புராதன இராஜயோகம்

புராதன இராஜயோகம் அனைத்து மன நோய்களையும் உடல் நோய்களையும் தியானத்தின் மூலம் சுகப்படுத்துங்கள்.

புராதன இராஜயோகம் என்பது 5000 வருடங்களுக்கு முன் பாரத கண்டத்தில் வாழ்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இலகுவான யோக முறையாகும். இதில், உயிருக்குள் சென்று அனைத்து உடல் நோய்களையும் குணப்படுத்தும் முறை, அனைத்து மன நோய்களையும் குணப்படுத்தும் முறை, அனைத்து தீய குணங்களையும் நற்குணங்களாக மாற்றும் முறை போன்றவை அடங்கியுள்ளன. இதை ஒருவர் கற்பதால் மருத்துவர் எவரும் இல்லாமலேயே தமது அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றலை பெற்று விடுவார். இந்த இலகுவான யோக முறையினூடாக நோய்களை குணமாக்குவதோடு ஆன்மாவிலுள்ள ஏழு நற்குணங்களையும், எட்டு சக்திகளையும் (அஷ்ட சக்திகள்), முப்பத்தாறு தெய்வீக குணங்களையும் விருத்தி செய்து கொள்ள முடியும். இவைகளே ஒரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய முக்கியமான பண்புகள் ஆகும். இப்படிப்பட்ட பண்புகள் அனைத்தும் நிரம்பியிருந்தால் அவர் தேவதை அல்லது தெய்வீகமானவர் என்று அழைக்கப்படுவார். இப் பண்புகளை பெற்றுக்கொள்வதற்காகவே ரிஷிகளும் முனிவர்களும் சாதுக்களும் சந்நியாசிகளும் காட்டில் பல காலம் தவம் செய்து வருகின்றார்கள். ஆனால், இதில் காட்டிற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. கண்களை மூடி தியானிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்து பயிற்சிகளும் இலகுவான வழி முறையினூடாகவே கொடுக்கப்படுகின்றது.

தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பவர்கள் மற்றும் தீய குணங்களைக் கொண்டவர்கள் மற்றும் தனக்குள் உள்ள நற்குணங்களை பெருக்க வேண்டும் என நினைப்பவர்கள் அனைவரும் இப்பயிற்சியில் ஈடுபடலாம். இந்த புனிதப் பயிற்சியினூடாக ஆன்மா ஈடேற்றப்படுவதுடன் அறிவு, ஆரோக்கியம், ஆயுள், ஆற்றல், அழகு, உடல் வலிமை வளர்வதுடன் நற்பண்புகளும் வளர ஆரம்பிக்கும்.

இப்பயிற்சிகளானது கடந்த 15 வருட காலமாக இராஜயோகத்தை பயிற்சி செய்து வருபவரும் தனக்குள் இருந்த நோய்நொடிகள் மற்றும் தீய குணங்கள், தீய பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தவராலேயே வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சிக் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. அனைத்தும் இலவசம்.

நன்றி, ௐ சாந்தி.

19/05/2024

நான் ஏன் இராஜயோகத்திற்கு மிக
அதிகமான முக்கியத்துவம்
கொடுக்கின்றேன்?
---------------------------------------------------------------

ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.

நான் ஏன் இராஜயோகத்திற்கு மிக அதிகமான முக்கியத்துவம் கொடுக்கின்றேன்?

இராஜயோகம் என்றால், யோகங்களில் மிகச்சிறந்த யோக முறை என்று அர்த்தமாகும். இராஜயோகம் என்றால் மனிதர்களை தேவர்களாக்குகின்ற வித்தையாகும். கல்வியாகும். இராஜயோகம் என்றால் மனிதர்களின் மூன்றாவது கண்ணைத் திறக்கின்ற சாவியாகும். இராஜயோகம் என்றால் உலகை இயக்குகின்ற கடவுளின் கல்வியாகும்.

இராஜயோகத்திற்கு ஏராளமான பெருமைகள் உள்ளன. இராஜயோகத்தை கற்பவர்கள் பாக்கியசாலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இராஜயோகம்! இராஜயோகம்!! இராஜயோகம்!!! இராஜயோகத்தைத் தவிர உங்களுக்கு வேறெதுவும் தெரியாதா?

தெரியாது மக்களே! தெரியாது.

இராஜயோகம் என்பது உயிர் வாழ்வதற்கான கல்வியாகும். 'உயிர் வாழ்வதற்கான கல்வியை விட்டுவிட்டு வேறு எதை தெரிந்துகொள்ள வேண்டும்' கூறுங்கள் பார்ப்போம்.

உயிர் வாழ்வதற்கான கல்வியா? உயிர் வாழ்வதற்கும் கல்வி ஒன்று இருக்கிறதா?

ஆமாம், உயிர் வாழ்வதற்கு கல்வி ஒன்று இருக்கிறது. உயிரில்லாமல் மனிதர்களால் வாழ முடியாது. உயிரை தக்கவைக்க வேண்டுமென்றால், உயிரை ஆரோக்கியமாக பாதுகாக்க வேண்டுமென்றால், உயிரிலுள்ள தீய குணங்களை அல்லது தீய பதிவுகளை சுத்தமாக்க வேண்டுமென்றால், கல்வி ஒன்று அவசியமாகும்.

உயிர் கல்வி கற்பிக்கப்படாததே மனிதர்கள் தீயவர்களாகுவதற்கு காரணமாகும். உயிர் கல்வியை கற்பிப்பதற்கு உயிரை அறிந்த கடவுள் இந்த உலகிற்குள் வர வேண்டும். மனிதர்களால் உயிரை அறிய முடியாது.

மனிதர்கள் பௌதீகத்தை அறிபவர்கள் ஆவார்கள். பௌதீகத்தை தாண்டி ஆழமான விடயங்களுக்கு செல்லவேண்டுமென்றால், கடவுள் ஒருவர் வரவே வேண்டும். கடவுளுக்கு மட்டுமே உயிர் பற்றிய ஞானம் பிரபஞ்சத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.

உயிர் பற்றிய ஞானமா.. அது என்ன உயிர் பற்றிய ஞானம்?

உயிர் பற்றிய ஞானம் என்றால், உயிருக்குள் என்னென்ன விடயங்கள் காணப்படுகின்றன? அவற்றை எவ்வாறு உயிர்ப்பிப்பது? அவற்றை உயிர்ப்பிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும்? போன்றவைகளே உயிர் பற்றிய ஞானமாகும்.

உயிரை உயிர்ப்பிப்பதா! அது என்ன உயிர்ப்பிப்பது?

உயிர்ப்பிப்பது என்றால்,

"உயிருக்குள் காணப்படுகின்ற ஏழு நற்குணங்கள், எட்டு சக்திகள், 36 தெய்வீக குணங்கள் ஆகியவற்றை சக்திப்படுத்துவதாகும்.

உயிருக்குள் மொத்தமாக 16 ஆற்றல் புள்ளிகள் காணப்படுகின்றன. 16 ஆற்றல் புள்ளிகளை சக்திப்படுத்தினால் 16 பேறுகளை அடைய முடியும். 16 பேறுகளே மனிதனுக்கு மிக முக்கியமான பேறுகள் ஆகும். "பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க" என வாழ்த்துவது 16 பேறுகளையே குறிக்கின்றது.

16 பேறுகள் சக்தியாக மாற மாற மேலுள்ள அல்லது மேலே குறிப்பிட்ட ஏழு நற்குணங்கள், எட்டு சக்திகள், முப்பத்தாறு தெய்வீக குணங்கள் சக்தி பெற ஆரம்பிக்கும்.

மனிதர்களுக்கு 16 பேறுகளைப்பற்றி தெரியாததால், மனிதர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் 16 பேறுகள் என்பது கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை, இயற்கையாகவே கிடைக்கின்ற பாக்கியம், முயற்சிகளால் கிடைக்கின்ற பேறுகள் என்று.

16 பேறுகள் என்பது உயிருக்குள் காணப்படுகின்ற 16 ஆற்றல் புள்ளிகள் என்பது எவருக்கும் விளங்குவதில்லை."

என்ன!!! உயிருக்குள் 16 ஆற்றல் புள்ளிகள் இருக்கின்றதா? உலகில் இதைப்பற்றி யாரும் கூறவே இல்லையே?

ஆமாம். உலகில் யாரும் 16 ஆற்றல் புள்ளிகளைப்பற்றி கூறவில்லை. 16 ஆற்றல் புள்ளிகள் என்பது 16 ஆற்றல்களை உயிர்ப்பிக்கின்ற மிக மிக நுட்பமான புள்ளிகளாகும். மிக மிக நுட்பமானது என்றால், தற்போது காணப்படுகின்ற மிகவும் சக்திவாய்ந்த நுணுக்குக்காட்டிகளுக்குக் கூட கண்டுபிடிக்க முடியாத அளவு என்று அர்த்தமாகும்.

குறித்த அந்த நுட்பமான புள்ளிகளே மனிதர்களின் ஆற்றல்களை தீர்மானிக்கின்றன.

என்ன! உயிருக்குள் இப்படியொரு தொழில்நுட்பம் காணப்படுகின்றதா?

ஆமாம், காணப்படுகின்றது.

உயிர் என்றால் அழியாத பொருள் என்று அர்த்தமாகும். அழியாத ஆத்மா என்றும் எடுத்துக்கொள்ளலாம். உயிருக்குள் காணப்படுகின்ற தொழில்நுட்பமே மறு வடிவம் பெற்று புரொசசர் என்று அழைக்கப்படுகின்ற சின்னஞ்சிறு செயலிகளுக்குள் காணப்படுகின்றன. சின்னஞ்சிறு செயலிகளே தற்போதைய தொழில்நுட்ப உலகை ஆண்டு வருகின்றன.

தற்போதைய தொழில்நுட்ப உலகை எடுத்துக்கொண்டால், செயலிகளே அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. கைத்தொலைபேசிகளாகட்டும், கணினித் தொழில்நுட்பங்களாகட்டும், கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு தொழில்நுட்பங்களாகட்டும் அனைத்திற்கும் செயலிகளே முக்கியமாகும்.

செயலிகளுக்குள் காணப்படுகின்ற மனித கட்டளைகளே செயலிகளை செயற்பட வைக்கின்றன. செயலிகள் செயற்படும்போது குறித்த தொழில்நுட்பம் அல்லது இயந்திரம் மனிதர்கள் கூறுகின்ற கட்டளைகளுக்கு ஏற்ப இயங்க ஆரம்பிக்கின்றது.

செயலிகளை கண்டுபிடித்த மனிதனுக்கு உயிரைப்பற்றி தெரியாமல் போனது மாபெரும் அவமானமாகும்.

கடவுள் வந்து கூறியிருக்காவிட்டால் எவருக்கும் எதுவும் தெரிந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஏன் இராஜயோகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றால், இராஜயோகத்தில் மட்டுமே உயிர் பற்றிய விளக்கங்கள் மிகச்சரியாக மிக விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. இராஜயோகத்தை அறிந்திடாத மனிதன் மனிதனல்ல.

மனிதர்களுக்கு ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டும் என்று ஆசை இருந்தால், இராஜயோகம் கற்பது அவசியமாகும். இராஜயோகத்தில் கூறப்பட்டுள்ள உயிர் பற்றிய விடயங்கள் வேறு எதிலும் கூறப்படவில்லை என்பது மிகவும் முக்கியமாக குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டுமா! புரியவில்லையே? உலகம் அழியும்போது ஏன் ஆரோக்கியமாக உயிர் வாழ வேண்டும்?

உலகம் அழியும்போது உலகிலுள்ள அனைவரும் அழிய மாட்டார்கள் என்பது ஏற்கனவே பல தடவைகள் கூறப்பட்டுவிட்டன. உலகம் அழியும்போது குறிப்பிட்டளவானவர்கள் எஞ்சியிருப்பார்கள். குறிப்பிட்ட அந்த எஞ்சியிருப்பவர்களே புதிய உலகை உருவாக்குகின்ற தேவர்கள் ஆவார்கள்.

புராணங்களில் கூறப்பட்டுள்ளன "தேவர்கள் வாழ்வது, அல்லது, தேவர்களுக்கான உலகம் 'சுவர்க்கம்' என்று."

தேவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்? தேவர்களிடம் காணப்பட்ட சிறப்பம்சங்கள் என்ன? தேவர்கள் எவ்வாறு அமரத்துவ வாழ்க்கையை அடைந்தார்கள்? என்பது போன்ற விடயங்கள் எவருக்கும் தெரியாது.

இராஜயோகமே தேவர்களுக்கான கல்வியாகும். இராஜயோகத்தை கற்பவர்கள் தேவர்கள் ஆகுவார்கள். கற்காதவர்கள் மனிதர்களாக இருந்தவாறு மறு சுழற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்.

உலகமானது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் சுழல்வதால், மனிதர்களால் உலகைவிட்டு எங்கும் செல்ல முடியாது.

நிலவுக்கு செல்வது, செவ்வாய்க்கு குடி பெயருவது வெறும் கற்பனைகளாகும்.

இன்னும் சிறிது காலத்தில் மாபெரும் அழிவு ஏற்பட்டு மனிதர்களின் எண்ணங்களையெல்லாம் மழுங்கடித்துவிடும். உலகைவிட்டு இன்னொரு உலகிற்கு சென்று வாழ்வதென்பது மாயை ஆகும்.

"மனிதர்கள் வாழ்வதற்கு இந்த ஒரு உலகமே காணப்படுகின்றது. அதைத்தாண்டி வேறெங்கும் செல்ல முடியாது என்கின்றார் கடவுள்."

கடவுள் பேச்சுக்கு மறு பேச்சு இல்லை.

இராஜயோகத்தை கற்பவர்கள் தேவர்களாக மாறி புதிய உலகத்தை வழி நடத்துவார்கள். கற்காதவர்கள் துவாபர யுகம் என்று அழைக்கப்படுகின்ற சுவர்க்கம் அல்லாத யுகத்திற்குள் வந்து பிறப்பெடுப்பார்கள். சுவர்க்கம் அல்லாத யுகம், புதிய உலகம் ஆரம்பித்து 2500 வருடங்களின் பின்பே ஆரம்பமாகும்.

சுவர்க்கமல்லாத யுகத்திற்குள் வருவது பெரிய விடயமல்ல. சுவர்க்கத்திற்குள் வருவதே பெரிய விடயமாகும்.

சுவர்க்கத்திற்குள் வர வேண்டுமென்றால் பிரம்மா குமாரிகள் கற்பிக்கின்ற இராஜயோகத்தை கற்றிடுங்கள் என்பதே வேண்டுகோளாகும்.

நன்றி, ௐ சாந்தி.

13/03/2024

இந்த நாடு எங்கே செல்கிறது..?
-----------------------------------------

ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.

"இன்று அறுவர் வீதி விபத்தில் மரணமடைந்தார்." "இன்று ஐந்து துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடந்தன." "இன்று இத்தனை பேர்கள் போதை வஸ்த்துக்களால் கைது செய்யப்பட்டனர்." "இன்று மக்கள் வீதி மறியலில் ஈடுபட்டனர்" "போராட்டங்களில் ஈடுபட்டனர்" இதுதான் இலங்கையின் நிலையாகும்.

இலங்கையிலிருந்து எத்தனை பேர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றார்கள் என்று கடவுச்சீட்டு வழங்கும் திணைக்களத்திற்கு சென்று பார்வையிட முடியும்.

இலங்கையானது திரு நாடு என்று அழைக்கப்படுவதற்கு காரணம்,

"ஒரு காலத்தில் இலங்கையானது சுவர்க்க பூமியாக காணப்பட்டது."

அன்று சுவர்க்க பூமியாக காணப்பட்ட இலங்கையே இன்று திருடர்களின் பூமியாக மாறியுள்ளது.

திரு நாடு திருடர்களின் நாடாகி விட்டது.

இலங்கையின் அரசியல்வாதிகள் ஒருபோதும் ஒற்றுமைப்பட மாட்டார்கள். இலங்கையானது இந்தியாவின் பக்கம் காணப்படுவதே சிறப்பாகும்.

அண்மையில் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார் "அன்று இலங்கையில் 170 சிவ ஆலயங்கள் இருந்துள்ளன" என்று.

சிவ ஆலயங்கள் அழிவடைவது நாடு அழிவடைவதற்கு சமமாகும்.

சிவனுக்கும் அறிவியலுக்கும் சம்பந்தமுள்ளது. சிவனைப்பற்றி அறியாதவர்கள் என்னுடைய முகநூலினூடாக அறிந்துகொள்ள முடியும்.

சிவன் என்றால் செழுமை நாதன் என்று அர்த்தமாகும். உலகிலுள்ள அனைவருக்கும் செழுமையை கொண்டு வருபவர் கடவுள் சிவனே ஆவார்.

சிவனே அல்லாஹ் ஆவார். சிவனே ஜெகோவா ஆவார்.

இலங்கையில் சிவ ஆலயங்கள் அழிவடைய அழிவடைய இலங்கையின் அனைத்து வளங்களும் அழிவடைய ஆரம்பிக்கும்.

சிவன் என்றால் சக்தி என்று அர்த்தமாகும்.

பிரபஞ்சத்திலுள்ள ஈதர் சக்தியை உலகிற்குள் கொண்டு வருபவர் சிவனே ஆவார். சிவனை நினைவு செய்ய நினைவு செய்ய ஈதர் சக்தி அதிகமாக கிடைக்கப்பெறும்.

ஈதர் சக்தியென்றால் ஆத்மசக்தியென்று அர்த்தமாகும்.

ஆத்மாவில் காணப்படுகின்ற புத்தி மிகச்சரியாக வேலைசெய்ய வேண்டுமென்றால் "ஈதர் சக்தியை உள்ளெடுப்பது அவசியமாகும்."

புத்திக்குரிய சக்தி ஈதர் சக்தியே ஆகும்.

ஏற்கனவே நான் கூறிவிட்டேன் "இலங்கையில் மிக அதிகமான சிவ தொண்டுகளை முன்னெடுங்கள்" "சிவனுக்கு முக்கிய இடத்தை வழங்குங்கள்" என்று.

நமக்கு தெரியும் இலங்கையானது சிவ பூமி என்று. கடவுள் சிவனை மறந்ததே இலங்கையர்கள் செய்த தவறாகும்.

"சிவ சிவ என்றால் சிவ பதம் கிடைக்கும்" என்பது நம்பிக்கையாகும்.

சிவனை நினைவு செய்கின்றவர்கள் மிக நல்லவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும், பணிவானவர்களாகவும் நடந்து கொள்வார்கள்.

சிவன் என்றால் செழிப்பு என்று அர்த்தமாகும்.

உலகில் சிவனுக்கு போட்டியாக வைஷ்வணவம் வந்தது, கடவுள் சிவனை அனைவரும் மறக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

கடவுள் சிவன் மறக்கப்பட மறக்கப்பட உலகமானது சீரழிய ஆரம்பிக்கும்.

உலகிலுள்ள சீரழிவுகளை நிறுத்துவது கடவுள் சிவனின் வேலையாகும்.

கடவுள் சிவனானவர் செழுமைநாதன் என அழைக்கப்படுவதற்கு காரணம்,

உலகிலுள்ள ஆத்மாக்கள் சிவனை நினைவுசெய்து வரும்போது உலகமானது செழிப்படைய ஆரம்பிக்கும்.

உலகமானது சிவனை மறக்க வேண்டும். உலகிலுள்ளவர்கள் சீரழிய வேண்டுமென்பது தலையெழுத்தாகும்.

"செய்வோம் சிவ தொண்டுகளை"
"போற்றுவோம் சிவனை"

பௌத்தர்கள் மனிதனை வணங்குகின்றவர்கள் ஆவார்கள். அவர்களால் செழுமையை கொண்டு வர முடியாது.

செழுமை என்பது சிவனிடம் மட்டுமே காணப்படுகின்றது.

பிரம்மா குமாரிகள் கடவுள் சிவனை முழு முதற் கடவுளாக கொண்டிருப்பதற்கு காரணம்,

கடவுள் சிவனே இந்த உலகின் முழு முதற் கடவுளாவார். அவரின் பின்பு பிரம்மா மற்றும் விஷ்ணு இருக்கின்றார்கள்.

பிரம்மா, விஷ்ணு என்பதெல்லாம் தாதா லேக் ராஜிக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட பெயர்களாகும் அல்லது பட்டங்களாகும்.

பிரம்மா விஷ்ணுவாகின்றார் விஷ்ணுவே ஸ்ரீ கிருஷ்ணராக பிறப்பெடுக்கின்றார். மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணர் 84 பிறவிகளை எடுத்து தாதா லேக் ராஜ் ஆக மாறுவார்.

5000 வருட உலக சுழற்சி மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி நடக்கும் என்கிறார் உண்மையான கடவுள்.

சிவன் பெரிதா? சக்தி பெரிதா? என்றால், சிவனே பெரியராவார். சிவனுடைய சக்திகளே உலகிலுள்ள ஆத்மாக்களாவார்கள். ஒரேயொரு சிவனே கணவன் என அழைக்கப்படுகின்றார். ஏனையவர்கள் அவரை நினைவுசெய்கின்ற சக்திகளாவார்கள் என்கின்றார் கடவுள்.

சிவனை நினைவுசெய்து அவரிடமிருந்து சக்திகளை அடைவோம் என்பது வேண்டுகோளாகும்.

நன்றி, ௐ சாந்தி.

11/03/2024

நான் ஏன் உடலை விட வேண்டும்? அல்லது இறக்க வேண்டும்?
யோகத்தில் ஈடுபட வேண்டும்?
----------------------------------------------------

ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.

"இராஜயோகம் என்பது இலகுவாக உடலை விடுவதற்கான தியான முறையாகும்." இறுதி நேரத்தில் ஏராளமான துன்பங்கள் வரும்போது மக்களனைவரும் அங்கலாய்த்து நிலை தடுமாறும்போது அவர்களை நிலையானவர்களாக மாற்றி, அவர்களுக்குள் இருக்கின்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்து, அவர்களுடைய வேற்றுமைகளை களைந்து, விரக்தி எண்ணங்களை களைத்து, இலகுவாக வீடு (ஆத்ம லோகம்) திரும்பச் செய்வதே இராஜயோகமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் எனது பகிர்வுகளை படித்து வருகின்ற அனைவருக்கும் எனது கதை தெரிந்திருக்கும்.

என்னுடைய வேலை "கடவுளையும், அவருடைய ஞானத்தையும், பிரம்மா குமாரிகளையும் வெளிப்படுத்துவதாகும்."

மனிதகுல விருட்சத்தின் வேராகிய என்னுடைய வேலை "என்னை வெளிப்படுத்தி, என்னுடைய செயற்திட்டங்களை வெளிப்படுத்தி, என் குழந்தைகளாகிய பிரம்மா குமாரிகளை வெளிப்படுத்துவதாகும்."

ஏற்கனவே கடவுள் கூறிவிட்டார் "ஒன்பது லட்சம் பேர்கள் வீடு திரும்ப மாட்டார்கள். அவர்கள் இந்த உலகத்தில் இருந்தவாறு புதிய உலகை தோற்றுவிப்பதற்கான செயற்திட்டங்களில் ஈடுபடுவார்கள்."

ஒன்பது லட்சத்தில் ஒருவராகிய நான் யோகப் பயிற்சிகளை செய்ய வேண்டிய அவசியமில்லை. யோகப்பயிற்சிகள் யாருக்கு முக்கியம் என்றால், இன்னும் சிறிது காலத்தில் வீடு திரும்பப்போகின்ற ஆத்மாக்களுக்கே ஆகும்.

என்னுடைய யோகப்பயிற்சி மிகச் சரியாகவும் முறையாகவும் இருந்ததால் என்னைப்பற்றி என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. என்னுடைய யோகப்பயிற்சி புராதன இராஜயோகமாகும். ஏனையவர்களின் யோகப்பயிற்சி இலகு இராஜயோகமாகும்.

கடவுள் ஏற்கனவே கூறிவிட்டார் "எட்டு பேர்களே இந்த யோகத்தை மிகச்சரியாக கற்பார்கள். ஏனையவர்கள் குறைந்தளவே கற்பார்கள்." எட்டில் ஒருவராகிய என்னுடைய யோகம் பிழைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருசிலர் கேட்கலாம் "உங்களுக்கு மட்டும் தனிப்பட்ட ஞானம் எங்கிருந்து வந்தது? யார் அதை கொடுத்தது?" என்று.

என்னுடைய ஞானம் தனிப்பட்டதல்ல. அனைவருக்கும் ஒரு ஞானமே கற்பிக்கப்படுகிறது. புரிந்துகொள்வதிலேயே வேறுபாடுகள் காணப்படுகின்றன.

இறுதி நேரத்தில் வீடு திரும்பும்போது துன்பமான எண்ணங்கள் எதுவும் மனதில் காணப்படக்கூடாது. காணப்பட்டால் வீடு திரும்புவதில் சிக்கல்கள் ஏற்படும் என்கிறார் கடவுள்.

மனதில் துன்பமான எண்ணங்கள் காணப்படுவதற்கு காரணம்,

"மாயை என்ற கலியுகத்தில் தேவையற்ற விடயங்களுக்கு மனதை பறி கொடுப்பதே ஆகும்."

குடும்பம், பிள்ளைகள், உறவுகள், சொத்துக்கள், அந்தஸ்த்து, மதிப்பு போன்றவைகளெல்லாம் மாயை ஆகும். அதற்குள் சிக்குப்பட்டால் வெளியே வருவது கடினமாகும். வெளியே வர வேண்டுமென்றால் இராஜயோகமே சிறந்ததாகும்.

கீதையில் கூறப்பட்டுள்ளது "உலகிலுள்ள அனைத்தையும் மறந்து கடவுளாகிய என்னை மட்டும் நினைவுசெய்ய வேண்டுமென்று."

கடவுள் ஒருவரை நினைவுசெய்ய வேண்டுமென்றால் மாயையை அழிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மனிதர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் "இந்த உலகம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும், நான் பெரியவனாகிய சொத்துபத்துக்களுடன் காணப்படுவேன்" என்று.

கடவுள் கூறுகின்றார் "உலகம் எப்போதோ அழிவடைய ஆரம்பித்துவிட்டது. இன்னும் மீதமிருப்பது சொற்ப காலமே ஆகும்." "உலகிலுள்ள தர்மம் அழிய ஆரம்பித்த போதே உலகம் அழிய ஆரம்பித்துவிட்டது. தற்போது தர்மம் இல்லாத இடுகாடே காணப்படுகின்றது."

கடவுள் எந்தளவுக்கு சக்தி வாய்ந்தவரோ, மாயையும் அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவள் ஆவாள். கடவுள் செய்கின்ற செயல்களுக்கு எதிரான செயல்களை செய்வதே மாயையின் வேலையாகும்.

கடவுள் கூறுகின்றார் "பொன் மானிடம் மனதை பறி கொடுத்ததாலேயே சீதையானவள் செய்த சத்தியத்தை மறந்து இராவணனிடம் மாட்டிக்கொண்டாள், பொன் மான் என்பது மாயையை குறிக்கின்ற அடையாளமாகும். உலகிலுள்ள மனிதர்கள் கடவுளாகிய என்னை மறந்து மாயைக்குள் செல்லச் செல்ல, மாயை அவர்களை விழுங்கிவிட ஆரம்பிப்பாள். மாயை விழுங்குவது எவருக்கும் தெரிவதில்லை. மாயையை கண்டுபிடிக்க வேண்டுமென்றால், மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளாகிய என்னை நினைவுசெய்ய வேண்டும்."

மனிதர்கள் நினைக்கின்றார்கள் "கடவுள் கண்ணுக்குத் தெரியாதவர் என்று கூறுவது மாயையாகும்" என்று.

கடவுள் கண்ணுக்குத் தெரிவார் என்றால், மனிதர்களால் எத்தனையோ காரியங்களை சாதித்திருக்க முடியும். கடவுள் கண்ணுக்குத் தெரியாமல் காணப்படுவது,

"மறைந்திருந்து அருளுவது கடவுளின் தொழிலாகும்." மறைதல் என்றால் கண்களுக்கு தெரியாமல் காணப்படுதல் என்று அர்த்தமாகும்.

கடவுள் சிவனின் ஐந்தொழில்கள் ஆனவை படைத்தல், காத்தல், அருளல், அழித்தல், மறைதல் என்பதாகும்.

அருளல் என்றால் ஆத்மசக்திகளை அருளல் என்று பொருள் படும். அழித்தல் என்றால் மனதிலுள்ள மாயையை அழித்தல் என்று பொருள் படும். மறைதல் என்றால் கண்களுக்கு தெரியாமல் காணப்படுதல் அல்லது மறைந்துபோவதை குறிக்கின்றது.

"ஆத்மாக்கள் என்றால் கண்களுக்கு காணப்பட மாட்டார்கள்" என்பது தெரிந்த விடயமாகும். பரமாத்மா என்றால் அவரும் ஒரு ஆத்மா என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

பரமாத்மா இந்த உலகிற்குள் வந்தது 1936ம் ஆண்டு ஆகும். அன்று முதல் தொடர்ந்து 2017ம் ஆண்டுவரை வந்துகொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரமாத்மாவின் இராஜயோகமே மனதிலுள்ள மாயையை அழிக்கின்ற செயல்முறையாகும். மாயை அழிந்தால் மட்டுமே மனமானது ஒருநிலைப்பட ஆரம்பிக்கும். மனமானது ஒருநிலைப்பட ஒருநிலைப்பட, கடவுளின் நினைவு அதிகரிக்க ஆரம்பிக்கும். கடவுளின் நினைவு அதிகரித்தால் அவரிடமிருந்து ஈதர் சக்தியானது நமக்குள் பிரவேசிக்க ஆரம்பிக்கும். ஈதர் சக்தியே அருளலுக்குரிய பொருளாகும். எந்தளவுக்கு ஈதர் சக்தியானது ஒருவரிற்குள் காணப்படுகின்றதோ, அந்தளவுக்கு அந்த ஆத்மா ஆனவர் சக்திமிக்கவராகவும் மனோபலம் மிக்கவராகவும் காணப்படுவார்.

மும் மலங்களை அழிப்பது கடவுள் சிவனின் வேலையென்றால், கடவுள் சிவனே உண்மையான கடவுள் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

பிரம்மா குமாரிகள் நினைத்துக்கொண்டு இருக்கின்றார்கள் "மூத்த இராஜயோகி ஆகிய நான் நிலையத்திற்கு வராமல் வெளியிலிருந்து செயற்படுகிறேன்" என்று.

நிலையத்திற்கு வருவது என்னுடைய வேலையல்ல. என்னுடைய வேலை உலக மக்களுக்கு ஞானத்தை எடுத்துரைப்பதாகும்.

இறுதி நேரத்தில் உடல் விடுகின்றவர்களே நிலையத்திற்கு செல்லவேண்டியவர்கள் ஆவார்கள். என்னுடைய வேலை, இராஜயோகத்தை உலக மக்களுக்கு கூறுவதாகும்.

இறுதியில் ஒன்பது லட்சம் பேர்கள் இந்த உலகத்தில் இருக்கவேண்டும் என்றால், ஒன்பது லட்சம் பேர்கள் தியானத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.

இலகு இராஜயோகம் என்ற தியானம் கற்றுக்கொடுக்கப்படுவது "இந்த உலகிலிருந்து இலகுவாக உடலை விடுத்து புதிய உலகான சத்திய யுகத்தில் உயர்ந்ததோர் அந்தஸ்த்தில் பிறப்பதற்கே ஆகும்"

என்னுடைய அந்தஸ்த்தானது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. நான் தியானத்தில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.

"பிரம்மா குமாரிகள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஏற்றுக்கொண்டால் மீண்டும் நான் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்து விடுவேன்" என்பதற்காகவோ என்னவோ, நாடகம் என்னை பிரித்து வைத்து விளையாடிக்கொண்டு இருக்கின்றது.

என்னுடைய பாகம் மிகவும் தனித்துவமாக காணப்படுவதால் நான் உட்பட யாராலும் என்னை புரிந்துகொள்ள முடியாது. பாகம் இடம்பெறும்போதே புரிந்துகொள்ள முடியும்.

பிரம்மா குமாரிகள் முற்று முழுதாக ஞானத்தை கிரகித்து விழிப்பாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி, ௐ சாந்தி.

06/03/2024

சிவராத்திரியின் ஆழமான ரகசியங்கள் (ஆழமான அர்த்தங்கள்).
------------------------------------------------

ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.

சிவ ராத்திரி என்றால் சிவனுடைய ராத்திரி என்று அர்த்தமாகும். சிவன் என்றால் உலகிற்கு நன்மை அளிப்பவர் என்று அர்த்தமாகும். ராத்திரி என்றால் அறியாமை இருள் காணப்படுகின்ற காலம் என்று அர்த்தமாகும். அறியாமை இருள் காணப்படுகின்ற நேரம் கலியுகமாகும். கலியுகமே இருக்கின்ற யுகங்களில் மிகவும் கீழான அல்லது கீழ்த்தரமான யுகமாகும். கலியுகத்தில் நடக்கின்ற சீரழிவுகள் வேறெந்த யுகங்களிலும் நடப்பதில்லை. சீரழிவுகளைப்பற்றி நான் கூறத் தேவையில்லை. அன்றாடம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.

கலியுகம் என்றால் நரகம் என்று அர்த்தமாகும். நரகம் என்றால் அரக்கர்கள் காணப்படுவதும், மனிதர்களுக்கு துன்பங்களை கொடுப்பதுமே நடைபெறும். தவறு செய்த மனிதர்களே நரகத்திற்குள் செல்வார்கள். நல்லவர்கள் செல்வதில்லை. கலியுகத்தை பொறுத்தவரைக்கும் யார் தவறு செய்தவர்கள்? யார் நல்லவர்கள்? என்பதை பிரித்து பார்ப்பது கஷ்டமாகும். நல்லவர்கள் பிச்சைக்காரர்களைப் போல் காணப்படுவார்கள். தவறு செய்கின்றவர்கள் செல்வந்தர்களைப் போல் காணப்படுவார்கள்.

கலியுகத்திற்கு கலியுகம் என்று பெயர் வரக் காரணம், 'கலி' என்றால் கல், மண், சேறு என எடுத்துக்கொள்ளலாம். 'கலி' என்றால் கருப்பு என்றும் அர்த்தமாகும். கலியுகத்தை கருப்பானவர்களின் யுகம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். கருப்பு என்றால் கருமை நிறத்தை குறிப்பதல்ல. ஆத்மாக்களில் காணப்படுகின்ற ஆத்ம சக்தி குறைவடையும்போது ஆத்மாக்கள் அனைவரும் வெளிர் நிறத்திலிருந்து கருப்பு நிறமாக அல்லது வெளிர் நிறத்திற்கு குறைந்த நிறமாக மாற்றமடைய ஆரம்பிப்பார்கள். கருப்பு நிறமானது ஆத்மாவின் ஆத்மசக்தி குறைந்து விட்டதை குறிப்பதாகும்.

ஏற்கனவே என்னுடைய பகிர்வுகளை படித்துள்ளவர்களுக்கு தெரியும் "ஆத்மாவிற்குள் ஏழு நிறங்கள் காணப்படுகின்றன அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுடன் ஒத்துப் போகின்றன" என்று. ஏழு நிறங்களே ஆத்மாவில் காணப்படுகின்ற ஏழு குணங்களை கட்டுப்படுத்துகின்றன. நீல நிறம் அமைதிக்குரியது, சிகப்பு நிறம் சக்திக்குரியது அல்லது வலிமைக்குரியது, பச்சை நிறம் அன்பிற்குரியது, மஞ்சள் நிறம் சந்தோசத்திற்குரியது, ஆரஞ்சு நிறம் தூய்மைக்குரியது, கரு நீல நிறம் ஞானத்திற்குரியது, அதாவது, புத்திக்குரியது, ஊதா நிறம் பேரானந்தத்திற்குரியது. குறித்த இந்த நிறங்கள் தங்களுடைய சக்தியை இழக்கும்போது ஆத்மாவானது கருப்பு நிறமாக மாற்றமடையும். இல்லையென்றால் வென்மையாக காணப்படும். ஆத்மாவில் எந்தளவிற்கு வென்மை நிறம் காணப்படுகின்றதோ, அந்தளவிற்கு குறித்த ஆத்மாவானது ஒளி நிறைந்தவராக அல்லது தேஜோ மயமாக காணப்படுவார். ஒளி நிறைந்தவர் என்றால் ஆத்மசக்தி அதிகமானவர் என்று அர்த்தமாகும்.

கலியுகத்தில் ஆத்மாக்கள் கருப்பு நிறமாக மாற மாற கலியுகமானது இருள் நிறைந்ததாக, அதாவது, அறியாமை நிறைந்தவர்களாக மனிதர்கள் காணப்படுவார்கள் என்கின்றார் இறைவன்.

கடவுளின் கணக்குப்படி அல்லது இறைவனின் கணக்குப்படி அறியாமை என்றால் "தன்னையும் கடவுளையும் அறியாதவர்கள்" என்று அர்த்தமாகும்.

தன்னை அறிய வேண்டுமென்றால் இறைவனை அறிந்திருக்க வேண்டும். இறைவனை அறிய வேண்டுமென்றால் தன்னை அறிந்திருக்க வேண்டும். இரண்டிற்கும் தொடர்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தான் என்பதும் ஆத்மாவையே குறிக்கின்றது. இறைவன் என்பதும் ஆத்மாவையே குறிக்கின்றது. தன்னை அறிந்தவர்களே இறைவனை அறிய முற்படுவார்கள். இறைவனை அறிய நினைப்பவர்கள் தன்னை அறிய முற்படுவார்கள்.

பொதுவாகவே உலகில் ஒரு கருத்து நிலவுகிறது "நாமெல்லாம் கடவுளின் குழந்தைகள்" என்று. கடவுளின் குழந்தைகள் என்றால் "கடவுளைப் போன்று தூய்மையானவர்கள்" என்று அர்த்தமாகும். கடவுள் எவ்வாறு காணப்படுகின்றாரோ அதுபோல் காணப்பட வேண்டியது கடவுளின் குழந்தைகளாகிய நமது கடமையாகும்.

கடவுள் எவ்வாறு காணப்படுகின்றார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். கடவுளிடம் காமம் இருப்பதில்லை. கோபம் இருப்பதில்லை. அகங்காரம் இருப்பதில்லை. கடவுளின் குழந்தைகளாகிய நம்மிடம் காமம், கோபம், அகங்காரம் காணப்படுவதற்கு காரணம், "நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை மறந்துவிட்டதே ஆகும்."

"கடவுளின் குழந்தைகள் அறியாமை இருளில் மூழ்கும்போது, அவர்களை மீட்டெடுக்க கடவுள் வருகின்ற காலமே சிவ ராத்திரியாகும்."

சிவன் என்றால் ஒளி என்று அர்த்தமாகும். ஒளி என்றால் ஆத்மா என்று அர்த்தமாகும். இஸ்லாத்தின் புனித நூலான அல் குரானில் "கடவுள் ஒளி மயமானவர்" என்று வர்ணிக்கப்படுகின்றார். கிறிஸ்த்தவர்களின் புனித நூலான பைபிளில் "கடவுள் ஓர் ஒளியாவார்" என்று வர்ணிக்கப்படுகின்றார். இந்து மதத்தில் கடவுள் சிவனானவர் அடிமுடி இல்லாத பேரொளி என்று வர்ணிக்கப்படுகின்றார்.

கடவுள் ஒளியானவர் என்றால், கடவுளுடைய குழந்தைகளும் ஒளியானவர்கள் என்று அர்த்தமாகும். ஒளி என்றால் உயிரணு அல்லது ஆத்மா என்று அர்த்தமாகும். உயிரணுவையும் கண்ணால் பார்க்க முடியாது, ஒளி என்று அழைக்கப்படுகின்ற ஆத்மாவையும் கண்ணால் பார்க்க முடியாது. "பார்க்க முடியாது என்றால் பார்ப்பதற்கான தொழில்நுட்பங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று அர்த்தமாகும்.

கடவுள் ஒளியானவர் என்றால் அவரது படைப்புக்களும் ஒளியாகவே காணப்படுவார்கள். அனைத்து மதங்களிலும் ஒளிக்கு முக்கியத்துவம் கொடுப்பது எதனால் என்றால், இந்த உலகமானது கண்ணுக்குத் தெரியாத ஒளிகளால் நிறைந்துள்ளது, அதில் முக்கியமான ஒளி கடவுளாவார்.

அறிவியல் கூறுகின்றது "ஒரு முக்கியமான அணுவிலிருந்தே ஏனைய அணுக்களனைத்தும் தோன்றியுள்ளது" என்று.

முக்கியமான ஒரு அணு இருக்கிறதென்றால், யார் அந்த முக்கியமான அணு என்பதே கேள்வியாகும்.

முக்கியமான ஒரு அணு இருக்கிறார் என்றால், குறித்த அந்த அணு ஆனவர் இறைவனாகவே காணப்படுவார். இறைவனில்லாமல் உலகம் காணப்படாது. இறைவன் ஒருவர் இருக்கவே வேண்டும். பல இறைவன்கள் இருக்க முடியாது. ஒரு உலகத்திற்கு ஒரு இறைவனே இருக்க முடியும்.

சிவராத்திரி தினத்தில் இறைவனானவர் பூமிக்குள் வந்தார், தோன்றினார் என்பதெல்லாம் "அறியாமை காலத்தில் இறைவன் பூமிக்குள் வந்தார்" என்பதையே குறிக்கின்றது.

பிரம்மா குமாரியிலுள்ளவர்களுக்கு தெரியும் "1936ம் ஆண்டு இறைவன் இந்த பூமிக்குள் வந்து மானிட சரீரம் ஒன்றுக்குள் பிரவேசித்து, நடக்கப்போகின்ற அனைத்து நிகழ்வுகளையும் கூறிவிட்டார்" என்று.

அறியாமை இருள் நிலவும்போது இறைவன் இந்த பூமிக்குள் வரவேண்டும் என்றால், இறைவனானவர் வரவே வேண்டும். வராவிட்டால் அவர் இறைவனல்ல. சிவராத்திரி என்றால் சிவன் இந்த பூமிக்குள் வந்ததையே குறிக்கின்றது.

மனிதர்களுக்கு சிவராத்திரியின் மகிமை விளங்காமல் இருப்பதற்கு காரணம், "மனிதர்கள் தற்போது அறியாமை உறக்கத்தில் இருக்கின்றார்கள்." இன்னும் சில நாட்களில் அறியாமை உறக்கம் கலைந்து புத்தி வேலை செய்ய ஆரம்பிக்கும். அப்போது சிவராத்திரியின் உண்மையான மகிமை புரியவர ஆரம்பிக்கும்.

"சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ எண்ணச் சிவகதி தானே!"

நன்றி, ௐ சாந்தி.

07/02/2024

அழிவுகள் ஏன் உடனடியாக வருவதில்லை?
----------------------------------

ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.

அழிவுகள் ஏன் உடனடியாக வருவதில்லை, மெது மெதுவாக வருகின்றது?

கடவுள் கூறுகின்றார் "மனிதர்களை தண்டிப்பது நாடகத்தின் நோக்கமல்ல. மனிதர்கள் அழிக்கப்படவும் மாட்டார்கள். இந்த உலகில் காணப்படுகின்ற அனைத்து உயிர்களும் மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்கும். நடந்த நிகழ்வுகளே 5000 வருடங்களுக்கு ஒரு முறை நடந்துகொண்டு இருக்கும்.

சுழற்சி முடிவதும், ஒரு சுழற்சிக்குள்ளிருந்து இன்னொரு சுழற்சி ஆரம்பிப்பதும் இயற்கையின் நியதியாகும். ஆரம்பத்தில் நன்றாக இருந்த நாடுகளனைத்தும் வீணாகிப்போவதும், பின்பு வீணாகிப்போன நாடுகளனைத்தும் நன்றாக மாறுவதும் நாடகத்தின் தயாரிப்பாகும்.

அமெரிக்கா ரஷ்யா ஆகிய நாடுகள் கிறிஸ்த்துவ நாடுகளென்றாலும் அவை இரண்டும் ஒருபோதும் ஒன்று சேராது. அவை இரண்டும் உருவாக்கப்பட்டிருப்பது உலகத்தை அழிப்பதற்காகவே ஆகும்."

சிலவேளை இதை வாசிப்பவர்கள் சிலர் நினைக்கலாம் "அமெரிக்கா-ரஷ்யா சண்டை பிடிப்பது தெரிந்த விடயம் தானே, இதிலென்ன ஆச்சரியம் உள்ளது? கடவுள் ஏன் அதைக் கூற வேண்டும்?" என்று.

வாசிப்பவர்கள் ஒரு விடயத்தை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் கூறியது இன்று நேற்றல்ல, 1936ம் ஆண்டு கடவுள் இந்த பூமிக்குள் வந்தபோது படிப்படியாக ஒவ்வொரு விடயங்களையும் விளங்கும் விதமாக கூறி விட்டார். அன்று அவர் கூறியதே தற்போது நடக்கின்றது.

அன்று அமெரிக்கா ரஷ்யா சண்டை பிடிக்கவில்லை. தற்போதே அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் கடும் போர்கள் உருவாகி வருகின்றன.

அழிவுகளைப்பற்றிக் கூறி உங்களை பயமுறுத்துவது கடவுளுடைய நோக்கமல்ல. பிரம்மா குமாரிகளுடைய நோக்கமும் அல்ல. "அழிவுகள் ஏன் வருகிறது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்."

அழிவுகள் வருவதற்கான காரணம், யுகங்கள் மாறுகின்றன. பழைய சுழற்சி புதிய சுழற்சியாக மாறுகின்றன. பழைய சுழற்சியிலிருந்து புதிய சுழற்சிக்கு செல்ல வேண்டுமென்றால், உலகின் சனத்தொகை குறைய வேண்டும். உலகின் சனத்தொகை குறைந்தால் மட்டுமே உலகமானது அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபட ஆரம்பிக்கும். உலகிலுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம், பாரிய அளவு சனத்தொகையே என்கிறார் கடவுள்.

பழைய சுழற்சியிலிருந்து புதிய சுழற்சிக்கு செல்ல வேண்டுமென்றால், இராஜயோகம் கற்றுவிட்டு ஆத்மாவை தூய்மையாக்கி தூய நிலையில் கடவுளை நினைவு செய்ய வேண்டும்.

கடவுளை நினைவு செய்ய, நினைவு செய்ய, ஆத்மசக்தி அதிகரித்து ஆத்மாவானது சக்திமிக்கதாக மாற்றமடையும். ஆத்மா சக்திமிக்கதாக மாற்றமடைந்தால் அழிவுகள் மற்றும் ஏனைய தேவையற்ற விடயங்களைப்பற்றி ஆத்மா சிந்திக்காது.

"மனிதர்கள் இன்று மனக்குழப்பத்திற்கு ஆளாகக் காரணம், தேவையற்ற ஏராளமான விடயங்கள் உள்ளுக்குள் செல்வதே ஆகும்."

தேவையற்ற குப்பைகளை மனதினுள் சேமிக்காமல் தேவையான பயனுள்ள விடயங்களை சேமித்தோம் என்றால், மனதிலுள்ள வீணான எண்ணங்கள் முடிவடைந்து மனமானது தூய நிலைக்கு மாற்றமடையும். தூய நிலையை உருவாக்குவது இராஜயோகமே ஆகும்.

கடவுள் கூறுகிறார் " அழிவுகள் மெதுவாக வருவதற்கு காரணம் பாரத நாட்டவர்களை பயமுறுத்தவே ஆகும். பாரத நாட்டவர்களே இந்த உலகின் மூதாதையர்கள் ஆவார்கள். அவர்களனைவரும் மாயைக்குள் சிக்குப்பட்டு செய்வது தெரியாமல் திணறிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை விடுவிப்பது நாடகத்தின் கடமையாகும். கடவுள் மாயை என்று குறிப்பிடுவது "தற்போது நாம் வாழ்ந்துவரும் வாழ்க்கையையே ஆகும்."

"ஞானம், பக்தி, விருப்பமின்மை நாடகமாகும், கடவுளாகிய என்னுடைய ஞானத்தை கேட்பவர்கள் தேவர்களாக மாறி தேவ குலத்தை ஆட்சி செய்வார்கள். பின்பு, மனிதர்களாக மாறி பக்தி செய்ய ஆரம்பிப்பார்கள். பக்தி செய்ய ஆரம்பித்ததும் பலவித பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கும். பக்தியை கைவிடாமல் மேலும் மேலும் பிரச்சனைகளை உருவாக்குவார்கள். ஏராளமான பிரிவுகள் உருவாகும். சண்டை சச்சரவுகள் உருவாகும்.

எவ்வளவுதான் பக்தி செய்தாலும் நல்லது நடக்க மாட்டேங்குதே என்ற விரக்தி நிலைக்கு செல்வார்கள். பக்தியை கைவிட்டு ஞானத்திற்கு வர ஆரம்பிப்பார்கள்.

மனிதர்களின் நினைப்பு எல்லாம் "பக்தி செய்தவுடன் நல்லது நடக்க ஆரம்பித்துவிடும்" என்பதாக இருக்கின்றது. பக்திக்கு அடுத்து ஞானமுள்ளது என்பது மனிதர்களுக்கு தெரிவதில்லை. பக்தி வேறு, ஞானம் வேறு. பக்தி இரவு, ஞானம் பகல்.

கடவுளாகிய என்னுடைய ஞானமே பக்திக்கான வெகுமதியாகும். யாரெல்லாம் மிக நன்றாக பக்தி செய்கின்றார்களோ அவர்களனைவரும் என்னுடைய ஞானத்தினால் சக்தியூட்டப்படுவார்கள்.

ஞானம்-பக்தி-விருப்பமின்மை (விரக்தி) சுழற்சியாகும். விருப்பமின்மையை தொடர்ந்து ஞானம் உருவாகும். ஞானம் உருவாகிய பின்பு விருப்பமின்மை மறைந்து விடும்" என்கின்றார் கடவுள்.

மனிதர்கள் நினைக்கின்றார்கள் "பக்தி செய்ய செய்ய நல்லது நடக்கும். நாம் கேட்டதையெல்லாம் கடவுள் கொடுப்பார்" என்று.

நாம் கேட்டதையெல்லாம் கடவுள் கொடுப்பார் என்றால், எதைக் கொடுப்பார்..?

பணத்தை கொடுப்பாரா? பங்களாவை கொடுப்பாரா? காரை கொடுப்பாரா?

குழந்தைகளை கொடுப்பாரா? குழந்தைகளுக்கான சொத்துக்களை கொடுப்பாரா?

சற்று சிந்திக்க வேண்டும்.

முன்னோர்களால் கூறப்பட்டுள்ளது "பதினாறு பேறுகளே பெரும் பாக்கியம்" என்று.

பதினாறு பேறுகளை கொடுப்பதே கடவுளின் கடமையாகும்.

அழிவுகள் மெதுவாக வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமான சில காரணங்கள்,

பாரத நாட்டவர்கள் திருந்த வேண்டும்.

தங்களுடைய பாவங்களை அழிக்க வேண்டும்.

பதினாறு பேறுகளை பெற்றுக்கொண்டு சுவர்க்க இராச்சியத்தை பெற வேண்டும் என்பதுவே ஆகும்.

கூறப்படுகிறது "தேவர்கள் பதினாறு பேறுகளை சம்பூர்ணமாக பெற்றவர்கள்" என்று.

பதினாறு பேறுகளை சம்பூர்ணமாக பெற வேண்டுமென்றால், ஆத்மாவில் காணப்படுகின்ற பாவங்களனைத்தும் சம்பூர்ணமாக அழிக்கப்பட வேண்டும் என்கிறார் கடவுள்.

"நாம் கூறுகின்ற சிறிய பொய்யும் பெரும் பாவத்தை உருவாக்கும்" பொய்கள் எதுவும் கூறப்படாமலிருப்பது சிறந்ததுவாகும்.

"அழிவுகள் மெதுமெதுவாக வர வரவே பாரத மக்கள் திருந்துவார்கள். அழிவுகள் வருவது பாரத மக்களை பயமுறுத்தவே ஆகும். பாரத மக்கள் திருந்தினால் மட்டுமே பாரதமானது சுவர்க்கமாக மாற்றப்படும். பாரத மக்களை பொறுத்தவரைக்கும் பாரத மக்களே அனைத்து தீய காரியங்களுக்கும் செல்பவர்களாவார்கள். அவர்களை திருத்துவதே கடவுள் சிவனாகிய என்னுடைய வேலையாகும்" என்கிறார் கடவுள்.

பாரத மக்கள் திருந்தினால் முழு உலகம் திருந்தியதற்கு சமனாகும். பாரத மக்களிலிருந்தே உலகம் உருவானது. பாரத மக்களின் மனோ நிலையே முக்கியமானது.

பாரத மக்களென்றால் முப்பத்து முக்கோடி தேவர்களே பாரத மக்களாவார்கள். அவர்களே முதலில் திருந்த வேண்டும் என்கிறார் கடவுள்.

அழிவுகளையிட்டு சிந்திக்கத் தேவையில்லை. அழிவுகள் வருவது நல்லதற்கே ஆகும். அழிவுகளே ஆக்கங்களை உருவாக்கும். பாரத மக்களாகிய உங்களுடைய வேலை இராஜயோகத்தைக் கற்று இராச்சியம் ஒன்றை பெறுவதே என்கிறார் கடவுள்.

தேவ இராச்சியம், அரசர்கள் இராச்சியம், மக்கள் இராச்சியம் (ஜனநாயகம்). இதுவும் ஒரு சுழற்சியாகும்.

நன்றி, ௐ சாந்தி.

04/02/2024

ஏன் பெப்ரவரி மாதம் லீப் மாதமாக கணக்கிடப்படுகிறது?
------------------------------------------------

ௐ சாந்தி, அனைவருக்கும் தூய நல்லாசிகள் உரித்தாகட்டும்.

நமக்கு தெரியும் பெப்ரவரி மாதம் என்பது ஏனைய மாதங்களைப் போலல்லாது ஒருசில நாட்களை குறைவாகக் கொண்ட லீப் மாதமென்று. லீப் மாதமென்றால் ஒரு சில நாட்கள் குறைவாகக் காணப்படும்.

நான்கு வருடங்களில் ஒருமுறை மட்டுமே பெப்ரவரி மாதத்தில் 29ம் திகதி காணப்படும். இந்த முறை காணப்படுகிறது.

''மாதங்களில் எவ்வாறு பெப்ரவரி மாதம் காணப்படுகிறதோ, அதுபோலவே யுகங்களில் சங்கம யுகம் காணப்படுகிறது என்கின்றார் கடவுள்.''

சங்கம யுகம் என்றால் லீப் யுகமாகும். லீப் யுகமென்றால் மிகச்சிறிய யுகமென்று அர்த்தமாகும்.

கடவுள் கூறுகின்றார் "புராணங்களில் சங்கம யுகத்தைப்பற்றி பெரிதாக எதுவும் கூறாததால் மனிதர்களுக்கு எதுவும் விளங்குவதில்லை. கடவுளாகிய நான் இந்த உலகிற்குள் வரும் யுகமே சங்கம யுகமாகும். என்னுடைய வருகையே முக்கியமானதாகும்."

கடவுள் இந்த உலகிற்குள் 1936ம் ஆண்டு வந்ததை எவரும் அறியவில்லை. அவர் 1936ம் ஆண்டு மட்டும் வரவில்லை. 2017ம் ஆண்டு வரை வந்துகொண்டே இருந்தார். பிரம்மா குமாரியிலுள்ளவர்களே அதை அறிவார்கள். வெளியிலுள்ளவர்கள் அறிய மாட்டார்கள்.

கடவுள் வருகின்ற யுகமானது சங்கம யுகம் என அழைக்கப்படுவதற்கு காரணம்,

கடவுளே இந்த உலகின் முக்கியமானவராவார். அவர் இந்த உலகிற்குள் வருகிறார் என்றால் அதற்கான தனி மதிப்பு இருக்க வேண்டும்.

யேசு கிறிஸ்து வந்து போனதை உலகம் கொண்டாடுகிறது. கி.பி, கி.மு, என பிரித்து வைத்துள்ளது. கடவுளுக்கும் தனி மதிப்பு இருக்க வேண்டும்.

யேசு என்பவர் கடவுளல்ல. கிறிஸ்து கடவுளாவார். யேசு வேறு, கிறிஸ்து வேறு.

கடவுளே யேசுவின் உடலில் வந்தவராவார். யேசு கிறிஸ்து என்பது ஒருவரல்ல. இருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றி ஏற்கனவே பகிர்ந்தாகிவிட்டது. பிரம்மா குமாரியின் ஸ்தாபகரான தாதா லேக் ராஜின் கதையும் இதுவே ஆகும்.

கிறிஸ்த்துவுக்கு முன், கிறிஸ்த்துவுக்கு பின் என்பதுபோல, சங்கம யுகத்துக்கு முன், சங்கம யுகத்திற்கு பின் என்று உலகம் மாறப் போகின்றது.

எவ்வாறு கிறிஸ்து வந்துபோனதன் பின் உலகில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்ததோ, அதுபோலவே நடக்கவுள்ளது.

கடவுள் கூறுகின்றார் "மனிதர்களுக்கு விளங்குவதற்காக ஏற்கனவே உதாரணங்களெல்லாம் கொடுக்கப்பட்டுவிட்டன. புரிந்துகொள்வது மனிதர்களின் கடமையாகும்."

கடவுள் வந்துபோனதை புரிந்துகொள்ள முடியாமலிருப்பதற்கு காரணம், மனிதர்களின் அறிவானது மட்டுப்படுத்தப்பட்டதாகும். தேவர்களின் அறிவானது பரந்ததாகும்.

சங்கம யுகம் முடிவடைதற்கு இன்னும் 12 வருடங்களே உள்ளன. அதற்குள் பெரிய பெரிய மாற்றங்களெல்லாம் இடம்பெறும். ஏழ்மையில் வாடிப்போயுள்ள நாடுகளெல்லாம் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். குறிப்பாக ஆசிய நாடுகள் வளர்ச்சியடைய ஆரம்பிக்கும். வளர்ச்சியடைந்த நாடுகளெல்லாம் நலிவடைய ஆரம்பிக்கும்.

சங்கம யுகமென்பது உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை பயக்கின்ற யுகமாகும். சங்கம யுகத்தைப்பற்றி புராணங்கள் கூறாததால் மனிதர்களுக்கு எதுவும் விளங்குவதில்லை என்கின்றார் கடவுள்.

சரி, "நலிவடைந்த நாடுகளெல்லாம் வளர்ச்சியடையும்" எனும்போது அந்த நாடுகளிலுள்ள தீயவர்களும் வளர்ச்சியடைவார்களா? என்பது கேள்வியாகும்.

தற்போது இலங்கையை எடுத்துக்கொண்டால், இங்குள்ள ஏராளமானவர்கள் மிகவும் தீயவர்களாவார்கள். அவர்களுக்கு வளர்ச்சி ஏற்பட்டால் இலங்கையானது தீய நாடாகவே காணப்படும்.

நலிவடைந்த நாடுகள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால், நலிவடைந்த அனைவரும் கடவுளை நேசிப்பவர்களாக காணப்பட வேண்டும் அல்லது சக மனிதர்களை நேசிப்பவர்களாக காணப்பட வேண்டும்.

தீயவர்களுக்கு நல்லது செய்வது நாடகத்தின் கடமையல்ல. தீயவர்கள் தீயவர்களே. தீயவர்களுக்கு தண்டனை வழங்குவது எப்போது என்றால்,

தீயவர்களே நல்லவர்களை தண்டிக்கின்ற கருவிகளாவார்கள். ஆரம்பத்தில் காணப்பட்ட நல்லவர்களனைவரும் தீயவர்களாக காணப்படும்போது, அவர்களுக்கு தண்டனைகள் வழங்கி, அவர்களுடைய ஆத்மசக்திகளை அதிகரித்து, அவர்களை ஆன்மீகவாதிகளாக மாற்றி தேவர்களாக மாற்றுவதற்கே தீயவர்கள் காணப்படுகின்றார்கள்.

நாடகத்தின் இறுதியில் அல்லது சினிமாவின் இறுதியில் தீயவர்கள் கொடியவர்களாக காணப்படுவது இயல்பாகும். உலக நாடகமும் அவ்வாறே ஆகும் என்கிறார் கடவுள்.

சங்கம யுகமானது தண்டனைகளை வழங்குகின்ற யுகமாக காணப்பட்டாலும் கூட, சங்கம யுகமே மேன்மையான யுகம் என்கிறார் கடவுள்.

சங்கம யுகமானது பிரம்ம முகூர்த்தத்திற்கான யுகமாகும். மாதங்களில் மார்கழி மாதம் எவ்வாறு பிரம்ம முகூர்த்த மாதமாக காணப்படுகிறதோ, சங்கம யுகமும் அதுபோலவே ஆகும். சங்கம யுகம், மார்கழி மாதம் ஆகிய இரண்டும் இறுதியிலேயே வருகின்றது.

சங்கம யுகம் இறுதியாக காணப்படுவதற்கு காரணம், சங்கம யுகமானது இரண்டு யுகங்களை இணைக்கின்ற யுகமாகும். கலியுகத்தின் இறுதியும் சத்திய யுகத்தின் ஆரம்பமும் காணப்படுகின்ற யுகமே சங்கம யுகமாகும்.

கலியுகத்தின் இறுதி காணப்படும்போது சத்திய யுகம் காணப்படுகின்றது. சத்திய யுகம் என்றால் சத்தியமானவர்கள் காணப்படுகின்ற யுகமென்று அர்த்தமாகும்.

ஆரம்பத்தில் காணப்பட்ட தேவர்களனைவரும் மனிதர்களாக பிறப்பெடுத்து வாழ்ந்து வரும்போது, மாயையின் ஆதிக்கத்தால் பொய்களையும் புரட்டுக்களையும் செய்கின்றார்கள். தேவர்களே கடல் கடந்த வணிகங்களை செய்தவர்களாவார்கள். தேவர்களிடமே ஏராளமான செல்வங்கள் காணப்பட்டன.

தேவர்கள் மறுபிறவி எடுக்கும்போது தாங்கள் யார் என்பதை மறந்து விடுகின்றார்கள் என்கின்றார் கடவுள்.

தேவர்கள் வியாபாரத்தில் ஈடுபடத்தொடங்கியதும் மாயையின் ஆதிக்கத்தால் சரீர உணர்வுக்குள் வருகின்றார்கள். சரீர உணர்வென்றால் காமம், கோபம், பற்று, பேராசை, அகங்காரம் என்று அர்த்தமாகும்.

தேவர்கள் வியாபாரிகளாகியதும் அவர்களை பின்பற்றுபவர்களும் தேவர்களைப்போல் ஆகிவிடுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

சங்கம யுகமானது தீர்ப்புக்களை வழங்குகின்ற யுகமாகும். தேவர்களுக்கு தீர்ப்புக்களை வழங்கி அவர்களை தூய்மையாக்குகின்ற யுகமே சங்கம யுகமாகும். தூய்மை என்றால் சத்தியம் என்று அர்த்தமாகும்.

கலியுகத்தின் இறுதியான இந்நேரத்தில் தேவர்களனைவரும் தூய்மையாகுவது காலத்தின் தேவையாகும். தேவர்கள் தூய்மையாகினால் மட்டுமே உலகமானது தூய்மையாக ஆரம்பிக்கும்.

தேவர்களை தூய்மையாக்குவது கடவுளின் கடமையாகும்.

சங்கம யுகமானது தீர்ப்பு காலமென்று பைபிலில் குறிப்பிடப்படுவதற்கு காரணம், சங்கம யுகமானது ஆத்மாக்களுக்குள் காணப்படுகின்ற அனைத்து தீய விடயங்களையும் அழித்து நல்ல விடயங்களை புகுத்துவதே ஆகும்.

சங்கம யுகத்தில் மட்டுமே மனிதர்களனைவரும் நல்லவர்களாக மாறுவார்கள் என்கின்றார் கடவுள்.

சிலர் வினவலாம் "உலகில் நல்லவர்களே காணப்படுவதில்லை. அப்படியிருக்கும்போது நல்லவர்கள் எங்கு காணப்பட முடியும்?"

நல்லவர்கள் காணப்படுகின்றார்கள். அதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.

நல்லவர்கள் காணப்படுவது பிரம்மா குமாரியிலேயே ஆகும்.

பிரம்மா குமாரியென்றால் தேவர்களின் கூடாரமாகும் என்கின்றார் கடவுள்.

சிலவேளை நீங்கள் கேட்கலாம், "பிரம்மா குமாரிகளை முட்டாள்கள் என்றும் கூறுகின்றீர்கள். அதேவேளை நல்லவர்கள் என்றும் கூறுகின்றீர்கள். அதில் காணப்படுகின்ற அர்த்தமென்ன?"

முட்டாள்கள் என்று கூறப்படுவதற்கு காரணம், கடவுளால் வழங்கப்பட்ட ஞானத்தின் ஆதாரத்தில் பிரம்மா குமாரிகளனைவரும் செயற்படுவது இல்லை. அன்பினால் மட்டுமே செயற்படுகின்றார்கள். நல்லவர்களென்று கூறுவதற்கு காரணம், கடவுளின் வழிகாட்டல்கள்படி தமக்குள் காணப்படுகின்ற காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அழிக்கின்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். வெளியிலுள்ளவர்கள் ஈடுபடுவதில்லை. வெளியிலுள்ளவர்கள் காமம் மற்றும் கோபத்தை வளர்க்கின்ற விடயங்களிலேயே ஈடுபடுகின்றார்கள்.

கடவுளின் சேவை மட்டுமே காமம் மற்றும் கோபத்தை கட்டுப்படுத்தும். குடும்பம் மற்றும் வியாபாரம் என்பது காமம் மற்றும் கோபங்களுக்கு துணைபோவதாகும்.

கடவுள் கூறுகின்றார் "எட்டு மணி நேரம் வேலை செய்யுங்கள், எட்டு மணி நேரம் ஓய்வெடுங்கள், எட்டு மணி நேரம் சேவை செய்யுங்கள்."

மனிதர்கள் சேவை செய்வதற்கு முன் வராததற்கு காரணம், மனிதர்களனைவரும் மாயையிடம் மாட்டிக்கொண்டுள்ளார்கள். மாயை அழிந்தபின் முன் வருவார்கள். மாயை அழிவடைவதற்கு இன்னும் சொற்ப நேரமே காணப்படுகின்றது.

உலகமானது தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கும். என்றாவது ஒரு நாள் நான் மந்திரியாவேன், அல்லது ராஜா ஆவேன். என்னுடைய சொற்படி அனைத்தும் நடக்க ஆரம்பிக்கும் என்பதே மனிதர்களது எண்ணமாகும். எண்ணங்களனைத்தும் முடிவடையும் போது மாயையானது இருக்குமிடம் தெரியாமல் மறைந்துவிடும் என்கின்றார் கடவுள்.

சங்கம யுகமானது விடுதலைக்கான யுகமென்று அழைக்கப்படுவதற்கு காரணம்,

சங்கம யுகத்திலேயே கடவுள் யார் என்பது புரியவரும். கடவுள் யார் என்பது புரிந்தால் மட்டுமே மனிதர்களுக்குள் காணப்படுகின்ற மாயையானது இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போக ஆரம்பிக்கும்.

கடவுளே அனைத்துக்கும் முக்கியமானவராவார். அல்லாஹ், ஜெகோவா, சிவன் என்பதெல்லாம் ஒரு கடவுளையே குறிக்கின்றது. பைபில் கூறுகின்றது கடவுள் ஒரு ஒளி ஆவார் என்று. அல்குரான் கூறுகின்றது கடவுள் ஒளிமயமானவரென்று. இந்து புராணங்கள் பெரும்பாலானவை கடவுளை பேரொளி என்றே கூறுகின்றது.

கடவுள் ஒளியாவார் என்று கூறப்படுவதற்கு காரணம், கடவுளும் ஒரு ஆத்மா ஆவார். அவரிடம் காணப்படுவதெல்லாம் தூய்மையாகும். தூய்மையான ஆத்மாக்கள் தேவதைகளென்று அழைக்கப்படுகின்றார்கள். தேவதைகளென்றால் ஒளிமயமனாவர்களென்று அர்த்தமாகும்.

ஒளிக்கும் கடவுளுக்கும் சம்பந்தம் ஏற்படுவதற்கு காரணம், கடவுள் ஒரு ஆத்மா ஆவார். அவரிடம் காணப்படுகின்ற ஒளியானது அனைவதில்லை. மனிதர்களிடம் காணப்படுகின்ற ஒளியானது சுழற்சி முடிவடைகின்ற நேரம் வரும்போது அனைந்துபோக ஆரம்பிக்கின்றது. மனிதர்களின் ஒளியை அனைய விடாமல் தடுப்பது கடவுளே ஆவார். ஒளியென்றால் ஆத்மா அல்லது உயிர் என்று அர்த்தமாகும்.

உயிரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால் கடவுளைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். கடவுளும் உயிரும் ஒன்றே ஆகும். உயிர்களின் தந்தை கடவுளாவார். கடவுள் இந்த உலகிற்குள் வரும் நேரமே சங்கம யுகமாகும்.

சங்கம யுகத்தைப்பற்றி ஏற்கனவே பல பகிர்வுகள் பகிரப்பட்டுவிட்டன. தேவையானவர்கள் என்னுடைய முகநூலை வாசிக்கவும்.

சங்கம யுகமென்றால் புண்ணியங்களுக்கான யுகமென்று அர்த்தமாகும். புண்ணியங்களை செய்து வெகுமதிகளை அதிகரியுங்கள் என்பதே வேண்டுகோளாகும்.

நன்றி, ௐ சாந்தி.

Address

Colombo

Telephone

+94777900587

Website

Alerts

Be the first to know and let us send you an email when புராதன இராஜயோகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to புராதன இராஜயோகம்:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram