Ashraff Memorial Hospital-Kalmunai

Ashraff Memorial Hospital-Kalmunai This Hospital Receives patients from All parts of Sri Lanka. AMHK has following Unit to Serve the Clients
01. General Medical Unit
02. General Surgical Unit
03.

The Ashraff Memorial Hospital is a Type A Base Hospital under the Ministry of Health, Sri Lanka situated in Kalmunai in the Ampara District, Eastern Province of Sri Lanka. Paeditrict Unit
04. Neonatal Intensive Care Unit
05. Premature Baby Unit
06. Obstetric Unit
07. Gynaecology Unit
08. Orthopaedic Surgical Unit
09. Mental Health Unit
10. Operating Theatres
11. Out Patients Department
12

. Emergency Treatment Unit
13. Intensive Care Unit
14. High dependency Unit
15. Covid- 19 Treatment Unit
16. Covid- 19 High dependency Unit
17. Cardiology Unit
18. Radiology Unit
19. Dermatology Unit
20. ENT Unit
21. Eye Unit
22. Dental Unit
23. Medico Legal Unit
24. Infection Control Unit
25. Public Health Unit
26. Dialysis Unit
27. Physiotherapy Unit
28. Speech and Language Therapy Unit
29. Occupational Therapy Unit
30. EEG Unit
31. Medical Laboratory
32. Blood Bank
33. Central Sterilization and Supply Division
34. Medical Supply Division
35. Waste Management Division

நோயாளியைப் பார்வையிட வருபவர்களுக்கான அறிவித்தல்............................................................................
02/05/2026

நோயாளியைப் பார்வையிட வருபவர்களுக்கான அறிவித்தல்.......................................................................................

எமது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ. எல். எம். றிபாஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. எல். பாரூக் அவர்களினால் எமது வைத்தியசாலைக்கு நோயாளிகளைப் பார்வையிட வருபவர்களுக்காக, வைத்தியசாலையினுள் காத்திருப்பு பகுதி ஒன்றிற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட வருகை தருபவர்களுக்கான அறிவிப்பு.................................
01/05/2026

அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளர்களைப் பார்வையிட வருகை தருபவர்களுக்கான அறிவிப்பு..................................................................................................

நோயாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைகள் அமுலில் உள்ளன:

• ஒரு நோயாளிக்கு ஒரே நேரத்தில் 2 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர்

• தொற்று நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளவும்.

• நோயாளியைப் பார்வையிடுவதற்காக 12 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்களின் வருகையைத் தவிர்க்கவும்.

• வைத்தியசாலை வளாகத்தில் அமைதியைப் பேணவும்.

• நோயாளிகளின் ஓய்வை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கவும்

• மருத்துவர்கள் வழங்கும் வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயமாக கடைபிடிக்கவும்.

இந்நடவடிக்கைகள் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பதை புரிந்து கொண்டு, தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

அன்பார்ந்த பொது மக்களுக்கான ஒரு அறிவித்தல்.................................................................................
24/04/2026

அன்பார்ந்த பொது மக்களுக்கான ஒரு அறிவித்தல்............................................................................................................................

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் !

இன்ஷா அல்லாஹ்
நாளை காலை சனிக்கிழமை 8.30 மணிமுதல் பிற்பகல் 4 மணி வரை கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அமைந்துள்ள இரத்த வங்கியில்

ZESDO அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்த தான நிகழ்வில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமுள்ள மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொண்டு உதிரம் கொடுத்து உயிர்காக்க முன்வருமாறு பணிவாய் வேண்டிக்கொள்கின்றோம்.

" ஓர் உயிரை வாழவைத்தவர் எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போலாவார்...( Al-Quran)

இப்படிக்கு,
செயலாளர்
ZESDO.

பதவி உயர்வு பெற்ற திரு. ஏ.ஆர்.எம். சர்ஜூன் அவர்களுக்கு வாழ்த்துகள்.........................................................
19/04/2026

பதவி உயர்வு பெற்ற திரு. ஏ.ஆர்.எம். சர்ஜூன் அவர்களுக்கு வாழ்த்துகள்.................................................................

எமது வைத்தியசாலையில் கடமையாற்றிய திரு. ஏ.ஆர்.எம். சர்ஜூன் அவர்கள் சுகாதார சேவை உதவியாளராக பணியாற்றி, தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் ஆய்வுக்கூட உதவியாளராக பதவி உயர்வு பெற்று செல்லுகின்றார். அவரை மனமகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்புகின்றோம்.

அவருக்கான விடுவித்தல் கடிதம் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ. எல். பாறூக் அவர்களினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வைத்தியசாலை கணக்காளர் திரு. யூ. எல். ஜவாஹிர், பிரமத ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் திரு எம்.எல்.எம். தௌபீக், பிரதம சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு ஐ.எல்.ஜாபீர் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Sinhala & Tamil New Year Message from Dr. I.L.M. Rifaz, Medical Superintendent of Ashraff Memorial Hospital-Kalmunai.
14/04/2026

Sinhala & Tamil New Year Message from Dr. I.L.M. Rifaz, Medical Superintendent of Ashraff Memorial Hospital-Kalmunai.

வைத்தியசாலைக்குழு கூட்டம் ..........................................................................எமது வைத்தியசாலையின்...
12/04/2026

வைத்தியசாலைக்குழு கூட்டம் ..........................................................................

எமது வைத்தியசாலையின், மாதாந்த வைத்தியசாலைக் குழுக் கூட்டம் தலைவர் Eng. Z.A.M. அஸ்மிர் அவர்களின் தலைமையில் (2026.04.11) ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் Dr. A.L. பாறூக், தர முகாமைத்துவ வைத்தியர் Dr. K.L.M. றைஸ், நிர்வாக உத்தியோகத்தர் A. பொளமி அஸ்மின் உள்ளிட்ட வைத்தியசாலைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது எமது வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

06/04/2026

காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு
Dr. A.W.M. Sammem
Senior Consultant Surgeon
Ashraff Memorial Hospital
Kalmunai

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த தான முகாம்----------------------------------எமது அஷ்ராஃப் ஞாபகார்த்த வ...
01/04/2026

கல்முனை அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த தான முகாம்
----------------------------------

எமது அஷ்ராஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக இன்று 2026.04.01 ஆம் திகதி புதன்கிழமை இரத்த தான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எமது வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.

இந்நிகழ்வில் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் K. L. M. ரயீஸ், இரத்த வங்கி மருத்துவ அதிகாரி ச. மருதராஜன், Matron , இரத்த வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும், இரத்த தானம் செய்தவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்ய அழைப்பு.................................................................எமது இரத்த வங்கியில் தற்போது அ...
26/03/2026

இரத்த தானம் செய்ய அழைப்பு.................................................................

எமது இரத்த வங்கியில் தற்போது அனைத்து வகையான இரத்தங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகையால், இரத்த கொடையாளர்கள் அனைவரும் எமது இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து இரத்த தானம் வழங்கி, உயிர்களை காக்கும் இந்த உன்னத பணியில் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் ஒரு தானம் பல உயிர்களுக்கு புதிய நம்பிக்கையாகும்.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒற்றுமையை வலியுறுத்திய இப்தார் நிகழ்வு—————————————————————————அஷ்ரப் ஞாபகார்த...
16/03/2026

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒற்றுமையை வலியுறுத்திய இப்தார் நிகழ்வு
—————————————————————————

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (16.03.2026) திங்கட்கிழமை வைத்தியசாலையின் கிளினிக் மண்டபத்தில் விமர்சையாக நடைபெற்றது.

வைத்திய அத்தியட்சகர் Dr. I. L. M. றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட வைத்தியர்கள், சிரேஷ்ட வைத்திய அதிகாரி, திட்டமிடல் வைத்திய அதிகாரி, தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி, பொது சுகாதார வைத்திய அதிகாரி, வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலையின் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இப்தார் நிகழ்வின் போது சமூக ஒற்றுமை மற்றும் புனித ரமழான் மாதத்தின் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து மார்க்க சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் T-Shirt அறிமுக நிகழ்வு-----------...
08/03/2026

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதாரப் பணியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் T-Shirt அறிமுக நிகழ்வு
-----------------------------------------------------------

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் சுகாதாரப் பணியாளர்கள் சிக்கன மற்றும் கடன் வழங்கல் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த T-Shirt அறிமுக நிகழ்வு 2026.03.07 ம் திகதி (சனிக்கிழமை) அன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிக்கன மற்றும் கடன் வழங்கல் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் திரு. W.A.D. விமலரத்ன அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வைத்திய அத்தியட்சகர் டாக்டர் I. L. M. ரிபாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் K. L. M. றைஸ், டாக்டர் A. R. M. அஸ்மி (SMO), கணக்காளர் U. L. ஜவாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் A. பொளமி அஸ்மின், Matron, பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திரு. W.A.D. விமலரத்ன அவர்களுக்கும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வைத்திய அத்தியட்சகர் டாக்டர் I. L. M. ரிபாஸ் அவர்களுக்கும் பொன்னாடை வழங்கி கௌரவிக்கப்பட்டது நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.

இந்நிகழ்வு சுகாதாரப் பணியாளர்களின் ஒற்றுமையையும் சங்கத்தின் செயற்பாடுகளையும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும்-----------------------...
08/03/2026

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இப்தார் நிகழ்வும் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும்
------------------------------------------------------------

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வும், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடலும் 2026.03.07 ஆம் திகதி சனிக்கிழமை, வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு எமது வைத்தியசாலையின் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு. Z.A.M. அஸ்மிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சரான கௌரவ வசந்த பியதிஸ்ஸ அவர்கள் கலந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர், இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. அபூபக்கர் ஆதம்பாவா அவர்களும் கலந்து கொண்டார்.

அத்துடன், வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் I.L.M. ரிபாஸ், பொது வைத்திய நிபுணர்கள் டாக்டர் M.N.M. சுஐப் மற்றும் டாக்டர் M.M. வாஸித், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் K.L.M. றைஸ், மேட்ரன், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது எமது வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. அவை தொடர்பான விடயங்கள் பிரதி அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Address

Main Street
Kalmunai

Alerts

Be the first to know and let us send you an email when Ashraff Memorial Hospital-Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ashraff Memorial Hospital-Kalmunai:

Share

Category