Blood Donor's Federation, Kattankudy

Blood Donor's Federation, Kattankudy காத்தான்குடி தள வைத்தியசாலையின், குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

🩸 காத்தான்குடியில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு 🩸 - எம், ஏ.சீ.எம்.ஜெலீஸ் -சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி...
23/06/2025

🩸 காத்தான்குடியில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பு 🩸

- எம், ஏ.சீ.எம்.ஜெலீஸ் -

சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தையொட்டி (ஜுன் 14) காத்தான்குடி தள வித்தியாசாலை மற்றும் குருதிக் கொடையாளர்கள் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் குருதிக் கொடையாளர்கள் கௌரவிப்பும், இரத்தான முகாமும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி தள வித்தியாசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி விசேட வைத்திய நிபுணர் திருமதி நிஷாந்தினி திஷாந்தன் மற்றும் விசேட அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மஹ்ஜுத், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் ராசாரட்னம், காத்தான்குடி இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் அலிமா றகுமான், டாக்டர் நித்யா, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸ்ருத்தீன் குருதிக் கொடையாளர் சம்மேள பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

2004ம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற 58வது உலக சுகாதார மாநாட்டில் தன்னார்வ இரத்த தானத்தின் பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் கருதி குருதிக் கொடை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் குருதிக் கொடை வழங்குவோரை கெளரவிக்கவும் உலக சுகாதார நிறுவனம் சர்வதேச குருதிக் கொடையாளர்கள் தினத்தினை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14ம் திகதியை கொண்டாடி வருகின்றது.

இத்தினமானது ஏ பீ ஓ இரத்தக் குழு அமைப்பை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞாணி கார்ல் லாண்டஸ் டெய்னெரின் பிறந்த நாளாக அமைவதும் சிறப்பம்சமாகும்.

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை முன்வைத்து குருதிக் கொடையை ஊக்குவித்து வருகின்றது. இந்த ஆண்டு "இரத்தம் வழங்குவோம், நம்பிக்கை கொடுப்போம், உயிர் காக்க ஒன்றினைவோம்" எனும் தொனிப் பொருளில் குருதிக் கொடையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு தேவையான 100 வீதம் பாதுகாப்பான குருதி தேசிய இரத்தவங்கி ஊடாக வழங்கப்படுகின்றது. ஆசியாவிலேயே சிறந்த இரத்த வங்கிச் சேவை இடம் பெறும் நாடு என்ற பெருமையையும் இலங்கை பெற்றுள்ளது.

உலகளவில் வெறும் 70 நாடுகளில் மாத்திரமே இத்தகைய சேவை இடம் பெறுகின்றது.

அறிவியல் வளர்ச்சியில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மனிதனால் இன்று வரை செயற்கையாக குருதியை உருவாக்க முடியவில்லை அதனால் இதை ஒருவர் உடலில் இருந்து எடுத்து மற்றவர்கநக்கு பயன்படுத்த வேண்டியுள்ளதால் குருதிக் கொடை முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகைபில் காத்தான்குடி குருதிக்கொடையாளர் சம்மேளனம் 8 தடவை அல்லது அதற்கு மேல் இரத்த தானம் வழங்கிய ஆண்களும், 4 அல்லது அதற்கு மேல் உதிரம் வழங்கிய பெண் குருதிக் கொடையாளர்களினதும், ஏற்பாட்டு நிறுவனங்களினதும் உன்னத பணியை பாராட்டி தேசிய குதிக் கொடையாளர் தினத்தில் அவர்களை கெளரவித்து நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தது.

இலங்கையில் 3 இலட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

🩸 குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் குருதிக்கொடையாளர் கௌரவிப்பும் இரத்ததான முகாம் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்...
14/06/2025

🩸 குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் குருதிக்கொடையாளர் கௌரவிப்பும் இரத்ததான முகாம் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

🩸 🩸 🩸 காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு இன்று (...
28/04/2025

🩸 🩸 🩸 காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு இன்று (28) திங்கட்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காத்தான்குடி குருதிக் கொடையாளர் சம்மேளனத்தின் செயலாளர் றிபாய் கலீல் இரத்த தானம் செய்வதன் அவசியம் பற்றியும் இதற்காக அரசாங்க உத்தியோகத்தர்களின் பங்களிப்பு பற்றியும் விளக்கி கூறியதுடன் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் நடாத்தும் ஒழுங்கு பற்றியும் கூறினார்.

இந்த நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சில்மியா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

🩸 🩸 🩸 காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளனமும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்.
28/04/2025

🩸 🩸 🩸 காத்தான்குடி பிரதேச செயலகமும் காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளனமும் இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்.

காத்தான்குடி பிரதேச செயலாளரை BDF நிருவாகக் குழு சந்தித்ததுகாத்தான்குடி பிரதேச செயலாளரை காத்தான்குடி தள வைத்தியசாலையின் க...
08/04/2025

காத்தான்குடி பிரதேச செயலாளரை BDF நிருவாகக் குழு சந்தித்தது

காத்தான்குடி பிரதேச செயலாளரை காத்தான்குடி தள வைத்தியசாலையின் குருதிக் கொடையாளர் சம்மேளன (BDF) நிருவாக பிரதிநிதிகள் நேற்று (07) திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில், குருதிக் கொடையாளர் சம்மேளனம் (BDF) அமைப்பின் உருவாக்கம், அதன் நோக்கம் தொடர்பான அறிமுகத்தையும், எதிர்கால செயற்பாட்டு விரிவாக்கம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டதோடு, BDF தொடர்பான இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ் வருடம் இரண்டாயிரம் குருதி கொடையாளர்களிடம் குருதிகளை பெற்றுக் கொள்வது விடயமாக கலந்துரையாடப்பட்டதுடன் கடந்த காலங்களில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் இரத்ததான பங்களிப்புக்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது சமூக சேவை உத்தியோகத்தர் உட்பட BDF உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு 18.03....
19/03/2025

காத்தான்குடி தள வைத்தியசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்த இப்தார் நிகழ்வு 18.03.2025 செவ்வாய்க்கிழமை தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.

வைத்தியசாலையின் ஊழியர்கள், ஊர்ப் பிரமுகர்கள், இராணுவ, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காத்தான்குடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி போன்றோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் விசேட அழைப்பின் பேரில் காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

🩸 ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு, குருதி கொடையாளர் சம்மேளனத்தின் பாராட்டு🩸 காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பினை காத்தான்குட...
08/02/2025

🩸 ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு, குருதி கொடையாளர் சம்மேளனத்தின் பாராட்டு🩸

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பினை காத்தான்குடி குருதிக் கொடையாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் நேற்று (08) சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பானது ஜனாஸா நலன்புரி அமைப்பின் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் அண்மையில் ஜனாஸா நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வினை சிறப்பாக நிகழ்த்தி முடித்தமைக்காக குருதி கொடையாளர் சம்மேளனத்தினால் நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டதுடன் எதிர்காலத்திலும் இவ்வாரான செயற்பாடுகளை மேற்கொள்வதனால் காத்தான்குடி தள வைத்தியசாலையின் பெளதீக அபிவிருத்திகளை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பது தொடர்பிலும், ஜனாஸா நலன்புரி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களுக்கு அமைப்பின் உறுப்பினர்களின் அயராத அர்பணிப்புமிக்க பங்களிப்புக்கள் பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மேலும் பல்வேறுபட்ட விடயங்களும் பேசப்பட்டது.

இதன் போது ஜனாஸா நலன்புரி அமைப்பினால் வருடாந்தம் மூன்று இரத்ததான முகாம்களை நடாத்த தீர்மானித்து இருப்பதாகவும் கூறப்பட்டது,

இதற்காக ஜனாஸா நலன்புரி அமைப்பினருக்கு குருதி கொடையாளர் சம்மேளனத்தினால் வாழ்த்துக்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டதோடு தங்களது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடி சம்மேளனத்துடன் குருதி கொடையாளர் சம்மேளனம்  சந்திப்புகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன...
02/02/2025

காத்தான்குடி சம்மேளனத்துடன் குருதி கொடையாளர் சம்மேளனம் சந்திப்பு

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினை காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளன பிரதிநிதிகள் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை சம்மேளன கேட்போர் கூடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம். தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் சம்மேளன நிருவாக உறுப்பினர்கள் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் அலீமா ரகுமான் உட்பட குருதி கொடையாளர் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலைகளில் ஏற்படும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யபட்டு இடம்பெறுகின்ற இரத்த தான முகாம்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் காத்தான்குடி இரத்த வங்கியின் தேசிய ரீதியிலான பங்களிப்புக்கள், இரத்த வங்கியின் ஊடாக வைத்தியசாலையின் பெளதீக அபிவிடுத்தி , ஆளன பற்றக்குறை என்பன பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

2025 ஆம் ஆண்டு குருதி கொடையாளர் சம்மேளனத்தின் செயற்பாடுகளை விரிவு படுத்தி வினைத்திரன் மிக்கதான செயற்பாடுகளுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாக இக் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முதலாவது இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26/01/2025)   புதியகா...
26/01/2025

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முதலாவது இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26/01/2025) புதியகாத்தான்குடி பதுரிய்யா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது .

காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளனத்தின் தலைவரும் காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரியுமான வைத்தியர் அலிமா ரஹ்மான் அவர்களின் தலமையில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் சுமார் 207 பேர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்திருந்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் இரத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர், இதன் போது இரத்ததானம் செய்த குருதி கொடையாளர்களுக்கு
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பினால் நினைவுச் சின்னமும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை ஜனாஸா நலன்புரி அமைப்பு மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கும் இவர்களோடு பாடுபட்ட உறுப்பினர்களுக்கும், வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், அதன் ஊழியர்கள், குருதித் தானம் செய்த பொது மக்கள் அனைவருக்கும் குருதிக் கொடையாளர் சம்மேளனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
BDF,
kky

🩸 வருடத்தை வெற்றிகரமாக ஆரம்பித்த காத்தான்குடி குருதிக் கொடையாளர் சம்மேளனம்🩸  காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பா...
26/01/2025

🩸 வருடத்தை வெற்றிகரமாக ஆரம்பித்த காத்தான்குடி குருதிக் கொடையாளர் சம்மேளனம்🩸

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முதலாவது இரத்ததான முகாம் இன்று (26) ஞாயிற்றுக் கிழமை காலை 08.30 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை, காத்தான்குடி 01, பதுரிய்யா ஜும்மா பள்ளிவாயலில் நடைபெற்றது .

காத்தான்குடி தள வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் அலிமா ரஹ்மான் மேற்பார்வையில் இடம் பெற்ற இவ் இரத்ததான முகாமில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டு இம் மனிதம் காக்கும் மனிதநேய பணியில் இணைந்து இரத்தத்தை தானம் செய்தனர்.

காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் நாளுக்கு நாள் இரத்த தேவைகள் ஏற்படுவதால் அதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க து.

இன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட (207) இரத்த கொடையாளர்கள் இரத்த தானம் வழங்கியிருந்தமை சிறப்பம்சமாகும்.

எமது 'காத்தான்குடி குருதிக்கொடையாளர் சம்மேளனம்' இதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் செய்திருந்த நிலையில், இவ்வாண்டை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி இரத்த வங்கிக்கு கடந்த ஆண்டு 1512 Pint  குருதி தானம்எமது காத்தான்குடி குருதி  கொடையாளர்கள் சம்மேளனத்திற்கும்...
22/01/2025

காத்தான்குடி இரத்த வங்கிக்கு கடந்த ஆண்டு 1512 Pint குருதி தானம்

எமது காத்தான்குடி குருதி கொடையாளர்கள் சம்மேளனத்திற்கும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான குருதி மாற்றும் நிபுணர் டாக்டர் நிஷாந்தினி டிஸ்காந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் காத்தான்குடி தள வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

குருதிக்கொடையாளர் சம்மேளனத்தின் தலைவரும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியர் திருமதி அலிமா ரகுமான் தலைமையில் இடம்பெற்ற இக்காலந்துரையாடலில் இரத்ததான முகாம்களை ஒழுங்குபடுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கடந்த 2024 ஆம் ஆண்டு குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்போடு சேகரிக்கப்பட்ட மொத்த குருதி 1512 pint என்பதோடு 124 pint காத்தான்குடி தள வைத்தியசாலையால் பாவிக்கப்பட்டுள்ளமையும் மிகுதியான அனைத்துக் குருதிகளும் தேசிய கட்டமைப்புக்கு காத்தான்குடி இரத்த வங்கியின் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டதுடன் இவ்வாண்டு 2025 ல் 2000 pint வரையான குருதிகளை சேகரிக்க குருதிக்கொடையாளர்கள் சம்மேளனத்தினால் திட்ட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளாக காணப்படும் படுக்கைகள் மற்றும் குருதி அழுத்த சோதனை உபகரணங்கள் என்பன இரத்த வங்கிக்கு குறைபாடாக இருப்பதும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட கன்சல்டன் அவர்கள் அவசரமாக இதற்கு தேவையாக இருக்கின்ற ஆறு படுக்கைகளையும் ஏனைய உபகரணங்களையும் பெற்று தருவதற்கு தன்னாலான முயற்சிகளை வழங்குவதாக உத்தரவாதமளித்ததோடு காத்தான்குடி குருதி வங்கிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போதாமைக்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் டாக்டர் எம் எஸ்.எம். ஜாபிர், மட்டக்களப்பு இரத்த வங்கியின் பொதுச் சுகாதார பரிசோதகர் எம். பைசல் ,தாதி உத்தியோகத்தர் திரு ஜெயராஜ், காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் நித்யானந்தி, தாதிஉத்தியோகத்தர் ஜனனி மற்றும் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் திரு மகேஸ்வரன், காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளன செயலாளர் றிபாய் கலீல் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு இரத்த வங்கி பிரதிநிகளுடன் காத்தான்குடி  குருதிக் கொடையாளார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்...
22/01/2025

மட்டக்களப்பு இரத்த வங்கி பிரதிநிகளுடன் காத்தான்குடி குருதிக் கொடையாளார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு.

காத்தான்குடி குருதி கொடையாளர்கள் சம்மேளனத்திற்கும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான குருதி மாற்றும் நிபுணர் டாக்டர் நிஷாந்தினி திசாந்தனுக்கும் இடையிலான கலந்துரையாடல் காத்தான்குடி தள வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நேற்று (21) செவ்வாய்க் கிழமை காலை இடம்பெற்றது.

குருதிக்கொடையாளர் சம்மேளனத்தின் தலைவரும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்தியருமா திருமதி அலிமா ரகுமான் தலைமையில் இடம்பெற்ற இக்காலந்துரையாடலில் இரத்ததான முகாம்களை ஒழுங்குபடுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் கடந்த 2024 ஆம் ஆண்டு குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்போடு சேகரிக்கப்பட்ட மொத்த குருதி 1512 pint என்பதிலிருந்து சுமார் 124 pint களை மாத்திரமே காத்தான்குடி தள வைத்தியசாலையால் பாவிக்கப்பட்டுள்ளமையும் மிகுதியான அனைத்துக் குருதிகளும் தேசிய கட்டமைப்புக்கு காத்தான்குடி இரத்த வங்கியின் பங்களிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்பதையும் தெளிவு படுத்தப்பட்டதுடன் இவ்வாண்டு 2025 ல் 2000 pint வரையான குருதிகளை சேகரிக்க குருதிக்கொடையாளர்கள் சம்மேளனத்தினால் திட்ட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளாக காணப்படும் படுக்கைகள் மற்றும் குருதி அழுத்த சோதனை உபகரணங்கள் என்பன இரத்த வங்கிக்கு குறைபாடாக இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்டப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட கன்சல்டன் அவர்கள் அவசரமாக இதற்கு தேவையாக இருக்கின்ற ஆறு படுக்கைகளையும் ஏனைய உபகரணங்களையும் பெற்று தருவதற்கு தன்னாலான முயற்சிகளை வழங்குவதாக உத்தரவாதமளித்ததோடு காத்தான்குடி குருதி வங்கிக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் போதாமைக்கு எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் உறுதியளித்தார்.
அத்தோடு பல்வேறு தீர்மானங்களும் எட்டப்பட்டன,
இச்சந்திப்பில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் டாக்டர் எம் எஸ்.எம். ஜாபிர், மட்டக்களப்பு இரத்த வங்கியின் பொதுச் சுகாதார பரிசோதகர் எம். பைசல் ,தாதி உத்தியோகத்தர் திரு ஜெயராஜ், காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர் நித்யானந்தி, தாதி உத்தியோகத்தர் ஜனனி மற்றும் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் திரு மகேஸ்வரன், காத்தான்குடி குருதி கொடையாளர் சம்மேளனத்தின் செயலாளர் றிபாய் கலீல் உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Address

Beach Road
Kattankudi
30100

Telephone

+94777916201

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blood Donor's Federation, Kattankudy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category