Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம்

Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம் Natural way to look young forever

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். கண்கவர் நீல நிறத்தில்  பூக்கும்...
15/02/2024

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம் வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம். கண்கவர் நீல நிறத்தில் பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக் காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான் என்று 3 வகையாக வளர்கிறது. வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான மலர்களில் ஒன்றாகும்.

இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும் பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன் பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும். வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து காலை மாலை அருந்திவர சளி கோழை நீங்கும். ஆனால் இவற்றைப் பக்குவத்துடன் பயன்படுத்த வேண்டியுள்ளதால் உட்கொள்ளும் முன்னர் மருத்துவரின் ஆலோனைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

பெண் உறுப்புபோல் தோன்றும் இம்மலர் பெண்களின் கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள், குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச் சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடன்ட் (Antioxidant) நிறைந்துள்ளதால் இது நம் உடலில் உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம் இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது. மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
உலர்ந்த மலர்கள், Blue tea எனும் நீல நிற டீ தயாரிக்கபயன்படுகிறது.

எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்ட இந்த blue tea குடிப்பதால் நம் உடலுக்கு நன்மைகள் கிடைக்கும் .

ஒரு டம்ளர் சுடு நீரில் 5 நீல நிற உலர்ந்தமலர்களைப் போட்டு10 நிமிடம் ஊறவைத்தால் Blue tea தயாராகிவிடும். இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த சங்குப்பூவின் Blue tea குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயாளிகள் உடலின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

சங்குப்பூவில் anthocyanin என்று சொல்லப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் அதிக அளவு உள்ளது இது கண்களில் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய கண்பார்வை இழப்பை தடுக்கும்.

blue tea மூளையின் செயல் திறனை அதிகரித்து வயது மூப்பால் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
blue tea மூளையில் சுரக்கும் dopamine endorphin oxytocin serotonin போன்ற ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை போக்கி உடலுக்கும் மனதுக்கும் உற்சாகம் கொடுக்கும்.

உடலில் உள்ள தொப்பையை குறைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இந்த blue tea பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள anthocyanin antioxidant இதயக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய் வராமல் பாதுகாக்கும்.

இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் தன்மை பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய தொற்று நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் முக்கியமாக நம் உடலை ஆரோக்கியமாக வைப்பதோடு நமது முகத்தை பொலிவாக்கி இளமையான தோற்றத்தை கொடுக்கிறது இந்த சங்குப்பூ.

24. கறிவேப்பிலைக் கீரைMurraya koenigiiகால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப...
06/02/2024

24. கறிவேப்பிலைக் கீரை

Murraya koenigii

கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் ஆகியவை கறிவேப்பிலையில் உள்ளடங்கி இருப்பதால் அது நல்ல இருதய செயல்பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது. தலைமுடி மற்றும் தோல் ஆகியவை பொலிவுடன் இருக்க கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையில் இரும்பு சத்தும், ஃபோலிக் அமிலமும் இருப்பதால், உடலில் ரத்த சோகையை அண்ட விடாமல் தவிர்க்கிறது.

மேலும், கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோய் எனப்படும் டயாபடிஸ் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை மேம்படுத்தவும் பயன்படுகிறது என பல ஆராய்ச்சிகளும் நிருபணம் செய்கின்றன. இருதய நோய் உள்ளவர்களுக்கு கறிவேப்பிலையை உணவில் சேர்த்து கொள்ள மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

தலைமுடி நிறம் மட்டுப் போவதையும், பொலிவு குறைவதையும் கறிவேப்பிலை தடுக்கிறது. மொத்தத்தில், காய்கறிகளுடன் இலவசமாக ஒரு சிறு கொத்தாக, நம் வீட்டிற்கு கறிவேப்பிலை வந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் ஏராளமாகும்.

05/02/2024

காஞ்சோண்டி ( Urtica Dioica ) (இது நகல் பதிவு)

இது ஒரு பற்றைத் தாவரம் . உடலில் பட்டால் சுணைக்கும் . இத் தாவரத்தை எமது காணிகளில் கண்டால் அவற்றை வெட்டி எறிந்துவிடுவார்கள் .
ஒருதடவை இங்குள்ள மருந்துக் கடையொன்றில் காஞ்சோண்டி தேயிலை கண்டேன் . இச் செடி பற்றி எழுதப் பட்டிருந்தவைகளை கூகிளில் தேடி படித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இத் தாவரம் பற்றி எழுதும் போது ” The Doctor ´s medicin ” என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

1800 ம் ஆண்டுகளில்( இருந்து) மிகவும் முக்கியமான வைத்திய நிவாரணியாக இத் தாவரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இத் தாவரம் விட்டமின் A , விட்டமின் C , கல்சியம்,
பொஸ்பரஸ் , இரும்புச் சத்து , கலியம் போன்றவற்றை அதிக அளவில் கொண்டுள்ளது.
இதைவிட முக்கியமாக உடலின் உள்ளே உள்ள உறுப்புக்களில் தொற்றுக்கள் / நோய்கள் ஏற்படும் போது அக் கிருமிகளை அழிக்கக் கூடிய ” Flavonoids ”
எனப்படும் சத்தையும் இது அதிக அளவில் கொண்டுள்ளது.

தாவரத்தை சுடுநீரில் கழுவும் போது இதன் சுணைக்கும் தன்மை அகன்றுவிடும்.

இதன் மருத்துவ பயன்கள் :

உள் உறுப்புக்களில் நோய் / நாட்பட்ட உட்காயங்களை இல்லாமல் செய்ய உதவுகின்றது.

சலப் பையில் கற்கள் உருவாகுவதை / உருவாகியுள்ள கற்களை அழிக்கக் கூடியது .

இருமல் / நாட்பட்ட இருமல் தீர்க்கும் நிவாரணியாகின்றது

இரத்தத்தில் சீனியின் அளவை கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க கூடியது.

உடம்பிலுள்ள மேலதிக நீரை ( உ +ம் : கால் வீக்கம் ) வெளியேற்ற உதவுகின்றது.

இரத்த அழுத்தத்தை சரி செய்கின்றது.

இரத்தத்தைச் சுத்திகரித்து தேவையற்ற கழிவுநீரை வெளியேற்ற உதவுகின்றது .

வாதம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகின்றது.

குழந்தை பெற்ற பால் கொடுக்கும் பெண்களிற்கு பால் ஊறுவதற்கு உதவுகின்றது.

தலை முடி உதிர்வதை தடை செய்கின்றது.

தோலில் ஏற்படும் படைகள் – Eczema மீது இவ் இலையை அரைத்துப் பூசி வர நோய் குணமாகும்.

பாவிக்கும் முறைகள் :

இலைகளை / மரத்தை வெயிலில் காயவைத்து தேநீர் செய்து குடிக்கலாம் . ( கிறீன் டீயின் சுவையை ஒத்தது )

இலைகளை கீரையுடன் /தனியாக கறி செய்யலாம்.

வேறுவகை இலைகளுடன் சேர்த்து வறை செய்யலாம்.

சூப் அல்லது இரசம் செய்யும் போது இவ் இலைகளையும் சேர்த்து செய்யலாம்.

இலைகளை சிறிது தண்ணீரில் அவித்து, அரைத்து தலைக்கு வைத்து முழுகலாம்.

ஒலிவ் / தேங்காய் எண்ணையுடன் சேர்த்து இவ் இலைகளைக் கொதிக்க வைத்த எண்ணையை தலைக்கும் , உடம்புக்கும் பூசலாம்.

இன்னும் பல …..

இயற்கை தந்திருக்கும் செலவில்லா மருந்து இது.

நீங்களும் பயன் பெறவே இப்பதிவு.

ஆதாரம் :

Net doctor .dk
WWW.meditativyoga.net
da.1 faydalari.com

இதனை தவிர இதன் வேர் சித்த மருத்துவத்தில் anti inflammatory ஆக, anti histamine ஆக பயன்படுத்தப்படுகிறது.

23. வேலிபருத்திக் கீரை Pergularia daemiaவேலிப்பருத்தி இலையின் வேறு பெயர்கள்: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி. இதன் இலையை ...
05/02/2024

23. வேலிபருத்திக் கீரை

Pergularia daemia

வேலிப்பருத்தி இலையின் வேறு பெயர்கள்: உத்தம கன்னிகை மற்றும் உத்தாமணி. இதன் இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். இது நெஞ்சிலே இருக்கின்ற கோழையை அகற்றி வாந்தியை உண்டாக்குவதோடு புழுக்களைக் கொல்லும் தன்மையுடையது.

உத்தாமணி இலையைச் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி பின் ஆற வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 மி.லி. என 48 நாட்கள் கொடுத்து வந்தால் சுவாசகாச நோய்கள் நீங்கும்.

உத்தாமணி இலையை நன்கு அரைத்து பிளவை புண் மீது வைத்து கட்டினால் பிளைவைப் புண் எளிதில் குணமாகும்.

உத்தாமணி இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலை வேளைகளில் 1 ஸ்பூன் அளவு எடுத்து அதில் தேன் கலந்து ஒரு மண்டலம் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வந்தால் வாயுவினால் உண்டான கைகால் குடைச்சல், வீக்கம், நடுக்கம், இரைப்பு, இருமல், கோழைக் கட்டு போன்ற நோய்கள் நீங்கும்.

பெண்களுக்கு கருப்பையில் உண்டாகும் வலிக்கு உத்தாமணி இலைச்சாறுடன் தேன் கலந்து கொடுத்தால் கருப்பை கோளாறு நீங்கி கருப்பை வலுப்பெறும்.

சித்த மருத்துவத்திலும், வர்ம மருத்துவத்திலும் தயாரிக்கப்படும் மூலிகை தைலங்களில் முக்கியமாக காயத்திரிமேனி தைலத்தில் வேலிப் பருத்திச்சாறு முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் வேரை உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயுத் தொல்லைகள் நீங்கிப் பேதியாகும், பூச்சி, கிருமிகள் சாகும்.

இதன் இலைச்சாற்றில் 7முறை மிளகை ஊறவைத்து வெய்யிலில் உலர்த்தித் தூள் செய்து 2 முதல் 4 அரிசி எடை பால் அல்லது தேனில் கொடுக்கக் குழந்தைகளின் செரியாமை, வாந்தி, மந்தம், மாந்த இழப்பு, கை,கால் சில்லிட்டுப் போதல், சுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம்.

5 கிராம் வேரைப் பாலில் அரைத்துக் கலக்கி வடிகட்டிக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக் கடி, கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

உந்தாமணி, பொடுதலை, நுணா,நொச்சி ஆகியவற்றின் இலைகளைவகைக்கு 1 பிடி வதக்கிப் பிழிந்த சாறு 10 மி.லி. கொடுக்கச் சளியோடு கூடிய மாந்தம் தீரும்.

22. காசினி கீரைCichorium Intybusகாசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவை...
01/02/2024

22. காசினி கீரை

Cichorium Intybus

காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.

உடலில் எந்த இடத்தில் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் அவ்வீக்கத்தை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது காசினிக் கீரை.

பற்களுக்கு உறுதியையும், பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும். காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

காசினிக் கீரையை பொடி செய்து, தினமும் காலை வேளையில் ஒரு குவளை வெந்நீரில் ஒரு தேக்கரண்டி கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். மேலும் உடல் சூடு தணியும்.

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு நிழலில் உலர்த்தி பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். காசினிக்கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

அதிக உயிர்ச்சத்து கொண்ட காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்றுபோட்டு கட்டிவந்தால் வெகுவிரைவில் புண்கள் ஆறிவிடும். இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.

காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

21. சாணக்கீரைமகோதரம் என்னும் வியாதியை, பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது, குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த ...
01/02/2024

21. சாணக்கீரை

மகோதரம் என்னும் வியாதியை, பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது, குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும். நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது, இக்கீரையை சமைத்து சாப்பிட்டால், கபம் உடைந்து, நிம்மதியான சுவாசத்துக்கு வழி வகுக்கும்.

100 வகையான கீரைகளும் அதன் பயன்களும்https://keeraigal.com
31/01/2024

100 வகையான கீரைகளும் அதன் பயன்களும்

https://keeraigal.com

31/01/2024

Keeraigal (கீரைகள்) - நம் முன்னோர்கள் இந்த கீரைகளின் மருத்துவ பண்புகளை தெரிந்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்... ஆனால் ந....

20. கிணற்று பச்சை கீரை/ மூக்குத்தி பூண்டுTridax procumbensவைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்ச...
31/01/2024

20. கிணற்று பச்சை கீரை/ மூக்குத்தி பூண்டு

Tridax procumbens

வைட்டமின் கே இன் சிறந்த மூலமாகவும். அத்தோடு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் மூலமாகவும் உள்ளது. கிணற்று பச்சை கீரை தீக்காயங்களை குணப்படுத்தும்.

தலைவலி நீங்கும்!

மூக்குத்தி பூ செடியின் இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து, 3 கோப்பை தண்ணீர், ஒரு ஸ்பூன் மிளகு, இஞ்சி சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து பின் வடிக்கட்டி கஷாயம் போல் பருக தலைபாரம், தலைவலி குறையும்.

மூட்டு வலி குறைய

ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெயுடன் சிறிதளவு மூக்குத்தி பூ, தண்டு மற்றும் இலைகளை சேர்த்து நன்கு வதக்கி - பின் பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும். பின் இந்த கலவையை மூட்டுகளில் பற்று போல் பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்

தேமல் பிரச்சனைக்கு

தேமல், சொறி போன்ற சரும பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூக்குத்திப் பூ செடியின் இலைகளை சாறாக பிழிந்து, சருமத்திற்கு மேற்பூச்சாக பயன்படுத்தி தினமும் மசாஜ் செய்து வர நல்ல மாற்றம் தெரியும்.

வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு

மூக்குத்திப் செடியின் இலைகளில் இருந்து பெறப்படும் சாற்றினை சிறிதளவு உப்புடன் சேர்த்து உள்ளுக்கு எடுத்துக்கொள்ள வயிற்றுப்போக்கு, வாந்தி பிரச்சனை குறையும்.

நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு

அதிகப்படியான அமிலத்தன்மை காரணமாக உண்டாகும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை தீர்க்க இந்த தலைவெட்டி பூவை பயன்படுத்தி தேநீர் தயார் செய்து பருகலாம்.

சளி பிரச்சனைக்கு

2 - 3 முக்கித்திப் பூ மற்றும் அதன் இலைகளை அப்படியே மென்று சாறு விழுங்க, பருவ கால சளி, தொண்டை எரிச்சல் பிரச்சனைகளும் குறையும் என ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பல்வலி பிரச்சனைக்கு

பற்களில் வலி, பற்சிதைவு பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூக்குத்தி பூவினை பாதிக்கப்பட்ட பல்லின் இடுக்கில் வைத்து - மென்றபடி சிறிது நேரம் வைத்திருக்கள நல்ல பலன் தெரியும்.

நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது மூக்குத்தி பூ செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.
இந்த மூக்குத்தி பூ செடி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. இதனுடைய பூ மூக்குத்தியை போன்று இருக்கும்.
சர்க்கரை நோயாளிகளின் புண்களை கூட இது எளிதாக குணப்படுத்தும் தன்மை கொண்டது.

19. புளிச்சக்கீரைHibiscus cannabinusLபுளிச்சக்கீரை கல்லீரலில் இருக்கும் நச்சை முழுமையாக வெளியேற்றும்உடலில் ஆர்.பி.சி அளவ...
30/01/2024

19. புளிச்சக்கீரை

Hibiscus cannabinus
L

புளிச்சக்கீரை கல்லீரலில் இருக்கும் நச்சை முழுமையாக வெளியேற்றும்

உடலில் ஆர்.பி.சி அளவை இரத்த சிவப்பு அணுக்கள் அளவை அதிகரித்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும்.

கால்சியம், மெக்னீசியம், உடல் வளர்சிதை மாற்றம் போன்றவற்றை மேம்படுத்துகிறது. உணவில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் கலக்கப்பட்டு அதை உடலில் தேவைப்படும் உறுப்புகளுக்கு கொண்டு போய் சேர்ப்பதில் குறிப்பாக எலும்புகளுக்கு கால்சியம் ,மெக்னீச்யம் சென்று சேர்வதில் துணையாக உதவுகிறது.

உடல் எடை குறைக்கும் தன்மை புளிச்சக்கீரை உண்டு.

செரிமான கோளாறுகள் இருந்தால் அதை நீக்கி மலச்சிக்கல் தடுக்கவும் இவை உதவும்.

சிறுநீர்த்தொற்று அடிக்கடி வருபவர்களுக்கு படிப்படியாக தொற்றை குறைத்து குணப்படுத்தும் தன்மை இந்த புளிச்சக்கீரைக்கு உண்டு.

கண் பார்வையை தெளிவு கொடுக்கும் தன்மை ம் புளிச்சக்கீரைக்கு உண்டு.

நினைவாற்றல் அதிகரிக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் ஏன் புற்றுநோய் வரை இதன் நன்மைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

புளிச்சக்கீரையில் நல்ல கொழுப்பு நிறைவாக உள்ளது. உடலில் மொத்த கொழுப்பு அளவை குறைக்கவும், உடலில் கெட்ட கொழுப்பு குறைக்கவும் புளிச்சக்கீரை உதவும். இதனால் இது இதயத்துக்கு வலு கொடுக்க செய்யும்.

புளிச்சக்கீரையில் இருக்கும் வேதியியல் பொருள் குரோமியம் பிக்ரோலினேட் என்னும் மூலப்பொருள் நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதமாய் செயல்படும். இது போன்ற வாழ்நாள் நோய்களை தடுக்கும் தன்மை இதற்கு உண்டு. இது இரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது.

உடலில் ஈஸ்ட்ரோஜன், ப்ரஜஸ்ட்ரோன் ஹார்மொன் சமநிலைப்படுத்துகிறது. follicle-stimulating hormone மற்றும் luteinizing hormone (LH அளவை சமப்படுத்துகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைக்க செய்கிறது. இதனோடு சரியான நேரத்தில் கருமுட்டை வெடித்து அண்டவிடுப்பின் நடக்க உதவுகிறது. கருமுட்டை சேமிப்பை உறுதி செய்கிறது.

இந்த புளிச்சக்கீரை வெளிநாடுகளில் anti infertility herb என்ற பெயரே உண்டு.

01/01/2024
18. கானாவாழைக் கீரை/ அனலடக்கிக் கீரைCommelina benghalensisஇரத்த பேதி குணமாகும் கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருக...
05/10/2023

18. கானாவாழைக் கீரை/ அனலடக்கிக் கீரை

Commelina benghalensis

இரத்த பேதி குணமாகும்

கைப்பிடி அளவு கானாம் வாழை இலையையும், அருகம் புல்லையும்,மை போல அரைத்து கொட்டைப் பாக்களவு எடுத்து, ஆழாக்கு பசும்பாலில் கலந்து காலை, மாலையாக கொடுத்து வந்தால் ரத்த பேதி குணமாகும்.

காய்ச்சால் குணமாக எந்த வகையான சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும், கானாம்வாழை இலையை கைப்பிடி அளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு வதக்கி, ஆழாக்குத் தண்ணீர் விட்டு அரை ஆழாக்களவிற்குச் சுண்டக்காய்ச்சி, அந்த கசாயத்தை காலை, மாலை, இரண்டு வேளைக்கு ஒரு அவுன்சு கொடுத்து வந்தால் சாதாரண காய்ச்சல் குணமாகும். கானாம்வாழைக் கீரையுடன் சிறிது மிளகு கூட்டி அரைத்துச் சாப்பிட்டால் குளிர் ஜூரம் உடனே குணமாகும். கானாம் வாழைக் கீரையைக் கைப்பிடி அளவு அரைத்துச் சாப்பிட்டால் உடல் சூடு குறையும். அடிக்கடி சாப்பிட்டால் வெட்டைச் சூடு குறையும். கானாம்வாழைக் கீரையுடன் வேப்பந்துளிர், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். இரத்தம் சுத்தமாகும்.

தாது விருத்தியாகும் நன்றாக சுத்தம் செய்த கானாம் வாழைக் கீரையையும், அரைக்கைப்பிடியளவு முருங்கைப் பூவையும், துவரம்பருப்பையும் சேர்த்து கூட்டு வைத்து, நெய் கூட்டி சாதத்துடன் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். உடலில் நல்ல ரத்தம் உற்பத்தியாகும்.

கானாம்வாழைக் கீரை மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்

17. வெந்தயக் கீரைTrigonella foenum-graecumவெந்தயக்கீரையின் மருத்துவப் பயன்கள்1. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது...
04/10/2023

17. வெந்தயக் கீரை

Trigonella foenum-graecum

வெந்தயக்கீரையின் மருத்துவப் பயன்கள்

1. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது.

2. வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

3. வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும்.

4. மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தய இந்தக் கீரை மிக சிறந்த மருந்தாகும். மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

5. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும்.

6. வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு வலி, மூக்கடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

7. வெந்தய கீரையை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும்.

8. வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்பந்தப்ட்ட கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.

9. வெந்தயம், ஓரிதழ் தாமரை, விடத்தலை வேர், சுக்கு, வால் மிளகு வகைக்கு 20 கிராம் எடுத்து கஷாயம் செய்து சாப்பிட்டு வர உடல் அரிப்பு நீங்கும்.

10. முகம் பளபளப்பாக இருக்க வெந்தயத்தை அரைத்து முகத்தில் பேஸ்பேக் போடலாம். பிறகு 10 நிமிடம் கழித்து கழுவவும். இப்படி சில நாட்கள் செய்து வர முகம் பளிச்சிடும்.

11. வெந்தயக் கீரையை மற்றும் வெள்ளைப் பூசணிக்காயை சாம்பாரில் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.

12. வெந்தய கீரையை வதக்கி அதனுடன் பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிளறி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலிமையும், தோல் பளபளப்பாகும்.

13. வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது.

14. வெந்தயக் கீரையை அரைத்துச் சூடுபடுத்தி வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும்.

15. வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

16. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை வயிறு பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது.

17. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். அத்துடன் வெந்தயக் கீரையை உண்டால் குடல் புண்களும் குணமாகின்றன.

18. வெந்தயக்கீரையை வெண்ணெய் சேர்த்து வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உடற்சூடும், வறட்டு இருமலும் குணமாகும்.

19. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வை கோளாறுகளைச் சரி செய்கிறது. மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை வெந்தயக்கீரை குணப்படுத்துகிறது.

https://keeraigal.com/
03/10/2023

https://keeraigal.com/

Keeraigal (கீரைகள்) - நம் முன்னோர்கள் இந்த கீரைகளின் மருத்துவ பண்புகளை தெரிந்து உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்... ஆனால் ந....

16. காட்டுத்தக்காளி/ சொடக்கு தக்காளி கீரை Physalis minimaசொடக்கு தக்காளியின் பயன்கள்:            சொடக்கு தக்காளியை உணவாக...
03/10/2023

16. காட்டுத்தக்காளி/ சொடக்கு தக்காளி கீரை

Physalis minima

சொடக்கு தக்காளியின் பயன்கள்:

சொடக்கு தக்காளியை உணவாக எடுத்துக்கொள்ளும் போது, பல்வேறு நன்மைகளை உடல் பெறுகிறது. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. கெட்டகொழுப்புகளை அகற்றுகிறது. சொடக்கு தக்காளியின் நன்மைகள் அளப்பரியது. சொடக்கு தக்காளியின் இலைகளையும் காய்களையும் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டிகள் மேல் போட்டு வர, வீக்கமும் வலியும் குறைந்து, கட்டிகள் ஓரிரு நாளில் முழுவதும் குணமடையும். சொடக்கு தக்காளி பழங்கள் சிறந்த சிறுநீர் பெருக்கி ஆகும். நுரையீரல் தொடர்பான தொற்றுகளையும் குணமாக்க உதவுகிறது.

உடல்எடைகுறைப்பு:

உடல் எடை குறைப்பில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. நீங்கள் உடல் எடை குறைப்பில் பல பயிற்சிகள் எடுத்து கொண்டாலூம் உடல் எடையை குறைக்க முடியாமல் சில நேரங்களில் சோர்வு அடைந்து விடுவீர்கள். ஆனால் சொடக்குதக்காளி உங்களை ஏமாற்றாது. தக்காளி பழங்களை பச்சையாகவே கூட பறித்து சாப்பிடலாம். சாலட், குழம்பு வகைகளிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். உடல் எடை நீங்கள் நினைத்ததை விடவே வேகமாக குறைய ஆரம்பிக்கும். உடல் எடை குறைப்பில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் அறிந்த ஒன்று வைட்டமின் சி உணவுகள் உடல் எடையை வேகமாக குறைக்கும் என்பது. அதனால் தான் வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சுபழம்,நெல்லிகனிகள் போன்ற உணவுகளை உடல் எடை குறைப்பில் அதிகமாக பயன்படுத்துகின்றோம். சொடக்கு தக்காளியில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளதால் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

கண்பார்வை குறைபாடுகள் தீர்வு:

அதிக நேரம் கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் உடல் சூட்டையும் கண்பார்வை கோளாறுகளையும் குணப்படுத்துவதற்கு சொடக்கு தக்காளி பழங்கள் சித்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கண் மருத்துவத்தில் மிக முக்கிய இடம் வகிக்கிறது; ஏனென்றால் இதில் உள்ள
கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் ஏ
கண்களில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது. ஒரு பெரிய முழு கேரட்டில் கிடைக்கின்ற சத்துக்கள் அனைத்துமே சிறிய ஐந்து சொடக்கு தக்காளி பழங்களில் உடலுக்கு கிடைத்து விடுகிறது. அதனால் தவறாமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண் ஆரோக்கியத்தை காக்க வேண்டும் என, எண்ணுகிறவர்கள் சொடக்கு தக்காளியை உணவில் இப்பொழுதிருந்தே சேர்த்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

சர்க்கரை நோய்:

சர்க்கரை நோய் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் உணவில் சொடக்கு தக்காளி பழங்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், சீராகவும் வைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சிகள் குறிப்பிடுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி சொடக்கு தக்காளியில் சோடியம் மற்றும் கொழுப்புகள் இல்லை. எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோயால் ஏற்படும் புண்கள், ஆறாத புண்கள் இவற்றையும் குணமாக்க சொடக்கு தக்காளியின் இலைகள் பயன்படுகிறது. இந்த இலைகளோடு தேங்காய் எண்ணெய் காய்ச்சி புண்கள் மீது தடவி வந்தால் நாளடைவில் புண்கள் வற்றி காயம் குணமாகிறது.

சளி இருமல் காய்ச்சல்:

வானிலை மாற்றத்தாலும் ஒவ்வாமை காரணமாகவும் சிலர் அடிக்கடி சளி இருமல் காய்ச்சல்களால் பாதிப்புக்குள்ளாவார்கள். சொடக்கு தக்காளியில் உள்ள வைட்டமின் சி - நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்குகிறது. சளி பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தக்காளி பழங்களில் ரசம், சூப் போல செய்து சாப்பிட்டு வரலாம். சொடக்கு தக்காளியின் இலைகளையும், கனிகளையும் இடித்து, அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு டம்பளர் அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

புற்றுநோய்:

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சொடக்கு தக்காளியை எடுத்துக் கொள்ளும் பொழுது புற்றுநோய் செல்கள் உடல் முழுவதும் அதிகம் பரவாமல் அதனுடைய வீரியத்தைக் குறைக்கிறது. சொடக்கு தக்காளியில் மிகவும் அரிதான விதனலைட்ஸ் என்னும் வேதிப்பொருள் உள்ளது. அதனால் தான் இதன் விலை வெளிநாடுகளில் கிட்டதட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இன்றைய காலகட்டங்களில் உலக அளவில் பல கோடி பேர் புற்றுநோயால் பாதிப்பு அடைந்துள்ளனர். வருமுன் காப்பதே சிறந்தது என்பது நம் தமிழர்களின் வழக்கு. எனவே புற்றுநோயை வரவிடாமல் தடுக்க இப்பொழுதிலிருந்தே சொடக்கு தக்காளி பழங்களை உணவில் பயன்படுத்துவோம். பெண்களுக்கு அதிக பாதிப்பை கொடுக்கும், மார்பக புற்றுநோய் ஏற்படாமலும் தடுக்கிறது.

எலும்புகளை பலப்படுத்துகிறது:

சொடக்கு தக்காளியில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது. மேலும் தக்காளியிலுள்ள பெக்டின் என்கிற வேதிப்பொருள் எலும்புகளுக்கு தேவையான அளவு கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் ஹெமாட்டிசம் மற்றும் டெர்மாட்டிஸ் போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. மூட்டுவலியால் அவதிபடுபவர்களும் எடுத்துக்கொள்ளலாம். வலியின் தீவிரத்தை உடனடியாக குறைக்க உதவுகிறது.

மலச்சிக்கல்:

உடல் செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவற்றை சரி செய்கிறது. செரிமான மண்டலம் குடல் இயக்கங்களை சீராக வைக்க உதவுகிறது. சொடக்கு தக்காளியில் அதிகம் நார்ச்சத்து உள்ளதால் வயிறு உபாதைகள் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத்தரும். உணவு எளிதில் ஜூரணமாகவும் உதவுகிறது.

இரத்தசோகை, அனிமீயா:

சொடக்கு தக்காளி பழங்களில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனால் ரத்த சோகை அனீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சொடக்கு தக்காளி பழங்களை தினமும் சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும். அதிக விலை கொடுத்து இரும்பு சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதால் சில பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது என்பது மறுக்கப்படுவதற்கில்லை. ஆனால் இயற்கை கொடுத்த அற்புதங்களில் பக்கவிளைவுகள் ஏற்படுவதில்லை.

நினைவாற்றல்:

சொடக்கு தக்காளி பழங்களை சாப்பிட்டு வருவதால் நினைவாற்றல் மூளைசெறிவுத்திறன் அதிகரிக்கிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அல்சைமர், டிமென்ஷியா போன்ற மூளை தொடர்பான நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

தாய்பால் அதிகரிக்க:

பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்க, இலைகளை பசைபோல அரைத்து மார்பின் மீது பூசிவர தாய்பால் சுரப்பு அதிகரிக்கும்.

15. வல்லாரைக் கீரைCentella asiaticaமூளை திறனை அதிகரிக்கும் வல்லாரை:நமது மூளையானது எப்போதும் சீராக இருந்தால் புத்துணர்ச்ச...
28/09/2023

15. வல்லாரைக் கீரை

Centella asiatica

மூளை திறனை அதிகரிக்கும் வல்லாரை:

நமது மூளையானது எப்போதும் சீராக இருந்தால் புத்துணர்ச்சியோடும், நல்ல ஆற்றலாகவும் இருக்கும். மூளை பகுதிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் அனைத்தும் இந்த வல்லாரை கீரையில் உள்ளது. வல்லாரையில் செரடோனின் என்று சொல்லக்கூடிய சத்து அதிகமாக இருப்பதனால் மூளையின் நரம்புகளை தூண்டி நினைவு திறனை அதிகரிக்க செய்யும். வளரும் குழந்தைக்கு வாரத்தில் இருமுறையாவது உணவில் வல்லாரை கீரை கொடுத்து வர ஞாபக திறன் அதிகரிக்கும்.

பற்களில் உள்ள கறை நீங்க:

சிலர் புகை பிடிப்பதால், வெற்றிலை பாக்கு போடுவதால், சிறிய குழந்தைகள் சரியாக பல் துலக்காததால் பற்களில் கறை படிந்து இருக்கும். பற்களில் உள்ள கறையை அகற்றுவதற்கு வல்லாரை கீரையை நிழலில் நன்றாக காய வைத்து பொடி செய்து தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் கறைகள் உள்ள பற்களில் தேய்த்து வந்தால் கறைகள் அனைத்தும் மாறிவிடும். பற்களில் உள்ள ஈறுகளும் நன்றாக வலுவுடன் இருக்கும்.

புண்கள் / யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை:

சிலர் யானைக்கால் நோயால் நடக்க முடியாமல் மிகவும் அவதிப்படுவார்கள். வல்லாரை கீரையை அரைத்து நோய் தாக்கிய இடத்தில் பற்று போட்டு இறுக்கமாக கட்டி வந்தால் யானைக்கால் தாக்கமானது குறையும். மேலும் புண், கட்டிகளினால் அவதிப்படுவோர் இந்த வல்லாரையை நன்றாக அரைத்து அதன் சாற்றினை புண்கள் மற்றும் கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்.

வயிற்று சம்பந்த பிரச்சனைக்கு தீர்வு:

வல்லாரையை அரைத்து அதன் சாறினை தினமும் குடித்து வந்தால் வயிற்றிலுள்ள புண்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்துவிடும். மேலும் வல்லாரை பொடியுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு, சீதக்கழிச்சல், வயிறு வலி, வயிற்று கடுப்பு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

கண் சம்பந்த நோய் குணமாகும்:

கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், வெயில் சூட்டினால் கண்கள் சிவப்படைதல் இது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்திலே கண்டறிந்தால் வல்லாரை கீரையை வைத்து சரி செய்யலாம். குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு முறையாவது வல்லாரை கீரையை உணவில் சேர்த்து கொடுத்து வந்தால் கண் பார்வைத்திறன் அதிகரிக்கும். முக்கியமாக மாலைக்கண் நோய் உள்ளவர்கள் வல்லாரை கீரையினை அரைத்து அதன் சாறினை பசும்பாலில் கலந்து குடித்துவந்தால் மாலைக்கண் நோய் முற்றிலும் குணமாகும்.

இரத்த சோகை குணமாகும்:

இன்று அதிகளவில் இளம் வயதினர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று இரத்த சோகை. இளம் வயதினர் அனைவருக்கும் இப்போது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்த அளவில் காணப்படுகிறது. வல்லாரை சாப்பிடுவதால் இரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.

பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் வலியை குறைக்கும்:

பெண்கள் மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலி, இடுப்பு வலி, முதுகு வலி போன்றவைகளை சந்தித்து வருகிறார்கள். இது போன்ற வலிகளிலிருந்து தப்பிக்க வல்லாரை கீரை சாறுடன் வெந்தயத்தை குழைத்து மாதவிடாய் நேரங்களில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் அனைத்து வலிகளும் குறையும். இந்த நேரத்தில் மாத்திரை உட்கொள்வதை தவிர்த்து வல்லாரை வைத்தே வலியினை சுலபமாக குறைத்துவிடலாம்.

Address

Batticaloa

Opening Hours

Tuesday 08:30 - 12:00
16:30 - 19:30
Wednesday 08:30 - 12:00
16:30 - 19:30
Thursday 08:30 - 12:00
16:30 - 19:30
Friday 08:30 - 12:00
16:30 - 19:30
Sunday 08:30 - 13:00

Telephone

+94764549247

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aathirai Siddha Medical ஆதிரை சித்த மருந்தகம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram