09/01/2026
ஒரு வடிகட்டி இருக்கு.... அதில் உள்ள துளைகளில் ஏதாவது ஒன்று அடைச்சுடுச்சுன்னு வச்சுக்கோங்க, அப்போ என்ன ஆகும்?? அது வடிகட்ட வேண்டிய பொருள்களில் சிலவற்றை அதுவே பிடிச்சு வச்சுக்கும் இல்லியா?? அப்படி தான்... கிட்னி என்னும் மெகா வடிகட்டியில ஏற்படும் சில 'தொழில்நுட்ப' கோளாறுகளால அது உப்புகரைசல்களை சேர்த்து பிடிக்க, கிட்னி ஸ்டோன் உருவாகுது... !
அது என்னென்ன செய்யும்ங்கறதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். செமயா வலிக்கும், நீர் இறங்காது, அதிக பட்ச பாதிப்பா கிட்னி செயலிழந்து போகலாம். நிற்க... இதிலுள்ள தவறான நம்பிக்கைகள், தீர்வுகள் மட்டும் பார்க்கலாம்..
பொதுவா எல்லோரும் நினைக்கிறது கேல்சியம் உள்ள உணவுகள் சாப்பிட்டா ஸ்டோன் உருவாகும்ன்னு ஆனால் பொடாசியும், மெக்னீசியம்ன்னு பல்வேறு உப்புகள் கல்லாக உருவாக கூடும். இது வடிகட்டில உள்ள பிரச்சனை இல்லியா அதனால சில ஏரியாக்களில் கிடைக்கும் தண்ணீர் மட்டும் குடிச்சா கூட ஸ்டோன் உருவாகலாம்..!! அதனால உணவுக்கட்டுப்பாடு என்பது பெரிசா பலன் தராது. தண்ணீர் கூட குடிக்காம இருக்க வேண்டி வரும். சரி செய்ய வேண்டியது கிட்னியின் செயல்பாட்டை..!
ஒரு நிமிடத்துக்கு 60 வினாடிகள் ஆனா இதயம் 72 தடவை துடிக்கும்...! ஒவ்வொரு முறை இதயம் துடிக்கையில் கிட்னி வடிகட்டுவதும் நிகழும்...! அப்போ ஒரு நாளைக்கு எத்தனை தடவை வடிகட்டும்ன்னு பாத்துகோங்க. அதனால கல்லை எடுத்து விட்டாலும் அடுத்த கல் உருவாக ஒரு நாள் போதும்...!! அதனால கல்லை எடுத்தா பத்தாது. வடிகட்டியை சரி செய்யனும்.
கல் அடைத்திருக்கும் பாதையில் நீர் வெளியேற வழி இல்லேன்னா கிட்னி உப்பி பெருத்து செயலிழக்க வாய்ப்பிருக்கு. இரண்டு பக்கமும் கல் உருவாகி நீர் இறங்க வழியே இல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் வாய்ப்பிருக்கு. அவசர சிகிச்சையாக கருதி பார்க்க வேண்டிய அபாயகரமான நிலை அது. ஆனால் கிட்னி உள்ள இருக்கிற கல்லை வாய் வழியா உறிந்து எடுக்கும் காமடி எல்லாம் நம்ம ஊர்ல சர்வ சாதாரணம். கிட்னியில் இருந்து கல்லை உறிந்து எடுக்கனும்ன்னா அதுக்கு சிறுநீர் வெளியேறும் பாதை மூலமா வேணா முயற்சி செய்யலாம். அதுக்கு ஒரு முரட்டுத்தனமான மூளையும், அரைவேக்காட்டுத்தனமான அறிவும் வேணும்.
வாழைதண்டு சாறு, நெருஞ்சி முள் கஷாயம் போன்றவை கல்லை கரைக்க உதவும்..! அவை டையூரடிக்குகள். அதே போல நிறைய சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் இதில் அட்டகாசம் செய்யும். 2முதல் 45 நாளில் கல்லை கரைத்து விடலாம். ஆனால் வடிகட்டி(கிட்னி)யை சரி செய்ய மருத்துவரை அனுக வேண்டும். கிட்னியின் நிலையை தெரிந்து தான் மருந்து கொடுக்க வேண்டும். ஒரு வேளை இரண்டு பக்கமும் அடைப்பு இருந்தால் அந்த நேரத்தில் கல்லை கரைத்து வெளியேற்றும் டையூரட்டிக்குகளால் ஆபத்து வரலாம். அந்த நலையில் சர்ஜரி தான் சரி... !
Ignorance is not a bliss in medicine...🙂
Dr. M. Saravana Kumar BHMS MD
Dhanvandhiri Vaidyasala
Theni, Chennai , Thiruvannamalai, Madurai
9080052846, 9842775242
Pls visit www.dhanvandhirivaidyasalatheni.com for more details