Diet for Life

Diet for Life உடல் நிறைக் குறைப்பு, உடல் நிறை அதிகரிப்பு உணவுச் சிகிச்சை கிளினிக்

Diet for Life is your trusted partner in healthy weight management and personalised nutrition. Based in Sri Lanka, we proudly support clients worldwide through consultations in English and Tamil. We design individual diet plans for weight loss, fitness goals, and health conditions such as diabetes, high blood pressure, heart disease, kidney disorders, and digestive issues (IBS, gastritis, GERD, ulcers, etc.). We also provide tailored nutrition guidance for bodybuilders, fitness enthusiasts, and for different life stages including pregnancy, lactation, infancy, and elderly care.

🌍 Wherever you are, our mission is to help you achieve a healthier, sustainable lifestyle through science-based diet and nutrition.

நோன்பு மாதம் ஒரு அற்புதம் ... வீட்டிலும், சுற்றத்திலும், பள்ளியிலும் ஏன் முழு ஊரிலும் ஒரே பரபரப்பு. அனைவரின் மனதிலும் ஏத...
24/02/2026

நோன்பு மாதம் ஒரு அற்புதம் ... வீட்டிலும், சுற்றத்திலும், பள்ளியிலும் ஏன் முழு ஊரிலும் ஒரே பரபரப்பு. அனைவரின் மனதிலும் ஏதோ ஒரு சந்தோசம்.. எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் இந்த சந்தோசம் அடாது மனதில் ஒட்டிக் கொண்டு தான் இருக்கும். நோன்பு வந்து விட்டாலே, எடையைக் குறைப்பதற்கு ஆலோசனை பெறுபவர்களும் மிக அதிகம், அதனால் எனது நாட்களும் அசைவதற்கு நேரமின்றி கடந்து விடுவதுண்டு. ஒவ்வொரு வருடமும் இதே நிலைமை தான் என்றாலும் இந்த முறை ஆலோசனை வழங்கும் போது ஒரு விடயம் எனது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது, இந்த விடயம் குறித்து கட்டாயம் பதிவிட வேண்டும் என்றும் தோன்றியது, அது தான் ஷஹர் நேர சாப்பாடு...

நோன்பு கால ஆலோசனையின் போது நான் எப்போதும் கேட்கின்ற ஒரு கேள்வி "நீங்க வழமையா சஹருக்கு என்ன சாப்பிடுற?" ....
இந்தக் கேள்விக்கு பெரும்பாலானோர் அளிக்கும் பதில்...
"ஷஹர்ல சாப்பிட ஏலா சேர்... பெரும்பாலும் பனிஸ் உம் டீயும் (Bun & Tea) அல்லது பிளேன்டியோட ஏதாவது பேக்கரி ஐட்டம் மட்டும் தான் சாப்பிடுற".. இந்தப் பதில் அனேகமானோரிடம் இருந்து கிடைக்கப் பெற்றது தான் எனக்கு ஆச்சரியம்

சரி...... இந்தப் பழக்கம் சரியா? தவறா என்பதை சிறிது ஆராய்ந்து பார்ப்போமா?

- பேக்கரிகளில் பயன்படுத்தப்படுகின்ற கோதுமை மா (Refined Wheat flour) விரைவில் செமித்து விடும்... பால் தேனீர் ஒரு நல்ல தூண்டலை தந்தாலும் அது நீண்ட நேரத்திற்கு சக்தியை உடலுக்கு விநியோகிப்பதில்லை ... இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது இரத்தத்தில் விரைவாக சீனி அதிகரிக்கின்ற போதும் சில மணித்தியாலங்களின் பின் சீனியின் அளவு படிப்படியாகக் குறைய மத்தியானம் ஆகும் போது சோர்வு, இப்தாரை நெருங்கும் போது கடும் பசி, சிலருக்கு தலைவலி கூட ஏற்படலாம்.

தேயிலை (Plain tea), கோப்பி (Black coffee), டீ (Milk Tea), பால் கோப்பி (Milk Coffee) போன்றன கோதுமை மா உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடுவது, சில வேளை இப்தாரில் மிஞ்சிய சோட் ஈட்ஸ்கள்/ பொரித்த உணவுகளை மேலதிகமாக இவற்றுடன் சேர்த்துக் கொள்ளுவது, இவற்றை சாப்பிட்டு சஹர் செய்த பின்பு தூங்குவது போன்ற காரணங்களினால் நெஞ்செரிச்சல், சாப்பாடு செமிக்காத மாதிரி தோன்றுதல், வயிறு ஊதுதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம். ஏற்கனவே கெஸ்ட்ரைடிஸ் / அல்சரினால் பாதிக்கப்ட்டவர்களுக்கும்
தூக்கமின்மை, அதிக மன உளைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் போதும் இவ்வுணவுகளால் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புண்டு.

நான் இதைத்தானே சாப்பிடுகிறேன்? எனக்கு ஒரு பிரச்சினையும் ஏற்பட்டதில்லையே? என்று நீங்கள் சொன்னால்... இந்தக் கேள்விக்கு நாம் இரண்டு வழியில் பதில் தரலாம். ஒன்று -அறிகுறிகள் இல்லையென்றால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல, சில மாற்றங்கள் படிப்படியானவை. இரண்டாவது - இது மருத்துவ ரீதியில் ஒரு சமநிலையான உணவு இல்லை, சமநிலை உணவுகளை உட்கொள்வதே நமது ஆரோக்கியத்திற்கு சிறந்தது ஆகும்

சரி... அப்படியானால் ஷஹருக்கு நாம் எவ்வாறு சாப்பிட வேண்டும்?

ஷஹர் உணவுகளில் சரியான காபோவைதரேற்றுக்கள் (சோறு, பிட்டு, இடியப்பம் போன்ற மாப்பொருள் உணவுகள்) சரியான அளவில் எடுப்பதோடு அதிக மரக்கறிகளையும் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். புரத உணவுகள் (மீன், முட்டை, கோழி, இறைச்சி, கருவாடு, பருப்பு, சோயா) வழமையை விட சற்று அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. இவ்வாறு எடுக்கும் போது இரத்தத்தில் சீனி சீராக பேணப்படுவதோடு நன்கு சாப்பிட்ட திருப்தியும் ஏற்படுகின்றது. அத்தோடு போதுமான அளவு நீர் அருந்துவது மிக மிக அவசியமாகும். மேலும் ஒரு டீ / தயிர் / யோகட் சேர்த்துக் கொள்வதிலும் பிரச்சினை இல்லை.

ஒவ்வொரு உடலும் தனித்துவமானது. சில பழக்கங்கள் நமக்கு தற்போது பிரச்சினையை தராவிட்டாலும் பிழையான உணவு முறைகள் பின்னாளில் பிரச்சினையை தரவாய்ப்புள்ளது. எனவே எப்போதும் ஆரோக்கியமான சமநிலை உணவுகளில் கவனம் செலுத்துவோம். இது எமது உடலை ஆரோக்கியமாக வைத்திடவும், சோர்வைக் குறைத்து நோன்பை நோற்றிடவும் உதவி செய்யும்

சஹரைப் பற்றி கதைத்து விட்டோம். அடுத்த பதிவில் இப்தாரைப் பற்றி கதைப்போம். உங்கள் கருத்துக்கள் என்ன... Comment இல் பதிவிடுங்கள்.
Share செய்வது நோன்பில் பலருக்கும் உதவியாக இருக்கும், எனவே Share செய்து விடுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist



நோன்பு காலம் வந்ததும் பலரும்  என்னிடம் கேட்கும் கேள்வி  "நோன்பு காலத்தில் டயட்டில் இருக்கலாமா?" ..... சிலர் தாங்களாகவே ம...
11/02/2026

நோன்பு காலம் வந்ததும் பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி "நோன்பு காலத்தில் டயட்டில் இருக்கலாமா?" ..... சிலர் தாங்களாகவே முடிவு எடுத்து விட்டு "நோன்பு முடியட்டும், நான் டயட்டை ஆரம்பிக்கிறேன்" என்று முடித்து விடுவார்கள்.. இன்னொரு பக்கம் "நோன்பு காலத்தில் எடையைக் குறைக்க முடியும் என்று நாம் சொல்லி விட்டால்.." ... பாரேன் இவன் மார்க்கத்தில் விளையாடுகிறான் என்று திட்டுபவர்களும் உண்டு ..

சரி... முதலில் நாம் நோன்பு காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உளச்சுத்தியோடு ஒரு முறை யோசித்துப் பார்ப்போம். இன்று இப்தார் என்பது ஒரு போட்டியாய் மாறிப் போய் விட்டதாக தோன்றுகின்றது அல்லவா?.... 29 நோன்புகள் - 29 இப்தார் அழைப்புகள்.. "அவர்ட இப்தார்ல நைட் சாப்பாடு பிரியாணியாம்", "அங்க இறைச்சி கறியும் இடியப்பமும்" என்று உச்சு கொட்டிக் கொண்டு பேசுகிறோம், சில வேளை பெருமிதமும் கொள்கிறோம். இப்தார் தட்டு பெரிதாகும் போது இப்தாரும் தரமாகின்றது? அப்படித்தானே. சரி இதுவா நாம் பின்பற்றுகின்ற நபி வழி?, இறைத்தூதர் ﷺ இவ்வாறா நமக்கு வழிகாட்டினார்கள்?

ரமளான் எமக்கு ஒழுக்கத்தையும், எளிமையையும், சுய கட்டுப்பாட்டையும் கற்றுத் தருகின்றது. கண்மணி நாயகம் ﷺ அவர்கள் அளவோடு சாப்பிட்டார்கள், அளவோடு சாப்பிடுவதையே வலியுறுத்தினார்கள். நபி ﷺ அவர்களின் எளிமையான சாப்பாட்டுப் பழக்கங்களை காட்ட பல ஹதீஸ்களை குறிப்பிட முடியும் எனினும் கீழ்வரும் ஹதீஸ் மிகவும் பொருத்தமானது என நினைக்கிறேன்.

"ஆதமின் மகன் நிரப்பும் பாத்திரங்களில்
அவனது வயிற்றைவிட மோசமான பாத்திரம் எதுவுமில்லை.
ஆதம் மகனுக்கு அவனது முதுகை நேராக வைத்திருக்க
சில கவளங்கள் போதுமானவை.
அதுவும் அவசியமானால்,
மூன்றில் ஒரு பங்கு உணவிற்கும்,
மூன்றில் ஒரு பங்கு குடிப்பதற்கும்,
மூன்றில் ஒரு பங்கு சுவாசத்திற்கும்.”

ஜாமிஉத்-திர்மிதி (ஹதீஸ் 2380)

நோன்பைப் பொறுத்த வரை பெரும்பாலும் நாம் உள சுத்தியோடு தான் நோற்கிறோம், அதில் சந்தேகமில்லை. ஆனால் இப்தாரின் போது கழுத்து வரை சாப்பிடுகிறோம். கழுத்து வரை சாப்பிடுவது நிச்சயமாக நபியவர்களின் சுன்னாஹ் இல்லை அல்லவா?, மேற்கூறிப்பட்ட ஹதீஸ் இதை தெளிவாக விளக்குகின்றது இல்லையா?.

ஷுஹூர், இப்தார் இரண்டு வேளையிலும் எளிமையான ஆரோக்கியமான உணவுகளை அளவோடு சாப்பிடுவதே நபியவர்களின் சுன்னா. டயட்டில் இருக்கும் போதும் நாம் இதைத்தான் கற்பிக்கின்றோம். எனவே நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட ரமளானுக்குரிய டயட் என்பது சுன்னாவோடு ஒத்தியங்கி நோன்பினைப் பூரணப்படுத்த உதவுகின்றது. தெளிவாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் எடை குறைப்பதற்காக நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள் என்று நாங்கள் ஒரு போதும் சொல்வதில்லை. நபி (ஸல்) வழியில் உணவைத் தெரிவு செய்யுங்கள், அந்த வழியில் நோன்பை நோற்றுக் கொள்ளுங்கள். அது சுன்னாவை சரியாகப் பின்பற்ற உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்க உதவும் —அதில் எடை குறைவும் அடங்கும் என்பதையே சொல்கிறோம்

ரமளான் காலத்தில் டயட்டில் இருப்பது தவறா?
அனேகமானோர் கேட்கப் பயப்படும் இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

இங்கு டயட் என்பது நமது ஸுன்னாவை முறையாகப் பின்பற்றவே உதவுகிறது, இது ஆரோக்கியத்தைப் பேணவும் அத்திவாரமாய் அமைகிறது.
எனவே, ரமலான் காரணமாக நமது ஆரோக்கியப் பயணத்தை தள்ளி வைக்காமல், ரமலானின் மேன்மையையும் பாதிக்காமல்
சரியான உணவுகளைத் தெரிவு செய்து இந்த சங்கைமிக்க ரமளானில் நமது ஆரோக்கியத்தையும் பேணிட முயற்சி செய்வோம்

நமது சமூகத்தில் வளர்ந்து வரும் இந்த இப்தார் முறை உண்மையில் ஆரோக்கியமானது என்று நீங்கள் நினனக்கிறீர்களா?. உங்கள் கருத்துக்களை தவறாமல் Comment இல் குறிப்பிடுங்கள். இதை Share பண்ண மறந்து விடாதீர்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

Behind every plan is a person who listens, understands, and guides.M.S. Shamil FowzathClinical Nutritionist
09/02/2026

Behind every plan is a person who listens, understands, and guides.

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

அன்று செவ்வாய்க்கிழமை, மெடிக்கல் கிளினிக் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சில நோயாளிகள் எப்போது தமது பெயரைக் கூப்பிடுவ...
08/02/2026

அன்று செவ்வாய்க்கிழமை, மெடிக்கல் கிளினிக் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. சில நோயாளிகள் எப்போது தமது பெயரைக் கூப்பிடுவர் என்ற எதிர்பார்ப்பிலும் சிலர் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக முண்டியடித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு குரல்.. ஐயா, உங்களிடம் கொஞ்சம் கதைக்கலாமா என்று கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் சிறிது தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார். வாங்கள் வந்து உட்காருங்கள் கதைக்கலாம் என்றேன்.

சற்று கமுக்கமான சிரிப்புடனும் சின்னத் தயக்கத்துடனும் "ஐயா, எனக்கு சீனி வருத்தம் இருக்கின்றது... நான் மயிருக்கிழங்கு (மரவள்ளி / மஞ்ஞொக்கா) சாப்பிடலாமா? என்று கேட்டுத் தொடர்ந்தார். நான் தோட்டம் செய்பவன் ... எனது தோட்டத்தில் மயிருக்கிழங்கை நட்டிருக்கிறேன், இது அறுவடை காலப்பகுதி ... மரவள்ளிக் கிழங்கை பிடிங்கி தோட்டத்திலேயே அவித்து அப்பவே செய்தெடுத்த தேங்காய்ச் சம்பலுடன் சேர்த்துச் சாப்பிடுவதில் இருக்கும் சுகம்!! என்று அவர் சொல்லும் போது அவர் முகத்தில் இருந்த அளவிட முடியாத மகிழ்ச்சியை என்னால் அவதானிக்க முடிந்தது.

அவர் அவ்வாறு சொல்லும் போது எனக்கும் எனது சிறிது வயது ஞாபகங்கள் வந்து மனதைத் தொட்டுச் செல்ல என் முகமும் பிரகாசம் அடைந்தது. சிறு வயதில் இதே கதையை எனது வீட்டில் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.. நல்ல மரவள்ளிக்கிழங்குடன் தேங்காய் சம்பலும் சேர்த்து சாப்பிட்ட அனுபவம் எனக்கும் உண்டு... அதன் ருசி இன்னும் மனதில் உள்ளது.

இப்போது அவரது கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்... உண்மையை சொல்லப் போனால் சீனி வருத்தம் இருக்கும் போது மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது நல்லமில்லை என அவரும் அறிந்திருந்தார். இருந்தாலும் அவரது ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் தான் அவர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார்.
எனினும் அவருக்கு பதிலளிக்க முன் நான் சில கேள்விகளைக் கேட்டேன்

இன்று காலை என்ன சாப்பிட்டீர்கள்?
மயிருக்கிழங்கும் தேங்காய்ச் சம்பலும் என்று சொன்னார் அசடு வழிய.
நானும் சிரித்தவாறு சரி..... வீட்டில் சாப்பிட வேறு என்ன இருந்தது என்று கேட்க,
நேற்று சமைத்த முருங்கெலைச் சுண்டல் இருந்தது என்றார்.
முருங்கெலைச் சுண்டல் நல்லம் தானே ஏன் அதைச் சாப்பிடவில்லை?
வீட்டில் கீரை வகைகள், மரக்கறிகள் டெய்லி சமைப்பீர்களா? என்று கேட்டேன்.
எனக்கு மரக்கறி நல்ல விருப்பம் அதிலயும் கீரைச் சுண்டல் நல்ல விருப்பம்...
அனேகமா... ஒவ்வொரு நாளும் சமைப்பம் என்றார்.

சரி நீங்கள் மயிருக்கிழங்கு சாப்பிடலாம்...
ஆனால் நான் சொல்வது போன்று சாப்பிடுங்கள்....
மயிருக்கிழங்கை தேங்காய்ச் சம்பலுடன் சாப்பிடும் போது வீட்டில் இருக்கும் சிறிதளவு சுண்டலையும் சேர்த்துச் சாப்பிடுங்கள்..
எது சுவையில் நன்றாக இருக்கிறது என்று
அடுத்த முறை வரும் போது கட்டாயம் வந்து சொல்லுங்கள் என்றேன்.

ஒரு மாதம் கடந்து அடுத்த கிளினிக்கிற்காக வைத்தியசாலை வந்தவர்
என்னை சந்திக்க வந்திருந்தார்.. அவர் முகத்தில் சந்தோசம் இருந்தது ...
என்ன நடந்தது என்று கேட்டேன்.
நீங்கள் சொன்னபடி தான் சாப்பிட்டேன்......
உண்மையிலேயே நல்ல டேஸ்டாக இருந்தது...
முன்பு 2 - 3 கிழங்குகள் சாப்பிடுவேன், ஆனால் இப்போது ஒரு கிழங்கு சாப்பிடும் போதே வயிறும் நிரம்பி விடுகிறது, மனசும் நிரம்பி விடுகிறது என்றார்..
நீங்க இதே மாதிரி சாப்பிட்டா சீனி வருத்தத்த யோசிக்கத் தேவையில்லை என்று மேலும் சில அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வைத்தேன்.

வைத்தியசாலையில் உணவு பற்றிய அறிவுரைகளை பொதுவாக யாரும் கேட்க விரும்புவதில்லை. நாம் விரும்புவதை சாப்பிட மறுத்து விடுவார்கள் என்ற பயம் தான் இதற்குக் காரணம். எனினும் அவரவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களையும் அவர்களின் சூழ்நிலைகளையும் கருத்திற் கொண்டு ஆலோசனைகளை வழங்கும் போது நோயைக் கட்டுப்படுத்த முடிவதோடு உணவின் மூலம் கிடைக்கும் சந்தோசத்தையும் உறுதிப்படுத்த முடியும் என்பதற்கு இந்தக் கதை நல்ல உதாரணம்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!... உங்களுக்கு சீனி வருத்தம் இருந்தால் உணவுக் கட்டுப்பாடு என்பது மிக மிக அவசியம். இது நீங்கள் எடுக்கும் குளிசையின் அளவைக் குறைக்கவும், சீனி வருத்தத்திலிருந்து அடுத்தடுத்த நோய்கள் வராமல் தடுக்கவும் நிச்சயம் உதவும். இதற்கு சரியான வழிகாட்டல் அவசியம்

உங்கள் அனுபவங்கள் என்ன? நீங்கள் அப்போது சாப்பிட்டு மகிழ்ந்த ஆனால் இப்போது கிடைக்காமல் தவிக்கின்ற உணவுகள் என்ன? உங்கள் நினைவுகளை comment இல் பதிவிடுங்கள்.

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

மீண்டும் அந்த வாழ்க்கை வாழ வரம் கிடைத்தால்?பண்டிகை காலங்கள் வரும், குடும்பங்கள் சேரும்...சில வேளை பெரிசுகளும் சிறுசுகளாக...
26/01/2026

மீண்டும் அந்த வாழ்க்கை வாழ வரம் கிடைத்தால்?

பண்டிகை காலங்கள் வரும், குடும்பங்கள் சேரும்...
சில வேளை பெரிசுகளும் சிறுசுகளாக மாறி ஓடி விளையாடும்.
நாம் மட்டும் ஒரு வெற்றுப் புன்னகை உதிர்த்து விட்டு
"நான் பார்க்கிறேன்....நீங்கள் விளையாடுங்கள்" என்று சொல்லி -
நம்மால் தான் ஓட முடியாதே
மூச்சு முட்டுமே என்று மனம் ஏக்கத்தில் தவிக்கும் ...

அப்போதெல்லாம், நம்மைப் பார்த்து வீட்டில்...
குட்டிக் குழந்தையொன்று -அள்ளித் தூக்கச் சொல்லி
அருகே ஓடி வரும்.குனிந்து அள்ளி அணைத்து
கொஞ்சிக் குலாவி மகிழ்ந்தோம்...
இன்று அதை நம்மால் எண்ணிப் பார்க்கத் தான் முடியும்
குனிய முடியாது...

அன்று ஆட முடிந்தது, விரும்பியதை அணிய முடிந்தது.
அப்போது உடைகளைத் தேடினோம்...
இன்று அதன் அளவினைத் தேடுகிறோம்...
அன்று வீட்டுப் படிகள் சாதாரண படிகள் மட்டுமே...
இன்று படிகளை எண்ணி நடக்கிறோம்.
அப்போது சிரிப்பு தான் முன்னே வந்தது
இன்று இளைப்பு தான் நம்மை தொடர்கிறது

வாழ்க்கைப் பயணம் மாறும் போது
வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் வந்தது.
ஒல்லியாய் இருந்த உடம்பும் பெருத்துப் போக,
இந்த மாற்றங்கள் காரணமாகியது.
உடம்பும் பெருக்க, முன்பு சாதாரணமாய் தோன்றியவை
இன்று சவாலாய்த் தான் போய்விட்டது

இங்கே இவரைப் பாருங்கள்...
38 கிலோ குறைத்திருக்கிறார்...
இவரிடம் கேட்டுப் பாருங்கள்...
தொலைந்த வரங்கள் மீண்டும் கிடைத்து விட்டது
என்று பெருமிதமாகச் சொல்வார்...
நான் நடக்கவில்லை பறக்கிறேன் என்பார்.

சும்மா ஒரே இரவில் இது நடந்து விடவில்லை
அதற்காக அவர் உழைத்தார்....
சிரமங்களை தூக்கி வீசினார்
வைராக்கியத்துடனும் விடாமுயற்சியுடனும் போராடினார்.

என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?
நாமும் அந்த வரங்களை வேண்டி உழைப்போமா?
எடையைக் குறைப்போமா?

நீங்கள் எடை குறைத்திருந்தால் இதை உணர்ந்திருக்கிறீர்களா? Comment இல் குறிப்பிடுங்கள்

தைரொய்ட் பிரச்சினை ஒருபோதும் எடை குறைவதைத் தடை செய்வதில்லை. சரியான வழிகாட்டல், விடாது தொடர்ச்சியாக செய்தல், இது சம்பந்தம...
26/01/2026

தைரொய்ட் பிரச்சினை ஒருபோதும் எடை குறைவதைத் தடை செய்வதில்லை. சரியான வழிகாட்டல், விடாது தொடர்ச்சியாக செய்தல், இது சம்பந்தமான சரியான மருத்துவ அறிவு இருக்கும் போது நிச்சயமாக எடை குறைவது சாத்தியமாகும்.

நீங்கள் தயாராக இருந்தால் உங்களுக்கு தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட உணவுத் திட்டங்களை எம்மால் வழங்க முடியும்.

சிலரைப் பார்த்தால் எனக்கு பயம் வரும்நோயோடு வருவர், அந்நோய்க்கான அறிவுரை வழங்கப்படும்உணவைப் பற்றிக் கூறும் போது அவர்களின்...
24/01/2026

சிலரைப் பார்த்தால் எனக்கு பயம் வரும்
நோயோடு வருவர், அந்நோய்க்கான அறிவுரை வழங்கப்படும்
உணவைப் பற்றிக் கூறும் போது அவர்களின் பார்வை ஏளமாகக் கூட இருக்கும் ..
அறிவுரைகளை காதில் கூட வாங்க மாட்டார்கள்....
குளிசை மட்டும் போதும் இது எதற்கு என்றிருப்பார்கள்...
குளிசையும் கூட வேண்டாம் என்றிருப்பவர்கள் பலர்

காலங்கள் கடந்து போகும்...
சில வருடங்களில் அவர்களை மீண்டும் சந்திக்க நேரிடும் -
கண்களில் நீர்க் குழம்போடு ...
கிட்னி நோயோடு டயலைசிஸ் பண்ணி வாழ்க்கை வெறுத்தவர்களாக...
பாரிசவாதம் வந்து மலசலம் கழித்தாலும் அதைக் கழுவி விட
அடுத்தவர்களில் தங்கியிருப்பவர்களாக...
நீரிழிவு நோய் கட்டுப்பாடில்லாது காலை இழந்தவர்களாக ....
இழந்த வாழ்க்கை மீண்டும் கிடைக்காதா என ஏங்கியவர்களாக..

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்
நமக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும்
நாம் நோய் வாய்ப்படும் வரை ...
நோய் வந்து விட்டால் நமக்கு இருப்பது
ஒரே ஒரு பிரச்சினை மட்டும் தான் .....

அதனால் தான் ஆரோக்கியமானவர்கள்
கடவுளிடம் அனைத்துப் பிரச்சினைகளையும் முறையிடுகிறார்கள்..
ஆனால் நோயாளி தனது ஆரோக்கியத்தை மட்டும் வேண்டி
கடவுளை மன்றாடுகிறான்

ஆரோக்கியம் என்பது கடவுளின் அருட்கொடை
ஆனால் அது ஒரு அருட்கொடை தான் என்பது
நம் கைமீறிப் போன பின் தான் உணரப்படுவது
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போன்றது ...

உங்களுக்கோ? அல்லது அருகிலுள்ள ஒருவருக்கோ
இவ்வாறு நடந்திருக்கிறதா? அப்போது உங்கள் மனநிலை என்ன?
Comment இல் பதிவிடுங்கள்
இது பயன்தரும் என நினைத்தால் Share பண்ணி விடுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

இன்றும் ஞாபகம் இருக்கிறது அந்தக் கணங்கள்...என்னைச் சந்திக்க ஒரு தம்பதியினர் வந்திருந்தனர் எடையைக் குறைக்க வேண்டும் என்பத...
21/01/2026

இன்றும் ஞாபகம் இருக்கிறது அந்தக் கணங்கள்...என்னைச் சந்திக்க ஒரு தம்பதியினர் வந்திருந்தனர் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக.. திருமணம் முடிந்து பல வருடங்கள் கடந்து விட்டும் இன்னும் பிள்ளைகள் இல்லை. வைத்தியர் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். அவர்களுக்கு நம்பிக்கை வார்த்தைகளை வழங்கிக் கொண்டே அவர்களின் ரிப்போட்களை துளாவிக் கொண்டிருந்தேன். வழங்கியது வெறும் நம்பிக்கை வார்த்தைகளல்ல, என் அனுபவத்தில் எத்தனையோ பிள்ளையற்றோர் எடை குறைத்த பின் பிள்ளை பெற்றுக் கொண்டதைப் பார்த்திருக்கிறேன். அந்த நம்பிக்கையில் வந்த வார்த்தைகள் அவை. ரிப்போட்கள் என்னவோ ஆண், பெண் இருவருக்கும் பிரச்சினைகள் இருப்பதைக் காட்டியது. வைத்தியரும் இருவரையும் எடை குறைக்குமாறே குறிப்பிட்டிருந்தார்.

ரிப்போட்டை பார்த்தவாறே, "இரண்டு பேரும் வெய்ட்ட குறைக்கனும் என்ன?" அவ்வாறு தான் எழுதி இருக்கிறது என்று கூறி முடிப்பதற்குள் "இல்லை, இல்லை ... எனக்கு இல்லை, எனக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை, இவக்கு தான் வெய்ட்ட குறைக்கனும்" என்று கூறி முடித்தான் அந்த ஆண். அவன் வார்த்தையிலும், பார்வையிலும் பிள்ளை பெறவில்லை என்றால் அதற்கு பெண் தான் காரணம் என்ற சமூகத்தின் பார்வை தெரிந்தது. அவன் பேச்சைத் தொடர்ந்து அந்தப் பெண்ணைப் பார்த்தேன் அவள் கண்கள் கலங்கி இருந்தது. அவளைப் பார்க்கும் போது கவலையாக இருந்த போதும் என்னால் வெளியே காட்டிக் கொள்ள முடியவில்லை.

எடையைக் குறைக்க ஆரம்பித்திருந்தாள், எடையும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. 2 - 3 மாதங்கள் கடந்திருக்கும், அதன் பின் எடையைக் குறைக்கும் ஆலோசனைக்காக அவள் என்னை அழைக்கவில்லை. இடையில் விட்டு விட்டாளோ தெரியாது என்று நினைத்து சிறிது மனம் வருந்தி விட்டு விட்டேன்.
அன்றிலிருந்து ஏறத்தாள ஒரு வருடம் கடந்திருக்கும். மீண்டும் அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

"சேர் எனக்கு என்ட உடம்ப குறைக்கணும் ....
டிவோஸ் ஆகிட்டுது சேர்...
புள்ள இல்ல எண்டுட்டு
அவர் வேற களியாணம் முடிச்சிட்டார்"

என்று சொல்லி முடிக்கும் போது அவள் மனதில் வலியும், எதையோ சாதிக்க வேண்டும் என்ற இறுமாப்பும் இருந்தது.. அன்றிலிருந்து டயட்டை ஆரம்பித்த அவள் கிட்டத்தட்ட பத்து மாதங்கள் டயட்டில் இருந்திருப்பாள், டயட்டில் சில நாட்கள் உடல் வேகமாகக் குறைந்தது, சில நாட்கள் மெதுவாகவே குறைந்தது. குறையாமலும் பல நாட்கள் கடந்து இருந்தது. இந்த ஏற்ற இறக்கங்களை பொறுமையாகவும் மனவுறுதியோடும் எதிர் கொண்டு 30 கிலோ எடை குறைத்து விடை பெற்றாள். விடைபெறும் போதும் அவள் கண்ணில் கண்ணீர் இருந்தது, ஆனால் அதில் ஏதோ சாதித்த திருப்தி இருந்தது.

இங்கு சில பெண்களின் போட்டோக்களை பதிவிட ஆசைப்படுகிறேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் இந்த போட்டோக்கள் அவர்களினால் விரும்பித் தரப்பட்டவை. " சேர்.... இந்த போட்டோக்களை கட்டாயமாக பதிவிடுங்கள். எங்களைப் போல் நிறைய பேர் என்ன செய்வதென்று தெரியாமல் வலியுடன் இருக்கிறார்கள், அவர்களுக்கு இதைப் பார்க்கும் போது நிறைய உத்வேகம் கிடைக்கும் "... போட்டோவைத் தந்த பின் கூறியவையே இவை. அந்தப் பெண்ணும் இந்தப் பெண்களும் என் பார்வையில் சிங்கப் பெண்கள் தான். இவ்வாறு கூறும் போது எனது மனதிலும் ஏதோ நானும் சாதித்திருக்கிறேன் என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆ.... சொல்ல மறந்து விட்டேன். அவள் இன்று மறுமணம் முடித்து பிள்ளையோடு இருக்கிறாள்.... ஆனால் அவள் முந்திய கணவனுக்கு?.

உங்கள் கருத்துக்களை Comment இல் குறிப்பிடுங்கள்.
Share பண்ணுவதன் மூலம் மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மரக்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்கு போய் இருந்தேன். மரக்கறிகளை பிரஷ்ஷாக வாங்குவதில் அலாதிப் ப...
18/01/2026

அன்று ஞாயிற்றுக்கிழமை காலை, மரக்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்கு போய் இருந்தேன். மரக்கறிகளை பிரஷ்ஷாக வாங்குவதில் அலாதிப் பிரியம் எனக்கு, அத்தோடு அவற்றின் விலைகளை அறிவதிலும் இருந்தது. எனது வைத்தியசாலை நாட்களில் இந்த மரக்கறிகளைப் பற்றி கதைக்காத நாட்களே இருக்காது. நோய் எதுவாக இருப்பினும் நோயாளர்களுக்கு வழங்கும் உணவு பற்றிய அறிவுரைகளில் மரக்கறிகளை உண்பதன் முக்கியத்துவம் நிச்சயம் இடம் பிடித்திருக்கும். எனவே விலைகளை அறிந்து கொள்வது, நோயாளர்களுக்கு பொருத்தமான மரக்கறிகளை குறிப்பிட்டுச் சொல்வதில் எனக்கு உதவி செய்யும்.

அன்றும் அப்படித்தான், மரக்கறிகளைத் துளாவிக் கொண்டிருக்கும் போது...
"இந்த டொக்டர்மார்களுக்கு பைத்தியம்" என்று ஒரு குரல் கேட்டது
ஆகா... ஏதோ சீரியஸா கதை ஒன்டு போகுது என நினைத்து காதை கூர்மையாக்கிக் கொண்டேன்

எனக்கு பத்து வருஷமா சீனி வருத்தம் இருக்குது....
டொக்டர்கிட்ட போனா அந்த டெஸ்ட் எடு இந்த டெஸ்ட் எடு என்டு சொல்லுவானுகள்..
அத இதச் சொல்லி பயமுழுத்தாட்டுவான்கள்...
நெறைய குளிசை எடுக்கச் சொல்லுவான்கள்...
நம்மளுக்கு அது சரிப்பட்டு வராது...
இந்த பத்து வருஷத்தில ஒரு குளிசை வாய்க்குள்ள போயில்ல
நான் நல்லாத்தானே இருக்கன்
என்னப் பாருங்க நான் நல்லாத்தானே இருக்கன்
என்று அவர் முடிக்க "ஓம் மச்சான், அவன்களுக்கு காசு தேவ அதால தான் அவன்கள் மக்கள பயமுழுத்தாட்ற" என்று வழி மொழிந்தது இன்னொரு குரல்.

அந்தக் கலந்துரையாடலையே நினைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். கடந்த பத்து வருடங்களுக்கு அதிகமாக தினமும் சீனி வருத்த (நீரிழிவு) நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குபவன் என்ற வகையில் அவர்களின் எண்ணவோட்டங்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறேன்.

அவருக்கு சீனி வருத்தம் இருக்கும், அவர்ட மனைவி சொல்லுவா "சரியான பசி தம்பி அவருக்கு, அடிக்கடி சாப்பிட வேணும்.. என்ன செய்ய உழைக்கிற ஆள் தானே, பசிக்கும் தானே என்று முடிப்பா ...
சில ஆக்கள் சொல்லுவாங்க.. தாகம் கூட மகன், அதாலே வெளியே போனா, தண்ணி போத்தலோட தான் நான் போற, தண்ணி குடிச்சா நல்லம் தானே.
தம்பி... இவர் அடிக்கடி இரவில எழுப்புற, சூ போறதுக்கு ... என்னவோ தெரியா
இவ்வாறு நிறையக் கதைகள் சொல்ல முடியும்.

இங்கு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவற்றை ஒரு குறையாக அவர்கள் சொல்வதில்லை, நாளாந்த வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே அதாவது " சூடு - அதால தாகம் கூடுது", "வயசாகிட்டு அதால இந்த மாற்றம் நடக்குது", "நல்லா சாப்பிடுற எனறு சந்தோசமாக" இந்த தோரணையில் தான் என்னிடம் சொல்வார்கள். அடிக்கடி பசி எடுப்பது, அதிக தாகம் எடுப்பது, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது, இரவிலும் சிறு கழிக்க எழும்புவது, உடல் சோர்வாக இருப்பது இவற்றை யாரும் நோயின் அறிகுறிகளாக பார்ப்பதில்லை. ஆனால் இந்த அறிகுறிகளின் பின்னணியில் நீரிழிவு நோய் கட்டுப்பாடின்றி ஒழிந்திருக்க முடியும்.

ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சீனி வருத்தம் என்பது "நான் உடலுக்குள் இருக்கிறேன், உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றையும் பாதிக்கிறேன்" என்று கடுமையான வலி ஒன்றின் மூலமாக அல்லது அது போன்ற வேறு அறிகுறிகள் மூலமாக அறிவித்தல் கொடுத்துக் கொண்டு வருவதில்லை. நான் மேலே குறிப்பிட்ட நாம் கணக்கில் கொள்ளாத அறிகுறிகள் மூலம் உங்களை எச்சரித்துக் கொண்டு வரும். நாம் புறக்கணிக்கும் ஒவ்வொரு நாளும் எமது உறுப்புக்களை பாதித்து அதன் மூலம் வேறு நோய்களையும் உருவாக்கி ஹாட் அட்டேக் , பாரிசவாதம், சிறுநீரக இழப்பு, நரம்பு மற்றும் கண் பாதிப்பு போன்ற பாரிய நோயாளிகளாக மாற்றி இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் நினைத்தாலும் உங்கள் பழைய வாழ்க்கை கிடைக்காமல் போய்விட முடியும்.

அப்படியே நிறுத்தி, நான் மேலே குறிப்பிட்ட சந்தையில் கதைத்த நபரை யோசித்துப் பாருங்கள். "நான் நல்லா இருக்கிறேன் என்று மனதால் உணர்வது எப்போதும் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று பொருள்படாது". அவருக்கும் நான் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்திருக்க முடியும், ஆனால் அதை அவர் சீனி வருத்தத்தின் அறிகுறியாக பார்த்திருக்க மாட்டார். அவ்வளவு தான்.

எனவே நமது ஆரோக்கியம் குறித்து கவனமாக இருப்போம். இன்று நம்முடன் சிரித்துக் கதைத்த நபர் அடுத்த நாள் மரணித்த செய்தி கேட்டு வருந்தி இருக்கிறோம் அல்லவா?. அந்த நபர் நமக்கு மிக நெருங்கியவராயின் அந்த வலி மிகக் கொடுமையானது அல்லவா?. இதே போன்று நமக்கும் நடக்கக்கூடும், நாமும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதை யோசிக்காது விட்டால்?. ஆரோக்கியம் தான் நமது மிகப்பெரிய செல்வம்

உங்கள் கருத்துக்களை கீழே comment இல் குறிப்பிடுங்கள். பிரயோசனமாக இருந்திருப்பின் மற்றவர்களுக்கும் சென்றடைய Share செய் விடுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

பிள்ளை பசி பசி என்கின்றான், அடிக்கடி சாப்பிட்டும் போதவில்லை என்கின்றான் என்று நீங்கள் கவலைப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?.....
14/01/2026

பிள்ளை பசி பசி என்கின்றான், அடிக்கடி சாப்பிட்டும் போதவில்லை என்கின்றான் என்று நீங்கள் கவலைப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா?.. அதே போலவே, கொழும்பில் இருந்தும் ஒரு தாய் தனது மகன் குறித்து பின்வருமாறு கேட்டிருந்தார்.

"எனது மகனுக்கு 12 வயது. எப்போதும் நொறுக்குத் தீனி சாப்பிடுகின்றான், இருந்தும் எந்நேரமும் பசிக்கின்றது என்று கூறுகிறான். இரவில் 3 தடவை சாப்பிடுகிறான், பகலிலும் அப்படித்தான். அவன் இப்போது உடல் பருமன் கூடியவனாக இருக்கிறான். மரக்கறியைத் தொடுவதே இல்லை, அவனுக்கு எப்போதும் மாமிச உணவுகளே தேவைப்படுகின்றது. இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?"

இதை ஒரு பெற்றோராய் இருந்து வாசித்துக் கொண்டிருப்பீர்களானால், இங்கு அந்தத் தாய் கூறிய அதே விடயத்தை நீங்களும் உங்கள் பிள்ளைகளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவதானித்திருப்பீர்கள் அல்லவா?. சில நாட்களில் என்னேரமும் சாப்பாடு கேட்டுக் கொண்டிருப்பார்கள், சில நாட்களில் சாப்பாட்டில் அக்கறை காட்டவே மாட்டார்கள், நாம் சாப்பிடச் சொல்லி பின்னால் அலைய வேண்டி இருந்திருக்கும். எனவே இந்தப் பிரச்சினை அனைவருக்கும் பொதுவானது, எனவே முதலில் நாம் பதட்டப்படுவதை நிறுத்திக் கொள்வோம்.

பிள்ளைகள் வளர்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் இந்த வளர்ச்சி வித்தியாசமாக இருக்கும். அதிகம் வளரும் போது அதிக பசியெடுக்கும், அவ்வளவு தான். எனவே பசி அதிகமாக இருக்கிறது என்று கூறினால் அது தப்பு இல்லை, அது அவனது வளர்ச்சிக்கு அதிக உணவு தேவைப்படுகின்றது என்பதே பொருள். ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் ஒன்று இருக்கிறது

சாப்பிட்டும் பசி மீண்டும், மீண்டும் அடிக்கடி வருகின்றது அத்தோடு பிள்ளையின் எடையும் அதிகரிக்கின்றது என்றால் அதற்கு பல காரணங்கள் இருப்பினும் அவற்றில் முக்கியமானது உடல் தனக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் சரியான விகிதத்தில் அவன் சாப்பிடும் உணவின் மூலம் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே ஆகும். அதாவது அவன் சாப்பிடும் போது வயிறு நிறம்புகின்றது, உடலின் தேவை நிறம்பவில்லை, உடல் தனது தேவையை பூர்த்தி செய்து கொள்ள அடிக்கடி பசியை ஏற்படுத்துகின்றது. இங்கு அடிக்கடி பசிக்க அவன் அதிக வளர்கிறான் என்று பொருள் இல்லை, அவன் சமநிலையான உணவை உட்கொள்ளவில்லை என்பதே பொருள்.

காரணம் தெரிந்து கொண்டோம் இல்லையா? இனி தீர்வைப் பற்றிக் கதைப்போம். பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தை மாற்றும் விடயத்தில் மிக எளிதான விடயம் புரத உணவுகளை அவர்களது உணவுத் தட்டில் போதுமான அளவு சேர்ப்பது ஆகும். பொதுவாக பிள்ளைகள் இவற்றை உண்பதில் பிடிவாதம் காட்டுவதில்லை. எனவே கோழி, இறைச்சி, மீன், முட்டை, பருப்பு, பால் மற்றும் பால் உணவுகள் போன்ற புரதங்களை அவர்களின் உணவு வேளைகளில் போதுமான அளவு சேர்ப்பது நன்கு சாப்பிட்ட திருப்தியைத் தருவதோடு, வயிறு முழுமையான ஒரு உணர்வையும் தருகின்றது. அது மீண்டும் மீண்டும் பசிக்கும் உணர்வைக் குறைக்கின்றது.

துரித உணவுகள், பொரித்த உணவுகள், பக்கட்டில்/டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், இனிப்பு வகைகள் போன்றன சிறிது நேரம் வயிற்றை நிறப்பினாலும் அவை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்க ஆரம்பிக்கின்றது. ஏனெனில் இவை பொதுவாக ஆரோக்கியம் குறைந்த, சமநிலைப் போசாக்கு அற்ற உணவுகளாகும். இவற்றை நாளாந்தம் கொடுப்பதை தவிர்த்து பார்ட்டி உணவுகளாக, அடிக்கடி இல்லாமல் அவ்வப்போது கொடுக்கும் உணவுகளாக மாற்றிக் கொள்வதே அனைத்திற்கும் சிறந்தது ஆகும்.

மரக்கறியை உண்ண வைப்பது - இதுதான் பெற்றோர்களின் மிகப் பெரிய சவாலாகும். பிள்ளைகளை மரக்கறியைச் சாப்பிடச் சொல்லித் திணிப்பது அவர்களின் எதிர்ப்பில் தான் முடிவடையும். எனவே அவற்றை அவர்கள் விரும்பிய வகையில் படிப்படியாக கொடுப்பதே சிறந்த தீர்வாக அமையும். சோறை பிறைட் ரைசாகவும், பிட்டு / இடியப்பம் ஆகியவற்றை கொத்தாகவும் கொடுக்கும் போது மரக்கறியை சேர்த்துக் கொள்ள முடியும். தோசையை மரக்கறி, மச்சம் சேர்ந்த கீமாவுடன் சுற்றியும், ஓம்லட்டில் மரக்கறி சேர்த்தும் வழங்கலாம் அல்லவா?. இன்னும் என்னென்ன வழிகள் உள்ளது என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதன் போது எண்ணெயின் அளவை மட்டுப்படுத்துவது மிக முக்கியம். எனவே மரக்கறியை மேலே சொன்னவாறு ருசியாகக் கொடுத்து பின்பு படிப்படியாக அதிகப்படுத்துங்கள்.

பிள்ளைகளின் இரவு நேரப்பசி பெற்றோருக்கு அதிக தலைவலியைத் தரும் ஒரு விடயமாகும். பெரும்பாலும் இது பசியல்ல, அது பழக்கம் அல்லது அலுப்பில் வருவது இல்லாவிட்டால் இரவுணவு சமநிலை இல்லாமல் இருப்பதால் வருவது. இரவுணவுகளை மிகவாக அளவோடு பேணுவதே சிறப்பு.

முக்கியமான விடயம், எடையைக் குறைப்பதற்காக பிள்ளைகளுக்கு கடினமான டயட்களை திணிக்காதீர்கள். இதை ஒரு போதும் செய்யாதீர்கள். எமது அவசரத்திற்கு எடையைக் குறைக்க முடியாது. பிள்ளைகளுக்கு எடையைக் குறைக்கும் முயற்சிகள் அவர்களது ஆரோக்கியமான வளர்ச்சியையும், போதுமான சக்தியையும் வழங்குவதோடு நீடித்து நிற்கக் கூடிய நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் அவர்களின் வாழ்க்கை முறையில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும்

ஒவ்வொரு பிள்ளைகளும் தனித்துவமானவர்கள். அவர்களது வயது, உறுசுறுப்புத் தன்மை, பாடசாலை வழமைகள், குடும்ப உணவு முறைகள் என்பன ஒவ்வொருவருக்கும் வித்தியாசம். எனவே அவரவர் சூழ்நிலைக்கேற்ப தனிப்பட்ட ஆலோசனைகளே சிறப்பான வெற்றியைத் தருவதோடு அவர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்தி அவர்களில் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகின்றது.

இறுதியாக - பெற்றோர்களே பிள்ளைகளைத் திருத்த முன்பு நீங்கள் திருந்திக் கொள்ளுங்கள். நீங்கள் மாறாத வரை அவர்கள் மாறமாட்டார்கள், இதுதான் நிதர்சனமான உண்மை

உங்கள் அனுபவங்கள் என்ன? நீங்கள் என்ன நடைமுறையைப் பின்பற்றினீர்கள்? எதில் வெற்றி கண்டீர்கள்? என்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை Comment இல் குறிப்பிடுங்கள்.
அனைத்து பெற்றோரையும் சென்றடைய Share செய்ய மறக்காதீர்கள

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

பழஞ்சோற்றுடன் தேங்காய்ப்பாலைக் கரைத்து  2-3 கருவாட்டுத் துண்டு,  அரியப்பட்ட வெங்காயம் சேர்த்துக் கடித்து காலையுணவாக சாப்...
10/01/2026

பழஞ்சோற்றுடன் தேங்காய்ப்பாலைக் கரைத்து 2-3 கருவாட்டுத் துண்டு, அரியப்பட்ட வெங்காயம் சேர்த்துக் கடித்து காலையுணவாக சாப்பிட்ட நாட்கள் அவை. தண்ணிச்சோறு இல்லையா? என்று கேட்டால் எங்கே என் காலைச் சாப்பாடு என்பதே பொருள். அன்று அது ஒரு சாதாரண சாப்பாடு, இன்று நினைக்கையில் வாயில் எச்சில் ஊறுகின்றது. பாடசாலை வேளையில் பாணும் சம்பலும், கூட காசிருந்தால் பாணும் கறியும் இதுதான் எங்கள் காலையுணவு. அன்று வறுமை இருந்தது, ஆரோக்கியமும் கூட இருந்தது, அதனால் சந்தோசமும் இருந்தது. ஆனால் இன்று?, இந்த எண்ணவோட்டத்தை தவிர்க்க முடியவில்லை இதை எழுதும் போது.

"டடா, எனக்கு பர்கரும் (Burger), சிக்கனும் வாங்கித் தருவேங்களா?
நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போக...
என்னது பர்கரா? ஸ்கூலுக்கா??..... பர்கர் எல்லாம் ஸ்கூலுக்கு கொண்டு போகப்படா மகன்..
இல்ல டடா... என்ட பிரண்ட்ஸ் சில ஆக்கள் கொண்டு வார
அப்பிடி கொண்டு போனாத்தான் கெத்து...
அப்பிடி கொண்டு வாராக்கள் பணக்காராக்களாம்
என்டு சொல்றான்கள்...
அவங்களத்தான் ஹீரோ மாதிரி பாக்கிறான்கள்
என்று அடுக்கிக் கொண்டு போனான்...

நீங்க ஹெல்தியாத்தானே சாப்பிடுறேங்க
அளவா தானியங்கள் மற்றும் மரக்கறி , வளர்ச்சிக்கு புரதங்கள்
பழத்துண்டு ஒன்று, சில வேளை நட்ஸ் (Nuts)... இது ஆரோக்கியமான உணவு தானே மகன் என்றேன்.
அவன் சுற்றாடல் பாடத்தில் போசாக்கு சம்பந்தமாக படித்திருந்தான், அதனால் சற்று விளக்கிக் கூறினேன்.

மரக்கறி வேணாம் டடா.... என்ன பாத்து சிரிக்கிறான்கள் என்றான்.
நாம ஆரோக்கியமா சாப்பிடுறம்... அவங்க ஆரோக்கியமில்லாதத சாப்பிடுறாங்க. அவங்க தானே மாறனும் நாம இல்லையே என்றேன்...
இல்ல டடா...ப்ளீஸ் டடா... எனக்கு வாங்கித் தாங்க என்று முடித்தான்.

எனக்கு என்னவோ இதை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. என்னிடம் சில பாடசாலை மாணவர்கள் ஆலோசனை பெற்று வருகிறார்கள், அவர்களிடம் மரக்கறிகளைச் சாப்பிடச் சொல்லும் போது கூட இதே பதிலைத்தான் என்னிடம் சொன்னார்கள். எனவே இது எனக்கு புதிதாகத் தோணவில்லை, இருந்தாலும் பாடசாலையில் விசாரித்துப் பார்த்த போது சில பணக்காரப் பெற்றோர்களின் பிள்ளைகளும், பணக்காரர் என்று காட்டிக் கொள்ளத் துடிக்கும் பெற்றோர்களின் பிள்ளைகளும், இவர்களால் தமது பிள்ளைகளைத் திருப்திப்படுத்த நினைத்த சில பெற்றோர்களின் பிள்ளைகளும் கொண்டு வாராங்களாம் என்ற தகவல் கிடைத்தது. என்ன சொல்ல?.... ஏற்றத்தாழ்வு என்ற ஒன்று இருக்கக் கூடாத ஒரு இடம் வகுப்பறை. அதில் ஒரு தவறான காரணத்துக்காக ஏற்றத் தாழ்வா?... படிப்பிற்காகத் தான் பெற்றோரிடையே போட்டி என்று பார்த்தால் இதற்காகவுமா?... புரியவில்லை.

எனது பார்வையில் இது பிள்ளைகளை இரண்டு வழிகளில் பாதிக்கின்றது. ஒன்று, பிள்ளைகள் தாம் உண்ணும் உணவை தமது "ஸ்டேட்டஸ்" இன் அடையாளமாகக் கருதி தம்மை வேறுபடுத்த ஆரம்பிக்கும் போது உண்மையான ஸ்டேட்டஸ் இன் அடையாளங்களான அன்பு, ஒழுக்கம், பெற்றோர் ஆசிரியர்களை மதித்தல் போன்ற பல விடயங்கள் அவர்கள் பார்வையில் ஒன்றுமில்லாமல் போய் விடுகின்றது.

இரண்டாவது, பிள்ளைகளின் மனதில் புதையும் இந்த எண்ணவோட்டம் அவர்கள் வளரும் போது ஆரோக்கியமில்லாத உணவைத் தெரிவு செய்வதில் பங்களிப்புச் செய்து எடையை அதிகரிக்கச் செய்வதோடு நெடுநாள் நோயாளிகளாகவும் மாற்றி விடுகின்றது. இவை இரண்டுமே பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல பின்னாளில் உள ஆரோக்கியத்தையும் பாதித்து தன்னம்பிக்கையற்றவர்களாக மாற்றி விடுகின்றது.

பிள்ளைச் செல்வங்கள் என்பார்கள். இந்தச் செல்வங்களுக்கே செல்வம் ஆரோக்கியம் மட்டும் தான் என்று சொன்னால் நீங்கள் மறுக்க மாட்டீர்கள். நாம் நமது சந்ததிகளுக்கு சம்பாதித்த பணத்தையும், நோயையுமா விட்டுச் செல்ல எத்தனிக்கிறோம்?.. நாம் ஒரு நோயாளிச் சந்ததியையா உருவாக்க நினைக்கிறோம்?. இல்லை தானே. இது வெறுமனே உடல் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதல்ல, உள ஆரோக்கியத்தையும் தான். இன்று எத்தனை பிள்ளைகள் மன உளைச்சலோடு இருக்கிறார்கள் என்பதை சிந்தித்துப் பார்ப்போம்

பெற்றோராகிய நாம் நமது பிள்ளைகளை சரியான உணவைத் தெரிவு செய்வதில் வழிகாட்டுவது என்பது அவர்களைக் கட்டுப்படுத்துவது அவர்களின் சந்தோசத்தை பறிப்பது என்று பொருள்படாது. மாறாக உணவின் மூலம் குழந்தைகளின் மனதையும், எதிர்கால ஆரோக்கியத்தையும் பாதுகாப்பது என்பதே அதன் பொருள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?. உங்கள் கருத்துக்களை Comment இல் பதிவிடுங்கள். மற்றவர்களுக்கும் சென்றடைய Share செய்திடுங்கள்

M.S. Shamil Fowzath
Clinical Nutritionist

எடையில் சிறிதளவு குறையும் போது கூட அது அழற்சியைக் குறைத்து தைரொய்ட் சிறப்பாக செயல்பட உதவுகின்றது.நீங்கள் எடை குறைக்க ஒரு...
09/01/2026

எடையில் சிறிதளவு குறையும் போது கூட அது அழற்சியைக் குறைத்து தைரொய்ட் சிறப்பாக செயல்பட உதவுகின்றது.
நீங்கள் எடை குறைக்க ஒரு அடியை முன்னெடுத்தால், நாங்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வழியைக் காட்ட தயாராக இருக்கிறோம்

Diet for Life
Therapeutic Diet & Weight Management Clinic
Maruthamunai, Kalmunai
📞 077 9585025

Address

Diet For Life, Maraikkar Road, Maruthamunai/04
Maruthamunai
32314

Alerts

Be the first to know and let us send you an email when Diet for Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Diet for Life:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Our Story

One and only place for scientific and healthy weight management centre in Kalmunai Region. The Centre also offers individual diet plan for various diseases such as diabetes, high blood pressure, heart diseases, kidney disorders, digestive tract disorders (Irritable bowel syndrome, gastritis, GERD, Ulcers, Hernias and etc) and etc. Further it offers diet plan for body builders and fitness pals and diet plan and dietary advise for different life stages such as pregnancy, lactation, infancy and elderly people.