Kalpana Microbiology Lab

Kalpana Microbiology Lab Leading diagnostic center Since 2000.

…  … தைராய்டு பிரச்னை என்பது என்ன?தைராய்டு சுரப்பி, கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும். இது சுரக்கும...
25/05/2025

… …

தைராய்டு பிரச்னை என்பது என்ன?

தைராய்டு சுரப்பி, கழுத்துப் பகுதியில் பட்டாம்பூச்சி வடிவத்தில் இருக்கும். இது சுரக்கும் ஹார்மோன்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தில் இருந்து இதயத்தின் ஆரோக்கியம் பேணுவது வரை மிகவும் முக்கியமானவை, அவசியமானவை. இந்த ஹார்மோன், இயல்புக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சுரந்தால், அதுதான் தைராய்டு பிரச்னை.

தைராய்டு வகைகள்!

1)ஹைப்போதைராய்டு (Hypothyroid) – தைராய்டு சுரப்பானது 0.5 mIU/ml-க்கு (milli International Units per milli litre) குறைவாக சுரப்பது.
2)ஹைப்பர்தைராய்டு (Hyperthyroid) – தைராய்டு சுரப்பானது 5 mIU/ml-க்கு அதிகமாகச் சுரப்பது.
3)ஸ்வெல்லிங் தைராய்டு (Swelling thyroid) – தைராய்டு சுரப்பி மிக மிக அதிகமாகச் சுரப்பதால், கழுத்துப் பகுதியின் ஓரிடத்தில் அல்லது முழுவதுமாக வீங்கிய நிலையில் காணப்படும்.
ஸ்கேன் அல்லது ஊசிமூலமாக கழுத்துப்பகுதியில் இருந்து நீர் எடுத்து இந்தப் பிரச்னைக்கான பரிசோதனையை மேற்கொண்டு, சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். இது மிக அரிதாக ஏற்படக்கூடிய பிரச்னை (ஹைப்போதைராய்டு மற்றும் ஹைப்பர்தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் கட்டி வர வாய்ப்பு உண்டு).

யார் யாருக்கெல்லாம் வரலாம்?

தாயின் கருவில் உள்ள குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் தைராய்டு பிரச்னை ஏற்படலாம். இது, ஆண்களைக் காட்டிலும், பெண்களுக்கு அதிகம் வர வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி போன்றவற்றிலும்… பெண்களுக்கு உடல், மூளை வளர்ச்சி தொடங்கி பூப்படைவதில் சிக்கல், மாதவிடாய் பிரச்னைகள், கருவுறுதலில் சிக்கல் வரை, வயதாக ஆக தைராய்டின் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கும்.

அறிகுறிகள்!

என்னவெல்லாம் பாதிப்புகள்?

கர்ப்பகாலத்தில் சில பெண்களுக்கு தைராய்டு சுரப்பில் மாற்றம் ஏற்படலாம். அப்போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து சிகிச்சை எடுக்காவிட்டால், தாயை மட்டுமல்லாது உடல் எடையில் இருந்து மூளை வளர்ச்சிவரை கருவையும் பாதிக்கக்கூடும்.
பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயம் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தையின் தைராய்டு சுரப்பு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்து, கவனித்து சிகிச்சையளிக்கத் தவறினால், குழந்தையின் உடல் வளர்ச்சியில் இருந்து மூளை வளர்ச்சி வரை அனைத்தும் பாதிக்கப்படும்.

பூப்பெய்தும் வயதில் உள்ள பெண் குழந்தைகளின் தைராய்டு சுரப்பு அப்நார்மலாக இருந்தால், அது பூப்படைவதில் சிக்கலை உண்டாக்கும்.

இளம்பெண்கள் தைராய்டால் பாதிக்கப்பட்டால், சுழற்சி மாறுவது, அதிக உதிரப்போக்கு என மாதவிடாயிலும் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

ஆண், பெண் இருபாலருக்கும் கரு உண்டாதலில் சிக்கலை ஏற்படுத்தும்.

வயதானவர்கள் தைராய்டு பிரச்னைக்கு உள்ளானால், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதயப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளுக்கான வாய்ப்புகளுக்கு அது வாசலாக அமைந்துவிடும்.

ஏன் தைராய்டு?

ஒருவருக்கு தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான காரணம் இதுதான் என்பதை சரிவரக் கண்டுபிடிப்பது கஷ்டம். மரபு மற்றும் உடற்பருமனை பொதுக்காரணங்களாகச் சொல்லலாம் (தைராய்டு பிரச்னை ஏற்பட்டதால் உடல் எடை அதிகரித்துவிட்டதாக பலர் சொல்வார்கள். உண்மையில், உடல் எடை அதிகரித்ததால்தான் தைராய்டு பிரச்னை ஏற்பட்டிருக்கும்).

காசநோய்க்கு எடுத்துக்கொள்ளும் சில மருந்துகள் மற்றும் லித்தியம் போன்ற டிரக் எடுத்துக்கொள்வதும் தைராய்டு பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

தைராய்டு டெஸ்ட்!

ஒருவரின் ரத்தப் பரிசோத னையிலேயே, அவருக்கு தைராய்டு பிரச்னை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்துவிடலாம். இதைக் கட்டாயப் பரிசோதனையாகக் கொண்டு, 1 – 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்துகொள்வது அவசியம். தைராய்டு பரிசோதனையைப் பொறுத்தவரையில் TSH (Thyroid Stimulating Hormone), T3, T4 போன்ற சோதனை முறைகள் உள்ளன. இதில் T3, T4 சோதனைகளின் முடிவுகள் இடத்துக்கு ஏற்ப மாறக்கூடும். எனவே, TSH சோதனை முறை சிறந்தது. இதனை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது (கட்டாயம் கிடையாது. T3, T4 பரிசோதனைகளை, வெறும் வயிற்றில்தான் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்).

இன்று கர்ப்பிணிப் பெண்களுக்கான பரிசோதனையில் தைராய்டு முதன்மையாக மேற்கொள்ளப் படுவது வரவேற்கத்தக்கது. இதனால் தாயை மட்டுமின்றி, பிறக்கப்போகும் குழந்தையையும் தைராய்டு பாதிப்பில் இருந்து காக்கமுடியும்.

மருந்து, உணவு, சிகிச்சை!

பரிசோதனையில் தைராய்டு சுரப்பானது இயல்பைவிட அதிகமாக அல்லது குறைவாக இருந்தால், அதற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அவர் குறிப்பிடும் கால அளவுவரை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். எடுக்காமல் விட்டாலோ, இடையில் நிறுத்தினாலோ பாதிப்புகள் நிச்சயம்.
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டுக்கு உப்பில் உள்ள அயோடின் நேரடியாகத் துணைபுரியவல்லது. தைராய்டு ஹார்மோன்களின் அளவு சரியான விகிதத்தில் இருக்க ஒருவர் தினமும் 1 – 2 டீஸ்பூன் அயோடின் உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனை உணவு கொதிக்கும்போதோ, வேகவைக் கும்போதோ பயன்படுத்துவதற்குப் பதிலாக, அதை அடுப்பில் இருந்து இறக்கும்போது அல்லது இறக்கிய பிறகு கலந்து சாப்பிடுவது நல்லது.

கடல் உணவான மீன்போன்றவற்றிலும் தைராய்டு சுரப் பியின் சீரான செயல்பாட்டுக்குத் தேவையான அயோடின் உள்ளது.

தைராய்டு பாதிப்புக்கு உள்ளான பெண் கருவுறும்போது, கர்ப்பகாலம் முழுமைக்குமான தைராய்டு சிகிச்சையை மிக முக்கியத்துவம்கொடுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வராமல் தடுக்க!

ஏற்கெனவே சொன்னது போல, தைராய்டு பிரச்னைக்கு இதுதான் காரணம் என்று உறுதியிட்டுச் சொல்ல முடியாது என்றாலும், கீழ்காணும் விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பதன் மூலம் அதைத் தவிர்க்கலாம்.
உடலுக்குத் தேவையான சரிவிகித உணவை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தரமான அயோடின் உப்பை தினமும் 1 – 2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும்..

மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை அடிக்கடி சேர்க்கலாம்.
உயரத்துக்கு ஏற்றவாறு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
தேவையான உறக்கம், மிதமான உடற்பயிற்சி என ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.
1 – 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிச்சயமாக தைராய்டு பரிசோதனை செய்துகொள்ளவும்.
“மொத்தத்தில், தைராய்டு கொடிய நோய் இல்லை. ஆனால், காலம் கடத்தாத சிகிச்சை அவசியம். ஒருவேளை தவறினால், அதன் விளைவுகளை, குறிப்பாகப் பெண்கள் அதிகமாகச் சந்திக்கவேண்டிவரும். தைராய்டு பற்றிய விழிப்பு உணர்வும் துரித செயல்பாடும் இணையும்போது… விரட்டலாம் அந்தப் பிரச்னையை எளிதாக!’’
– ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டவல்லவை

 #தலசீமியா: காரணங்கள், அறிகுறிகள்( ):-தலசீமியா என்பது மிகவும் பொதுவான மரபணு இரத்தக் கோளாறு ஆகும், இதில் ஹீமோகுளோபின் உற்...
08/05/2025

#தலசீமியா: காரணங்கள், அறிகுறிகள்( ):-

தலசீமியா என்பது மிகவும் பொதுவான மரபணு இரத்தக் கோளாறு ஆகும், இதில் ஹீமோகுளோபின் உற்பத்தி குறைகிறது, இது இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. ஹீமோகுளோபின் (Hb) என்பது இரத்த சிவப்பணுக்களில் இரும்புச்சத்து கொண்ட புரதமாகும், இது உடல் திசுக்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்வதற்கும் நுரையீரலில் இருந்து கார்பன் டை ஆக்சைடை அகற்றுவதற்கும் பொறுப்பாகும். இது இரண்டு புரதங்களால் ஆனது - ஆல்பா மற்றும் பீட்டா. தலசீமியாவில், உடலால் இந்த புரதங்களை போதுமான அளவு உற்பத்தி செய்ய முடியாது, இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை பாதிக்கிறது மற்றும் இரத்த சோகை ஏற்படுகிறது, இது குழந்தை பருவத்தில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.
தலசீமியா மரபுரிமையாக உள்ளது, அதாவது குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது தலசீமியா மரபணுவின் கேரியராக இருக்க வேண்டும். எத்தனை மரபணுக்கள் சேதமடைந்துள்ளன என்பதைப் பொறுத்து, இரத்த சோகையின் தீவிரம் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடும். இந்த நிலை குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் மற்றும் குறைக்கப்பட்ட இரத்த சிவப்பணு உற்பத்தி தொடர்பான சிக்கல்களை நிர்வகிக்க வழக்கமான சிகிச்சை தேவைப்படுகிறது.

தலசீமியாவின் அறிகுறிகள் என்ன?
இரத்த சோகை மற்றும் பிற மருத்துவ அறிகுறிகள் தலசீமியா, ஒரு மரபணு இரத்த நிலையில் உள்ள பிறழ்ந்த ஹீமோகுளோபினை உடல் உற்பத்தி செய்வதால் ஏற்படுகிறது. தலசீமியாவின் வகை, அறிகுறிகள் எவ்வளவு கடுமையானவை என்பதைப் பாதிக்கிறது. அறிகுறிகள் மற்றும் குறிகாட்டிகள் பின்வருமாறு:
• சோர்வு மற்றும் பலவீனம்: ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் இல்லாததால்.
• பலேஸ்: குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் விளைவாக.
• மஞ்சள் காமாலை: சருமத்தின் மஞ்சள் மற்றும் கல்லீரல் ஈடுபாடு காரணமாக கண்கள்.
• அடிக்கடி தொற்றுகள்இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது.
• குழந்தைகளில் மெதுவான வளர்ச்சி: ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும்.
• எலும்பு குறைபாடுகள்: குறிப்பாக எலும்பு மஜ்ஜை விரிவடைவதால் முகம் மற்றும் மண்டை ஓட்டில்.
• வயிற்று வீக்கம்: மண்ணீரல் அல்லது கல்லீரலின் விரிவாக்கத்தால் ஏற்படுகிறது.
• இருண்ட சிறுநீர்: இரத்த சிவப்பணுக்களின் முறிவின் விளைவாக.
• காய்ச்சல்: தாழ்வாகத் தொடங்கி படிப்படியாக உயர்ந்து, 104.9°F (40.5°C) ஆக இருக்கலாம்.
நீங்கள் சரியான சிகிச்சையைப் பெறவில்லை என்றால், கடுமையான சிக்கல்கள் ஏற்படலாம். இவை அடங்கும்:
• மாயத்தோற்றம்: கடுமையான இரத்த சோகை அல்லது உறுப்பு செயலிழப்பின் விளைவாக.
• உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள்: இந்த கட்டத்தில் சிக்கல்கள் பொதுவானவை. சில அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் காய்ச்சல் தணிந்த இரண்டு வாரங்கள் வரை மீண்டும் தோன்றும்.
இந்த தலசீமியா அறிகுறிகளின் தீவிரம் இது ஆல்பா அல்லது பீட்டா தலசீமியா மற்றும் பெரிய அல்லது சிறிய வகையா என்பதைப் பொறுத்தது.

 #ஆஸ்துமா  ஆஸ்துமா என்றால் என்ன ?ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச...
07/05/2025

#ஆஸ்துமா

ஆஸ்துமா என்றால் என்ன ?
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களில், சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ (உம். புகை, தூசி) செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குாழய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. இதனால், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது. இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை (விசில் சத்தத்துடன்), இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் காணப்படும்.

ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட அநேகர் இந்த நோயினை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இருப்பினும், அவர்களும் மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர். ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற நேரங்களில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் இருக்கும் சுற்றுச்சூழலில் சில மாசுப்பட்டபொருட்கள் காணப்படுகிறது. அவை நம்மில் ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வாமை பொருட்கள் எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும், ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)

1. மிருகங்களின் உடலின் மேல் உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் ( உள்ளும் வெளியிலும் பயன்படுத்தப்படும்) - பெயின்ட், டிஸ்டம்பர் ோன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது சீதோஷணநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. மூட்டப்பட்ட நறுமண பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள்(உலர்ந்த பழவகைகளில்) அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வாப்பொருள் மற்றும் எரிச்சலூட்டும் பொருட்கள் எவையெனில் இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகையிலையிலிருந்து வருகின்ற புகையினை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.

நோயின் அடையாள அறிகுறிகள்

• மூச்சுத்திணறல் - திடீரென பாதிப்புக்குள்ளாகுதல், அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்படுதல்
• இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
• குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானகவே மறைந்துவிடும்
• மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
• இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
• மூச்சு இறைப்பினால் நிலைமை மோசமாகுதல் குறிப்பாக உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது அல்லது மற்றபிற சாதாரண வேலைகளை செய்யும் போது.

கேள்வி பதில்கள்

கேள்வி: ஆஸ்துமா நோயாளிகள் எல்லாவிதமான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளலாமா?
பதில்: ஸ்கூபா டைவிங்,தலைக்கு மேல் பளு தூக்குதல் ஆகியவற்றைத் தவிர மற்ற எல்லா உடற் பயிற்சிகளையும் செய்யலாம்.

கேள்வி: ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆபத்தானவை என்று எதைச் சொல்வீர்கள்.?
பதில் : கடல் மீன் உணவு, கொகோ சாக்கலேட்டுகள், உலர் பழங்கள் ஆகியவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, தேனி பூச்சி, கதண்டு ஆகியவை கடிக்க நேர்தல் ஆகியன மிகவும் ஆபத்தானவை.

கேள்வி: ஏசிக்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்றவையா?
பதில்: நிச்சயமாக. காரணம் அவற்றில் வரும் காற்று வடிகட்டப்படுகிறது. ஆனால் அதே நேரம் அந்த காற்று வடிகட்டிகள் அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். 27 முதல் 28 டிகிரி வெப்ப நிலையில் வைத்துக் கொள்வது நல்லது அத்துடன் காற்று முகத்தில் நேரடியாக படக்கூடாது.

கேள்வி: ஆஸ்துமா நோய் முற்றிலும் குணமடையக் கூடியதா? அதற்கு வழி இருக்கிறதா?
பதில்: இல்லை. ஆனால் கட்டுப்பட்டில் வைக்க முடியும். மருந்துகள் தற்காலிக நிவாரணம் தரக்கூடியவை மட்டுமே.வாழ்க்கை முறையை ஆஸ்த்துமாவிற்கு தக்கதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியமானது. மன அழுத்தம் தவிர்க்கப் பட வேண்டும். ஆஸ்துமா நோயாளிகளின் பெற்றோர்கள் வாழ்க்கைத்துணைகளுக்கு இதில் அதிக பொறுப்புணர்ச்சி தேவை.

*👀தேசிய கண் தான விழிப்புணர்வு தினம்👀*-செப்டம்பர் 8' தானத்தில் சிறந்த தானம், கண்தானம்" என்பார்கள். ஏனெனில், கண்தானம் செய்...
08/09/2024

*👀தேசிய கண் தான விழிப்புணர்வு தினம்👀*-செப்டம்பர் 8'

தானத்தில் சிறந்த தானம், கண்தானம்" என்பார்கள். ஏனெனில், கண்தானம் செய்வதால், நாம் இறந்தாலும், மற்றொருவர் மூலம் நம் கண்கள் இந்த உலகை பார்க்க முடியும். நாம் இறந்த பின்னர் மண்ணுடன் மண்ணாக மக்கி போகும் நம் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், நாம் இறந்தும் பலருக்கு வாழ்வளிக்க முடிகிறது.

எனவேதான் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி, தேசிய கண்தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகில் 4 கோடி மக்கள் பார்வையற்றவர்களாக உள்ளனர். இவற்றில், நம் இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். நாம் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால், இந்தியாவில் பார்வையற்றவர்களை பார்வை உடையவர்களாக மாற்ற முடியும்.

கண்தானம் பற்றிய சில தகவல்கள்:

கண் தானம் செய்ய விரும்புவோர், நமக்கு அருகிலுள்ள கண்தான வங்கியை தொடர்பு கொண்டு, கண்களை தானம் செய்வது பற்றி தெரிவிக்கலாம்.

ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் கண்தானத்தை செய்ய வேண்டும்.

கண்தானம் செய்யும் இறந்தவரையும், கண்களைப் பெற்றுக் கொள்பவரையும் மருத்துவர் முறையாக பரிசோதனை செய்த பிறகுதான், கண் விழிகளை பார்வையற்றவருக்குப் பொருத்த முடியும்.

கண்தானம் செய்பவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களை மூடி, கண்ணின் மீது ஐஸ்கட்டி அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும். கண்ணின் முக்கிய உறுப்பான 'கார்னியா' எனப்படும் கருவிழிக்குள் ஒளிக்கற்றையானது உள்ளே செல்வதைத் தடுப்பதற்காக இதனை செய்ய வேண்டும்.

முதலில் இறந்தவரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்பட்டு, உடல்நிலையின் ஆரோக்கியம் பற்றி ஆய்வு செய்யப்படும். பின்னரே கண் எடுக்கப்பட்டு, மற்றவருக்கு பொருத்தப்படும்.

கண்தானம் செய்ய 20லிருந்து 30 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

மூக்குக் கண்ணாடி அணிந்தவர்களும், கண் புரை அறுவை சிகிச்சை செய்தவர்களும் கண்தானம் செய்யலாம்.

ஒரு வயது நிரம்பியவர் முதல் எல்லா வயதினரும் கண்தானம் செய்யலாம்.

உலகிலேயே இலங்கைதான் கண்தானம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது.

யார் செய்யலாம், யார் கூடாது:

நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா நோயாளிகள் உட்பட அனைவரும் கண்தானம் செய்யலாம். ஆனால், தொற்று நோயால் இறந்தவர்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடி, எய்ட்ஸ் போன்ற நோய் பாதிப்புகளால் இறந்தவர்கள் கண்தானம் செய்ய முடியாது.

நம் கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்:

போதிய வெளிச்சத்தில்தான் படிக்கவும், எழுதவும் செய்ய வேண்டும்.

கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்காமல், தண்ணீரைக் கொண்டுதான் சுத்தம் செய்ய வேண்டும். பால், முட்டை, கீரை, மீன், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

கணினி மற்றும் டி.வி.யை பயன்படுத்துவோர், அடிக்கடி கண்களை மூடியும், சிமிட்டவும் செய்ய வேண்டும்.
40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

அனைவரும் கண்தானம் செய்வோம்! பிறர் கண் மூலமாக மீண்டும் உயிர்வாழ்வோம்!!

அந்தியூர் குருநாதசாமி தேர்திருவிழா தரிசனம் 🌸🪷
09/08/2024

அந்தியூர் குருநாதசாமி தேர்திருவிழா தரிசனம் 🌸🪷

06/08/2024

Better Luck Next Time @ Indian Hockey

தேசிய கொழுப்பு தினம் 2024:  ”Lipid”Day {டிஸ்லிபிடெமியா} ...ரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள்கொழுப்பு என்றாலே கெட்டது என்றுதா...
10/05/2024

தேசிய கொழுப்பு தினம் 2024: ”Lipid”Day {டிஸ்லிபிடெமியா} ...

ரத்தக் கொழுப்புப் பரிசோதனைகள்

கொழுப்பு என்றாலே கெட்டது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கொழுப்பில் நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு. கொலஸ்ட்ரால், கொழுப்புப் புரதம், டிரைகிளிசெரைட்ஸ் எனக் கொழுப்பில் பலவிதம் உண்டு.
கொலஸ்ட்ரால்
'கொலஸ்ட்ரால்' மாமிச உணவிலிருந்து நேரடியாகக் கிடைக்கிற கொழுப்பு. உடலில் கல்லீரலும் இதைத் தயாரிக்கிறது. தேவைக்கு அதிகமாக மாவுச்சத்து உடலில் சேரும்போது, அதை கொலஸ்ட்ராலாகக் கல்லீரல் மாற்றிவிடுகிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமானால் இதயத்துக்கு ஆபத்து.

கொழுப்புப் புரதம்
உணவிலிருந்து பெறப்படும் கொலஸ்ட்ரால் ரத்தத்தில் கரையாது; உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இதனால் தனியாகச் செல்ல முடியாது. எனவே, இது புரத மூலக்கூறுகளுடன் இணைந்து உடலின் பல பகுதிகளுக்குப் பயணிக்கிறது. இதற்குக் ‘கொழுப்புப் புரதம்' (Lipo protein) என்று பெயர்.

இது மூன்று வகைப்படும்:
1. எல்.டி.எல். ( Low Density Lipo protein - LDL)
2. ஹெச்.டி.எல். (High Density Lipo protein - HDL)
3. வி.எல்.டி.எல். (Very Low Density Lipo protein - VLDL)
முக்கியத்துவம் என்ன?
கொழுப்புப் புரதங்களில், எல்.டி.எல்.லும் வி.எல்.டி.எல்லும் கெட்டவை. இவை கல்லீரலிலிருந்து இதயத்துக்குக் கொழுப்பை எடுத்துச் சென்று, இதயத் தமனிக்குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்புக்குப் பாதை போடும். மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயை அடைத்துப் பக்கவாதம் வருவதற்கு ஏற்பாடு செய்யும். ஆகவே, இவற்றைக் கெட்ட கொழுப்பு' (Bad Cholesterol) என்கிறோம்.
ஆனால் ஹெச்.டி.எல். இதயத்துக்கு நன்மை செய்கிறது. இதயத்திலிருந்து கொழுப்பை விடுவித்து, கல்லீரலில் வைத்து அதை கரைத்துவிடுகிறது. இதன்மூலம் மாரடைப்பு / பக்கவாதம் வராமல் பார்த்துக்கொள்கிறது. எனவே, இதற்கு ‘நல்ல கொழுப்பு' (Good Cholesterol) என்று பெயர்.
டிரைகிளிசெரைட்ஸ்
'டிரைகிளிசெரைட்ஸ்' என்பது கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசெரால் கலந்த கொழுப்பு. ரத்தக் குழாய்களைத் தடிக்க வைத்து, ரத்த ஓட்டத்தை நிறுத்தக்கூடிய தன்மை இதற்கு உண்டு. மேலும் இது கொலஸ்ட்ரால், பாஸ்போ லிப்பிட்ஸ், புரதம் ஆகியவற்றுடன் இணைந்து வி.எல்.டி.எல். கொழுப்பை உற்பத்தி செய்கிறது. இப்படிக் கெட்ட கொழுப்பை அதிகரிப்பதால், இதுவும் இதயத்துக்கும் மூளைக்கும் ஆகாத பொருள்தான்.

உடலில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு இருக்கும் விகிதத்தைக் கண்டறிய ஒரு பரிசோதனை உதவுகிறது. அதுதான், லிப்பிட் ஃபுரொபைல் (Lipid Profile ) பரிசோதனை
மேற்சொன்ன ஐந்து கொழுப்புகளையும் ரத்தத்தில் பரிசோதித்துப் பார்ப்பதற்கு ‘லிப்பிட் புரொஃபைல்’ பரிசோதனை என்று பெயர்.
யாருக்குத் தேவை?
# 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாரடைப்பு நோய் வந்துள்ள குடும்பத்தில் பிறந்தவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இதைச் செய்துகொள்ள வேண்டும்.
# உடல்பருமன், இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்தஅழுத்தம், ரத்த மிகைக்கொழுப்பு உள்ள வர்கள், புகைபிடிப்பவர்கள், மது அருந்துபவர்கள் இந்தச் சோதனையை வருடத்துக்கு இரண்டு முறை செய்துகொள்ள வேண்டும்.

ரத்தக் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மொத்தக் கொலஸ்ட்ராலை மட்டும் பரிசோதித்துக் கொள்ளலாம்.
எப்படிச் செய்வது?
# இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
# இவர்கள், பரிசோதனைக்கு முந்தைய மூன்று நாட்களுக்கு வழக்கமான உணவைச் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
# பரிசோதனைக்கு முதல் நாள் இரவு உணவை முடித்த பிறகு, எதையும் சாப்பிடக் கூடாது (ஃபாஸ்டிங்).
# எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் கழித்து, அதாவது மறுநாள் காலையில் பரிசோதனைக்கு வர வேண்டும்.
# பரிசோதனைக்கு வரும்போது மது அருந்தியிருக்கக்கூடாது; புகைபிடிக்கக்கூடாது.
கொழுப்பு வகை சரியான அளவுகள்
# மொத்தக் கொலஸ்டிரால்150 முதல் 180 மி.கி. / டெ.லி. வரை
# எல்.டி.எல். 100 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக
# ஹெச்.டி.எல். ஆண்களுக்கு 40 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக;
# பெண்களுக்கு 50 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக
# வி.எல்.டி.எல் 30 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக
# டிரைகிளிசெரைட்ஸ்150 மி.கி. / டெ.லி.க்குக் குறைவாக
இந்த அளவுகளில் கொழுப்பு அதிகம் எனத் தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி கொழுப்பைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும். மேலும் கொழுப்பு குறைந்த உணவைச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, உடல்பருமனைக் குறைப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களும் தேவை.
கவனம் தேவை
# ஹெச்.டி.எல். 60 மி.கி. / டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்துக்கு வரவுள்ள ஆபத்தை உடல் இயற்கையாகவே தடுத்துவிடும்.
# எல்.டி.எல். 160 மி.கி. . டெ.லி.க்கு அதிகமாக இருப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இதயத்துக்கு ஆபத்து வரலாம்.

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்ன? இந்த பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..!ஹீட் ஸ்ட்ரோக் என்பது மிக அதிகமான வெப்பத்தை...
07/05/2024

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள் என்ன? இந்த பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..!

ஹீட் ஸ்ட்ரோக் என்பது மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஏற்படும் பாதிப்பாகும்.

மனிதர்களின் உடல்நிலை இயல்பாக 98.6 டிகிரி ஃபாரான்ஹீட் அல்லது 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று, அதிக நேரம் வெயிலில் இருப்பதால் இந்த உடல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து 104 டிகிரி ஃபாரான்ஹீட்டுக்கு மேல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.

வழக்கமாக காய்ச்சல் வரும் போது உடலின் வெப்பநிலை அதிகமாகி, அதற்கான மாத்திரை எடுத்துக்கொண்டால் வியர்வை வந்து உடலின் சூட்டை தணித்துவிடும்.

ஆனால் வெயில் காலங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சில நேரங்களில் வியர்வை வராது. மேலும் உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பு செயல்படாமல் போனால், உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும்

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பினால், மனிதர்கள் அப்படியே மயங்கி சரிந்து விழுகின்றனர். இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

நமது உடலின் வெப்பம் அதிகமாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையொட்டி நமது உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து நமக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட போகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

வெயிலில் அதிக நேரம் இருப்பதால் மேலே கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், அந்த நபருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.பாதிப்பின் உச்சமாக மயக்கமடையும் நபர் கோமாவுக்கு செல்லும் அபாயமும் உள்ளது.

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பின் அறிகுறிகள் தெரியவந்தவுடன் உடனடியாக வெயிலில் இருந்து நிழலான பகுதி செல்ல வேண்டும்.

வாய்ப்பு இருந்தால் ஏசி இருக்கும் அறைகளுக்கு அழைத்துச் சென்று உடலின் வெப்பத்தை இயல்பான நிலைக்கு அழைத்து வர வேண்டும்.

உடலில் தலை, மார்பு, இடுப்பு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ் அல்லது நீரில் முக்கிய துணி கொண்டு தேய்த்து உடல் சூட்டை தணிக்கலாம்.

ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் உடனடியாக இறங்கி குளிப்பதன் மூலமும் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னையினால் மயங்கி சரிவதை தடுக்க முடியும்.

யாருக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுகிறது?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகமாக வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.

குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது மிக எளிதாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.

அதே போல 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீர்சத்து வற்றி, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வரும்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் இருக்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.

இதுமட்டுமின்றி, வெயிலில் அதிக நேரம் வெளியே வேலை செய்யும் நபர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சபட்சமாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை இருக்கும்.

இந்த நேரத்தில் கடினமான வேலையை வெயிலில் நின்று பார்க்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படுகிறது.

என்ன உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது?

பொதுவாக வெயில் காலத்தில் உடலில் வெப்பம் அதிகரித்து வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படுகிறது.

இந்த பிரச்னையை சரி செய்ய குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

வழக்கமான நாட்களை விட அதிகளவில் தண்ணீர், காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சாதாரணமாக 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கும் மனிதர்கள், வெயில் காலத்தில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். அப்போது மட்டுமே உடலில் தேவையான நீர்சத்து குறையாமல் இருக்கும்.
பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, வயிற்றின் அமிலத்தன்மை அதிகமாகாமல் இருக்க உதவும்.
நீர்ச்சத்து உள்ள காய்களை உணவுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் சூட்டை கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடியும்.
அடிக்கடி இளநீர் குடித்தால், வயிற்றில் pH அளவு சீராக இருக்க்கும். இதன் மூலம் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை வெயில் காலங்களில் ஏற்படாது.
உணவை அதிக சூடாக சாப்பிட வேண்டாம். வெயில் காலத்தில் சூடாக உணவை சாப்பிடும் போது குறைவாக மட்டுமே சாப்பிட முடியும். மேலும் உணவில் எண்ணெய் குறைவாக இருப்பது அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க உதவும்.

01/05/2024

Thanks to all for wonderful wishes

cancer: இந்த 9 அறிகுறிகள் இருந்தா புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாம்...புற்றுநோய் ஒரு தீவிரமான நோய் ஆகும். ஆனால் புற்றுநோயை...
04/02/2024

cancer: இந்த 9 அறிகுறிகள் இருந்தா புற்றுநோய் வர வாய்ப்பு அதிகமாம்...
புற்றுநோய் ஒரு தீவிரமான நோய் ஆகும். ஆனால் புற்றுநோயை அதன் ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்துகொள்வது மூலம் நம்மால் அதைக் குணப்படுத்த முடியும். சில அறிகுறிகள் மூலம் நாம் நமக்குப் புற்றுநோய் இருப்பதை அறிய முடியும். அந்த அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.

சில நேரங்களில் சின்ன அறிகுறிகள் கூட புற்றுநோய் போன்ற பெரிய நோய்களுக்கான அறிகுறிகளாக இருக்கலாம். இந்த அறிகுறிகளை நாம் ஆரம்பத்திலேயே கண்டறிந்தோம் எனில் அதன் மூலம் உடலில் புற்றுநோய் பரவலை நம்மால் தடுக்க முடியும், ஆரம்ப அறிகுறிகளை நாம் புறக்கணிப்பது ஆபத்தான விஷயமாகும்.

இதற்காக நீங்கள் அதிகமாகப் பயப்பட வேண்டிய அவசியமில்லை. புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகளை அறிவதன் மூலம் அவற்றை நம்மால் தடுக்க முடியும். எனவே புற்றுநோய் ஏற்படும்போது அதை வெளிக்காட்டும் சில முக்கிய அறிகுறிகளை இப்போது பார்க்கலாம்.

எடை குறைதல்:-
உங்கள் எடையானது வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகமாகக் குறைவதை காணலாம். அதுவும் நீங்கள் எந்த வித எடை குறைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமலே இந்த நிகழ்வானது நடக்கும். இந்த மாதிரியான அறிகுறிகளை சந்திக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். இது கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் போன்ற பகுதிகளில் புற்றுநோய் உருவானதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

உடலில் வீக்கம் அல்லது கட்டி ஏற்படுதல்:-
உடலில் எதாவது ஒரு பகுதியில் வீக்கம் அல்லது கட்டி ஏற்பட்டால் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். வயிறு, மார்பகம் போன்ற இடங்களில் புற்றுநோய் காரணமாக கூட கட்டிகள் ஏற்படலாம். எனவே இந்த மாதிரியான கட்டிகள் உங்களுக்கு நீண்ட நாட்களுக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்ந்து இருமல்:- தொடர்ந்து இருமல்
இருப்பது என்பது பல நோய்களுக்கான அறிகுறியாக உள்ளது. மார்பில் அதிகமான சளி இருப்பதால் கூட தொடர் இருமல் ஏற்படுகிறது. ஆனால் உங்களுக்கு மூன்று முதல் நான்கு வாரங்களுக்குத் தொடர்ந்து இருமல் பிரச்சனை உள்ளது என்றால் அது மோசமான நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். தொடர்ந்து இருமல், சளியுடன் கூடிய இரத்தம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மச்சம் அல்லது மருவில் மாற்றம்:-
உங்களுடைய மச்சம் அல்லது மருவில் எதாவது மாற்றம் ஏற்படுகிறது எனில் அதை புறக்கணிக்க வேண்டாம். பெரும்பாலான மக்கள் இந்த விஷயத்தைக் கவனிப்பதில்லை. ஆனால் இது தோல் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் சருமத்தில் ஒரு புதிய மரு அல்லது மச்சம் தோன்றும்போது சருமத்தில் ஏற்கனவே இருக்கும் மச்சத்தின் நிறம் மாறுதல் அல்லது அளவு அதிகரித்தல் போன்ற அறிகுறிகளைக் கண்டால் உடனே மருத்துவரை அணுகவும். அவர் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்.

சிறுநீரில் இரத்தம்:-
சிறுநீர் வழியாக இரத்தம் வெளியேறுதல் என்பது குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். மேலும் நீங்கள் வழக்கத்தை விட அதிகமாகக் கழிப்பறைக்கு சென்றாலோ அல்லது மலச்சிக்கல் பிரச்சனையைத் தொடர்ந்து எதிர்க்கொண்டாலோ அதைப் புறக்கணிக்காதீர்கள். இது சிறுநீரக புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் மற்றும் கீழ் முதுகில் வலி போன்றவை புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

உடல் வலி:-
உங்களுக்கு எந்த விதமான காரணங்களும் இல்லாமல் தொடர்ந்து வாரக்கணக்கில் உடலில் வலி இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோயின் ஆராய்ச்சியின்படி, புற்றுநோய் கட்டிகளானது எலும்புகள், நரம்புகள் மற்றும் பிற உறுப்புகளில் அழுத்தம் கொடுப்பதால் அதிகமான வலியை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நெஞ்செரிச்சல்:-
நீங்கள் தொடர்ந்து மார்பில் எரிவது போன்ற உணர்வை உணர்ந்தால், சில சமயங்களில் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக கூட இருக்கலாம். வயிறு அல்லது தொண்டை புற்றுநோய்க்கான அறிகுறியாக இது இருக்க வாய்ப்புள்ளது.

உணவை விழுங்குவதில் சிரமம்:-
உணவு உண்ணும்போது வலி ஏற்படுதல், அல்லது உணவை விழுங்குவதில் சிரமம், உணவு மீண்டும் மீண்டும் தொண்டையில் சிக்கிக்கொள்வது, இவை அனைத்தும் உணவுக்குழாய் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தொடர்ந்து உங்களுக்கு ஏற்படுகிறது எனில் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரவில் அதிகம் வியர்த்தல்:-
இரவில் வியர்ப்பது ஒரு சாதாரண விஷயம் என்றாலும் சில சமயங்களில் இது புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம். பொதுவாக இது லிம்போமா புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த வகை புற்றுநோய்கள் உடலில் நிணநீர் மண்டலம் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற பகுதிகளைப் பாதிக்கின்றன.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் உடனே பீதி அடைய வேண்டாம். இந்த அறிகுறிகள் எப்போதும் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அரிதாக சில சந்தர்ப்பங்களில் இவை புற்றுநோய்க்கான அறிகுறியாக இருப்பதால் இந்த அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உதாசீனப்படுத்த வேண்டாம். அதற்கு சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவும்.

50 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் என்று சொன்னாலே அது ரத்தப் புற்றுநோய் தான் என்று நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் புற்றுநோயில் ஏராளமான வகைகள் உண்டு. குறிப்பாக, தோல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், விதைப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என பல வகைகள் உண்டு. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே சில குறிப்பிட்ட அறிகுறிகள் இருக்கும். மேலே குறிப்பிட்டப்பட்டிருக்கும் அறிகுறிகள் யாவும் எல்லா வகைப் புற்றுநோய்க்கும் உள்ள சில பொதுவான அறிகுறிகள் ஆகும்.

நவம்பர்-7 தேசிய புற்று நோய் விழிப்புணர்வு நாள்.... #புற்றுநோய்   அறிகுறிகள்…சத்தம் இல்லாமல் நமது உடலில் உருவாகி கொஞ்சம் ...
07/11/2023

நவம்பர்-7 தேசிய புற்று நோய் விழிப்புணர்வு நாள்....

#புற்றுநோய் அறிகுறிகள்…

சத்தம் இல்லாமல் நமது உடலில் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை இறப்பின் வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக விளங்குகிறது. புற்றுநோய் வந்து விட்டாலே இறப்பு உறுதி தான் என்ற நிலை மாறி தற்போது அதற்கான சிகிச்சைகள் வந்துவிட்டது. இருப்பினும் கூட மக்களிடையே புற்றுநோய் பற்றிய பயமும் பாதிப்பும் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் இந்த நோயினால் ஏற்படும் பயத்தில் இருந்து விடுபடும் வழிமுறையை பற்றி இங்கே நாம் தெரிந்து கொள்வோம். உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களை பாதிக்கும் நோயை தான் நாம் புற்றுநோய் என கூறுகின்றோம். புற்றுநோய் என்பது ஒரு தொற்று நோய் அல்ல ஆனால் அது ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, உணவு குழாய், ப்ராஸ்டேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை போன்ற உறுப்புகளிலும் அதிகமாக புற்றுநோய் வருகின்றது.

எல்லா கட்டிகளுமே கேன்சர் கட்டிகள் அல்ல. புற்றுநோய் அல்லாத கட்டிகளால் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படுவதில்லை. இத்தகைய கட்டிகளை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றினால் மீண்டும் அவை தோன்றுவதில்லை. மேலும் அவை உடலில் மற்ற பாகங்களுக்கு பரவுவதில்லை சிகிச்சையற்ற நிலையில் புற்றுநோய் உயிர் அணுக்கள் கட்டுப்பாடு இன்றி வளர்ந்து வருகிறது. அவை சுற்றியுள்ள மற்ற திசுக்களை ஆக்கிரமித்து அழிகின்றது ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக உடலின் மற்ற பகுதிகளுக்கு இவை பரவுகிறது. இதனால் உறுப்பின் இயக்கங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்.

உடலில் புற்றுநோய் ஏற்படும் பாகத்தை பொறுத்து அதன் அறிகுறிகளும் மாறுபடுகிறது. கீழ்க்கண்ட அறிகுறிகள் புற்றுநோய் தவிர மற்ற நோய்களிலும் ஏற்படலாம் அதனால் இந்த அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்வது நல்லதாகும்.

*குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு
முழுங்குவதில் தொடர் சிரமம் தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்.

*நாக்கை அசைப்பதில் சிரமம்.

*மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணமாக, தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு) சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.

*உடலில் கட்டி தோன்றுதல் புற்றுநோயில் ஆரம்ப காலகட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. ஆனால் அதை பரவிய பின் தான் வலி ஏற்படுகிறது.

*உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரியதாகுதல் அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்.

*காரணம் இல்லாமல் எடை குறைவு.

*பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி மாதவிடாயின் போது இயல்பை விட அதிகமான ரத்தப்போக்கு இறுதி மாதவிடாய் நின்ற பிறகும் ரத்தப்போக்கு.

போன்றவை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக காணப்படுகிறது.

Address

40/25, South Car Street, Pookadai Corner
Tiruchengodu
637211

Alerts

Be the first to know and let us send you an email when Kalpana Microbiology Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kalpana Microbiology Lab:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category