Raj Medical Center

Raj Medical Center Services: General medical consultations, pediatrics, dermatology, diabetes management, health check-ups, and minor surgery.

Dr. Donald Jebaratnam
MO - Dermatology at Jaffna Teaching Hospital, Senior House Officer for Paediatrics at Base Hospital Kayts and Senior House Officer (Paediatrics) at TEACHING HOSPITAL JAFFNA I speak Tamil, Singhala, English and German

நாளை மறுதினம் (08) முதல் வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழைநிலைமை அதிகரிக்கும் சாத்தியம், ஊவ...
06/01/2026

நாளை மறுதினம் (08) முதல் வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழைநிலைமை அதிகரிக்கும் சாத்தியம், ஊவா மாகாணத்திலும் நுவரெலியா, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும். - வளிமண்டலவியல் திணைக்களம்

ஒரு குழந்தை மண்ணில் பிறந்ததில் இருந்து தனது வளர்இளம் பருவத்தை எட்டும்வரை உணவுத் தேவைக்கு  பெற்றோர்களை நம்பியே இருக்கிறது...
06/01/2026

ஒரு குழந்தை மண்ணில் பிறந்ததில் இருந்து தனது வளர்இளம் பருவத்தை எட்டும்வரை உணவுத் தேவைக்கு பெற்றோர்களை நம்பியே இருக்கிறது.

பிறந்த ஆறுமாதம் கட்டாயம் தாய்பால் மட்டும் கொடுக்கப்படுகிறது .இதை Exclusive Breast Feeding என்போம்.

இந்த தாய்ப்பாலில் நிறைந்திருப்பது என்ன ??

தாய்ப்பாலில் இரண்டு வகை இருக்கிறது
1.முன் சுரக்கும் பால் ( fore milk)
2. பின் சுரக்கும் பால் ( hind milk )

குழந்தை பால் உறிஞ்ச தொடங்குகையில்,
முன் சுரக்கும் பாலில் அதிக தண்ணீரும் க்ளூகோசும் இருக்கும்..
இது குழந்தைக்கு ஏற்படும் தாகத்தை சரிசெய்து விடும்
பிறகு சுரக்கும் பின் பாலில் கொழுப்பு நிறைந்திருக்கும் இது குழந்தையின் பசியை போக்கும்.

இப்படி குழந்தை பிறந்த முதல் ஆறுமாதங்கள் கழிந்துவிடுகின்றன.

அதன் பிறகு எப்படி உணவைக் கொடுப்பது??

டப்பாக்களில் வரும் செயற்கை உணவுகளில் பெரும்பான்மை சேர்க்கப்படுவது சர்க்கரையே ஆகும் .
இந்த சர்க்கரை தான் இனிப்பு சுவையை கொடுத்து குழந்தையை அதிகமாக உண்ண வைத்து கொழுக்க வைக்கிறது.

மற்றபடி முக்கால்வாசி செய்ற்கை உணவுகளில் இருப்பது நாம் உண்ணும் அரிசி மற்றும் கோதுமை தான்.

ஆகவே,

நமது குழந்தைகளுக்கு பிசைந்த /குழைந்த அரிசி சாதம் கொடுக்கலாம்.
வேக வைத்த உணவான
இட்லி கொடுக்கலாம்.

பசுவின் பாலானது பெரும்பாலான நமது குழந்தைகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒத்துக்கொள்கிறது. . எனக்குத் தெரிந்து பசுவின் பாலை மூன்று மாதத்தில் இருந்து கொடுக்கும் தாய்மார்களைக் காண்கிறேன். இருப்பினும் பசுவின் பாலை ஒருவயதுக்கு பின் அறிமுகப்படுத்துவது சிறந்தது

அசைவ உணவு வகைகளில் ஆறு மாதம் சென்ற பின்
முதலில் ஆரம்பிக்கப்பட வேண்டியது
"முட்டையின் மஞ்சள் கரு"

முட்டை போன்ற ஒரு சிறந்த புரதச்சத்துள்ள ஒரு பொருளை பாரினில் காண முடியாது. முட்டையில் உள்ள புரதம் மிகவும் தலை சிறந்த ஹை க்வாலிட்டி புரதமாகும். இதை உடல் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் கிரகித்துவிடும்.

அடுத்து... மீன் வகைகளை அறிமுகப்படுத்தலாம். மீனை அவித்து கொடுக்கலாம்.

ஏழு எட்டு மாதம் நடக்கும் போது இறைச்சி சூப் செய்து ஊட்டலாம்.

நன்றாக சமைத்த ஆட்டு ஈரலை சோறோடு பிசைந்து ஊட்டலாம். தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

சர்க்கரை கலந்த செய்ற்கை பண்டங்களை தவிர்ப்பது நல்லது

சாக்லேட் மிட்டாய்களை இயன்றவரை தவிர்ப்பது நல்லது.

குழந்தைகளை பழங்கள் விசயத்தில் தடுக்க தேவையில்லை
அவர்கள். விரும்பும் பழங்களை தினமும் கொடுக்கலாம்.

காய்கறிகளை சாலட்/ சூப் போன்று செய்து குழந்தைகளுக்கு ஆரம்பம் முதலே கொடுத்து தினமும் காய்கறி சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் .

எண்ணெயில் பொறித்த ஜங்க் ஃபுட்களை தவிர்க்க வேண்டும்
(c)drfarooksivagangai

காலை வேலையில் டீ காபிக்கு பதில் பால் மட்டும் குடிப்பது நல்லது
டீ காபி பழக்கத்தை ஆரம்பத்திலேயே களைவது நல்லது.

எனர்ஜி ட்ரிங்குகள் அனைத்திலும் நிரம்பி இருப்பது
"சர்க்கரை" மட்டுமே.

சர்க்கரை கலந்த நீரை பருகுவதும்
எனர்ஜி ட்ரிங்குகளை குடிப்பதும் ஒன்று தான்.

ஆகவே இவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது பெரும்பாலான குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ்களை விரும்புகின்றனர். ஆனால் அவற்றுள் கலந்திருப்பது ஒவ்வாமை ஏற்படுத்தும் ரசாயனங்கள் தான்.
செயற்கை சுவை கூட்டிகள் அதிகம் சேந்க்கப்படுகின்றன.
HFCS எனும் High Fructose Corn syrup சேர்க்கப்பட்ட இனிப்பு பண்டங்கள் அனைத்தும் குழந்தைகளின் கல்லீரலுக்கு உலை வைப்பவை. சமீபத்தில் எட்டு வயது சிறுவனுக்கு கல்லீரல் வீக்க நோய் இருப்பதைக் கண்டேன்.

பாலில் தேவைப்பட்டால் பனங்கற்கண்டு/ நாட்டு சர்க்கரை போன்றவற்றை சிறிது சுவைக்காக சேர்த்து குடிக்க கொடுக்கலாம்.
என்னைக்கேட்டால் எந்த இனிப்பும் போடாமல் பால் கொடுத்துப்பழக்குவதே சிறந்தது.

குழந்தைகளை நம்மால் ஐந்து வயது வரை ஏப்படி வேண்டுமானாலும் பழக்க முடியும் என்பதையும் பதிவு செய்கிறேன்

பெரும்பாலும் தாயும் தந்தையும் எதை செய்கிறார்களோ? அதையே குழந்தைகள் செய்கின்றன. நாம் வீட்டில் எதை உண்கிறோமோ? அதையே குழந்தைகள் உண்கின்றன. எனவே , பெற்றோர்களாகிய நாம் எதை உண்கிறோம் என்பதில் அதீத பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இனிப்பு பிடிக்காத தாய் பெற்றெடுக்கும் பிள்ளைகளும் இனிப்பு அதிகம் கொடுக்கப்படாமல் வளர்க்கப்படுவர்

அசைவம் பிடிக்காத தாயின்பிள்ளைகளும் அந்ந அசைவ உணவுகள் மறுக்கப்பட்டு வளர்க்கப்படுவர்.

இது போன்று தாய் தந்தை உணவு மீது கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகள் மற்றும் விருப்பங்கள் அவர்களது அடுத்த சந்ததியின் உடல் நலனில் குந்தகம் விளைவிக்கிறது.

ஒரு தாய்க்கு உணவு சார்ந்த நல்லறிவை ஊட்டினால் அது அவளது சந்ததிக்கும் கடத்தப்பட்டு காலம் காலமாக அறிவுப்பரிமாற்றம் நடக்கிறது.
மூடநம்பிக்கைகளும் அவ்வாறே கடத்தப்படுகிறது.
மூடநம்பிக்கையின் சங்கிலியை உடைத்து அதை அறிவியல் சார்புள்ள நம்பிக்கையாக மாற்றியாக வேண்டும்.

சரி டயட் சார்ட்டுக்கு வருவோம்

காலை உணவாக நாம் உண்ணும் இட்லி தோசை போன்றவற்றை கொடுக்கலாம்

மதியம் அரிசி சாதத்தை கஞ்சி வடிகட்டியதாக இருக்குமாறு கொடுக்கலாம்.
கூட காய்கறிகள் அதிகம் இருக்குமாறும் , அனுதினம் வேறு வேறு காய்கறிகள் உண்ணுமாறு கொடுக்க வேண்டும்.
ஒரே காய்கறியை கொடுத்தால் குழந்தைகள் அலுப்புதட்டி அவற்றை உண்ணாது. ஆகவே வெரைட்டி முக்கியம்.

இரவு ஒரு முட்டை சேர்த்து கலவை சாதம், பருப்பு சாதம் அல்லது இட்லி போன்றவற்றை ஊட்டலாம் . கீரை சாதம் ஊட்டலாம்

இனிப்புகளை வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சிறந்தது.
முடிந்தவரை உணவகங்களை தவிர்ப்பது நல்லது

இயன்றவரை தவிர்க்க வேண்டிய உணவுகள்

1. சோயா ( ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் அதிகம் )
2. கோதுமை ( க்ளூடன் )
3. மைதா ( க்ளூடன் மற்றும் அலாக்சான்)
4. சாக்லேட் ( அதீத இனிப்பு)
5. ப்ரட் ( மைதா + சீனி)
6. கேக் வகைகள் ( மைதா + சீனி)
7. குளிர்பானங்கள் ( சீனி)
8. எனர்ஜி ட்ரிங்க்ஸ் ( சீனி)
9. பொறித்த உணவுகள் ( ஊறு விளைவிக்கும் கொழுப்புகள்)

குழந்தைகளுக்கு ஸ்ட்ரிக்ட் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறை தேவையில்லை.

அவர்களுக்கு மிதமான அளவில் ஆரோக்கியமான மாவுச்சத்தை கொடுத்து வளர்க்க வேண்டும்

பள்ளிகளில் சாக்லேட் கொடுத்தால் அதை வீட்டுக்கு வந்து தாயிடம் காட்டிவிட்டு உண்ணும் முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஆடம்பரத்தை காட்டுவதை விடவும் தர்ம சிந்தனையுடன் வளர்ப்பது சிறந்தது.

ஏழைகளின் பசியைக் காட்டி உணவு விசயத்தில் மேம்போக்காக இருக்கக்கூடாது என்பதை விளக்கலாம்.

தினமும் அவர்களை ஓடியாடி விளையாட ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கான "screen time"ஐ வரைமுறைபடுத்திட வேண்டும்.

குழந்தை பருவத்தை பொறுத்தவரை சோம்பேறித்தனம் இல்லாத சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பழக்கப்படுத்த வேண்டும்.

சிறு வயதில் இருந்தே இப்படி நாம் குழந்தைகளை வளர்ப்பது எதிர்காலத்தில் அவர்கள் உணவு பழக்கத்தை நல்ல முறையில் அமைத்து கொண்டு நோய்கள் இன்றி வாழ வழிசெய்யும்

நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம்
05/01/2026

இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம்

நீர்சிரங்கு (Mudsore / Athlete’s Foot) 🦶🦠மழைக்காலங்களில்,அதிக நேரம் தண்ணீர் அல்லது சேற்றில் வேலை செய்பவர்களுக்குபொதுவாக ...
05/01/2026

நீர்சிரங்கு (Mudsore / Athlete’s Foot) 🦶🦠

மழைக்காலங்களில்,
அதிக நேரம் தண்ணீர் அல்லது சேற்றில் வேலை செய்பவர்களுக்கு
பொதுவாக ஏற்படும் ஒரு பூஞ்சை (Fungal) தொற்று தான்
👉 சேற்றுப்புண்.

🧬 மருத்துவப் பெயர்: Tinea Pedis
🦠 காரணம்: Trichophyton என்ற பூஞ்சை
👉 ஈரப்பதம் அதிகமான கால் விரல் இடுக்குகளில் வளர்கிறது.

---

⚠️ முக்கிய அறிகுறிகள்
🔹 கால் விரல்களுக்கு இடையில் கடும் அரிப்பு & எரிச்சல்
🔹 தோல் சிவந்து செதில் செதிலாக உரிதல்
🔹 சிறிய கொப்புளங்கள், நீர் வடிதல்
🔹 துர்நாற்றம்
🔹 தீவிர நிலையில் பிளவு, வலி, ரத்தக்கசிவு

---

🛡️ தடுப்பு முறைகள் – Prevention is Better than Cure!
✔️ கால்களை எப்போதும் உலர வைத்துக்கொள்ளுங்கள்
✔️ காற்றோட்டமான காலணிகள் அணியுங்கள்
✔️ ஈரமான சாக்ஸ் / சப்பாத்தை தவிர்க்கவும்
✔️ டவல், காலணி பகிர்ந்து கொள்ள வேண்டாம்
✔️ அதிக வியர்வை இருந்தால் Antifungal பவுடர் பயன்படுத்தலாம்

---

💊 சிகிச்சை – Treatment
🔸 ஆரம்ப நிலையில் இருந்தால்

பூஞ்சை எதிர்ப்பு கிரீம்கள் (மருத்துவர் ஆலோசனையுடன்)
🔸 புண் அதிகமாக இருந்தால்
👉 தோல் மருத்துவரை அவசியம் அணுகவும்

🌿 இயற்கை உதவி முறைகள் (உதவியாக மட்டும்):
▫️ மஞ்சள் + வேப்பிலை
▫️ வெதுவெதுப்பான கல் உப்பு நீரில் 10 நிமிடம் கால்கள் ஊற வைப்பது

---

🚨 மிக முக்கிய எச்சரிக்கை:
🩺 நீரிழிவு (Diabetes) உள்ளவர்கள்
சேற்றுப்புண்ணை அலட்சியப்படுத்த வேண்டாம்!
👉 சிறிய புண் கூட
👉 Cellulitis போன்ற பெரிய தொற்றாக மாறலாம்.

🙏 உங்கள் கால்கள் – உங்கள் ஆரோக்கியம்
சிறு கவனம்… பெரிய பிரச்சினையைத் தவிர்க்கும்!

📢 பகிருங்கள் – மற்றவர்களுக்கும் பயன் அடையட்டும் 👍















வெள்ளவத்தை லாஜில் இருந்து இன்று வாங்கப்பட்ட உளுந்துவடையில் முழு கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஒரு வா...
04/01/2026

வெள்ளவத்தை லாஜில் இருந்து இன்று வாங்கப்பட்ட உளுந்துவடையில் முழு கரப்பான் பூச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாடிக்கையாளர் எடுத்த முதல் கடியிலேயே இந்த சம்பவம் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் உணவின் சுத்தம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக கடும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் உடல்நலத்திற்கு இது பெரும் ஆபத்தாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

⚠️ இதை செய்தால் குழந்தைகளின் இதயத்துக்கு ஆபத்து! ⚠️உங்கள் குழந்தைகள்📱 போன்💻 லேப்டாப்🎮 கேம்ஸ்என எப்போதும் Screen முன்பே இ...
04/01/2026

⚠️ இதை செய்தால் குழந்தைகளின் இதயத்துக்கு ஆபத்து! ⚠️

உங்கள் குழந்தைகள்
📱 போன்
💻 லேப்டாப்
🎮 கேம்ஸ்
என எப்போதும் Screen முன்பே இருக்கிறார்களா?

👉 சமீபத்திய ஆய்வுகள் ஒரு முக்கிய எச்சரிக்கையை சொல்கின்றன…

❗ அதிக Screen Time குழந்தைகளின் இதயத்தை மெதுவாக பலவீனப்படுத்துகிறது.
❗ உடல் அசைவின்மை காரணமாக
• உயர் ரத்த அழுத்தம்
• இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்
• கொலஸ்ட்ரால் பிரச்னைகள்
அதிகரிக்கிறது.

👉 இதன் விளைவாக, சிறு வயதிலேயே இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது.

👶 குழந்தைகளின் ஆரோக்கிய எதிர்காலத்துக்காக
✅ Screen Time-ஐ கட்டுப்படுத்துங்கள்
✅ வெளியில் விளையாட ஊக்குவியுங்கள்
✅ தினசரி உடல் இயக்கம் அவசியம்

❤️ இன்று கவனம் கொடுத்தால், நாளை இதயம் பாதுகாப்பாக இருக்கும்.

📢 இந்த தகவலை மற்ற பெற்றோர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
ஒரு Share – ஒரு குழந்தையின் எதிர்காலம்!
😊

மழை காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: 2026-ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு​2026-ஆம்...
04/01/2026

மழை காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: 2026-ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

​2026-ஆம் ஆண்டின் புதிய புத்தாண்டு பிறந்த முதல் இரண்டு நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 581 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

​தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) சமூக மருத்துவ நிபுணர் டாக்டர் பிரஷிலா சமரவீர இது குறித்து கருத்து தெரிவிக்கையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​அண்மையில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாகவே டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துள்ளதாக டாக்டர் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Copied

04/01/2026

❇️ PROBIOTICS vs PREBIOTICS❇️ PROBIOTICS vs PREBIOTICSBasic ConceptProbiotics → Live microorganisms that may provide hea...
04/01/2026

❇️ PROBIOTICS vs PREBIOTICS
❇️ PROBIOTICS vs PREBIOTICS
Basic Concept

Probiotics → Live microorganisms that may provide health benefits when taken in adequate amounts

Prebiotics → Non-digestible food components that selectively stimulate the growth or activity of beneficial gut bacteria

PROBIOTICS

→ Live microorganisms (commonly Lactobacillus, Bifidobacterium, Saccharomyces boulardii)
→ Benefit is strain-specific and condition-specific

Mechanisms of Action

→ Temporary modulation of gut microbiota
→ Competitive inhibition of pathogenic bacteria
→ Enhancement of intestinal barrier function
→ Modulation of immune responses
→ Production of antimicrobial substances

(Most probiotics do not permanently colonize the gut)

Common Sources

→ Yogurt/curd with live cultures
→ Kefir
→ Fermented foods (kimchi, sauerkraut, miso)
→ Probiotic supplements

Clinical Uses (Evidence-Based)

→ Antibiotic-associated diarrhea
→ Prevention of Clostridioides difficile–associated diarrhea (selected strains)
→ Infantile colic (some strains)
→ Irritable bowel syndrome (symptom relief in some patients)
→ Acute infectious diarrhea (adjunctive)

Limitations & Safety

→ Effects vary by strain, dose, formulation
→ Benefits are modest in many conditions
→ Usually safe in healthy individuals
→ Avoid or use cautiously in:
→ Severe immunocompromise
→ Critical illness
→ Patients with central venous catheters
→ Premature infants (strain-dependent risk)

PREBIOTICS

→ Non-digestible carbohydrates that are selectively fermented by beneficial gut bacteria

Common Types

→ Inulin
→ Fructo-oligosaccharides (FOS)
→ Galacto-oligosaccharides (GOS)
→ Resistant starch

Mechanisms of Action

→ Promote growth of beneficial microbes
→ Increase short-chain fatty acid (SCFA) production
→ Improve gut barrier function
→ Support metabolic and immune health

Common Sources

→ Garlic
→ Onion
→ Leeks
→ Banana
→ Oats
→ Chicory root
→ Whole grains and legumes

Clinical Benefits

→ Improve stool frequency and consistency
→ Support gut microbiota diversity
→ May improve calcium absorption
→ May aid metabolic health

Limitations

→ Excess intake may cause bloating or gas
→ Effects depend on individual gut microbiota

SYNBIOTICS

→ Combination of probiotics + prebiotics designed to act synergistically

Clinical Role

→ Prebiotics may enhance activity of administered probiotics
→ Used in selected GI conditions
→ Not required for probiotic survival, but may improve efficacy


Know your numbers. A healthy blood pressure before, during and after pregnancy reduces your risk of heart disease, strok...
04/01/2026

Know your numbers. A healthy blood pressure before, during and after pregnancy reduces your risk of heart disease, stroke and other pregnancy complications. Talk to your health care team today about your blood pressure readings and how you can maintain healthy blood pressure levels while pregnant.
உங்களது ரத்த அழுத்த அளவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள். கர்ப்ப காலத்திற்கு முன்பும், கர்ப்ப காலத்தின் போதும் மற்றும் பிரசவத்திற்குப் பிறகும் ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது, இதய நோய், பக்கவாதம் மற்றும் இதர கர்ப்ப கால சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
உங்கள் ரத்த அழுத்த அளவுகளைப் பற்றியும், கர்ப்ப காலத்தில் அவற்றை எவ்வாறு ஆரோக்கியமாகப் பராமரிப்பது என்பது குறித்தும் உங்கள் மருத்துவக் குழுவிடம் இன்றே கலந்து ஆலோசியுங்கள்.





​❤️ Health & Prevention





​ #இரத்தஅழுத்தம் (Blood Pressure)​ #ஆரோக்கியமானகர்ப்பகாலம் (Healthy Pregnancy)
​ #தாய்மை (Motherhood)

🦟 CHIKUNGUNYA ALERT: Protect Your Family! | சிக்குன்குன்யா விழிப்புணர்வு! 🇱🇰Chikungunya: The "Bending" Fever and Its Lon...
03/01/2026

🦟 CHIKUNGUNYA ALERT: Protect Your Family! | சிக்குன்குன்யா விழிப்புணர்வு! 🇱🇰

Chikungunya: The "Bending" Fever and Its Long-Term Impact
While public health efforts in Sri Lanka are often dominated by the fight against Dengue, Chikungunya remains a significant threat that can leave patients with debilitating health issues for years. Derived from a Kimakonde word meaning "that which bends up," the name reflects the stooped posture of patients suffering from its trademark severe joint pain.
The Transmission: Who is the Culprit?
Chikungunya is a viral disease that does not spread directly from person to person. Instead, it relies on two primary "vectors" or carriers found throughout Sri Lanka:
* Aedes aegypti: The same mosquito responsible for Dengue. It thrives in urban areas and prefers to live indoors.
* Aedes albopictus: Commonly known as the "forest mosquito," it is highly prevalent in the rubber and coconut plantations of Sri Lanka's wet zone.
These mosquitoes typically bite during daylight hours, with peak activity occurring early in the morning and late in the afternoon.
Symptoms and Long-Term Effects
Most people show symptoms 3 to 7 days after being bitten. While high fever and rashes are common, the most distinguishing feature is polyarthralgia (pain in multiple joints).
* The Acute Phase: Lasts about a week, featuring sudden fever, joint swelling, and headache.
* The Chronic Phase: Unlike Dengue, Chikungunya can transition into a chronic stage where joint pain persists for months or even years, mimicking rheumatoid arthritis.
Prevention: The Only Defense
Since there is no specific antiviral treatment or widely available vaccine in the local health system, prevention is key. Protecting yourself involves "Source Reduction"—eliminating stagnant water in coconut shells, yogurt cups, and gutters—and using personal protection like mosquito nets and repellents.

சிகுன்குன்யா: மூட்டுவலியை ஏற்படுத்தும் 'முடக்கு' காய்ச்சல்
இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தபடியாக பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் ஒரு நோயாக சிகுன்குன்யா (Chikungunya) காணப்படுகிறது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அரிது என்றாலும், இது ஏற்படுத்தும் கடுமையான மூட்டுவலி ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையை நீண்ட காலத்திற்கு முடக்கிவிடும்.
நோய் பரவும் விதம் மற்றும் காரணிகள் (Vectors)
சிகுன்குன்யா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை. இது பாதிக்கப்பட்ட நுளம்புகள் கடிப்பதே மூலமே பரவுகிறது. இலங்கையில் இந்நோயைப் பரப்பும் இரண்டு முக்கிய நுளம்பு வகைகள் உள்ளன:
* ஏடிஸ் ஈஜிப்தி (Aedes aegypti): இவை பெரும்பாலும் வீட்டுச் சூழலில் நீர் தேங்கும் பாத்திரங்களில் வளருகின்றன.
* ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus): இவை தோட்டம் மற்றும் காடுகள் நிறைந்த பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.
இந்த நுளம்புகள் பொதுவாக பகல் நேரங்களிலேயே கடிக்கின்றன. ஒரு நுளம்பு பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்துவிட்டு, ஆரோக்கியமான ஒருவரைக் கடிக்கும்போது வைரஸ் கடத்தப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
நுளம்பு கடித்த 3 முதல் 7 நாட்களில் அறிகுறிகள் தென்படும்:
* திடீர் காய்ச்சல்: மிக அதிகமான உடல் வெப்பம்.
* கடுமையான மூட்டுவலி: இதுவே இந்நோயின் முக்கிய அறிகுறி. கை மணிக்கட்டு, கணுக்கால் மற்றும் விரல் மூட்டுகளில் அதிக வலி ஏற்படும்.
* ஏனையவை: தலைவலி, தசை வலி, மூட்டு வீக்கம் மற்றும் தோலில் சிவப்புத் தடிப்புகள் (Rashes).
தடுப்பு முறைகள்
சிகுன்குன்யாவிற்கு என பிரத்யேக மருந்துகள் இல்லை. காய்ச்சலைக் குறைக்க பாராசிட்டமால் போன்ற மருந்துகள் வழங்கப்படுகின்றன. எனவே, இதனைத் தடுக்க பின்வருவனவற்றைச் செய்வது அவசியம்:
* வீட்டைச் சுற்றியுள்ள சிரட்டைகள், டயர்கள் மற்றும் தயிர் கோப்பைகளில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளல்.
* நுளம்பு வலைகள் மற்றும் நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துதல்.
* உடல் முழுவதையும் மறைக்கும் ஆடைகளை அணிதல்.
​ #சிகுன்குன்யா #விழிப்புணர்வு #இலங்கை

03.01.2026 சனிக்கிழமை இரவு 10.00 மணிவங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர வானிலை நிகழ்வு தொடர்பான முன்னறிவிப்பு *******...
03/01/2026

03.01.2026 சனிக்கிழமை இரவு 10.00 மணி

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர வானிலை நிகழ்வு தொடர்பான முன்னறிவிப்பு

***********************************************

கடந்த 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் தோன்றிய காற்றுச் சுழற்சி தற்போது தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது.

இக்காற்றுச்சுழற்சிக்கு தேவையான மறை வெப்பச் சக்தியின் பற்றாக்குறையால் இது எதிர்பார்த்த வேகத்தில் நகராமல் மிக மிக மெதுவாக நகர்ந்து இன்று மாலை காற்றழுத்த தாழ்வு நிலையாக விருத்தி பெற்றுள்ளது.

இது மேலும் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து,இலங்கைக் தெற்காக நகர்ந்து குமரிக்கடலைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைத்தது.

+++++++++++++++++++++++++++++++++++++

காற்றுச் சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக....

வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களுக்கு எதிர்வரும் 05.01.2026 முதல் 12.01.2026 வரை கனமானது முதல் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக 06.01.2026 முதல் 11.01.2026 வரை மேற்குறிப்பிட்ட மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மிக முக்கியமாக எதிர்வரும் 06.01.2026 முதல் 11.01.2016 வரை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கு மிக மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதேவேளை இக்காலப்பகுதியில் இலங்கையின் ஏனைய மாகாணங்களிலும் பரவலாக மிதமானது முதல் சற்று கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியாக மழை கிடைக்கும் என்பதனால் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல பகுதிகளிலும் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும். எனவே மக்கள் இது தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது அவசியம்.

வடக்கு, கிழக்கு,மத்திய, வட மத்திய மாகாணங்களின் நீர்த்தேக்கங்களின் முகாமையாளர்கள் இந்த காற்றழுத்த தாழ்வு நிலையோடு தொடர்புடைய கனமழை நிகழ்வு தொடர்பாக அதிக கரிசனை கொள்வது விரும்பத்தக்கது.

அதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பிராந்தியங்கள் எதிர்வரும் 06.01.2026 முதல் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் மிக அவதானமாக இருப்பது அவசியம்.

அதே வேளை கிழக்கு, தென்கிழக்கு கடற்பகுதிகளில் பலநாட் கலங்களில் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றுள்ளவர்களும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் அவதானமாக இருப்பது சிறந்தது.

இந்த முன்னறிவிப்பினை வடக்கு, கிழக்கு, ஊவா,மத்திய, தென் மாகாணங்களின் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வூட்டுவது அவர்களுக்கு இந்த கனமழை மூலம் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்கும்.

-----------------------------------------------------------------------------

பல்வேறு மாதிரிகளின் அடிப்படையிலேயே இந்த முன்னறிவிப்பு வழங்கப்படுகின்றது. ஆகவே இதில் சிறிய மாற்றங்கள் நிகழலாம். ஆனால் எதிர்வரும் 06.01.2026 முதல் 11.06.2026 வரை வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் வட மத்திய மாகாணங்கள் கனமழை முதல் மிகக் கனமழையைப் பெறுவது உறுதியானது.

- நாகமுத்து பிரதீபராஜா -

2026.01.03 සෙනසුරාදා රාත්‍රී 10.00

බෙංගාල බොක්කෙහි වර්ධනය වී ඇති දරුණු කාලගුණික සිදුවීම පිළිබඳ අනාවැකිය

****†******************************************

2025.12.28 වන දින බෙංගාල බොක්කෙහි ඉන්දුනීසියාවේ බටහිර කොටසේ ඇති වූ වායු සංසරණය දැන් පීඩන අවපාතයක් දක්වා ශක්තිමත් වී ඇත.

මෙම වායු සංසරණය සඳහා අවශ්‍ය ගුප්ත තාප ශක්තිය නොමැතිකම හේතුවෙන් එය අපේක්ෂිත වේගයෙන් චලනය වී නොමැති අතර ඉතා සෙමින් වර්ධනය වී අද සවස පීඩන අවපාතයක් දක්වා වර්ධනය වී ඇත.

එය බටහිර, වයඹ දෙසට ගමන් කර ශ්‍රී ලංකාවට දකුණින් ගමන් කර කුමාරි මුහුදට ළඟා වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.

මේ හේතුවෙන් උතුරු, නැගෙනහිර, ඌව, මධ්‍යම සහ සබරගමුව පළාත්වල සමහර ප්‍රදේශවලට පසුගිය දින කිහිපය තුළ මධ්‍යස්ථ වැසි ලැබී ඇත.

+++++++++++++++++++++++++++++++++++++

වායු සංසරණය පීඩන අවපාතයක් දක්වා ශක්තිමත් වී ඇත. මේ හේතුවෙන්....

උතුරු, නැගෙනහිර, ඌව, මධ්‍යම, උතුරු මැද, සබරගමුව සහ දකුණු පළාත්වලට 2026.01.05 සිට 2026.01.12 දක්වා තද වැසි හෝ ඉතා තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

විශේෂයෙන්, 2026.01.06 සිට 2026.01.11 දක්වා, ඉහත සඳහන් පළාත්වල බොහෝ ප්‍රදේශවලට ඉතා තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

වඩාත්ම වැදගත් වන්නේ, 2026.01.06 සිට 2026.01.11 දක්වා, උතුරු, නැගෙනහිර සහ ඌව පළාත්වලට ඉතා තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

මේ අතර, මෙම කාලය තුළ ශ්‍රී ලංකාවේ අනෙකුත් පළාත්වලට ද මධ්‍යස්ථ සිට සුළු වශයෙන් තද වැසි ලැබීමට ඉඩ ඇත.

අඛණ්ඩ වර්ෂාපතනය හේතුවෙන් මධ්‍යම සහ ඌව පළාත්වල බොහෝ ප්‍රදේශවල නායයෑම් ආපදා ඇති විය හැක. එබැවින්, මේ සම්බන්ධයෙන් ජනතාව ඉතා විමසිලිමත් වීම අවශ්‍ය වේ.

මෙම අවපාතය හා සම්බන්ධ අධික වර්ෂාපතනය සම්බන්ධයෙන් උතුරු, නැගෙනහිර, මධ්‍යම සහ උතුරු මැද පළාත්වල ජලාශ කළමනාකරුවන් වඩාත් ප්‍රවේශම් වීම සුදුසුය.

මේ අතර, 2026.01.06 දින සිට ශ්‍රී ලංකාවේ උතුරු, නැගෙනහිර, ගිනිකොන සහ දකුණු මුහුදු ප්‍රදේශ කැළඹිලි සහිත තත්ත්වයක පවතිනු ඇත, එබැවින් ධීවරයින් මුහුදු යාමේදී ඉතා ප්‍රවේශම් විය යුතුය.

මේ අතර, දින කිහිපයක් නැගෙනහිර සහ ගිනිකොන මුහුදු ප්‍රදේශවල ධීවර කටයුතු සඳහා ගිය අය ද මෙම අවපාතය පිළිබඳව ප්‍රවේශම් විය යුතුය.

දැනුවත් කිරීම සඳහා උතුරු, නැගෙනහිර, ඌව, මධ්‍යම සහ දකුණු පළාත්වල සියලුම ජනතාව සමඟ මෙම අනාවැකිය බෙදා ගැනීම මෙම අධික වර්ෂාපතනයේ බලපෑම් වළක්වා ගැනීමට උපකාරී වේ.

-----------------------------------------------------------------------------

මෙම අනාවැකිය විවිධ ආකෘති මත පදනම්ව ලබා දී ඇත. එබැවින්, එහි සුළු වෙනස්කම් තිබිය හැකිය. නමුත් උතුරු, නැගෙනහිර, ඌව, මධ්‍යම, දකුණු සහ උතුරු මැද පළාත්වලට 2026.01.06 සිට 2026.06.11 දක්වා තද සිට ඉතා තද වැසි ලැබෙන බව නිසැකය.

- නාගමුතු ප්‍රතිපරාජා -

03.01.2026 Saturday 10.00 pm.

Forecast regarding the severe weather event that has developed in the Bay of Bengal

************************************************
The air circulation that originated in the western part of Indonesia in the Bay of Bengal on 28.12.2025 has now strengthened into a depression.

Due to the lack of latent heat energy required for this air circulation, it has not moved at the expected speed and has developed very slowly and has developed into a depression this evening.

It is expected to move further towards the west, northwest, move south of Sri Lanka and reach the Kumari Sea.
Due to this, some parts of the Northern, Eastern, Uva, Central and Sabaragamuwa provinces have received moderate rains for the past few days.

++++++++++++++++++++++++++++++++++++

The air circulation has strengthened into a depression. Due to this....
The Northern, Eastern, Uva, Central, North Central, Sabaragamuwa and Southern provinces are likely to receive heavy to very heavy rainfall from 05.01.2026 to 12.01.2026.
In particular, from 06.01.2026 to 11.01.2026, many parts of the above-mentioned provinces are likely to receive very heavy rainfall.

Most importantly, from 06.01.2026 to 11.01.2026, the Northern, Eastern and Uva provinces are likely to receive very heavy rainfall.

Meanwhile, other provinces of Sri Lanka are also likely to receive moderate to slightly heavy rainfall during this period.
Due to the continuous rainfall, landslide disasters may occur in many parts of the Central and Uva provinces. Therefore, it is necessary for the people to be very vigilant in this regard.

It is advisable for the reservoir managers of the Northern, Eastern, Central and North Central provinces to be more cautious regarding the heavy rainfall associated with this depression.
Meanwhile, the northern, eastern, southeastern and southern sea areas of Sri Lanka will be in a turbulent condition from 06.01.2026 onward, so it is necessary for fishermen to be very careful when going to sea.

Meanwhile, those who have gone for deepsea fishing activities in the Eastern and Southeastern sea areas in multi day boats should also be careful regarding this depression.

Sharing this forecast with all the people of the Northern, Eastern, Uva, Central and Southern provinces to create awareness will help them avoid the impacts of this heavy rainfall.

-----------------------------------------------------------------------------

This forecast is given based on various models. Therefore, there may be minor changes in it. But it is certain that the Northern, Eastern, Uva, Central, Southern and North Central provinces will receive heavy to very heavy rains from 06.01.2026 to 11.06.2026.

- Nagamuthu Piratheeparajah -

Address

332, Jaffna-Kandy Road, Pungankulam Junction, Arialai
Jaffna Town
40000

Opening Hours

Monday 06:30 - 07:30
16:30 - 20:30
Tuesday 06:30 - 07:30
16:30 - 20:30
Wednesday 06:30 - 07:30
16:30 - 20:30
Thursday 06:30 - 07:30
16:30 - 20:30
Friday 06:30 - 07:30
16:30 - 20:30
Saturday 06:30 - 07:30
16:30 - 20:30
Sunday 06:30 - 07:30
16:30 - 20:30

Telephone

+94212224252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Medical Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raj Medical Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram