அகஸ்தியம் siddha ayurvedic care

அகஸ்தியம் siddha ayurvedic care Medical updatesDiseases and preventionHerbal products producing methods and saleMedical visits

வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள்!!..‌வெப்பத்தை எப்படி தணிப்பது??கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு உத...
27/03/2025

வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள்!!..‌

வெப்பத்தை எப்படி தணிப்பது??

கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எவ்வாறு உதவலாம்??

வெப்ப தாக்கத்தை எப்படி எதிர்கொண்டு செயல்படுவது?


#அகஸ்தியம்

 #பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!*  வெந்தயம்.    -  250gm*  ஓமம்               -  100gm*  கருஞ்சீரகம்  -  50gm* மேலே உள்ள...
29/01/2025

#பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!
* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
👉 இருதயம் சீராக இயங்குகிறது.
👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
👉 கண் பார்வை
தெளிவடைகிறது.
👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
👉மலச்சிக்கல் நீங்குகிறது.
👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

-அகஸ்தியம்

கடந்த மாதத்தில் வந்த, 'HMP வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது' என்ற தகவல் உலக நாடுகளை சற்று பீதியடைய வைத்தது. உடனடியாக,...
06/01/2025

கடந்த மாதத்தில் வந்த, 'HMP வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது' என்ற தகவல் உலக நாடுகளை சற்று பீதியடைய வைத்தது. உடனடியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாடுகளில் தீவிர கண்காணிப்புகளை முடுக்கிவிட்டது.

இருந்தும், இப்போது வரை வந்த தகவல்களின் படி, இந்தியாவில் கர்நாடகாவில் 3 மாதக் குழந்தை ஒன்றும், 8 மாதக் குழந்தை ஒன்றும், குஜராத்தில் 2 மாதக் குழந்தை ஒன்றும் HMP வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்பது மாதிரி, மீண்டும் ஒரு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

Human Metapneumovirus என்பதன் சுருக்கமே HMP வைரஸ். இது ஒரு சுவாசப்பாதையைத் தாக்கும் தொற்று நோயாகும்.
இந்த வைரஸ் உலகிற்கு புதிது அல்ல. இது கிட்டதட்ட 50 - 60 ஆண்டுகளாகவே உலகத்தில் இருந்து வருகிறது.

2001-ம் ஆண்டு, மருத்துவ ஆராய்ச்சியில் நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது.

பொதுவாகவே, இந்த வைரஸ் குளிர்காலங்களில் அதிகம் பரவும் தன்மையுடையது.

இது ஏனைய குளிர்கால வைரஸ்களான இன்ஃபளூயன்சா, ஆர்.எஸ் வி ஆகியவற்றுடன் சேர்ந்து பரவும் தன்மை கொண்டது.

யார் யார் பாதிக்கப்படுவார்கள்?
பொதுவாக அனைவருக்கும் சாதாரண தொற்றாகவே கடந்து செல்லும். எனினும் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள், அதிலும், குறிப்பாக ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், உடல் எடை குறைவான குழந்தைகள், பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்களுக்கு இந்த நோய் சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான சிகிச்சை கொடுத்தாலே சரி செய்துவிடலாம்.

அபாய அறிகுறிகளான மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றை சரியாக அறிந்து சிகிச்சை வழங்க வேண்டும்.

முதியவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்கள் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படும் போது சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.

மூச்சு திணறல், சுவாசக் கோளாறு போன்ற சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.

இது ஒரு தொற்று நோய். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலம் பரவும். அவர்களுடைய எச்சில், சளி ஆகியவை எங்கேயாவது தெறித்திருந்தால், அதை தெரியாமல் இன்னொருவர் தொட நேரிடும்போதோ அல்லது கைகளில் படும்போதோ, இந்த நோய் தொற்று பரவும்.

குழந்தைகளை எப்படி தாக்குகிறது?
இந்த வைரஸ் உலகில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால், இது இந்தியாவிலும் முன்னரே இருந்திருக்கிறது. ஏன், இப்போது கூட அறிகுறிகள் இல்லாமலும், நமக்கு தெரியாமலும் இருந்து வரலாம். குளிர்கால சீதோஷண் நிலையாக இருப்பதால் குழந்தைகளுக்கு தற்போது பரவி இருக்கலாம். மற்றபடி இந்தியா இப்போது தான் ஹெச்எம்பிவி தொற்றை சந்திக்கிறது என்பது வதந்தியாகும்.

எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது?

RT-PCR

Nucleic Acid Amplification Test (NAAT)

Immunofluorescence or Enzyme Immunoassay

ஆகிய மூன்று முறைகள் மூலம் இந்தத் தொற்றை கண்டுபிடிக்கலாம்.

இன்னொரு கொரோனாவா இது?
HMP வைரஸ் கொரோனா மாதிரி பெருந்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

கொரோனா வைரஸ் அப்போது புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட, உருவான வைரஸ். அதற்கான எதிர்ப்பு சக்தி அப்போது மனிதர்களிடம் இல்லை. அதனால், அந்த வைரஸ் பெருந்தொற்றாக மாறி, உலக முழுவதும் பரவியது. ஆனால், HMP வைரஸ் உலகில் பல வருடங்களாக இருந்து வரும் வைரஸாகும். இந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தியை மனிதர்களிடம் ஏற்கனவே இருக்கிறது.இது புதிய வைரஸ் அல்ல. அதனால், இப்போதைக்கு இந்த தொற்று பெரும்தொற்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடையாது.

மேலும், இதுகுறித்து மக்கள் பயப்பட தேவையில்லை.

- அகஸ்தியம் siddha ayurvedic care -
Dr.S.Sathish

 #உடல்_எடை_குறைய_வேண்டுமா?தினமும் காலை & மாலை  #சூரியநமஸ்காரம் செய்யுங்கள்...உணவு கட்டுபாடும் அவசியம் .. #சூரிய_நமஸ்காரம...
06/12/2024

#உடல்_எடை_குறைய_வேண்டுமா?

தினமும் காலை & மாலை #சூரியநமஸ்காரம் செய்யுங்கள்...உணவு கட்டுபாடும் அவசியம் ..

#சூரிய_நமஸ்காரம்_என்றால்_என்ன?

24 ஆசனங்களை ஒன்றிணைந்தது தான் சூரிய நமஸ்காரம். உடல் நலத்துக்காக மட்டுமின்றி யோக நெறியில் இது மிகவும் முக்கியமானதாகும்.

#யார்_செய்யலாம்?

சூரிய நமஸ்காரம் எல்லா வயதினரும் செய்யலாம். உடல் நோயை குணப்படுத்த சில காலம் மட்டும் வரை செய்துவிட்டு உடல் நலமானதும் பலர் யோகா செய்வதையே விட்டுவிடுவார்கள். அது சரியில்லை. யோகாவை தொடர்ந்து செய்வதால் தான் அதிக பலன் கிடைக்கும். தவிர மீண்டும் அந்த நோய் தாக்காமல் இருப்பதற்கு தொடர் பயிற்சி அவசியம். சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தவுடன் அதை வாழ்க்கையின் ஒரு ஒழுக்கநெறியாகவே கடைபிடிக்க வேண்டும். அதை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்தால் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அது ஆகிவிடும்.நோய்கள் எதுவும் நெருங்காது நீண்ட காலம் மன அமைதியுடன் வாழ வழி செய்யும்.

#எப்படி_செய்வது?

1. கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும். கைகளை ஒன்றாக இணைத்து மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும். இந்த நிலையின் பெயர் பிராண வாசனம் என்பார்கள்.

2. மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் உயர்த்தவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும். இந்த ஆசன நிலைக்கு ஹஸ்த உட்டானாசனம் என்று பெயர்.

3. மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது பாத ஹஸ்தாசனம்.

4. மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும். இது அஸ்வ சஞ்சலான ஆசனம்.

5. மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்று உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும். இதற்கு துவிபாத அஸ்வ சஞ்சலான ஆசனம் என்று பெயர்

6. மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை தரையில் படுக்க வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை வெளியே விடவும். இது அஸ்டாங்க நமஸ்காரம்.

7. மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியும் அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர். இதுவே புஜங்காசனம்.

8. மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும். இந்த நிலைக்கு அத முக்த சவாசனம் என்று பெயர்,

9. மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்.இது அஸ்வ சஞ்சலான ஆசனம்.

10. வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இது பாத ஹஸ்தாசனம்

11. மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும். இது ஹஸ்த உட்டானாசனம்

12. மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும்.

பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுதான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையாகும். இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யவும்

#என்ன_பலன்கள்?

சூரிய நமஸ்காரம் உங்கள் நாடிகளைத் திறந்து, உங்களுக்குள் இருக்கும் சூரியனை தூண்டிவிடுகிறது, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் கணக்கிலடங்காத பலன்களைப் பெற முடியும். இதன் மூலம் நீங்கள் மிகவும் துடிப்பாக, உயிர்ப்புடன் இருக்க முடியும். தொடர்ந்து செய்து வர, அறிவுக் கூர்மை அதிகரிக்கும், உடல் மற்றும் மன நலத்திற்கும் ஏற்றது. நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி குணமாகும்.

உடலில் சோர்வாக இருப்பவர்கள்...சூரியநமஸ்காரம் செய்தால், தூங்கும் நேரம் மிகவும் குறைந்து, எப்போதும் ஒரு உயர்ந்த நிலையிலேயே இருக்க முடியும். எந்த முயற்சியும் செய்யாமலேயே தூக்கம் 4 அல்லது 41/2 மணி நேரமாக மிகச் சுலபத்தில் குறைந்துவிடும்.

அடி வயிற்றில் உள்ள உறுப்புகளுக்கு நல்லது. ஜீரண சக்திக்கு உகந்தது.

தோலுக்கு புத்துணர்ச்சி அளித்து, தோல் வியாதிகளைத் தடுக்கும்.

முதுகெலும்பையும், மார்பெலும்பையும் சீராக இயக்குகிறது.

சில ஜீரண பிரச்சினைகளை சரி செய்கிறது.

சில வாரப் பயிற்சியிலேயே உங்கள் உற்பத்தித் திறனும், செயல்திறனும் மேம்பட்டுவிடும்.

யோகப் பயிற்சி செய்வதால், ஒருவர் நாள்பட்ட நோய்களான ஆஸ்துமா, இரத்தக் கொதிப்பு, மூட்டு வலி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியும்.

#எச்சரிக்கை

முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம்.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும். யோக பயிற்சியாளர்களிடம் நேரடியான ஆலோசனைகள் பெற்ற பின்னரே தொடர்ந்து செய்ய வேண்டும்.

-அகஸ்தியம்

*பூண்டு பால்*மூட்டு வலிசர்க்கரைஉயர் ரத்த அழுத்தம் இந்த மூன்று நோய்களுக்கும் ஒரே மருந்துதேவையான பொருட்கள்உரித்த பூண்டிதழ்...
04/11/2024

*பூண்டு பால்*

மூட்டு வலி
சர்க்கரை
உயர் ரத்த அழுத்தம்

இந்த மூன்று நோய்களுக்கும்
ஒரே மருந்து

தேவையான பொருட்கள்

உரித்த பூண்டிதழ் 6 பல்
பசும்பால் 100 மில்லி
தண்ணீர் 100 மில்லி
பனைவெல்லம் 5 கிராம்

செய்முறை

பசும்பால் தண்ணீர் இரண்டையும் ஒன்றாக கலந்து லேசான கொதி வரும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும்

அப்படி கொதிக்க வைத்த பாலினை இந்த பூண்டில் கொஞ்சம் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்

அதன் பின் அரைத்த இந்த விழுதை ஏற்கனவே கொதிக்க வைத்திருக்கும் பாலில் போட்டு நன்றாக மீண்டும் காய்ச்சி கொள்ளவேண்டும்

இந்தப் பால் பாதியாக சுண்டியதும் ஆற வைத்து பனைவெல்லம் சேர்த்து பருகலாம்

இதுதான் சித்தர்கள் நமக்கு அருளிய பூண்டுப்பால் செய்யும் முறையாகும்

இந்த பூண்டு பாலின் பயன்கள்

உடலில் உள்ள அனைத்து வாய்வுகளும் நீங்கிவிடும்

செரிமானக் கோளாறுகள் நீங்கும்
இதனால் சர்க்கரை நோய் குறையும்

உடலில் சூடு குறையும்
இதனால் பித்தம் சமநிலைப்படும்

உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒரு அற்புதமான மருந்து இது
அனுபவ உண்மை

தொண்டை சளி நீங்கும்
உடலிலுள்ள சீதளம் குணமாகும்
சிலேத்தும குணம் சமநிலைப்படும்

வாதநோய்கள் நீங்கும்
இதனால் மூட்டுவலி குணமாகும் என்று சித்தர்களே கூறியிருக்கின்றார்கள்

இந்தப் பூண்டுப் பாலினை பருகுவதால் வாதம் பித்தம் சிலேத்தும் எனும் முக்குணங்கள் சமமாகும் என சித்தர்களே கூறி இருப்பதால் உடலில் எந்த நோய்களும் அண்டாது இதனால் வேறு நோய்களும் உடலில் தோன்றாது என்பது உறுதி

இதய நோயாளிகள் குளிர் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வே...
03/11/2024

இதய நோயாளிகள் குளிர் காலங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்

ஏன்???

இதயத்தின் ரத்த நாளங்களில் அதிலும் குறிப்பாக இதயத்துக்கு ரத்த ஓட்டமளிக்கும் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களை ISCHEMIC HEART DISEASE PATIENTS அதாவது
இதய நாள குருதி ஓட்டக்குறைபாட்டு நோய் இருப்பவர்கள் என்று கருதுகிறோம்.

இத்தகையோர் எழுந்து நடந்தாலும் மூச்சு வாங்கும் , இளைப்பு எடுக்கும் , கொஞ்சம் ஓடினாலும் நெஞ்சுப்பகுதியில் கனமாக இருக்கும் , வலி தோன்றும்
எப்போதும் ஒரு வித சோர்வும் உடல் வலியும் இருந்து கொண்டே இருக்கும்.
இரண்டு கால்களின் கணுக்கால் பகுதிக்குக் கீழ் நீர் சுரந்து கொண்டு வீக்கம் இருக்கும்.

இத்தகைய அறிகுறிகள் தென்படுமாயின் அது இதய நோயின் அறிகுறிகள் என்று உடனே உணர்ந்து இதய நோய் சிறப்பு மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை எடுக்க வேண்டும்.

பொதுவாக இத்தகைய இதய ரத்த நாள சுருக்கம்/ அடைப்பு போன்றவை 45+ வயதினருக்கே அதிகம் நேர்கிறது.
எனினும் இளைஞர்களுக்கு நேராது என்று அருதியிட்டுக் கூறுவதற்கில்லை. தற்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு இளைஞர்கள் மாரடைப்பினாலும் இதய நோயினாலும் மரணமடைந்து வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்கிறேன்.

குறிப்பாக 60+ வயதுடையவர்களுக்கு இதய ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் ரத்த ஓட்டக்குறைபாடு இனம் காணப்படாமல் அமைதியாக ஒளிந்திருக்கும்.
முதியவர்கள் பொதுவாக தங்களது நடமாட்டத்தை சுருக்கிக்கொள்வதால் வெளியே தெரியாமல் இருக்கும்.

இத்தகையோர் குளிர் காலங்களில் அதிலும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடமாடினால் குறிப்பாக வாக்கிங் செல்வது , வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது ,
வழிபாட்டுக்கு முன்பு குளிர்ந்த நீரில் குளிப்பது( அதிலும் குளிரான நீர் நிலைகளில் இறங்கிக் குளிப்பது) போன்ற காரியங்களில் அதிகம் ஈடுபடுவதைக் காண முடிகின்றது.

குளிர் காலங்களில் தான் அதிகமான மக்கள் மாரடைப்புக்கு உள்ளாகின்றனர்.
மாரடைப்பு சார்ந்த மரணங்களும் குளிர் காலங்களில் தான் ஜாஸ்தியாக பதிவாகின்றன.
இதனுடன் சேர்த்து முதியோர்களுக்கு மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் எனும் பக்க வாதமும் ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகின்றது.

இதற்கான காரணம்

இதய ரத்த நாள அடைப்பு அல்லது குருதி ஓட்டக் குறைபாடு உள்ள ஒருவர் குளிர்ச்சி மிகுந்த காற்று அல்லது நீருக்கு தன்னை வெளிப்படுத்தும் போது
உடல் குளிர்ச்சி அடைகிறது.

இத்தகைய குளிர்ச்சி நிலையை நமது உடல் விரும்புவதில்லை. அதனால் உடலை சூடுபடுத்த உடலின் பாகங்கள் முழுவதும் குறிப்பாக தசைகளுக்கு ரத்தம் பாய்ச்சப்படுகிறது.

இதற்காக இதயம் கூடுதலாக பணி புரிந்து துடிக்க வேண்டியிருக்கிறது.
இதயத்தின் துடிப்பு விசை மற்றும் வேகம் இரண்டும் ஒருசேரக் கூடுகிறது.

ஏற்கனவே பழுதடைந்த இதயத்தை அதிக பணி செய்யக் கட்டாயப்படுத்தும் போது
பளுவை ஏற்க முடியாமல் துடிப்பை நிறுத்தி விடுகிறது அல்லது தாறுமாறாகத் துடிக்கிறது.

இத்தகைய நிலையில்
இதயம் திடீரென்று செயலிழக்கலாம்
அல்லது
இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்
அல்லது
மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம்
அல்லது
இதயம் தறிகெட்டுத் துடிக்கலாம்.

இறுதியில் முறையான அவசியமான அவசர சிகிச்சை கிடைக்காவிடில் மரணம் ஏற்படலாம்.

எனவே முதியோர்களுக்கும்
இதய நோய் / இதய ரத்த நாள அடைப்பு நோய்/ இதய ரத்த நாள குருதி ஓட்டத்தில் குறைபாடு இருப்பவர்களுக்கு பொதுவான பணிவான அறிவுரை யாதெனில்

குளிர்காலங்களில் தயவு கூர்ந்து வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருக்கும் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள்.

குளிர்காலங்களில் அதிகாலை வாக்கிங் செல்வதைப்பற்றி நன்கு சிந்தித்து முடிவு எடுங்கள். மாலை நேர வாக்கிங் நல்லது

அதிகாலை வழிபாடு போன்றவற்றை வீட்டிலேயே அமைத்துக் கொள்வதைப் பற்றியும் சிந்தியுங்கள். அதுவே உங்களுக்குப் பாதுகாப்பானது.

குளிர்ச்சியான மலைப்பிரதேசங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நலம்.

குளிர்ச்சியான நீரில் குளிப்பதைக் காட்டிலும் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது சிறந்தது

குளிர்ச்சியான நீர்நிலைகளில் அதிகாலை வேளைகளில் இறங்கிக் குளிப்பதை தவிர்க்கலாம்.

குளிர் காலங்களில் வெதுவெதுப்பான பானங்களை பருகுவதில் நாட்டம் கொள்ளுங்கள்.
வெதுவெதுப்பாக உணர வைக்கும் ஆடைகளை அணியுங்கள்.

தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை மருந்துகளை தவறாமல் உட்கொள்ளுங்கள்
மருத்துவரிடம் முறையான மறுசந்திப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.

இதய நோயின் அறிகுறிகள் ஏற்பட்டால்
இதய ரத்த நாள அடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்.
புற நோயாளிகள் பிரிவிற்குச் சென்று காத்திருந்து பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.

குளிர் காலத்தில் பலருக்கும் பயன்படும் என்ற நல்லெண்ணத்தில் எழுதப்பட்ட பதிவு.

நன்றி


💚🥚சர்வதேச முட்டை ஆணையத்தால் 1996-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை இந்த தினம் அனுச...
14/10/2024

💚🥚சர்வதேச முட்டை ஆணையத்தால் 1996-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமை இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடம் முட்டை பயன்பாட்டினை அதிகரிப்பதே இந்த தினம் கொண்டாடுப்படுவதன் முக்கிய குறிக்கோளாகும்.

💚🥚முட்டை என்னும் அற்புத உணவின் பயனையும், நமதுவாழ்வில் அது வகிக்கும் பங்கையும் உலக மக்களுக்கு எடுத்துரைக்க உதவும் நாளாக இது அமைகிறது.

💚🥚குறைந்த விலையில் கிடைக்கப்பெறும் அதிக ஊட்டச்சத்துகொண்ட உணவு முட்டை மட்டும்தான்.

💚🥚எனவே, வளரும் குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் சாப்பிடலாம்.

💚🥚ஊட்டச்சத்துகள் மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் முட்டையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வைட்டமின்கள் - ஏ, பி 12, பி 2, பி 5, இ ஆகியவற்றுடன் கோலின், சீயாந்தீன் போன்ற கனிமச்சத்துகளும் முட்டையில் நிறைந்துள்ளன.

💚🥚ஒரு கோழி முட்டையில் 80 கலோரி சத்து இருக்கிறது. முட்டையை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் கலோரி சத்து குறைவதில்லை. இதில் 60 கலோரி முட்டையின் மஞ்சள் கருவில் இருக்கிறது. 20 கலோரிதான் வெள்ளைக் கருவில் இருக்கிறது.

💚🥚தினமும் 300 மில்லி கிராம் கொழுப்புச் சத்து ஒருவருக்குத் தேவைப்படுகிறது. முட்டையில் DHAஎன்னும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் அது நரம்பு செல்களின் இணைப்புகளுக்கு உதவுகிறது.




இயற்கை மருத்துவ குறிப்புகள் சில..
26/09/2024

இயற்கை மருத்துவ குறிப்புகள் சில..

✅தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை!!✅அதற்குத் துணை நிற்பது நம் அனைவரின் கடமை!!இடைவெளியினை குறைப்போம்!!அனைவருக்கும் ...
01/08/2024

✅தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை!!
✅அதற்குத் துணை நிற்பது நம் அனைவரின் கடமை!!

இடைவெளியினை குறைப்போம்!!
அனைவருக்கும் தாய்ப்பாலூட்டல் ஆதரவு கொடுப்போம்!!

உலக தாய்ப்பால் வாரம்!
ஆகஸ்ட் 1 முதல் 7 வரை


#அகஸ்தியம்

 #அகஸ்தியம்  #வாரம்ஒருயோகாசனம் #அர்த்த_சிரசாசனம்ஆசனங்களின் அரசன் சிரசாசனா ....சிரசாசனா செய்வதால் கிடைக்கும் பலன்கள் இதில...
06/07/2024

#அகஸ்தியம்

#வாரம்ஒருயோகாசனம்

#அர்த்த_சிரசாசனம்

ஆசனங்களின் அரசன் சிரசாசனா ....

சிரசாசனா செய்வதால் கிடைக்கும் பலன்கள் இதில் 60% கிடைக்கும்...

தூக்கமின்மை ...
பார்வை குறைபாடு ..
முடியுதிர்வு ...
தலைவலி...
சளி தொந்தரவு...

நீங்க இவ்வாசனம் உதவும்...

#பெயர்_விளக்கம் : அர்த்த என்றால் பாதி என்று பொருள். சிரசு என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூச்சுத்திணறல் குறையும். நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது.

#செய்முறை : வஜ்ராசனத்தில் உட்காரவும், கைவிரல்களை கோர்த்து குனிந்து முழங்கையிலிருந்து கைவிரல்கள் வரை தரை விரிப்பின் மேல் படிய வைக்க வேண்டும். தலையின் மேல் பகுதியை தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் தலையின் பின்புறத்தை தாங்கிக் கொள்ளும்படி இருக்கட்டும். முழங்கைகளை தரையிலிருந்து உயர்த்தி கால் விரல்களை முகத்தை நோக்கி சற்று நகர்த்தி வைக்கவும். முழங்கால்கள் மடங்காமல் இருக்கட்டும்.


இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு கால்களை மடக்கி முழங்கால்களை தரைவிரிப்பின் மேலே வைத்து உடனே தலையை மேலே தூக்காமல் சில வினாடிகள் இருந்து பிறகு வஜ்ராசன நிலைக்கு வரவும். அதிலிருந்து கால்களை நீட்டி வைத்து ஓய்வு நிலைக்கு செல்லவும். (சுவாசனம்). இந்த ஆசனத்தை 1-3 முறை பயிற்சி செய்யலாம்.

கவனம் செலுத்த வேண்டிய இடம் : மூச்சு, தலை, கழுத்து மற்றும் சகஸ்ர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

#பயிற்சிக்_குறிப்பு : புதியதாக அர்த்த சிரசாசனம் செய்யும் போது ஒரு நிமிடம் கூட செய்ய இயலாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யவும்.

#தடைக்குறிப்பு : கண், காது, மூக்கு, தொண்டை இவைகளில் நோய் உண்டான போதும், இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, கடினமான மலச்சிக்கல், மிக அசுத்தமான ரத்தம், கழுத்துவலி, தலைவலி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களும், கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

#பயன்கள் : மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால், சிரசாசனம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் ஓரளவு இந்த ஆசனத்திற்கும் உண்டு. குறைந்த ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. மூச்சுத்திணறல் குறையும். நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது.

- அகஸ்தியம் siddha ayurvedic care

✅100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் இரண்டு கிராம் இரும்புச் சத்து உள்ளது.✅100 கிராம் பேரிச்சம் பழத்தில் 1 கிராம் இரும்பு...
02/07/2024

✅100 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தில் இரண்டு கிராம் இரும்புச் சத்து உள்ளது.
✅100 கிராம் பேரிச்சம் பழத்தில் 1 கிராம் இரும்புச் சத்து மட்டுமே உள்ளது

✅விட்டிலிகோ (Vitiligo)என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். வெண்புள்ளி தொடர்பாக விழிப்புணர்வை ஏ...
27/06/2024

✅விட்டிலிகோ (Vitiligo)என்று அழைக்கப்படும் வெண்புள்ளி என்பது சருமம் சார்ந்த ஒரு நோய். வெண்புள்ளி தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25ஆம் தேதி உலக வெண்புள்ளி தினமாகக் (World Vitiligo Day) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

✅ “குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் வெண்புள்ளி ஏற்படலாம். மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் நிறமி உற்பத்தி செய்யும் செல்கள் இதில் அழிக்கப்படுகின்றன.

✅ மெலனோசைட்டுகள் நமது சருமத்துக்கு பழுப்பு நிறத்தை அளிக்கும் மெலனின் என்பதை உற்பத்தி செய்கின்றன. இந்த செல்களின் இழப்பு வெள்ளைத் திட்டுகளை ஏற்படுத்தி நிற இழப்புக்கு வழிவகுக்கின்றன.

🟩ஒருவருக்கு வெண்புள்ளி ஏற்படுவதற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்று குறிப்பிடும் தினேஷ், அதேநேரத்தில் காரணம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளதாகத் தெரிவித்தார்.

🟩வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம்

✅ 1⃣வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம்
நரம்புகளின் செயலிழப்பால் சீர்கேடான நரம்பு சப்ளை ஏற்படுவதைத் தொடர்ந்து மெலனோசைட்டுகள் சேதமடையலாம்

2⃣மெலனோசைட்டுகள் தனக்குத் தானே அழிவை ஏற்படுத்திக்கொள்ளும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்

3⃣சில நேரங்களில் உடல் அதனுடைய சொந்த திசுவை அந்நிய பொருள் என்று நினைத்து அழிக்கிறது. இது தன்னுடல் தாங்குதிறன் (Auto immune) எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது. மெலனோசைட் சேதமடைவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம்.

✅ சிலருக்கு பரம்பரையாக மரபணு சார்ந்து வெண்புள்ளி ஏற்படலாம் என்று தெரிவித்த தினேஷ், “ தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்த சோகையின் தீவிர நிலை போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம்.

✅வெண்புள்ளி துரிதமாக அதிகரிப்பதற்குச் சில நேரங்களில் மன அழுத்தமும் காரணமாக இருக்கிறது.

🟩வெண்புள்ளியின் வகைகள்

உடலில் பல்வேறு பாகங்களிலும் வெண்புள்ளி ஏற்படலாம். அது தோன்றும் பாகத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையாக அவை அழைக்கப்படுகின்றன.

1⃣உதடு- முனை வெண்புள்ளி (Lip-tip vitiligo)- உதடு, கை-கால் விரல்களில் ஏற்படும்

2⃣பிரிவுகளாக ஏற்படும் வெண்புள்ளி (Segmental vitiligo)- உடலின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும்
பொதுவான வெண்புள்ளி (Generalized vitiligo)

3⃣சருமம் முழுவதும் மெலனோசைட்களால் பாதிக்கப்பட்டு, முழுமையாக வெள்ளையாகிவிடும்

✅இதேபோல் உதட்டின் உள்பகுதி, பிறப்புறுப்பின் உள்பகுதி போன்ற இடங்களில் ஏற்படும் வெண்புள்ளி மியுகோசல் வெண்புள்ளி (Mucosal vitiligo) என்று அழைக்கப்படுகிறது.

🟩வெண்புள்ளிக்கான சிகிச்சை

“வாய்வழிவாக அளிக்கப்படும் மருந்துகள் மற்றும் உடலில் பூசும் களிம்புகள்(Creams) மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது ஒரு வகை. இது நோய் பரவுவதை நிறுத்தி பெரும்பாலான பகுதிகளில் நிறமியை மீண்டும் பெற உதவுகிறது.

அடுத்ததாக UV தெரப்பி. இதில், பாதிக்கப்பட்ட பகுதியில் புற ஊதா ஒளி செலுத்தப்பட்டு அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மூன்றாவதாக இருப்பது அறுவை சிகிச்சை. உடலில் வெண்புள்ளி பாதிப்பில்லாத பகுதியில் இருந்து தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் அறுவை சிகிச்சை மூலம் மாற்றுவது.

இது ஸ்கின் க்ராப்டிங்க்' (Skin Grafting) என்று அழைக்கப்படுகிறது.

எனினும், வெண்புள்ளி பரவல் நிலைத்தன்மையை அடைந்த பிறகுதான் இந்த சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.

🟩முழுவதுமாக குணப்படுத்த முடியாது
மேற்கொண்டு பேசிய அவர், “வெண்புள்ளி என்பது ஆட்டோ இம்யூன் நோய். எனவே, இதை முழுவதுமாகக் குணப்படுத்த முடியாது.

சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வெண்புள்ளி ஏற்படலாம். சிகிச்சையால் அது தீவிரமடைவதைத் தாமதப்படுத்த முடியும், மேலும் பரவுவதைத் தடுக்க முடியும் அவ்வளவுதான்.

எனவே, சிகிச்சையை நிறுத்திய பிறகு நோய் மீண்டும் ஏற்படலாம். வெண்புள்ளி தொடர்பாக ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதன் மூலம் திறம்பட சிகிச்சை அளிக்க முடியும்.

முறையான சிகிச்சைகள், தொடர் கவனிப்பு ஆகியவை மூலம் நிறமியை முழுமையாக பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது,” எனவும் தெரிவித்தார்.

🟩வெண்புள்ளி தொற்றுநோயா?
வெண்புள்ளி தொற்றுநோய் என்ற எண்ணம் பலரிடமும் இருக்கிறது. ஆனால், நிச்சயமாக வெண்புள்ளி தொற்றுநோய் இல்லை.

✅“ஒருசிலர் திருமணம் செய்துகொள்வதற்கு முன்புகூட என்னிடம் வந்து கேட்பார்கள். சொல்லப்போனால், மணமகனுக்கோ மணமகளுக்கோ கூட வெண்புள்ளி இருக்காது.

✅அவர்களின் தாத்தாவுக்கோ அல்லது பாட்டிக்கோ இருந்திருக்கலாம். திருமணம் செய்துகொள்வதால், தங்களுக்கும் வெண்புள்ளி பாதிப்பு ஏற்படுமா என்று கேட்பார்கள். ஆனால், ஒருவரைத் தொடுவதன் மூலம் வெண்புள்ளி பரவாது.

✅நிறைய பேர் வெண்புள்ளியை தொழுநோய் (leprosy) என்று தவறாக நினைத்துக் கொள்கின்றனர். வெண்புள்ளி என்பது தொற்றுநோய் அல்ல என்பதால் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்குவதை நாம் தவிர்க்க வேண்டும். இது தொடர்பாகப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஜூன் 25
உலக வெண்புள்ளி நோய் தினம்
உலக விட்டிலிகோ நோய் தினம்




# அகஸ்தியம் siddha ayurvedic care

Address

Batticaloa

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Sunday 09:00 - 12:00

Telephone

+94770232739

Website

Alerts

Be the first to know and let us send you an email when அகஸ்தியம் siddha ayurvedic care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to அகஸ்தியம் siddha ayurvedic care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram