Good herbals centre

Good herbals centre உடம்பே கோவில்
உயிரே கடவுள்

20/06/2018
சர்க்கரை  நோய்  குணமாக       நூக்கல் சாறு 1/2 லிட்டர் ,5 கிராம் பருத்தி விதை சூரணம் ,5 கிராம் எள்ளு புண்ணாக்கு ,5 கிராம்...
17/06/2018

சர்க்கரை நோய் குணமாக

நூக்கல் சாறு 1/2 லிட்டர் ,5 கிராம் பருத்தி விதை சூரணம் ,5 கிராம் எள்ளு புண்ணாக்கு ,5 கிராம் ஆவாரம் பூ சூரணம் . கலந்து தினமும் குடிக்க 7 நாட்களில் சர்க்கரை நோய் குறையும் . சர்க்கரை நோய் உடையோர் பாகர்காய் உண்பதை தவிர்க்கவும் .நாட்டு கோவை காய் தினமும் 2 உண்ணவும் .

12/06/2018
🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯********************************மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்**நேரம...
10/06/2018

🔯ஆயுர்வேத ரகசியங்கள்🔯
*******************************

*மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்*

*நேரமின்மை* இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய செய்தி. நேரத்தை குறைந்த அளவில் எடுக்கும், சில எளிய வீட்டு வைத்தியங்கள் நிறையவே உள்ளன. அவை நம் ஆரோக்கியத்தின் கவசமாகும். அவற்றைத் தெரிந்து கொண்டால், நோய் வரும் முன் நம்மைக் காத்துக்கொள்ளலாம். அதாவது, ரத்தம் சுத்தமில்லாமல் இருப்பது, அதைத் தொடர்ந்து உள்ளுறுப்புகள் பாதிப்பதே நோயாக வந்து நம்மைத் துன்புறுத்துகிறது. ஆகவே, நோய் வரும் வாய்ப்பையே தடுத்துவிட்டால் ஆரோக்கியம் எப்போதும் நம் வசமே. அன்றாடம் பயன்படுத்தும் இயற்கை விளைப்பொருட்களின் மூலம் நம் உடலின் உறுப்புகளைப் பலப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

*மூளை*
***********

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

தாமரைப்பூவை நீர் விட்டு காய்ச்சி தினசரி மூன்று வேளையும் ஒரு டம்ளர் அளவுக்கு குடித்து வந்தால் மூளையின் செயல்பாடு மேம்படும். இதை 48 நாள்களுக்குக் குடித்து வரலாம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

இலந்தைப் பழத்துடன் கருப்பட்டிச் சேர்த்து அரைத்துக் குடித்தால் பதற்றத்தைக் குறைக்க முடியும். மூளையின் நரம்புகள் வலுப்பெறும்.

பெருவிரலும் ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையை, தினமும் 20 நிமிடங்கள் செய்தால் மூளையின் செல்கள் புத்துயிர் பெறும். நினைவுத்திறன் மேம்படும்.

*கண்கள்*
************

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

*பற்கள்*
***********

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

*நரம்புகள்*
*************

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

*ரத்தம்*
*********

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
நாவல் பழம், இலந்தைப் பழம்ஞ ஆகியவற்றை சீசன் நேரத்தில் தவறாமல் சாப்பிட வேண்டும்.

*சருமம்*
**********

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

எந்தவித தோல் நோய்களும் அண்டாமல் இருக்க, வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து, உடலில் பூசிக் குளித்து வந்தால் சருமம் மின்னும்.

*நுரையீரல் - இதயம்*
************************

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் வராது.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

*வயிறு*
***********

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கொன்றை பூ கஷாயம், புதினா துவையல் ஆகியவை வயிற்று வலியை தீர்க்கும் சிறந்த மூலிகைகள்.

*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

*கணையம்*
**************

பாகற்காய், அவரைப்பிஞ்சு, நாவல்பழம் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கணையத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.

தினசரி 5 ஆவாரம் பூவை மென்று தின்ன வேண்டும்.

கொன்றைப் பூவை அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் கணையத்தின் செயல்பாடுகள் சீராகும்.

கோவைப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.



*கல்லீரல் - மண்ணீரல்*
**************************

சீந்தில் கொடியை தேநீராக்கி குடித்து வருவது நல்லது.

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

வில்வ பழச்சதையை நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.



*மலக்குடல்*
**************

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

நார்த்தங்காய் ஊறுகாயை அளவுடன் சாப்பிடுவது நல்லது. செரிமானச் சக்தி மேம்படும்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

*பாதம்*
*********

கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெயை ஊற்றிச் சாறு பிழிந்துத் தடவினால் கால் வெடிப்பு சரியாகும்.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

- *சித்தர்களின் குரல் shiva shangar*

செலவில்லா சித்த மருத்துவம் செலவில்லா சித்த மருத்துவம்111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர : ஏலகிரி அம்பது...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்
செலவில்லா சித்த மருத்துவம்
111. தேமல், ஊறல், சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் தீர :
ஏலகிரி அம்பது கிராம், பாசிப்பயறு அம்பது கிராம், வெட்டி வேர் அம்பது கிராம், கோஸ்டம் அம்பது கிராம், சோம்பு அம்பது கிராம், ஜடாமஞ்சி அம்பது கிராம், கார்போக அரிசி அம்பது கிராம், கிச்சிலி கிழங்கு அம்பது கிராம், விளாச்சை வேர் அம்பது கிராம், கோரைக் கிழங்கு அம்பது கிராம், சாம்பிராணி நூறு கிராம், சந்தனத்தூள் அம்பது கிராம், கஸ்தூரி மஞ்சள் அம்பது கிராம், ஆவாரம்பூ நூறு கிராம் எல்லாவற்றையும் நன்கு அடைத்து வைத்து தினமும் தேய்த்து குளித்து வந்தால் மேற்கண்ட நோய்கள் நமது உடலில் அண்டாது.
112. இளைப்பு இருமல் தீர :
திப்பிலி எண்பது கிராம், சுக்கு, ஏலம், சீரகம், திப்பிலி வேர், வாய் விளங்கம், கடுக்காய்ம் மிளகு இவை வகைக்கு பத்து கிராம் இவைகளை இளம் வறுப்பாய் வறுத்து இடித்து சலித்து அதன் அளவு கருப்பு கட்டி சேர்த்து காலை, இரவு பாக்களவு நாற்பது நாட்கள் சாப்பிட்டு வர தீரும்.
113. புண்களுக்கு களிம்பு :
குங்கிலியம், கந்தகம், காசுகட்டி, வெண்காரம் இவைகளை சம அளவு எடுத்து ஒன்று சேர்த்து சிறு தீயிட்டு களிம்பாக்கி போட குணமாகும்.
114. ஒற்றைத் தலைவலிக்கு :
சிறுதுரும்பை பூ சேகரித்து இடித்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வர ஒருதலைக்0 குத்து குணமாகும்.
115. எய்ட்ஸ் நோய்க்கு :
கொன்றை, வல்லாரை, சுத்தித்த ஆகாச கருடன் கிழங்கு, சிவனார் வேம்பு, குங்கிலியம், வேம்பு, உத்தாமணி, மஞ்சள் துளசி இவைகளை சம அளவு எடுத்து இடித்து வைத்துக் கொண்டு இதிலிருந்து தினமும் காலை, மாலை ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடியை போட்டு வேக வைத்து கசாயம் செய்து நாற்பது நாட்கள் குடித்து வர மேல்கண்ட நோய் தீரும்.
116. மருத்து வேகம் மற்றும் விஷ கோளாறுகளுக்கு :
அவுரி (நீலி) இருபது கிராம், அருகம்புல் முப்பது கிராம், மிளகு அய்ந்து கிராம் எல்லாவற்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அரை நெல்லிக்காய் அளவு உருண்டை பிடித்து வேளைக்கு ஒரு உருண்டை வீதம் காலை, மாலை பாலுடன் சாப்பிட குணமாகும்.
117. தலைமுடி நீளமாக, கருப்பாக வளர :
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர், செம்பருத்திப்பூ நூறு எண்ணம், தேங்காய் எண்ணெயை ஒரு சட்டியில் இட்டு காய்ச்சி வரும்போது செம்பருத்திப் பூக்களை நன்கு நச்சி அந்த எண்ணெயுடன் போடவும். வெந்து சடசடப்பு அடங்கியதும் இறக்கி வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து வர தலைமுடி கருமையாக நீண்டு வளரும்.
118. சொறி சிரங்கு தைலம் :
தேங்காய் எண்ணெய் கால் லிட்டர், சுருள்பட்டை இரண்டு கிராம், கார்போக அரிசி பத்து கிராம், கந்தகம் அய்ந்து கிராம், ஊமத்தை இலைச் சாறு கால் லிட்டர், தேங்காய் எண்ணெய்யுடன் ஊமத்தை இலைச் சாற்றை சேர்த்து வைத்துக் கொள்ளவும். மற்ற மூன்று சரக்குகளையும் இடித்து தூள் செய்து மேல் உள்ள கலவையில் போட்டு பதமாக காய்ச்சி இறக்கி சொறி, சிரங்குகளுக்கு மேலால் போட்டு வர குணமாகும்.
119. வயிற்றுப் புழுக்கள் வெளியேற :
புரசம் விதையை நீரில் ஊற வைத்து உள்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து பொடித்து அம்பது கிராம் அளவு எடுத்து தேனுடன் சேர்த்து தினம் மூன்று வேளை மூன்று நாட்கள் சாப்பிட்டு ஏதாவது ஒரு மல மிளக்கி மருந்தை அதிகாலையில் சாப்பிட்டால் மலத்துடன் புழுக்கள் வெளியேறும்.
120. கண், செவி நோய்களுக்கு தைலம் :
கரிசாலை, கற்றாழை, நெல்லிக்காய் இவைகளின் சாறு வகைக்கு இருநூறு மில்லி, பசும்பால் அய்நூறு மில்லி, நல்லெண்ணெய் அய்நூறு மில்லி, நன்னாரி வேர், வெட்டி வேர், விளாமிச்ச வேர், கோஸ்டம், அதிமதுரம், சந்தனம் வகைக்கு பத்து கிராம், அரைத்து போட்டு காய்ச்சி தைல பதம் வந்ததும் வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகி வர நோய் தீரும்.
121. தீக்காயத்திற்கு மருந்து :
ஒரு கப் அளவு கொழுப்பு, இரண்டு முட்டையின் வெண்கரு இவைகளை ஒன்று சேர்த்து ஒரு மெல்லிய துணியில் தடவி காயத்தின் மேல் போட்டு வந்தால் எளிதில் தீக்காயம் ஆறும். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும்.
122. குடிநீரை சுத்தமாக்க :
ஒரு குடம் தண்ணீரில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நீத்தாத சுட்ட சுண்ணாம்பு பவுடரைப் போட்டு வைத்து மறுநாள் காலையில் வெகு தெளிவான சுத்தமான தண்ணீரை எடுத்து உபயோகிக்க வேண்டும்.
123. வெண்தொலி மாற :
காட்டு சீரகப்பொடி, மிளகு அல்லது எள்ளுப் பொடி சமமாக கலந்து தினமும் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீருடன் சாப்பிட வெண்தொலி கருமையாகும்.
124. குத்து இருமலுக்கு :
சிறு செருப்படை சாறு, வேப்பம் பட்டை சாறு, பொன்னாங்கன்னி சாறு சமமாக எடுத்து தேன் கலந்து வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு காலை, மாலை மூன்று நாட்கள் சாப்பிட தீரும்.
அன்பான வாசக நண்பர்களே உங்களுக்கு தேவையான மருத்துவ சந்தேகங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய *செலவில்லா சித்தமருத்துவம், என்ற புத்தகத்தை ரூ.150* செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.
மருத்துவர் K.P.பால்ராஜ் TRSMRSI
செல் : 9487348763

செலவில்லா சித்த மருத்துவம் செலவில்லா சித்த மருத்துவம்99. மார்புச் சளிக்கு :பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து சங்களவு தேனு...
07/06/2018

செலவில்லா சித்த மருத்துவம்
செலவில்லா சித்த மருத்துவம்
99. மார்புச் சளிக்கு :பிரண்டையை வெதுப்பி சாறு பிழிந்து சங்களவு தேனுடன் கொடுக்க சளி தீரும்.

100. விந்து ஊற :பூனைக்காலி விதை, நிலப்பானை கிழங்கு பூமிசக்கரைக் கிழங்கு மூன்றையும், சூரணமாக்கி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட விந்து ஊறும்.

101. வாந்தியை நிறுத்த :நாயுருவி இலை, பிரண்டைக் கொழுந்து இரண்டையும் கொட்டை பாக்களவு எடுத்து அரைத்து இளம் வென்னீரில் கலக்கி கொடுக்க வாந்தி நின்று விடும்.

102. வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்தால் :ஆடாதொடை இலைச்சாறும், தேனும் சம அளவு சேர்த்து வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு காலை, மதியம், மாலை இப்படி மூன்று நாட்கள் சாப்பிட சரியாகி விடும்.

103. வயிற்று வலிக்கு :முற்றிய முருங்கைப் பூ, முற்றிய பிரண்டை வகைக்கு ஒரு பிடி ஒரு முடி கொப்பரைத் தேங்காய் இவைகளை இடித்து பிட்டவித்து சாறு பிழிந்து கொடுக்க வயிற்று வலி தீரும்.

104. குஷ்ட நோய்க்கு மருந்து :பரங்கிப் பட்டை தூள் நூறு கிராம், கொடிவேலிவேர், நீரடி முத்து, செந்தகம் இவைகளின் தூள் வகைக்கு இருபது கிராம், சுத்தித்த சேங்கொட்டை முப்பது, நாட்டு எள் ஐநூறு கிராம் இவைகளை எல்லாம் மைய இடித்து வேளைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சாப்பிட்டு வென்னீர் குடித்து வர நாற்பத்தி ஒரு நாளில் குஷ்டம் குணமாகும்.

105. இந்திரியம் அதிகரிக்க :ஆழி விதையை பாலில் வேக வைத்து பின் வெல்லம், நெய் சேர்த்து லேகியமாக்கி காலை, மாலை ஒரு டீஸ்பூன் அளவு தேனுடன் சாப்பிட்டு வர விந்து ஊறும்.

106. சொப்பனத்தில் விந்து வெளியேறினால் :துளசி வேர் பொடி, வெற்றிலைச் சாறு, கருப்புக் கட்டி சேர்த்து தினமும் இரவு சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் நின்று விடும்.

107. மூட்டு வலிகளுக்கு :புதினா சாறு, நல்லெண்ணெய் வகைக்கு இருநூறு மில்லி எடுத்து சேர்த்து காய்ச்சி, இருபது கிராம் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கி வைத்துக் கொண்டு மூட்டுகளில் தேய்து வென்னீர் இட்டு வர குணமாகும்.

109. முகப் பருவுக்கு :புனுகை தடவி வரலாம், திருநீற்று பச்சிலை சாற்றை தேய்த்து வரலாம், சங்கை சுட்டு உணரத்து போட முகப்பரு நீங்கும்.

110. வண்டு கடி, காணகடிக்கு :குப்பைமேனி இலைச்சாறு அல்லது வேலி பருத்தி இலைச்சாறு, அல்லது ஆடுதின்னா பாளைச் சாறு, அல்லது வெள்ளை காக்கணத்தி இலைச்சாறு இவைகள் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து மேல் பூச்சாக பூசினாலும் விஷக்கடி மாறி விடும்.

அன்பான வாசக நண்பர்களே உங்களுக்குத் தேவையான மருத்துவ சந்தேங்களை போன் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். என்னுடைய 65 வருட மருத்துவ அனுபவத்தில் நான் எழுதிய “செலவில்லா சித்தமருத்துவம்” என்ற புத்தகத்தை ரூ.150 எம்.ஒ. செய்து பெற்று பயனடைய கேட்டுக் கொள்கிறேன்.
dr.கே.பி.பால்ராஜ், செல் : 9487348703

Address

Pondicherry
605001

Telephone

9894189821

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good herbals centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram