Sesha Eye Care Clinic,Tiruvannamalai

Sesha Eye Care Clinic,Tiruvannamalai இன்றைய மொபைல் காலத்தில், கண்களை முக்?

Hi Sesha Wishes you Happy international Yoga day. Movement is medicine!
21/06/2025

Hi Sesha Wishes you Happy international Yoga day. Movement is medicine!

 -ul-Adha . We at sesha eye hospital wishes you on the day of honouring supreme scarifice
07/06/2025

-ul-Adha . We at sesha eye hospital wishes you on the day of honouring supreme scarifice

Take a moment to check your food is safe!
07/06/2025

Take a moment to check your food is safe!

Location Update for 2025!
31/01/2025

Location Update for 2025!

இன்னும் ஐந்து , பத்து ஆண்டுகளில், எங்கள் பள்ளி தான் அகண்ட அறைகளைக் கொண்டது, இதனால் உங்கள் குழந்தைகளுக்கு முதல் பெஞ்சில் ...
18/09/2024

இன்னும் ஐந்து , பத்து ஆண்டுகளில், எங்கள் பள்ளி தான் அகண்ட அறைகளைக் கொண்டது, இதனால் உங்கள் குழந்தைகளுக்கு முதல் பெஞ்சில் அமர்ந்து படிக்கும் வாய்ப்பை வழங்குகிறோம். எனவே எங்கள் பள்ளியை தேர்ந்தெடுங்கள் என்று விளம்பரம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சாட்சாத் அந்த பரம்பொருளான மொபைல் போனின் கிருபையால், ஒரு வகுப்பில் 100 பிள்ளைகள் என்றால் 50 பிள்ளைகளுக்கு மூக்கு கண்ணாடி போட்டால்தான் தூரத்தில் இருக்கும் கரும் பலகையின் எழுத்துக்கள் தெரியக் கூடும். இதற்கு கணித பாடத்திற்கு, உடற்பயிற்சி பாடக் காலத்தை கடன் வாங்கும் பள்ளிகளும் காரணமா கிறார்கள். ஏற்கனவே தாய்வான், சிங்கப்பூர், சைனா போன்ற நாடுகளில் மதிய உணவு இடைவேளையில் வகுப்பறைகளை பூட்டி வைப்பது உறுதியாக பின்பற்றப்படுகிறது. ஏனென்றால் சூரிய ஒளி நம் மீது பட்டால், கண்பார்வையை குறைக்கும், மைனஸ் பவர் குறையும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அதிகமாக 2 மணி நேரம், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் என்று வெயிலில் நிற்க தேவை இல்லை. சாதாரணமாக கூட்டு விளையாட்டு, தோட்ட பராமரிப்பு, ஓட்ட பந்தயம், ஷட்டில் காக், பூப்பந்து என்று ஏதாவது ஒரு மகிழ்ச்சி கொடுக்கும் செயலை செய்வதே போதுமான நன்மை கொடுக்கும். இதெல்லாம் ஏற்கனவே கிடைக்கும் கிராமப்புறங்களில் கூட, மயோபியா என்னும் மைனஸ் பவர் அதிகரித்து வருவது உள்ளபடியே சிகிச்சையின் தேவையையும் சேர்த்து வலியுறுத்துகிறது. ஒரு வருடத்திற்குள்,ஒரு பள்ளி மாணவருக்கு இருந்த -2.50 என்ற பவரில் இருந்து -3.25 என்று கிட்டத்தட்ட 1 பவர் கூடியிருந்தால் அவருக்கு குறைந்த அளவு அட்ரோபின் (low dose atropine) சொட்டு மருந்து, 1 சொட்டு ஒவ்வொரு இரவும் என்று இரண்டு வருடங்களாவது தொடர வேண்டும். இது 95% கண்பவர் அதிகரிப்பதை குறைப்பதாக ஏராளமாக நிரூபிக்கப்பட்டு இருந்தாலும். தற்போது நமது தமிழ்நாட்டில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையிலும் 150 குழந்தைகளுக்கு மருந்து கொடுத்ததில், 80 குழந்தைகளுக்கு தொடர்ந்து பெற்றோர்கள் கவனத்துடன் மருந்தை கொடுத்து வருகிறார்கள். Atropine என்பது புதிய மருந்தல்ல, ஏற்கனவே 3000 வருடங்களாக ஏதோ ஒரு வடிவத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் செலவு 40 நாட்களுக்கு , ரூபாய் 200 தொடுகிறது. ஆனாலும் இதில் விடுபட்ட சரி பாதியான 70 குழந்தைகளுக்கு, பெற்றோரின் பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களால் சிகிச்சை கிடைக்கவில்லை. மேலும் இந்த மருந்து ஐந்திலிருந்து பத்து வயதுக்குள்ளேயே மைனஸ் வருபவர்களுக்கும், - 3 என்ற அளவை விட பவர் ஏறிக்கொண்டே செல்பவர்களுக்கும் மிகுந்த 96% பயனளிப்பதாக அரவிந்த் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஐந்து , பத்து ஆண்டுகளில், எங்கள் பள்ளி தான் அகண்ட அறைகளைக் கொண்டது, இதனால் உங்கள் குழந்தைகளுக்கு முதல் பெஞ்சில் ...
18/09/2024

இன்னும் ஐந்து , பத்து ஆண்டுகளில், எங்கள் பள்ளி தான் அகண்ட அறைகளைக் கொண்டது, இதனால் உங்கள் குழந்தைகளுக்கு முதல் பெஞ்சில் அமர்ந்து படிக்கும் வாய்ப்பை வழங்குகிறோம். எனவே எங்கள் பள்ளியை தேர்ந்தெடுங்கள் என்று விளம்பரம் வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சாட்சாத் அந்த பரம்பொருளான மொபைல் போனின் கிருபையால், ஒரு வகுப்பில் 100 பிள்ளைகள் என்றால் 50 பிள்ளைகளுக்கு மூக்கு கண்ணாடி போட்டால்தான் தூரத்தில் இருக்கும் கரும் பலகையின் எழுத்துக்கள் தெரியக் கூடும். இதற்கு கணித பாடத்திற்கு, உடற்பயிற்சி பாடக் காலத்தை கடன் வாங்கும் பள்ளிகளும் காரணமா கிறார்கள். ஏற்கனவே தாய்வான், சிங்கப்பூர், சைனா போன்ற நாடுகளில் மதிய உணவு இடைவேளையில் வகுப்பறைகளை பூட்டி வைப்பது உறுதியாக பின்பற்றப்படுகிறது. ஏனென்றால் சூரிய ஒளி நம் மீது பட்டால், கண்பார்வையை குறைக்கும், மைனஸ் பவர் குறையும் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அதிகமாக 2 மணி நேரம், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் என்று வெயிலில் நிற்க தேவை இல்லை. சாதாரணமாக கூட்டு விளையாட்டு, தோட்ட பராமரிப்பு, ஓட்ட பந்தயம், ஷட்டில் காக், பூப்பந்து என்று ஏதாவது ஒரு மகிழ்ச்சி கொடுக்கும் செயலை செய்வதே போதுமான நன்மை கொடுக்கும். இதெல்லாம் ஏற்கனவே கிடைக்கும் கிராமப்புறங்களில் கூட, மயோபியா என்னும் மைனஸ் பவர் அதிகரித்து வருவது உள்ளபடியே சிகிச்சையின் தேவையையும் சேர்த்து வலியுறுத்துகிறது. ஒரு வருடத்திற்குள்,ஒரு பள்ளி மாணவருக்கு இருந்த -2.50 என்ற பவரில் இருந்து -3.25 என்று கிட்டத்தட்ட 1 பவர் கூடியிருந்தால் அவருக்கு குறைந்த அளவு அட்ரோபின் (low dose atropine) சொட்டு மருந்து, 1 சொட்டு ஒவ்வொரு இரவும் என்று இரண்டு வருடங்களாவது தொடர வேண்டும். இது 95% கண்பவர் அதிகரிப்பதை குறைப்பதாக ஏராளமாக நிரூபிக்கப்பட்டு இருந்தாலும். தற்போது நமது தமிழ்நாட்டில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையிலும் 150 குழந்தைகளுக்கு மருந்து கொடுத்ததில், 80 குழந்தைகளுக்கு தொடர்ந்து பெற்றோர்கள் கவனத்துடன் மருந்தை கொடுத்து வருகிறார்கள். Atropine என்பது புதிய மருந்தல்ல, ஏற்கனவே 3000 வருடங்களாக ஏதோ ஒரு வடிவத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் செலவு 40 நாட்களுக்கு , ரூபாய் 200 தொடுகிறது. ஆனாலும் இதில் விடுபட்ட சரி பாதியான 70 குழந்தைகளுக்கு, பெற்றோரின் பொருளாதாரம் உட்பட பல்வேறு காரணங்களால் சிகிச்சை கிடைக்கவில்லை. மேலும் இந்த மருந்து ஐந்திலிருந்து பத்து வயதுக்குள்ளேயே மைனஸ் வருபவர்களுக்கும், - 3 என்ற அளவை விட பவர் ஏறிக்கொண்டே செல்பவர்களுக்கும் மிகுந்த 96% பயனளிப்பதாக, மீண்டும் அரவிந்த் மருத்துவமனை மூலம் செய்யப்பட்ட இந்த ஆய்வுகள் உறுதி செய்கின்றன. MCL என்ற MYOPIA CONTROL LENSES பொருத்தப்பட்ட கண்ணாடிகளும் உதவிகரமாக இருக்கின்றன. இவை 7000 ரூபாய்( -1 to -3) முதல் தொடங்குவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.LOW DOSE ATROPINE மற்றும் MYOPIA CONTROL LENSES என்கின்ற சிகிச்சையை, கடந்த இரண்டு வருடங்களாக, நமது கிளினிக்கிலும் தொடர்ந்து கொடுத்து வருகிறேன். இதில் பாதி அளவு பெற்றோர்கள், தினம் ஒரு சொட்டு என்பது தங்கள் பிள்ளைகளின் வருங்காலத்தில் பவர் ஏறாமலும், மேலும் retinal detachment, cataract , glaucoma, macular degeneration ஆகிய அதிக பவரால் வரும் கண்ணின் நரம்பு மற்றும் கண்புரை நோய்களை பாதியாக குறைக்கும் என்பதை உணர்ந்து கொடுத்து வருகின்றனர். அரவிந்த் கண் மருத்துவமனையிலும் தொடர்ந்து எங்களைப் போலவே இந்த மருந்துகளை பயன்படுத்த சொல்லி பெற்றோர்களை போன் மூலம் அழைத்தபடி உள்ளனர். இதனால் நாம் மட்டும் கரடியாக கத்திக் கொண்டிருக்கிறோமோ என்ற ஐயப்பாடு நீங்கியது. இந்த மருந்து என்பது குழந்தைகளுக்கு உகந்ததா, இதை அவர்களால் தொடர்ந்து உபயோகிக்க முடிகிறதா என்று கண் மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர்கள் கண்காணிப்பில் தான் வழங்குவார்கள். மேலும் சில குழந்தைகளுக்கு சாதாரண கண்ணாடி என்பதே பவரை அதிகரிக்கும் பிரச்சனை உண்டு பண்ணுவதால், அவர்களுக்கு MCL என்பதை கண் மருத்துவர்கள் பரிந்துரை செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இதனோடே நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.
1. ஒரு மணி நேர சூரிய ஒளி உடலில் பரவுவது.
2. மொபைல் போன்களில் இருந்து டிவி அல்லது லேப்டாப் ஆகியவற்றை இணைத்து பயன்படுத்துவது.
3. ஒவ்வொரு 20 நிமிட படிப்பு அல்லது வேலைக்குப் பிறகு ஒரு ரவுண்டு நடந்து விட்டு வந்த தொடர்வது. பொழுதுபோக்குக்காக ரிலீஸ் பார்ப்பவர்களுக்கும் இது உபயோகப்படும்.
4. தூங்குவதற்கு எட்டு மணி நேரத்தை ஒதுக்குவது, ஒரு மணி நேரம் முன்பாக டிஜிட்டல் டிவைஸ்களை தவிர்ப்பது.
5. உட்கார்ந்து படிக்கும் போது முதுகு, கைகள் கழுத்து, கணினி அல்லது புத்தகம் என்பது நேராக இருப்பது.
6. படுத்துக்கொண்டே இருட்டில் மொபைலை பார்ப்பதை விட நம் கண்ணை நாமே குத்திக் கொள்ளலாம்.

இதையெல்லாம் செய்வதற்கு நல்ல உடல் பலமும், தெளிவான மனதும் வேண்டும். தேவையில்லாத கவலைகளை மனதில் இருந்து அகற்றி, செல்போன் என்பதை கவலைகளுக்கு மருந்தாக உபயோகப்படுத்தாமல் இருந்தால் எல்லாம் நலமே.

Dr. சரயு காயத்திரி ,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.

பத்தாண்டு காலமாக பயம் மற்றும் சரியாகும் என்ற நம்பிக்கையின்மை என்று காரணமாக தள்ளி போட்டு கொண்டே வந்த ஒரு அறுவைச் சிகிச்சை...
30/08/2024

பத்தாண்டு காலமாக பயம் மற்றும் சரியாகும் என்ற நம்பிக்கையின்மை என்று காரணமாக தள்ளி போட்டு கொண்டே வந்த ஒரு அறுவைச் சிகிச்சையை, இன்றைய நிலைமை இன்னும் பத்து நாட்களில் மாறும் என்று தெம்பு ஊட்டி, அந்த சிகிச்சையில் நல்ல பயன்கள் பெற்றதால் சர்ப்ரைஸ் ஆக வந்த மதிப்பீடு இது. மருத்துவராக நான் சேர்த்து வைக்கும் செல்வம் இது தான்.

Dr. சரயு காயத்திரி,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.
# cataractsurgery

25 வயதுக்கு உள்ளான டிகிரி படித்த வேலை செய்வதில், கண்ணாடி விற்பதில் ஆர்வமும், சுறுசுறுப்பும், மருத்துவம் பற்றி கற்றுக் கொ...
22/06/2024

25 வயதுக்கு உள்ளான டிகிரி படித்த வேலை செய்வதில், கண்ணாடி விற்பதில் ஆர்வமும், சுறுசுறுப்பும், மருத்துவம் பற்றி கற்றுக் கொள்ளும் தேடலும் இருக்கும் பெண் நீங்கள் என்றால் உங்களை சேஷா கண் மருத்துவமனை,திருவண்ணாமலை வரவேற்கிறது. சிகிச்சைக்கு வருபவர்களிடம் கனிவாக நடந்து கொள்வது is a Extra Brownie Point.

இன்று கிளினிக்கில் ஒரு சுவாரசியமான உரையாடல் நிகழ்ந்தது. மகனை  வருடாந்திர 'செக் அப்' அழைத்து வந்திருந்த தாய், பல அறிவியல்...
10/01/2024

இன்று கிளினிக்கில் ஒரு சுவாரசியமான உரையாடல் நிகழ்ந்தது. மகனை வருடாந்திர 'செக் அப்' அழைத்து வந்திருந்த தாய், பல அறிவியல் தகவல்கள் தெரிந்து வைத்திருந்தார். அவருக்கு உதவியாக சில தகவல்களை மட்டும் சேர்த்து சொன்னதும், உற்சாகமாக கேட்டுக்கொண்டார். இது அனைத்து பெற்றோர்களுக்குமே தேவையாக இருக்கும் என்று பகிர்ந்து உள்ளேன்.

தாய்மார்: என்ன டாக்டர் கண் பவர்(Myopia) புது பெயர் சொல்லிட்டு இருக்கீங்க.இன்னிக்கு தான் ஃப்ரெஷா கேரட் ஜூஸ் பண்ணி கொடுத்து இருக்கேன். இதே முப்பது நாள் பாலோ பண்ணா கண்ணு சரியாயிடும்.

நான்:ஓகே மா. கேரட் கண்ணுக்கு ரொம்ப நல்லது. கூடவே பல உணவுகளில் விட்டமின் 'ஏ' மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைய இருக்கு. உங்கள் மகனுக்கு -1 D அளவுதான் பவர் குறைபாடு இருக்கிறது. நிச்சயமாக நல்ல உணவும், சூரிய ஒளியும் கை கொடுக்கும்.

அவர்: இதுக்கு மேல பவர் எங்க அக்கா மகனுக்கு இருக்கே. ஏதோ -6.5 என்று சொன்னார்கள். அவருக்கு எப்படி இருக்கும்னு சொல்லுங்களேன்.

நான்: நல்லது மா.இந்த myopia குழந்தைகளுக்கான பிரச்சனை மட்டும் இல்லையே. இதே குழந்தைகள் 45 -50 வயசு பெரியவர்கள் ஆகும்போது, என்ன நடக்கும் என்று நாம் தெரிஞ்சுக்கணும் இல்லையா?குறிப்பா மைனஸ் மூன்றுக்கு(-3D) மேல பவர் இருந்துச்சுன்னா, Retina என்னும் விழித்திரை நலிவடைய தொடங்கி விடும். அதே -6 D தொட்டுவிட்டால் தீவிர myopia என்ற கேட்டகிரியில் வந்துவிடும்.

தாய்மார் : அதுக்கு என்ன டாக்டர், புது பவர்ல கண்ணாடி மாத்திட்டா சரியாக போகுது. 18 வயசு பூர்த்தி ஆச்சுன்னா பையன் லேசர் அறுவை சிகிச்சை செய்துப்பார்.

நான் : மிகச் சரி அம்மா. அவராக விரும்பி லேசர் செய்து கொண்டால் தெளிவான பார்வை கிடைக்கும். ஆனால் விழித்திரை நலிவடைவது தொடர்ந்து கொண்டு இருக்கும். அங்கே ஓட்டைகளும், விழித்திரை விலகலும் நடப்பதற்கான வாய்ப்புகளின் அளவுகளை பார்த்து, ரிஸ்க்கை முடிவு செய்வோம்.

அதே வகுப்பில் படிக்கிற இருக்கிற பவர் இல்லாத மாணவரை விட, -6 பவர் இருக்கிற உங்க உறவினர் பையனுக்கு விழித்திரை விலகுவதற்கு 22 மடங்கு அதிக வாய்ப்புபிருக்கு , கண்ணின் முக்கிய நரம்பு (Macula) பாதிக்கப்படுவதற்கு 41 மடங்கு அதிக வாய்ப்பு . அதனால வருடத்திற்கு ஒரு தடவை முழு கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

இன்று இந்த இரண்டை மட்டும் சந்தேகமற தெரிந்து கொள்வோம்.

1. கண் பவர் என்பது சிறுவயது பிரச்சினை மட்டுமல்ல. ஒவ்வொரு வருடமும், பவர் அதிகரிக்காமல் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம்.

2. -6D அல்லது அதற்கு மேல் பவர் இருந்தால், கண் மருத்துவரை நண்பர் ஆக்கிக் கொள்ளுங்கள். -3D தொட்டுவிட்டாலே உங்களை அவர் அடிக்கடி பார்க்க வேண்டும்.

உங்கள் பார்வைக்காக ஆய்வு முடிவுகளை தொகுத்து இணைத்துள்ளேன்.

நன்றி,
Dr. சரயு காயத்திரி,
கண் மருத்துவர்,
திருவண்ணாமலை.

07/01/2024
3rd time today:போலீஸ்: நீங்க இந்த ஊர் தானா?என்ன ஆதாரம்?மீ: ஊருக்குள்ள தான் வீட்டு அட்ரஸ், இந்தங்கோ ஆதார் கார்டு.2 வீலரே ...
26/12/2023

3rd time today:

போலீஸ்: நீங்க இந்த ஊர் தானா?என்ன ஆதாரம்?

மீ: ஊருக்குள்ள தான் வீட்டு அட்ரஸ், இந்தங்கோ ஆதார் கார்டு.

2 வீலரே ஓடல, மக்கள் வெள்ளத்தில்.
இந்தாங்கோ லைசென்ஸ்.

தெரு வாசலே அடைஞ்சி இருக்கு parking கார்களால், இந்தாங்கோ வண்டி ஆர்.சி.

அப்படியே ஒரு work permit விசா கொடுத்தீங்கனா, கனடா பக்கமா போய் செட்டில் ஆகிடுவோம்!

Do you see like this in nights?It could be astigmatism.Or simply cylinders.Don't suffer silently.It's risky to drive and...
23/12/2023

Do you see like this in nights?
It could be astigmatism.
Or simply cylinders.

Don't suffer silently.
It's risky to drive and risk your life.
Get your eyes checked.

Address

Tiruvannamalai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 5pm - 6pm

Telephone

+919345645258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sesha Eye Care Clinic,Tiruvannamalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sesha Eye Care Clinic,Tiruvannamalai:

Share

Category