பொது அறிவு

பொது அறிவு தெரிந்ததும் தெரியாததும்

புதிய கலைத்திட்ட மாற்றம் - 2026®️🅿️💛®️🅿️💛®️🅿️💛®️🅿️💛புதிய கலைத்திட்ட மாற்றத்திற்கு ஏற்ப 2026 பாடசாலை வகுப்பறைக் கற்றல், க...
17/11/2025

புதிய கலைத்திட்ட மாற்றம் - 2026
®️🅿️💛®️🅿️💛®️🅿️💛®️🅿️💛

புதிய கலைத்திட்ட மாற்றத்திற்கு ஏற்ப 2026 பாடசாலை வகுப்பறைக் கற்றல், கற்பித்தலுக்கான நேரசூசியைத் தயாரிப்பதற்கான நேர ஒதுக்கீடு தொடர்பான 34/2025 சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

®️ அதற்கேற்ப முஸ்லீம் பாடசாலைகளுக்கான நேர ஒதுக்கீடு தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் முகமாக கல்வி அமைச்சின் ED/09/55/02/11 இலக்க 2025.11.13ஆம் திகதியிடப்பட்ட கடிதப் பிரகாரம் பின்வருமாறு நேர ஒதுக்கீடு அமைகிறது.

*®️ திங்கட்கிழமை
7.30 தொடக்கம். 2.00 வரை

* ®️செவ்வாய் தொடக்கம் வியாழன் வரை
7.30 தொடக்கம். 2.50 வரை

*®️ வெள்ளிக்கிழமை
7.30 தொடக்கம். 11.30 வரை

மேற்படி நேர ஒதுக்கீட்டுக்கு ஏற்ப வாராந்த நேரசூசியைத் தயாரித்துக்கொள்ள வேண்டும்.

®️நன்றி- மாணிக்கம் இளங்கோ Sir

®️🅿️ புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் பாடசாலை வகுப்பு நேர ஒழுங்கு அட்டவணை - 2026
17/11/2025

®️🅿️ புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் பாடசாலை வகுப்பு நேர ஒழுங்கு

அட்டவணை - 2026

®️🅿️பாடசாலைகளில் ஆளணியை தீர்மானித்தலும், அதிபர், ஆசிரியர் பணி ஒதுக்கீடுகளுக்குமான சுற்றுநிருபத்தின் முன்னளிக்கை வடிவம்.
17/11/2025

®️🅿️பாடசாலைகளில் ஆளணியை தீர்மானித்தலும், அதிபர், ஆசிரியர் பணி ஒதுக்கீடுகளுக்குமான சுற்றுநிருபத்தின் முன்னளிக்கை வடிவம்.

12/11/2025
சர்க்கரை நோய் உள்ளவர்கள்-அவசியம் சாப்பிட வேண்டியது.....®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ...
07/11/2025

சர்க்கரை நோய் உள்ளவர்கள்-
அவசியம் சாப்பிட வேண்டியது.....
®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷

வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

அரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கைகீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரை வகைளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.

நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம்.

மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.

பேரிச்சம்பழம் +கொய்யா காய்,பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு 50 கிராம் அளவு சாப்பிடலாம்.

மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடலாம்.

ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிட கூடாது நலன்கருதி....®️🅿️

2022: சம்பள உயர்வு இல்லை2023: சம்பள உயர்வு இல்லை2024: சம்பள உயர்வு இல்லை2025: சம்பள உயர்வு இல்லைஊழியர்: "நான் ராஜினாமா ச...
07/11/2025

2022: சம்பள உயர்வு இல்லை
2023: சம்பள உயர்வு இல்லை
2024: சம்பள உயர்வு இல்லை
2025: சம்பள உயர்வு இல்லை

ஊழியர்: "நான் ராஜினாமா செய்கிறேன்."

மேனேஜர்:"ஆனால் நீங்கள் சூப்பரா வேலை செய்கிறீர்களே! ஏன் விலகுகிறீர்கள்?"

ஊழியர்:"எனக்கு 75% சம்பள உயர்வு, மற்றும் வருடாந்திர Performance Bonus கெடைத்திருக்கு."

48 மணி நேரத்துக்கு பிறகு…

மேனேஜர்: "நாங்களும் அதே சம்பளத்தை தருகிறோம். தயவு செய்து இருங்கள்!"

ஊழியர்:"மன்னிக்கவும், இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது."

💬 ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நம்பிக்கையுள்ள ஊழியர்களுக்கு 20-30% உயர்வுகூட தர முடியாத அதே நிறுவனம், புதிய ஊழியர்களுக்கு 50-60% அதிக சம்பளம் வழங்குகிறது.

🔹 தலைவர்களுக்கான பாடம்:

ஊழியர்கள் வெறும் பணத்திற்காக மட்டும் விலகுவதில்லை —RPrashath தங்கள் மதிப்பு தெரியவில்லை என்று உணரும்போது தான் விலகுகிறார்கள்.

நல்ல ஊழியர்களை வைத்திருப்பது கடைசி நிமிடத்தில் சம்பளம் உயர்த்துவதால் அல்ல. அவர்களின் பணியை தொடர்ந்து அங்கீகரித்தல், நியாயமான ஊதியம், வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை தலைமை ஆகியவற்றால் தான் முடியும்.
RPrashath

✨ உங்கள் சிறந்த திறமைகளை, வேறு யாராவது கவனித்துக் கொள்வதற்கு முன்பாகவே, நீங்களே கவனித்துக் கொள்ளுங்கள்.

வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் தனது கணவர் கார் வாங்கும் போது அவருக்கு guarantee கையொப்பம் இட்டு உள்ளார்.கணவர் நில...
07/11/2025

வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் தனது கணவர் கார் வாங்கும் போது அவருக்கு guarantee கையொப்பம் இட்டு உள்ளார்.

கணவர் நிலுவை தொகையை செலுத்தவில்லை

இந்நிலையில் அவர் ஓய்வு பெறும் போது கணவருக்கு ஜாமீன் போட்ட காரணத்தால் அவருக்கு அளிக்கப்பட்ட பென்சன் தொகையில் இருந்து ரூபாய் 5,00,000 லட்சத்தை தன்னிச்சையாக அவரிடம் கேட்காமல் எடுத்துக் கொண்டு விட்டது.

இதை எதிர்த்து அந்த பெண் கோர்ட் வாசல் படி ஏறினார்.

இதை விசாரித்த தனி நீதிபதி வங்கிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினார்.

இதை எதிர்த்து அந்த பெண் ஒரிஸ்ஸா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்

இதில் தீர்ப்பு அந்த பெண்ணுக்கு சாதகமாக வந்தது.

ஒருவரின் பென்சன் தொகையில் அவரது அனுமதியின்றி தொகையை பிடித்தம் செய்தது தவறு என்றும் அந்த பணத்தை 4 வாரத்தில் அப்பெண்ணின் கணக்கில் திருப்பி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதைப் பற்றிய ஒரு செய்தி :

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

ஓய்வூதியம் என்பது சாதாரண வைப்புத்தொகை அல்ல — பணியாளராகச் செய்த சேவைக்கு அறிமுகமான, உண்மையான உரிமை ஆகும்.

வங்கி தனிப்படியாக (“unilaterally”) அந்த ஓய்வூதியக்கணக்கில் இருந்து தொகையினை கழிக்கவும் (“debit/deduct”) சட்டவிரோதமாக இருக்கிறது என்று நீதிமன்றம் கூறியது.

குற்றவியல் அல்லது தனியார் கடன்தான விராமல் செலுத்தாமையால், ஓய்வூதிய கணக்கில் இருந்து நேரடியாக பிணைப்பு (attachment) செய்ய முடியாது.

நீதிமன்றம் வங்கி மீது அந்த தொகையை மீட்டெடுக்க கமாண்டு செய்தது — “the Bank was directed to reverse the sum of ₹5,00,000/- to the petitioner’s account within four weeks”.

மேலும், வங்கி சட்டபூர்வமான வழிகளை (“lawful means”) பயன்படுத்தி கடனை மீட்டெடுக்கும் வழியை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க கருத்துக்கள்

“The manner in which the recovery was effected also fails basic norms of natural justice… A unilateral debit from a customer’s account, especially when it consists of pension money, is an extreme step.”

ஓய்வூதியத்தின் உரிமை (right to pension) என்பது Constitution of India அதன் 300A விசையால் “property” எனவும் கணிக்கப்பட்டது.

கடன் உள்ளிட்ட நிலைமைகள் இருந்தால் கூட, ‘ஜாமீன்தாரர் ( Guarantee )என்ற முறையில்

வங்கி முறையாகமான நோட்டீஸ், கேட்டல் வாய்ப்பு (“opportunity to be heard”) வழங்காமல் நேரடியாக பணத்தை பிடிப்பது முறையற்றது என்று கூறப்பட்டது.

எதற்காக இது முக்கியம்?

ஓய்வு பெற்றவர்கள், முதியோர் எதிர்பார்க்கும் ஓய்வூதியம் என்பது அவர்களின் சமாதானம், மதிப்பு, உயிர்வாழ்வு அங்கமாக இருக்கிறது. இது வங்கிகளால் எளிதாக உடைக்கப்படக்கூடாது.

வழக்குகளில் precedent ஆக இது பயன்படுகிறது — “ஒரு வங்கி ஓய்வூதியக் கணக்கிலிருந்து சொத்துக்களை தனி முறையில் அதிரடியாக பிடிக்க முடியாது” என்று.

சமூக வழிமுறை பார்வையில், பெரியவர்கள், ஓய்வு பெற்றோர் போன்றவர்கள் அவர்களின் பெற்று வந்த உரிமைகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதில் ஒரு நல்ல செய்திகள்.

Source Luve lawm

Orissa High Court/Bank Can’t Unilaterally Deduct…

Bank Can’t Unilaterally Deduct Money From Pension Account Of Retired Employee To Recover Guaranteed Amount: Orissa High Court.

The Orissa High Court has held that a Bank has no legal authority to unilaterally deduct/debit money from the pension account of a retired employee/pensioner merely on the ground that such employee stood as guarantor in a loan which could not be repaid.

While asking the Bank to refund the deducted amount to the petitioner, the Bench of Dr. Justice Sanjeeb Kumar Panigrahi remarked –

“The manner in which the recovery was effected also fails basic norms of natural justice…

A unilateral debit from a customer’s account, especially when it consists of pension money, is an extreme step.

The petitioner was entitled to at least a notice or demand, and an opportunity to be heard on why the sum was being taken.”

The petitioner, who is a retired government employee, stood as a guarantor for the transport vehicle and car loans taken by his wife from the State Bank of India through different loan accounts.

Due to default in repayment of the said loans, the said accounts were declared as Non-Performing Assets (NPA).

The Bank alleged that despite of repeated requests, neither the borrower nor the guarantor repaid the loans.

the Bank deducted an amount to the tune of rupees five lakhs from the joint account held by the petitioner and his wife and used the same for closing the loan accounts.

Though the petitioner furnished representation to the Bank for release of the withheld amount, the Bank did not respond. Therefore, the present writ petition was filed.

Justice Panigrahi viewed the issue with a magnifying lens of constitutional wisdom. Though the dispute pertained to a default in repayment of loan arising out of contractual liability, the Judge sought to balance the scales of justice by adjudicating the limits of contractual liability when it directly wounds the constitutional right to livelihood of a retired employee, who is dependent on his pension.

Relying upon the dictum of the Apex Court in Radhey Shyam Gupta v. Punjab National Bank (2008) and citing the statutory prohibition under Section 60(1)(g) of the Code of Civil Procedure (CPC) against attachment of stipends and gratuities to government pensioners, the Court held that if a thing is forbidden by the law by way of formal attachment, it cannot be indirectly accomplished by the bank unilaterally adjusting or debiting pension funds.

The Bank contended that in order to recover the public money, it ventured into deducting the same from the joint account held by the petitioner and his wife.

However, such argument could not satiate the Court which held that when a debt is owed by one person, the bank cannot simply seize money from a joint account held with another person, especially who is not a co-debtor.

“The petitioner was entitled to at least a notice or demand, and an opportunity to be heard on why the sum was being taken.

He could have, for instance, pointed out his contention that the loans had been settled under a credit guarantee scheme, or offered an alternate repayment plan.

By bypassing any dialog or process, the Bank’s action was arbitrary,” it added.

Accordingly, the unilateral act on the part of the Bank was held to be illegal and unsustainable in the eyes of law.

Consequently, the Bank was directed to reverse the sum of ₹5,00,000/- to the petitioner’s account within four weeks.

However, the respondent was given liberty to recover the outstanding dues/loans by resorting to lawful means and/or by approaching appropriate forum(s).

Case Title: Bharat Chandra Mallick v. Branch Manager, State Bank of India

Case No: W.P.(C) No. 19648 of 2025

Date of Judgment: October 17, 2025

Counsel for the Petitioner: Mr. Braja Mohan Sarangi, Advocate

Counsel for the Respondent: Mr. Manoj Kumar Mohapatra-1, Advocate

Employee Wrongful Deduction Of Money Dr. Justice Sanjeeb Kumar Panigrahi..

*சும்மா*®️🅿️🩷படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*. *அது சரி *சும்மா* *என்ற...
07/11/2025

*சும்மா*
®️🅿️🩷படிச்சி தான் பாருங்களேன்😃😃😃😃

*அடிக்கடி நாம் பாவிக்கும் வார்த்தை தான், இந்த *சும்மா*.

*அது சரி *சும்மா* *என்றால் என்ன??*

*பேச்சு வழக்கு சொல்லாக இருந்தாலும், தமிழ் மொழியில் உள் வாங்கப் பட்டுள்ள ஒரு வார்த்தை இந்த *சும்மா!!*

*"சும்மா"*
*என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15அர்த்தங்கள் உண்டு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?*

*வேறு மொழிகளில்* *இல்லாத சிறப்பினை*
*நாம் அடிக்கடி கூறும்* *இந்த*"சும்மா"* *எனும் வார்த்தை எடுத்துக் காட்டும்*.

*1 . கொஞ்சம்* *"சும்மா"* இருடா?
( *அமைதியாக/Quiet*)

*2.கொஞ்ச நேரம் *"சும்மா"* *இருந்து விட்டுப் போகலாமே? (*களைப்பாறிக் கொண்டு/Leisurely*)

*3.அவரைப் பற்றி *"சும்மா"* *சொல்லக் கூடாது!*
(அருமை/in fact)*

*4.இது என்ன *"சும்மா கிடைக்கும்னு*
நினச்சியா*?
(இலவசமாக/Free of cost)

*5. *"சும்மா" கதை அளக்காதே?*
(பொய்/Lie)

*6. *"சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக் கொள்* -
(உபயோகமற்று*/Without use)

*7. *"சும்மா"* *"சும்மா" கிண்டல் பண்ணுறான்.* (அடிக்கடி/Very often)*

*8.இவன் இப்படித்தான்.. *சும்மா* *சொல்லிக்கிட்டு இருப்பான்*.
(எப்போதும்/Always)

*9.ஒன்றுமில்லை *"சும்மா" சொல்கின்றேன்*-
(தற்செயலாக/Just)

*10.இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை *"சும்மா" தான் இருக்கின்றது*
(காலி/Empty)

*11.சொன்னதையே *"சும்மா" சொல்லாதே.*
(மறுபடியும்/Repeat)

*12.ஒன்றுமில்லாமல் *"சும்மா" போகக் கூடாது*- (வெறுங் கையோடு/Bare)

*13. *"சும்மா"தான் இருக்கின்றோம்*-
(சோம்பேறித் தனமாக/ Lazily)

*14.அவன் *"சும்மா" ஏதாவது உளறுவான்* -
(வெட்டியாக/idle)

*15.எல்லாமே *"சும்மா" தான் சொன்னேன்*-
(விளையாட்டிற்கு/Just for fun)

*நாம் அன்றாடம் பாவிக்கும் இந்த *"சும்மா"*
*என்கிற ஒரு சொல். நாம் பயன் படுத்தும் இடத்தின் படியும் தொடரும் சொற்களின் படியும் பதினைந்து விதமான அர்த்தங்களைக் கொடுக்கிறது* (என்றால் அது *"சும்மா"* இல்லை!)

*உலகில் உள்ள மற்ற மொழி அனைத்தும் வாயினால் பேச, செவிக்குக் கருத்தை உணர்த்துகின்றவை*.

*ஆனால் தமிழ் மொழி இதயத்தாலே பேசி இதயத்தால் உணர வைக்கும் மொழியாகும்*

இவ்வளவு நேரம் படிச்சிட்டு *சும்மா* * போனா எப்பூடி....
சும்மா ஒரு லைக்க தட்டிட்டு போலாம்ல😝😝😝😂😂😂®️🅿️🩷💔💖🧡🩵💗💜💛🕉️♏🪻

பாடசாலைகளுக்கு கிடைக்கும் பொருட்களை பொறுப்பேற்றல் மற்றும் பொருட்பதிவேட்டில் பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறை...
07/11/2025

பாடசாலைகளுக்கு கிடைக்கும் பொருட்களை பொறுப்பேற்றல் மற்றும் பொருட்பதிவேட்டில் பதிவு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்!
ந.சந்திரகுமார் SLPS
®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷®️🅿️🩷

பாடசாலையொன்றுக்கு நிரல் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பழைய மாணவர்கள், சமூக அமைப்புகள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் போன்றோர்களால் உபகரணங்களும் பொருட்களும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு பொருட்களும் உபகரணங்களும் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், அவற்றைக் கையேற்றல்,பொருட் பதிவேட்டில் பதிவு செய்தல் தொடர்பான அறிவுறுத்தல்களை 2023/54 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கை மற்றும் நிதிப் பிரமாணத்தின் 454 உப பிரிவில் வழங்கப்படுள்ளன.

கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம், வலயக்கல்வி அலுவலகங்கள் மூலம் பாடசாலைக்கு பொருட்களை வழங்கும் சந்தர்ப்பங்களில் ...

*முதலில் அவற்றைப் பொறுப்பேற்கும் அதிபர்/பிரதி அதிபர்/சிரேஷ்ட ஆசிரியர், பொது 44 எனும் பொருட் பதிவேட்டில், பெறுமனவுப் பக்கத்தில் FR 454 க்கு அமைய பதிவு செய்ய வேண்டும்.

*அதாவது பொருட்களைப் பொறுப்பேற்கும் உத்தியோகத்தர் பொது-219( பொருட் பெறுமனவுக் கட்டளை) பதிவுப் புத்தகப் படிவத்தில் தேவையான விபரங்களைப் பூர்த்தி செய்து, அதனை பதிவு செய்துள்ள பொது 44 (இருப்புப் புத்தகம்/ பொருட் பதிவேடு) இன் பக்கத்தைக் குறிப்பிட்டு, பொருட்களைக் கையேற்றமைக்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

அதேபோல் சமூக அமைப்புகள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் போன்றவர்களால் நன்கொடையாக வழங்கும் சந்தர்ப்பங்களில்...

*அவற்றை உடனடியாக நன்கொடைப் பதிவேடு ஒன்றில் பதிவு செய்ய வேண்டும்.

*நன்கொடையாக பொருட்கள் கிடைக்கும் போது, விபரங்களைப் பூர்த்தி செய்து, வலயக்கல்விப் பணிப்பாளரின் முத்திரையைப்பெற வேண்டும்.

*இதன் பின்னர் உடனடியாக பாடசாலை பொருட்பதிவேட்டில் (பொது 44) பதிவு செய்ய வேண்டும்.

*இதன் பின்னர் உரிய உயர் மட்ட கற்றல் அலகுகளுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

பாடசாலை ஒன்றின் பொதுப் பொருட்பதிவேட்டின்(Gen 44) முகாமை பற்றிய தெளிவூட்டல்

பாடசாலை ஒன்றின் சகல பொருட்களும், உபகரணங்களும் தாய்ப் பொருட்பதிவேட்டில் (பொது 44) பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 31 ஆந் திகதி சமப்படுத்தப்படல் வேண்டும்.

*பொதுப் பொருட் பதிவேட்டில் பொருட்களை பதிவு செய்ய முன்பு, சகல பொருட்களையும், உபகரணங்களையும் தரம் பிரித்து, ஒவ்வொரு உயர் மட்ட கற்றல் அலகுக்கும் (High Order Learning Unit) குறித்த பக்கம் வரை ஒதுக்கீடு செய்து, அகர வரிசையில் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக...

*அலுவலக அலகு - பக்கம் 1- 15
*கணித அலகு. - பக்கம் 16-22
*பொது முகாமைத்துவ அலகு
*பௌதீகவியல் ஆய்வு கூடம்
*இரசாயனவியல் ஆய்வு கூடம்
*உயிரியல் ஆய்வு கூடம்
*கனிஷ்ட இடைநிலை விஞ்ஞான
ஆய்வு கூடம்.
*நூலகம்.
*கணினி ஆய்வு கூடம்.
*விளையாட்டு அலகு.
*பாண்டு வாத்திய அலகு.
*சங்கீத அலகு.
*நடன அலகு.
*நாடகமும் அரங்கிலும் அலகு
*விவசாய ஆய்வு கூடம்.
*மனைப்பொருளியல் அலகு
*திறன் வகுப்பு அலகு.
*புதிய கண்டுபிடிப்பாளர் ஆய்வு
கூடம்.
*உயிரியல் தொழில்நுட்பம் ஆய்வு
கூடம்.
*பொறியியல் தொழில்நுட்ப அலகு.

ஒவ்வொரு உயர் மட்ட கற்றல் அலகுக்கும் பொறுப்பாசிரியர்களை நியமித்து, ஒவ்வொரு அலகுக்கும் தனித்தனியாக பொருட்பதிவேட்டை வழங்கி, பொதுப் பொருட் பதிவேட்டில் ஒதுக்கீடு செய்த பொருட்களையும், உபகரணங்களையும், அதில் அகரவரிசை அடிப்படையில் பதிவு செய்ய வழிகாட்ட வேண்டும்.

ஒவ்வொரு உயர் மட்ட கற்றல் அலகுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்களது அலகிலுள்ள பொருட்க ளையும், உபகரணங்களையும் பாதுகாப்பதோடு, ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 31 ஆந் திகதியன்று சமப்படுத்த வேண்டும்.

விஞ்ஞான ஆய்வு கூடத்திலுள்ள பொருட்களையும், உபகரணங்களை யும் "நிரந்தரப் பொருட்கள்", "கண்ணாடிப் பொருட்கள்", "இரசாயனப் பொருட்கள்", "பிரிந்தழியக் கூடிய பொருட்கள்" என தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.

மேலும் குறித்த வருடத்தில் டிசெம்பர் 31 ஆந் திகதி வரையும் அரச நிறுவனங்கள் மூலமும், நன்கொடை மூலமும் கிடைக்கும் சகல பொருட்களையும் உபகரணங்களையும், பொது பொருட் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அத்தோடு அதனை குறித்த உயர் மட்ட கற்றல் அலகுக்குப் பொறுப்பான ஆசிரியரிடம் கையளித்து, பதிவு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டுக்கான பொருட் கணக்கெடுப்புக் குழுவின் அறிக்கையில் அனுமதி அளிக்கப் பட்ட கழிக்க வேண்டிய பொருட்களையும், உபகரணங்களை யும் பொதுப்பொருட்பதிவேட்டில் வலது பக்கத்தில் உள்ள நிரலில் கழிக்க வேண்டும்.{அழிக்க வேண்டியவை (D), ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டியவை (S),வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய வேண்டியவை (T)} அத்துடன் திருத்த வேண்டிய(R) பொருட்களை யும், உபகரணங்களையும் திருத்தம் செய்ய வேண்டும்.

*ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் 31 ஆந் திகதி அன்று பொதுப்பொருட் பதிவேட்டிலுள்ள பொருட்களையும், உபகரணங்களையும் சமப்படுத்திய பின்னர், நடப்பு ஆண்டுக்கான வருடாந்த பொருட் கணக்கெடுப்பு க்காக "Treasury & Audit 66" படிவத்தில் மூன்று பிரதிகளில் தயாரிப்பதோடு, கழிக்க வேண்டிய பொருட்களை "பொது 47" படிவத்தில் மூன்று பிரதிகளில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

திரு.ந.சந்திரகுமார்.
மட்டக்களப்பு களுதாவளை.

®️🅿️வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய்...
17/10/2025

®️🅿️வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள்.

சமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம் இது.

தமிழ்க் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம் பெரும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு,வெறும் வெற்றிலைபாக்கு மட்டுமே மாற்றி ஒரு திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவான் தமிழன்.

வெற்றிலை பாக்கு போட்டு வளர்ந்த தாத்தா பாட்டி காலத்தில் ....
கேன்சர் இல்லை, சர்க்கரைவியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை .....
முக்கியமாக மலட்டுத்தன்மை அறவே இல்லை.

ஆக வெற்றிலை, பாக்கு என்பது பல நோய்களைத் தீர்க்கும் ஒரு அருமருந்து என்பது தமிழினத்துக்கு தெரிந்திருந்ததால் தான், அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறான் தமிழன்.

கலாச்சாரச் சீரழிவும், அன்னிய மோகமும் சேர்ந்து தாம்பூலத்தைக் கெட்ட பழக்கமாக சித்தரித்து நம் இனத்தை நோயாளிகளாய் அலைய விட்டிருக்கிறது. வெற்றிலையின் மகத்துவத்தை தமிழனை மறக்கடிக்கச் செய்து தம்பதிகளை fertility Centre ( கருத்தரிப்பு மையம்)-களை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது.

வாயில் கேன்சர் வந்திடும், பல்லு கரை போகவே போகாது, தவிர "டேய்.. இன்னும் பழைய ஆள் மாதிரி வெத்தலையை போட்டுக்கிட்டு", எனச் சொல்லிச் சொல்லியே வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நம்மிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு விட்டது.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு அதிலும் கல் சுண்ணாம்பு, முத்துச்சிப்பி சுண்ணாம்பு என வித்தியாசம் காட்டி அது மட்டுமா ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றவதாய் ஊறும் நீரே அமிர்தம் என தாம்பூலம் இட்ட வழி முறைகள் சொன்ன சித்த மருத்துவம் இருந்த ஊரில், "ஆங்.. தாம்பூலமா அப்படின்னா?", எனக் கேட்கும் அடுத்த தலைமுறை வந்து விட்டது,

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து.

வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் Phenol Compound ஆனது ஆண்களின் Prostate-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் Prostate புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது, விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு Prostate-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள Zinc மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது Motility உண்டாகிறது, IVF நிகழ்வில் விந்தின் Capacitation நிகழ்வும் முக்கியம், அந்த Capacitation நடக்க Prostate சுரப்பு ரொம்ப முக்கியம் , இதையெல்லாம் தெரிந்ததால் தானோ என்னவோ காதல் மனைவி ஊட்டி விடும் தாம்பூலத்தைச் சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள் போல,

மலச்சிக்கலா, தாம்பூலத்துடன் கொஞ்சம் அதிகம் பாக்கைச் சேர், வாய் நாற்றமா, லவங்கத்தைச் சேர், வீரியம் வேண்டுமா, சாதிக்காய் சேர் எனச் சொன்ன தமிழ்ச் சமூகம் இன்று Infertility center-களில் முடங்கி கிடக்கிறது.

அடுத்த தலைமுறைக்கு இனியாவது தாம்பூலத்தின் மகத்துவத்தை எடுத்துரைப்போமே.

Solar planet project craft ideas for all
17/10/2025

Solar planet project craft ideas for all

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when பொது அறிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category