Dr. S. Hayakirivan

Dr. S. Hayakirivan Travel with Dr. S. Hayakirivan I'm Dr. S. Hayakirivan, who graduated as a Bachelor of Siddha Medicine and Surgery at the Trincomalee Campus of EUSL.

I finished my Diploma in Counseling at the National Institute of Social Development with a duration of 2 years and my Diploma in Human Rights at the Centre for Study of Human Rights, University of Colombo, with a duration of 1 year. I am studying a Master of Science in Applied Epidemiology at the University of Peradeniya and a Bachelor of Law (LLB) at the Open University of Sri Lanka. I have enough experience working at the base levels of the community.

இயற்கை சார் எண்ணக்கருக்களை முன்வைத்து துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொண்டுள்ள மீரா பாரதியின் வருகையை முன்னிட்டு இன்று (1...
15/02/2025

இயற்கை சார் எண்ணக்கருக்களை முன்வைத்து துவிச்சக்கர வண்டிப் பயணம் மேற்கொண்டுள்ள மீரா பாரதியின் வருகையை முன்னிட்டு இன்று (14.02.2025) மாலை 5.00 மணிக்கு திருகோணமலையில் தளம் அமைப்பின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் ஒன்று தளம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இலங்கையின் பருத்தித்துறையிலிருந்து பொத்துவில் வரை துவிச்சக்கர வண்டி பயணத்தை மேற்கொண்டு வரும் மீரா பாரதி துவிச்சக்கர வண்டிகளுக்காக தனிப்பட்ட பாதைகள் உருவாக்கப்பட வேண்டும், துவிச்சக்கர வண்டி பயன்பாட்டின் தேவைப்பாடு, ஊள்ளூர் உற்பத்தி போன்ற முக்கிய கருத்துக்களை முன்வைத்து இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

இந்த கலந்துரையாடலில் ஒரு பகுதியாக "உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல்" எனும் தலைப்பில் திரு. இ. கேஷிகன் அவர்களும், "உள்ளூர் அறிவை ஆவணப்படுத்தல்" எனும் தலைப்பில் வைத்தியர். சி. ஹயக்கிரிவன் அவர்களும், கரையோர பாதுகாப்பு திணைக்கள முகாமையாளர் திருநாவுக்கரசு ஸ்ரீபதி அவர்கள் கடல்சார் வள பாதுகாப்பு தொடர்பிலும் முக்கியமான கருத்துரைகளை வழங்கினர்.

திருகோணமலையை சேர்ந்த செயற்பாட்டாளர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

🎯 தளம் - உங்கள் முன்னேற்றத்திற்கான முதற்கட்ட படி!
தொடர்புக்கு:
📞 077 624 3212
🔗 WhatsApp: https://chat.whatsapp.com/Cd0DMXGJJJg8pqLwI5QUzc

#தளம் #மீராபாரதி #துவிச்சக்கரவண்டி #பயணம் #கலந்துரையாடல்

17/10/2024

Blood Donation!
இன்று! 9.00 am - 1.00 pm! தளம் அலுவலகம்!
0776243212

11/05/2024

இன்று Blood Donation! குருதி சொரிந்த நாட்களில், குருதி கொடுத்து நினைவேந்த, எல்லோரையும் அழைக்கின்றோம்!
தளம் 0776243212

Decluttering என்பது மினிமலிசக் கொள்கையின் அக்கா தங்கை எனலாம். மினிமலிஸம் என்றால் நமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்...
04/03/2024

Decluttering என்பது மினிமலிசக் கொள்கையின் அக்கா தங்கை எனலாம். மினிமலிஸம் என்றால் நமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பதாகும். Decluttering என்றால் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் பொருட்களில் தேவையில்லாதது எது என்பதைக் கண்டறிந்து நீக்குவதாகும்.

நம் வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களைச் செய்வது மட்டும் வெற்றிக்கு வித்திடாது. நாம் செய்துவரும் தீய விஷயங்களை கைவிடுவது மூலமாகவும், வெற்றி இலக்கை அடையும் நேரத்தை அதிகப் படுத்தலாம்.

முதலில் நாம் தங்கியிருக்கும் அறை தான் நம் எண்ணங்களுகாண திறவுகோல் எனலாம். நம்மைச்சுற்றி என்ன பொருட்கள் இருக்கிறதோ அது சார்ந்த சிந்தனைகளும் செயல்களிலுமே நாம் ஈடுபடுகிறோம். உதாரணத்திற்கு எனது அறையில் டிவி,கணினி, மியூசிக் சிஸ்டம் என இவை மூன்றும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

நான் வெறுமையை உணரும் சமயங்களில் எனக்கு எதிரில் இருக்கும் இவை மூன்றின் மீதுதான் என்னுடைய கவனம் செல்ல ஆரம்பிக்கும். எதையும் செய்யாமல் பாட்டு கேட்பதால், டிவி பார்ப்பதால் எனக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் எதுவும் கிடையாது. இதுவே என்னுடைய அறையில் உள்ள டிவியை, மியூசிக் சிஸ்டத்தை வேறு அறைக்கு மாற்றிவிட்டு, ஒரு புத்தக அலமாரியை எனது அறையில் வைத்தால் நான் என்ன செய்வேன்?

நிச்சயமாக, நான் படிக்கிறேனோ இல்லையோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன்.

இது போன்று நம்மை நம் செயல்களிலிருந்து திசைத் திருப்பும் விஷயங்களை விலக்கி வைப்பது மிகவும் முக்கியம்.

எனவே உங்களுடைய இலக்கு எதன்மீது இருக்கிறதோ அது சார்ந்த பொருட்களை உங்களுடைய அறையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அச்செயலை செய்ய வேண்டுமென்று எண்ணத் தூண்டுதல் தான் தொடக்கப் புள்ளியாக அமைந்தது ஒரு ஈடுபாட்டை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அதைத்தாண்டி நம்மை திசை திருப்பும் விஷயங்கள் நம் அறையில் இருக்கும் பொழுது, நமக்கு இன்பத்தையே ஏற்படுத்தும் அவற்றின் மீது தான் நம் கவனமானது விரைவில் ஈர்க்கப்படும்.

-படித்தது

 #மனைவி ஒரு நாள் தன்  #கணவனுக்குப்பிடித்த  #மீன் குழம்பு  #சமைத்தாள்.இன்று எப்படியும்  #பாராட்டு வாங்க வேண்டும் என்று கா...
25/02/2024

#மனைவி ஒரு நாள் தன் #கணவனுக்குப்
பிடித்த #மீன் குழம்பு #சமைத்தாள்.

இன்று எப்படியும் #பாராட்டு வாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.
தெரு முழுதும் மீன் குழம்பு வாசனை.
கணவன் வந்ததும் வேகமாக சாப்பிட
அமரச் சொன்னாள்,

மனைவி சாப்பாடு #பரிமாறினாள்.
" என்னங்க குழம்பு எப்படி இருக்கு ?

" நல்லா இருக்கு ஆனாலும் எங்கம்மா
கைப் பக்குவம் உனக்கு இல்ல....!
எங்கம்மா வைப்பாங்க பாரு மீன்குழம்பு
தெருவே மணக்கும்... அப்பப்பா.......ருசி
சூப்பரா இருக்கும்.
அம்மா குழம்பின் ருசியை பாராட்டி கணவர் எழுந்தார்.

மனைவிக்கு மிகவும் #கஷ்டமாக இருந்தது
தன் கணவன் குழம்பின் ருசியை #பாராட்டததை நினைத்து.
எப்ப பாரு "அம்மா...அம்மான்னு அவரு #அம்மாவைத்தான் தூக்கி வச்சு பேசுவாரு என்று முணுமுணுத்தாள்.

அப்போது அவளுடைய #மகன் சாப்பிட வந்தான். மகன் ஒருவாய் சாப்பிட்டு விட்டு அம்மாவை பாராட்ட ஆரம்பித்தான்.
அம்மா "சூப்பர்மா " எப்படிம்மா இப்படி #சமைக்கறீங்க..? தெருவே மணக்குது.

உங்க அளவுக்கு யாராலயும் மீன்குழம்பு வைக்க முடியாதும்மா " என பாராட்டினான்.
அவளுக்குப் புரிந்தது... ஒரு மகன் யார் கையில் சாப்பிட்டாலும் தன் தாயின் சமையலைத் தான் அதிகம் பாராட்டுவான் என்று.

நம் மகனும் அம்மா.. அம்மா என்றுதானே
உயர்த்திப் பேசுகிறான்.
மகன் பேசுவது #தவறில்லை என்றால் கணவன் பேசியதும் #தவறில்லை தான். என்று புரிந்து கொண்டாள்.

#புரிந்து கொள்ளும் ஒரு #மனைவி இருந்தால் அவளும் #அம்மாதான் #கணவனுக்கு..! ❤️

ஒரு மனிதன் ஒரு முனிவரிடம் சென்று சுவாமி 'ஞானம் என்றால் என்ன?'  என்று கேட்டான்.அதற்கு முனிவர் ஞானம் என்றால் ' இன்பத்தில் ...
19/02/2024

ஒரு மனிதன் ஒரு முனிவரிடம் சென்று சுவாமி 'ஞானம் என்றால் என்ன?' என்று கேட்டான்.

அதற்கு முனிவர் ஞானம் என்றால் ' இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் சோர்வடையாமலும் இருப்பதுதான் ' என்றார். அதை நீங்கள் ' எங்கு கற்றீர்கள்? ' எனக் கேட்டான். நான் அதை ஒரு கழுதையிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்றார் முனிவர்.
வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. கழுதையிடம் இருந்து கற்றுக் கொண்டீர்களா எப்படி என்று கேட்டார். நீங்கள் இன்று போய் நாளை காலையில் ஆசிரமத்துக்கு வாருங்கள் என்று வந்தவரை அனுப்பி விட்டார் முனிவர்.

மறுநாள் காலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த அவரை முனிவர் உட்காரவைத்தார். கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக ஒரு கழுதை சென்றது அதை காட்டியிருக்கிறார் முனிவர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முனிவர் கூறியிருக்கிறார் ' இந்த கழுதை ஒவ்வொரு நாளும் காலையில் அழுக்கு மூட்டைகளை சுமந்து செல்கின்றது. கொஞ்ச தூரத்தில் ஒரு ஆறு இருக்கிறது அங்கே போய் இந்த அழுக்குத் துணிகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் சுத்தமான துணியுடன் மாலையில் திரும்பி இந்த வழியாக வருகிறது'.

இந்தக் கழுதை மாதிரி நாம் இருக்க வேண்டும். காலையிலே போகும்போது அழுக்கு மூட்டைகளை சுமந்து செல்கிறோம் என்ற வருத்தமும் அதற்கு இல்லை. மாலையில் திரும்பி வரும்போது சுத்தமான துணிகளை சுமந்து கொண்டு வருகிறோம் என்கிற மகிழ்ச்சியும் அதற்கு இல்லை .இதை பார்த்து தான் நான் ஞானத்தை கற்றுக் கொண்டேன் என்றாராம் முனிவர்.

ஆம் தியேட்டருக்குச் சென்று ஒரு படம் பார்க்கின்றோம். ஒரு நீர்வீழ்ச்சி அதில் நீர் வழிகிறது படம் முடிந்தால் திரை நனைந்து இருக்காது. அதே போல் தீப்பிடித்து எரிகின்ற காட்சிகள் வருகின்றது. ஆனால் அந்தத் திரை கருகிப் போகாது. படத்தில் வருகின்ற நீரும் நெருப்பும் அந்த திரையை பாதிப்பதில்லை.

நாம் அந்தத் திரை மாதிரி இருக்க வேண்டும். அந்தப் பக்குவம் நமக்கு வந்துவிட்டால் எந்த இன்பமும் துன்பமும் நம்மை ஒன்றும் செய்யாது.

யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. கற்றுக் கொடுப்பவர் யாராகவும் இருக்கலாம் ஆனால் நாம் எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

குழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும் - ஓர் உளவியல் பார்வை'குழந்தைகளை வளரவிடுங்கள் வளர்க்காதீர்கள்- எதிர்க...
11/02/2024

குழந்தை வளர்ப்பில் பொற்றோரின் தவறுகளும் தோல்விகளும் - ஓர் உளவியல் பார்வை

'குழந்தைகளை வளரவிடுங்கள் வளர்க்காதீர்கள்- எதிர்கால சந்ததியை சிறப்பக வடிவமைப்போம்'

இன்றைய சூழ்நிலையில் வீட்டிலிருந்து கடந்தகால, நிகழ்கால, எதிர்கால சிந்தனைகளோடு காணப்டும் இவ்வேளை, எமது எதிர்கால சந்ததிகளான பிள்ளைகளின் வளர்ப்பில் பெற்றோரும், சமூகத்தவரும் விட்ட தவறுகளை மீட்டிப்பார்த்து சரி செய்ய ஓர் வாய்ப்பினன பெற்றுள்ளோம். ஒவ்வொருவரும் குழந்தைகளும் ஒவ்வவொரு நோக்கத்திற்காகப் படைக்கப்பட்வர்கள் ஆளுமைப்ப பண்புகளாலும் வேறுபட்வர்கள்.குழந்தை வளர்ப்பில் நாம் பல இடங்களில் பிழைவிடுகின்றோம் என்பதை நாம் விளங்கிக் கொள்ள் வேண்டும்.

இன்றைய பெற்றோர்கள் என் பிள்ளை 'டொக்ராக' வருவான், 'இஞ்சினியரா' வருவான் என்று முன் கூட்டியே தீர்மானித்து விடுகின்றனர். ஆரம்பத்தில் குழந்தைகளின் பால் வேறுபாட்டை அறிந்து அதன் ஆடைகளின் நிறங்களை தீர்மானித்த காலம் கடந்து, கருவிலே உள்ள பிள்ளை மருத்துவ, விஞ்ஞான, கணித அறிவுடன் வர வேண்டும் என்றும் கர்ப்பிணிகள் குடும்பத்தையும் கவனிப்புக்களை விடுத்து கனவுலகில் இருக்கும் வரை வெளிவராமல் அறியாத குழந்தை புதிய உலகில் எதுவிதமான வேறுபாடுகளும் இன்றி ஓர் அழுத்தத்துடன் பிரவேசிப்பதுடன் அதன் ஆளுமை பெரும் பங்கு பெற்றோரால் தீர்மானிக்கப்படுகின்றது.

இந்தப் போக்குப் பிள்ளை மூன்று வயதை அடையும் போதே முன்பள்ளிக்கு அனுப்புதல், முன்பள்ளியில் பெற்றோரைப் பிரிந்து பிள்ளை அழுதபடி தனித்திருந்து சிந்திக்கின்றது. பெற்றோரின் அன்பு அரவணைப்பு தேவைப்படும் கால கட்டங்களில் அதற்கு அறிவு வழங்கப்படுவது குழந்தை உள்ளத்தை மிகவும் பாதிக்கின்றது. சில வேலைக்கு செல்லும் பெற்றோர் பிள்ளைகளை காப்பகங்களில் விடுதல், போதிய தாய்பாலூட்டல் இன்மை என்பனவும் குழந்தைதைகளின் ஆளுமையைப் பாதிக்கின்றது.

பெற்றோர்கள் தமது நிறைவேறாத ஆசைகளை பிள்ளைகளின் மேல் திணிக்கின்ற தன்மை மிகவும் ஆபத்தானது "நான் வைத்தியராக வர ஆசைப்பட்டேன் முடியவில்லை" எனது பிள்ளையாவது வர வேண்டும் என்ற எண்ணமும், "எனது அயல் வீட்டுக்காரனின் பிள்ளை போன்று எனது பிள்ளையும் கற்க வேண்டும்" என்ற சிந்தனை பெற்றோர்கள் தேவையற்றதும். அதிகமானதுமான எதிர்பார்ப்பினை பிள்ளைகள் மீது வைப்பதற்கு காரணமாகின்றது.

இதனால் பிள்ளைகள் தமது பெற்றோரின் விரும்பங்களை நிறைவேற்ற தவறுமிடத்து அல்லது முடியாமல் போகுமிடத்து அவர்கள், தாம் தமது பெற்றோரின் நம்பிக்கைக்கு பாத்திரமற்றவர்களாகவும், அதனை இழந்தனர்களாகவும், மனதுடைகின்றனர். தன்னுடைய பிள்ளையின் திறன் என்ன? அவனால் எதனை சிறப்பாக செய்ய முடியுமென கண்டறிந்து ஊக்கப்படுத்தும் பெற்றோர்கள் இத் தவறினை செய்வதில்லை. ஏனையவர்கள் அனைத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும் எனக் கூறி பிள்ளையின் திறமைக்கு அப்பாற்பட்ட வேலையைக் கொடுக்கின்றனர் அதனை செய்து முடிக்குப்படி அவர்களிடம் எதிர்பார்க்கின்றனர்.

இதற்காக பிள்ளையின் நண்பர்களுடன் மற்ற சகோதரர்களுடன் ஒப்பிடுகின்றனர். "அவனைப் பார் அவன் நன்றாகச் செய்கின்றான் பரிசு வாங்குகின்றான்" உன்னால் ஏன் முடியவில்லை? என உரத்த சத்தமாக சில கடின வார்த்தைகளையும் பாவித்து வருகின்றனர்.சில சமயம் அடிக்கவும் செய்கின்றனர். இத்தகைய செயற்பாடுகள் பிள்ளைகள் தனது நண்பர்களை ஏன் சகோதரர்களைக் கூட வெறுக்கவும் எதிரியாகவும் தூண்டுதலாகின்றது. இத்தகைய செயற்பாடுகள் பெற்றோரால் தொடரப்படும் போது பிள்ளைகள் மற்றவர்களுடன் சேர விருப்பமற்றவர்களாகவும், வெறுப்பினை காட்டும் மனப்பான்மைக்கும் மாற்றப்படுவார்கள. பெற்றோர் பிள்ளைக்கு அறிவுரை கூறும் போது அவர்களின் சூழ்நிலை அறிந்து அன்பாகக் கூற வேண்டும். சில பெற்றோர்கள் வீட்டில் ஆசிரியர்கள்; அதிபர்கள், பொலிஸ் போன்றும் மாறிவிடுகின்றனர்.ஆனால் பெற்றோர் வீட்டில் அந்த வகிபங்கை எடுத்துக் கொள்வது சிறுவர்கள் பாடசாலைச் சூழலை வெறுக்கக் காரணமாகின்றது.

பிள்ளையை விளையாட விடாமல் எல்லா நேரங்களிலும் வீட்டிலும் கற்பித்தல் முதலாம்; ஆண்டு கற்பிக்கும் போதே மேலதிக வகுப்புக்களுக்கு விடுவதும், அதிகரித்த வீட்டுப்பாடங்களை பிள்ளைக்கு வழங்குவதும் இன்றை காலக் கற்றல் முறை பாடத்திட்டங்கள் இன்னமும் இதற்கு காரணம் ஆகலாம். ஆனால் பெற்றோர் தமது பிள்ளையை உணர்ந்து அவனது இயல்பினை அறிந்து கற்பிக்க வேண்டும். வீட்டிலும் பலமணிநேரங்கள் கற்பிக்கும் போது எருமை, சனியன், நாயே, மூதேவி, மூஞ்சையைபார், ஏன் பிறந்தாய்?, உயிரை வாங்காதே என்றும் மற்றவர்களுடன் ஒப்பிடுதல் முட்டாள்; மூளை இல்லாதவன் என இன்னும் பல வார்த்தை பிரயோகங்களை கடினமாக மேற்கொள்ளுதல் என்பனவும் கட்டாயப்படுத்தி பாடங்களை சொல்லி கொடுப்பதும் பிள்ளையின் கற்றலை ஆர்வத்தை பாதிப்பதுடன் குற்ற மனப்பணான்மையுடையவானகவும்,தாழ்வு மனப்பான்மையுடையவானகவும் வளர்வதுடன் எதிர்காலத்தில் அவனது ஆளுமையையும் பாதிக்கின்றது.

பெற்றோர் தமது பிள்ளையின் நண்பனின் பெற்றோர்களுடன் கதைத்தல் அவர்களின் தனிப்பட்ட போட்டி, எனது பிள்ளை உனது பிள்ளை என்ற போட்டி பெற்றோரின் கௌரவம், கல்வி நிலை என்பன பிள்ளையின் மீது கற்றல் சுமையாக திசைதிருப்பப்படுகின்றது. சில பெற்றோர் பகை உணர்வுகளை வார்த்தையை பிள்ளையில் காண்பித்தல். உதாரணமாக அவனைப்போல வந்தியோ? அவனைவிட புள்ளி குறைவாக எடுத்தாயோ?; என்ன நடக்கும் பார்? என கண்டிப்பாக கூறுதல், பிள்ளைக்கு சகோதரங்களுடன், சக நண்பர்களுடன்,சமூகத்துடனும்பயம்; கோபம் பழிஉணர்வு மற்றும் தாக்க வேண்டும் என்ற வன்போக்கான எண்ணப்பாடுகள் சிறுவயதிலேயே மறைமுகமாக பெற்றோரால் விதைக்கப்படுகின்றது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

காலையிலே பாடசாலைக்கு செல்ல பிள்ளை ஆயத்தமானதும் பெற்றோர் பாட புத்தகம் கவனம் ,தண்ணீர் போத்தல், சாப்பாட்டுப் பெட்டி கவனம் உடுப்பை ஊத்தையாக்காதே, அவனை போல் (நண்பனை) போன்று ஒழுங்காக செய், பென்சில் துலைத்தால் அடிப்பேன், நான் சிரமப்பட்டு வாங்கித்தருகிறேன் என பல வார்த்தைகளை செய்யாதே ,செய்யாதே என எதிர்மறையாக பட்டியல் இட்டபடி வாசலில் 'போய்ட்டு வருகிறேன் அம்மா' செல்லும் வரை 'கவனம் கவனம்'; என கூறி அனுப்பிவைத்து இரவிரவாக பாடம் சொல்லி கொடுத்து காலையில் புத்திமதிகளை கூறி அக்கறையாக அனுப்பிவைப்தாக நம்புகின்றனர்.

ஆனால் பிள்ளை இரவு மேலதிகமாக கற்கும் போதே கல்வியை சுமையாக சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றான். காலையில் அயர்ந்து தூங்கும் அவனை “எழும்பு பாடசாலைக்கு நேரமாகிறது” என்று கூறியதும். அவனுக்கு மேலும் வெறுப்பு ஏற்படுகின்றது. தொடர்ந்து பெற்றோர் கூறும் “செய்யாதே, கவனம் என திரும்பத் திரும்ப கூறும் வார்தைகள் அவர்களை எரிச்சலடைய செய்து? ஏன் செய்தால் தான் என்ன? எதற்காக அம்மா ஒவ்வொரு நாளும் இப்படி சொல்லுகின்றா? என மனநிலை சிந்திக்கவும் தூண்டுவாதால், குழப்பமான மனநிலையே அவர்களுக்கு காணப்படும்.மேலும் சில பிள்ளை அம்மா தண்டிப்பார் என்பதனால் தனது பொருட்களை நண்பர்களுடன் பகிராமல் நண்பர்கள் எடுத்து விடுவார்கள் என்பதனால் அவர்களுடன் பழகாமலும்; தனித்தும் சமூகமயப்படாத ஓர் ஆளுமையை தமதாக்கிக் கொள்ள தலைப்படுகின்றனர்.

பிள்ளைகளிடம் தொடர்ந்து ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களை செய்! எனக் கூறுவதோ செய்யாதே! எனக் கூறுவதோ பிள்ளையை நெருங்கீட்டுக்கு உள்ளாக்குவதுடன் தவறான, தர்க்கரீயற்ற சிந்தனையை தூண்டிவிடும்.பென்சில் தொலைந்துவிட்டது 'அம்மா அடிப்பா'; என பயந்து நண்பனின் பென்சிலை திருடி தனதாக்கி கொள்ளும் நடத்தைகள் உருவாகும். பிள்ளைகள் பெற்றோர்களுக்கு 'ஆசிரியர் தன்னை பாராட்டினால் பிடிக்கும்' என அறிந்த பிள்ளை, ஆசிரியர் தன்னை பாராட்டியதாக பெற்றோரிடம் பொய் கூறுதல், பாடப்புத்தகங்களில் மற்றவரை பார்த்து எழுதல்,; பெறாமைப்படுதல், தனது பொருள்களில் மட்டும் அதிக கவனம் செலுத்துதல்; மற்றவர்களை மதிக்காமல் நடத்தல்; தனக்கு மட்டும் வேண்டும் மற்றவர்களுக்கு கிடைக்க கூடாது போன்ற விரும்பத்தகாத நடத்தைகளை வெளிப்படுத்துவார். இத்தன்மை தொடரும் போது பிள்ளை அதனது எதிர்கால நல்ல ஆளுமையில் பாதகமாக விளைவுகளை உள்வாங்குகின்றான் என்பதை பெற்றோர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சில பெற்றோர் பிள்ளையின் அனைத்து வேலைகளையும் தாமே செய்தல் வளர்ந்தபின்னும் உணவூட்டல், குளிப்பாட்டுதல், வீட்டுப்பாடங்களை செய்து கொடுத்தல், தனிமையில் விடுதலைத் தவிர்த்தல்; நண்பர்களுடன் பழக தடை விதித்தல்; சில பொருட்களை தூக்கவே விளையாடவோ தடைசெய்தல், நான் பிள்ளையை பாதுகாக்கின்றேன் என்ற உணர்வில் அவர்களது இயல்பான நடத்தைகளை கட்டுப்படுத்தி பிள்ளையின் சிந்தனை ஆற்றல், கற்பனா சக்தி ஆக்கத்திறன் என்பவற்றுடன் தனித்து இயங்கும் ஆளுமையை மழுங்கடித்து தங்கியிருக்கும் ஆளுமைக்கு வித்திட்டு வளர்கின்றனர்.

சில பெற்றோர் பிள்ளை குழந்தை அவனை தண்டிக்காதே எதை செய்தாலும் செய்யட்டும் அவன் குழந்தை என கூறி தவறுகளுக்கு தட்டிகொடுத்து, அதிக செல்லமும் ஆதிக்கமும் கொடுக்கின்றனர்.இவர்கள் பிள்ளைகள் துன்பப்படக் கூடாது,கவலைப்பட கூடாது தனது பிள்ளைக்கு அதிக நன்மை செய்வதாகவும் நினைத்து கொள்கின்றனர்.

இத்தன்மை பிள்ளைகள் எது சரி ? எது தவறு? அறியமுடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் எது சரி ? எது தவறு? உணர்ந்து தண்டனைக்கும், பாராட்டுக்களுக்கும் முகம்; கொடுக்கவும் எதிர்கால சமூகத்தை எதிர்கொள்ளும் பக்குவ நிலையை கல்வியாலும் இதர செயற்பாடுகளாலும் சிறப்புற்று தனித்தன்மை உணர்ந்தவனாக உலகிற்க்கு விடப்பட வேண்டும்.

தன் விருப்பத்திற்கு விடப்படும் பிள்ளை சமூக விரோத ஆளுமைகளை கற்றுக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே கண்டிப்பும் சுதந்திரமும் அதன் அளவிற்கே இருக்க வேண்டும். இவ்வாறு பிள்ளைகளை அதிக சுதந்திரமாக விடும் பெற்றோர் பிள்ளைகள் எதிர்த்து பேசும் போது கவலைப்படுபவர்களாகவும் ; "பிள்ளைக்கு நான் என்ன செய்யவில்லை அவன் இப்படி மரியாதையற்று பேசுகின்றானே" என்றும் கவலைப்படுபவர்களாகவும் காணப்படுவர்.

சிறுபராயம் என்பது தனிமனிதனின் ஆளுமையில் பொரும்பங்கு வகிக்கின்றது மூளையின் சிறப்பான விருத்திக்கு ஏதுவான காலமாக சிறு பராயம் காணப்படுவதனால், இப் பருவத்தில் பிள்ளைக்கு வெறுமனே கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பது என்பது பொருத்தமானதன்று. இப்பராயத்தில் பிள்ளைகள் சிந்தனையை தூண்டும் ஆற்றலை வளர்க்கும் விளையாட்டுக்கள் செயற்பாடுகள் என்பவற்றில் ஈடுபடுத்துவது முக்கியமானதாகும்.

முன்மாதிரியான பெற்றோர்களிடமிருந்து அன்பு, விட்டுக்கொடுத்தல்; கீழ்ப்படிவு மற்றும் பிறருக்கு உதவுதல், போன்ற பல நற்பண்புகளையும் போதித்து தன்னம்பிக்கையும்; ஆர்வமும் உள்ளவர்களாகவும் தன்னையும் பிறரையும் உணர்ந்து தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பவனாக ஒழுக்கம் உள்வனாகவும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இத்தகைய பிள்ளைகள் எதிர்காலத்தில் தனது தனிமனித வாழ்வை மகிழ்வுள்ளதாகவும் சுதந்திரமானதாகவும் இலகுவாக மாற்றி அமைத்து கொள்கின்றனர்.மறுதலையாக அதிக ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு மத்தியில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் ஒதுக்கப்பட்டவராகவும், மற்றவர்களால் விரும்பபடாதவராகவும், உள்ளத்தில் குறைவுள்ளவர்களாகவும்,விமர்சனங்களை தாங்கமுடியாதவர்களாயும்,மனஅமைதியற்று வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகின்றான்.

தனிமனிதனின் ஆளுமையில் சிறப்பும் செழிப்பும் காணப்பட வேண்டுமாயின் அவர்களது சிறுபராயம் ஆரோக்கியமாகவும், வினைத்திறனுள்ளதாகவும் அமைக்கப்பட வேண்டும்; "எல்லாம் விதி "என காலத்தின் மீதும் ,சிறுவர்கள் தானே என அவர்கள் போக்கிலேயே அல்லாமலும் எமது அதீத கட்டுப்பாட்டில் அல்லாமலும் அன்புடனும் அரவணைப்புடனும், பொறுத்தமான முறையில் தவறை திருத்தி உலகை உணர்த்தி வளர்க்கும் போது ஒரு பிள்ளை பிற்காலத்தில் உள நலமுள்ளவனாக மட்டும் அல்ல ஆளுமையில் சமூகநலம் உள்ளவனாகவும் வளர்வான் என்பதில் ஜயம் இல்லை.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவனாவதும்.............................?

26/01/2024
கடைசியா நடத்த நீயா நானா ல கோபி ண்ணா ஒரு Statement சொல்லுவாரு…ஒவ்வொரு நாளும் கடந்து போறப்போ, நாமா நிறைய பேர சந்திப்போம் அ...
24/01/2024

கடைசியா நடத்த நீயா நானா ல கோபி ண்ணா ஒரு Statement சொல்லுவாரு…

ஒவ்வொரு நாளும் கடந்து போறப்போ, நாமா நிறைய பேர சந்திப்போம் அதுல ஒரு School படிக்கிற வயசோ, College/University படிக்கிற வயசோ இருக்கிற பையன் எங்கயும் வேல பாத்திட்டு இருப்பான். அவன யாராச்சும் ஒருத்தராச்சும் அவன் கைய புடிச்சு, ஏன்டா பள்ளிக்கு போறலயா ன்னு கேப்போம், ஏன்னா அவன் என்ன ஆக போறான் ன்ற கவல இவனுக்கு, அந்த படிப்பு இவன என்ன ஆக்கி இருக்கு ன்னும் தெரியும் இவனுக்கு…

அதான் reality, படிப்பு லட்சாதிபதி ஆக்குமா கோடீஸ்வரன் ஆக்குமா ன்னா இல்ல தெரியாது.. ஆனா எல்லாமே கைவிட்டு இது எதுமே இல்ல ன்னு இருக்கப்போ எதாச்சும் ஒரு விதத்துல கை குடுக்கும்.

படிப்பு தர்ற confident அ வேற எதுவும் தந்திடாது, படிக்காம passion மட்டும் நோக்கி ஓடறவன் எப்பயும் ஒரு privileged kid ஆ தான் இருப்பான், passionல தோத்தாலும் அவனுக்கு கைகுடுக்க பொருளாதாரம் or atleast ஒரு வெளிநாட்டு மாமா ஆச்சும் இருப்பாங்க. ஆனா நம்மள மாதிரி 90% பேருக்கு படிப்பு மட்டும் தான் எல்லாம்.

தெரில இப்போ படிச்சா வேல இல்ல குறைவான சம்பளம் அப்டி இப்டி ன்னு நிறைய negativities. ஆனா அத சொல்றவன் எல்லாம் எதோ படிச்சு or வேலைல இருந்துட்டு or Bankல காசு வெச்சிட்டு சொல்லிட்டே இருப்பான். அத கேட்டு நாமளும் பின்னால ஒத்து ஊதிட்டு போவோம்.

University கிடைக்கலாயா, Foreign institutes, private institutions, Techical colleges, vocational training institutions அப்டி இப்டி ன்னு நிறைய options இருக்கு…

படி, படி, எதாச்சும் படிச்சிட்டே இரு என்ன ஆனாலும் படிக்கிறத மட்டும் விட்டுடவே கூடாதுடா..! ♥️🤍✨

மன உறவில் பங்குதாரர்!எங்கள் வாழ்க்கையை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு இலகுவான விடயமல்ல. சிலசமயம் அது ஒரு ச...
20/01/2024

மன உறவில் பங்குதாரர்!

எங்கள் வாழ்க்கையை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்வது என்பது ஒரு இலகுவான விடயமல்ல. சிலசமயம் அது ஒரு சவாலாகக்கூட இருக்கலாம், குறிப்பாக திருமண உறவில் ஒருவர் மற்றவருடன் பல விடயங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுவது இயல்பானது. பகிர்ந்து கொள்ளல் என்பது புரிதலுடன் சம்பந்தப்பட்டது.

புரிந்து கொள்ளல் என்பது சட்டென்று உருவாகும் ஒன்றல்ல. ஒருவர் மற்றவரை மதிப்பதில் இருந்து தான் புரிதல் ஆரம்பிக்கிறது.

மதிப்பும் மரியாதையும் சார்ந்த திருமணம் மட்டுமே நீடிக்கவும் அன்பை அனுபவிக்கவும் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவும் அடித்தளமாக அமைகிறது. இதற்கு இருவரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்.

ஆசை ஆர்வமாகவும் தெளிவாகவும் ஒருவர் மற்றவருடன் பேசுவது திருமணத்தை ஆரோக்கியமாகவும் வெற்றிகரமாகவும் வைத்திருக்க சிறந்த வழிகளில் ஒன்றாகும்.

அன்பாகவும் மரியாதையுடனும் தொடர்பு கொள்வது நல்ல கருத்துப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாகும். ஒரு நல்ல செவிசாய்ப்பவராக இருப்பது அடுத்த பகுதியாகும்.

மன உறவில் ஒருவர் மற்றவரிடமிருந்து எதை விரும்புகிறார் மற்றும் எதை தேவையென எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குவது மன உறவு வலுவடைய முக்கிய விடயங்களில் ஒன்றாகும்.

வீட்டு தேவைகள் பிள்ளைகளின் விடயங்களைப் பற்றி மட்டும் பேசாமல், இருவரும் அவரவர் உணர்வுகளை பேசுவதன் மூலம் தகவல்தொடர்பு வழிகளைத் திறந்து வைத்துக் கொள்ளலாம். மனம் திறந்து பேசுவதன் மூலம் ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் ஒருவர் மற்றவரை பெற்றதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதை கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் சொல்வதன் மூலம் மன உறவில் புதிய கிளைகளை தளிர் விடச் செய்யலாம்.

ஒருவருக்கொருவர் பங்குதாரர். அதனால் ஒருவர் மற்றவருக்கு வீட்டு வேலைகளில், பிள்ளை வளர்ப்பில், உழைப்பில் உதவி ஒத்துழைப்பு வழங்குவதும் நன்றியை வெளிப்படுத்துவதையும் பாராட்டி ஊக்கம் கொடுப்பதையும் பங்குதாரர் இருவரினதும் பொறுப்பாக ஆக்கிக் கொள்ளலாம். இவை இருவருக்கும் இடையே அன்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி எதையும் பகிர்ந்து கொள்ளவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிவிடும்.

உளவியல் ஆலோசனை என்றால் என்ன?உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொ...
13/01/2024

உளவியல் ஆலோசனை என்றால் என்ன?

உளவியல் ஆலோசனை என்பது ஒரு கலந்துரையாடல் போன்றது. ஒவ்வொரு மனிதனும் அவரவர் பிரச்சனைகளை எதிர்கொள்ள வலிமையுள்ளவர்கள். அவ்வலியமையை மேலும் பலப்படுத்துவதே உளவியல் ஆலோசனையின் குறிக்கோள்.
இங்கு அறிவுரைகள் வழங்கப்படுவதில்லை. உங்களின் வாழ்வை மேலும் சிறப்பாக வாழ, உங்கள் பிரச்சனைகளே நீங்களே தீர்த்துக்கொள்ள செய்யப்படும் உளவியல் பூர்வமான உதவியையே உளவியல் ஆலோசனை/ஆற்றுப்படுத்துதல் என்கிறோம்.

உளவியல் ஆலோசகர் என்பவர் யார்?

உளவியல் (Psychology), சமூகப்பணி (Social Work) , ஆற்றுப்படுத்துதல் & வழிகாட்டுதல் (Counseling & Guidance) ஆகிய ஏதாவது ஒரு படிப்பில் குறைந்தபட்சம் முதுநிலை பட்டம் (Post Graduation) பெற்றிருப்பார். எந்த ஒரு பாகுபாடும், நிபந்தனையும் இன்றி, உங்கள் பிரச்ச்சனைகளை வைத்து உங்களை தவறாக நினைக்காது உங்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நல்லுள்ளம் கொண்டவர்.
“மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் நல்லவர்கள், நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்”, “ஒவ்வொரு தனிமனிதனும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்கள், தனித்தன்மை உடையவர்கள். ஆகவே ஒவ்வொரு தனிமனிதனின் பிரச்சனைகளும், மற்றவர்களின் பிரச்சனைகளிலிருந்து வேறுபட்டவை.” என உறுதியாக நம்புபவர்.
குறிப்பிட்ட சில உளவியல் முறைகளை பயன்படுத்தி உங்களை மேம்படுத்தவும், உங்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், பின்னால் வரக்கூடும் பிரச்சனைகளை தடுத்துக் கொள்ளவும் உதவி செய்பவர்.

உளவியல் ஆலோசனை என்பது எதற்காக?

நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் என நம்பினாலும், சில நேரங்களில் மற்றவரிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது” என்பது ஒரு தனிமனிதனின் பலம் என்று சொன்னால் அது மிகையாகாது. பின்வரும் தருணங்களில், உளவியல் பூர்வமான உதவியை நாடுவது மிகவும் அவசியம்.

- அளவுக்கு அதிகமான மன உளைச்சல் இருந்து, அது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் போது
- மனதை சூழ்ந்து கொள்ளும், கட்டாயப்படுத்தும், எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் எழும் பொழுது மன அழுத்தத்துடன் சமாளிக்க இயலாமை
- மணவாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் ஆகியவற்றில் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படும்போது
- படிப்பு/வேலையில் பிரச்சனைகள்/குழப்பம்
- நீடித்த மனச்சோர்வு, பயம்/கவலை
- தூக்கமின்மை/அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படும்போது
- வாழ்க்கை வாழ விருப்பம் குறையும்போது
- நினைப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும்போது
- விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படும்போது
- தற்கொலை, தற்காயப்படுத்தும் எண்ணங்கள் ஏற்படும்போது

Address

28B, Samathu Lane
Trincomalee
31000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. S. Hayakirivan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram