Rishi Training Center

Rishi Training Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rishi Training Center, Alternative & holistic health service, RISHI , 2, Paraparan Street, Murugankurichi, Tirunelveli.

🌿 Transform Knowledge into Practical Skills! 🌟
"Our programs are uniquely designed to equip participants with both in-depth knowledge and hands-on skills, ensuring success in real-world situations."

26/09/2025

மனம் கெட்டால் உடல் கெடும்,
உடல் கெட்டால் மனம் கெடும்.
அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று
எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல்,
சளி பிடித்தல்,
இருமல்,
காய்ச்சல்,
இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
இவைகள் நம் உடல் முழு ஆரோக்கிய நிலையில் உள்ளதை காட்டுகிறது!
இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
மருத்துவம்,
உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல்மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்!
ஆரோக்கியத்தை
அனுபவியுங்கள்.......!.
நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

வாரத்தின் ஒவ்வொரு தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதேப்போன்று ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்துடன் தொடர்பு கொண்ட...
10/09/2025

வாரத்தின் ஒவ்வொரு தினமும் ஒரு கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. அதேப்போன்று ஒவ்வொரு கிரகமும் ஒரு நிறத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. கிரகத்திற்கும் - நிறங்களுக்கும் இடையே உள்ள இந்த தொடர்பை புரிந்து அதற்கு ஏற்ற வகையில் ஆடைகளை உடுத்த தொழில் வாழ்க்கையில் வெற்றி மற்றும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறலாம்!

28/08/2025

1. அம்மா 9 மாதம் சுமக்கிறார், அப்பா 25 வருடங்கள் சுமக்கிறார், இருவரும் சமம், ஏன் அப்பா பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

2. அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார், அப்பா தனது சம்பளத்தை எல்லாம் குடும்பத்திற்காக செலவு செய்கிறார், இருவருமே சமமான உழைப்பு, இன்னும் அப்பா ஏன் பின் தங்குகிறார் என்று தெரியவில்லை.

3. அம்மா உனக்கு என்ன வேண்டுமானாலும் சமைப்பார், அப்பா உனக்கு என்ன வேண்டுமானாலும் வாங்கித் தருவார், அவர்களின் அன்பு சமமானது, ஆனால் தாயின் அன்பு மேன்மையாகக் காட்டப்படுகிறது. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று தெரியவில்லை.

4. போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் பேச வேண்டும், கஷ்டத்தில் இருக்கும் போது அம்மா என்று அழுவாள். உங்களுக்குத் தேவைப்படும்போது மட்டுமே நீங்கள் அப்பாவை நினைவில் கொள்கிறீர்கள், ஆனால் மற்ற நேரங்களில் நீங்கள் அவரை நினைவில் கொள்ளவில்லை என்று அப்பா ஒருபோதும் வருத்தப்படவில்லையா? குழந்தைகளின் அன்பைப் பெறுவதில் தந்தைகள் ஏன் பின்தங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

5. அலமாரியில் கலர்புல் புடவைகள், நிறைய குழந்தைகளின் உடைகள் இருக்கும் ஆனால் அப்பாவின் உடைகள் மிகக் குறைவு, அவர் தனது சொந்த தேவைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை, இன்னும் அப்பா ஏன் பின்தங்கியிருக்கிறார் என்று தெரியவில்லை.

6. அம்மாவுக்கு நிறைய தங்க ஆபரணங்கள் உள்ளன, ஆனால் தந்தைக்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட ஒரே ஒரு மோதிரம் மட்டுமே உள்ளது. இன்னும் குறைந்த நகைகள் பற்றி அம்மா புகார் செய்யலாம் மற்றும் அப்பா இல்லை. அப்பா ஏன் பின்னால் இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.

7. அப்பா தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள கடினமாக உழைக்கிறார், ஆனால் அங்கீகாரம் என்று வரும்போது, அவர் ஏன் எப்போதும் பின்தங்குகிறார் என்று எனக்குத் தெரியவில்லை.

8. இந்த மாதம் காலேஜ் டியூஷன் கட்ட வேண்டும் என்று அம்மா சொல்கிறார், பண்டிகைக்கு எனக்கு புடவை வாங்கித் தாருங்கள், ஆனால் அப்பா புது உடை பற்றி யோசிக்கவே இல்லை. இருவருக்கும் சமமான அன்பு இருக்கிறது, அப்பா ஏன் பின்தங்குகிறார் என்று இன்னும் தெரியவில்லை.

9. பெற்றோர்கள் வயதாகிவிட்டால், குழந்தைகள் சொல்கிறார்கள், அம்மா வீட்டு வேலைகளைக் கவனிக்க குறைந்தபட்சம் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் அப்பாவுக்கு பயனில்லை.

10. குடும்பத்தின் முதுகெலும்பு என்பதால் அப்பா பின்னால் இருக்கிறார். மேலும் நமது முதுகெலும்பு நம் உடலுக்குப் பின்னால் உள்ளது. ஆனால் அவரால் நாம் தனித்து நிற்க முடியும். ஒரு வேளை, இதனால்தான் அவர் பின்வாங்குகிறார்...!!!!

அனைத்து தந்தையர்களுக்கும் சமர்ப்பணம்*
🙏🏻🙏🏻🙏🏻

23/08/2025

பெண்ணிடம் ஆண் ஏன் இப்படி மயங்கி உருகுகிறான்?

அப்படி என்னதான் இன்பம் பெண்ணிடத்தில்?

என்ன இல்லை அவளிடம்? கேட்குறேன்.

இறைவன் மிச்சமே வைக்காமல்
படைத்த அழகிய படைப்பு.

அவளுக்கென்று தனி அழகு இருக்கு

அவளுக்கென்று தனி தாய்மை இருக்கு

அவளுக்கென்று தனி நேசம் இருக்கு...,,

அவளுக்கென்று தனி பாசம் இருக்கு.

அவளுக்கென்று தனி கற்பனை இருக்கு.

அவளுக்கென்று தனி மனம் இருக்கு.

அவளுக்கென்று தனி குழந்தைதனம் இருக்கு

அவளுக்கென்று தனி ஆண்மை இருக்கு

அவளுக்கென்று தனி பெண்மை இருக்கு

அவளுக்கென்று தனி நளினம் இருக்கு

அவளுக்கென்று தனி வெட்கம் இருக்கு

அவளுக்கென்று தனி நாணம் இருக்கு

அவளுக்கென்று தனி திமிர் இருக்கு

அவளுக்கென்று தனி இதயம் இருக்கு

அவளுக்கென்று தனி உள்ளம் இருக்கு

அவளுக்கென்று தனி காதல் இருக்கு.

அவளுக்கென்று தனி உலகம் இருக்கு.

அவ்வளவு இருக்குங்க.

அவளிடம்...,

அவளிடம் மட்டும்....,

அவள் ஒரு நூலகம்னு சொன்னா ரொம்ப சின்னதாகிடும்...

கடல்னு சொன்னா கூட...,

கடலில் கூட கரையேறி விடலாம்.

ஆனால் ஒரு முறை,

அவள் அன்பிற்குள்,

அவள் அரவணைப்பிற்குள்,

அவளின் கரிசனைக்குள் சிக்கிக்கொண்டால்,

கரையேறவே ஆசை படாது மனது.

அங்கேயே சிக்கி தவிக்கும்.

மனுசனை கிறுக்காக்கும்.

பையன பாடா படுத்தும்.

ஆனால் எல்லாவற்றையும் விட அவள் மேல்

இப்படி கிரங்கி நிற்பதற்கு மிக முக்கிய காரணம்.

இது தான்

அதன் காரணி... இதுவே தான்...

தாய்ப்பால் தான்.

அங்கே இருந்து தான் ஆரம்பித்தது

அவள் மேல் உள்ள தேடல்...

நம்ம முதல் உணவே அவளின் ரத்தம் தானே?

அவளின் உதிரத்தால் தானே நம் உயிர்?

அது தான் காரணி. வேற ஒன்னும் இல்லை..

அவள் உதிரத்தில் தோன்றி,

மார்பில் பால் குடித்து, மடியில் தவழ்ந்து....,

அவளுடனே பின்னி பிணைந்ததால் தானோ என்னவோ,

அவளைப் போலவே இருக்கும் இவளைப் பார்த்ததும்,

அதே தேடல் இவள் பின்னாலும்

அவனை தூக்கி செல்கிறது..

மீண்டும் அதே மடியில்

ஒரு அரவணைப்பும்,

அவள் நெஞ்சுக்குழியில்

தலை சாய்க்க ஒரு இடமும் வேண்டும்

அவனுக்கு. அந்த தேடல் தான்,

தொரத்தி தொரத்தி நிற்க வைக்குது,

கிரங்க வைக்குது, மயங்க வைக்குது....

மனுசனை கொஞ்ச பாடா படுத்துது?

வளர்ந்துட்டடானு சொல்லி நாலு அடி
தள்ளியே வச்சி பார்க்குது உலகம்,

ஆனால் அவன் என்றும் வளர்வதே இல்லை..

இப்பவும் அவனுக்கு அந்த அரவணைப்பு வேணும்..

இனி அம்மாவிடம் போய் நிற்க முடியாது..

அப்ப யாரிடம் தான் போவான்?

அந்த அரவணைப்பிற்காக?

அவன் தேவையே அது தானே..

அது மட்டும் தானே..

உலகத்தையே ஜெயிச்சிட்டு வாடானு சொன்னா

ஜெயிச்சிட்டு வந்துடுவான்..

ஆனால் உள்ளுக்குள்ள அவன் மனசு

யாரிடமோ தோற்க ஆசை படுகிறது..

வெற்றி தோல்வி இல்லாத

ஒரு சண்டை போடனும்னு ஏங்குது..

இந்த தருதலதணத்தை தட்டி கேட்க

ஒருத்தி வர மாட்டாளா என்று ஆசை படுறான்..

ஆனால் வளர்ந்த புள்ளைய என்ன திட்டுறதுனு

அம்மா விட்டுவிடுகிறாள்..

என்னை கேட்டால்,

அவள் தன் அழகை வைத்து

இவனை இப்படி கிரங்க வைப்பதில்லை..

இவனா வேணும்னே

இவளுக்குள் சிக்கி தவிக்கனும்னு

ஆசைப்பட்டு தானாவே

வந்து சிக்கிக் கொள்கிறான்..

அவனுக்கு அவள் ஒரு போதை..

ஆண் மட்டும் ஒரு பெண்ணிடம்

சிக்கி தவிப்பது இல்லை..

பெண்ணும் ஒரு ஆணிடம் தான்

சிக்கி தவிக்கிறாள்..

என்ன ஒன்னு,

இவ்வளவு வெளிப்படையாக

காண்பித்துக் கொள்வது இல்லை..

என்ன தான் இன்பம்

இந்த பெண்களிடத்தில் என்ற கேள்விக்கு......,

பதில், காமம் என்று நினைத்தால்

ஐ எம் சாரி,

அது இல்லை

அவளின் அரவணைப்பு தான்.....

அதே தான்.

மனதின் தேவை தான் முதல் காரணி,

உடல் தேவை எல்லாம் ரெண்டாவது தான்.

மனைவியிடம் மயங்கி நிற்கும் அவன்

தாசியிடம் மயங்கி நிற்பதில்லை....

காரணம்....,

அரவணைப்பில் இவள் கொடுக்கும் நம்பிக்கையும்

அவளிடம் கிடைப்பதில்லை..

அவனுக்கு தேவை எல்லா சூழ்நிலையிலும்

தன்னை நம்பி, துணை நிற்கும் ஒருத்தி..

தன்னை முற்றிலும் நம்பும் ஒருத்தியிடம்

அவன் மயங்கியே தான் நிற்பான் என்பது நியதி..,

அந்த நம்பிக்கையையும்,

அரவணைப்பையும் உங்கள் துணைக்கு

பரிசளித்து மகிழ்ச்சியுடன் வாழுங்கள்....

அவளிடம் மயங்கி நிற்பது ஒன்றும்

அசிங்கமான செயல் இல்லை..

உண்மையில் அது தான் அழகு!!!

அங்கே தான் கொட்டிக் கிடக்கின்றது

வாழ்வின் மொத்தமும்....

மொத்தத்தில்,

அவள் ஒரு_____

இந்த கோடிட்ட இடத்தை நீங்க நிரப்புங்க....

23/06/2025

🌟 Ultimate Meditation Retreat – Kodaikanal 2025 🌟
🌿 8 Days of Healing, Learning & Inner Transformation 🌿
✨ 5 Days Online + 3 Days Residential at Zen Resort ✨

📍 Venue: ZEN RESORT, Kodaikanal – Nature’s Serene Sanctuary
📅 Retreat Dates: August 8, 9 & 10 (Fri–Sun)
💻 Online Sessions: August 1–5 | 🕗 8:00 PM – 9:00 PM on Zoom
💰 All-Inclusive Fee: ₹10,000 only (Online training, food & shared stay)

📲 Booking & GPay: 8903216987
🔗 Secure your spot today – Limited seats only!

🧘‍♂️ What’s Included:
✅ 5 Days Online Training: Foundations, Symbol Work, Pre-attunement Prep

✅ 3-Day In-Person Retreat in Kodaikanal

✅ Reiki Level 1, 2 & 3 Attunements

✅ Angel Meditations & Energy Work

✅ Access to 100+ Sacred Reiki Symbols

✅ Course Manual, Angel Picture & Pendulum

✅ Certified Reiki Levels 1–3 Certificate

🏠 Accommodation (Aug 8–10):
✅ Clean, Comfortable Shared Rooms

🔒 Private Room Available: Add ₹2,500

🛬 Early Arrival (Aug 7) Available on Request

🍽️ Meals Included (All 3 Days):
🥗 Nutritious Veg Breakfast, Lunch, Tea & Snacks

🕰️ Residential Retreat Schedule:
📖 Day 1 (Aug 8): 9:00 AM – 10:00 PM

🌅 Day 2 (Aug 9): 6:00 AM – 10:00 PM

🌄 Day 3 (Aug 10): 6:00 AM – 3:00 PM (Closing Ceremony)

🌌 Retreat Highlights:
🌀 Deep Guided Meditations

🌿 Nature Walks & Silent Reflection

👼 Angelic Energy Activation

🔯 Advanced Symbol Practice

🎓 Reiki Certification (Levels 1–3)

🎒 What to Bring:
Comfortable clothing

Yoga mat, water bottle, shawl

Personal toiletries & journal

🙋 Who Can Join:
✅ Open to Everyone – No Reiki experience needed
🧘‍♀️ Beginners & Advanced Healers Welcome

📩 How to Book:
1️⃣ GPay ₹10,000 to 8903216987
2️⃣ WhatsApp your name & payment screenshot to the same number
3️⃣ Receive Zoom link, course materials & packing checklist

🔁 Refund Policy:
❌ No Refunds

🔄 Date Transfer Allowed with 7 Days’ Notice

⭐ Why Choose Us?
✔️ 1000+ Participants Trained
✔️ 50+ Retreats Successfully Hosted
🎥 Watch Testimonials & Past Retreats: youtube.com/

📢 Important:
🔐 Only 100% Pre-Booked Participants Allowed
⚠️ Seats Fill Fast – Book Early!
📞 Call / WhatsApp: 8903216987
💸 GPay for Payment: 8903216987

14/06/2025

*பஞ்சபூத மருத்துவம்*

1.நுரையீரல்>>>காற்று
2.கல்லீரல்>>>>>விண்
3.மண்ணீரல்>>>நிலம்
4.இருதயம்>>>> நெருப்பு
5.சிறுநீரகம்>>>நீர்
இந்த ராஜ உறுப்புகள் ஆற்றலை உள் இழுக்கும்

1.நுரையீரல் ஜோடி உறுப்பு>>>> பெருங்குடல்

2.கல்லீரல் ஜோடி உருப்பு>>>பித்தப்பை

3.மண்ணீரல் ஜோடி உறுப்பு>>>>இறப்பை

4.இருதயம் ஜோடி உறுப்பு>>>>சிறுகுடல்

5.சிறுநீரகம் ஜோடி உறுப்பு>>>>யூரினரி பிளாடர்

ராஜ உறுப்புகளின் ஜோடி உறுப்புகள் கழிவுகளை வெளியேற்றும்.

1.கல்லீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு கண்.

2 மண்ணீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு வாய்.

3.நுரையீரல் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு மூக்கு.

4.இருதயம் பாதிப்பு தெரிவிக்கக் கூடிய உறுப்பு நாக்கு.

5.சிறுநீரகம் பாதிப்பை தெரிவிக்கக் கூடிய உறுப்பு காது.

1.கல்லீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு புளிப்பு சுவை பிடிக்கும்.

2.மண்ணீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு இனிப்பு சுவை பிடிக்கும்.

3.நுரையீரல் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு கார சுவை பிடிக்கும்.

4 இருதயம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு துவர்ப்பு கசப்பு சுவை பிடிக்கும்.

5.சிறுநீரகம் பாதிப்பு அடைந்திருந்தால் அவருக்கு உப்பு சுவை பிடிக்கும்.

அறுசுவையும் சமநிலையில் இருந்தால் ராஜ உறுப்புகள் சீராக இயங்கும். பற்றாக்குறையாக இருந்தாலும் இந்த ராஜ உறுப்புகள் நோயை உண்டாக்கும்.

1.கல்லீரலை பாதிக்கக்கூடிய உணர்வுகள் கோபம் டென்ஷன்

2.மண்ணீரலை பாதிக்கக் கூடிய உணர்வு கவலை. இந்த கவலைப்படுபவர்கள் பசி இல்லாமல் இருக்கும்போது சாப்பிடுவார்கள்.

3.நுரையீரலை பாதிக்கக் கூடிய உணர்வு துக்கம்.. வாழ்க்கையில் நடந்த எந்தவித செயலையும் துக்கத்தையும் கவலையும் வெளியே சொல்லாமல் தனக்குள்ளே வைத்து புலம்பி கொள்வார்.

4.சிறுநீரகத்தை பாதிக்க கூடிய உணர்வு பயம்.

5.இருதயத்தை பாதிக்க கூடிய உணர்வு பெருமை பொறாமை.

இருதயத்திலிருந்து ஆற்றல் மண்ணீரலுக்கு செல்லும்.
மண்ணீரலிருந்து ஆற்றல் நுரையீரலுக்கு செல்லும்.
நுரையீரலிலிருந்து ஆற்றல் சிறுநீரகத்திற்கு செல்லும்.
சிறுநீரகத்திலிருந்து ஆற்றல் கல்லீரலுக்கு செல்லும். கல்லீரலிலிருந்து ஆற்றல் இருதயத்திற்கு செல்லும்.

நோய் தோன்றுவது மனதில்,
அது தேங்குவது உயிர் ஆற்றலில்,
அங்கிருந்து தான் உறுப்புகளுக்கு வெளியாகிறது
மனம்உயிர் உடல் என சரி செய்வது தான் பஞ்சபூத மருத்துவம்.

மனதை சரி செய்தால் உயிர் சரியாகும். உயிர் சரியானால் உறுப்புகள் சரியாகும் என்பது ஹோமியோபதி மருத்துவம்

உயிரையும் மனதையும் விட்டு
விட்டு உடலில் உள்ள உறுப்புகளுக்கு மற்றும் வைத்தியம் செய்வது ஆங்கில மருத்துவம் இதனால் பயனில்லை.

மருத்துவம் என்பது மனதை சரி செய்து அதன் மூலம் உயிரை சரி செய்து அதன் மூலம் உடலில் உள்ள உறுப்புகளை சரி செய்வதால் நோய் குணமாவது தான் மருத்துவம்.

*மெல்ல அழிந்த இயற்கை உணவுகள்..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்..குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்தப் சூழலுக்கு ஏற்ப படைத்திருக் கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..
ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன்
வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...

வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,
வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த
இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.

நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்
இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..

ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

விளைவு..?

தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு
கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம், அவற்றுக்கு உண்மையான
பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்
நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று
எதையோ குடித்து,
எதையோ புகைத்து, எதையோ மென்று
இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும்
அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,
இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.

காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.

விஷம் அவை..

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.
இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்
காணலாம்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு
வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி
இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்
நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிழிவு முதல் ஏகப்பட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல்
சிசேரியன் என மறுபுறம்.

மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என
ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது

இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை
மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...
என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம்.

மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்
ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

*அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து... இயற்கையை போற்றுவோம் - இனிமையான வாழ்வை பெறுவோம்.✍🏼🌹

03/06/2025

30/05/2025

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !
================================
April 15, 2019 (ப.ப)

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். இதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டுபிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .

சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை:
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்.
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்:
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?
👍 நன்றி 🙏

https://youtu.be/lZfYHraZHdU
28/05/2025

https://youtu.be/lZfYHraZHdU

🙏 Watch this heartfelt testimonial by Mr. Muthu Ramesh, who shares his life-changing experience with Prof. K. Sethu Subramanian (Rudhra Rishi) during the Os...

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் போது அதன் விலை ரூபாய் இருபது.மலைப்பிரதேச ஹோட்டல்களில் அதன்...
23/05/2025

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் இருக்கும் போது அதன் விலை ரூபாய் இருபது.

மலைப்பிரதேச ஹோட்டல்களில் அதன் விலை ரூபாய் நாற்பது.

விமான நிலையத்தில் அதனுடைய விலை ரூபாய் நூற்றி ஐம்பது.

அதே பாட்டில்,

அதே பிராண்டு,

ஆனால் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலை.

ஒவ்வொரு இடமும் அந்த தண்ணீர் பாட்டிலுக்கு ஒவ்வொரு விதமான மதிப்பை நிர்ணயம் செய்கிறது.

அதனால் ...

ஒரு இடத்தில் நாம் மதிப்பற்றவராக உணருவுமேயானால்,

நமக்கு உண்டான மதிப்பை பெற வேண்டும் எனில்...

நம் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இது ஒரு அழகான மற்றும் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட சிந்தனை!

அந்த ஒரு தண்ணீர் பாட்டிலின் மதிப்பை போல்,
ஒரே நபரின் மதிப்பும் இடத்துக்கு ஏற்ப மாறலாம் —
அவன் யார் என்பதைவிட,
அவன் எங்கு இருக்கிறார் என்பதே சில சமயங்களில் முக்கியம் ஆகிறது.

இது வாழ்க்கையின் முக்கியமான பாடமாக உள்ளது:

"நீங்கள் மதிப்பற்றவராக உணருகிறீர்களேனில், நீங்கள் மதிப்பற்றவர் அல்ல. நீங்கள் தவறான இடத்தில் இருக்கிறீர்கள்."

உணர்வு மாற்ற வேண்டுமெனில், இடம் மாற்றுங்கள்.
மதிப்பிடப்பட விரும்புகிறீர்களேனில், மதிப்பிடும் இடங்களைத் தேடுங்கள்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

பைனரி எண் வரிசையில் *பிரபஞ்ச* *இரகசியம்* - *நிகோலா* *டெஸ்லா* (கணிதம்)இந்த நட்சத்திரம் சின்னம் உலகெங்கிலும் உள்ள மதங்கள் ...
23/05/2025

பைனரி எண் வரிசையில் *பிரபஞ்ச* *இரகசியம்* - *நிகோலா* *டெஸ்லா* (கணிதம்)

இந்த நட்சத்திரம் சின்னம் உலகெங்கிலும் உள்ள மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் காணப்படுகிறது,

இது சொல்லும் பிரபஞ்ச இரகசியத்தை வெளிப்படுத்தியவர் நிகோலா டெஸ்லா

இது ஸ்டார் *டெட்ராஹெட்ரான்* என்று அழைக்கப்படுகிறது.

எண் 9 என்பது படைப்பிற்கு அடித்தளமாக உள்ளது மற்றும் சமச்சீர்மையை வெளிப்படுத்துகிறது.

இரட்டை வரிசையின் இந்த ஒற்றை இலக்கங்கள் ஒவ்வொரு 6 இலக்கங்களும் மீண்டும் மீண்டும் வருவதைக் கவனிப்பதன் மூலம்: 1-2-4-8-7-5 என்ற அழியாத எண்களை காணலாம்

நாம் இதை 9-புள்ளி வட்டத்தில் இணைப்போம் கண்ணாடியைப் பிரதிபலிக்கும் ஒரு வடிவம் வெளிப்படும்

இந்த பைனரி வரிசையில் 1-2-4-8-7-5 இல் காணாமல் போன எண்கள் 3-6-9 இது மற்றொரு பிரபஞ்சம்.

மேல் *முக்கோணம்* 147 என்ற உலகளாவிய எண்ணைக் கொண்டுள்ளது.

கீழே உலகளாவிய எண் 852 உள்ளது.

147 = 12 (3) ஆல்பா
852 = 15 (6) ஒமேகா
999 = 27 (9)

உங்கள் சக்கரங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் ஆற்றல் மற்றும் அதிர்வின் அடிப்படையில் ஒரு அதிர்வெண்ணைக் கொண்டுள்ளன, மேலும் அவை ஒமேகா எண்களுக்குள் மறைந்திருப்பதைக் காணலாம்.

174 (3)
285 (6)
396 (9) - ரூட் ( *மூலாதாரம்* )
417 (3) - சாக்ரல் ( *சுவாதிஸ்டானம்* )
528 (6) - சோலார் பிளெக்ஸஸ் ( *மணிபூரகம்* )
639 (9) - இதயம் ( *அநாகதம்* )
741 (3) - தொண்டை ( *விசுத்தி* )
852 (6) - மூன்றாவது கண் ( *ஆக்ஞை* )
963 (9) - கிரீடம் ( *சகஸ்ராரம்* )

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள விரும்பினால் ஆற்றல், அதிர்வு மற்றும் அதிர்வெண் பற்றி சிந்திக்க வேண்டும்

மேலும் பிரபஞ்சத்தின் திறவுகோல்கள் 3,6 மற்றும் 9 என்று டெஸ்லா கூறியுள்ளார்

எல்லாம் இணைக்கப்பட்டுள்ளது.
(3 முக்கண்/ நெ ற்றிக்கண்- சிவனின் ஒளி வெளிபாடு.
6 ஆறுமுகன் தோற்றம்
9 சக்தி / வேல்)

"மூன்று, ஆறு மற்றும் ஒன்பது (369) ஆகியவற்றின் மகத்துவத்தை நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் பிரபஞ்சத்திற்கு ஒரு திறவுகோலை வைத்திருப்பீர்கள்." ~ *நிகோலா* *டெஸ்லா* .

🌑 Roasted Black Oil – Ancient Trick to Tackle Greys!Tired of spotting grey strands? Here’s a time-tested natural remedy ...
22/05/2025

🌑 Roasted Black Oil – Ancient Trick to Tackle Greys!

Tired of spotting grey strands? Here’s a time-tested natural remedy to help darken hair gradually—no chemicals needed!

🧪 Ingredients:

1/2 cup coconut or castor oil
1 tbsp black sesame seeds
1 tbsp kalonji (black cumin)
1 tsp clove powder
1 sliced onion

🔥 How to Make:

Heat the oil in a pan.
Add all ingredients.
Roast on low flame until everything turns deep brown (but not burnt).
Cool the mixture, strain, and store in a clean glass jar.

💆‍♀️ How to Use:

Gently massage onto the scalp 2–3 times a week.
Leave overnight or for at least 1 hour before washing off.

⚠️ Tips & Safety:

Always do a patch test before full application.
Avoid using on irritated or wounded scalp.
Stay consistent—visible results appear in 4–6 weeks!

This simple, powerful blend taps into ancient wisdom for naturally vibrant hair. 🌿



Address

RISHI , 2, Paraparan Street, Murugankurichi
Tirunelveli
627002

Website

https://www.facebook.com/multidimensionalspiritualgrowths/about

Alerts

Be the first to know and let us send you an email when Rishi Training Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rishi Training Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram