Sri Dhanvanthri Ayurveda

Sri Dhanvanthri Ayurveda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Dhanvanthri Ayurveda, Tirunelveli.

ஆத்ம வைத்திய குருவின் மூன்றாம் ஆண்டு ஜீவ சமாதி நினைவு தினம் 05.02.25 ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை.கேடிசி நகர். த...
04/02/2025

ஆத்ம வைத்திய குருவின் மூன்றாம் ஆண்டு ஜீவ சமாதி நினைவு தினம் 05.02.25 ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை.கேடிசி நகர். திருநெல்வேலி

13/12/2024

மாவிலங்கப்பட்டை மற்றும் இருபதுவகை மூலிகை அடங்கிய மாவிலங்கம் சூரணம் கிடைக்கும் 9003777757 8883777757 இந்தியாவினைச் சார்ந்த இலையுதிர் மரம் மாவிலங்கமாகும். இது ஆற்றங்கரை ஓரங்களில் அதிகமாக காணப்படும். இந்த மரத்தின் இலைகள் மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலையாகும். மாவிலங்கத்தின் இலைகளும், பட்டையும் மருத்துவ பயன் கொண்டவை.

கி.மு 8-ம் நூற்றாண்டிலேயே ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் மாவிலங்கத்தின் மருத்துவ பயன்பாடு பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கி.பி 1100-ம் ஆண்டு முதல் சிறுநீரகக் கல் போக்க இந்திய மருத்துவத்தில் முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

இத்தாவரத்தில் சபோனின்கள், பிளேவனாய்டுகள், தாவரஸ்டீரால்கள் மற்றும் குளுக்கோசிலினேட்டுகள் காணப்படுகின்றன. இவற்றுள் வருனால், ரூட்டின், சிட்டோஸ்டிரால், பெட்டுலினிக் அமிலம், குளுக்கோகப்பாரின், கெடா பிசைன் போன்றவை காணப்படுகின்றன.

அலர்ஜிக்கு மருந்து

மாவிலங்கப் பட்டை ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, மற்றும் தோல் வியாதிகளை குணப்படுத்தும். மேலும் காய்ச்சல் வயிற்று எரிச்சல், வாந்தி ஆகியவற்றினையும் போக்கும். மூட்டுக்களின் வீக்கம் மற்றும் புண் போக்க பசுமை இலைகள் உதவுகின்றன. கசக்கிய இலைகளை வினிகர் சேர்த்து பயன்படுத்துவர்.

முகவாதத்தை குணமாக்கும்

குளிர்காலத்தில் பனிக்காற்று தாக்குவதினால் ஏராளமானோர் முகவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மாவிலங்கம் அருமருந்தாகும். மாவிலங்கு மரப்பட்டை, மூக்கிரட்டைப் பட்டை வேர், வெள்ளைச் சாரணை வேர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு இடித்து முதல் நாள் இரவில் 250 மில்லி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அதை கொதிக்க வைக்க வேண்டும். 50 மில்லி அளவு வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து வடிகட்ட வேண்டும். இதனுடன் 60மில்லி கிராம் 'நண்டுகல் பஷ்பம்' சேர்க்க வேண்டும்.

தினமும் பல் துலக்கியதும், இதை அருந்தி வர இரண்டு, மூன்று மாதங்களில் நிரந்தர குணம் ஏற்படும்.

சர்க்கரை நோயாளிகளை துன்புறுத்தும் பிரச்சினை 'தோள்பட்டை உறைவு'. இந்த நோய்க்கான காரணம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தப் பிரச்சினையையும் மாவிலங்கம், மூக்கிரட்டை, வெள்ளைச் சாரணை வேர், நண்டுகல் பஷ்பம் மூலம் இரண்டு மாதங்களில் குணப்படுத்த முடியும்.

சிறுநீரக கற்களை வெளியேற்றும்

சிறுநீரகக் கற்களை நீக்க மேலை நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சிறுநீருடனேயே கல் வெளிவருவது போன்று உதவுகிறது. இன்றைய நவீன ஆய்வுகள் இதனை நிரூபித்துள்ளன. சிறுநீர்ப்பையில் வீக்கம், சிறுநீர்க்குழாய் அடைப்பு மற்றும் இனபெருக்க உறுப்புடனான சுரப்பியில் அதிக வளர்ச்சியினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளை குணப்படுத்துகிறது.

பாரம்பரியமாக கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட தாவர மருந்தின் அதே பயன்பாடு அதே நோய்களுக்கு ஏற்றது என்று நிறுவப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு மாவிலங்கம்

Sree danvanthri ayurveda vaithiyasalai Ktc Nagar tirunelveli 9003777757

10/11/2024

🌿 ரூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் நோயாளிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை - ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனை, கே.டி.சி நகர், திருநெல்வேலி 🌿

ரூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் என்பது உங்கள் வாழ்வை மிகவும் பாதிக்கக்கூடிய ஒரு நிலை. ஆனால், சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் உங்கள் நிலையை மேம்படுத்திக்கொள்ளலாம்.

செய்ய வேண்டியவை

நேரம் தவறாமல் உடற்பயிற்சி செய்யவும் - மிதமான நீச்சல், யோகா, மற்றும் நடனம் போன்ற மெதுவான உடற்பயிற்சிகள் மூட்டுகளை நெகிழ்வாக்கி வலியை குறைக்க உதவும்

ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்தவும் - குத்தவலியை குறைக்க ஆயுர்வேத மூலிகைகள் மற்றும் எண்ணெய்களைப் பயன்படுத்தவும். ஆசிரியரின் ஆலோசனை பெற்று மட்டுமே பயன்படுத்தவும்

சூடான குளியல் - வெந்நீர் குளியல் அல்லது வெப்ப ஒத்தடம் மூலம் வலி மற்றும் வீக்கம் குறையும்

தரமான உணவுகள் - அவகோடா, தக்காளி, மற்றும் பசலைக் கீரை போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடவும்

நீண்ட நேரம் ஓய்வு எடுக்கவும் - உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வை வழங்குவது மிக முக்கியம்

செய்யக்கூடாதவை

அதிக வேலைச்சுமை - ஒரு நேரத்தில் பல செயல்களை செய்ய வேண்டாம். இது உங்கள் மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்

குளிர்ந்த அல்லது ஈரமான சூழல் - குளிர்ந்த மற்றும் ஈரமான இடங்களில் அதிக நேரம் செலவிட வேண்டாம். இது வலியை மேலும் அதிகரிக்கக் கூடும்

தீவிர உடற்பயிற்சி - கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும். இதனால் உங்கள் மூட்டுகள் அதிகம் பாதிக்கப்படும்

ஆரோக்கியமில்லாத உணவுகள் - அதிகப்படியான சர்க்கரை, பருப்பு, மற்றும் எண்ணெய் பொருள்கள் சாப்பிடக் கூடாது. இது வீக்கம் மற்றும் வலியை அதிகரிக்கலாம்

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகள் - உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்

நமது ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத மருத்துவமனையில், நிபுணர் டாக்டர்கள் உங்கள் ருமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் நிலையை மேம்படுத்துவதற்கு பயனுள்ள சிகிச்சை திட்டங்களை வழங்குகின்றனர்

இருப்பிடம் கே.டி.சி நகர், திருநெல்வேலி
தொடர்பு எண் : 9003 7777 57
வலைத்தளம் sridhanvanthriayurveda.com

#ரூமடாய்ட்_ஆர்த்ரைட்டிஸ் #ஆயுர்வேதம் #ஸ்ரீதன்வந்திரிஆயுர்வேதம் #செய்யவேண்டியவை_செய்யக்கூடாதவை #திருநெல்வேலி #ஆயுர்வேதசிகிச்சை #மூட்டுவலி

25/10/2024

ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற இரசாயனம் இல்லாத இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது. சருமத்தை முறையாக பராமரிப்பது நம்மை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. சில அழகு குறிப்புகள் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம் ஆயுர்வேத சிறந்த மூலிகைகள் பூக்கள் மற்றும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வேர்களை கொண்டு தயாரிக்கப்படும் மிகச் சிறந்த ஆயுர்வேத மருந்துகளை கொண்டு உங்கள் சர்ம ஆரோக்கியத்தை பராமரிக்கலாம் மேலும் சிலருக்கு சருமத்தில் உண்டாகும் அலர்ஜி சருமம் கருத்து போகுதல் முகத்தில் உடலில் புள்ளி புள்ளியாக தோன்றுதல் எக்ஸிமா சொரியாசிஸ் போன்ற பல்வேறு அலர்ஜிகள் உடலில் உண்டாகின்றன இவைகளை சிறந்த முறையில் நீக்கி உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்திட மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தான சரும சஞ்சீவி என்னும் மருந்து கிடைக்கின்றது இதை அதிகாலை உணவுக்கு முன்பாக 10 மில்லி மருந்து 60 மில்லி தண்ணீர் கலந்து காலை வேலை பருகிவர உடலில் உள்ள கழிவுகள் நீங்கி சருமத்திற்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கின்றது இதனால் உங்கள் சருமம் முன்பு எப்படி ஜொலித்ததோ அதேபோன்று மாறும் மேலும் முகப்பரு பொடுகு கண்களுக்கு கீழே கருவளையம் கழுத்து பகுதிகள் கருத்து போகுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு அளிக்கின்றது இதனுடன் சேர்த்து நர்மதா ஆயுர்வேத குளியல் சோப் பயன்படுத்தி வரும் போது மிகச் சிறந்த பலன் சில நாட்களிலே கிடைக்கின்றது மேலும் சரும அலர்ஜி உள்ளவர்கள் தங்களது உணவிலும் கவனம் செலுத்த வேண்டும் அதிக எண்ணெய் மயம் கொண்ட பொருட்கள் அதிகமான மசாலா வகை காரம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது மேலும் உங்களது உணவில் காய்கறிகள் பழங்கள் மற்றும் சிறந்த தானிய வகைகள் சேர்த்துக் கொள்வது மிகுந்த சிறப்பான ஆரோக்கியத்தை அளிக்கும் அதிகாலை வேலை எழுந்தவுடன் காலை கடன்களை முடித்துவிட்டு தண்ணீர் பருகுவது பின்பு ஐந்து நிமிடம் அமைதியாக அமர்ந்து மூச்சுப் பயிற்சி செய்வது போன்றவை மேலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கும் எனவே ஆரோக்கியமான சருமம் பெறுவதற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் மிக அவசியம் உங்களது சர்ம ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சரும சஞ்சீவி என்னும் மருந்தை பெறுவதற்கு தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை. தண்டுவட வலி மற்றும் மூட்டு வலி சிறப்பு சிகிச்சை வைத்தியசாலை கே டி சி நகர் நர்மதா காம்ப்ளக்ஸ் தூத்துக்குடி மெயின் ரோடு திருநெல்வேலி 9003 7 777 57..8012777757.8883777757

முதுகு வலி என்றால் என்ன?.. ...முதுகுவலி என்பது கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் பொதுவான உடல்நலக் கோளாறுகளில் ஒன்றாகும்....
25/07/2024

முதுகு வலி என்றால் என்ன?.. ...முதுகுவலி என்பது கிட்டத்தட்ட அனைவரையும் பாதிக்கும் பொதுவான உடல்நலக் கோளாறுகளில் ஒன்றாகும். முதுகுவலி மருத்துவரிடம் செல்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நமது இடுப்பு முதுகெலும்பு, எலும்புகள், மூட்டுகள், நரம்புகள், தசைநார்கள் மற்றும் தசைகள் ஆகியவை ஒன்றிணைந்து முழு உடலுக்கும் ஆதரவை வழங்குவதற்காக நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சட்டமாகும். எலும்புகள் மற்றும் தசைநார்கள் இதே சிக்கலான அமைப்பு இடுப்பு அல்லது முதுகு வலியை விளைவிக்கிறது. முதுகுவலிக்கான ஆயுர்வேத சிகிச்சையானது இந்த நோய்க்கு திறம்பட சிகிச்சையளிப்பதற்கு சிறந்த மருந்துகள் மற்றும் மூலிகை தைலங்களை இந்த சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றது மேலும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளையும் சிறந்த உடற்பயிற்சிகளையும் நல்ல உணவு பழக்க வழக்கங்களையும் வழங்குகின்றது ..முதுகு வலிக்கு ஆயுர்வேதத்தை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
ஆயுர்வேதம் முதுகுவலிக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வழியாகும், ஏனெனில் வழங்கப்படும் சிகிச்சைகள் இயற்கையானவை மற்றும் ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்துகின்றன, அவை சிறிதும் பக்கவிளைவுகளும் இல்லை. கூடுதலாக, ஆயுர்வேதம் முதுகுவலியிலிருந்து விரைவான மற்றும் நீண்ட கால நிவாரணம் பெற உதவும் உணவுப் பரிந்துரைகளையும் வழங்குகிறது. அதிக நேரம் அமர்ந்திருப்பவர்கள் அல்லது அதிக நேரம் பயணம் செய்பவர்கள் தூங்கும் பொழுது உயரமான தலையணை வைப்பவர்கள் அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி வாய்வு நிறைந்த உணவு பதார்த்தங்கள் அதிகமாக உண்பது மலச்சிக்கல் போன்ற காரணங்களும் முதுகுத்தண்டு பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் முதுகு தண்டுவட கழுத்து வலி உள்ளவர்கள் தங்களது பிரச்சனைகளுக்கு 25 ஆண்டு கால அனுபவம் நிறைந்த ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை கே டி சி நகர் பாளையங்கோட்டை திருநெல்வேலி தொடர்பு கொள்ளலாம் இங்கு சிறந்த முறையில் அனைத்து வகை பிரச்சனைகளுக்கும் குறிப்பாக முதுகு தண்டுவட பிரச்சினைகளுக்கும், மூட்டு வலி பிரச்சனைகளுக்கும், அல்சர் பிரச்சனைகள், சரும பிரச்சனை, மூல நோய் , குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத முறையில் சிறந்த நிவாரணம் வழங்கப்படுகிறது சிறந்த உணவு பழக்க வழக்கங்களையும் உங்களுக்கு வழங்கி வாழ்வின் ஆரோக்கியம் அதிகரிக்க வழி வகுக்கின்றது நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள் எத்தனை செல்வம் இருப்பினும் ஆரோக்கியமே முதல் செல்வம் என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ளவர்களுக்கு உங்களால் இயன்றவரை ஆரோக்கியத்தை பரிசாக பரிந்துரையுங்கள் நல்ல உணவுகளை பழக்கப்படுத்துங்கள் உங்கள் தலைமுறையினர் நோயற்ற ஆரோக்கியமான தலைமுறையாக வாழ வழிவகை செய்யுங்கள் அன்புடன் மருத்துவர் ராஜ்கபூர் ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை கே டி சி நகர் பாளையங்கோட்டை திருநெல்வேலி.9003777757..8883777757.8012777757.8675777757

சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவது இயல்பு. அந்தப் பாதிப்புகளுக்கு ‘டயபடிக் நியூரோபதி...
23/07/2024

சர்க்கரை நோய் கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு நரம்புகள் பாதிக்கப்படுவது இயல்பு. அந்தப் பாதிப்புகளுக்கு ‘டயபடிக் நியூரோபதி’ (Diabetic neuropathy) என்று பெயர். அந்தப் பாதிப்பு ஏன் வருகிறது? எப்படி வருகிறது? என்ன தீர்வு?...ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தாததுதான் இதற்கு முக்கியக் காரணம். ரத்தச் சர்க்கரை அதிகமாகும்போது அது ‘சார்பிட்டால்’ எனும் வேதிப்பொருளாக மாறி நரம்புகளில் ஒட்டிக்கொள்ளும். அது இலையைத் தின்னும் பூச்சிபோல நரம்பிழைகளைத் தின்னும். இதனால் நரம்புகளின் தகவல் பரிமாற்றம் தடைப்படும். மேலும், இவர்களுக்கு நுண்ணிய ரத்தக்குழாய்களும் பாதிக்கப்படுவதால், நரம்பு முனை களுக்குப் போதிய ஊட்டச்சத்தும் ஆக்ஸிஜனும் கிடைக்காது. இது அந்தப் பாதிப்பை அதிகப்படுத்தும்...அடுத்து, சர்க்கரை நோய் காரண மாகச் சிறுநீரகமும் பாதிக்கப்படுவதால், ரத்தத்தில் சில நச்சுக்கள் சேரும். அவை நரம்புச் சுவர்களைச் சிதைக்கும். இவர்களுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகும். புகையில் உள்ள நச்சுக்கள் ரத்தக்குழாய்களைச் சுருக்கிவிடுவதால், உறுப்புகளுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் குறைந்துவிடுவதுதான் காரணம்.....யாருக்கு இந்தப் பாதிப்பு அதிகம்?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எவருக்கும் இது வரலாம். என்றாலும், எப்போதும் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருப்பவர்களுக்கு இது வேகமாக வந்துவிடும். உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன், ரத்த மிகு கொலஸ்டிரால், புகை/மதுப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இதற்கான சாத்தியம் அதிகம்....நரம்பு பாதிப்புகள் எல்லாமே ஒரே வகைதானா? வெவ்வேறா?

நரம்பு பாதிப்புகளில் புற நரம்பு பாதிப்பு, தானியங்கு நரம்பு பாதிப்பு, அண்மை நரம்பு பாதிப்பு, குவிய நரம்பு பாதிப்பு எனப் பல வகை உண்டு. ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இவற்றில் அதிகம் காணப்படுவது, ‘புற நரம்பு பாதிப்பு’ (Peripheral neuropathy). இதில் கை, கால், பாத நரம்புகள் பிரதானமாகப் பாதிக்கப்படும். இந்தப் பாதிப்பு இருப்பவர்களுக்குக் கை, கால் மரத்துப்போகும்; எரிச்சல் ஏற்படும்; ஊசி குத்தும் வலி உண்டாகும்; இந்தத் தொல்லைகள் இரவில் அதிகமாக இருக்கும்; சிலருக்குத் தொடு உணர்வு அதிகரிக்கும்; பாதங்களில் போர்வை பட்டால்கூடச் சுமையாகத் தோன்றும்; நடந்தால் மெத்தைமேல் நடப்பது போலிருக்கும்; பலருக்குச் செருப்பு கழன்று போவதுகூடத் தெரியாது. அந்த அளவுக்கு உணர்வு குறைந்து போகும்; பாதங்களில் கூர்மையான பொருட்கள் குத்தினாலும் தெரியாது என்பதால் அடிக்கடி பாதங்களில் தொற்றும் புண்களும் உண்டாகும்...சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதய நரம்புகளும் பாதிக்கப்படும் என்று சொல்கிறார்கள். அது உண்மையா?
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள்பட்ட தொடர்ந்து ஆங்கில மருந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டாகும் நரம்பு பிரச்சனைகளுக்கு ஸ்ரீ தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை தயாரித்து வழங்கும் 36 மூலிகைகள் மற்றும் 9 தானியங்கள் அடங்கிய ஆரோக்கிய சஞ்சீவி என்னும் பொடி கிடைக்கின்றது இது எல்லா வயதினருக்கும் ஏற்றது காலை மாலை 100 மில்லி பாலில் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயால் உண்டாகும் பலகீனங்கள் போக்கி ரத்த விருத்தியை அபிவிருத்தி செய்து கண் பார்வை தெளிவு இதய தசைகள் பலம். சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பை பலமடைதல், சர்க்கரை நோயினால் ஆண்களுக்கு உண்டாகும் ஆண்மை குறைவு நரம்பு பலகினம் பெண்களுக்கு உண்டாகும் உடல் உறுப்பு உலர்ந்து போதல் உதடு காய்கள் மற்றும் தலை சுற்று போன்றவை நீங்கி ஆரோக்கியமான உடல் பலத்தை தருகின்றது மருந்து தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி ஸ்ரீ தன்வந்திரி தண்டுவட மூட்டு வலி சிறப்பு சிகிச்சை வைத்திய சாலை கே டிசி நகர் பாளையங்கோட்டை திருநெல்வேலி 9003777757.8883777757.8012777757.
உண்மைதான். இது தானியங்கி நரம்புகள் பாதிக்கப்படுவதால் (Autonomic neuropathy) ஏற்படும் விளைவு. இதயம் மட்டுமல்ல, நுரையீரல், கண், சிறுநீரகம், வாய், உணவுக்குழாய், இரைப்பை, குடல், பாலின உறுப்புகள் ஆகியவற்றையும் தானியங்கி நரம்புகளே கட்டுப்படுத்துகின்றன. ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறினால் இந்த உறுப்புகள் பாதிக்கப்படுவதுண்டு. உதாரணமாக, இதய நரம்புகள் பாதிக்கப்பட்டால் இதயம் ஒழுங்கற்றுத் துடிக்கும். படபடப்பு வரும். ரத்த அழுத்தம் குறையும். உட்கார்ந்து எழுந்திருக்கும்போது தலைசுற்றும்.இதற்கு என்ன தீர்வு? இதைத் தடுப்பதற்கு வழி உண்டா?

ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுதான் இதற்கான தீர்வு. இன்சுலின் சிகிச்சை, ஆரோக்கியமான உணவு முறை, தேவையான உடற்பயிற்சி மூலம் இது சாத்தியமாகும். உடல் எடையைச் சரியாகப் பேணுவதும் பாதப் பராமரிப்பும் பொருத்தமான காலணிகள் அணிவதும் முக்கியம். ரத்த அழுத்தம், ரத்த கொலஸ்டிரால் அளவுகளைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

மது, புகைப் பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ‘பயோதிசியோமெட்ரி' (Biothesiometry) என்னும் பாதப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட வழிகளில் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் முடியும். பொதுவாக, நரம்புப் பிரச்சினைகளைத் தொடக்கத்தி லேயே கவனித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். தாமதமானால் சிரமமாகிவிடும்.

20/07/2024

Available in best ayurveda skin care soap

Address

Tirunelveli

Opening Hours

Monday 7am - 5pm
Tuesday 7am - 10pm
Wednesday 7am - 10pm
Thursday 7am - 10pm
Friday 7am - 10pm
Saturday 7am - 10pm
Sunday 7am - 10pm

Telephone

+919003777757

Alerts

Be the first to know and let us send you an email when Sri Dhanvanthri Ayurveda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sri Dhanvanthri Ayurveda:

Share