09/07/2025
புத்தளம், தாரிக் பள்ளி மஹல்லா, மக்கள் புரத்திலுள்ள வீட்டில் வசித்து வந்தவரும், Bபி மரைக்கார் குடும்பத்தைச் சேர்ந்தவருமான,
முஹம்மது ரிகாஸ் (வயது - 26)
அவர்கள்,
ஹிஜ்ரி 1447 முஹர்ரம் மாதம் பிறை 14ஆகிய இன்று, 2025 ஜுலை மாதம் 09ஆம் திகதி, புதன்கிழமை வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்.
அள்ளாஹும்மஃஜுர்னீ பீ முஸீபBத்தி வஹ்லிFப்லீ ஹைறம்மின்ஹா!
கDத்Dதறள்ளாஹு மாஷாஅ பஅல.
அன்னார், ரிஸ்வானுல் ஜின்னா, ஜரீனா ஆகியோரின் மகனும்,
மர்ஹும்களான Bபி மரைக்கார் பாரூக், பாயிஸா ஆகியோரின் பேரனும்,
மௌலவியா ரிசாதா அவர்களின் சகோதரரும்,
புத்தளம், குவைத் வைத்தியசாலைக்கு அருகில் செல்லும் பாதையில் இருக்கும். நபீஸா பள்ளிவாசலின் பேஷ்இமாம், மற்றும் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் மௌலவி இக்ராம் (அஷ்ரபி) அவர்களின் மைத்துனரும்,
புத்தளம் தாரிக் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் பைரூஸ், பரீனா, நபீஸா, நிஹாயா, ரம்சியா, பர்ஹானா ஆகியோரின் சகோதரியின் மகனும்,
ரிபாய் Bபாஸ், பர்சான், அசாபாக்கி, சலீம்,
ஆகியோரின் மைத்துனியின் மகனும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இன்ஷா அள்ளாஹ்! நல்லடக்கம் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
-தகவல்:
தாய்மாமனார் - பைரூஸ்.
-தகவல் உதவி:
மைத்துனர் - இக்ராம் மௌலவி மற்றும்
சிறிய தந்தை சலீம், ரிசான் ஹாஜி.
மரணித்தவருக்காக (ஜனாஸாவைப் பார்த்து) ஓதும் துஆ!
اَللّهُمَّ اغْفِرْله وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ
அள்ளாஹும்மக்ஃபிர் லஹு வர்Fபஃ தரஜ(த்)தஹு Fபில் மஹ்திய்யீன வஃக்லுஃப்ஹு Fபீ அகிBபிஹி Fபில் ஙாBபிரீன் வக்ஃFபிர்லனா வலஹு யாரBப்Bபல் ஆலமீன். வFப்ஸஹ் லஹு Fபீ கப்ரிஹி வநவ்விர்லஹு Fபீஹி.
பொருள்:
இறைவா! அன்னாரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!