Naga Physiotherapy Centre

Naga Physiotherapy Centre PHYSIOTHERAPY FOR ORTHO CARE-NEURO CARE-PAEDIATRIC CARE.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
14/04/2026

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இன்று ஏப்ரல் 11, உலகலாவிய "பார்கின்சன் நோய்" தினம்( World Parkinson's disease day) கடைபிடிக்கப்படுகிறது.‘உதறுவாதம்’ என்ற...
11/04/2026

இன்று ஏப்ரல் 11, உலகலாவிய "பார்கின்சன் நோய்" தினம்( World Parkinson's disease day) கடைபிடிக்கப்படுகிறது.
‘உதறுவாதம்’ என்ற ‘பார்க்கின்சன் நோய்’ (Parkinson’s disease) இந்த நோயின் முதல் அறிகுறியே கைகளில் ஏற்படும் நடுக்கம்தான்.

ஆரம்பத்தில் உள்ளங்கைக்குள் ஏதோ ஒரு பொருளை வைத்துக்கொண்டு எப்போதும் உருட்டிக்கொண்டு இருப்பதுபோல் செய்துகொண்டிருப்பார்கள். விரல்கள் ஆடிக்கொண்டே இருப்பதுபோல் இருக்கும். பொதுவாக, ஒரு கையில் நடுக்கம் அதிகமாகவும், மறு கையில் சற்றுக் குறைவாகவும் இருக்கும்.

இந்த நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காலுக்கும் தலைக்கும் பரவும். கைகுலுக்குவதும் கையெழுத்துப் போடுவதும் சிரமப்படும். விநோதம் என்னவென்றால், ஓய்வாக இருக்கும்போதுதான் இந்த நடுக்கம் காணப்படும். ஏதாவது ஒரு வேலை செய்யத் தொடங்கினால், இந்த நடுக்கம் நின்றுவிடும். உறக்கத்திலும் இந்த நடுக்கம் இருக்காது. நடுக்கம் நாக்கையும் பாதிக்கும்போது பேச்சிலும் வேறுபாடு தெரியும். இவர்கள் மிகவும் குறைந்த தொனியில்தான் பேசுவார்கள். அது மற்றவர்களுக்குப் புரியவும் செய்யாது.

அடுத்ததாக, உடலில் உள்ள தசைகள் இறுகி மரக்கட்டைபோல் ஆகிவிடும். இதனால், ஓரிடத்தில் உட்கார்ந்தால், மணிக்கணக்கில் எந்தவித அசைவும் இல்லாமல், அப்படியே உட்கார்ந்திருப்பார்கள். நிற்க வைத்தாலும் அதே நிலைமைதான். நின்றுகொண்டே இருப்பார்கள். நடை தள்ளாடும்.

தாம் செய்யும் வேலையைத் திடீரென்று பாதியில் நிறுத்திக்கொள்வார்கள். உண்ணும்போதும், உடை உடுத்தும்போதும், பொத்தான் மாட்டும்போதும் இந்த மாதிரி நடக்கும். முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லாமல், எதையாவது உற்றுப்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வாயில் எச்சில் ஊறிக்கொண்டே இருக்கும். சருமம் வழுவழுப்பாகிவிடும்.

இவற்றைத் தொடர்ந்து, உணவை விழுங்குவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். கழிப்பறை போக, குளிக்க, உடை உடுத்த… இப்படி அன்றாடச் செயல்களுக்கு அடுத்தவர்களின் உதவி தேவைப்படும். சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். அடிக்கடி சிறுநீர் போகத் தோன்றும். இதனால் உறக்கம் குறையும். உணவு குறைவதால் மலச்சிக்கல் ஏற்படும். மனச்சோர்வு தலைதூக்கும். ஞாபக மறதியும் கைகோத்துக்கொள்ளும். பெரும்பாலும் இந்த நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம்தான் காணப்படுகிறது. பெண்களைவிட ஆண்களிடம்தான் இந்தப் பாதிப்பு அதிகம்.

என்ன காரணம்?

இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மரபுப் பண்பும் சுற்றுச்சூழல் கேடுகளும் இணைந்து இந்த நோயை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது. மூளையில் உள்ள நரம்பணுக்களில் ‘டோபமைன்’ (Dopamine) எனும் வேதிப்பொருள் ஒன்று சுரக்கிறது. வயதாகும்போது நரம்பணுக்களின் எண்ணிக்கை குறையும். அப்போது ‘டோபமைன்’ சுரப்பும் குறையும்.

இதனால், உடல் இயக்கங்கள் பாதிக்கப்படும். இவற்றின் விளைவாக வருவதுதான் ‘பார்க்கின்சன் நோய்’. பெரும்பாலும் ‘டோபமைன்’ சுரப்பு 80 சதவீதம் குறைந்த பிறகே இந்த நோயின் அறிகுறிகள் வெளிப்படும். முதன்முதலில் 1817-ல் லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்சன் இந்த நோயைக் கண்டுபிடித்த காரணத்தால் இந்தப் பெயர் வந்தது.

சிகிச்சை என்ன?

இந்த நோய்க்கு நரம்புநலச் சிறப்பு மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இந்த நோயைக் கண்டறிய குறிப்பிட்ட சோதனை முறைகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. என்றாலும், மருத்துவர்கள் இந்த நோயாளிகளுக்கு மூளையை சி.டி. ஸ்கேன் / எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு ஏற்படும் உடல் நடுக்கத்துக்கு மூளையில் வேறு காரணங்கள் உள்ளனவா எனத் தெரிந்துகொள்வதற்கே இந்தப் பரிசோதனை.

ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நோயை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது. ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், நோய் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தலாம். இதற்குப் பலவிதமான மருந்துகள் உள்ளன. ஆனால், சமயங்களில் இந்த மருந்துகளின் பக்கவிளைவுகள் நோயைவிட அதிகப் பாதிப்பைத் தரக்கூடும்.

எனவே, மருத்துவரின் சரியான வழிகாட்டுதலுடன், முறையான அளவில் இவற்றைத் தொடர்ந்து எடுத்துவர வேண்டும். நோயோடு இணைந்த மனச்சோர்வு, மலச்சிக்கல், உறக்கமின்மை போன்றவற்றுக்கும் சிகிச்சை தேவை. ஆரம்பத்திலேயே நடைப்பயிற்சி, இயன்முறை சிகிச்சை (Physiotherapy) மூலம் உடல் தசைகளின் இறுக்கத்தைக் குறைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

ஒருவருக்குக் குறைந்தது 5 வருடங்களுக்கு மருந்துகள் பலன் தருகின்றனவா என்று கண்காணிக்க வேண்டும். மருந்துகளால் குணமடையாதவர்களுக்கும் மருந்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கும் ‘பேலிடோட்டமி’ (Pallidotomy) எனும் மூளை அறுவை சிகிச்சை உள்ளது.

ஆனால், அறுவை சிகிச்சை எல்லோருக்கும் பலன் தரும் என்று உறுதி கூற முடியாது. இப்போது புதிதாக இந்த நோய்க்கு ‘ஆழ் மூளைத் தூண்டல் சிகிச்சை’ (Deep brain stimulation - DBS) மேற்கொள்ளப்படுகிறது. இதயத்துக்கு எப்படி பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறதோ, அதேபோல், மூளைக்குள் பொருத்தப்படும் ஒரு நவீன சிகிச்சை இது. இப்போது இது சென்னையிலும் மேற்கொள்ளப்படுகிறது.

என்றாலும், இது ஒரு முதுமை நோய் என்பதால், சலிக்காமல் செய்யும் சிகிச்சை களோடு, நல்ல உணவு, குடும்பத்தாரின் சகிப்புத் தன்மை, பொறுமையான தொடர் கவனிப்பு, அன்பான அரவணைப்பு ஆகியவையும் இணைய வேண்டியது முக்கியம்.

நன்றி

Dr.அருண்.,B.P.T.,MIAP.,
நாகா பிசியோதெரபி சென்டர்,
எண்:3, பாலா மருத்துவமனை எதிரில்,
வாழப்பாடி.

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.
05/04/2026

அனைவருக்கும் இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்கள்.

இன்று ஏப்ரல்‌.2 உலக ஆட்டிஸம் தினம் (World Autism awareness day) அனுசரிக்கப்படுகிறது.ஆட்டிஸம் என்பது குழந்தைகளுக்கு மூளை ...
02/04/2026

இன்று ஏப்ரல்‌.2 உலக ஆட்டிஸம் தினம் (World Autism awareness day) அனுசரிக்கப்படுகிறது.

ஆட்டிஸம் என்பது குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். மத்திய அரசும் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில்தான் ஆட்டிஸக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது. ஆனால், இ.இ.ஜி., சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எனப் பல பரிசோதனைகளில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்தபோது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது.

இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத் திறன், சமூக நட்புத் திறன், ஒருங்கிணைப்புத் திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளைப் பாதிக்கும் கோளாறு. இவர்களுக்கு அறிவு இருக்கும். ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழி தெரியாது. இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், அந்தப் புரிதலை நமக்குப் புரிய வைப்பதற்கான மொழிதான் தெரியாது.

ஏன் வருகிறது?

ஆட்டிஸம் வருவதற்கான காரணம் இன்னும் தீர்மானமாகவில்லை. இது வம்சாவளியில் வருகிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப் பட்டால், அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிஸம் குறைபாடு ஏற்படலாம். கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்சினை இருந்தால் அல்லது ஃபோலிக் அமிலச் சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம். கர்ப்பிணியிடம் காணப்படும் மன அழுத்தம், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன.

அறிகுறிகள் என்ன?

தாய்ப் பாலூட்டும்போது தாயின் கண்களைக் குழந்தை பார்க்காது. ஆறு மாதம் ஆனால்கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில் படும் பொருட்களை ஆர்வமாகப் பார்க்காது. அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. ‘டாட்டா காட்டுதல்’ போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சுப் பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப் படிகளில் தாமதம் ஏற்படுவதுண்டு.

ஆட்டிஸம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மன நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் நன்மைகள் அதிகம். அப்போதுதான் மூளை செல்களைப் பயிற்சிகள் மூலம் வழிக்குக் கொண்டுவர முடியும். காலம் தாழ்த்தினால், பயிற்சிகளால் பலன்கள் கிடைப்பது தாமதப்படலாம்.

சிகிச்சை உண்டா?

ஆட்டிஸத்துக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமில்லை. ஒரு கூட்டு முயற்சியால்தான் இதை வெற்றிகொள்ள முடியும். அன்பு ஒன்றே இதற்கு மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு பெற்றோர் இருவரும் அதிக நேரம் செலவிட வேண்டும். பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்ல வேண்டும்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்குப் பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்க வழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சி தர வேண்டும். ‘குளூட்டன்’ இல்லாத உணவு வகைகளைத் தருவது நல்லது. குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இந்தப் பயிற்சிகள் அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும்.

இந்தக் குறைபாட்டின் ஆரம்பக் கட்டத்திலேயே மொழிப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத் திறன் பயிற்சிகள் என்று பலவற்றை முறைப்படி கற்றுத்தர வேண்டும். பேச வேண்டும், பழக வேண்டும் போன்ற எண்ணங்களைக் குழந்தைக்குக் கொண்டு வருவதற்குத் தாயின் பங்கு மட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரின் அன்பும் அரவணைப்பும் தேவைப்படும்.

தடுப்பது எப்படி?

உறவுமுறையில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது இந்தப் பிரச்சினையை வரவிடாமல் தடுக்கும். பெண்கள் கர்ப்பத்துக்கு முன்பே தடுப்பூசிகள் போட்டு ருபெல்லா தொற்று ஏற்படுவதைத் தவிர்ப்பதும், கர்ப்ப காலத்தில் மருத்துவரின் யோசனை இல்லாமல் மாத்திரை, மருந்துகளைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் முக்கியம். குறை தைராய்டு, நீரிழிவு, வலிப்பு நோய், மனநோய் ஆகியவை உள்ள பெண்கள், மருத்துவரின் ஆலோசனைப்படி கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே பாதுகாப்பான மருந்துகள் எடுக்க வேண்டும். கர்ப்பிணிகள் மது அருந்தக் கூடாது. புகைப்பிடிக்கக் கூடாது. காற்று மாசுள்ள சூழலைத் தவிர்க்க வேண்டும். அந்நிய உணவு வகைகளைத் தவிர்த்து ஆர்கானிக் உணவு வகைகளைச் சாப்பிடுவது நல்லது.

நன்றி

Dr.அருண்.,B.P.T.,MIAP.,
நாகா பிசியோதெரபி சென்டர்,
எண்:3, பாலா மருத்துவமனை எதிரில்,
வாழப்பாடி.

அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
20/03/2026

அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.

இன்று டிசம்பர் 30 உலகத் தொழுநோய் தினம் (World Leprosy Day) கடைப்பிடிக்கப்படுகிறது:  *விழிப்புணர்வும், பிசியோதெரபியின் மற...
30/01/2026

இன்று டிசம்பர் 30 உலகத் தொழுநோய் தினம் (World Leprosy Day) கடைப்பிடிக்கப்படுகிறது:

*விழிப்புணர்வும், பிசியோதெரபியின் மறுக்க முடியாத பங்களிப்பும்.*

தொழுநோய் (Leprosy) என்பது Mycobacterium leprae எனும் பாக்டீரியா கிருமியால் ஏற்படும் நீண்டகால நரம்பு மற்றும் தோல் நோய். சரியான காலத்திற்குள் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும், சமூகத்தில் நிலவும் சில அவதூறு கருத்துக்களும், சிந்தனைகளும்,அச்சமும் காரணமாக இது இன்னும் பல இடங்களில் மறைந்தே பரவுகிறது.

*2025 டிசம்பர் செய்தி –* *குழந்தைகளில் தொழுநோய் அதிகரிப்பு கவலை:*

2025 டிசம்பர் மாதத்தில் வெளியான ஒரு முக்கிய ஆய்வு,
“சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது” எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளிப்படுத்தியது. குறிப்பாக,
தொழிற்சாலைகள் அதிகம் உள்ள
ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், புறநகர் தொழில் மண்டலங்கள்,
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள்
இவற்றிலேயே இந்த நோய்த்தொற்று அதிகமாக இருப்பது கவலைக்குரியது.

இது இரண்டு முக்கிய அச்சுறுத்தல்களை காட்டுகிறது:
சிறுவர் சமூகத்தில் உணர்வு குறைவு + நரம்பு பாதிப்பு அபாயம் உயர்வு
மாசு, தங்குமிடம் சீர்கேடு, சுகாதாரக் குறைபாடுகள் போன்ற சமூக காரணிகள் நோய் பரவலை அதிகரிக்கிறதென்பது.
தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் தொழுநோய் பரவல் குறைவாக இருந்தாலும்,
“2025க்குள் தொழுநோயை முற்றிலும் ஒழிப்போம்” என்ற அரசின் இலக்கு தற்போது பின்னடைவாகியுள்ளது.
அரசு மற்றும் தொழிற்சாலைகளின் பொறுப்பு.

இந்த நிலையில் சில நடவடிக்கைகள் அவசியமாகின்றன:
1. அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
புறநகர் தொழில் பகுதிகளில் விழிப்புணர்வு முகாம்
ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கான வேகமான மருத்துவ அணுகல்
பள்ளிகளில் சுகாதார பரிசோதனை முகாம்கள்
மாசு கட்டுப்பாட்டுக்கான தொழிற்சாலைகளில் திட்டமிட்ட கண்காணிப்பு

2. தொழிற்சாலைகள் / நிறுவனங்களின் பொறுப்பு
மாசுகட்டுப்பாட்டு முறைகளை கடுமையாக பின்பற்றுதல்
தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மருத்துவ பரிசோதனை + தடுப்பு நடவடிக்கைகள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு
சுத்தமான குடிநீர்
சுகாதாரமான உணவு
பாதுகாப்பான, சுத்தமான தங்குமிடம்
ஆகியவற்றை வழங்குதல்
சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு தொடர்பான கல்வி
நமது மாநில வளர்ச்சிக்காக புலம்பெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களை மனிதநேயத்தோடு அணுகுவது மாநிலத்தின் பொறுப்பு.

தொழுநோயின் உடல் விளைவுகள்:

தொழுநோய் முக்கியமாக peripheral நரம்புகளை பாதிப்பதால்:
கைகள், கால்களில் உணர்விழப்பு
தசைவலிமை குறைவு
விரல்கள் வளைந்து மாற்றம் (Claw Hand)
கால் உணர்வற்று கீழே விழுதல் (Foot Drop)
கண் மூட முடியாத நிலை
காயங்கள் உணராமல் ஆழமாகிவிடுதல் போன்ற
பாதிப்புகள் அதிகரித்தால் வாழ்க்கைத்தரமும் வேலைத்திறனும் குறைந்து விடும்.

*பிசியோதெரபியின் முக்கிய பங்கு*

தொழுநோய் சிகிச்சையில் மருந்து (MDT) மட்டுமே போதாது.
நரம்பு பாதுகாப்பு + உடல் செயல்பாடு மீட்பு = பிசியோதெரபியின் அர்த்தம்.
1. நரம்பு செயல்பாட்டை பாதுகாப்பது
Sensory test
Nerve function monitoring
Muscle strength assessment
2. தசை வலிமை மற்றும் இயக்கத்தை மேம்படுத்துதல்
கை, கால், முதுகு தசைகளுக்கான strengthening,
Contracture தடுப்பு, stretching
Foot drop / Claw hand க்கு corrective exercises
3. Splints & Orthosis பயன்பாடு
Claw hand splint
Foot drop splint
Protective footwear
இவை நோயாளி தினசரி செயல்பாடுகளை எளிதாக்கும்.
4. காயங்கள் தடுப்பு பற்றிய கல்வி
உணர்வு குறைந்த பகுதிகளை பராமரிக்க கற்றல்,
தினசரி கால்கள் பரிசோதனை,
சரியான காலணி பயன்படுத்துதல்.
5. Rehabilitative & ADL Training
நடப்பதற்கான gait training
சமையல், குளியல், எழுதல் போன்ற தினசரி செயல்பாடுகளில் சுயநிறைவு,
தொழில் மீட்புக்கான vocational training
மருத்துவ சிகிச்சை + பிசியோதெரபி சேர்ந்தால்தான் தொழுநோயின் உடல் ஊனங்கள் தடுக்கப்படும்.

உலகத் தொழுநோய் தினம் நமக்கு நினைவூட்டுவது:
தொழுநோய் குணப்படக்கூடியது
ஆனால் சமூகத்தில் நிலவும் சில அவதூறு கருத்துக்கள் மற்றும் சில பிற்போக்கு சிந்தனைகள் தான் மிகப் பெரிய நோய்,
குழந்தைகளில் கூட அதிகரித்து வரும் தொழுநோய் நிலை ஆபத்தான எச்சரிக்கை
அரசு, தொழிற்சாலைகள், சமூகமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
உடல் குறைபாடுகளைத் தடுப்பதில் பிசியோதெரபி மறுக்க முடியாத பங்காற்றுகிறது
ஆரம்பத்தில் கண்டறிந்து, சரியான MDT சிகிச்சையும், தொடர்ந்து பிசியோதெரபி பராமரிப்பையும் மேற்கொண்டால் தொழுநோயால் ஏற்படும் உடல் ஊனங்களை முற்றிலும் தடுக்க முடியும்.

நன்றி

Dr.அருண்.,B.P.T.,MIAP.,
நாகா பிசியோதெரபி சென்டர்,
எண்:3, பாலா மருத்துவமனை எதிரில்,
வாழப்பாடி.

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.
25/01/2026

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

25/01/2026

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

“துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி அறிவித்துள்ளதை உடனடியாக கைவிட வேண்டும்; துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகாரத்துக்குள் நீடிக்க வேண்டும்”

இளங்கலை பிசியோதெரபி (B.PT), ஆக்குபேஷனல் தெரபி (B.OT) படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவு.

Chief Minister M.K. Stalin's letter to the Prime Minister.

“The announcement of making NEET mandatory for para-medical courses should be immediately withdrawn; admission procedures for para-medical courses should remain under the authority of the state government”

Central government orders making NEET mandatory for undergraduate physiotherapy (B.PT), occupational therapy (B.OT) courses

A proud moment for every Physiotherapist! Today marks a historic victory for our physiotherapy fraternity, as the Honour...
23/01/2026

A proud moment for every Physiotherapist!
Today marks a historic victory for our physiotherapy fraternity, as the Honourable High Court has reaffirmed our independent practice rights and the rightful use of the “Dr” prefix and “PT” suffix by Physiotherapists.
This is more than just a judgment —
It is a recognition of our hard work, scientific expertise, and commitment to patient care.
As a member of this noble profession, I feel truly proud to witness this milestone that strengthens the identity and autonomy of Physiotherapists across India.
United we stand — stronger, confident, and moving forward together. 🙏💪

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
15/01/2026

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

எங்கள் Naga Physiotherapy Centre -இல் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஊழியர் அனைவருக்கும்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ப...
14/01/2026

எங்கள் Naga Physiotherapy Centre -இல் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஊழியர் அனைவருக்கும்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
மருத்துவப் பயனாளர்களின் நலனுக்காக தினமும் அயராது உழைக்கும்
உங்கள் அர்ப்பணிப்பு, பொறுப்பு உணர்வு மற்றும் மனிதநேய சேவை
எங்களுக்கெல்லாம் பெருமை அளிக்கிறது.
இந்த பொங்கல் பண்டிகை
உங்கள் வாழ்வில்
ஆரோக்கியம், மகிழ்ச்சி, வளம் மற்றும் வெற்றியை
அள்ளித் தரட்டும்.
உழைப்பிற்கு மரியாதை – சேவைக்கு வணக்கம் .
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

📢 Important Update for Aspiring Physiotherapy Students!The Bachelor of Physiotherapy (BPT) programme has been officially...
11/01/2026

📢 Important Update for Aspiring Physiotherapy Students!
The Bachelor of Physiotherapy (BPT) programme has been officially recognized with updated degree nomenclature and admission eligibility criteria starting from the Academic Year 2026–27.
🎓 Programme Details:
✔️ Degree: Bachelor of Physiotherapy (BPT)
✔️ Duration: 5 Years (4 Years Academic + 1 Year Internship)
✔️ Category: Physiotherapy Professional
📌 Eligibility Criteria:
🔹 Must have passed 10+2 or equivalent with Physics, Chemistry & Biology
🔹 Minimum marks:
• 50% – General / EWS
• 40% – SC / ST / OBC / PwBD
🔹 English pass is mandatory for all categories
📝 NEET Requirement:
✔️ Candidate must have appeared in NEET (NTA)
✔️ No minimum cut-off or percentile required
✔️ Admission based on NEET merit/marks
This is a significant step towards strengthening the Physiotherapy profession and ensuring standardized admissions across India.
📄 Source: UGC / NCAHP Notification (2026–27)
👉 Please share to spread awareness among students and parents.

Address

No 3, Perumalgounder Street, Bala Hospital Opposite, Valappady
Salem
636115

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

+919943538640

Alerts

Be the first to know and let us send you an email when Naga Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Naga Physiotherapy Centre:

Share