் ஒரு டோஸ் மூன்று நாட்களுக்கு போடவும். பக்க விளவுகள் இல்லை. நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

* * * * * * * * * * * * * * * * * *ஆரோக்கிய வாழ்விற்கு எளிய வழி காது அக்குபஞ்சர் (Auricular Therapy) * * * * * * * * * *...
25/08/2018

* * * * * * * * * * * * * * * * * *ஆரோக்கிய வாழ்விற்கு எளிய வழி காது அக்குபஞ்சர் (Auricular Therapy)
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அக்குபஞ்சரில் காது அக்குபஞ்சர் (Auricular Therapy) மிகப் பழமையான ஒரு சீன வைத்திய முறை. வந்த வியாதிகளை குணப்படுத்தவும், வரப்போகும் வியாதிகளை தடுக்கவும் ஒரு எளிய வழி இதோ உங்களுக்காக....
உடல் உள்ளுறுப்புகளுடன் தொடர்புடைய புள்ளிகள் காதுகளிலும் அமைந்திருக்கின்றன. இந்த புள்ளிகளில் கொடுக்கும் அக்குபஞ்சர் சிகிச்சை வியாதிகளை வர விடாமல் தடுக்கவும், வந்த வியாதிகளை குணமாக்கவும், அந்த நோய் அறிகுறிகளை அறவே குணப்படுத்தவும் செய்கின்றன..

இரண்டு காது மடல்களையும் மெதுவாக இரண்டு நிமிடம் அழுத்தம் (மசாஜ்) கொடுத்தால் போதும். அதன் பின் ஆழ்ந்த மூச்சு இழுத்துக் கொண்டே பின்பக்கம் சாய்ந்து பத்து வினாடிகள் இருந்து விட்டு மூச்சை நிதானமாக விட்டுக் கொண்டு முன்பக்கம் வர வேண்டும். ஒரு நிமிட நேரம் இந்த மூச்சுப் பயிற்சி. இதே போல ஒரு நாளைக்கு 2 (அ) 3 முறை செய்தாலே போதும்....
மிக எளிமையான பயிற்சி..முயன்று தான் பாருங்களேன்... இந்த காது பயிற்சி செய்து வந்தால் உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளது என்பதை நாமே அறிந்து கொள்ளலாம்.

* * * * * * * * * * * * * * * * * * * *சிறுநீரகங்கள் (கிட்னி) பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள்Symptoms Of Kidney Disease ...
20/08/2018

* * * * * * * * * * * * * * * * * * * *சிறுநீரகங்கள் (கிட்னி) பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள்

Symptoms Of Kidney Disease
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒரு தாயின் வயிற்றில் கரு உருவான நான்காவது மாதத்தில் உருவாகி இயங்க ஆரம்பித்து கடைசி வாழ்நாள் வரையில் இடைவிடாது இயங்கும் மிக முக்கிய உறுப்பு சிறுநீரகம். நம் எல்லோருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன என்று தெரியும். இரத்தத்தில் சேரும் கழிவுப்பொருள்களை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மிக முக்கியமான பணியை இவை செய்கின்றன. மனித உடலில் மிக முக்கிய செயலாற்றும் உறுப்பு இது..
நகரத்தில் வேலை செய்யும் துப்புரவுப்பணியாளர்கள் ஓரிருநாள் வேலை நிறுத்தம் செய்தால் எப்படி நகரம் நரகமாகி விடுமோ.. அது போல. உடலில் சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்தால் உடலே நரகமாகி விடும்..
மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எலும்புக் கூண்டுக்குள் அவரை விதை வடிவில் சிறிதாக இருப்பவை. நம் உடலில் உள்ள உலகின் மிகச்சிறந்த, மிக நுண்ணிய சுத்திகரிப்பு ஆலை, கழிவுமண்டலத்தின் முக்கிய காரியதரிசி என்றே சிறுநீரகங்களை கூறலாம். ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் நெஃப்ரான்கள் உள்ளன. கிட்டதட்ட 11லிருந்து14செ.மீ நீளமும், 6செ.மீ அகலமும் மற்றும் 4செ.மீ தடிமனும் கொண்டது.

இரத்தத்தைச் சுத்தம் செய்து அதிலிருக்கும் கழிவுகளை பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் கழிவாக வெளியேற்றுகிறது. உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில் 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது. இதயத்திலிருந்து வெளிப்படும் இரத்தத்தில் நான்கில் ஒரு பங்கு சிறுநீரகத்திற்கு சென்று சுத்திகரிக்கப்படுகின்றது. உடலில் உள்ள கழிவுப்பொருட்களை சிறுநீராக வெளியேற்றுவது மட்டுமே சிறுநீரகங்களின் வேலை இல்லை..ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. ஒருவரது உடலில் இருந்து அன்றாடம் சராசரியாக 1,500 மில்லி முதல் 2500 மில்லி வரை சிறுநீர் பிரிகிறது.
உடலுக்கு தேவையான நீர்சத்து சம நிலையில் இருக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருப்பதும், உடலின் திரவநிலையை சமநிலையில் பராமரிப்பதும், இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்திக்குத் தேவையான எரித்ரோபாய்டின் என்ற சுரப்பினை சுரப்பதும், எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ் போன்றவற்றை சம அளவில் வைத்திருக்கக்கூடிய வைட்டமின் டி3 யைத்தருவதும், அமில, காரத்தன்மைகளையும், சோடியம், பொட்டாசியம், அம்மோனியா போன்றவைகளை சரிவிகிதத்தில் வைத்திருப்பதுமான செயல்பாடுகளை செய்வதும் சிறுநீரகங்கள்தான்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க சிறுநீரகங்கள் உதவுகின்றன. நாம் உண்ணும் உணவு ஜீரண உறுப்புகளால் சத்தாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதே போல் உடல் உறுப்புகள் வெளியேற்றும் கழிவுகளும் ரத்தத்தில் கலந்து சீறு நீரகங்களுக்கு வருகிறது. ரத்தத்தில் கலந்து வரும் கழிவுகளான யூரியா, கிரியாட்டினன் போன்றவற்றை சிறு நீரகங்கள் பிரித்து சிறுநீராக வெளியேற்றுகிறது.
தினமும் நமது உடலில் உள்ள தேவையற்ற உப்பு மற்றும் தண்ணீரை சுத்திகரித்து, வெளியேற்றி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் பணியை சிறுநீரகம் செய்கிறது. இவ்வாறு அத்தனை பணிகளையும், மேலும் பல பணிகளையும் ஒரு மனிதன் ஆயுள் முழுவதும் சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன.
சிறுநீரகங்கள் செயல் இழப்பு ஏற்பட்டு, கழிவுகளை வெளியேற்றாமல் உடலில் தங்கி விடும் போதுதான் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. நாளடைவில் அதுவே உயிருக்கு ஆபத்தாக முடிகிறது. ஓயாமல் இறுதி மூச்சுவரை உழைக்க தயாராக இருக்கும் சிறுநீரகங்கள் இடையில் திடீரென வேலை நிறுத்தம் செய்யவும், பழுதடையவும் காரணங்கள் என்ன?? சிறுநீரகங்கள் வேலை நிறுத்தம் செய்ததை எப்படி ஆய்வது.. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன..? சற்று விரிவாக பார்க்கலாம்..
முதலில் சிறுநீரகங்கள் பாதித்தால் உண்டாகும் அறிகுறிகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
உடல் எடை இழப்பு, குமட்டல், பசியின்மை, வாந்தி, சுறுசுறுப்பின்மை, அதிக தாகம், அடிக்கடி விக்கல், சிறுவயதில் பற்கள் விழுதல், கர்ப்பப்பை கோளாறுகள், எப்போதும் சோர்வு, உடல்நலக் குறைவு, தலைவலி, தூக்கத்துடன் கூடிய மந்தமான நிலை, குழப்பம், மனப்பிரமை, நினைவற்ற நிலை, தோல் நிறம் வெளுத்துப் போதல், தசை துடிப்பு அல்லது தசை பிடிப்பு, உடல் முழுவதும் ஏற்படும் அரிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது, இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் போது வலி, சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல், வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம், கைகள் பாதங்கள் மற்றும் உடலில் சில பகுதிகள் மரத்துப் போதல், முறையற்ற நகங்களின் வளர்ச்சி, சுவாசிப்பதில் நாற்றம் மற்றும் சிரமம், கணுக்கால், பாதத்தில் வீக்கம், சிறுநீரகம் உள்ள இடத்துக்கு மேல் விலாபுறத்தில் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்துள்ளன என்று நாமே உணரலாம்.
உடலின் மற்ற உள்ளுறுப்புகள் முறையாக செயலாற்ற முக்கிய காரணியாக திகழ்வது இந்த சிறுநீரகங்கள் தான். ஒரு மனிதனின் உயிர்சக்தி இருக்கும் இடமான மூலாதார சக்தி என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள்

>நீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்!!   கோவைக்காய் மென்றாலே போதும் நாக்கில்...
12/02/2018

>

நீரிழிவை கட்டுப்படுத்தி, வயிற்றுப்புண்ணை ஆற்றும் மருத்துவகுணம் கொண்ட கோவைக்காய்!!


கோவைக்காய் மென்றாலே போதும் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.


கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.

நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்.

Address

5 Star Complex, Opp. New Bus Stand
Perambalur
621212

Opening Hours

Monday 9am - 6:30pm
Tuesday 9am - 7:30pm
Wednesday 9am - 7:30pm
Thursday 9am - 8:30pm
Friday 9am - 10:30pm
Saturday 9am - 5pm

Telephone

+91 93623-66633

Alerts

Be the first to know and let us send you an email when Sri Agathiyar Acu Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Agathiyar Acu Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category