Raj Medical Center

Raj Medical Center Services: General medical consultations, pediatrics, dermatology, diabetes management, health check-ups, and minor surgery.

Dr. Donald Jebaratnam
MO - Dermatology at Jaffna Teaching Hospital, Senior House Officer for Paediatrics at Base Hospital Kayts and Senior House Officer (Paediatrics) at TEACHING HOSPITAL JAFFNA I speak Tamil, Singhala, English and German

கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் சகோதரர்கள், மகன்மார்கள், உறவினர்கள் குறுகிய காலத்தில்  சொத்து திரட்டிய விபரங்க...
01/05/2026

கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் சகோதரர்கள், மகன்மார்கள், உறவினர்கள் குறுகிய காலத்தில் சொத்து திரட்டிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும்.

இல்லையேல் நீதிமன்ற உத்தரவுடன் குறித்த சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்.

- ஜனாதிபதி

🛑BREAKING NEWSஈரானின் சமீபத்திய முன்மொழிவு திருப்தி அளிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவிப்புவெள்ளிக்க...
01/05/2026

🛑BREAKING NEWS

ஈரானின் சமீபத்திய முன்மொழிவு திருப்தி அளிக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு
வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் வழங்கப்பட்ட ஈரானின் சமீபத்திய முன்மொழிவு தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், ஆனால் அதில் எனக்கு திருப்தி இல்லை. ஈரானுடன் எங்களால் ஒரு ஒப்பந்தத்தை எட்ட முடியுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை," என்று கூறினார்.

💉 “ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏத்துனா உடம்பு தேறிடும்!” – உண்மையா?மருத்துவமனைக்குச் சென்றாலே பலர் கேட்பது:👉 “டாக்டர்… சீக்க...
01/05/2026

💉 “ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏத்துனா உடம்பு தேறிடும்!” – உண்மையா?

மருத்துவமனைக்குச் சென்றாலே பலர் கேட்பது:
👉 “டாக்டர்… சீக்கிரம் ஒரு குளுக்கோஸ் போடுங்க!”

ஆனால் நினைவில் கொள்ளுங்கள் —
குளுக்கோஸ் ஒரு மேஜிக் டானிக் அல்ல. அது ஒரு முக்கியமான மருத்துவ மருந்து.

---

✅ குளுக்கோஸ் (IV Fluids) எப்போது உண்மையில் தேவை?

🔹 தீவிர நீர்ச்சத்து குறைபாடு (வாந்தி / வயிற்றுப்போக்கு)
🔹 வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாத நிலை (அறுவை சிகிச்சை முன்/பின்)
🔹 இரத்த அழுத்தம் மிகவும் குறைதல் (Shock / Low BP)
🔹 அவசர காலங்களில் மருந்து செலுத்த வேண்டிய நிலை

📌 பொதுவாக 500 ml IV fluids
3–4 மணி நேரத்தில் மெதுவாக ஏற்றப்படுவது பாதுகாப்பான நடைமுறை.
(நோயாளியின் வயது, இதய நிலை, சிறுநீரக செயல்பாடு போன்றவற்றைப் பொறுத்து வேகம் மாறும்.)

🚫 3–4 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய குளுக்கோஸை 1 மணி நேரத்திற்குள் வேகமாக ஏற்றுவது தவறு.
அது உடலுக்கு தேவையற்ற சுமையை ஏற்படுத்தலாம்.

---

❌ தவறான நம்பிக்கைகள்

🔸 “சோர்வா இருக்கு… குளுக்கோஸ் போட்டா சரியாகிடும்!”
➡️ சாதாரண சோர்வுக்கு ஓய்வு + சத்தான உணவு + நீர் போதுமானது.

🔸 “குளுக்கோஸ் போட்டா தெம்பு வரும்!”
➡️ அது தற்காலிக ஆற்றல் மட்டும்; நிரந்தர தீர்வு அல்ல.

---

⚠️ தேவையில்லாமல் அல்லது வேகமாக ஏற்றினால் என்ன ஆகும்?

🚨 இதயத்திற்கு அதிக அழுத்தம் → Heart Failure வரை செல்லலாம்
🚨 நுரையீரலில் நீர் தேக்கம் → மூச்சுத்திணறல்
🚨 சர்க்கரை நோயாளிகளில் → திடீர் சர்க்கரை உயர்வு
🚨 உப்பு சமநிலை மாற்றம் → வலிப்பு / மூளை பாதிப்பு
🚨 ஊசி இடத்தில் தொற்று (Infection)

---

🌿 பாதுகாப்பான மாற்று என்ன?

👉 குடிக்க முடிந்தால், IV தேவையில்லை!
ORS (Oral Rehydration Salts), இளநீர், நீர், பழச்சாறு — பல சமயங்களில் போதுமானவை.

---

📌 பொதுமக்கள் கவனிக்க:

✔️ “பலவீனம் = குளுக்கோஸ்” என்பது தவறான எண்ணம்
✔️ மருத்துவர் ஆலோசனை இன்றி IV கேட்க வேண்டாம்
✔️ IV ஏறும் போது மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம், வீக்கம் போன்றவை இருந்தால் உடனே தெரிவிக்கவும்

-நமது மருத்துவர
Dr S முத்துசாமி
அரசு மருத்துவர்
அரியலூர் பெரம்பலூர்

இறுதியாக சொல்லிக் கொள்வது என்னவென்றால்...

«💡 குளுக்கோஸ் – தேவையானவருக்கு மருந்து; தேவையில்லாதவருக்கு பாரம்.
அவசரம் அல்ல… பாதுகாப்பே முக்கியம்.»

👨‍⚕️ விழிப்புணர்வு பகிருங்கள்.
உடல் நலமே உண்மையான செல்வம்!

"எதிரி தெரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் அவர்களை சும்மா விடமாட்டோம்; கமேனி மற்றும் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் நாங்கள...
01/05/2026

"எதிரி தெரிந்து கொள்ள வேண்டும், நாங்கள் அவர்களை சும்மா விடமாட்டோம்; கமேனி மற்றும் கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் நாங்கள் பழிவாங்குவோம்," என்று தெஹ்ரானின் வெள்ளிக்கிழமை தொழுகை தலைவர் முகமது-ஜாவத் ஹஜ் அலி-அக்பரி கூறினார்.
"காசெம் சோலைமணியின் கொலைக்காக நாங்கள் இன்னும் பழிவாங்கவில்லை, நாங்கள் செய்ய வேண்டியவை இன்னும் நிறைய உள்ளன," என்று அவர் தெஹ்ரானில் ஆற்றிய தனது உரையின் போது கூறினார்.
நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகெர் கலிபாஃப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான ஈரானின் பேச்சுவார்த்தைக் குழுவினரை பாராட்டிய அவர், அவர்கள் எதிரியின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாகக் கூறினார்.
"எதிர்ப்பை நிராகரித்த பேச்சுவார்த்தைக் குழுவிற்கும் அதன் தலைவர் திரு. கலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சருக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்," என்று ஹஜ் அலி-அக்பரி கூறினார். "ஹஜ் பாகெர் தனது இராஜதந்திர ஏவுகணை மூலம் சாத்தானின் இதயத்தில் சுட முடிந்தால், அது மிகவும் நல்லது. இல்லையெனில், செய்யத் மஜித் (மூசாவி) தனது ஏவுதளம் மற்றும் உண்மையான ஏவுகணை மூலம் சாத்தானின் இதயத்தில் சுடுவார்," என்று அவர் ஐஆர்ஜிசி (IRGC) விண்வெளித் தளபதியைக் குறிப்பிட்டுப் பேசினார்.

⚠️இந்தியாவின் ஜபல்பூர் படகு விபத்தில் 9 பேர் உயிரிழப்பு! ⚠️4 வயது மகனை இறுக்க கட்டியணைத்த நிலையிலேயே தாயின் உடல் மீட்கப்...
01/05/2026

⚠️இந்தியாவின் ஜபல்பூர் படகு விபத்தில் 9 பேர் உயிரிழப்பு!

⚠️4 வயது மகனை இறுக்க கட்டியணைத்த நிலையிலேயே தாயின் உடல் மீட்கப்பட்டது. மரணத்திலும் பிரியாத அந்தத் தாயன்பு காண்போரை நிலைகுலைய வைத்துள்ளது.

💔🌊 “மரணத்திலும் விடாத பாசம்…” – மகனை அணைத்தபடி உயிர் துறந்த தாய்! 😭👩‍👦
🔴 மத்திய பிரதேசம் ஜபல்பூரில் உள்ள பார்கி அணையில் நடந்த படகு விபத்து, ஒரு சாதாரண விபத்து அல்ல… அது ஒரு தாயின் உயிரையும், பாசத்தின் அளவையும் உலகுக்கு காட்டிய துயரக் கதை! ⛈️🚢
🔴 அந்த நாளின் கருணை இல்லா நொடிகள்…
சுற்றுலா மகிழ்ச்சிக்காக சுமார் 40 பேருடன் சென்ற சொகுசு படகு, நடுநீரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. சிரிப்புகள் அலறல்களாக மாறின… சந்தோஷம் சில நொடிகளில் சோகமாகியது… 💔
👩‍👦 இதயம் உடைக்கும் அந்த காட்சி…
மீட்புக்குழுவினர் 14 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கண்டெடுத்தது – தாய் மற்றும் அவரது 4 வயது மகன்… இருவரும் பிரியாமல் ஒன்றாக! 😭
அந்த தாய்…
மரண பயம் சூழ்ந்த கடைசி நொடிகளிலும்,
“என் குழந்தை மட்டும் உயிர் பிழைக்க வேண்டும்…” என்ற எண்ணத்தில்,
தனக்கிருந்த ஒரே லைஃப் ஜாக்கெட்டில் மகனை மார்போடு இறுக்கமாக கட்டியபடி இருந்தார்… 💔🕊️
👉 அந்த கட்டிப்பிடிப்பு – பாசத்தின் உச்சம்…
👉 அந்த தியாகம் – மனிதத்துவத்தின் உயிருள்ள சாட்சி…
⚠️ அலட்சியம் தான் இந்த விபத்தின் காரணமா?
உயிர் தப்பியவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்:
❌ லைஃப் ஜாக்கெட்டுகள் இருந்தும் பூட்டப்பட்டிருந்தன
❌ அனுமதியை மீறி அதிக பயணிகள்
❌ மோசமான வானிலையில் கவனக்குறைவு
😡 மனித உயிர்களை மதிக்காத சிலரின் தவறுகள் – பல குடும்பங்களின் வாழ்வை சிதைத்துவிட்டது!
🙏 இந்த தாய் நமக்குக் கற்றுக் கொடுத்த பாடம்:
“உலகில் எந்த சக்தியாலும் ஒப்பிட முடியாதது தாய் பாசம்…
அது மரணத்திலும் கூட தனது பிள்ளையை விடாது…” 💔
🕯️ அந்த தாய் மற்றும் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி…

#இந்தியா #ஜபல்பூர்

வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) பகுப்பாய்வின்படி, ஈரானுக்கு எதிரான போரில் கிட்டத்தட்ட மூன்று பில்...
01/05/2026

வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) பகுப்பாய்வின்படி, ஈரானுக்கு எதிரான போரில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் போர் விமானங்கள், ரேடார் அமைப்புகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) ஆகியவை அடங்கும்.
Source: Al Jazeera

பார்க்க சிம்பிளா இருக்கும், ஆனா மண்டைய பிச்சிக்க வைக்கும்!🧐This is a real head-scratcher 🧐 u tell it's very simple
01/05/2026

பார்க்க சிம்பிளா இருக்கும், ஆனா மண்டைய பிச்சிக்க வைக்கும்!🧐
This is a real head-scratcher 🧐 u tell it's very simple

🚨🍚 கீரி சம்பா அரிசி மோசடி – 1 லட்சம் அபராதம்!அக்கரைப்பற்றில் உள்ள ஒரு கடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை ...
01/05/2026

🚨🍚 கீரி சம்பா அரிசி மோசடி – 1 லட்சம் அபராதம்!

அக்கரைப்பற்றில் உள்ள ஒரு கடையில், நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி கீரி சம்பா அரிசி விற்பனை செய்ததற்காக ரூ.100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

⚖️ அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்தது. குறித்த கடை உரிமையாளர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்.

💰 அரசு நிர்ணயித்த விலை: ரூ.260/kg
❌ விற்ற விலை: ரூ.400/kg (2kg = ரூ.800)

🔍 நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA) அம்பாறை மாவட்ட அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

📢 நிர்ணய விலையை மீறி பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என CAA எச்சரிக்கை விடுத்துள்ளது.

☎️ பொதுமக்கள் இவ்வாறான சம்பவங்களை 1977 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு ரசீது ஆதாரத்துடன் புகாரளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

👉 வாங்கும் போது விலையை சரிபார்ப்பது உங்கள் உரிமை!

01/05/2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்லும் நோக்கத்தில், துப்பாக்கிகள் மற்றும் கத்திகளுடன் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்திற்குள் (White House Correspondents' dinner) ஒரு நபர் நுழைய முயன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோவை ஃபெடரல் வழக்கறிஞர்கள் வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் "செயற்கை சூரியன்" (EAST) அணுக்கரு இணைவு மூலம் 1,066 வினாடிகள் பிளாஸ்மாவை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது. 2035-...
01/05/2026

சீனாவின் "செயற்கை சூரியன்" (EAST) அணுக்கரு இணைவு மூலம் 1,066 வினாடிகள் பிளாஸ்மாவை நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளது. 2035-க்குள் இது செயல்பாட்டுக்கு வந்தால், மாசற்ற, முடிவற்ற மின்சாரம் உலகிற்கு கிடைக்கும். ☀️🔬
More on this first comment
#செயற்கைசூரியன் #அறிவியல் #புதுப்பிக்கத்தக்கஆற்றல்

600 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய இயந்திரம் உலகின் மிகவும் மாசடைந்த இடங்களில் ஒன்றை அமைதியாக சுத்தம் செய்து கொண்டிருக்கிறது...
01/05/2026

600 மீட்டர் நீளமுள்ள ஒரு பெரிய இயந்திரம் உலகின் மிகவும் மாசடைந்த இடங்களில் ஒன்றை அமைதியாக சுத்தம் செய்து கொண்டிருக்கிறது 🌊

நெதர்லாந்தைச் சேர்ந்த இலாப நோக்கமற்ற நிறுவனம் The Ocean Cleanup, Boyan Slat உருவாக்கியது, தற்போது System 03 எனப்படும் U-வடிவ மிதக்கும் தடுப்பு அமைப்பை Great Pacific Garbage Patch பகுதியில் பயன்படுத்துகிறது.

இதற்கு எரிபொருள் தேவையில்லை, இன்ஜின் தேவையில்லை. கடல் நீரோட்டங்களையே பயன்படுத்தி மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை மைய சேகரிப்பு பகுதியில் திரட்டுகிறது. பின்னர் அந்தக் கழிவுகள் சேமிக்கப்பட்டு கரைக்கு கொண்டு வந்து மறுசுழற்சி செய்யப்படுகின்றன.
இந்த வடிவமைப்பு மிகவும் எளிமையானதும், கடலின் சக்தியால் இயங்குவதும் தான் அதன் சிறப்பு.

உலகின் கடல்களில் 150 மில்லியன் டன் அளவுக்கு மேல் பிளாஸ்டிக் உள்ளது. அவற்றில் பல மைக்ரோபிளாஸ்டிக்குகளாக உடைந்து, கடல் உயிரினங்களின் உணவுச் சங்கிலியில் புகுந்து, இறுதியில் மனித உடலுக்கும் வந்து சேர்கின்றன 😟

2025 ஆம் ஆண்டிற்குள், The Ocean Cleanup நிறுவனம் நதிகளிலும் பசிபிக் பெருங்கடலிலும் சேர்த்து 30 மில்லியன் கிலோக்கும் மேற்பட்ட குப்பைகளை அகற்றியுள்ளது.
அவர்களின் இலக்கு — 2040க்குள் Great Pacific Garbage Patch இன் 50% பகுதியை சுத்தப்படுத்துவது.
Copied

மருத்துவர் ஷாஃபி ஷிஹாப்தீன் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று அ...
01/05/2026

மருத்துவர் ஷாஃபி ஷிஹாப்தீன் கைது செய்யப்பட்ட பின்னர், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று அவர் மின்னல் வேகத்தில் சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கிறார் என்பதுதான்.
அந்த வேகத்திற்கே சிலர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

ஆனால் அப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்ட அதே வேகம், இப்போது ஒரு தாயும் குழந்தையும் உயிர் பிழைக்க உதவிய சம்பவமாக குருநாகல் வைத்தியசாலையில்
பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் சில வாரங்களுக்கு முன்பு நடந்தது.
பிரசவத்திற்குத் தயாராக இருந்த ஒரு தாய், கர்ப்ப காலம் 34 வாரம் ஆனபோது உயர் இரத்த அழுத்தம் காரணமாக மவத்தகம மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவர் இரு குழந்தைகளின் தாயாக இருந்துள்ளார்; இது அவரது மூன்றாவது கர்ப்ப காலம். மவத்தகம வைத்தியசாலையில் இருந்தபோது, அவருக்கு உயர் இரத்த அழுத்தத்துடன் சேர்ந்து Fits (வலிப்பு) ஏற்பட்டதால் உடனடியாக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு மாற்றப்பட்ட பின்னரும் அவருக்கு மீண்டும் Fits ஏற்பட்டது.

பிரசவ மற்றும் மகப்பேறு வார்டில் சேர்க்கப்பட்டபோது, அவரின் இரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகவே இருந்தது.
இதையடுத்து, அந்த வார்டின் ரெசிடென்ட் மருத்துவர் இந்த நிலை குறித்து மருத்துவர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு தகவல் அளித்தார்.

அப்போது அவர் ரமலான் நோன்பு திறக்கத் தயாராக இருந்தார். தகவல் கிடைத்தவுடன் உடனே நோயாளியை அறுவை அறைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தி, ஐந்து நிமிடங்களுக்குள் அவர் வைத்தியசாலைக்கு வந்தடைந்தார்.
அந்த நேரத்தில், நோயாளியின் இதய துடிப்பு நின்று போனதால், மருத்துவ குழு இதய அழுத்தம் (CPR) செய்து இதயதுடிப்பை மீண்டும் செயல்படுத்த முயற்சித்துக் கொண்டிருந்தது. தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அவசர அறுவைச் சிகிச்சை அவசியம் என்றும், கருப்பையில் உள்ள குழந்தையை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் மருத்துவர் ஷாஃபி தீர்மானித்தார்.
குழந்தையை வெளியேற்றியதும் இரத்த அழுத்தம் சீராகி, இதய செயல்பாடும் திரும்பும் என அவர் விளக்கினார்.

அதன்படி, தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற மிகவும் விரைவாக சிசேரியன் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
வைத்தியர்கள் குழு விரைவாக தயார் செய்த நிலையில், மருத்துவர் ஷாஃபி சுமார் 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் தாயின் வயிற்றை திறந்து குழந்தையை வெளியே எடுத்து, தேவையான அத்தனையும் செய்து முடித்தார்.

இந்த அதிவேக பணி காரணமாக தாயின் இரத்த அழுத்தம் சீரானது.
பிறகு, தாய் இதய நிபுணரிடம் அனுப்பப்பட்டு நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

மருத்துவர் ஷாஃபி மிகச் சில வினாடிகளில் மேற்கொண்ட இந்த வேகமான அறுவைச் சிகிச்சை காரணமாக தாயும் குழந்தையும் உயிர் பிழைத்தனர்.
அறுவை சிகிச்சை அறையில் இருந்த அனைத்து மருத்துவ பணியாளர்களும் மிகச் செயல்திறனுடன் உதவியதாக கூறப்படுகிறது. தேவையான கருவிகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. பின்னர் தாய் மற்றும் குழந்தைக்குத் தேவையான சிகிச்சைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து மற்றொரு மருத்துவரிடம் கேட்கப்பட்டபோது, வழமைப்போல நேரம் எடுத்திருந்தால் தாய் மற்றும் குழந்தையின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டில் மருத்துவர் ஷாஃபி வேகமாக அறுவைச் சிகிச்சை செய்கிறார் என குற்றச்சாட்டு எழுந்திருந்தாலும், அதே வேகம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு உயிர்களை காப்பாற்ற உதவியது.

மேலும், இந்த தாயின் முதல் பிரசவத்திற்கும் மருத்துவர் ஷாஃபி ஷிஹாப்தீன் தொடர்புடையவர் என்பதும் மருத்துவ குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது
Copied

Address

332, Jaffna-Kandy Road, Pungankulam Junction, Arialai
Jaffna Town
40000

Opening Hours

Monday 06:30 - 07:30
16:30 - 20:30
Tuesday 06:30 - 07:30
16:30 - 20:30
Wednesday 06:30 - 07:30
16:30 - 20:30
Thursday 06:30 - 07:30
16:30 - 20:30
Friday 06:30 - 07:30
16:30 - 20:30
Saturday 06:30 - 07:30
16:30 - 20:30
Sunday 06:30 - 07:30
16:30 - 20:30

Telephone

+94212224252

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj Medical Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Raj Medical Center:

Share