பொது அறிவு

பொது அறிவு தெரிந்ததும் தெரியாததும்

19/09/2025

எது தலைமைப் பண்பின் குணங்கள்..!!!
®️🅿️🧡®️🅿️🧡®️🅿️🧡®️🅿️🧡®️🅿️🧡®️🅿️🧡

பிறரும் அறிய பகிர்ந்து விடுங்கள்
மேலும் அறிய பின் தொடருங்கள்.

எஸ்.ஜெ.ஆதி
Child psychology and care
Counselor, Motivation speaker
Career guidance advisor &Book Writer.

ஒரு தலைவர் பின்னால் இருந்து வழிநடத்துவதில்லை, முன்னால் இருந்து வழிநடத்துகிறார்.

ஒரு தலைவர் தன் தொண்டர்கள் செய்வதற்கு முன் தானே முதலில் செய்கிறார்.

ஒரு தலைவர் பேசுவதை விட அதிகமாகக் கேட்கிறார்.

ஒரு தலைவர் சாக்குப்போக்குகளைச் சொல்வதில்லை, பொறுப்பேற்கிறார்.

ஒரு தலைவர் தனிமையில் திருத்துகிறார், பொதுவில் பாராட்டுகிறார்.

ஒரு தலைவர் வசதியாக இருக்கும்போது மட்டுமல்ல, குழப்பமான நேரங்களிலும் உறுதியாக நிற்கிறார்.

ஒரு தலைவர் அழுத்தங்களை உருவாக்குவதன் மூலம் அல்ல, முன்மாதிரியின் மூலம் ஊக்கப்படுத்துகிறார்.

ஒரு தலைவர் பலவீனமானவர்களைப் பாதுகாக்கிறார், அவர்களைச் சுரண்டுவதில்லை.

ஒரு தலைவர் குழப்பத்தை அல்ல, தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறார்.

ஒரு தலைவர் குழுவுக்கு மேலே அல்ல, குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

ஒரு தலைவர் அதிக பின்பற்றுபவர்களை உருவாக்குவதில்லை, அதிக தலைவர்களை உருவாக்குகிறார்.

மற்றவர்கள் எல்லாம் பதற்றமடையும்போதும் ஒரு தலைவர் அமைதியாக இருக்கிறார்.

®️ஒரு தலைவர் கவனச்சிதறல்களால் திசை திருப்பப்படாமல், இலக்கில் கவனம் செலுத்துகிறார்.

®️ஒரு தலைவர் கட்டளையிடுவதற்கு முன் சேவை செய்கிறார்.

®️ஒரு தலைவர் பழியை ஏற்றுக்கொள்கிறார் மற்றும் பெருமையைப் பகிர்ந்து கொள்கிறார்.

®️ஒரு தலைவர் பயத்தை அல்ல, நம்பிக்கையை வளர்க்கிறார்.

®️ஒரு தலைவர் முழுமை அடைவதற்கான வளர்ச்சியை மதிக்கிறார்.

®️ஒரு தலைவர் பழி போடுவதை விட பிரச்சினைகளைத் தீர்க்கிறார்.

®️ஒரு தலைவர் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் பணிவாக இருக்கிறார்.

®️ஒரு தலைவர் மற்றவர்களின் நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்களை மதிக்கிறார்.

®️ஒரு தலைவர் வழிநடத்திக் கொண்டிருக்கும்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார்.

®️ஒரு தலைவர் வெறும் வார்த்தைகளால் அல்ல, செயல்களால் ஊக்கப்படுத்துகிறார்.

®️ஒரு தலைவர் வசதியானதை அல்ல, உண்மையை பேசுகிறார்.

®️ஒரு தலைவர் தவறுகளை மறைப்பதில்லை, ஒப்புக்கொள்கிறார்.

®️ஒரு தலைவர் இரட்டை வேடம் போடாமல், நிலையானவராக இருக்கிறார்.

®️ஒரு தலைவர் கட்டாயப்படுத்திப் பெறுவதில்லை, விசுவாசத்தை சம்பாதிக்கிறார்.

®️ஒரு தலைவர் மறைமுக நோக்கங்கள் இல்லாமல் நேர்மையுடன் நடக்கிறார்.

®️ஒரு தலைவர் கடினமான நேரங்களில் மறைந்து கொள்ளாமல், வெளிப்படையாக இருக்கிறார்.

®️ஒரு தலைவர் சுவர்களைக் கட்டுவதில்லை, பாலங்களை உருவாக்குகிறார்.

®️ஒரு தலைவர் மற்றவர்களை மிதித்துத் தள்ளுவதில்லை, அவர்களை உயர்த்துகிறார்.

உண்மையான தலைமை என்பது பட்டங்களோ பதவிகளோ அல்ல - அது செயல், தாக்கம் மற்றும் குணத்தைப் பற்றியது.

நீங்கள் ஒரு குழுவையோ, ஒரு குடும்பத்தையோ, ஒரு சமூகத்தையோ ஒரு பாடசாலையையோ அல்லது உங்களையே வழிநடத்தினாலும், முன்மாதிரியாக வழிநடத்தும் தலைவராக இருங்கள்.

மக்கள் கேட்பதை அல்ல,
பார்ப்பதைப் பின்பற்றுகிறார்கள்.

எனவே அன்பு, வலிமை மற்றும் நேர்மையுடன் வழிநடத்துங்கள்.
உலகிற்கு இதுபோன்ற தலைமை இன்னும் அதிகமாகத் தேவைப்படுகிறது. ®️🅿️💪🌟

பிச்சைக்காரரின் பொக்கிஷம்...! இது ஒரு ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம்.மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பும் நேரம், சாலை ஓரத...
19/09/2025

பிச்சைக்காரரின் பொக்கிஷம்...!

இது ஒரு ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம்.

மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பும் நேரம், சாலை ஓரத்தில் ஒருவர் மயங்கி கிடந்தார்.
உயிர் ஊசலாடி கொண்டிருந்தது, அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டே நகர்ந்து கொண்டிருந்தனர், அவர் ஒரு பிச்சைக்காரர்.

அங்கு அவரை தினமும் பார்ப்பவர் பலர்.
ஒருவர் மட்டும் ஆம்புலன்ஸ் போன் செய்தார். சிறிது நேரத்தில் அவரை ஆம்புலன்ஸ் ஏற்றி சென்று மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு சென்று அவர் சேரும் போது அவர் உயிர் பிரிந்திருந்தது.

யார் இந்த பிச்சைக்காரர்? அவர் பெயர் தனக்கோடி... அவருக்கு பிச்சை எடுப்பதை தவிர வேறு எதுவும் தெரியாது.

அவர் வயது சுமார் 70 இருக்கும், காலை 8 மணி முதல் இரவு எட்டு மணி வரை தினமும் பிச்சை எடுத்து தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். தன் பிச்சை எடுக்கும் இடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கைவிடப்பட்ட ஒரு மாடி வீட்டின் மாடிப்படிக்கு கீழ் தான் அவர் இரவில் படுத்து உறங்குவார், அவரைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.

மருத்துவமனையில் அனாதை பிணமாக அவர் கிடந்திருந்தார், அங்குள்ள உயர் அதிகாரி தன் கீழ் வேலை செய்யும் ஆளிடம் இறந்த தனக்கோடியிடம் இருந்த பையில் என்ன இருக்கிறது என்று பார்க்க சொன்னார். பார்க்க சென்ற உதவியாளர் அந்தப் பையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நிறைய சிறுசிறு பொட்டலங்களாக அந்த பையில் இருந்தது. ஒவ்வொரு பொட்டலத்திலும் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது இருந்தது. மொத்தமாக ஒரு லட்சத்திற்கும் மேலாக இருந்தது. இதை கேள்வியுற்ற அதிகாரி தனக்கோடி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்று கூறினார்.

அரசு அதிகாரிகள் சிலருடன் மருத்துவமனையின் அதிகாரி தனக்கோடி தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்றார். அவர்கள் விசாரித்த வரையில் அவர் வீடு பாழடைந்த படிக்கட்டின் கீழே என்று சொல்கிறார்கள் அங்கு அப்படி என்ன எதிர்பார்க்கிறீர்கள் என எல்லோரும் கேட்டனர்.

அதற்கு அவரிடமும் பதில் இல்லை போய் பார்க்கலாம் என்று உள் மனது சொல்கிறது என்றார். மாடிப்படி கீழே ஒரு சிறிய கதவு ஒருவர் குனிந்து தான் செல்ல வேண்டும். சரியாக ஒருவர் படுக்கவும் ஒரு அலமாரி மட்டுமே அங்கே இருந்தது. உள்ளே சென்றவர்கள் தரையில் நிறைய துணிப்பை அங்கே அடுக்கி வைத்திருப்பதை கண்டார்கள், கிட்டத்தட்ட 400 முதல் 500 துணிப்பைகள் இருந்தன.

அலமாரியை திறந்தாலும் அதே கதை தான், மொத்தம் ஒரு ஆயிரம் துணிப்பைகள் இருக்கும். ஒவ்வொரு துணிப்பையும் திறந்து பார்க்கும் பொழுது அதிகாரிகள் மிரண்டனர் எல்லாவற்றிலும் சொல்லி வைத்தார் போல் பணம், பணம் பணம். ஒரு பிச்சைக்காரனின் வீட்டில் இவ்வளவு பணமா என்று யோசித்தனர்.

இப்பொழுது தனக்கோடியின் உலகத்திற்கு வருவோம். தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து பிச்சை எடுப்பது மட்டுமே தொழிலாக கொண்டவர். எல்லாவற்றிற்கும் பயப்படுவது அவருடைய கூடப்பிறந்த குணம். தான் எவ்வளவு பணம் வைத்து உள்ளோம் என்பதை கூட அறியாமல்...

நாளை முதல் நமக்கு யாரும் பிச்சை போடவில்லை என்றால் என்ன செய்வது என்று தினமும் காலை எட்டு மணி முதல் மாலை 8 மணி வரை ஓயாமல் பிச்சை எடுத்தவர். தனக்கோடி சேர்த்து வைத்த பணத்திற்கு ஒரு தொழிலே தொடங்கி இருக்கலாம்.

இதே நிலையில்தான் நம்மில் பலரும் இருக்கின்றோம். நமக்கு வேலை பிடிக்கிறதோ இல்லையோ ஒன்றாம் தேதி கிடைக்கும் ஊழியத்தை எண்ணி ஓடிக் கொண்டிருக்கிறோம்.

பணம் இருக்கிறவனும் ஓடுகிறான் பணம் இல்லாதவனும் ஓடுறான். படிச்சவனும் பணத்துக்கு ஓடுறான் படிக்காதவனும் பணத்துக்கு ஓடுறான்.

பயமும் பணமும் விட்டுக் கொடுக்காத சகோதரர்கள்...

பணமும் பயமும் அளவோடு இருந்தால் அனைவருக்கும் நல்லது.

19/09/2025
குப்பைமேனி 7 இலை, 3 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், இரண்டு டம்ளர் நீரில் ஒரு டம்ளராக சுண்டகாய்ச்சி மூன்று நாட்களுக்கு ஒரு வே...
10/09/2025

குப்பைமேனி 7 இலை, 3 மிளகு, ஒரு சிட்டிகை சீரகம், இரண்டு டம்ளர் நீரில் ஒரு டம்ளராக சுண்டகாய்ச்சி மூன்று நாட்களுக்கு ஒரு வேளை குடித்தால் நுரையீரல் சளி முழுவதும் காரணமல் போகும்...
நுரையீரல் பலமடையும் ...
காலை மாலை உணவுக்கு முன்

இதை புட்டர் ஆக்கி சரியான முறையில் பயன்படுத்தினால் சளி, உள் மூலநோய், உடல் பலவீனம், காய்ச்சல் போன்றவைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மனிதர்களின் நுரையீரல் பலவீன அடையும் போது அதை சரிபடுத்த தானாகவே முயிச்சை இது, உடலை மறு உறுவாக்கம் செய்ய கூடிய மூலிகை இது.

®️நான்கு இலக்க ரூபாய் சொற்ப சம்பளத்திற்க்கு நாள் முழுவதும் நின்று கத்திபாடம் நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிர...
10/09/2025

®️நான்கு இலக்க ரூபாய் சொற்ப சம்பளத்திற்க்கு
நாள் முழுவதும் நின்று கத்தி
பாடம் நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்...

பெற்றோருக்கு அடுத்தப்படியாக வாழ தெரியாத இந்த உலகில்
எப்படி வாழ வேண்டுமென கற்றுக்கொடுக்கும் ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்...

வீட்டில் ஒரு குழந்தையை சமாளிக்க முடியாத பட்சத்தில் சின்ன சின்ன குழந்தைகளை செல்லமாக அவர்கள் கொடுக்கிற அவஸ்தைகளை தாங்கிக்கொண்டு சொல்லி கொடுத்து பார்த்துக்கொள்ளும்
இளம் பெண்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்...

எத்தனை கேலிகள்
எத்தனை கிண்டல்கள்
எத்தனை தொல்லைகள்
கொடுத்தாலும்
அத்தனையையும் அறிவுரைகளால்
நல்வாழ்வு வாழவைத்தவர்களுக்கு
ஆசிரியர் தின
நல்வாழ்த்துகள்...

பட்டம் உயரே பறக்கும் போது
அதன் நூல் தெரியாதது போல்
பல துறைகளில் முன்னேறி ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் பின் நூலாக இருக்கும்
மாமனிதர்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகள்...

பனிரெண்டாம் வகுப்புக்கு பின் தமிழை எழுத கட்டாயம் இல்லாத பொழுது இந்த சமூக வலைத்தளங்களில் தமிழ்மொழியை மட்டும் எழுதுபவர்களின் எண்ணமாக இருந்தவர்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகள்...

ஏற்றி விட்டு அழகு பார்த்து

'நல்லா இருந்தா போதும்ப்பா...'

என்று அம்மாவுக்கு அடுத்தப்படியாக
மனமுவந்து வாழ்த்தும்
மதிப்புடையவர்களுக்கு
ஆசிரியர் தின வாழ்த்துகள்...

தன் வேலையை தெய்வமாக கருதி வேலை பார்க்கும் அத்தனை ஆசிரியர்களுக்கு
மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.🙏®️🅿️rashath🧡🩷🩵

மிஸ்டர் பீன்’ என்ற பெயர் ஏன்? யாரிந்த பீன்; ஒரு சாதனையாளனின் கதை!`ஏன்... இந்த முகத்தையும் உடம்பையும் வெச்சுக்கிட்டு நடிக...
10/09/2025

மிஸ்டர் பீன்’ என்ற பெயர் ஏன்? யாரிந்த பீன்; ஒரு சாதனையாளனின் கதை!

`ஏன்... இந்த முகத்தையும் உடம்பையும் வெச்சுக்கிட்டு நடிக்க முடியாதா... யாரும் பார்க்க மாட்டாங்களா... பார்க்கவெப்பேன்’ என்ற உறுதி உள்ளுக்குள் பிறந்தது.

அந்தச் சிறுவனைப் பார்த்தாலே சக மாணவர்கள் தள்ளிப்போனார்கள். `ஐயய்யே... என்னடா இவன் இப்பிடி இருக்கான்... ஆளும், மண்டையும், கண்ணும், மூக்கும்...’ என்று அருவருப்போடு பார்த்தார்கள். அவர்கள், அந்தச் சிறுவனுக்கு வைத்த பெயர் `ஏலியன்.’ அதாவது, `வேற்றுக்கிரகவாசி.’ இல்லையில்லை... `வேற்றுகிரக ஜந்து.’ பிறரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகும்போதெல்லாம் அந்தப் பையன் கூனிக்குறுகிப்போனான். நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. தனிமை மேலும் தன்னிரக்கத்தில் ஆழ்த்தியது; தாழ்வு மனப்பான்மையைக் கொண்டு வந்து சேர்த்தது.

அந்தச் சிறுவனின் பெயர் ரோவன் அட்கின்சன் (Rowan Atkinson). இங்கிலாந்திலிருக்கும் கான்செட் (Consett) என்ற சிறு நகரில், ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். அப்பா விவசாயி. ரோவன் அட்கின்சனுக்கு மூன்று அண்ணன்கள். ஆரம்பத்தில் துர்ஹாமில் (Durham) இருந்த கோரியஸ்டர் பள்ளியில் படித்தவர், பிறகு செயின்ட் பீஸ் ஸ்கூலில் (St. Bees School) சேர்ந்து படித்தார். தனிமையும் வெறுமையும் துரத்த, அறிவியல் பாடத்தில் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தார். சதா அறிவியல் பாடத்தைக் கட்டிக்கொண்டு அழும் மகனை ஆச்சர்யத்தோடு பார்த்தார் அப்பா எரிக். கூடவே, நண்பர்கள் என்று யாரும் அவனைத் தேடி யாரும் வராததும், அவனும் நண்பர்களைத் தேடிப் போகாததும் உறைத்தது. ஒருநாள் மகன் படிக்கும் பள்ளிக்குப் போனார். அவனுடைய ஆசிரியர்களிடம் விசாரித்தார். ``என் பையன் எப்போ பார்த்தாலும் சயின்ஸ் புக்கை எடுத்துப் படிச்சுக்கிட்டு இருக்கான். அவன் சயின்ஸ்ல பெரிய ஆளா வருவான்ல?’’ என்று கேட்டார்.

ஆசிரியர்களில் ஒருவர் சொன்னார்... ``நீங்க வேற அவன்கிட்ட சொல்லிக்கிற மாதிரி பிரமாதமான திறமை ஒண்ணும் கிடையாது. அவன் பெரிய விஞ்ஞானியா வருவான்னு எல்லாம் நான் நினைக்கலை.’’

அட்கின்சனுக்கு, அவர்மீது பிறருக்கு இருந்த அவநம்பிக்கையை உடைத்துக் காட்ட வேண்டும் என்கிற உத்வேகம் பிறந்தது அந்தக் கணத்தில்தான். `முதல்ல படிப்பை ஒழுங்காப் படிப்போம்’ என்று முடிவெடுத்தார். படித்தார். அறிவியல் பாடங்களில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, `ஏ லெவல்’ கிரேடோடு வெளியே வந்தார். வடகிழக்கு இங்கிலாந்தில் இருக்கும் `நியூகேஸ்ட்டில் யூனிவர்சிட்டி’யில் இளங்கலைப் படிப்பில் சேர்ந்தார். எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படிப்பு. அந்தப் படிப்பை முடித்ததும், அவர் அறிவியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களுக்காகவே ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிட்டியின் `தி குயின்’ஸ் காலேஜில்’ மேற்படிப்புப் படிக்க இடம் கிடைத்தது. ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்தினாலும், நடிப்புக்கலை அவரை `வா... வா...’ என்று அழைத்துக்கொண்டே இருந்தது. குயின்’ஸ் காலேஜில் அந்த ஆசை அதிகமானது.

ஒருநாள் கல்லூரியில் இயங்கும் நாடகக்குழுவினரைப் போய்ப் பார்த்தார். ``எனக்கும் நாடகத்துல நடிக்க ஒரு சான்ஸ் குடுங்களேன்’’ என்று வாய்விட்டுக் கேட்டார்.

நாடகக்குழுவின் தலைவராக இருந்த மாணவர் அட்கின்சனை ஏற இறங்கப் பார்த்தார். `இந்த முகத்தையும் உடம்பையும் வெச்சுக்கிட்டு நடிக்கணும்கிறானே...’ என்று அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும், ஒருவரின் ஆர்வத்துக்கு அணைபோடக் கூடாது அல்லவா... அவர் ஒரு பேப்பரை எடுத்து அட்கின்சனிடம் நீட்டினார். ``எங்கே... இந்த வசனத்தைப் படிச்சுக் காட்டு.’’

அட்கின்சன் பேப்பரை வாங்கினார். படிக்க ஆரம்பித்தார். அவரால் இரண்டு, மூன்று வரிகளைக்கூட ஒழுங்காகப் படிக்க முடியவில்லை. நாக்குக் குழறியது. வார்த்தைகள் திக்கித் திக்கி வந்தன. நாடகக்குழுத் தலைவர் பேப்பரை வாங்கிக்கொண்டார். ``இப்பிடி மேடையில போய்ப் பேசினா யாரு பார்ப்பாங்க... சொல்லு!’’ அட்கின்சன், தலைகுனிந்தபடி அங்கிருந்து வெளியேறினார்.

மிஸ்டர் பீன்
நிரகாரிப்பின் வலியை முழுமையாக உணர்ந்தார். `ஏன்... இந்த முகத்தையும் உடம்பையும் வெச்சுக்கிட்டு நடிக்க முடியாதா... யாரும் பார்க்க மாட்டாங்களா... பார்க்கவெப்பேன்’ என்ற உறுதி உள்ளுக்குள் பிறந்தது. ரோவன் அட்கின்சனின் வாழ்க்கைக்குறிப்பில், அவர் ஆக்ஸ்ஃபோர்டில் இருக்கும் ஒரு காமெடி குரூப்பில் எப்படியோ இடம்பிடித்தது, `எடின்பர்க் ஃபெஸ்டிவ் ஃபிரின்ஞ்’ என்ற கலைவிழாவில் கலந்துகொண்டு, காமெடியில் கலக்கி தேசிய அளவில் கவனம் பெற்றதெல்லாம் சொல்லப்பட்டிருக்கின்றன. மற்றவர்களை சிரிக்கவைப்பது அவருக்குப் பிடித்திருந்தது. அதற்கு அவருடைய உடல்மொழி கைகொடுத்தது. நகைச்சுவைதான் தனக்கான இடம் என்பதை ஒருகட்டத்தில் உணர்ந்துகொண்டார். காமெடியில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்தச் சமயத்தில்தான் எழுத்தாளரும், இயக்குநருமான ரிச்சர்டு கர்ட்டிஸின் அறிமுகமும் நட்பும் அவருக்குக் கிடைத்தன. அட்கின்சனின் நடிப்புப் பயணத்தில் ரிச்சர்டு கர்ட்டிஸுக்கு முக்கியமான பங்கு உண்டு.

கல்லூரியில் பட்டம் பிடித்த பிறகு, எத்தனையோ தொலைக்காட்சி நிலையங்களின் படிகளில் ஏறி, இறங்கினார். தயாரிப்பாளர்கள் அதே பழைய பல்லவியையே பாடினார்கள். `திக்கித் திக்கிப் பேசுறீங்க... இது சரிவராது’, `உங்களுக்கு நடிகருக்கான முகவெட்டு இல்லை’, `மூக்கு துருத்திக்கிட்டுத் தெரியுதே... ஆடியன்ஸ் எப்பிடி உங்களை நடிகரா ஏத்துப்பாங்க?’ போகிற இடங்களிலெல்லாம் நிராகரிப்பு. ஆனால், அந்த நிராகரிப்புதான் `நாம சாதிக்க ஏதோ இருக்குடா’ என்கிற நினைப்பை அவருக்குள் விதைத்தது. டி.வி-யில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், ரேடியோவில் கிடைத்தது. பிபிசி-3 ரேடியோவில் `தி அட்கின்சன் பியூப்பிள்’ என்ற நகைச்சுவைத் தொடரை ஆரம்பித்தார். அவரே நடித்தார். `யாருப்பா இந்த ஆளு?’ என அந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்கள் தேட ஆரம்பித்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்கு ஒன்று புரிந்தது. ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அவருக்குப் பேச்சு சரளமாக வந்தது; வார்த்தைகள் திக்கல், திணறல் இல்லாமல் வெளிவந்தன.

மிஸ்டர் பீன்
கொஞ்சம் கொஞ்சமாக தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்ற ஆரம்பித்தார். அவர் நடித்த அத்தனை சீரியல்களும் கவனம் பெற்றன. நண்பர் ராபர்ட் கர்ட்டிஸுடன் இணைந்து அவர் எழுதிய வரலாற்று காமெடி தொடரான `பிளாக்கேடர்’ (Blackadder) பிரமாதமான வெற்றி. பிறகென்ன `பிளாக்கேடர் - 2’, `பிளாக்கேடர் - 3’ எனத் தொடர் வெற்றி. ரொம்ப நாள்களாகவே வசனம் எதையும் பேசாமல், திரையில் தோன்றி நடித்து பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணம் அட்கின்சனுக்கு இருந்தது. அவரும் ராபர்ட் கர்ட்டிஸும் இணைந்து அந்தப் பாத்திரத்தை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் `மிஸ்டர் பீன்.’ முதலில் அதற்கு வைக்கப்பட்ட பெயர் `மிஸ்டர் வொயிட்.’ நகைச்சுவையாகப் பெயர் அமைய வேண்டும் என்று விரும்பினார் அட்கின்சன். காய்கறிப் பெயரை வைக்கலாமே என்று யோசனை தோன்றியது. `மிஸ்டர் காலிஃபிளவர்’ என்றெல்லாம் வைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் செட்டாகவில்லை. கடைசியாக அவர்கள் தேர்ந்தெடுத்தது, `மிஸ்டர் பீன்.’ பின்னாளில் ரோவன் அட்கின்ஸனைப் பார்க்கிறவர்கள் எல்லோரும் `மிஸ்டர் பீன்’ என்று அழைக்கும் அளவுக்கு அந்தப் பெயர் பிரபலமானது.

இன்றைக்கு, `மிஸ்டர் பீன்’ உலக சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத கதாபாத்திரம். பெரிய திரையில் அட்கின்சன் முதலில் தோன்றியது, `நெவர் சே நெவர் எகெய்ன்’ என்ற படத்தில். சின்ன ரோல்தான். ஜேம்ஸ்பாண்ட் படத்தில் நடித்திருக்கிறோம் என்கிற பெருமிதமும் உற்சாகமும் தொடர்ந்து அவரை இயங்கவைத்தன.
மிஸ்டர் பீன்
1979-ல் ஆரம்பித்த அவருடைய நடிப்புப் பயணம் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. எத்தனையோ கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும், அவருக்குத் தனி அடையாளம் தந்தது `மிஸ்ட பீன்’தான். ஒரு வளர்ந்த மனிதரின் குழந்தைத்தனமான செய்கைகளும், நடத்தையும் பார்ப்பவர்களைக் கட்டிப்போட்டன. `உடலில் வலுவில்லை, பேசும்போது நாக்கை நாக்கை நீட்டுகிறார், நேராகப் பார்க்காமல் எப்படியெப்படியோ பார்க்கிறார்’ என எந்தக் காரணங்களுக்காகவெல்லாம் அவர் நிராகரிக்கப்பட்டாரோ, அவற்றைத்தான் பார்வையாளர்கள் திரும்பத் திரும்ப ரசித்தார்கள். ரசிக்கவைத்தார் அட்கின்சன்.

மிஸ்டர் பீன்
தொலைக்காட்சித் தொடர்களில், அனிமேஷன் படங்களில், சினிமாவில் என ஏராளமாக `மிஸ்டர் பீன்’ வலம் வந்துவிட்டார். அத்தனையிலும் அவரைப் பார்த்து மனிதர்கள் தங்களை மறந்து சிரித்தார்கள்; ரசித்தார்கள்; ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். உருவ கேலியோ, கிண்டலோ ஒருவரின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது என்பதற்கு வாழும் உதாரணம் ரோவன் அட்கின்சன்.

Motivation Story: `உங்கமேல உங்களுக்கு நம்பிக்கை வேணும் பாஸ்!’ - மாணவன் உணர்த்திய நம்பிக்கைப் பாடம்

"என் மனசு உடைந்த நாள் இன்று தான்…சென்னையின் பரபரப்பான ரயில்களில், 80 வயதான ஒரு தாத்தா மிகவும் கஷ்டப்பட்டு இனிப்பு போளி வ...
10/09/2025

"என் மனசு உடைந்த நாள் இன்று தான்…
சென்னையின் பரபரப்பான ரயில்களில், 80 வயதான ஒரு தாத்தா மிகவும் கஷ்டப்பட்டு இனிப்பு போளி விற்றுக் கொண்டிருந்தார்.
அவரது சொந்த மகள் லண்டனில் குடியேறி விட்டு இவரையும் இவர் மனைவியையும் புறக்கணித்ததால், தனது மனைவியுடன் வாழ வேறு வழியில்லாமல் இக்கஷ்டப் பாதையில் காலடி வைத்துள்ளார்.

மனைவி, 70 வயதைக் கடந்தும், வீட்டிலேயே சமைத்து தருகிறார்
அதை தாத்தா, தலையெழுத்தை ஏற்றுக் கொண்டு, வலியை மறைத்து சிரிப்போடு இங்கு விற்கிறார்.

நானும் சுவைத்தேன் அது வெறும் இனிப்பு அல்ல, அன்பின் சுவை, பரிசுத்தமான சுவை. உண்மையிலேயே தெய்வீகம்.

நீங்கள் இவரை சந்தித்தால், ஒரு இனிப்பு அல்லது போளி வாங்க வேண்டாம்;
அவரின் வலிமையையும், மனஉறுதியையும் உடையாத ஆன்மாவையும் வாங்குங்கள்.

அவரது தொடர்பு எண் மூலம் (சென்னையில்) நேரடியாக ஆர்டர் செய்யலாம்.

உணவு சில சமயம் சுவையோடு வராது; சொல்லப்படாத கதைகளின் பாரத்தோடும் வரும்.

தயவு செய்து இறுதி காலத்தில் பெற்றோர்களை இப்படி தவிக்க விடாதீர்கள் இதைவிட பெரிய பாவம் உலகில் உண்டோ ?

எப்பவுமே ஜிம்முக்கு கொஞ்சம் லேட்டாதான் போவேன்,இன்னைக்கு ரெம்பவே லேட் ஆகிருச்சு...நான் போறப்போ மூணு,நாளு பேர் தான் இருந்த...
10/09/2025

எப்பவுமே ஜிம்முக்கு கொஞ்சம் லேட்டாதான் போவேன்,
இன்னைக்கு ரெம்பவே லேட் ஆகிருச்சு...

நான் போறப்போ மூணு,நாளு பேர் தான் இருந்தாங்க சரியா அவுங்களும் Workout முடிக்க போனாங்க...

சரி போனது போயிட்டோம் பத்து நிமிஷம் சைக்கிள் ஆச்சும் ஓட்டலாம்னு ஓட்டிட்டு இருந்தேன்,

எங்க ஜிம்ல புதுசா ஒரு லேடி Join பண்ணியிருக்காங்க,
ஆனா பெரிய பரிஜியம் இல்ல அப்போ அப்போ பாக்குறப்போ சின்ன ஸ்மைல் ரெண்டுபேரும் அவ்ளோதான்...

இன்னைக்கு தான் அவுங்க வந்து பேச ஆரம்பிச்சாங்க,
என்னங்க லேட் ஆகிருச்சான்னு பேச ஆரம்பிச்சு அப்படியே Family இன்ட்ரோ குடுத்து பேசிட்டு இருந்தாங்க,

ரெண்டு பசங்க இருக்காங்க,
ஒரு பையன் 6 -Th இன்னொரு பையன் +2 ன்னு சொன்னாங்க,

பரஸ்பரம் Age கேக்குறப்போ அவுங்க 34 ன்னு சொன்னாங்க,
அப்போ நா கேட்டேன் 34 லையே பையன் +2 படிக்குறாப்டிங்களா..??
சீக்கிரமா கல்யாணம் பண்ணிட்டிங்களா..??

ஆமாங்க 16,17 வயசுலையே கல்யாணம் முடிஞ்சதுன்னாங்க,

நானும் Same -ங்க எனக்கும் 16 வயசுலையே Marriage ஆச்சு,
இப்போ 30 வயசு ஆனா பெரிய பொண்ணு 9 -Th படிக்குறா,
அநேகமா அப்போ எனக்கும் 34 ஆகுறப்போ என் பொண்ணும் +2 வந்திடுவான்னு பேசிட்டு இருந்தோம்...

அப்போ அவுங்க அவுங்களோட Marriage story சொன்னாங்க,
நா லவ் மேரேஜ்ங்க எனக்கு அவருதான் வேணும்னு ஆசைப்பட்டு கட்டிக்கிட்டேன்,
மாமா முறையாகுது சின்ன வயசுல இருந்து பாத்து பாத்து மரியாதையாகி,
பாசமாகி நாளடைவுல அது காதலா மாறிடுச்சுங்க,
வீட்ல வேற மாப்பிளை பாத்திருவாங்களோனு ப*யந்து,
கட்டுனா அவர தான் கட்டனும்னே சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்...

கல்யாணம் பண்ணி பாண்டிச்சேரி போய்ட்டோம் அவருக்கு அங்கதான் வேலை,
அதுக்கு பிறகா பெங்களூரு வந்தோம்,
எனக்கு பாஷ தெரியாததால திரும்ப உடுமலைக்கே வந்து ஒரு வீடு பாத்து நானும் பசங்களும் இங்க இருந்தோம்,
அவர் பெங்களூர்ல இருந்தாரு,
மாசத்துக்கு ஒரு தடவை இல்லை ரெண்டு தடவை வருவாரு,
ஆறு வருஷமா போ*றாடி ட்ரான்ஸ்பெர் வாங்கி இங்க வீட்டுல இருந்து போய் வர தூரத்துலையே வேலைய மாத்தி வந்துட்டாரு...

சரியா ஒரு வருஷம் இருக்கும் ங்க காலையில வேலைக்கு போறப்போ Ac*cident -ல இ/றந்துட்டாரு,
இப்போ அவர் இ/றந்து ஒன்றரை வருஷம் ஆச்சுன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள அவுங்க கண்ல கண்ணீர் வர ஆரம்பிச்சது...

கேட்டுட்டு இருந்த எனக்கே தூக்கி வாரி போட்ருச்சு,
ஒரு யதார்த்தமான,
ஒரு Innocent women,
எப்பவுமே GYM -ல எதும் தெரியலைனாலும் யார்ட்டனா எதாவது கேட்டு கேட்டு பண்ணிட்டு இருப்பாங்க,
Health is*sue அதனால Doctor வெயிட் கம்மி பண்ண சொல்லியிருக்காருன்னு தான் Gym வந்தாங்க,
எப்பவுமே வெகுளியா சிரிச்சுட்டே இருக்க ஒருத்தவுங்க life -ல இப்படி ஒரு பக்கம் இருக்கான்னு Sh*ock ஆச்சு...

வீட்டுல யாரும் Support இருக்காங்களானு கேட்டேன்,
அதெல்லாம் யாரும் இல்லங்க நானும் என் பசங்களும் தான்,
அப்பா அம்மான்னு பேருக்கு இருக்காங்க,
நீயா விரும்பி போன வாழ்க்கை இனி உன் வி*தினு சொல்லி விலகிட்டாங்க...

34 வயசுல என் வாழ்க்கையே முடிஞ்சிருச்சு,
இத்தனை வருஷம் பிரிஞ்சே இருந்தோம் இப்போவாச்சு ஒண்ணா வாழுறமேன்னு சந்தோஷப்பட்டோம் ங்க,
தினமும் பசங்கள தூங்க வச்சுட்டு,
நா சீக்கிரமா வீட்டு வேலைய முடிச்சுட்டு நைட்டு வாசல்ல உக்காந்து மூணு மணி நேரம்,நாலு மணிநேரம் நேரம்னு ஒதுக்கி நாங்க பேசுவோம்...

இ/றக்குறதுக்கு முதல் நாளு என்னைக்கும் இல்லாம,
மாமா என்கிட்ட எல்லாத்தையும் சொன்னாரு,
என்ன குடுக்கல் வாங்கல்னும்,
நானே இல்லாம போனாலும் நீ எப்படி இருக்கனும்னு எல்லாமே சொன்னாரு,
நான் கூட சிரிச்சுட்டே கேட்டேன்,
ஏன் மாமா லூசா நீயி,
என்னமோ நாளைக்கே சாவப்போறவன் மாதிரி இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்கன்னு,
மறுநாள் இப்படி என் வாழ்க்கை ஒன்னும் இல்லாம போகும்னு கனவுலையும் நினைக்கலங்கன்னு,
தனிப்பட்ட முறையில சில விஷயங்கள் சொல்லி அ*ழுதாங்க...

ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்காதிங்க,
நீங்க இன்னொரு Marriage பண்ணிக்கலாம்லன்னு கேட்டேன்,

இதுவரை அந்த யோசனை இல்லப்பா,
ஆனா இப்போ எல்லாரையும் பாக்குறப்போ எனக்கும் தோணுது,
ஆனா அது தப்போன்னு ப*யமாருக்குன்னு சொன்னாங்க...

நா சொன்னேன்,
உங்களுக்கு விருப்பம்னா க*ட்டாயம் நீங்க மறுமணம் பண்ணிக்கோங்க,
அது தான் நல்லது அதுல தப்பெல்லாம் எதும் இல்லைனு சொல்லி ஒரு சின்ன Hug பண்ணி தைரியமா இருங்க எல்லாம் நல்லதாவே நடக்கும்னு சொல்லிட்டு,
ரெண்டுபேரும் கிளம்பிட்டோம்...

என்னமோ அவுங்க தனிப்பட்ட முறையில சொன்ன சில விஷயங்கள்லாம் நினைக்குறப்போ,
ஒரு பொண்ணோட வாழ்க்கையில ஆண் சரியில்ல இல்ல ஆண் துணை இல்லைனா இந்த சமூகத்துலையும்,
அவுங்க குடும்பத்தாட்கள் உட்படவும்
ஒரு பொண்ணு எத்தனை பி*ரச்சனைகளை சமாளிச்சு வர வேண்டியிருக்கு..?!

என்ன பொருத்தவரையும்,
ஒரு மனைவியை இ*ழந்த ஆணோ அல்லது கணவனை இ*ழந்த பெண்ணோ அவுங்களுக்கு விருப்பம்னா தாராளமா அவுங்க மறுமணம் செய்யலாம்,
அதுல எந்த த/வறும் இல்லை,

நல்ல புரிதலோட உள்ள ஒருத்தரை கரம் பிடிச்சா இ*ழந்த அவுங்க வாழ்க்கையில அது அவுங்களுக்கு ஒரு திருப்புமுனையாகவும்,
ஆரோக்கியமான சூழலையும்
உருவாக்கும்...

நிச்சயமா இந்த பொண்ணு வாழ்க்கையில ஒரு நல்லது நடக்கனும்,
உங்க பிரார்த்தனைகள்ல அவுங்களையும் சேத்துக்கோங்க...
❤❤❤

ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை1. பேரீச்சை பழம் - தினம் நான்கு2 முருங்கை கீரை - வாரம் 2 முறை3. பீட்ரூட் ஜூஸ் - தினம் ...
10/09/2025

ஹீமோகுளோபின் கூட சாப்பிட வேண்டியவை

1. பேரீச்சை பழம் - தினம் நான்கு

2 முருங்கை கீரை - வாரம் 2 முறை

3. பீட்ரூட் ஜூஸ் - தினம் 100ml

4. சுண்டைக்காய் - வாரம் 2 முறை

5. முளைக்கட்டிய சுண்டல்/பாசிப்பயறு

வாரம் 4 முறை

6. கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சர்க்கரை தினமும்

7. மாதுளை, திராட்சை வாரம் 2 முறை

8. ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் 4

9. பீர்க்கங்காய் - வாரம் 2 முறை

10. நெல்லிக்காய் - தினமும் ஒன்று

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.என்னென்ன மீன்கள்?தற்போதைய...
10/09/2025

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பை தடுக்க உதவும் 5 வகை மீன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

என்னென்ன மீன்கள்?
தற்போதைய காலத்தில் மாரடைப்பு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் கொலஸ்ட்ரால் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

®️சூரை மீன்
சூரை மீனானது கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ரத்தக்குழாய்களில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

®️கானாங்கெளுத்தி மீன்
உலக அளவில் பரவலாக அறியப்படும் கானாங்கெளுத்தி மீன் மாரடைப்பு வருவதற்கு பெரும் எதிரியாக உள்ளது. இந்த மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது.

®️இறையன் மீன்
இறையன் மீனில் டிரவுட் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இதனை உட்கொண்டால் இதய நோய் பிரச்சனைகள் வராமல் இருக்கும். மேலும், நமது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

®️வெங்கணை அல்லது வெங்கணா மீன்
வெங்கணா மீனில் ஹெர்ரிங் மீனில் ஈ.பி.ஏ. மற்றும் டி.எச்.ஏ. என்னும் 2 வகையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இந்த மீனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குள் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

®️மத்தி மீன்
மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, செலினியம் போன்றவை அடங்கியுள்ளது. இதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும். மேலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நிறை/குறைகளோடு வாழ்ந்தால் தான் சிறந்த தாம்பத்தியம்...கணவன் மனைவி RPrashathஅழைப்பு மணியின் ஓசையைக் கேட்டு கதவைத் திறந்தவர...
10/09/2025

நிறை/குறைகளோடு வாழ்ந்தால் தான் சிறந்த தாம்பத்தியம்...

கணவன் மனைவி RPrashath

அழைப்பு மணியின் ஓசையைக் கேட்டு கதவைத் திறந்தவர் திகைத்தார்.

வசந்த் வா…வா… என்ன இது… வரேன்னு போனில் கூட சொல்லாமல்… நந்தினி வரலையா?”

இல்லப்பா… புறப்பட்டு வரணும்ன்னு தோணிச்சு. ஒரு வாரம் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு கிளம்பி வந்துட்டேன்.”

அவன் முகத்தில் தெரிந்த சோகம், கவலை. ஏதோ பிரச்னை என்பது மட்டும் புரிய, உள்ளே நுழைந்தவனை மவுனமாகப் பின் தொடர்ந்தார்.

அம்மா எங்கப்பா?”

டாக்டர்ஸ் கான்பரன்ஸ்க்காக ஏற்காடு போயிருக்கா… நாளைக்கு வந்துடுவா.”

நீங்க ரிடையர்டு ஆயிட்டீங்க. அம்மா இன்னும் வேலை பார்த்துட்டு இருக்காங்க…”

கணவன்-உங்கம்மாவுக்கு ரிடையர்ட்மென்டே கிடையாது. அவ செய்ற தொழில் அப்படி. புனிதமான மருத்துவ தொழிலாச்சே…

சரி… நீ என்ன குடிக்கிற… காபி… டீ?”

இருக்கட்டும்பா… டிரெயினை விட்டு இறங்கியதும் காபி ஷாப்பில் குடிச்சுட்டு தான் வந்தேன். உட்காருங்கப்பா…

உங்க கிட்டே தனிமையில் மனசு விட்டு பேசுணும்ன்னு தான் பெங்களூருவிலிருந்து வந்தேன்.

அம்மா வீட்டில் இல்லாததும் நல்லதாப் போச்சு…”

புருவத்தைச் சுருக்கி, அவனைப் பார்த்தார்.

தெரியுதுப்பா… நீ ஏதோ பிரச்னையில் இருக்கேன்னு உன் முகபாவமே சொல்லிடுச்சி. என்ன விஷயம்பா?”

மென்மையாகக் கேட்கும், அப்பாவைப் பார்த்தான்.

நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோணுதுப்பா… நந்தினியை நான் கல்யாணம் பண்ணினது…

என் வாழ்க்கையை நான் தொலைச்சுட்டேனோன்னு பயமா இருக்குப்பா…”

மூன்று வருடமாக காதலித்து, ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, இவளைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று திடமாக முடிவு செய்து, அவன் விருப்பப்படி தானே நந்தினியின் கழுத்தில் தாலி கட்டினான்.

திருமணம் முடிந்து ஒரு வருடத்திற்குள்… இதென்ன கசப்பான வார்த்தைகள்.

புரியாமல், அவனைப் பார்த்தார்.

ஆமாம்பா… என்னோட தனித்தன்மையை இழந்துட்டேன்னு தோணுது. எல்லாமே அவ விருப்பப்படி தான் நடக்கணும்ன்னு எதிர்ப்பார்க்கிறா.

தானும் சம்பாதிக்கிறோம்ங்கற திமிர், அவ உடம்பிலே ஊறிப் போயிருக்கு. வெளியே போறது… வர்றது, சமையல் எல்லாமே அவ விருப்பம் தான்.

அது மட்டுமில்லை, “நானும் வேலைக்கு போறவ… நீங்களும் வீட்டிலே வேலைகளைப் பகிர்ந்துக்கணும்…’ன்னு கட்டாயப்படுத்தறா…

அவளோட போராடி தோத்து போயிட்டேன்பா… எது பேசினாலும் அது விவாதமாக மாறி, சண்டையில் தான் முடியுது.

என்னோட ஒத்துப் போகிற எண்ணம் அவ மனசிலே துளி கூட இல்லை.

பேசாம நல்லபடியா இரண்டு பேரும் பிரிஞ்சுடறது தான் நல்லதுன்னு எனக்கு தோணுது…”

வசந்த்… உன் மனசுக்கு பிடிச்சவளைத் தான், உன் விருப்பப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டே; நாங்க எந்த காலத்திலும், உன் விருப்பத்துக்குத் தடை சொன்னதில்லை.

இப்பவும் நான் உனக்கு புத்திமதி சொல்லணும்ன்னு நினைக்கலை. இது உன் மனசு சம்பந்தப்பட்ட விஷயம். அடுத்தவங்க சொல்லி அதைச் சரிப்படுத்த முடியாது.

நீ புறப்பட்டு வந்ததும், நல்லதாப் போச்சு. தனிமை தான், நல்ல விதமாக யோசிக்க வைக்கும்.

என்னைப் பொறுத்தவரை, உன் மேலேயும், நந்தினி மேலேயும் எந்த தப்பும் இருக்கிறதாகத் தோணலை.

எந்த முடிவுக்கும் உடனே வந்துடக் கூடாது வசந்த்… யோசனை பண்ணி முடிவு பண்ணலாம்.”

வசந்த்… என்னடா இது. நீ மட்டும் புறப்பட்டு வந்திருக்கே… நந்தினியை கூட்டிட்டு வரக்கூடாது; அவளை பார்த்து நாளாச்சு… வேலை, வேலைன்னு உடம்பை கெடுத்துக்கிறாளா… அடுத்த முறை அவசியம் அவளையும் கூட்டிட்டு வாப்பா…”

மருமகளைப் பற்றி ரேவதி விசாரிக்க, மவுனமாக இருந்தான் வசந்த்.

இன்னைக்கு நான் ஆஸ்பிடலுக்கு லீவு போட்டிருக்கேன்; இன்றைய சமையல் உன்னோட ஸ்பெஷல், ப்ரைட் ரைஸ், பனீர் பட்டர் மசாலா… ஓ.கே., வா?”

கலகலப்பாகப் பேசும் அம்மாவை பார்த்தான்.

“அம்மா எவ்வளவு நல்லவள். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி, அடுத்தவர் மனம் கோணாமல் பேசும் அம்மா… உன்னிடம் நந்தினியை பிரியப் போகிறேன் என்பதை எப்படிச் சொல்வேன்…’ மனம் தவித்தது.

எங்கே வசந்த், அப்பாவை அரைமணி நேரமாகக் காணோம்?”

அதற்குள் அங்கு வந்தவர், மனைவியை புன்னகையுடன் ஏறிட்டார்.

எங்க போனீங்க; இன்னைக்கு நம்ம சமையல் மெனு என்ன தெரியுமா?”

“”ம்… ப்ரைட் ரைஸ் செய்யப் போறே… அம்மாவும், பிள்ளையும் பேசிட்டு இருக்கட்டுமேன்னு, நான் தான் ப்ரிஜிலிருந்து காய்கறிகள் எடுத்து வெட்டி வச்சுட்டு வந்தேன்.”

உங்களைப் பத்தி எனக்குத் தெரியாதா… நானே உங்க கிட்டே இந்த உதவி கேட்கணும்ன்னு நினைச்சேன். என் மனதில் இருப்பதை புரிஞ்ச மாதிரி உடனே செய்திட்டீங்க.”

அம்மாவும், அப்பாவும் இப்படி அன்னியோன்யமாக பேசிக் கொள்வது, மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கு. எனக்கும், நந்தினிக்கும் ஏன் இந்த ஈடுபாடு இல்லாமல் போய் விட்டது.

சாயந்திரம் அப்பா, வாக்கிங் சென்றிருக்க, தோட்டத்தில் அம்மாவுடன், காற்றாட அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

மகனைப் பார்த்து புன்னகைத்தவள், சொல்லு வசந்த், அப்புறம் உன் லைப் எப்படி போயிட்டிருக்கு… நந்தினி என்ன சொல்றா…

நான் ஒரு பைத்தியம், மூணு வருஷமா ஒருத்தரையொருத்தர் விரும்பி, கல்யாணம் பண்ணிட்டிருக்கீங்க, நிச்சயம் உங்க வாழ்க்கை சந்தோஷமா போயிட்டிருக்கும்ன்னு எனக்கு தெரியும்.

தேவையில்லாமல் கேட்கிறேன். அது சரி… நீ மட்டும் வந்ததுக்கு நந்தினியையும் கூட்டிட்டு வந்திருந்தா மனசுக்கு நிறைவா இருந்திருக்கும்.”

அம்மா… உன் கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்… அப்பாவைப் பத்தி நீ என்ன நினைக்கிறே…

முப்பது வருஷ தாம்பத்யத்தில் உனக்கு முழு நிறைவு கிடைச்சிருக்காம்மா?”

மகனை விழிகள் அகல பார்த்த ரேவதி, அப்பாவைப் பத்தி தெரிஞ்சும், இப்படி ஒரு கேள்வி எப்படி உன் மனசில் வந்தது. என்னைப் பார்த்தா நிறைவா வாழற மாதிரி தெரியலையா?”

அதுக்கில்லம்மா… உங்க இளமை கால வாழ்க்கை எனக்கு தெரியாதில்லையா… அந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள்…

மனசுக்கு நெருடலான விஷயங்கள்… ஒருத்தொருத்தர் கருத்து வேறுபாடு, இப்படி எதுவும் உன் வாழ்க்கையில் நடந்ததா? அப்பா உன் கிட்டே எப்படி நடந்துகிட்டார்ன்னு ஒரு ஆர்வத்தில் கேட்டேன்”

புரியுது வசந்த்… உனக்கு தெரியாத சில விஷயங்கள், எங்க வாழ்க்கையில் நடந்திருக்கும்ன்னு நினைக்கற… அதையெல்லாம் எப்படி சமாளிச்சேன்னு கேட்க வர்றே அப்படித் தானே?

அந்த விஷயத்தில், நான் ரொம்ப கொடுத்து வச்சவ வசந்த். உன் அப்பா மாதிரி ஒருத்தர், கணவனாக கிடைச்சதுக்கு, நான் கொடுத்து வச்சிருக்கேன்.

எனக்கு கல்யாணம் ஆனப்ப, பதினெட்டு வயசு.

எனக்கு படிப்பின் மேல் இருக்கிற ஆர்வத்தை பார்த்து, உன் அப்பா தான் என்னை மெடிக்கல் காலேஜில் சேர்த்து படிக்க வச்சார். என் முன்னேற்றத்தை பார்த்து, உண்மையில் சந்தோஷப்பட்டார்.

கடைசி வருஷம், படிப்பு முடியும் சமயம் நீ பிறந்தே. உன்னை நான் வளர்த்தேன்னு சொல்றதை விட, இரவு, பகலாக கண் விழிச்சு, அவர் தான் உன்னை வளர்த்தார்ன்னு சொல்லணும்…

“ரேவதி… நீ ராத்திரியில் கண் முழிக்க வேண்டாம். குழந்தை அழுதா நான் பார்த்துக்கிறேன். படிச்சுக்கிட்டு, வீட்டு வேலையும் பார்த்து சிரமப்படாதே. ராத்திரி நல்ல தூக்கம் இல்லாட்டி, உடம்பு கெட்டுடும். நீ ரெஸ்டு எடு ரேவதி…’ என்பார்.

உங்கப்பாவின் அன்பான வார்த்தைகள், எனக்கு நிறைய தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுத்துச்சு… இன்னைக்கு சொசைட்டியில் நான் ஒரு நல்ல டாக்டர்ன்னு பேர் வாங்கினதுக்கு காரணம், உங்க அப்பா தான்…

கணவன், மனைவிங்கிறது, வெறும் மூணு முடிச்சில் ஏற்படற பந்தம் மட்டும் இல்லப்பா… அதையும் தாண்டி உள்ளுணர்வோடு ஒருத்தரையொருத்தர் மனசார ஏத்துக்கணும்…

அவரவர் நிறைகுறைகளோடு வாழறது தான் உண்மையான தாம்பத்யம்…

நீ நாலு வயது சிறுவனாக இருந்த போது, ஆபிசில் நடந்த கையாடலில், வேண்டாதவங்க உங்க அப்பாவையும் இழுத்து விட, ஒரு வருஷம் வேலை இழந்து, அவர் வீட்டில் இருந்தப்ப, என் சேலை, துணிமணி கூட துவைச்சு போட்டிருக்காரு தெரியுமா?

“இங்க பாரு ரேவதி… இந்த கேஸ்ல என் மேலே எந்த தப்பும் இல்லைன்னு நிருபணம் ஆயிட்டா… திரும்ப நான் வேலைக்கு போகத் தான் போறேன்…

அதுவரைக்கும் உனக்கு உதவியாக இருப்பதில் எனக்கு சந்தோஷம் தான்…’ என்பார்.

இன்னைக்கு வரைக்கும், உங்கப்பாவோடு சந்தோஷமாகத் தான் வாழ்ந்துட்டு இருக்கேன். மனைவிங்கிறவ தனக்கு இசைவாக தான் நடக்கணும், தனக்கு அடங்கி நடந்து, தன்னோட எண்ணங்களைத் தான் பிரதிபலிக்கணும்ன்னு நினைக்கறவங்க மத்தியில், RPrashath என்னோட திறமைகளை ஊக்குவிச்சார்.

தான் ஒரு சாதாரண வேலையில் இருந்தாலும், என்னை உயர்வான இடத்தில் வச்சுப் பார்த்து பெருமைப்படறாரே… அந்த நல்ல மனசுக்கு நான் காலம் முழுவதும் சேவை செய்ய கடமைப்பட்டிருக்கேன்பா,”

குரல் நெகிழ பேசும் அம்மாவைப் பார்த்தான்.

வசந்த் இங்கே வா… போனில் நந்தினி இருக்கா… இரண்டு நாளா உடம்பு சரியில்லையாம்… ஆபீசுக்குப் போகாம வீட்டில் தான் இருக்காளாம்… நான் தான் தனியா இருக்காளேன்னு போன் பண்ணிப் பேசினேன். நீயும் ரெண்டு வார்த்தை பேசிடு.”

ரேவதி அழைக்க, போனை வாங்கி, “”என்ன… உடம்பு சரியில்லையா?”

ஆமாம்… காய்ச்சல் அதிகம் இருக்கு. மாத்திரை போட்டுட்டு, வீட்டில் இருக்கேன்.

நீங்க தான், நான் எப்படி போனா என்னன்னு விட்டுட்டு போயிட்டீங்க. நீங்க பக்கத்தில் இருந்தா, அதுவே எனக்குப் பெரிய பலம்ன்னு உங்களை பிரிஞ்சு இருக்கிற இந்த சமயத்தில் தான் தோணுது.

நானும் வார்த்தைகளாலே உங்களை நிறைய காயப்படுத்தி இருக்கேன்.

உங்க கிட்டே நான் அன்பைக் காட்டறதை விட, ஆத்திரத்தை அதிகம் காட்டினதாலே தான், உங்க மனசிலிருந்து விலகிட்டு வரேன்னு இந்த தனிமை எனக்கு புரிய வச்சுடுச்சுங்க…

நீங்க… நீங்க… எப்ப வர்றீங்க?”

குரல் தழுதழுக்க நந்தினி பேச, உள்ளுக்குள் உடைந்து போனான் வசந்த்.

நானும் ஈகோ பார்த்து, நந்தினி விஷயத்தில் கடுமையாகத் தான் நடந்திருக்கிறேன்.

அம்மா சொன்னது போல், அவரவர் நிறைகுறைகளோடு மனசாற ஏத்துக்கிறது தான், உண்மையான தாம்பத்யம்.

நானா… நீயாங்கற போட்டிக்கே, இதில் இடமில்லை.

இப்படி ஒரு அம்மா, அப்பாவுக்கு மகனாக பிறந்த நானா, இப்படி நடந்து கொள்கிறேன்?

என்னங்க பேச்சையே காணோம்; இன்னும் என் மேலே இருக்கிற கோபம் குறையலையா? சாரிங்க…”

அதெல்லாம் இல்லை நந்தினி… இன்னைக்கு ஈவினிங்கே ப்ளைட் பிடிச்சு, ராத்திரிக்குள் அங்கு வந்துடறேன்; டேக் கேர்!”

என்றுமில்லாத அன்பும், பாசமும் வழிய, பழைய வசந்தாக மகன் பேச, அவன் மனதில் ஏற்பட்ட சலனங்களும், சஞ்சலங்களும் மறைந்து விட்டதை புரிந்து கொண்டார் அப்பா.

அவன் அருகில் வந்து, அன்புடன் அவனை தட்டிக் கொடுத்தார்.

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொது அறிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category