15/02/2026
உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, உயிர்த்துளி ஃபவுண்டேஷன் சார்பாக ஜிப்மர் இரத்த வங்கியுடன் இணைந்து, காமதேனு சாரிட்டிஸ் மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி ஹோஸ்ட் ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன், இரத்ததான முகாம் மற்றும் இரத்ததான விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை எதிரில் 2026 பிப்ரவரி 8ஆம் தேதி மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி, உயிர்த்துளி இரத்ததானம் குழு தலைவர் வசந்த் அவர்களின் தலைமையிலும், செயலாளர் ராமமூர்த்தி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சட்டமன்ற உறுப்பினரும் உயிர்த்துளி அன்னதான குழுவின் கௌரவத் தலைவருமான செல்வம் அவர்களும், உயிர்த்துளி ஃபவுண்டேஷன் நிறுவனர் பிரபு அவர்களும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகளுக்கு இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக கீமோதெரபி மற்றும் அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் மிக அவசியமாக இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. இவ்வகை நோயாளிகளின் உயிரைக் காக்க பொதுமக்கள் தன்னார்வமாக இரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என்பதே இந்த முகாமின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சியில் உயிர்த்துளி இரத்ததானம் குழு கமிட்டி உறுப்பினர் கருணாகரன், உயிர்த்துளி உறவுகள் குழு கௌரவத் தலைவர் முத்துராமன், செயலாளர் மணிகண்டன், அன்னதானம் குழு தலைவர் பிரகாஷ், செயலாளர் சிவகுமார், குழு உறுப்பினர் நிஷா, பசுமை பயணம் குழு கௌரவத் தலைவர் சுந்தர முருகன், செயலாளர் ரூபி, கமிட்டி உறுப்பினர் ஹென்றி பால், மருத்துவ உதவி குழு ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன், விலங்கு நலம் மற்றும் பாதுகாப்பு குழு தலைவர் செல்வமுத்துராயன், செயலாளர் ஆபெல், கமிட்டி உறுப்பினர் ஏஞ்சலா ஜோஸ்பின், சமூக செயல்பாட்டாளர் விஜய், உயிர்த்துளி உறுப்பினர்கள் சந்தியா, சபரி, ஸ்ரீதரன், தனிஷ் கென்னடி, இந்திராணி கல்லூரி மாணவ, மாணவிகள், ஸ்ரீ சடகுலத்து அய்யனார் கலைக்குழுவினர், சமூக அமைப்பு பொறுப்பாளர்கள் எலிசபெத் ராணி, தனலட்சுமி, சோபியா, திருநங்கை கிரிஜா நாயக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இந்த இரத்ததான முகாமில் மொத்தம் 41 தன்னார்வலர்கள் இரத்ததானம் செய்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயாளிகள் உள்ளிட்ட அவசர மருத்துவ தேவையுள்ள நோயாளிகளின் உயிர்காக்கும் பணிக்கு தங்களது மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினர்.
அன்புடன்,
உயிர்த்துளி ஃபவுண்டேஷன்
நிறுவனர் – பிரபு
📞 09894 404632