மன நலமும் ஆலோசனையும்

மன நலமும் ஆலோசனையும் தடை தாண்டி முன்னேறி செல். உன்னை வெல்ல யாரும் இல்லை.

*சரியான சிந்தனை*எம் சிந்தனை எம்மை நகர்த்துகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் நகரும் பாதை அழகானதாக இருக்க வேண்டும்...
14/11/2024

*சரியான சிந்தனை*

எம் சிந்தனை எம்மை நகர்த்துகிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாம் நகரும் பாதை அழகானதாக இருக்க வேண்டும் என்றால் எமக்குள் இருந்து உறுதியான, நம்பகமான, ஆக்கபூர்வமான சிந்தனை உருவாக வேண்டும்.

நாம் ஒரு விடயத்தில் அச்சமோ, சலனமோ இல்லாமல் தைரியமாக முடிவெடுக்க இந்தச் சிந்தனை எமக்கு கட்டாயம் இருக்க வேண்டியுள்ளது. எமது முடிவுகளுக்கு நாம் தான் பொறுப்பாளர்கள்.
மற்றவர்கள் எந்த கருத்தோட்டத்தை எங்களுக்குள் செலுத்த முயன்றாலும்...
எந்த விடயங்களை செய்ய வைக்க எந்த வழிகளில் எங்களை தூண்டினாலும்..
எந்த நேரத்தில் எந்த முடிவை எடுப்பது என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.
இது எம்மிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான ஒரு திறமை.

எமக்கு கிடைக்கும் தகவல்களை அப்படியே நம்பிவிடாமல்,
அவற்றை
ஆராய்ந்து, மதிப்பீடு செய்து,
அனுமானங்களை அடையாளம் காண்டு,
முன்னோக்குகளைக் கருத்தில் கொண்டு
சான்றுகள் மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் தகவலறிந்து
தீர்ப்புகளை வழங்கும் ஆற்றல் எம்மிடம் இருக்க வேண்டும்.

அடிக்கடி மாறிவரும் இந்த உலகில், ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனும், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கும் திறனும் பெற்றவர்களாக நாம் எம்மை மாற்றிக் கொண்டால் எமது தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப அவ்வாறே சமூக வாழ்விலும் மிகப் பெரிய வெற்றியை அடையலாம்.

நாம் ஒவ்வொருவரும் உயர்வான மனிதர்கள் என்பதால் எம்மிடம் நல்ல சிந்தனைத் திறன்கள் இருக்கின்றன.
ஆதலால் எமது ஆக்கபூர்வமான சிந்தனையை முன்வைத்து தைரியமான மனநிலையுடன் பயணிக்கும் நல்ல மனிதர்களாக எங்களை மாற்றிக் கொள்வோம்.
எங்கள் பிள்ளைகளையும் பயனுள்ள சிந்தனைகள் நிறைந்த மனிதர்களாக மாற்றியமைக்க வழிகாட்டுவோம்.

➖😊😊😊😊➖
✍🏼 அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

சில சொல்ல வேண்டிய.. ஆனால் சொல்லமுடியாத...காயங்களாலும் சுமைகளாலும் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் இருந்து போராடுகிறவர்க...
04/11/2024

சில சொல்ல வேண்டிய..
ஆனால்
சொல்லமுடியாத...
காயங்களாலும் சுமைகளாலும்
மூடப்பட்ட கதவுகளுக்குப்
பின்னால் இருந்து போராடுகிறவர்களாக நாம் அனைவரும் இருக்கலாம்.

வாழ்கை என்பது அப்படித்தான்.
எப்போதும் ஒரு சவாலாக
இருப்பது தான் வாழ்க்கை.
மனித வாழ்க்கை அனுபவத்தின் அடிப்படையும் அதுதான்.

வாழ்கை என்பது
என்ன சவால்களை சந்திக்கிறோம்,
என்ன சுமைகளை சுமக்கிறோம்,
என்பது பற்றியதல்ல.

நாம் சந்திக்கும் சவால்களுக்கும்
நாம் அனுபவிக்கும்
சுமைகளுக்கும்
எப்படி முகம் கொடுக்கிறோம்..
அவற்றிலிருந்து வெளிவர
என்ன செய்கிறோம் என்று
சரியாக புரிந்து,
சரியாக உணர்ந்து,
சரியாக முடிவெடுத்து,
சரியாக வாழ்வது பற்றியதாகும்.
➖➖➖➖➖
✍🏼 அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

*திறன்கள்*அன்பர்களே...!நண்பர்களே...!நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்ற நற் பிரார்த்தனையுடன்...?உங...
27/10/2024

*திறன்கள்*

அன்பர்களே...!
நண்பர்களே...!
நீங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்ற நற் பிரார்த்தனையுடன்...?

உங்களிடம் பின்வரும் திறன்கள் உள்ளனவா என்று தயவுசெய்து பரிசீலித்துப் பாருங்கள்.
அவை உங்களிடம் இருப்பதாக நீங்கள் நம்பினால், நீங்கள் உண்மையிலேயே சிறந்தவர். பெறுமதியானவர்.

*1. சிந்திக்கும் திறன்:*
சரி எது, பிழை எது, என்பதை சரியாக பிரித்தறிவது, சவால்களை முறையாக சந்திப்பது பற்றி யோசிப்பது, பல்வேறு கோணங்களில் சிக்கல்களை நோக்குவது,
ஆக்கப்பூர்வமான வழியில் புதிய நுட்பங்களை உருவாக்குவது, பொருத்தமான முடிவுகளை எடுப்பது என்பன இதில் அடங்கும்.

*2. சமூகத் திறன்:*
ஆரோக்கியமான உறவுகளை எவ்வாறு வளர்ப்பது, பயனுள்ள வழிகளில் எவ்வாறு தொடர்புகொள்வது, மற்றவர்களுடன் எவ்வாறு வெற்றிகரமாகப் பழகுவது என்பதை அறிவது இதில் அடங்கும்.

*3. உணர்ச்சித் திறன்:*
உங்களுக்குள் உருவாகும் உணர்ச்சிகளை திறம்பட கையாள்வது, அமைதியை உணர்வது, நீங்கள் யார் என்பதை அறிவது இதில் அடங்கும்.

இந்த மூன்றும் நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டிய மிகவும் முக்கியமான திறன்களாகும்.
இந்த திறன்கள் உங்களிடம் இருந்தால் நீங்கள் மிகவும் பயனும் பெறுமதியும் மிக்கவர்.
இந்த திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நீங்கள் மிகவும் மரியாதையும் பணிவும் கொண்டவர்.
➖➖➖➖
✒️ அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

*நேரம் விலைமதிப்பற்ற நாணயம்.*        ⏰⏰⏰நேரம் தான் நமது வாழ்க்கை. அதில் தான் நாம்  பயணம் செய்கின்றோம்.ஆனால் செய்ய வேண்டி...
25/10/2024

*நேரம் விலைமதிப்பற்ற நாணயம்.*
⏰⏰⏰

நேரம் தான் நமது வாழ்க்கை. அதில் தான் நாம் பயணம் செய்கின்றோம்.
ஆனால் செய்ய வேண்டிய எத்தனையோ வேலைகளை செய்து முடிக்க போதுமான நேரம் கிடைப்பதில்லை என்று சொல்கின்ற பலரை நாம் சந்தித்து இருக்கலாம்.
'தங்கள் நேரத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாமல் இருப்பது தான் அவர்கள் இப்படி சொல்வதற்கான பொதுவான காரணமாக கருதலாம்.
இதில் உள்ள மிகவும் மோசமான விடயம் எதுவென்றால் *'நேரம் இல்லை'* என்று சொல்லிச் சொல்லி காலம் கடத்துவது காலப் போக்கில் ஒரு பழக்கமாக மாறி செய்ய வேண்டிய பல விடயங்களை செய்ய விடாமல் ஆக்கிவிடுவதாகும். இதனால் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய, மிகவும் முக்கியமான பல விடயங்கள் எங்களை அறியாமலே முக்கியத்துவம் அற்றவையாக ஆகிப்போவதை பலர் மரணிக்கும் வரை புரிந்து கொள்வதில்லை.
⏰⏰⏰⏰

✒️அஸ்ஹர் அன்ஸார் FRSPH (UK)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

*நல்ல உறக்கம்*     😴😴😴😴'நல்ல' உறக்கம் என்றால் என்ன?பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு ஏழு முதல் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் உ...
16/10/2024

*நல்ல உறக்கம்*
😴😴😴😴

'நல்ல' உறக்கம் என்றால் என்ன?

பெரியவர்களுக்கு ஒரு இரவுக்கு ஏழு முதல் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் உறக்கம் தேவை என்று அடிக்கடி சொல்லக் கேட்கிறோம்.
ஆனால் நல்ல உறக்கம் என்பது எத்தனை மணிநேரம் உறங்குகிறோம் என்பதைப் போலவே எமது உறக்கத்தின் தரத்தை பொருத்தும் இருக்கிறது. ஒவ்வொரு செயலில் ஒவ்வொரு பொருளில் தரம் இருப்பது போன்று உறக்கம் அதன் தரத்தில் தீர்மானிக்க படுகிறது.

தரமான உறக்கம் அல்லது நல்ல உறக்கத்தின் தன்மை பெரும்பாலான மக்கள் படுக்க ஆரம்பித்து (சுமார் 30 நிமிடங்களுக்குள்) உறக்கம் வருவதில் தொடங்குகிறது.

▪️உறங்கிய பிறகு இடைக்கிடையே எழுந்திருக்காமல் நீண்ட நேரம் உறங்குவது,
▪️ஆரோக்கியமாக விழித்தெழுவது,
▪️விழித்தெழுந்ததும் நல்ல புத்துணர்வை பெறுவது,
▪️அன்றைய நாளுக்கு சுறுசுறுப்புடன் தயாராகுவது
போன்ற எல்லாம் நல்ல உறக்கத்தின் சில முக்கியமான அறிகுறிகளாகும்.

நீங்கள் ஒரு இரவில் குறைந்தது ஏழு மணிநேரம் புத்துணர்ச்சியூட்டும் தூக்கத்தைப் பெறுகிறீர்கள் என்றால் குறிப்பாக பகல் காலங்களில் அதிக தூக்கத்தை அல்லது தூக்க மயக்கத்தை உணரும் நிலையை அனுபவிக்க மாட்டீர்கள். பகல் நேரங்கள் எப்பொழுதும் ஊக்கம் உற்சாகம் கொண்டதாக இருக்கும்.

ஆனால்
▪️நீங்கள் பகல் நேரத்தில் உடல் ரீதியாக சோர்வை உணர்கிறீர்கள் என்றால்....
▪️பகல் நேரங்களில் தூங்க வேண்டும் என்ற உணர்வை அடிக்கடி உணர்கிறீர்கள் என்றால்..
▪️அப்படியே உறங்கினாலும் உங்கள் உறக்கம் புத்துணர்ச்சி தருவதாக இல்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள் என்றால்...
உங்கள் இரவுறக்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஒழுங்கீனங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம்.

இங்கு குறிப்பிட்டது போன்ற ஏதேனும் சிக்கல்களை நீங்கள் அனுபவிப்பதாக இருந்தால் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை நாடி தகுந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்வது நல்லது என்பதை கரிசனையுடன் கருத்தில் நினைவுபடுத்துகிறோம்.
➖➖➖➖

✒️ *அஸ்ஹர் அன்ஸார்*
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்

06/09/2024

எம்மை நகர்த்துவோம் ஆம்..! எம்மை முன்னோக்கி நகர்த்துவது எப்படி? அல்லது இலக்கை அடைவது எப்படி? அது ஒன்றும் பெரிய வி.....

06/09/2024

மற்றவர் மகிழ்ச்சியில் நான்….? ▪மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா? ▪மற்றவருக்கு ஒ.....

06/09/2024

எங்கள் மீதான அன்பு நம்மில் சிலர் அன்புக்காக ஏங்குகிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு உறவுகள் இல்லை என்று கவலை....

06/09/2024

இளம்பருவ மன ஆரோக்கியம் இளம்பருவம் என்பது 10 முதல் 19 வயது வரையிலான பிள்ளை பருவத்திற்கும் முதிர்வயதுக்கும் இடைப்....

09/08/2024

மற்றவர் மகிழ்ச்சியில் நான்….? ▪️மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா? ▪️மற்றவருக்கு...

19/02/2024

Address

Kandy
11144

Alerts

Be the first to know and let us send you an email when மன நலமும் ஆலோசனையும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to மன நலமும் ஆலோசனையும்:

Share