Janaza Announcement - Srilanka

Janaza Announcement - Srilanka janaaza announcement - Srilanka

ஜனாஸா அறிவித்தல் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாகவும் கல்பிட்டி புதுக்குடியிருப்பு...
03/10/2025

ஜனாஸா அறிவித்தல்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாகவும் கல்பிட்டி புதுக்குடியிருப்பு ஏ.ஜீ.ஏ. முகாமை வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம்களான அப்துல் மஜீத் சமூனு உம்மா ஆகியோரின் மகன் காதர்கனி அவர்கள் காலமானார்கள்.

அன்னார் உலிதா அவர்களின் அன்புக்கணவரும்,நுஸ்பான், றிஸ்பான் ,நுஸ்பியா, ரிஸ்பியா, நிஸா ஆகியோரின் அன்புத்தந்தையும்,நைசர், ஸஹ்ரான்,பஸ்ரியா, முபஸ்ஸிரா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸா அல்லாஹ் இன்று 3/10/2025 வெள்ளி மாலை 4:00 மணியளவில் கல்பிட்டி பெரியபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் .
மகன்
க.நுஸ்பான்.

ஜனாசா அறிவித்தல்       ======================= திகழியை வசிப்பிடமாகக் கொண்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஓய்வு பெற்...
02/10/2025

ஜனாசா அறிவித்தல்
=======================
திகழியை வசிப்பிடமாகக் கொண்ட பிரதேச அபிவிருத்தி வங்கியின் (RDB) ஓய்வு பெற்ற முகாமையாளர் ஜனாப் ரபீக் அவர்கள் சற்று முன் புத்தளம் ஆதார வைத்திய சாலையில் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹூ ராஜிவூன்

அன்னார் யாஸ்மின் அவர்களின் அன்பு கணவரும்,

ரிப்பத், அப்துல்லா ஆகியோரின் அன்பு தகப்பனும்,

சுமையா அவர்களின் மாமனாரும்,

கல்பிட்டி ரிஸ்வான் அவர்களின் சம்மந்தியும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா அறிவித்தல்ஒட்டுக்குளம், நிக்கவரட்டியைச் சேர்ந்த ஜனாப் அய்யூப் அவர்கள் காலமானார்.انا لله وإنا اليه راجعون இன்னாலில்...
30/09/2025

ஜனாஸா அறிவித்தல்

ஒட்டுக்குளம், நிக்கவரட்டியைச் சேர்ந்த ஜனாப் அய்யூப் அவர்கள் காலமானார்.
انا لله وإنا اليه راجعون
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அண்ணார் அனூஸ் ஆசிரியர் (நஸ்ரியா பாடசாலை-சிலாபம்), அகீலா ஆசிரியை,
அர்ஷத் ஆசிரியர் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் அல்ஹாஜ் ருக்சான் (ஜுவல் லைன்- சிலாபம்), நஸீஹா, ஸபா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அல்ஹாஜ் நவ்பர் (மதீனா ஹோட்டல்- ஆணமடு) அவர்களின் சகோதரரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4.00 மணிக்கு ஒட்டுக்குளம் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

மன்னரார் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் ராசிக் காலமானார்.இன்னாலில்லாஹி வஇ...
21/09/2025

மன்னரார் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மட் ராசிக் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஹூன்.
முஜாஹித், முசாதிர், சஸ்னா, சன்ஹா அன்னாரின் தகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் வவுனியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.

நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

19/09/2025
ஜனாஸா அறிவித்தல் மன்னார் வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம்  ஆலங்குடா கல்முனைக்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட சியாவ...
18/09/2025

ஜனாஸா அறிவித்தல்

மன்னார் வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் ஆலங்குடா கல்முனைக்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட சியாவுல் ஹக் நில்ஃபா என்பவரின் மகன் முஹம்மது குஸ்னி என்பவர் காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

அன்னார் ஹுசைன், ஹஸன், சிம்லா, ஆகியோரின் சகோதரனுமாவார் அன்னாரின் ஜனாஸா வேப்பங்குளம் ஜும்ஆ பள்ளி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

ஜனாஸா அறிவித்தல்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.கப்பலடியை பிறப்பிடமாகவும் கண்டகுளியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெ...
13/09/2025

ஜனாஸா அறிவித்தல்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

கப்பலடியை பிறப்பிடமாகவும் கண்டகுளியை
வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்க முகாமையாளர் அப்துல் அஸீஸ் அவர்கள் காலமானார்.

அன்னார் மர்ஹூம் அபுதாலிப் தம்பதியின் மகனும், ஜொஹரா பீவி அவர்களின் அன்புக் கணவரும் சம்சுன், முசம்மில் (சமூர்த்தி உத்தியைாகத்தர்), சகீலா ஆகியைாரின் அன்புத் தந்தையும் , ரபாய்தீன் (ஓய்வு பெற்ற ஆசிரியர்),நஸ்ரின்,மர்ஹூம்களான சஹாப்தீன், யாசின் ஆகியைாரின் மாமனாரும், மர்ஹூம் உம்முல் ஹைர், றஸீதா உம்மா ஆகியோரின் சகோதரரும் அவர்.

அன்னாரின் ஜனாஸா இன்று (2025.09.13) பிற்பகல் 4.00 மணிக்கு கண்டகுளி பெரிய பள்ளி மையவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 #ஜனாஸா_அறிவித்தல் கிண்ணியா பெரியாற்றுமுனை 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட டிட்டோ என்றழைக்கப்படும் ...
06/09/2025

#ஜனாஸா_அறிவித்தல்

கிண்ணியா பெரியாற்றுமுனை 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட டிட்டோ என்றழைக்கப்படும் அப்துல் கரீம் றிபாத் என்பவர் இன்று 06-09-2025 இரவு 9.30 மணியளவில் கிண்ணியா வைத்தியசாலையில் வபாத்தானார்

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

எல்லோருடனும் அன்பாகவும் பன்பாகவும் புன்னகையுடன் பேசிப் பழகக் கூடியவர்

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்போமாக ஆமீன்

CEB சம்சீர் காலமானார்யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஆரம்பத்திலிருந்து மிக நீண்ட காலமாக கற்பிட்டியில் வசித்து வந்தவரும் தற...
20/08/2025

CEB சம்சீர் காலமானார்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் ஆரம்பத்திலிருந்து மிக நீண்ட காலமாக கற்பிட்டியில் வசித்து வந்தவரும் தற்போது புத்தளம் நூர் பள்ளி மஹல்லாவில் வசித்து வந்தவருமான ஓய்வு பெற்ற இலங்கை மின்சார சபை ஊழியர் அல்ஹாஜ் சம்சீர் அவர்கள் ஹிஜ்ரி 1447 ஸபர் மாதம் பிறை 25 ஆகிய இன்று, 2025 ஆகஸ்ட் மாதம் 20ஆம் திகதி, புதன் கிழமை வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். காலமானார்கள்.

அண்ணார் யாழ்ப்பாணம் மர்ஹும்களான மீரான் முஹிதீன் ஆலிம், பெத்தம்மா ஆகியோரின் பேரனும் கற்பிட்டி பிரதேச சபை ஓய்வு பெற்ற CC மர்ஹூம் சாகுல் ஹமீத் மற்றும் மர்ஹுமா மைசூரா அவர்களின் அன்பு மகனும் மர்ஹூம்களான சுபைர் மாஸ்டர் உம்மு சல்மா ஆகியோரின் அன்பு
மருமகனும்

ஹாஜியாணி உம்மு ஜாரியா அவர்களின் அன்புக் கணவரும் முஹம்மது இம்ரான், பாத்திமா ஆத்திகா, பாத்திமா ஆஷிகா, ஆயிஷா பர்வீன் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்

பாத்திமா கிப்லா முஹம்மது ரிஃபாத் முஹம்மது இன்சாப் முஹம்மது ரிஹாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்

ஷாபினாஸ் மர்ஹூம் சபீக், சாபித் ,சாகிர் ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று அஸர் தொழுகையுடன் புத்தளம் பக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் மகன் முஹம்மது இம்ரான்

அள்ளாஹும்மஃஜுர்னீ பீ முஸீபBத்தி வஹ்லிFப்லீ ஹைறம்மின்ஹா!
கDத்Dதறள்ளாஹு மாஷாஅ பஅல.

*மரணித்தவருக்காக (ஜனாஸாவைப் பார்த்து) ஓதும் துஆ!*

اَللّهُمَّ اغْفِرْله وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّيْنَ وَاخْلُفْهُ فِيْ عَقِبِهِ فِي الْغَابِرِيْنَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِيْنَ وَافْسَحْ لَهُ فِيْ قَبْرِهِ وَنَوِّرْ لَهُ فِيْهِ

அள்ளாஹும்மக்ஃபிர் லஹு வர்Fபஃ தரஜ(த்)தஹு Fபில் மஹ்திய்யீன வஃக்லுஃப்ஹு Fபீ அகிBபிஹி Fபில் ஙாBபிரீன் வக்ஃFபிர்லனா வலஹு யாரBப்Bபல் ஆலமீன். வFப்ஸஹ் லஹு Fபீ கப்ரிஹி வநவ்விர்லஹு Fபீஹி.

பொருள்:
இறைவா! அன்னாரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

ஜனாஸா அறிவித்தல்.மன்னார் வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் நாகவில்லு வை (மந்தக்காடு வத்தை) வசிப்பிடமாகவும் கொண்ட...
18/08/2025

ஜனாஸா அறிவித்தல்.

மன்னார் வேப்பங்குளத்தைப் பிறப்பிடமாகவும் புத்தளம் நாகவில்லு வை (மந்தக்காடு வத்தை) வசிப்பிடமாகவும் கொண்ட முஹம்மது இமாம் தாஹிர் அவர்கள் காலமானார்(17-08-2025 இரவு).
-இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்-

அன்னார் மர்ஹூம்காளான முகம்மது இமாம், ஆமினா உம்மா ஆயோரின் அன்பு மகனும்,
நூருல் பஸார் (ஓய்வுபெற்ற கமநல திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்புக் கணவரும்,
நிஸ்தார்(LLB), நிஸ்வர்(இர்பானி), நுசைபா ஆகியோரின் அன்பு தந்தையும்,
மர்ஹூம்களான நிஹ்மதுல்லா மௌலவி,லாமுதீன்,றம்சா உம்மா,ரசீதா உம்மா அவர்களோடு ,பாக்கீர்,அபூபக்கர் (அன்வர்),நிஸ்றின் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிப்லா(LLB-சட்டத்தரணி-புத்தளம் நீதிமன்றம்) ,ஸஹ்தியா லாஹிர் -(ஆசிரியை-சாஹிரா தே.பாடசாலை-புத்தளம்),ஹில்மான்-(சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்-முசலி பிரதேச செயலகம்) ஆகியோரின் மாமனாரும்
ஆவார்.
*அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் இன்று (18) மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து நாகவில்லு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

-நஸ்ஹத் மரைக்கார்

ஜனாசா அறிவித்தல்முல்லைத்தீவு நீராவிப்பிட்டியை  பிறப்பிடமாகவும், தற்போது புத்தளம் தில்லையடி இஸ்கீமை வாசிப்பிடமாகக் கொண்ட ...
13/08/2025

ஜனாசா அறிவித்தல்

முல்லைத்தீவு நீராவிப்பிட்டியை பிறப்பிடமாகவும், தற்போது புத்தளம் தில்லையடி இஸ்கீமை வாசிப்பிடமாகக் கொண்ட (மர்ஹூம் முகம்மது சாலி) nasurutheen,nasuka தம்பதிகளின் அன்பு புதல்வன் நஜா முகம்மட் இன்று காலமானார். அன்னார் நத்வத், நஜ்முல் கக் ஆகியோரின் அன்பு சகோதரருமாவர்.

அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் இன்று புதன் கிழமை இஷா தொழுகையை தொடர்ந்து YMMA சின்ன பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னார் மீது ஏதும் பாவம்கள் இருப்பின் வல்ல அல்லாஹ் மன்னித்து ஜன்னத்துல் firthous என்ற சொர்க்கத்தை கொடுத்து அவரின் மறுமை வாழ்க்கையினை சொர்க்க பூஞ்சோலையாக மாற்றி வைப்பானாக.

உங்கள் துஆக்களில் சேர்த்து கொள்ளுங்கள். ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

Address

Main Street
Kalpitiya
61360

Telephone

+94713510756

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janaza Announcement - Srilanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram