Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம்

Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம் Natural way to look young forever

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். கண்கவர் நீல நிறத்தில்  பூக்கும்...
15/02/2024

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். கண்கவர் நீல நிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக் காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான் என்று 3 வகையாக வளர்கிறது. வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும்.

இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை மாலை அருந்திவர சளி கோழை நீங்கும். ஆனால் இவற்றைப் பக்குவத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளதால் உட்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோனைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

பெண் உறுப்புபோல் தோன்றும் இம்மலர் பெண்களின் கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் (Antioxidant) நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது. மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உலர்ந்த மலர்கள், Blue tea எனும் நீல நிற டீ தயாரிக்கபயன்படுகிறது.

எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்ட இந்த blue tea குடிப்பதால் நம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் .

ஒரு டம்ளர் சுடு நீரில் 5 நீல நிற உலர்ந்தமலர்களைப் போட்டு10 நிமிடம் ஊறவைத்தால் Blue tea தயாராகிவிடும். இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த சங்குப்பூவின் Blue tea குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகள் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

சங்குப்பூவில் anthocyanin என்று சொல்லப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவு உள்ளது இது கண்களில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கண்பார்வை இழப்பை தடுக்கும்.

blue tea மூளையின் செயல் திறனை அதிகரித்து வயது மூப்பால் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
blue tea மூளையில் சுரக்கும் dopamine endorphin oxytocin serotonin போன்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் கொடுக்கும்.

உடலில் உள்ள தொப்பையை குறைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இந்த blue tea பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள anthocyanin antioxidant இதயக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கும்.

இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் தன்மை பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் முக்கியமாக நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு நமது முகத்தை பொலிவாக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கிறது இந்த சங்குப்பூ.

24. கறிவேப்பிலைக் கீரைMurraya koenigiiகால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப...
06/02/2024

24. கறிவேப்பிலைக் கீரை

Murraya koenigii

கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது. தலைமுடி மற்றும் தோல் ஆகியவை பொலிவுடன் இருக்க கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையில் இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இருப்பதால், உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது.

மேலும், கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது என பல ஆராய்ச்சிகளும் நிருபணம் செய்கின்றன. இருதய நோய் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்ள மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

தலைமுடி நிறம் மட்டுப் போவதையும், பொலிவு குறைவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. மொத்தத்தில், காய்கறிகளுடன் இலவசமாக ஒரு சிறு கொத்தாக, நம் வீட்டிற்கு கறிவேப்பிலை வந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் ஏராளமாகும்.

05/02/2024

காஞ்சோண்டி ( Urtica Dioica ) (இது நகல் பதிவு)

இது ஒரு பற்றைத் தாவரம் . உடலில் பட்டால் சுணைக்கும் . இத் தாவரத்தை எமது காணிகளில் கண்டால் அவற்றை வெட்டி எறிந்துவிடுவார்கள் .
ஒருதடவை இங்குள்ள மருந்துக் கடையொன்றில் காஞ்சோண்டி தேயிலை கண்டேன் . இச் செடி பற்றி எழுதப் பட்டிருந்தவைகளை கூகிளில் தேடி படித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இத் தாவரம் பற்றி எழுதும் போது ” The Doctor ´s medicin ” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

1800 ம் ஆண்டுகளில்( இருந்து) மிகவும் முக்கியமான வைத்திய நிவாரணியாக இத் தாவரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத் தாவரம் விட்டமின் A , விட்டமின் C , கல்சியம்,
பொஸ்பரஸ் , இரும்புச் சத்து , கலியம் போன்றவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது.
இதைவிட முக்கியமாக உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களில் தொற்றுக்கள் / நோய்கள் ஏற்படும் போது அக் கிருமிகளை அழிக்கக் கூடிய ” Flavonoids ”
எனப்படும் சத்தையும் இது அதிக அளவில் கொண்டுள்ளது.

தாவரத்தை சுடுநீரில் கழுவும் போது இதன் சுணைக்கும் தன்மை அகன்றுவிடும்.

இதன் மருத்துவ பயன்கள் :

உள் உறுப்புக்களில் நோய் / நாட்பட்ட உட்காயங்களை இல்லாமல் செய்ய உதவுகின்றது.

சலப் பையில் கற்கள் உருவாகுவதை / உருவாகியுள்ள கற்களை அழிக்கக் கூடியது .

இருமல் / நாட்பட்ட இருமல் தீர்க்கும் நிவாரணியாகின்றது

இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க கூடியது.

உடம்பிலுள்ள மேலதிக நீரை ( உ +ம் : கால் வீக்கம் ) வெளியேற்ற உதவுகின்றது.

இரத்த அழுத்தத்தை சரி செய்கின்றது.

இரத்தத்தைச் சுத்திகரித்து தேவையற்ற கழிவுநீரை வெளியேற்ற உதவுகின்றது .

வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகின்றது.

குழந்தை பெற்ற பால் கொடுக்கும் பெண்களிற்கு பால் ஊறுவதற்கு உதவுகின்றது.

தலை முடி உதிர்வதை தடை செய்கின்றது.

தோலில் ஏற்படும் படைகள் – Eczema மீது இவ் இலையை அரைத்துப் பூசி வர நோய் குணமாகும்.

பாவிக்கும் முறைகள் :

இலைகளை / மரத்தை வெயிலில் காயவைத்து தேநீர் செய்து குடிக்கலாம் . ( கிறீன் டீயின் சுவையை ஒத்தது )

இலைகளை கீரையுடன் /தனியாக கறி செய்யலாம்.

வேறுவகை இலைகளுடன் சேர்த்து வறை செய்யலாம்.

சூப் அல்லது இரசம் செய்யும் போது இவ் இலைகளையும் சேர்த்து செய்யலாம்.

இலைகளை சிறிது தண்ணீரில் அவித்து, அரைத்து தலைக்கு வைத்து முழுகலாம்.

ஒலிவ் / தேங்காய் எண்ணையுடன் சேர்த்து இவ் இலைகளைக் கொதிக்க வைத்த எண்ணையை தலைக்கும் , உடம்புக்கும் பூசலாம்.

இன்னும் பல …..

இயற்கை தந்திருக்கும் செலவில்லா மருந்து இது.

நீங்களும் பயன் பெறவே இப்பதிவு.

ஆதாரம் :

Net doctor .dk
WWW.meditativyoga.net
da.1 faydalari.com

இதனை தவிர இதன் வேர் சித்த மருத்துவத்தில் anti inflammatory ஆக, anti histamine ஆக பயன்படுத்தப்படுகிறது.

23. வேலிபருத்திக் கீரை Pergularia daemiaவேலிப்பருத்தி இலையின் வேறு பெயர்கள்: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி. இதன் இலையை ...
05/02/2024

23. வேலிபருத்திக் கீரை

Pergularia daemia

வேலிப்பருத்தி இலையின் வேறு பெயர்கள்: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி. இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.

இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

22. காசினி கீரைCichorium Intybusகாசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை...
01/02/2024

22. காசினி கீரை

Cichorium Intybus

காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.

உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை.

பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

காசினிக் கீரையை பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மேலும் உடல் சூடு தணியும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு நிழலில் உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

அதிக உயிர்ச்சத்து கொண்ட காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுபோட்டு கட்டிவந்தால் வெகுவிரைவில் புண்கள் ஆறிவிடும். இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.

காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

21. சாணக்கீரைமகோதரம் என்னும் வியாதியை, பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது, குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த ...
01/02/2024

21. சாணக்கீரை

மகோதரம் என்னும் வியாதியை, பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது, குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும். நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது, இக்கீரையை சமைத்து சாப்பிட்டால், கபம் உடைந்து, நிம்மதியான சுவாசத்துக்கு வழி வகுக்கும்.

100 வகையான கீரைகளும் அதன் பயன்களும்https://keeraigal.com
31/01/2024

100 வகையான கீரைகளும் அதன் பயன்களும்

https://keeraigal.com

31/01/2024

Keeraigal (கீரைகள்) - நம் முன்னோர்கள் இந்த கீரைகளின் மருத்துவ பண்புகளை தெரிந்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்... ஆனால் ந....

20. கிணற்று பச்சை கீரை/ மூக்குத்தி பூண்டுTridax procumbensவைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்ச...
31/01/2024

20. கிணற்று பச்சை கீரை/ மூக்குத்தி பூண்டு

Tridax procumbens

வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. கிணற்று பச்சை கீரை தீக்காயங்களை குணப்படுத்தும்.

தலைவலி நீங்கும்!

மூக்குத்தி பூ செடியின் இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து, 3 கோப்பை தண்ணீர், ஒரு ஸ்பூன் மிளகு, இஞ்சி சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து பின் வடிக்கட்டி கஷாயம் போல் பருக தலைபாரம், தலைவலி குறையும்.

மூட்டு வலி குறைய

ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெயுடன் சிறிதளவு மூக்குத்தி பூ, தண்டு மற்றும் இலைகளை சேர்த்து நன்கு வதக்கி - பின் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். பின் இந்த கலவையை மூட்டுகளில் பற்று போல் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்

தேமல் பிரச்சனைக்கு

தேமல், சொறி போன்ற சரும பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூக்குத்திப் பூ செடியின் இலைகளை சாறாக பிழிந்து, சருமத்திற்கு மேற்பூச்சாக பயன்படுத்தி தினமும் மசாஜ் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு

மூக்குத்திப் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாற்றினை சிறிதளவு உப்புடன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துக்கொள்ள வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்சனை குறையும்.

நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு

அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக உண்டாகும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை தீர்க்க இந்த தலைவெட்டி பூவை பயன்படுத்தி தேநீர் தயார் செய்து பருகலாம்.

சளி பிரச்சனைக்கு

2 - 3 முக்கித்திப் பூ மற்றும் அதன் இலைகளை அப்படியே மென்று சாறு விழுங்க, பருவ கால சளி, தொண்டை எரிச்சல் பிரச்சனைகளும் குறையும் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பல்வலி பிரச்சனைக்கு

பற்களில் வலி, பற்சிதைவு பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூக்குத்தி பூவினை பாதிக்கப்பட்ட பல்லின் இடுக்கில் வைத்து - மென்றபடி சிறிது நேரம் வைத்திருக்கள நல்ல பலன் தெரியும்.

நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.
இந்த மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.

19. புளிச்சக்கீரைHibiscus cannabinusLபுளிச்சக்கீரை கல்லீரலில் இருக்கும் நச்சை முழுமையாக வெளியேற்றும்உடலில் ஆர்.பி.சி அளவ...
30/01/2024

19. புளிச்சக்கீரை

Hibiscus cannabinus
L

புளிச்சக்கீரை கல்லீரலில் இருக்கும் நச்சை முழுமையாக வெளியேற்றும்

உடலில் ஆர்.பி.சி அளவை இரத்த சிவப்பு அணுக்கள் அளவை அதிகரித்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.

கால்சியம், மெக்னீசியம், உடல் வளர்சிதை மாற்றம் போன்றவற்றை மேம்படுத்துகிறது. உணவில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் கலக்கப்பட்டு அதை உடலில் தேவைப்படும் உறுப்புகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் குறிப்பாக எலும்புகளுக்கு கால்சியம் ,மெக்னீச்யம் சென்று சேர்வதில் துணையாக உதவுகிறது.

உடல் எடை குறைக்கும் தன்மை புளிச்சக்கீரை உண்டு.

செரிமான கோளாறுகள் இருந்தால் அதை நீக்கி மலச்சிக்கல் தடுக்கவும் இவை உதவும்.

சிறுநீர்த்தொற்று அடிக்கடி வருபவர்களுக்கு படிப்படியாக தொற்றை குறைத்து குணப்படுத்தும் தன்மை இந்த புளிச்சக்கீரைக்கு உண்டு.

கண் பார்வையை தெளிவு கொடுக்கும் தன்மை ம் புளிச்சக்கீரைக்கு உண்டு.

நினைவாற்றல் அதிகரிக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் ஏன் புற்றுநோய் வரை இதன் நன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

புளிச்சக்கீரையில் நல்ல கொழுப்பு நிறைவாக உள்ளது. உடலில் மொத்த கொழுப்பு அளவை குறைக்கவும், உடலில் கெட்ட கொழுப்பு குறைக்கவும் புளிச்சக்கீரை உதவும். இதனால் இது இதயத்துக்கு வலு கொடுக்க செய்யும்.

புளிச்சக்கீரையில் இருக்கும் வேதியியல் பொருள் குரோமியம் பிக்ரோலினேட் என்னும் மூலப்பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதமாய் செயல்படும். இது போன்ற வாழ்நாள் நோய்களை தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. இது இரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது.

உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரோன் ஹார்மொன் சமநிலைப்படுத்துகிறது. follicle-stimulating hormone மற்றும் luteinizing hormone (LH அளவை சமப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க செய்கிறது. இதனோடு சரியான நேரத்தில் கருமுட்டை வெடித்து அண்டவிடுப்பின் நடக்க உதவுகிறது. கருமுட்டை சேமிப்பை உறுதி செய்கிறது.

இந்த புளிச்சக்கீரை வெளிநாடுகளில் anti infertility herb என்ற பெயரே உண்டு.

01/01/2024

Address

Batticaloa

Opening Hours

Tuesday 08:30 - 12:00
16:30 - 19:30
Wednesday 08:30 - 12:00
16:30 - 19:30
Thursday 08:30 - 12:00
16:30 - 19:30
Friday 08:30 - 12:00
16:30 - 19:30
Sunday 08:30 - 13:00

Telephone

+94764549247

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம்:

Share