Good herbals centre

Good herbals centre உடம்பே கோவில்
உயிரே கடவுள்

20/06/2018
சர்க்கரை  நோய்  குணமாக       நூக்கல் சாறு 1/2 லிட்டர் ,5 கிராம் பருத்தி விதை சூரணம் ,5 கிராம் எள்ளு புண்ணாக்கு ,5 கிராம்...
17/06/2018

சர்க்கரை நோய் குணமாக

நூக்கல் சாறு 1/2 லிட்டர் ,5 கிராம் பருத்தி விதை சூரணம் ,5 கிராம் எள்ளு புண்ணாக்கு ,5 கிராம் ஆவாரம் பூ சூரணம் . கலந்து தினமும் குடிக்க 7 நாட்களில் சர்க்கரை நோய் குறையும் . சர்க்கரை நோய் உடையோர் பாகர்காய் உண்பதை தவிர்க்கவும் .நாட்டு கோவை காய் தினமும் 2 உண்ணவும் .

12/06/2018
🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯********************************மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்**நேரம...
10/06/2018

🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯
*******************************

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

*மூளை*
***********

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

*கண்கள்*
************

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

*பற்கள்*
***********

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

*நரம்புகள்*
*************

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

*ரத்தம்*
*********

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

*சருமம்*
**********

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

*நுரையீரல் - இதயம்*
************************

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

*வயிறு*
***********

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

*கணையம்*
**************

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.



*கல்லீரல் - மண்ணீரல்*
**************************

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.



*மலக்குடல்*
**************

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

*பாதம்*
*********

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

செலவில்லா சித்த மருத்துவம் செலவில்லா சித்த மருத்துவம்111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர : ஏலகிரி அம்பது...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்
செலவில்லா சித்த மருத்துவம்
111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர :
ஏலகிரி அம்பது கிராம், பாசிப்பயறு அம்பது கிராம், வெட்டி வேர் அம்பது கிராம், கோஸ்டம் அம்பது கிராம், சோம்பு அம்பது கிராம், ஜடாமஞ்சி அம்பது கிராம், கார்போக அரிசி அம்பது கிராம், கிச்சிலி கிழங்கு அம்பது கிராம், விளாச்சை வேர் அம்பது கிராம், கோரைக் கிழங்கு அம்பது கிராம், சாம்பிராணி நூறு கிராம், சந்தனத்தூள் அம்பது கிராம், கஸ்தூரி மஞ்சள் அம்பது கிராம், ஆவாரம்பூ நூறு கிராம் எல்லாவற்றையும் நன்கு அடைத்து வைத்து தினமும் தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் நமது உடலில் அண்டாது.
112. இளைப்பு இருமல் தீர :
திப்பிலி எண்பது கிராம், சுக்கு, ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய் விளங்கம், கடுக்காய்ம் மிளகு இவை வகைக்கு பத்து கிராம் இவைகளை இளம் வறுப்பாய் வறுத்து இடித்து சலித்து அதன் அளவு கருப்பு கட்டி சேர்த்து காலை, இரவு பாக்களவு நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தீரும்.
113. புண்களுக்கு களிம்பு :
குங்கிலியம், கந்தகம், காசுகட்டி, வெண்காரம் இவைகளை சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து சிறு தீயிட்டு களிம்பாக்கி போட குணமாகும்.
114. ஒற்றைத் தலைவலிக்கு :
சிறுதுரும்பை பூ சேகரித்து இடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர ஒருதலைக்0 குத்து குணமாகும்.
115. எய்ட்ஸ் நோய்க்கு :
கொன்றை, வல்லாரை, சுத்தித்த ஆகாச கருடன் கிழங்கு, சிவனார் வேம்பு, குங்கிலியம், வேம்பு, உத்தாமணி, மஞ்சள் துளசி இவைகளை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு இதிலிருந்து தினமும் காலை, மாலை ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை போட்டு வேக வைத்து கசாயம் செய்து நாற்பது நாட்கள் குடித்து வர மேல்கண்ட நோய் தீரும்.
116. மருத்து வேகம் மற்றும் விஷ கோளாறுகளுக்கு :
அவுரி (நீலி) இருபது கிராம், அருகம்புல் முப்பது கிராம், மிளகு அய்ந்து கிராம் எல்லாவற்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருண்டை பிடித்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் காலை, மாலை பாலுடன் சாப்பிட குணமாகும்.
117. தலைமுடி நீளமாக, கருப்பாக வளர :
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், செம்பருத்திப்பூ நூறு எண்ணம், தேங்காய் எண்ணெயை ஒரு சட்டியில் இட்டு காய்ச்சி வரும்போது செம்பருத்திப் பூக்களை நன்கு நச்சி அந்த எண்ணெயுடன் போடவும். வெந்து சடசடப்பு அடங்கியதும் இறக்கி வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து வர தலைமுடி கருமையாக நீண்டு வளரும்.
118. சொறி சிரங்கு தைலம் :
தேங்காய் எண்ணெய் கால் லிட்டர், சுருள்பட்டை இரண்டு கிராம், கார்போக அரிசி பத்து கிராம், கந்தகம் அய்ந்து கிராம், ஊமத்தை இலைச் சாறு கால் லிட்டர், தேங்காய் எண்ணெய்யுடன் ஊமத்தை இலைச் சாற்றை சேர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற மூன்று சரக்குகளையும் இடித்து தூள் செய்து மேல் உள்ள கலவையில் போட்டு பதமாக காய்ச்சி இறக்கி சொறி, சிரங்குகளுக்கு மேலால் போட்டு வர குணமாகும்.
119. வயிற்றுப் புழுக்கள் வெளியேற :
புரசம் விதையை நீரில் ஊற வைத்து உள்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து பொடித்து அம்பது கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்த்து தினம் மூன்று வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு ஏதாவது ஒரு மல மிளக்கி மருந்தை அதிகாலையில் சாப்பிட்டால் மலத்துடன் புழுக்கள் வெளியேறும்.
120. கண், செவி நோய்களுக்கு தைலம் :
கரிசாலை, கற்றாழை, நெல்லிக்காய் இவைகளின் சாறு வகைக்கு இருநூறு மில்லி, பசும்பால் அய்நூறு மில்லி, நல்லெண்ணெய் அய்நூறு மில்லி, நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்ச வேர், கோஸ்டம், அதிமதுரம், சந்தனம் வகைக்கு பத்து கிராம், அரைத்து போட்டு காய்ச்சி தைல பதம் வந்ததும் வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகி வர நோய் தீரும்.
121. தீக்காயத்திற்கு மருந்து :
ஒரு கப் அளவு கொழுப்பு, இரண்டு முட்டையின் வெண்கரு இவைகளை ஒன்று சேர்த்து ஒரு மெல்லிய துணியில் தடவி காயத்தின் மேல் போட்டு வந்தால் எளிதில் தீக்காயம் ஆறும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும்.
122. குடிநீரை சுத்தமாக்க :
ஒரு குடம் தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நீத்தாத சுட்ட சுண்ணாம்பு பவுடரைப் போட்டு வைத்து மறுநாள் காலையில் வெகு தெளிவான சுத்தமான தண்ணீரை எடுத்து உபயோகிக்க வேண்டும்.
123. வெண்தொலி மாற :
காட்டு சீரகப்பொடி, மிளகு அல்லது எள்ளுப் பொடி சமமாக கலந்து தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீருடன் சாப்பிட வெண்தொலி கருமையாகும்.
124. குத்து இருமலுக்கு :
சிறு செருப்படை சாறு, வேப்பம் பட்டை சாறு, பொன்னாங்கன்னி சாறு சமமாக எடுத்து தேன் கலந்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட தீரும்.
அன்பான வாசக நண்பர்களே உங்களுக்கு தேவையான மருத்துவ சந்தேகங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய *செலவில்லா சித்தமருத்துவம், என்ற புத்தகத்தை ரூ.150* செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவர் K.P.பால்ராஜ் TRSMRSI
செல் : 9487348763

செலவில்லா சித்த மருத்துவம் செலவில்லா சித்த மருத்துவம்99. மார்புச் சளிக்கு :பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து சங்களவு தேனு...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்
செலவில்லா சித்த மருத்துவம்
99. மார்புச் சளிக்கு :பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து சங்களவு தேனுடன் கொடுக்க சளி தீரும்.

100. விந்து ஊற :பூனைக்காலி விதை, நிலப்பானை கிழங்கு பூமிசக்கரைக் கிழங்கு மூன்றையும், சூரணமாக்கி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட விந்து ஊறும்.

101. வாந்தியை நிறுத்த :நாயுருவி இலை, பிரண்டைக் கொழுந்து இரண்டையும் கொட்டை பாக்களவு எடுத்து அரைத்து இளம் வென்னீரில் கலக்கி கொடுக்க வாந்தி நின்று விடும்.

102. வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தால் :ஆடாதொடை இலைச்சாறும், தேனும் சம அளவு சேர்த்து வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு காலை, மதியம், மாலை இப்படி மூன்று நாட்கள் சாப்பிட சரியாகி விடும்.

103. வயிற்று வலிக்கு :முற்றிய முருங்கைப் பூ, முற்றிய பிரண்டை வகைக்கு ஒரு பிடி ஒரு முடி கொப்பரைத் தேங்காய் இவைகளை இடித்து பிட்டவித்து சாறு பிழிந்து கொடுக்க வயிற்று வலி தீரும்.

104. குஷ்ட நோய்க்கு மருந்து :பரங்கிப் பட்டை தூள் நூறு கிராம், கொடிவேலிவேர், நீரடி முத்து, செந்தகம் இவைகளின் தூள் வகைக்கு இருபது கிராம், சுத்தித்த சேங்கொட்டை முப்பது, நாட்டு எள் ஐநூறு கிராம் இவைகளை எல்லாம் மைய இடித்து வேளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட்டு வென்னீர் குடித்து வர நாற்பத்தி ஒரு நாளில் குஷ்டம் குணமாகும்.

105. இந்திரியம் அதிகரிக்க :ஆழி விதையை பாலில் வேக வைத்து பின் வெல்லம், நெய் சேர்த்து லேகியமாக்கி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட்டு வர விந்து ஊறும்.

106. சொப்பனத்தில் விந்து வெளியேறினால் :துளசி வேர் பொடி, வெற்றிலைச் சாறு, கருப்புக் கட்டி சேர்த்து தினமும் இரவு சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் நின்று விடும்.

107. மூட்டு வலிகளுக்கு :புதினா சாறு, நல்லெண்ணெய் வகைக்கு இருநூறு மில்லி எடுத்து சேர்த்து காய்ச்சி, இருபது கிராம் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டு மூட்டுகளில் தேய்து வென்னீர் இட்டு வர குணமாகும்.

109. முகப் பருவுக்கு :புனுகை தடவி வரலாம், திருநீற்று பச்சிலை சாற்றை தேய்த்து வரலாம், சங்கை சுட்டு உணரத்து போட முகப்பரு நீங்கும்.

110. வண்டு கடி, காணகடிக்கு :குப்பைமேனி இலைச்சாறு அல்லது வேலி பருத்தி இலைச்சாறு, அல்லது ஆடுதின்னா பாளைச் சாறு, அல்லது வெள்ளை காக்கணத்தி இலைச்சாறு இவைகள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து மேல் பூச்சாக பூசினாலும் விஷக்கடி மாறி விடும்.

அன்பான வாசக நண்பர்களே உங்களுக்குத் தேவையான மருத்துவ சந்தேங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய “செலவில்லா சித்தமருத்துவம்” என்ற புத்தகத்தை ரூ.150 எம்.ஒ. செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.
dr.கே.பி.பால்ராஜ், செல் : 9487348703

செலவில்லாத சித்த மருத்துவம்! செலவில்லாத சித்த மருத்துவம்!89. நோயாளிகளுக்கு உடல் சக்தி பெற : கூகை நீரை கொஞ்சம் நீர் விட்ட...
07/06/2018

செலவில்லாத சித்த மருத்துவம்!
செலவில்லாத சித்த மருத்துவம்!
89. நோயாளிகளுக்கு உடல் சக்தி பெற :
கூகை நீரை கொஞ்சம் நீர் விட்டு பசை போல காய்ச்சி பின்பு கொதி நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும். அவ்வாறு கலக்கும் போது சிறிதளவு சாதிக்காய் பொடியும் சர்க்கரையும் சேர்த்து கிண்டி சாப்பிட்டு வரவும்.
90. நல்ல பசி எடுக்க :
நிலவேம்பு பொடி 10 கிராம், கிராம்பு, நன்னாரி, கருவப்பட்டை, வேப்பம்பட்டை, ஏலம் இவை ஒவ்வொன்றிலும் 5 கிராம் எடுத்து பொடித்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து லு டீஸ்பூன் பொடியை லு கிளாஸ் காய்ச்சிய பாலுடன் சாப்பிட பசி உண்டாகும்.
91. தீப்புண் தோல் உரிவுக்கு :
மெழுகு 10 கிராம், தேங்காய் எண்ணெய் 20 கிராம் சேர்த்து சூடு உண்டாக்கி ஆறிய பின்பு காயத்தில் போட்டு வர புண் ஆறும்.
92. கப இருமலுக்கு :
வால் மிளகை வறுத்து தூள் செய்து கருப்பு கட்டி சேர்த்து லு டீஸ்பூன் அளவு தினமும் 6 வேலை சாப்பிட குணமாகும்.
93. ஆறாத புண்ணிற்கு :
வங்காள பச்சை 1 பங்கு நெய் 15 பங்கு சேர்த்து போட்டு வர புண் ஆறும்.
94. நாக்கிலும் உதட்டிலும் உண்டாகும் புண்ணுக்கு :பசுவின் பால் சிற்றா மணக்கு எண்ணெய் வகைக்கு 200 மில்லி சேர்த்து அதில் வெந்தயம், வெங்காயம், மயிர் மாணிக்க பச்சிலை, வகைக்கு 50 கிராம் எடுத்து அரைத்துப் போட்டு காய்ச்சி வடித்து காலை, மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குணமாகும்.

95. இரத்தக் கடுப்புக்கு :
வாழைப் பூவை இடித்து ரு படி சாறு பிழிந்து விளாமிச்சை வேர் 5 கிராம் அரைத்து போட்டு காலை, மாலை சாப்பிட குணமாகும்.
96. கால் வீக்கத்திற்கு : ஆனை கத்தாழை அல்லது ரெயில் கத்தாழை மடலை தீயிட்டு வாட்டி பிழிந்த சாற்றுடன் வரகு மாவை சேர்த்து குழம்பாய் காய்ச்சி வீக்கம் உள்ள இடத்தில் பூசி வர வீக்கம் வத்தும்.
97. நெஞ்சில் ஏற்படும் கபத்திற்கும் இருமலுக்கும் :
திப்பலி 20 கிராம், சுக்கு, மிளகு வகைக்கு 10 கிராம், நற்சீரகம், பெருஞ்சீரகம், ஓமம், அரத்தை வகைக்கு 5 கிராம் இவைகளை வெதுப்பி தூள் செய்து அதற்கு சமமாக சர்க்கரை சேர்த்து தேன் விட்டு பிசைந்து கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிட தீரும்.
98. கக்கல் விக்கலுக்கு :
கிராம், ஓமம், சீரகம் இவைகளை சம அளவு எடுத்து வெதுப்பி தூள் ஆக்கி மயில் இறகு சுட்ட சாம்பலை சமமாக சேர்த்து 1 டீஸ்பூன் அளவு தேனுடன் சேர்த்து சாப்பிட குணமாகும்.
99. மார்புச் சளிக்கு :
பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து காலை, மாலை, சங்களவு தேனுடன் சாப்பிட குணமாகும்.
100. விந்து ஊற : பூனைக்காலி விதை, நிலப்பன்னைக் கிழங்கு, பூமி சர்க்கரை கிழங்கு மூன்றையும் சூரணமாக்கி காலை, மாலை, 1 டீஸ்பூன் அளவு தேனுடன் சேர்த்து சாப்பிட விந்து ஊறும்.
101. ஆண் உறுப்பு விரைப்பு பெற :
எட்டிக் கொட்டை, அழுக்கரா கிழங்கு, வசம்பு மூன்றையும் சமமாக எடுத்து நைசாக அரைத்து பசும் பாலுடன் குழைத்து ஆண் உறுப்பில் தேய்த்து விட ஆண் உறுப்பு விரைப்பு பெறும்.
102. வாந்தியை நிறுத்த :
நாயுருவி இலை பிரண்டை கொழுந்து இரண்டையும் கொட்டைப் பாக்களவு எடுத்து அரைத்து இளம் வெந்நீரில் கலக்கிக் கொடுக்க வாந்தி நிற்கும்.
103. வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தால் :
ஆடாதொடை இலைச்சாறும் தேனும் சம அளவு சேர்த்து வேளைக்கு 1 டீஸ்பூன் அளவு காலை, மதியம், மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும்.

செலவில்லாத சித்த மருத்துவம் செலவில்லாத சித்த மருத்துவம்74) நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று இரண்டாக இடித்து பாலில் அவி...
07/06/2018

செலவில்லாத சித்த மருத்துவம்
செலவில்லாத சித்த மருத்துவம்
74) நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று இரண்டாக இடித்து பாலில் அவித்து, பொடித்து சூரணமாக்கி 1டம்ளர் காய்ச்சிய பாலில் 1 டீஸ்பூன் பொடியும், 1 டீஸ்பூன் தேனும் சேர்த்து சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
75) உடல் உறவில் பலன் பெற : சிறு நெரிஞ்சி காய்களை பாலில் அவித்து காய வைத்தும், அமுக்கரா கிழங்கை பாலில் வேக வைத்தும் காய வைத்து சூரணமாக்கி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு டீஸ்பூன் பொடியை காய்ச்சிய பாலில் போட்டு தினம் இரவு சாப்பிட்டு வர உடல் உறவில் பலன் கிட்டும்.
76) உடல் சூடு காங்கை குறைய : 1 கிலோ தாமரை பூவை நிழலில் உலர்த்தி ஒரு இரவு முழுவதும் 3 லிட்டர் நீரில் ஊற வைத்து, மறுநாள் 1 லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி 1 கிலோ சர்க்கரை சேர்த்து, தேன்பதம் வரும் வரை காய்ச்சி 15 மில்லி அளவு எடுத்து ஒரு கிளாசில் தண்ணீர் சேர்த்து பருக உடல் சூடு தணியும்.
77) உடல் பருமன் குறைய : நீர் முள்ளி சமூல சூரணம் 300 கிராமம், நெருஞ்சில் முள், சோம்பு அல்லது பெருஞ்சீரகம், கொத்தமல்லி, வகைக்கு 50 கிராமம் சேர்த்து இவைகளை 2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி 1/2 லிட்டர் ஆனதும் தினம் 125 மில்லி குடித்து வர உடல் பருமன் குறையும்.
78) வயிற்றுப் போக்கிற்கு : வெள்ளை குங்கிலியம் 5 கிராம், மாம்பருப்பு 10 கிராம், இலவம் பிசின் 5 கிராம், ஜாதிக்காய் 10 கிராம் சேர்த்து அரைத்து வேளைக்கு சுண்டக்காய் அளவு தேனுடன் சாப்பிட வயிற்றுப் போக்கு நிற்கும்.
79) சோரியாஸிஸ் : நீரடி முத்து, கசகசா தேங்காய் துருவல், காட்டு சீரகம், கருஞ்சீரகம், கார் போக அரிசி, பிரமதண்டு விதை இவைகளை சம அளவு எடுத்து புளித்த மோர் விட்டு அரைத்து உடம்பில் பூசி 3 மணி நேரம் கழித்து வென்னீரில் குளித்து வர சோரியாஸிஸ் குணமாகும்.
80) உங்கள் வீட்டு பசுக்கள் பால் சுரக்க : முள்ளுகீரை, கொள்ளு, கடலை சேர்த்து அரைத்து, நீருடன் அல்லது தனியாக பசுவுக்கு ஊட்டி வர நிறைய பால் சுரக்கும்.
81) குடல் கிருமிகள் சாக : பேய்த்துளசி அல்லது காஞ்சாங்கோரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்தால் குடல் புழுக்கள் மடிந்து போகும். இதை சொரி, சிறங்கிற்கும் தேய்த்தும் குளிக்கலாம்.
82) குழந்தைகளுக்கு வயிற்று போக்கு டானிக் ஜாதிக்காய் ஒன்று, கசகசா 10 கிராம் எடுத்து இரண்டையும் சேர்த்து அரைத்து பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி, நெய், தேன் சேர்த்து கொடுக்க வயிற்றுப் போக்கு மாறி குழந்தைகள் நலன் பெறும்.
83) முடி உதிர்வதை தடுக்க : நெல்லிக்காய் பவுடர், வெந்தய பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து தேய்த்து குளிக்க முடி உதிர்வது நின்று விடும்.
84) முகத்தில் உள்ள கரும்புள்ளி போக : சந்தனம், முள்ளு முருங்கை இலை, பாசிப் பயறு, உப்பு இவைகளை சேர்த்து அரைத்து முகத்தில்பூசி 2 மணி நேரத்திற்கு பின்பு வென்னீரில் கழுவவும், சில தினங்களில் கரும்புள்ளி மாறி விடும்.
85) காக்காய் வலிப்பு தீர : வசம்பு, பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய் தோல், அதிவிடயம், கருப்பு உப்பு இவைகளை சம அளவு எடுத்து பொடி பண்ணி 1 டீஸ் பூன் அளவு காலை, மாலை, இரவு தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.
86) மர்ம உறுப்பு ஊரலுக்கு : மருதோன்றி இலையும், எலுமிச்சை பழச்சாறும் சேர்த்து அரைத்து போட்டு வர ஊரல் குணமாகும்.
87) ஆண்மை சக்தி பெற : நெருஞ்சில் விதையையும் பூனைக்காலி பருப்பையும், பசும் பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து பசும்பாலுடன் தினம் இரவு 1 டீஸ்பூன் சாப்பிட்டு வர ஆண்மை கூடும்.
88) வயிறு பொருமல் தீர : பெருங்காயத்தையும், ஓமத்தையும் சமமாக எடுத்து அரைத்து ஆறிய வென்னீரில் கலக்கி குடிக்க வயிறு பொருமல் தீரும்.
89) நஞ்சு உண்டவர்களுக்கு 10 கிராம் அளவு கருப்பு மொச்சையை அரைத்து 2,3 கிளாஸ் தண்ணீரில் கலக்கி கொடுக்க, வாந்தியாகி விஷம் எல்லாம் வெளியேறி விடும். பிறகு விஷம் முறிவுக்கு கோழிமுட்டை வெண்கருவை கொடுக்கலாம்.

செலவில்லா சித்த மருத்துவம் செலவில்லா சித்த மருத்துவம்61. இதய படபடப்பு அடங்க : புதினா இலையை இடித்து நீரில் போட்டு காய்ச்ச...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்
செலவில்லா சித்த மருத்துவம்
61. இதய படபடப்பு அடங்க : புதினா இலையை இடித்து நீரில் போட்டு காய்ச்சி குடிநீராக்கி அதில் பாலும் தேனும் சேர்த்து குடிக்க சுகம் கிடைக்கும்.
62. மலக்கட்டு வயிற்று நோவு தீர : வேப்பிலை கொழுந்து, அதிமதுரம், சர்க்கரை இவைகளை சமமாக எடுத்து விழுதாக அரைத்து நெய்யில் வேக வைத்து 2கிராம் அளவில் சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி வயிற்று நோய் தீரும்.
63. மூக்கடைப்பு தீர : கர்ப்பூரம் 1கிராம், நவச்சாரம் 4கிராம் எடுத்து பொடியாக்கி முகர மூக்கடைப்பு உடன் தீரும்.
64. படர்தாமரை சொறி சிரங்கிற்கு : அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பு, தகரவிதை, காஞ்சாங்கோரை அல்லது பேய் துளசி இவைகளை சம அளவு எடுத்து மோர் விட்டு அரைத்து மேலால் பூசிவ ர குணமாகும்.
65. ஜன்னி, வலிப்பு, மூச்சுக்குத்து, காக்காய் வலிப்புக்கு : அவுரி அல்லது நீலி, உள்ளி, வசம்பு இவைகளை ஒன்றாய் சேர்த்து இடித்து முகரச் செய்தால் தீரும்.
66. வயிறு கழிச்சலை நிறுத்த : விளாம் பிசினை பொடித்து எருமை தயிரில் சேர்த்து குடிக்க கழிச்சல் நின்றுவிடும்.
67. சகல வாய்வுக்கும் : சீரகம், இந்துப்பு, ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுஞ்சீரகம், பெருங்காயம் இவைகளை சம எடையாக எடுத்து, வறுத்து தூள் செய்து வேளைக்கு 1ஸ்பூன் அளவு பொடியை தேன் அல்லது நெய்யில் சேர்த்து சாப்பிட குணமாகும்.
68.சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு : அதிமதுரம், கடுக்காய் தொலி, மிளகு சம அளவாக எடுத்து இளம் வறுப்பாய் வறுத்து தூள் செய்து வேளைக்கு 1டீஸ்பூன் தேனுடன் தினம் 3 வேளை சாப்பிட குணமாகும்.
69.நரம்பு பிடிப்புக்கு : நண்டு சாற்றையும், ஆமணக்கு எண்ணெய்யும் சமபாகமாக எடுத்து காய்ச்சி பிடிப்பு உள்ள இடத்தில் தேய்க்க தீரும்.
70.பவுத்திர நோய் தீர : குப்பைமேனி தூள், திப்பிலி தூள் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து 2 டீஸ்பூன் அளவு பொடியை 1வேளைக்கு பசு நெய்யில் கலந்து தினம் 1வேளை 40 நாட்கள் காலை தோறும் சாப்பிட குணமாகும்.
71. சகல சிரந்தி நோய்க்கும் : சுத்தித்த ரசம் 2கிராம், நீரடி முத்து, துருசு, கெந்தகம் வகை;கு 5கிராம் எடுத்து வெற்றிலை சாற்றில் அரைத்து 200 மில்லி நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி உடம்பில் தேய்த்து வரகிரந்தி நோய் தீரும்.
72. அரையாப்பு புண்ணுக்கு : பச்சை கொடிவேலி வேர் தொலியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து போட குணமாகும்.
73. உடல் வலிமை உண்டாக : வாதுமை பருப்பு, வெந்தயம், கசகசா, கோதுமை மாவு, நெய், பால், சர்க்கரை சேர்த்து காய்ச்சி தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடல்வலிமை பெறும்.
74. நல்ல தூக்கம் வர : திப்பிலியை ஒன்று இரண்டாக இடித்து பசும்பாலில் அவித்து காயவைத்து பொடியாக்கி 300 மில்லி பாலில் 2கிராம் பொடியை போட்டு தினம் இரவு சாப்பிடநல்ல தூக்கம் வரும்.
75. உடல் உறவில் பலன் பெற : நிறுநெஞ்சில் காய்களை பால்விட்டுஅவித்து நிழலில் காய வைத்துஇசம பங்கு பாலில் அவித்து காயவைத்த அமுக்கரா சேர்த்து இடித்து இரண்டையும் சூரணமாக்கி பசும்பாலில் வேளைக்கு 1 டீஸ்பூன் காலை, இரவு உணவுக்கு பின்பு சாப்பிட்டு வர உடல் உறவு பெலன் உண்டாகும்.
76. உடல் சூடு காங்கை குறைய : 1கிலோ தாமரை பூவை நிழலில் காய வைத்து 3லிட்டர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் அந்த நீரை 1 லிட்டர் வரும் வரை காய்ச்சி வடிகட்டி 1 கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதம் வரும் வரை காய்ச்சி 15 மில்லி அளவு 1 கிளாஸில் ஊற்றி நீர் சேர்த்து குடிக்க சூடு தணியும்.
77. உடல் பருமன் குறைய : நீர்முள்ளி சமூலம் 200 கிராம், நெருஞ்சில் முள்இ சோம்பு அல்லது பெருஞ்சீரகம், கொத்தமல்லி வகைக்கு 50 கிராம் சேர்த்து இவைகளை 2 லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி ½ லிட்டர் ஆனதும் தினம் 125 மில்லி குடித்து வர உடல் பருமன் குறையும்.
78. வயிற்று போக்கு குணமடைய : குங்கிலியம் 5 கிராம், மாம்பருப்பு 10 கிராம் இலவம் பிசின் 5கிராம், ஜாதிக்காய் 10 கிராம், சேர்த்து அரைத்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட வயிற்றுபோக்கு நிற்கும்.

79. உங்கள் வீட்டு பசுக்கள் பால் சுரக்க : முள்ளுகீரை, கொள்ளு, கடலைபருப்பு சமம் சேர்த்து அரைத்து வேகவைத்து பசுவிற்கு ஊட்ட பால் நிறைய சுரக்கும்.
80. குடல் கிறுமிகள் சாக : பேய்த்துளசி அல்லது காஞ்சாங் கோரை இலையை அரைத்து ஆசன வாயில் வைத்தால் குடல் புழுக்கள் மடிந்து போகும். இதை சொறி சிரங்கிற்கும் தேய்த்து குளிக்கலாம்.
செலவில்லாத சித்த மருத்துவ புத்தகம் - தென்காசி புக் ஸ்டால்களில் கிடைக்கும்
தொடரும்.......

மருத்துவர் : K.P. பால்ராஜ் . RTSMP.SI.
S.V.கரை - 627856
திருநெல்வேலி மாவட்டம்
செல் : 94 87 34 87 03

செலவில்லா சித்த மருத்துவம் செலவில்லா சித்த மருத்துவம்அன்பு மிக்க வாசக நண்பர்களுக்கு நோய் பற்றிய சந்தேகங்களை அதை குணமாக்க...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்
செலவில்லா சித்த மருத்துவம்
அன்பு மிக்க வாசக நண்பர்களுக்கு நோய் பற்றிய சந்தேகங்களை அதை குணமாக்கும் வைத்திய முறைகளை கடிதம் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ கேட்டு தெரிந்து கொள்ளவும். நான் எழுதிய செலவில்லா சித்த மருந்துவ புத்தகம் அனைவருடைய வீட்டிலும் இருக்க வேண்டிய மருத்துவப் புத்தகம். வாங்கி வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
46. மூலமுளை நோய்க்கு :
முள்ளங்கி கிழங்கையும் பிண்ணாக்கு கீரை இரண்டையும்

சேர்த்து கறிசமைத்து சாப்பிட்டுவர குணமாகும்.
47. துர் நாற்றம் உள்ள கழிச்சலுக்கு :

பெருமரத்து(மருதமரம்) பட்டையை மைபோல் அரைத்து மோரில் கலக்கி குடிக்க கெட்டவாடைதீரும்.
48. வயிற்று கடுப்பிற்கு :

துத்தி வேரை நன்கு அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்து மோரில் கலக்கி குடிக்க குணமாகும் .
49. சகல விதமான வாய்வுக்கும் :

மிளகு, ஓமம், வெந்தயம், சீரகம், தைவேளை வேர் இவைகளை சமபாகம் எடுத்து பொன் வறுவலாக வறுத்து பொடியாக்கி 1 டீஸ்பூன் தேனுடன் சாப்பிட வாய்வு தொல்லை தீரும்.
50. குன்மவலி மற்றும் வயிற்று புண் :

தோல்சீவிய சுக்கு , பொறித்த வெண்கரம். வறுத்த ஓமம், வறுத்தமிளகு வகைக்கு 10 கிராம் எடுத்து, அதில் ¼ பங்கு பெருந்தும்பை கொழுந்து சேர்த்து எருமை மோர்; விட்டு அரைத்து காலை, மாலை, 1டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குன்மவலிநோய் தீரும் .

51. சிலந்தி புண் , சிரங்கிற்கு :

சுத்தித்த இரசம் 2கிராம், நீரடி முத்து , துருசு , கெந்தகம் வகைக்கு 4கிராம் இவைகளை வெற்றிலை சாறு கொண்டு அரைத்து மேலால் போட்டு வர குணமாகும். 300மில்லி நல்லெண்ணெய்யில் போட்டு காய்ச்சி தேய்கவும் குணமாகும் .
52. பித்தத்திற்கு :

பித்தம் வந்தால் தலை சுற்றும் உடல் வறச்சியாக காணப்படும் எலுமிச்சைசாறும், துளசி சாறும் வகைக்கு 100மில்லி சேர்த்து சாக்கரை சேர்த்து குடிக்க குணமாகும் .
53. கடுப்பு , கழிச்சல் , இரத்த , சீதபேதிக்கு :

மாதுளம் பழ ஓட்டையும் , புளியங் கொட்டை மேல் ஓட்டையும் ,சமபாகம் எடுத்து பொடியாக்கி வேளைக்கு 1 டீஸ்பூன் அளவு எடுத்து தேன் அல்லது வெண்ணெய் அல்லது மோருடன் சாப்பிட நோய் தீரும் .
54. இருமல் குணமாக :

திப்பிலி, கிராம்பு இவைகளை சமமாக எடுத்து வறுத்து பொடியாக்கி ½ டீஸ்பூன் அளவு எடுத்து தேனுடன் சாப்பிட இருமல் குணமாகும் .
55. ஜுரம் அல்லது காய்ச்சல் குணமாக :

வில்வ இலையை 1பிடி எடுத்து அத்துடன் சுக்கு, மிளகு , சீரகம் , வகைக்கு 20கிராம் சேர்த்து இடித்து எல்லாவற்றையும் ½ லிட்டர் தண்ணீரில் போட்டு 100மில்லி வரும் வரை காய்ச்சி குடித்தால் ஜுரம் தணியும் .
56. ஈளை, இருமல் , ஆஸ்து மாவிற்கு :

கண்டங்கத்தரிவேர் , ஆடாதொடை வேர் வகைக்கு 40கிராம், அரிசி திப்பிலி 5கிராம் சேர்த்து இடித்து 2 லிட்டர்; தண்ணீரில் போட்டு ½ லிட்டர் வரும் வரை காய்ச்சி வேளைக்;கு 100மில்;லி வீதம் தினம் 4 வேளை குடித்து வர குணமாகும் .
57. தேகம் பெலன் பெற :

நத்தை சூரி விதையை இடித்து சூரணமாக்கி தினம் 2கிராம் அதாவது 1 டீஸ்பூன் அளவு காய்ச்சிய பாலுடன் சேர்த்து சாப்பிட்டுவர தேகம் பெலன் பெற்று விந்து அதிகரிக்கும் .
58. விக்கல், வாந்தி, இருமல், ஜுரத்திற்கு :

கண்டங்கத்திரி விதை, அமுக்கா, திப்பிலி இவைகளை சமஅளவு எடுத்து இடித்து சூரணமாக்கி வேளைக்கு 1டீஸ்பூன் வீதம் தினம் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளை தேனுடைன் சேர்த்து சாப்பிடகுணமாகும்.
59. புண்கள் குணமாக :

கெந்தகம் , காவிக்கல் , களிப்பாக்கு இவைகளை சமஅளவு எடுத்து இடித்து பொடித்து தேங்காய் எண்ணெய்யில் குழைத்து போட்டு வர புண்கள் ஆறிவிடும்.
60. உடல்வலி, கை, கால்கள் அசதிபோக:

முடக்காத்தன் இலையை அரிசி மாவுடன் சேர்த்து அரைத்து அடைசெய்து சாப்பிடவலியெல்லாம் போய் விடும்.
குறிப்பு : தேவையான மருந்துக்களை ஊரில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கேட்டு வாங்கிகொள்ளலாம்.

மருத்துவர் : k.P .பால்ராஜ் திருநெல்வேலி மாவட்டம்

செலவில்லா சித்த மருத்துவம்31. காதுவலி தலைவலிக்கு காய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி தீ இட்டால் புகைவரும் . அந்த புகையை...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்

31. காதுவலி தலைவலிக்கு
காய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி தீ இட்டால் புகைவரும் . அந்த புகையை காதின் உள் பாகத்தில் பிடித்தால் காது புழு எல்லாம் வெளியேறும். வலியும்தீரும்.
32. தேவையில்லாத மயிரை நீக்க
நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் தாளகம் அல்லது அரிதாரம் இதில் 10கிராம் வாங்கி அத்துடன் 10கிராம் சுண்ணாம்பை சேர்த்து அரைத்து தேவையான இடத்தில் இரவு பூசிக் கொள்ளவும். காலையில் இளஞ்சூட்டு வென்னீரால் கழுவித் துடைத்து எடுக்க மயிரெல்லாம் நீங்கி விடும்.
33. இந்திரியத்தை கட்ட
முருங்கை பிசின் 25கிராம், அபின் 10கிராம் அபின் கிடைக்காவிடில் கசகசா 30கிராம், எள்ளுப் பிண்ணாக்கு 40கிராம் மூன்றையும் இடித்து சலித்து சூரண மாக்கி உடல் உறவுக்கு 1½மணிக்கு முன்பு 1டீஸ்பூன் சூரணத்தை வாயில் போட்டு பால் குடிக்க தாது இறுகிவிடும்.
34. அரையில் வரும் பவுந்திர ரண புண்ணுக்கு களிம்பு:
காசுகட்டி, துத்தம், வெள்ளைக் குங்கிலியம் வகைக்கு 10கிராம், சுண்ணாம்பு 40கிராம், பசுவெண்ணெய் 80கிராம் இவைகளை அரைத்து களிம்பாக்கி துணியில் தடவி புண்களில் போட்டுவர புண் சீக்கிரம் ஆறும்.

35. தேமலுக்கு மருந்து
முற்றிய பூவரசன்காய், செவ்வரளி மொட்டு இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இத்துடன் மஞ்சள் சேர்த்து இடித்து சலித்து பொடியை நீரில் குழைத்து மேலால் பூசிவர தேமல் போய்விடும்.
36. படர் தாமரைக்கு
எருக்கன் வேர்பட்டைத் தோல், தகரவிதை இரண்டையும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து மேலால் பூசிவர படர்தாமரை மறைந்துவிடும்.
37. காதுகுத்தல் இறைச்சல் மந்தம்
200 மில்லி வேப்ப எண்ணெய்யில், 50கிராம் மஞ்சள், 25கிராம் வெள்ளைப் பூண்டு, அரிசி இரண்டையும் இடித்துப் போட்டு காய்ச்சி வடித்து ஆறியபின் காதுக்கு 2சொட்டு தைலம் விட்டு அடைத்து உச்சந் தலையிலும் தேய்த்து வென்னீரில் குளிக்க குணமாகும்.
38. பவுந்திர நோய்க்கு உள் மருந்து
குப்பைமேனி தூள் திப்பிலிதூள் இரண்டையும் சமமாக சேர்த்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு பசுநெய்யுடன் சாப்பிட 40நாட்களில் குணமாகும்
39. சிலந்திப் புண்ணுக்கு
எட்டிக் கொட்டையை நீர்விட்டு அரைத்து போட்டுவர குணமாகும்.
40. அக்கி நோய்க்கு
கடுக்காய்த்தோல் 1பங்கு படிகாரம் ¼ பங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து குழைத்து அக்கியின் மேலால் பூச குணமாகும், ஊமத்தன் இலையை எருமைத் தயிருடன் அரைத்து போட்டாலும் அக்கி நீங்கிவிடும்.
41. மார்பு நெஞ்சு வலி போக
வெந்தயம், திருநீற்று பச்சிலை, செம்பருத்திப் பூ மற்றும் இதழ் அம்மூன்றையும் சேர்த்து அரைத்து தேனுடன் சாப்பிட நெஞ்சு வலி தீரும்.
42. பல் ஆட்டம், பல் சொத்தை, பல்வலி போக
சுக்கு, கடுக்காய்த்தோல், காசுகட்டி, இந்துப்பு இவைகளை சமபாகம் எடுத்து பொடியாக்கி பல் துலக்கி வர மேல் கண்ட கோளாறு நீங்கும்.
43. தேமலுக்கு மற்றுமொரு மருந்து
மருதோன்றி இலை, சிறிது மிளகு இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து தேய்த்து அரப்புப் பொடி தேய்த்து குளித்து வர தீரும்.
44. உடலின் தோன்றும், ஊரல் தடிப்புக்கு
அம்மான் பச்சரிசி அல்லது பாலாட்டன் குழை வசம்பு, இந்துப்பு மூன்றையும் அரைத்து உடம்பில் தேய்த்து ½ மணி கழித்து குளித்து வர குணமாகும்.
45. விடாத ஜுரத்துக்கு
ஒரு விரல் அளவு நீலி (அவுரி) வேரையும், 10 மிளகையும் சேர்த்து அரைத்து வென்னீரில் கலக்கி, அதில் குன்னி முத்து அளவு சுண்ணாம்பையும் சேர்த்து காலை-மாலை 3நாட்கள் உண்ண ஜுரம் தீரும்.

Address

Puduchcheri

Telephone

9894189821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good herbals centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram