GMOA - Branch Union Akkaraippattu

GMOA - Branch Union Akkaraippattu Government Medical Officers Association - Branch Union Akkaraippattu

It’s not just a win It’s safeguard of of members and GMOA.We will do our best for members !
29/06/2025

It’s not just a win
It’s safeguard of of members and GMOA.

We will do our best for members !

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை பிராந்திய கிளைச் சங்கங்கள் நடாத்திய 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் சம்பந...
28/05/2025

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை பிராந்திய கிளைச் சங்கங்கள் நடாத்திய 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தம் சம்பந்தமாக இன்றைய ஊடக சந்திப்பு..

https://youtu.be/edYlFKEqD_c?si=tEHuxN8OO393DcKW

https://youtu.be/WlYcCyIZlGI?si=7wQPtHBzGaY26fa6

Dr Chamil Wijesinghe | GMOA Media Spokesman | 2025.05.28Government Medical Officers' Association 𝗡𝗢𝗪: / .official 𝗩𝗜𝗦...

28/05/2025

கல்முனை பிராந்திய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (28.05.2025) புதன்கிழமை காலை 8 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகள், பழிவாங்கல் செயற்பாடுகள், நிதி முறைகேடுகள் சம்பந்தமான மீதமுள்ள விசாரணைகளையும் தற்போது நடப்பிலுள்ள ஏனைய விசாரணைகளையும் பக்கச் சார்பற்ற முறையில் துரிதமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.

இதற்கு முன்னர் கடந்த வியாழக்கிழமை இந்த விடயங்களுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் கல்முனை பிராந்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர்கள் ஒரு அமைதியான அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

நாளைய தினம் மேற்கொள்ளப்பட இருக்கின்ற அடையாள வேலை நிறுத்த காலப்பகுதியில் அவசர சிகிச்சைகள், மகப்பேற்று மற்றும் சிறுவர் சிகிச்சைகள், வழமை போன்று நடைபெறும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைச் சங்கங்கள் அறிவிக்கின்றன.

பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணையை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சின் அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றோம்.

நேற்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக அரச வை...
23/05/2025

நேற்றைய தினம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகரின் நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் மேற்க்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் மிக வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமை புரிகின்ற அனைத்து வைத்திய நிபுணர்களுடன், அவசர சிகிச்சை கடமையில் இருந்த வைத்தியர்களைத் தவிர ஏனைய 51 வைத்தியர்கள் மற்றும் கல்முனை, அம்பாரை, சம்மாந்துறை, நிந்தவூர், பொத்துவில், திருக்கோவில் வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிளை உறுப்பினர்கள் சுமார் 100 வைத்தியர்களும் கலந்து கொண்டு தமது கடுமையான எதிர்ப்பினை அமைதியான கோஷங்களுடன் வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதற்காக குறிப்பிட்ட வைத்திய அத்தியட்சகர் திரைமறைவில் இருந்து தனது அடிவருடிகளைக் கொண்டு ஏனைய ஊழியர்களையும் கலந்து கொள்ள மிரட்டி ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தோல்வியில் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

தனக்கு ஆதரவாக தனது அடிவருடிகளைத் தவிர வேறு எவரும் ஒன்று சேராததால் வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்ற சுத்திகரிப்பு தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களை மூன்று நாட்களுக்குரிய மேலதிக நேரக் கொடுப்பனவை ஒன்றாகத் தருவதாகக் கூறி ஒன்றுதிரட்டியிருந்தமை அங்கு குழுமியிருந்த கூட்டத்தில் காணக்கிடைத்தது.

23/05/2025

ஒற்றுமையே எங்களது பலம்

நூறு ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பலமான தொழிற்சங்கங்கமாகிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஒற்றுமை, சக்தி, சிறந்த தலைமைத்துவம், கிளைச் சங்கங்களுக்கிடையிலான உறுதியான பிணைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நிலைத்திருக்கிறது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகரால் தற்போது இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்கள், அடக்குமுறைகள், ஊழல்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க முற்படும் வைத்தியர்கள் மிரட்டல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது ஒற்றுமையை குழப்பும் வகையில் பெரிய சதித்திட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த மாதிரியான பயமுறுத்தல்கள், வைத்தியர்களின் சுதந்திரமான பணிசெயல்பாடுகளையும், நோயாளிகளுக்கான சேவைகளையும் பாதிக்கும் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உணர்ந்துள்ளது.

வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணையை நாடும் வைத்தியர்களுக்கு, வைத்தியசாலையில் உள்ள சில ஊழியர்கள், முகப்புத்தகத்தில் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் மற்றும் அனாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலமாக மிரட்டப்படுவது, இன்று இங்கே வைத்தியர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் காட்டும் வெளிப்படையான சாட்சியாகும்.

இந்த நேரத்தில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மீதான சுயாதீனமான, பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்த அமைதியான விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பங்குபற்றுதலுடன் 2025.05.22 ம் திகதி வியாழக்கிழமை வெற்றிகரமாக நடைபெற்றது.

பல அச்சுறுத்தல்களையும் தாண்டி நியாயத்திற்காக 50க்கும் மேற்பட்ட அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுடன், கல்முனை மற்றும் அம்பாறை சுகாதார மாவட்டங்களிலுள்ள சகோதர கிளைச் சங்கங்களிலும் இருந்து வந்த வைத்தியர்கள் இணைந்து இந்த அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வெற்றிகரமான ஆர்ப்பாட்டம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களுக்காக முழு நாடும் துணை நிற்கிறது என்பதை விளக்கும் ஒரு வரலாற்று நிகழ்வாக அமைந்தது.

விசாரணை சாமதம் – நீதி எங்கே?

2021 ஆம் ஆண்டு, தற்போதைய வைத்திய அத்தியட்சகர் மீது நிதி முறைகேடு குறித்த புகார்கள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டன. அதற்குப் பிறகு மூன்றாண்டுகள் கடந்தும், அந்த விசாரணைகள் முடிவுபெறவில்லை. விசாரணைகள் முடிவடையாமல் அதே நபர், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டார்.

பொதுச் சேவை ஆணைக்குழு பலமுறை விசாரணைகளை விரைவுபடுத்தி விசாரணை அறிக்கையை தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், இதுவரை விசாரணை முடிவுகள் வெளியிடப்படவோ, தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவோ இல்லை.

இந்த அதிகாரி மீண்டும் இங்கு நியமிக்கப்பட்ட பிறகு, நிர்வாக சீர்கேடுகள், பழிவாங்கல் நடவடிக்கைகள் உள்ளிட்ட முறைமையற்ற செயல்கள் நடைபெற்றுள்ளதாக வைத்தியர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதும், இதுவரை எந்தவிதமான நேர்மையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில், தற்போது உள்ள வைத்திய அத்தியட்சகரை இடமாற்றம் செய்து, அவரது தலையீடு இல்லாமல் சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை உடனடியாக ஆரம்பிக்குமாறு வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது குறிப்பிட்ட வைத்திய அத்தியட்சகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நியாயமான சுதந்திரமான விசாரண...
22/05/2025

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது குறிப்பிட்ட வைத்திய அத்தியட்சகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக நியாயமான சுதந்திரமான விசாரணையையே வேண்டி நிற்கிறது.

அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும் நடவடிக்கைகள் பிற்போடப்படுவதனை அவதானித்து, பொதுச் சேவை ஆணைக்குழுவே சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் வினா தொடுத்துள்ளதை முன்னைய பதிவுகளில் கண்டீர்கள்.

தற்போது விசாரணைகளை மூடி மறைக்கும் நோக்குடன் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் தங்களது சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கையப்பமிட்டவர் போலியானவர் என அகில இலங்கை சுவசேவை சங்கம் அந்த சங்கத்தின் தாய்ச்சங்கத்தின் செயலாளரின் கையொப்பத்துடன் சுகாதார அமைச்சிடம் மீண்டும் முறையிட்டுள்ளது.

எனவே இது சம்பந்தமாகவும் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டி நிற்கும்.

சுயாதீன நீதியான விசாரணையை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப் படுவதற்கு எப்போதும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பின்னிற்கப் போவதில்லை.

வைத்தியர்களுக்கு உள்ள பிரச்சினைகளை தனிப்பட்ட பிரச்சினைகளும் கோணத்தில் மாற்ற முற்பட்டு அவதூறுகளையும் சட்டத்தை மீறி நடந்த சில நடவடிக்கைகளுக்கும் அவற்றை செய்த அனைவருக்கும் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நாங்கள் பின்னிக்கப் போவதில்லை என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறோம்.

நியாயமான விசாரணைகளில் இருந்து தப்புவதன் மூலம் தனது பதவியை தக்க வைக்கலாம் என எண்ணி, மற்றைய ஊழியர்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை வைத்திய அத்தியட்சகர் நிறுத்த வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Dr. Javahir க்கு எதிராக விசாரணை இல்லை என்று சிலர் கருத்து தெரிவிப்பதை பார்த்து  நாங்கள் நகைக்கிறோம். இதோ ஆதாரம்...பொதுச்...
21/05/2025

Dr. Javahir க்கு எதிராக விசாரணை இல்லை என்று சிலர் கருத்து தெரிவிப்பதை பார்த்து நாங்கள் நகைக்கிறோம்.

இதோ ஆதாரம்...

பொதுச் சேவை ஆணைக்குழு பல தடவைகள் அவர் மீதான விசாரணை அறிக்கைகளை தருமாறு சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கான ஆதாரம் இதோ...

සෞඛ්‍ය සහායකවරියක් වන ශ්‍රීමත් නිරෝෂා මහත්මිය විසින් ඩො.සුහෙයිල් මහතාට එරෙහිව ඔහුගේ කකුල හෝදන ලෙස අණ දුන් බව සඳහන් කරමින...
21/05/2025

සෞඛ්‍ය සහායකවරියක් වන ශ්‍රීමත් නිරෝෂා මහත්මිය විසින් ඩො.සුහෙයිල් මහතාට එරෙහිව ඔහුගේ කකුල හෝදන ලෙස අණ දුන් බව සඳහන් කරමින් ගැඹුරු චෝදනා කර ඇත. එම සිදුවීම සම්බන්ධයෙන් මෙහෙයුම් නිකේතනයේ කටයුතු කළ සේවකයින් කිහිප දෙනෙකුගේ සාක්ෂි සහ පරීක්ෂණ මත පදනම්ව එය සම්පූර්ණයෙන්ම ව්‍යාජ චෝදනාවක් බව පැහැදිලි වේ.

ප්‍රශ්න සහිත සිදුවීම සම්බන්ධව, මෙහෙයුම් ශාලාවට ඇතුල්වීමට පෙර විනාශකාරී ලෙස රුධිරයෙන් රේඛා සටන් වුණු මෙහෙයුම් පාවහන් යුගලක් සනාථ කරන ලදී. මෙවැනි උපකරණ විශුද්ධ කිරීම සහ සැනිපාරක්ෂාව තහවුරු කිරීම සෞඛ්‍ය සහායකවරියන්ගේ වගකීමකි. ඩො.සුහෙයිල් මහතා එය පෙන්වා දී ඇති අතර, නිවැරදි ක්‍රමෝපායන් පිළිපදින්නැයි විමසූ පමණි. ඔහු කිසිසේත්ම තමන්ගේ කකුල හෝදන්නැයි කියා සිටි නැත.

තවත් වැදගත් කරුණක් වන්නේ, ශ්‍රී. නිරෝෂා මහත්මිය විවිධ ස්ථානවල පවතින සේවකයන් සමඟ ගැටුම් සහ අසහනීය හැසිරීම් මත නිරන්තරව මාරු වී ඇති බවයි. ඇයගේ හැසිරීම සම්බන්ධයෙන් නොයෙක් පැමිණිලි ලේඛනවල ලැබී ඇති අතර, සමාජයීය අමුතුකමක් සහ ව්‍යත්‍යස්ථ හැසිරීම මත කාර්ය මණ්ඩලය අතර අවස්ථා රැසක අප්‍රසන්නතා ඇති වී ඇත.

මෙම පැහැදිලි කිරීම නිකුත් කරනුයේ වෘත්තියමය ගෞරවය සහ ආයතනීය ප්‍රමිතියන් ආරක්ෂා කිරීම සදහා වන අතර, සත්‍යතාවයට පදනද නොවූ චෝදනා මඟින් වෘත්තිකයන්ගේ නාමය හා ගෞරවය කිසිසේත්ම හානි කිරීමට ඉඩ නොදීම සඳහාය.

தொழிற் சுகாதார உதவியாளராக பணியாற்றும் திருமதி நிரோஷா, டாக்டர் சுஹைலை எதிர்த்து "அவர் தனது கால்களை கழுவ கூறினார்" எனக் கு...
21/05/2025

தொழிற் சுகாதார உதவியாளராக பணியாற்றும் திருமதி நிரோஷா, டாக்டர் சுஹைலை எதிர்த்து "அவர் தனது கால்களை கழுவ கூறினார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த நிகழ்வின் போது அறுவை சிகிச்சை அறையில் பணியாற்றிய பல ஊழியர்களின் சாட்சியம் மற்றும் விசாரணையின் அடிப்படையில், இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வு நடந்தது, இரத்தம் ஒட்டிய அறுவை சிகிச்சை காலணிகளைப் பற்றியதாகும். அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைவதற்கு முன், அவை நன்றாக சுத்தம் செய்து கிருமிநாசனம் செய்யப்பட வேண்டும் என்பது தொற்று கட்டுப்பாட்டு நடைமுறைகளின் ஒரு பகுதியாகும். இதனைச் செய்தல் சுகாதார உதவியாளரின் கடமையாகும். டாக்டர் சுஹைல் இதை மட்டும் தான் சுட்டிக்காட்டினார் மற்றும் நேர்மையான நடைமுறைகளை பின்பற்றுமாறு கூறினார். அவர் தனது கால்களை கழுவ கூறியதில்லை என்பதற்கான உறுதியான சாட்சிகள் உள்ளன.

மேலும், திருமதி நிரோஷா பல இடங்களிலும் பணிபுரிந்தபோது பல ஊழியர்களுடன் தொடர்ச்சியான ஒழுங்குக்கேடுகள் மற்றும் பழிவாங்கும் போக்குகள் காட்டியுள்ளார். அவர்மீது தவறான நடத்தை மற்றும் சமூக விரோதமான கருத்துகள் தொடர்பான பல புகார்கள் பதிவாகியுள்ளன. இதனால் பல முறை இடமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவருடைய செயற்பாடுகள் பலரிடையிலும் மனமுடைப்பு மற்றும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

இச்செய்தி மூலம், உண்மையற்ற குற்றச்சாட்டுகள் மூலம் எமது மருத்துவ குழுவின் நற்பெயருக்கும், ஒழுங்கும் பாதிக்கப்படாதிருக்கவே, உண்மையை தெளிவுபடுத்துகிறோம். எமது நிறுவனத்தின் நம்பிக்கையும், தொலைநோக்கும் பாதுகாக்கப்படும்.

සෞඛ්‍ය සහායකවරියක් වන ශ්‍රීමත් නිරෝෂා මහත්මිය විසින් ඩො.සුහෙයිල් මහතාට එරෙහිව ඔහුගේ කකුල හෝදන ලෙස අණ දුන් බව සඳහන් කරමින් ගැඹුරු චෝදනා කර ඇත. එම සිදුවීම සම්බන්ධයෙන් මෙහෙයුම් නිකේතනයේ කටයුතු කළ සේවකයින් කිහිප දෙනෙකුගේ සාක්ෂි සහ පරීක්ෂණ මත පදනම්ව එය සම්පූර්ණයෙන්ම ව්‍යාජ චෝදනාවක් බව පැහැදිලි වේ.

ප්‍රශ්න සහිත සිදුවීම සම්බන්ධව, මෙහෙයුම් ශාලාවට ඇතුල්වීමට පෙර විනාශකාරී ලෙස රුධිරයෙන් රේඛා සටන් වුණු මෙහෙයුම් පාවහන් යුගලක් සනාථ කරන ලදී. මෙවැනි උපකරණ විශුද්ධ කිරීම සහ සැනිපාරක්ෂාව තහවුරු කිරීම සෞඛ්‍ය සහායකවරියන්ගේ වගකීමකි. ඩො.සුහෙයිල් මහතා එය පෙන්වා දී ඇති අතර, නිවැරදි ක්‍රමෝපායන් පිළිපදින්නැයි විමසූ පමණි. ඔහු කිසිසේත්ම තමන්ගේ කකුල හෝදන්නැයි කියා සිටි නැත.

තවත් වැදගත් කරුණක් වන්නේ, ශ්‍රී. නිරෝෂා මහත්මිය විවිධ ස්ථානවල පවතින සේවකයන් සමඟ ගැටුම් සහ අසහනීය හැසිරීම් මත නිරන්තරව මාරු වී ඇති බවයි. ඇයගේ හැසිරීම සම්බන්ධයෙන් නොයෙක් පැමිණිලි ලේඛනවල ලැබී ඇති අතර, සමාජයීය අමුතුකමක් සහ ව්‍යත්‍යස්ථ හැසිරීම මත කාර්ය මණ්ඩලය අතර අවස්ථා රැසක අප්‍රසන්නතා ඇති වී ඇත.

මෙම පැහැදිලි කිරීම නිකුත් කරනුයේ වෘත්තියමය ගෞරවය සහ ආයතනීය ප්‍රමිතියන් ආරක්ෂා කිරීම සදහා වන අතර, සත්‍යතාවයට පදනද නොවූ චෝදනා මඟින් වෘත්තිකයන්ගේ නාමය හා ගෞරවය කිසිසේත්ම හානි කිරීමට ඉඩ නොදීම සඳහාය.

Address

Akkaraipattu

Alerts

Be the first to know and let us send you an email when GMOA - Branch Union Akkaraippattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to GMOA - Branch Union Akkaraippattu:

Share