23/05/2023
நேற்றைய தினம் 60 -65 வயது மதிக்கத்தக்க ஒரு நோயாளி நெஞ்சு வலியுடனும் இருமலுடனும் கொண்டுவந்தனர்.உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பணித்து சிறிது நேரத்திலேயே அவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த செய்தி இப்பதிவிற்கு சுழி போட்டது.
இலங்கையில் மரணமடைவர்களில் 22% மானவர்கள் மாரடைப்பால் இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
என்ன காரணம் என்று பார்த்தால்
🧨 எமது கட்டுப்பாடற்ற உணவு முறை அதிகள்வு இனிப்பு உப்பு எண்ணெய் என்பவற்றை உட்கொள்ளல்...
🧨 உண்ட உணவுக்கு ஏற்ப வேலையோ உடற்பயிற்சியோ செய்யாமலிருத்தல்.
🧨உள ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்காது எப்போதும் stressful வாழ்க்கையை வாழுதல்.
இது எல்லாத்தையும் விட எனக்கு என்ன நான் நல்லாத்தான் இருக்குறேன். நல்லா வேலை செய்யுறேன். எனக்கு ஒரு வருத்தமும் இல்லை என்ற அலட்சியபோக்கு......
ஒரு நிமிடம் உங்களையும் உங்கள் குடும்ப உறவுகளையும் சிந்தியுங்கள்......எம் ஒவ்வொரு இழப்பும் எம் குடும்பங்களுக்கு பேரிழப்பு......
💔