Aysha Ayurvedic & Unani Herbal Center

Aysha Ayurvedic & Unani Herbal Center Healthy life through Indigenous treatment, for Happy & Healthy Future�.

 # Covid 19 Positive Patients  #  Who Are In Home quarantine # Contact ur nearby Ayurvedic Medical Officers (for More De...
11/09/2021

# Covid 19 Positive Patients #
Who Are In Home quarantine # Contact ur nearby Ayurvedic Medical Officers

(for More Details Contact Ur Home town Ayurveda Hospitals )

10/07/2021
09/03/2021

நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!!!!!!!

இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது. அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.

பண அழுத்தம்

பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது.
பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.

மது போதை பழக்கம்

புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன.
முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுகமான சுமைகள்

மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை.
மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்.

உற்சாக ரசாயனம்
உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

மனசே ரிலாக்ஸ்
தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.

அமைதியே வழி
கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.

ஆழ்ந்த உறக்கம் அவசியம்

தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர்.

இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.

நன்றி:tamil.oneindia.com

⚠️👩‍⚕️ Shifting to New Place Soon 🚫Work On Progress ......🏥 # Any Emergency Contact Us By Our Hotline ☎️0766672220 /0662...
04/02/2021

⚠️👩‍⚕️ Shifting to New Place Soon 🚫
Work On Progress ......🏥
# Any Emergency Contact Us By Our Hotline ☎️0766672220 /0662230607 #
Address:🚑 No:127,Godapola Road,Matale

Treatment  # Trauma # # Contusion, Swelling, Sprain  #
20/01/2021

Treatment
# Trauma #
# Contusion, Swelling, Sprain #

Getting Ready For Today's   body Massage Therapy & Steam bath treatment  #
20/01/2021

Getting Ready For Today's
body Massage Therapy & Steam bath treatment #

சர்வம் ஹார்மோன் மயம்!சர்வம் ஹார்மோன் மயம்!நம் உடலிலிருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளிலிருந்து உருவாகும் ஒரு சிறப்பு வேதிப்...
09/01/2021

சர்வம் ஹார்மோன் மயம்!

சர்வம் ஹார்மோன் மயம்!

நம் உடலிலிருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளிலிருந்து உருவாகும் ஒரு சிறப்பு வேதிப்பொருள், ஹார்மோன். இது ஒரு தூதுவரைப்போலச் செயல்பட்டு நம் உடலின் பெரும்பாலான இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நமக்கு ஏற்படும் பசி உணர்வில் ஆரம்பித்து கோபம், பதற்றம், மூட் ஸ்விங்ஸ் மற்றும் இனப்பெருக்கம் வரையிலான அத்தனை நிகழ்வுகளுக்கும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இ

``நம் உடல் சீராக இயங்க ஹார்மோன்களின் சுரப்பு அவசியம். ஹார்மோன்கள் தேவையான அளவு சுரந்தால், எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகச் சுரந்தாலோ அல்லது குறைவாகச் சுரந்தாலோ நம் உடல் இயக்கத்தில் பாதிப்புகள் ஏற்படும். அதைத்தான் `ஹார்மோனல் இம்பேலன்ஸ்’ என்கிறோம்.

மூளையின் அடிப்பகுதியில் பட்டாணி அளவில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பியின் பெயர் பிட்யூட்டரி. இந்தச் சுரப்பி `மாஸ்டர் கிளாண்ட்’ (Master Gland) என்று அழைக்கப்படுகிறது. காரணம், இந்த பிட்யூட்டரியிலிருந்துதான் பல்வேறு ஹார்மோன்கள் உற்பத்தியாகி, உடலின் பல பாகங்களையும் சென்றடைகின்றன. அதுமட்டுமல்ல, இந்த பிட்யூட்டரியின் உதவியுடன் மற்ற நாளமில்லாச் சுரப்பிகள் தூண்டப்பட்டு அவற்றிலிருந்தும் ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன.

`புரோலாக்டின்’ (Prolactin) என்ற ஹார்மோன் பிட்யூட்டரியிலிருந்தே உற்பத்தியாகிறது. இது அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும்போது மார்புக் காம்புகளில் பால் சுரக்க ஆரம்பிக்கும்; மாதவிடாய் நின்றுவிடும்; கருவுறுதலில் பிரச்னைகள் ஏற்படும். ஆண்களுக்கு இந்த புரோலாக்டின் அளவுக்கு அதிகமாகச் சுரந்தால் அவர்களின் விரைப்பைகள் பாதிக்கப்பட்டு, மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மேலும் இந்த பிட்யூட்டரி, தைராய்டு சுரப்பியைத் தூண்டி தைராய்டு ஹார்மோன்களை உற்பத்திசெய்ய உதவும். சில நேரங்களில் பிட்யூட்டரி தன் வேலையைச் சரியாகச் செய்யாதபட்சத்தில் தைராய்டு பிரச்னைகள் ஏற்படலாம். இதை `செகண்டரி ஹைப்போ தைராய்டு’ என்போம். ஆனால், மிக அரிதாகவே இந்த நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கழுத்தின் முன்பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவிலுள்ள ஒரு சுரப்பிதான் தைராய்டு. அது குறித்துப் பார்ப்பதற்கு முன்னர், தைராய்டு சுரப்பியின் அருகே இருக்கும் `பாரா தைராய்டு’ பற்றிப் பார்ப்போம். பாரா தைராய்டில் மொத்தம் நான்கு சுரப்பிகள் இருக்கின்றன. நம் உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திறன் இந்த பாரா தைராய்டு ஹார்மோன்களுக்கு இருக்கிறது.

பாரா தைராய்டு ஹார்மோனில் சுரப்பு குறைந்தால், உடலில் கால்சியத்தின் அளவு குறைவதுடன் கைகால்களில் வலி மற்றும் எலும்புகளில் பலவீனம் ஏற்படும். இவ்வளவு ஏன்... பாரா தைராய்டு சுரப்பு குறைந்தால், வலிப்பு ஏற்படும் அபாயம்கூட இருக்கிறது. பாரா தைராய்டு ஹார்மோன் சுரப்பு அதிகமானால் உடலில் கடுமையான வலி ஏற்படும். மனஅழுத்தம், மலச்சிக்கல், சிறுநீரகத்தில் கல், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அடுத்ததாக தைராய்டு. நம் உடலில் தைராய்டின் அளவு குறைந்தால் அது `ஹைப்போ தைராய்டு’ எனப்படும். தைராய்டின் அளவு அதிகமானால் அது `ஹைப்பர் தைராய்டு’ என்று அழைக்கப்படும்.

ஹைப்போ தைராய்டு ஒருவருக்கு இருந்தால், முடி உதிரும், மலச்சிக்கல் உண்டாகும். சரும வறட்சி, உடல் அரிப்பு ஏற்படும். மாதவிடாய்க் கோளாறு ஏற்படும்.

ஹைப்பர் தைராய்டு இருந்தால், உடல் எடை குறையும். தனது உடல் எடையிலிருந்து திடீரென 20 முதல் 25 கிலோவரை எடை இழக்கும் நிலை ஏற்படும். அடிக்கடி மலம் கழிப்பது, படபடப்பு, பதற்றம், தூக்கமின்மை போன்றவை ஹைப்பர் தைராய்டின் அறிகுறிகள். ஆனாலும் தைராய்டு பிரச்னைகளை அறிந்துகொள்ள ரத்தப் பரிசோதனை செய்யவேண்டியது அவசியம்.

நம் உடல் சீராக இயங்க உதவிசெய்பவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள். இவை வேதிக் கூட்டமைப்புகளால் உருவாக்கப்பட்டவை. `கார்டிசால்’ என்ற ஸ்டீராய்டு ஹார்மோன் அவற்றுள் மிக முக்கியமானது. கார்டிசால் ஹார்மோனின் அளவு குறையும்போது ரத்தஅழுத்தம் குறைதல், வாந்தி, உடல் எடை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதுவே கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிப்பது, உயர் ரத்தஅழுத்தம், முகம் உப்புதல், சருமம் அதன் இறுக்கத் தன்மையை இழத்தல் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

அடுத்ததாக கணையத்தில் சுரக்கும் `இன்சுலின்’ ஹார்மோன். நம் உடலில் குளூகோஸின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இன்சுலின் பெரிதும் உதவிசெய்யும். ஆனால், இன்சுலின் குறைவாகச் சுரந்தால் சர்க்கரைநோய் உண்டாகும். இதற்கு `டைப்-1 டயாபடிஸ்’ என்று பெயர். சிலருக்கு உடலில் `இன்சுலின்’ ஹார்மோன் சுரக்கும். ஆனால், அது சரியாக வேலை செய்யாது. இதனாலும் சர்க்கரைநோய் உண்டாகும். இதற்கு `டைப்-2 டயாபடிஸ்’ என்று பெயர். இன்சுலின் சுரப்பு குறைந்தால் அளவுக்கு அதிகமான தாகம், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, உடல் எடை குறைவது போன்ற பிரச்னைகள் உண்டாகும். அதேபோல் இன்சுலின் சுரப்பு அளவு அதிகமானால் அடிக்கடி கடுமையான தாழ்நிலை சர்க்கரை (Low Sugar) பிரச்னை உண்டாகும். இதற்கு `ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்று பெயர்.

செக்ஸ் ஹார்மோன்கள் ஒரு பார்வை!

பிட்யூட்டரியிலிருந்து `லூட்டினைஸிங் ஹார்மோன்’ (LH - Luteinizing Hormone) மற்றும் `ஃபாலிக்கிள் ஸ்டிமுலேடிங் ஹார்மோன்’ (FSH - Follicle - Stimulating Hormone) போன்றவை உற்பத்தியாகின்றன. இவை இரண்டும் செக்ஸ் ஹார்மோன்கள். இவை பெண்களின் கர்ப்பப்பை மற்றும் சினைப்பைகளில் செயல்புரிந்து ஈஸ்ட்ரோஜெனைச் சுரக்கவைக்கும். ஆண்களுக்கு இந்த இரண்டு ஹார்மோன்களும் விதைப்பைகளில் செயல்புரிந்து டெஸ்டோஸ்டீரானைச் சுரக்கவைக்கும். இந்த ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டீரான் போன்றவைதான் ஆண், பெண் இனப்பெருக்கத்துக்குக் காரணமாக இருக்கின்றன.

ஈஸ்ட்ரோஜென் குறையும்போது முறையற்ற மாதவிலக்கு அல்லது பெண்கள் வயதுக்கு வராமல் இருப்பது போன்ற பிரச்னைகள் உண்டாகும். அதே நேரத்தில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது சினைப்பையில் கட்டி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகரிக்கும்போது முகப்பரு, சருமத்தில் எண்ணெய் வழிதல், புராஸ்டேட் சுரப்பியில் வீக்கம், விந்தணு உற்பத்தி குறைவது, விரை வீக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.’’

நேரில் செல்வதே உத்தமம்!

பொதுவாக, ஒரு நபர் ஹார்மோன் சார்ந்த பிரச்னையில் இருக்கிறார் என்றால், அவருக்கு எல்லா ஹார்மோன் பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை. அப்படிச் செய்தால் பணம் அதிகம் செலவாகும். அதற்கு பதிலாக `எண்டோகிரைனாலஜிஸ்ட்’ எனப்படும் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் முதலில் சம்பந்தப்பட்ட நபரைப் பரிசோதனை செய்வார். அப்போது பாதிக்கப்பட்ட நபரிடம் உடல் ஆரோக்கியம் பற்றிக் கேட்டறிவது, உடல் பரிசோதனை செய்வதன் மூலம் நோயாளிக்கு என்ன பிரச்னை, அவர் எத்தகைய ஹார்மோன் இம்பேலன்ஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அனுமானித்துவிடுவார். அதன் பிறகு அதை உறுதிப்படுத்தத் தேவையான ஹார்மோன் பரிசோதனை செய்யப்படும். தேவைப்பட்டால், ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும். இதுதான் சரியான அணுகுமுறை.

இன்றைய நாகரிக உலகில் சிலர் வேறு மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனர். தங்களுக்கு ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்னை இருப்பதாக நினைத்தால், மருத்துவரிடம் தொலைபேசியில் பேசி, அவர் சொல்லும் மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து, முடிவுகளை மருத்துவருக்கு வாட்ஸ்அப் செய்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை. ஏனென்றால், பாதிக்கப்பட்ட நபரை நேரில் பார்த்து அவரிடம் பேசும்போது, அவர்கள் வெளிப்படுத்தும் தகவல்கள் மற்றும் உணர்வுகளை மருத்துவர் உற்று நோக்க வேண்டியது அவசியம். அதை வைத்துத்தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரால் உறுதிசெய்ய முடியும். எனவே, இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை நேரில் அணுகவேண்டியது அவசியம்.

முறையான பரிசோதனைகள் மூலம் ஹார்மோன் பிரச்னை இருப்பது மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டால், ஹார்மோன் குறைவுக்கு மருந்துகள் மூலமாகவும், ஹார்மோன் அதிகமானால் அறுவை சிகிச்சை மற்றும் குறிப்பிட்ட ஹார்மோனுக்கு எதிராகச் செயல்படும் வேறு ஒரு ஹார்மோனை உடலில் செலுத்துவது போன்றவற்றின் மூலம் தீர்வுகள் காணப்படும்.

For more details contact us ☎️

Steam therapy...!!!மனிதனை ஏதாவது நோய் பாதித்தால், அதை உடல் தானாகவே சரிசெய்துவிடும் அல்லது குணமாக்கிவிடும். மனித உடல் ஓர்...
24/12/2020

Steam therapy...!!!

மனிதனை ஏதாவது நோய் பாதித்தால், அதை உடல் தானாகவே சரிசெய்துவிடும் அல்லது குணமாக்கிவிடும். மனித உடல் ஓர் இயற்கை எந்திரம் என்று சொன்னால் அது மிகையாகாது. சரியான வழிகாட்டுதல் இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும். இயற்கைக்கு மாறான சிகிச்சைகள் நல்லதல்ல. உதாரணமாக ஒருவருக்குச் சளி பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை இயற்கை முறையில் குணப்படுத்தவே முயற்சி செய்ய வேண்டும். முதலில் சளியை வெளியேற்ற சிகிச்சை தருவதே சரியான முறையாகும்.

இன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் இருவரும் உழைத்தாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். நேரமின்மையை ஒரு காரணமாகச் சொல்லிக்கொண்டு காலில் சக்கரத்தைக் கட்டியபடி ஓடிக்கொண்டிருக்கிறோம். எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என இருக்கும் நாம், உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதற்குக் நீராவிக்கு குளியல் (Steam bath)எனப்படும் சிகிச்சை மிகவும் உதவியாக இருக்கும். நீராவிக் குளியல் சிகிச்சை ‘குளிர் நீராவிக் குளியல்’(Cool steam bath), ‘சூடான நீராவிக் குளியல்’(Hot steam bath)என இரண்டு வகைப்படும். இதில் இரண்டாவது வகையான சூடான நீராவிக் குளியலில் நீராவிக் குளியல் பல்வேறு நோய்களைத் தீர்க்கும்.

இயற்கை மருத்துவத்தைப் பொறுத்தவரை நோய்க்கான காரணம் அறிந்து உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதே முக்கியப் பணி. அதற்கு நீராவிக் குளியல் உதவும். முற்காலங்களில் நீராவிக் குளியல் செய்வதற்கென Steam room என்ற ஒன்று கட்டப்பட்டிருக்கும். செராமிக் கற்களால் ஆன அந்த அறைகளைச் சுற்றிலும் நெருப்பு மூட்டப்படும். இதனால் வெப்பம் நிறைந்த அந்த அறைக்குள் செல்பவர்களது உடலில் வியர்வைத் துளைகள் திறக்கப்பட்டு நன்றாக வியர்த்துக் கொட்டும். இப்படி வியர்ப்பதால் கழிவுகள் வெளியேற்றப்படும். இந்தச் சிகிச்சைமுறை நாளடைவில் நவீனமாகிப் பெட்டி வடிவில் `ஸ்டீம் பாத் கேபின்' அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீரை ஆவியாக்கி அதைப் பெட்டிக்குள் செலுத்துவார்கள். அது அந்த அறையில் சூடான ஈரப்பதத்துடன் காணப்படும். அந்த அறைக்குள் இருக்கும் நமது உடலில், தோலின் வியர்வைத்துளைகள் விரிவடைந்து கழிவுகள் வெளியேற்றப்படும்; இறந்த செல்கள் அனைத்தும் அகற்றப்படும். நீராவிக் குளியலால் உடல் இலகுவாகி, மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். மன அழுத்தம், படபடப்பு, பதற்றம் குறையும்; ரத்தக் குழாய்கள் தூண்டப்படும். மேலும் செல்கள் புதுப்பிக்கப்படும்.

சுவாசக்கோளாறுகள், சைனஸ், மூச்சுக்குழாய் அழற்சி, அலர்ஜி, ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கு நீராவிக் குளியல் சிகிச்சை நல்ல தீர்வு தரும். சளித்தொல்லை, சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு முகம், உடல் எனத் தனித்தனியாக சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையால் தேங்கியிருக்கும் சளி அகற்றப்பட்டு மூச்சு சீராக வெளியேற உதவும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் ரத்தக்குழாய்கள் விரிவடையவும் இந்தச் சிகிச்சை உதவும் என்பதால் இதயப் பிரச்னைகள் சரியாகும். மேலும் இதய நோய்கள் வராமல் முன்கூட்டியே தடுக்கவும் நீராவிக் குளியல் பயன்படும்.

சிலருக்கு பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகள் உடலுக்குள் சென்று தங்கிவிடும். நீராவிக்குளியல் அவற்றை மிக எளிதாக வெளியேற்ற உதவும். தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றுவதால் உடல் பருமனைக் குறைக்க உதவும். இந்தச் சிகிச்சையைத் தொடர்ந்து செய்தால் உடல் பருமன் குறைவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இன்றைய சூழலில் மனப்பதற்றத்துடன் வாழ்பவர்கள் பலர். அவர்கள் நீராவிக் குளியல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் நரம்புகள் மிதமாகச் செயல்பட உதவும். பதற்றத்தின் அடுத்தக்கட்டமாக வரக்கூடிய தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்றவற்றையும் இந்தச் சிகிச்சை தீர்க்க உதவும். எண்டோர்பின்(Endorphins)என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்து டென்ஷனைக் குறைக்கும்; வலியைக் குறைக்க உதவும்.புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும். இதன்மூலம் எந்தப் பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் தைரியம் கிடைக்கும்.

சுவாசக்கோளாறு, ரத்த அழுத்தம் போன்றவற்றின் அடிப்படையில் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். இதய பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு நீராவிக் குளியல் சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது.

For more details contact us ☎️

பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்அறிகுறிகளை கண்டு மருத்துவர்களை அணுகுவது நல்லது.பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) எனப்படும்...
17/12/2020

பெண்களை தாக்கும் பி.சி.ஓ.எஸ்

அறிகுறிகளை கண்டு மருத்துவர்களை அணுகுவது நல்லது.

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (PCOS) எனப்படும் சினைப்பை கட்டிகள் பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் வருவதில்லை. ஹார்மோன் மாற்றங்களினால் வரும் இந்த குறைபாட்டை உடனடியாக கண்டறிவது கடினம். பி.சி.ஓ.எஸ் எனும் சினைப்பைக் கட்டிகள் இருப்பது குறித்த அறிகுறிகள் மெதுவாகத்தான் தெரிய ஆரம்பிக்கும்.

பெண்கள் பருவமடைந்ததும்,அவர்களது டீன் ஏஜ் பருவத்தில்,முதலாவது மாதவிலக்கிற்குப் பிறகு ஹார்மோன் மாற்றங்களால் பி.சி.ஓ.எஸ் ஆரம்பிக்கிறது. உடல் எடை அதிகரிப்பதைத் தொடர்ந்து இதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்.இதன் அறிகுறிகள் பிற நோய்களுக்கான அரிகுறி என கொள்வது சகஜமான ஒன்று.

பி.சி.ஓ.எஸ் அறிகுறிகளில் சில :

ஓராண்டிற்கு ஒன்பது மாதவிலக்குகளுக்கும் குறைவாக ஏற்படுதல் (அதாவது ஒரு மாதவிலக்கு சுழற்சிக்கும் அடுத்த மாதவிலக்குச் சுழற்சிக்கும் இடையேயான இடைவெளி 35 நாளுக்கும் அதிகமாக இருத்தல்) அல்லது மாதவிலக்கே ஏற்படாமல் நின்று போதல் ஆகியவை இதில் வகைப்படுத்தப்படும். பி.சி.ஓ.எஸ் உள்ள சில பெண்களுக்கு மாதவிலக்கு தவறாமல் உண்டாகும். ஆனால் மாதந்தோறும் சினை உற்பத்தி நடக்காது. அதாவது அவர்களது சினைப்பைகளிலிருந்து மாதந்தோறும் முட்டை வெளிப்படாமல் போகும்.

ஒழுங்கற்ற மாதவிலக்கு மற்றும் மாதவிலக்கின் போது மிக அதிகமான உதிரப் போக்கு ஏற்படுதல். பி.சி.ஓ.எஸ் உள்ள பெண்களில் 30% பேருக்கு இந்த அறிகுறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

தலைமுடி மிக அதிகமாக உதிர்தல் மற்றும் முகம், மார்பு, முதுகு, வயிறு மற்றும் கட்டைவிரல்/கால் பெருவிரல்களில் ரோமம் முளைத்தல். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள 70% பெண்களுக்கு ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் இத்தகைய ரோமப் பிரச்சனை உள்ளது எனப் பதிவுகள் உள்ளன.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனை உள்ள பெண்களின் உடலில் ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், முகப்பருக்கள் ஏற்படுகின்றன மற்றும் சருமம் எண்ணெய் பசையுள்ளதாக மாறுகிறது.

பி.சி.ஓ.எஸ் பிரச்சனையுடன் வாழும் பெண்களது நல்வாழ்வு, பாலுறவில் நாட்டம், பாலுறவில் திருப்தியடைதல், ஆகியவை பாதிக்கப்பட்டு மொத்தத்தில் அவர்களது வாழ்க்கைத் தரமே பாதிக்கப்படும். இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு, மனத்தளர்ச்சி அடையும் நிலை ஏற்படும்.

உடல் எடை அதிகரித்தல், இடுப்பை விட அடிவயிற்றில் அதிக சதை போடுதல். இது உடலில் ஆண்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் ஏற்படலாம்.

இதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. உடலில் அதிக அளவு இன்சுலின் இருப்பதாலோ, தாமதமான சினைமுட்டை உற்பத்தியாலோ (ovulation), கருமுட்டையின் (egg) தரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையினாலோ, அல்லது கருமுட்டையானது கருப்பையினுள் பொதிந்திருக்கும் அமைப்பினாலோ கருச்சிதைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

கருவுற முடியாமல் போவதற்கு, சினைப்பைகளிலிருந்து சினைமுட்டையானது வெளிப்படாததனால் இந்த நிலை ஏற்படுகிறது. மேலும், இரத்தத்தில் அதிக அளவு இன்சுலின் இருத்தல். ஹைப்பர் இன்சுலினீமியா எனப்படும் அதிக அளவு இன்சுலின் இருக்கும் அறிகுறிகள். உடலின் மேல் பகுதி மட்டும் குண்டாதல், கைகளின் கீழ்ப்பகுதி, கழுத்து, கவடு (இடுப்பும் தொடையும் சேருமிடம்), பிறப்புறுப்புப் பகுதி ஆகியவற்றில் வெல்வெட் போன்ற கருமையான சருமப்படை தோன்றுதல் ஆகியவை அதிக அளவு இன்சுலின் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

சினைப்பை நோய்க்குறிக்கான தீர்வு எதுவுமில்லை.உடற்பயிற்சி, எடைக்குறைப்பு ஆகிய சில வாழ்க்கைமுறை மாற்றங்கள் இதற்கான சிகிச்சையாகக் கருதப்படுகிறது.

உங்கள் மேலதிக தகவல்களுக்கு எம்மை அழையுங்கள். ☎️

11/12/2020
Steam therapy......on going ....!!!
11/12/2020

Steam therapy......on going ....!!!

Steam Therapy....!!!! 's treatment  #Book now for your appointments ☎️
10/12/2020

Steam Therapy....!!!!
's treatment #

Book now for your appointments ☎️

Address

Matale
21000

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Friday 17:00 - 21:00

Telephone

+94766672220

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aysha Ayurvedic & Unani Herbal Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aysha Ayurvedic & Unani Herbal Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram