Dr AMM Issadeen

Dr AMM Issadeen MBBS (Peradeniya)
PGDip in Health Development (Colombo)
Medical Doctor & Social Worker. Worked at Pottuvil, Komari, Nintavur, Addalachenai & Colombo.

30/07/2025
“சென்றல் விளையாட்டுக் கழகம்” ஏற்பாடு செய்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்க...
25/04/2025

“சென்றல் விளையாட்டுக் கழகம்” ஏற்பாடு செய்த வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் தந்தையை இழந்த பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொத்துவிலில் நேற்று இடம்பெற்றது.
கழகத்தின் பிரதம ஆலோசகர் Dr.AMM.Issadeen(MBBS) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மூவினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் அவரது நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

An event organized by the “Central Sports Club” to distribute learning equipments to children living below the poverty line who have lost their fathers was held in Pottuvil yesterday.
The event was chaired by the club’s Chief Advisor, Dr.AMM.Issadeen(MBBS), and learning equipment was also provided to students from all three ethnic communities from his funds.

25/03/2025
25/03/2025
24/03/2025

🔴 பிரதமர் உடனான நேர்காணலில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மரீஹா இஸ்ஸதீன் பங்கேற்பு

பாடசாலை மாணவர்களின் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கெளரவ. கலாநிதி ஹரிணி அமரசூரிய உடனான நேர்காணல் சனிக்கிழமை, 22. மார்ச்,2025 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்
பெற்றது.

இந் நிகழ்வில் கல்லூரியின் ஆங்கில மொழிக் கற்கை உயர்தரப் விஞ்ஞானப் பிரிவு மாணவி செல்வி. முகம்மது இஸ்ஸத்தீன் மரீஹா ஆலியா
கலந்து கொண்டிருந்தார்.

இதன் முழுமையான
நேர்காணல் காணொளி தொகுப்பு இன்று திங்கட்கிழமை, 24. மார்ச்,2025ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு சுவர்ணவாஹினி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நேர்காணலில் பங்கேற்ற ஆறு பாடசாலைகளுள் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஒன்றாகும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

நேர்காணலில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவி மரீஹா ஆலியா வாழ்த்துக்களை பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு இந்நிகழ்வில் பங்கேற்பதற்கான அனைத்து வழிகளிலும் ஊக்கப்படுத்தி ஏற்பாடுகளை செய்து கொடுத்த கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

🔴 Kalmunai Mahmood Ladies’ College Student Mariha Issadeen Participates in Interview with the Prime Minister

An interview with the Honorable Dr. Harini Amarasuriya, Prime Minister of the Democratic Socialist Republic of Sri Lanka and Minister of Education, Higher Education, and Vocational Training, took place on Saturday, March 22, 2025, at the Temple Trees.

In this event, Miss Mohamed Issadeen Mariha Aaliya, an Advanced Level Science stream student from the English Medium section of Kalmunai Mahmood Ladies’ College, participated.

The full interview will be broadcast on Swarnavahini on Monday, March 24, 2025, at 10:00 PM.

We take immense pride in the fact that Kalmunai Mahmood Ladies’ College (National School) was one of the six schools selected to participate in this prestigious interview.

We extend our heartfelt congratulations and best wishes to Mariha Aaliya for her outstanding participation. Additionally, we express our sincere gratitude to the Principal of the College, Mrs. A.P. Nasmiya Sanoos (SLEAS), for her dedication and efforts in facilitating this opportunity for the student.

Dr. A.M.M.Issadeen அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வானது பொத்துவில் கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்...
18/03/2025

Dr. A.M.M.Issadeen அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வானது பொத்துவில் கலாச்சார மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இளைஞர்கள்,உலமாக்கள் உட்பட பெருமளவான பிரதேசவாசிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் பொத்துவில் சபீலுர் றஷாத் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் கையூம் மௌலவி (ஷர்க்கி) அவர்கள் மார்க்கச் சொற்பொழிவை நிகழ்த்திச் சிறப்பித்திருந்தார்.

The annual Iftar event organized by Dr. A.M.M. Issadeen was held yesterday at the Pottuvil Cultural Hall.
A large number of local residents, including youth and scholars, participated in this event. The principal of Pottuvil Sabeelur Rashad Arabic College, Ash-Sheikh Kayum Mawlavi (Sharqi), graced the occasion with a special religious sermon.

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு!அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி...
02/03/2025

முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்வு!

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பிரிவில் இயங்கி வருகின்ற முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கு சுகாதார அபிவிருத்தி தொடர்பான ஆலோசனை வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்வு அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் (27) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது, முன்பள்ளி பாடசாலை எவ்வாறு அமையவேண்டும், அப்பாடசாலையில் எவ்வாறான விடயங்கள் உள்ளடங்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல்களை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் வழங்கி வைத்தார்.

மேலும் சிறுவர்களுக்கான பாதுகாப்பு, அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் போன்றவற்றை எவ்வாறு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான நற்பண்புகள், நல்லெண்ணங்கள், நற்சிந்தனைகள் போன்றவற்றை எவ்வாறு போதிக்க வேண்டும் என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அத்துடன் அவர்களுக்குத் தேவையான போசாக்கு நிறைந்த உணவுப் பழக்கவழக்கங்களையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் எடுத்துரைத்தார்.

"வளமான பெற்றோர்களிடமிருந்து ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு!"வளமான பெற்றோர்களிடமிருந...
17/02/2025

"வளமான பெற்றோர்களிடமிருந்து ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு!

"வளமான பெற்றோர்களிடமிருந்து ஆற்றலுள்ள பிள்ளைகளை உருவாக்குதல்" எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், அவர்களின் கணவர்களுக்குமான ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கு அட்டாளைச்சேனை யாடே மண்டபத்தில் (15) இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் தொற்று நோயியல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பசால், ஒலுவில் பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தார் ஏ.எல்.அலாவுடீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு, கர்ப்பகால ஊட்டச்சத்து சமநிலை முக்கியத்துவம்
அவர்களின் கிளினிக் வருகை, கணவர்களின் பங்களிப்பு மற்றும் குழந்தை பிறந்த பின்னர் தடுப்பூசி ஏற்றுதல் தொடர்பான அறிவுரைகளை
வழங்கி வைத்தனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சஹிலா இஸ்ஸடீனின் அறிவுரைக்கமைய இடம்பெற்ற இந்த ஒருநாள் கருத்தரங்கில் 200 இற்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களும் அவர்களின் கணவர்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

"Creating Powerful Children from Wealthy Parents" One-day Awareness Seminar!

A one-day awareness seminar for pregnant mothers and their husbands under the Addalachenai Divisional Medical Officer Division was held at the Addalachenai Yade Hall (15) under the theme "Creating Powerful Children from Wealthy Parents".

The seminar, chaired by Addalachenai Divisional Medical Officer of Health Dr. A.M.M. Issadeen, was attended by Kalmunai Regional Health Services Infectious Diseases Medical Officer Dr. Basal and Oluvil Divisional Hospital Medical Officer Dr. A.L. Alauddin, participated as resource persons and provided advice on the importance of nutritional balance during pregnancy, their clinic visits, the role of husbands and vaccination after the birth of the child.

It is noteworthy that more than 200 pregnant mothers and their husbands participated in this one-day seminar, which was held on the advice of the Kalmunai Regional Health Services Director, Dr. Sahila Issadeen.

தாதிய உதவியாளர் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று,  தாதிய உதவியாளர் மாணவர்களுக்கான பிரியாவிடை ...
01/02/2025

தாதிய உதவியாளர் மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு

2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று, தாதிய உதவியாளர் மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு INPS Campus, Akkaraipattu இல் நடைபெற்றது.

அனைத்து மாணவர்களுக்கும் அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான உழைப்பிற்கான பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட Dr. AMM. Issadeen , (பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, அட்டாளைச்சேனை) அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிகழ்வை சிறப்பித்த அனைத்து விஷேட விருந்தினர்கள், மாணவர்கள் மற்றும் INPS Campus உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Nursing Assistant Students Farewell Ceremony

On 17th January 2025, we held a farewell ceremony for our Nursing Assistant students at INPS Campus, Akkaraipattu. We were honored to have Dr. AMM. Issadeen,(Medical Officer of Health, Addalaichenai,) as our Chief guest for the occasion. His valuable presence and encouragement added great significance to the event.

We extend our congratulations to all the graduates for their dedication and hard work. Your success is a testament to your commitment to the healthcare field.

A special thank you to all the Guests, staff and students, who contributed to making this event memorable. We wish all our graduates the very best as they embark on their future careers in healthcare.

சுகாதார சேவைகளை மேம்படுத்த உபகரணங்கள் வழங்கி வைப்பு!அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மக்களி...
23/12/2024

சுகாதார சேவைகளை மேம்படுத்த உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் காரியாலயத்துக்கு தேவையான மிகப் பெருமதியான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு மிக நீண்ட காலத்தேவையாக காணப்பட்டு வந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறு, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் அவர்களினால், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸடீனிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்த உபகரணங்களும், தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு (21) குறித்த, அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சகிலா இஸ்ஸடீன் அவர்களினால் போட்டோ கொப்பி மெஷின், பெக்ஸ் மெஷின் மற்றும் மேசை, கதிரைகள் என்பனவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சி.எம்.மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பொத்துவில் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இன்று விதவைகளுக்கான அனர்த்த நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் Lion Zon...
01/12/2024

பொத்துவில் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் இன்று விதவைகளுக்கான அனர்த்த நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் Lion Zone Chairman டாக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன்,President மாஸ்டர் எம்.எம்.அமானுல்லா(தாதி உத்தியோகத்தர்) மற்றும் ஏனைய கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதில் சுமார் 50 பயனாளிகள் பயன்பெற்றனர்.

Disaster relief for widows was provided today under the auspices of the Pothuvil Lions Club. Lion Zone Chairman Dr. A.M.M. Issadeen, President Master M.M. Amanullah (Nurse Officer) and other club members were present at the event. Approximately 50 beneficiaries benefited from this.

காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது அன்றாட ஜீவனோபாயம் கஷ்டத்திற்குள்ளான எமது பிரதேச லேன்ட் மாஸ்டர் தொழிலாளர்க...
30/11/2024

காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது அன்றாட ஜீவனோபாயம் கஷ்டத்திற்குள்ளான எமது பிரதேச லேன்ட் மாஸ்டர் தொழிலாளர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் அவர்களால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.இதன் போது எமது பகுதியின் தன்னார்வத் தொண்டர்களும் பௌதீக உதவிகளை வழங்கியிருந்தனர்.

Address

Pottuvil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr AMM Issadeen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr AMM Issadeen:

Share

Category