நலமுடன் வாழ்வோம் Nalamutan Valvom

நலமுடன் வாழ்வோம்  Nalamutan Valvom தமிழர்களின் பல்வேறு வகையான உணவு செய் உணவே மருந்து-மருந்தே உணவு
(291)

டாக்டர் Prema Gopalakrishnan அவர்களின் பதிவு நன்றியும் வணக்கமும் டாக்டரம்மாவுக்கு.உங்க டூத்பேஸ்ட்டுல உப்பு இருக்கா?எங்க ...
21/06/2023

டாக்டர் Prema Gopalakrishnan அவர்களின் பதிவு நன்றியும் வணக்கமும் டாக்டரம்மாவுக்கு.

உங்க டூத்பேஸ்ட்டுல உப்பு இருக்கா?
எங்க டூத்பேஸ்ட்டே உப்புதான்!

மரு. கோ. பிரேமா BHMS,

ஒரு சிட்டிகை இந்துப்பு, ஒரு சிட்டிகை தூய மஞ்சள் தூள்... இரண்டையும் எடுத்து...

இது ஏதோ சமையல் குறிப்பு என்று எண்ணிவிட வேண்டாம்.
இது பல்துலக்க மிகச்சிறந்த, எளிதாக நாமே நம் அடுப்பங்கரையில் இருந்து செய்து கொள்ளும் பல்பொடி.

இந்துப்பு கிடைக்கவில்லை எனில் கடல் உப்பை நுணுக்கி வைத்து கொள்ளலாம்.
மற்றபடி பாக்கெட் தூள் உப்போ ஐயோடின் உப்போ உபயோகிக்க கூடாது.
தூய மஞ்சள். இயற்கை வழி இராசயனங்கள் இல்லாத மஞ்சள்தூள் கிடைத்தால் சாலச் சிறந்தது.
கிடைக்காதவர்கள் இருக்கிற மஞ்சள்தூளை உபயோகித்து கொள்ளலாம்.

தேவைப்படுபவர் இதை கடைகளில் கிடைக்கும் மென்மையான பல்குச்சியிலேயே உபயோகப்படுத்தலாம்.

இதிலென்ன அப்படி விசேசம், பார்ப்போமா?

உப்பு மஞ்சள் இரண்டுமே சிறந்த இயற்கை கிருமிநாசினி.

உப்பு பற்களை அதன் இயற்கை நிறத்தில் பளிச்சென்று வைத்திருக்க உதவும்.

உப்பு நாவில் பட்டவுடன் உமிழ்நீரை சுரக்கவைக்கும்.
உமிழ்நீர் இயற்கையின் ஆகச்சிறந்த சுரப்பு ஆகும். இதுவும் வாய்,பல் சுத்தத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது கிடைத்து வரும் பெரும்பான்மையான டூத்பேஸ்ட்டுகளில் பல நஞ்சு நிறைந்துள்ளது. இந்த நஞ்சுகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறலாம்.

பாக்கெட் மஞ்சள்தூளும், சாதா கடல் உப்பும் தான் கிடைக்கிறது அல்லது இது மட்டுமே பொருளாதாரம் இடம் கொடுக்கும் என்றாலும் கூட இதுவும் இரசாயன நஞ்சு கலவை டூத்பேஸ்ட்டுக்கு மிகச்சிறந்த மாற்று தான்.

இதையே பேஸ்ட் போல வேண்டும் என்று விரும்புவர்கள் கொஞ்சம் தூய தேங்காய் எண்ணெய் அவ்வப்போது சேர்த்து கொளப்பி உபயோகப்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெயில் மறுபடியும் பல நல்ல பல் வாய் சுத்தத்திற்கான பண்பு உள்ளது.

எண்ணை கொப்பளிக்க நல்லெண்ணெய் விட தேங்காய் எண்ணெய் இன்னும் சிறந்தது.

இதில் சேர்க்கும் அனைத்தும் உணவுப்பொருள் ஆனதால் சிறு குழந்தைகள் முழுங்கினாலும் பயப்படவேண்டியதில்லை.

சிலருக்கு டூத்பேஸ்ட் உபயோகித்தால் குமட்டல் வரும். இதில் வராது.

பல் சொத்தை, ஈர்களில் இரத்த கசிவு, வாய்ப்புண் வருபவர்களுக்கு இந்த இயற்கை எளிய பல்பொடியே மருந்தாகவும் ஆகும்.

பல்சொத்தை வலி திடீரென்றுதான் வரும். வலி அதிகமாகவும் இருக்கும். பல நேரங்களில் இரவு தான் இந்த வலி வரும்.
இதற்கு இதே மஞ்சள்,உப்பு, தேங்காய் எண்ணெய் பேஸ்ட்டை சிறுது எடுத்து சொத்தை பல்லில் பூசி அடைத்து விடுங்கள். 10 -15 நிமிடம் அப்படியே எச்சில் முழுங்காமல் வாய்மூடி அமைதியாக இருக்கவும். பின் அந்த அடைத்த பேஸ்ட்டை துப்பிவிட்டு நன்கு தண்ணீரால் வாய் கொப்பளிக்கவும். உடனடி வலி நிவாரணி. அதோடு சொத்தையும் படிப்படியாக மறையும்.

கிராம்பு நரம்பை மறக்கடித்து வலியை தெரியாமல் பார்த்துகொள்ளும். அவ்வளவு தான். அதனால் கிராம்பை விட கிருமிகளை கொண்று வளரவிடாமல் செய்யும் மஞ்சளே சிறந்தது . எளிய பொருளும் கூட.

பல் சொத்தை மற்றும் வாய்ப்புண் தொந்திரவு அதிகம் இருப்பவர்கள்,
தொடர்ச்சியாக தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளித்து வந்தால் மேலும் நல்ல பலன் கிடைக்கும்.

இருந்தாலும் இந்த தொந்திரவுகளுக்கு என்ன காரணம் என்பதை அறிந்து அதை நீக்க வேண்டும்.

பல் அடைத்தவர்கள் அதை களட்டிவிடுவதே நல்லது. அடைப்பு பல்லை இயற்கையாக சரிசெய்து கொள்ள விடாமல் தடுத்து கொண்டிருக்கும்.
முக்கியமாக மெர்குறி அடைப்பு(சில ஆண்டுகளுக்கு முன் இது தான் பரவலாக உபயோகப்படுத்தப் பட்டது) செய்திருப்பவர்கள் பல் மருத்துவரிடம் சென்று கவணமாக அதை நீக்கிவிடவும். செராமிக் கலவை பரவாயில்லை. இது சுட்ட மண் வகை. அவ்வளவாக வினை புரியாது. ஆனாலும் களட்டிவிட்டால் சிறப்பு தான்.

ரூட்கெனால் வேண்டவே வேண்டாம். ஏற்கனவே செய்தவர்கள் மருத்துவரிடம் சென்று அதையும் மாற்றிவிடுங்கள்.

குறிப்பு: விடாத பல பல் தொந்திரவுகள் இருப்பவர்கள். ஓமியோபதியில் இதற்கு நல்ல பல தீர்வு உண்டு. ஆனால் 'நல்ல ஓமியோபதி' மருத்துவரை கண்டுபிடித்து அனுகவும்.

இப்படி பல பல் வாய் அதன் மூலம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தீர்வாகும் இந்த எளிய பல்பொடி.

இந்த எளிய பல்பொடி பதிவு இன்னமும் பேஸ்ட் உபயோகப்படுத்தும் சாமானியர்களுக்காக.
ஏற்கனவே பல நல்ல வழிகள் அறிந்தவர்கள் உங்களுக்கு பலன் அளிக்கும் வழிகளிலேயே தொடரலாம்.

அப்புறம் என்ன?

நாளையில் இருந்தே நீங்களே உங்கள் பல்பொடியை செய்து உபயோகப்படுத்தி பாருங்கள்.

நாங்க மாறிட்டோம்! நீங்க ? 😀😀

கருப்பட்டியின் பயன்கள்:உணவே மருந்து -- | Read | Like | Share |1. சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்ப...
29/04/2023

கருப்பட்டியின் பயன்கள்:

உணவே மருந்து -- | Read | Like | Share |

1. சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

2. ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.

3. குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால்
வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

4. ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு.

5. காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளி-களும்
கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

6. சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன்,
அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.

7. கருப்பட்டி பணியாரம் குழந்தைகளுக்கு ஏற்றது.

❤ #பெண்களின்_தோழி………💚 #பாதாம்_பிசின்…❗❗❓❓❓🔰 பாதாம் பிசின் என்றால், அது ஜிகிர்தண்டாவில் போடப்படுவது என்றுதான் இன்றைய தலைம...
28/03/2023

❤ #பெண்களின்_தோழி………

💚 #பாதாம்_பிசின்…❗❗❓❓❓

🔰 பாதாம் பிசின் என்றால், அது ஜிகிர்தண்டாவில் போடப்படுவது என்றுதான் இன்றைய தலைமுறைக்குத் தெரியும். அதனுடைய ஆரோக்கியப் பலன்கள் பற்றியெல்லாம் தெரியாது. ஆனால், பாதாம் பிசின், இயற்கை கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து.

☀ வெயில் காலத்தில் நமக்கு வருகிற முதல் பிரச்னை உடல் உஷ்ணம். பாதாம் பிசின் உடல் உஷ்ணத்தைத் தணிப்பதில் செலவுக் குறைவான இயற்கைத் தீர்வு. தவிர, உஷ்ணத்தால் உண்டாகும் சோர்வையும் நீக்கும்.

வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு எனப் பித்தம் சார்ந்த நோய்களையும் இந்தப் பிசின் போக்கும்.

உடலில் ஏதாவது நோய்த்தொற்று இருந்தால், அதற்குக் காரணமான கிருமியை வெளியேற்றி விடும்.

💊வெயில் காலத்தில் பல பெண்களும் சந்திக்கிற ஒரு பிரச்னை வெள்ளைப்படுதல். தினமும் ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை சாப்பிட்டு வர, இந்தப் பிரச்னை சத்தமில்லாமல் சரியாகும்.

💊கருப்பையில் லேசான புண் இருந்தாலும், மெல்ல மெல்ல அதை ஆற வைத்து விடும் தன்மை கொண்டது பாதாம் பிசின்.

காரம் அதிகமான, மசாலாக்கள் தூக்கலாகச் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுபவர்களுக்கு வாயுக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் ஏற்படும். இந்த மூன்றையும் பாதாம் பிசின் சரியாக்கும்.

சிலர் வேலைக் காரணமாக எப்போதும் தாமதமாகவே சாப்பிடுவார்கள். இவர்களுக்கு நெஞ்சரிச்சல் வரும். பழக்கமில்லாமல் திடீரென காரமான உணவுகளைச் சாப்பிட்டால் வயிறு எரிய ஆரம்பிக்கும். இப்படிப்பட்டவர்கள் ஊற வைத்த பாதாம் பிசினைப் பாலுடன் கலந்து குடிக்கலாம். பால் பிடிக்காதவர்கள் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

கர்ப்பிணிகளுக்கு பொதுவாகவே மலச்சிக்கல் அதிகமாக இருக்கும். கோடைக்காலத்தில் மாதமாக இருக்கிறார்களென்றால் இந்தப் பிரச்னை இன்னும் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட கர்ப்பிணிகளுக்கும் பாதாம் பிசினை ஊற வைத்துக் கொடுக்கலாம்.

சில பெண்கள் என்ன சாப்பிட்டாலும் உடல் மெலிவாகவே இருப்பார்கள். அவர்களுக்குப் பாதாம் பிசினை ஊறவைத்து பாலுடன் கலந்து தரலாம். நன்கு புஷ்டியாவார்கள்.

வெயில் காலம் வந்தாலே பெண்களுக்கு யூரினரி இன்ஃபெக்‌ஷனும் வந்து விடும். அடிக்கடி சிறுநீர் வரும், அதுவும் கடுப்புடன் சொட்டு சொட்டாகத்தான் போகும். இந்தப் பிரச்னையையும் பாதாம் பிசின் சரி செய்யும்.

சிறுநீரகத்தில் வருகிற கற்கள், சிறுநீர்ப் பாதையில் வளர்கிற சதை இரண்டையும் இந்தப் பிசின் கரைக்கும். அதனால்தான், சித்த மருத்துவம், பாதாம் பிசினை கல்லடைப்பு ,சதையடைப்புப் போக்கும் என்று புகழ்கிறது.

🇨🇭 #பாதாம்_பிசினை_எப்படிச் #சாப்பிடுவது…❓❓❓

நீங்கள் தினமும் பாதாம் பிசினை சாப்பிடப் போகிறீர்கள் என்றால், 5 கிராம் அளவுக்குப் பாதாம் பிசினை எடுத்து தூசியில்லாமல் சுத்தப்படுத்தி, இரவே தண்ணீரில் ஊற வைத்துவிடுங்கள். காலையில் அதை அப்படியே சாப்பிடலாம். தண்ணீரில் அல்லது பாலில் கலந்து சாப்பிடலாம். பழச்சாறுகளுடன் கலந்து சாப்பிடலாம். நன்னாரி சர்பத்தில், இளநீரில் போட்டும் குடிக்கலாம்.

பாயசம் போல செய்தோ அல்லது ஊற வைத்து தேங்காய்த்துருவல், ஏலக்காய்ப்பொடி தூவி சாப்பிடப் போகிறீர்களென்றால் நிறையச் சாப்பிட்டு விடுவீர்கள். அதனால், இந்த முறையில் சாப்பிடுபவர்கள் வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் சாப்பிடுங்கள்.

இது சுலபமாக ஜீரணிக்கக்கூடியது என்பதால், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள்கூட சாப்பிடலாம். எந்தப் பக்க விளைவுகளும் வராது.

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when நலமுடன் வாழ்வோம் Nalamutan Valvom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share