District General Hospital Vavuniya

District General Hospital Vavuniya General Hospital, Vavuniya is the second largest hospital in the province. It caters more than 200,000 people. This hospital was founded around 1900.

It has 16 wards, 557 beds, two operating theatres and Intensive care unit.

கடந்த வாரம் (17.10.2025) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்கண்ணியல் பிரிவிற்காக 138,000 யூரோ பெறுமதியான Yag & Argon Las...
10/11/2025

கடந்த வாரம் (17.10.2025) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்
கண்ணியல் பிரிவிற்காக 138,000 யூரோ பெறுமதியான Yag & Argon Laser
இயந்திரங்களை சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (International Medical
Health Organization)வழங்கி வைத்துள்ளது.
இத் திறப்புவிழாவிற்கு சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தின்
பிரதிநிதிகளாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய
கலாநிதி த.சத்தியமூர்த்தி அவர்களும் சர்வதேச மருத்துவ சுகாதார
நிறுவனத்தின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒருங்கிணைப்பாளர்
திரு.பிரதீபன் அவர்களும் வருகை தந்திருந்தனர். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட
பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. J.M.நிலக்ஸன்,
பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி K.செந்தூர்பதிராஜா, கண் வைத்திய
நிபுணர்- வைத்திய கலாநிதி P.கிரிதரன், திட்டமிடல் அதிகாரி - வைத்திய கலாநிதி
R.பாலமுரளி மற்றும் கண் பிரிவு மருத்துவர்கள் ஏனைய சுகாதார பணியாளர்கள்
கலந்து கொண்டார்கள்
ழ வடமாகாணத்தின் மாவட்ட பொது வைத்தியசாலை வவுனியாவில்
மட்டுமே இவ் இயந்திரங்கள் காணப்படுகின்றமை வவுனியா மாவட்டத்திற்குக்
கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்த புதிய தொழில்நுட்ப இயந்திரங்களின் மூலம்
கண்ணியல் பிரிவில் மேம்பட்ட கண் சிகிச்சை வசதிகள் உருவாகியுள்ளது. இதன்
மூலம் வவுனியா மற்றும் வடமாகாணத்தில் உள்ள பிற
வைத்தியசாலைகளிலிருந்து கண்சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு இவ்
லேசர் இயந்திரங்கள் மூலம் கண் விழித்திரையின் இரத்தக்குழாயில் ஏற்படும்
அடைப்புக்களுக்கான சிகிச்சை, குளுக்கோமா (Glacucoma) கட்டுப்பாட்டுக்கான
சிகிச்சை, இரண்டாம்தடவை ஏற்படும் கண்புரை சிகிச்சை, நிரந்தர கண் பார்வை
இழப்பு போன்ற நோய்களுக்கு மேம்பட்ட கண் சிகிச்சைகள் கிடைக்கும் வாய்ப்பு
உருவாகியுள்ளது.
சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை
தெரிவிக்கின்றோம்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!இந்த ஒளியின் திருநாளில், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றிகளால் நிரம்பி இரு...
20/10/2025

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
இந்த ஒளியின் திருநாளில், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றிகளால் நிரம்பி இருக்க வாழ்த்துக்கள்.
தீபாவளியின் ஒளி, நம்மை எல்லோரையும் அமைதி மற்றும் சாதனைகள் நிறைந்த எதிர்காலத்திற்குத் தரும் வழிகாட்டியாக அமையட்டும்.

Wishing you all a bright and joyful Deepavali!
May this Festival of Lights bring happiness, prosperity, and success to you and your loved ones.
Let the light of Deepavali guide us all towards a future filled with peace and achievements.

ඔබ සැමට සුබ ආලෝක උත්සවයක් වේවා!
මෙම දීපාවලී උත්සවය ඔබට සහ ඔබේ ආදරණීයයින්ට සතුට, සෞභාග්‍යය සහ ජයග්‍රහණ මෙන්ම ආරක්ෂාවද අතුලත් කරයිවා.
දීපාවලීයේ ආලෝකය අප සැමට සාමය සහ සාර්ථකත්වයෙන් පිරුණු අනාගතයක් වෙත මඟ පෙන්වන්නට ආශිර්වාද කරමු.

03/01/2022

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 03.01.2022 தொடக்கம் 07.01.2022 வரை தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு கிளினிக் சிகிச்சை பெறுபவர்களுக்கு, சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மூன்றாம் கட்ட (Booster) தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெற்ற உள்ளது.
எனவே தடுப்பூசி சம்பந்தமான வதந்திகளை நம்பாது உடனடியாக வைத்தியசாலைக்கு சமூகமளித்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

"கொரோனா அற்ற இலங்கையை உருவாக்க அனைவரும் தடுப்பூசி பெற்றுக் கொள்வோம்"

*வவுனியா பொது வைத்தியசாலையின் நட்பு நிலையம் / Mithuru Piyasa*ஒரு மனிதன் உடலாலோ உள்ளத்தினாலோ பாதிக்கப்பட்டு அதிகமாக வரும்...
26/11/2021

*வவுனியா பொது வைத்தியசாலையின் நட்பு நிலையம் / Mithuru Piyasa*

ஒரு மனிதன் உடலாலோ உள்ளத்தினாலோ பாதிக்கப்பட்டு அதிகமாக வரும் இடம் வைத்தியசாலையாகும். எனவே பாதிக்கப்பட்டு வருபவர்களின் பிரச்சனைகளை கேட்டு அவர்களிற்கு சாதகமான சில விடயங்களை கலந்துரையாடுவதன் மூலமாக அவர்களுக்குத் தேவையான சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்கான வழிவகையினை ஏற்படுத்துவதன் மூலமாக குடும்பத்தின் இடையே சுமூகமான நிலையை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதே நட்பு நிலையமாகும்.

*நட்பு நிலைய செயற்பாடுகளின் ஊடாக நாம் நல்லதொரு சமுதாயத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றோம்.

* ஆண் பெண்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் அதிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கி வழிகாட்டுகிறோம்

*குடும்பத்திலும் சமுதாயத்திலும் சந்தோசமாக வாழ்வதற்கு வழி காட்டுகின்றோம்.

* குடும்பங்களிடையே கணவன் மனைவி புரிந்துணர்வுடன் வாழ்வதற்கு வழிகாட்டுதல்

* தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கான வழிகாட்டல்களை வழங்கும் நிலையமாக செயற்படுகின்றது

*எமது நட்பு நிலையம் கச்சேரி பிரதேச செயலகம் போன்றவற்றுடன் இணைந்து செயற்படுகின்றது

* நாம் பல்வேறு சேவைகளை பாதிக்கப்பட்ட பெண்களிற்கு பெற்றுக் கொடுப்பதற்காக அரச அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுகின்றோம்.

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் வளர்ச்சியில் வர்த்தகர் சங்கத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்...
22/11/2021

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் வளர்ச்சியில் வர்த்தகர் சங்கத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும்.

வர்த்தகர் சங்கமானது வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கும் நோயாளர்களின் நலனுக்கும் பெரிதும் உதவியை வழங்கி வருகின்றது.

அந்தவகையில் கொறோனாவிற்கு முன்னரும் கொரோனா காலத்திலும் தொடர்ச்சியாக எமது வைத்தியசாலைக்கு தேவையான அனுசரணைகளை நேரடியாக வழங்கியதுடன் பல கொடையாளர்களை அறிமுகம் செய்து வைத்ததும் குறிப்பிடத்தக்கது.

கொறோனா அதி உயர் சிகிச்சை பிரிவின் விரிவாக்கத்திற்கு Omega Line நிறுவனத்தின் உதவியைப் பெற்றுக்கொடுக்க உறுதுணையாக இருந்ததுடன் நோயாளர்களைப் பார்வையிட வருவோர் காத்திருப்பு மண்டபத்திற்குரிய மின் விளக்குகளும் இவர்களின் ஒருங்கிணைப்பில் Omega நிறுவனத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றது.

கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கும் Oxygen mask with reservoir bag மற்றும் Oxygen double flow meter என்பவற்றை பெற்றுத்தந்தமை கொறோனா நோயாளிகள் அதிகரித்திருந்த வேளையில் மிக முக்கியமான உதவியாக இருந்தது.

இவ்வாறு தொடர்ச்சியான உதவிகள் மேற்கொள்வதுடன் அவசரதேவைகளின் போதெலாம் மறுக்காமல் உதவிவரும் வர்த்தகர் சங்கத்திற்கு வவுனியா வைத்தியசாலை சார்பிலும் பயன்பெறும் நோயாளிகள் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட சுகாதார சேவைகள் தொ...
16/11/2021

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொண்ட பொதுமக்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட சுகாதார சேவைகள் தொடர்பான பின்னூட்டல்களை எமக்கு வழங்குவதற்கு ஏதுவாக எமது வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் அபிப்பிராயப் பெட்டி பொருத்தப்பட்டுள்ளது என்பதை அனைத்து நலன்பெறுவோர்க்கும் தெரியப்படுத்துகின்றோம்.

எனவே எமது வைத்தியசாலையில் சுகாதார நலன் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் தான் பெற்றுக்கொண்ட சுகாதார சேவைகள் தொடர்பான தமது கருத்துக்கள், எமது சேவைகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் எம்மிடமிருந்து தாங்கள் எதிர்பார்க்கும் மேலதிக உடல் உள சார்பான சுகாதார சேவைகள் பற்றிய விபரங்களையும் குறிப்பிட்டு அப் பெட்டியினுள் இடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறான தங்களின் பின்னூட்டல்கள் எம்மால் வழங்கப்படுகின்ற சுகாதாரம் சார் சேவைகளின் முன்னேற்றத்திற்கும் வைத்தியசாலையில் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

"தங்களுடைய ஆலோசனைகள் மற்றும் முறைபாடுகள் மூலம் மேலும் சிறந்த ஆரோக்கியமான சேவையை வழங்க எதிர்பார்க்கின்றோம்"

*வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் குழந்தைகள் பகற்பராமரிப்பு நிலையம் (Day Care)*எமது வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தி...
10/11/2021

*வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையின் குழந்தைகள் பகற்பராமரிப்பு நிலையம் (Day Care)*

எமது வைத்தியசாலை நலன்புரிச் சங்கத்தினால் குழந்தைகள் பராமரிப்பு நிலையமானது வைத்தியசாலை வளாகத்தினுள் நிர்மாணிக்கப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றது.
வவுனியா மாவட்டத்தில் எந்தவொரு குழந்தை பராமரிப்பு நிலையத்திலும் இல்லாதவராக சிறப்பம்சங்களும் சலுகைகளும் காணப்படுகிறது.

01) குழந்தைகள் பராமரிப்பு நிலைய கட்டடமானது பாதுகாப்பான உட்புற வெளிப்புற சூழலையும் பொது வசதிகளையும் கொண்டிருக்கின்றது.

02) அனுபவமும் பயிற்சியும் மிக்க குழந்தை பராமரிப்பாளர்களைக் கொண்டுள்ளது .

03) குழந்தை மருத்துவ நிபுணர்கள்,வைத்தியர்கள், தாதிய பரிபாலகர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் ஆலோசனை.

04) சிறப்பானதும் பயன்மிக்கதுமான பொழுதுபோக்கு அம்சங்கள்.

05) குழந்தைகள் பாதுகாப்பாக விளையாடக்கூடிய வகையில் விளையாட்டு மைதானங்கள்.

06) மன அமைதியான, கவர்ச்சிகரமான தோட்டங்கள், பூங்கன்றுகள்.

07) மொழித்திறன் வளர்ச்சிக்கான பயிற்சிகள்.

08) தங்களுடைய குழந்தைகளின் உடைகள், உடமைகள் என்பவற்றை தனித்தனியாக வைப்பதற்குரிய வசதி.

09) இந்நிலையத்தில் 06 மாதம் தொடக்கம் 03 வயது வரையான குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

10) இடைவெளியில் பெற்றோர் பார்வையிட அனுமதிக்கப்படமாட்டார்கள். தாய்ப்பாலூட்ட வேண்டிய குழந்தைகளாயின் தாய் இடைவெளியில் வந்து தாய்ப்பாலூட்ட முடியும்.

எமது குழந்தை பராமரிப்பு நிலையமானது திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரையும், சனிக்கிழமை காலை 7 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரையும் திறக்கப்பட்டிருக்கும்.
தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய அவர்களின் குழந்தைப்பருவத்தை ஆரோக்கியமானதாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்கு சிறந்த தளமாக எமது வைத்தியசாலை குழந்தைகள் பராமரிப்பு நிலையம் அமைகிறது.

மேலும் எமது குழந்தைகள் பராமரிப்பு நிலையம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ் குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி இலக்கம்:- 0242222761

*உலக கதிரியக்க தினம்* நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆ...
08/11/2021

*உலக கதிரியக்க தினம்*

நவீன மருத்துவ முன்னேற்றத்துக்கு எக்ஸ் கதிர்களின் (X rays) கண்டுபிடிப்பு ஒரு முக்கிய திருப்புமுனை ஆகும். மருத்துவ வரலாற்றில், இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல்கல். விபத்து, எலும்பு முறிவு என்றால் மருத்துவர் பரிந்துரைக்கும் முதல் பரிசோதனை 'எக்ஸ்-ரே' தான். இதுதவிர, முழு உடல் பரிசோதனையில் நுரையீரல் பாதிப்பை கண்டறிய 'எக்ஸ்-ரே' பரிந்துரைக்கப்படும். இதனாலேயே, பெரும்பாலான மக்களிடையே மிகவும் பரிச்சயமான பரிசோதனையாக மாறிவிட்டது ‘எக்ஸ்-ரே’.

இன்றைய மருத்துவ உலகில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை கண்டுபிடிப்பானது, அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நோயின் தன்மையை அறிய பெரிதும் பயன்படக் கூடியதே ‘எக்ஸ்-ரே’ கதிரியக்க முறை. உடலின் உள்ளே ஊடுருவிச் செல்லும் இந்த கதிர்கள், பாதித்த பகுதியின் தன்மையினைப் துல்லியமாக படம்பிடித்துக் காட்டும். குறிப்பாக நமது உடலில் உள்ள எலும்புகளுக்கோ நரம்புகளுக்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு இந்த பரிசோதனை உதவும். வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளில் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றன.

இத்தகைய பெருமை வாய்ந்த ‘எக்ஸ்-ரே’ கண்டுபிடித்த நாளின் நினைவாகவும், மருத்துவப் படிமவியலின் பயன்களை அறியச் செய்தவதற்காகவும் வருடந்தோறும் உலக ‘எக்ஸ்-ரே’ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

05/11/2021

*நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தல்*

தற்பொழுது நாட்டில் நிலவும் கொரோனா கடும் தொற்று காரணமாக வைத்தியசாலை சமூகத்தினரினதும் நோயாளர்களினதும் நலன் கருதி நோயாளர்களை பார்வையிட வருவோர்களுக்கான எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தங்களது உறவினர்களோ/நண்பர்களோ தங்கியுள்ள விடுதியிலிருந்து வழங்கப்படுகின்ற நோயாளர் பார்வையிடும் அட்டையினைக் (Patient visitors Card) கொண்டு ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே உள் நுழைய முடியும்.

நோயாளர்களை பார்வையிடும் நேரம்:
காலை:-6.00-7.00
மதியம்:-12.00-1.00
பின்னேரம்:-5.00-6.00

மேற்குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே நோயாளி பார்வையிடும் அட்டையைக் (patient visitors card) கொண்டு நோயாளர்களை பார்வையிட வைத்தியசாலைக்கு சமுகம் தரவும். தயவுசெய்து மேற்குறிப்பிட்ட நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நோயாளர்களை பார்வையிட வருவதையோ, நோயாளர் பார்வையிடும் அட்டை இன்றி வருகை தருவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

நாட்டு மக்களையும் வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்களையும் பாதுகாத்து அவர்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்கவேண்டிய பொறுப்புடன் வைத்தியசாலை சமூகம் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தருணம் இது. தயவுசெய்து உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் தொடர்ந்தும் முகக் கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

"கொரோனா அற்ற இலங்கையை உருவாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்"

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
04/11/2021

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் காத்திருக்கும் இடம் ( Patient waiting area) இன்ற...
03/11/2021

வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் காத்திருக்கும் இடம் ( Patient waiting area) இன்று 11.30மணியளவில் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த பொதுமக்களினால் திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற வெளி நோயாளர்கள், கிளினிக் நோயாளர்கள், பார்வையாளர்கள், உதவியாளர்கள் ஆகியோர் ஒரே இடத்தில் ஒன்று கூடுவதை தவிர்த்து பொருத்தமான சமூக இடைவெளியை பேணுவதற்காக குறிப்பிட்ட தூர இடைவெளியில் அமர்ந்து இருப்பதற்கு வசதியான கதிரைகளுடன் பிரதான நுழைவாயிலுக்கு அருகாமையில் காத்திருப்பு இடம் (Patient waiting Area) அமைக்கப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் நோயாளர்களின் நலன் கருதி தொலைக்காட்சி பொருத்தப்பட்டு அதில் சுகாதார ஆலோசனைகள், சுகாதார வழிகாட்டல்கள் என்பன ஒளிபரப்பப்படுகின்றது. எனவே பொறுமையாக இத்தரிப்பிடத்தில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒழுங்கமைக்கப்பட்ட கதிரைகளில் சமூக இடைவெளியில் அமர்ந்திருந்து ஒவ்வொருவராக சென்று உங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் பொதுநலன் கருதி அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

எமது வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உள்ளக மருத்துவப் பயிற்சிக்காக வருகை தந்த வைத்தியர்களுக்கான அறிமுகப்பயிற்சி 27...
01/11/2021

எமது வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு உள்ளக மருத்துவப் பயிற்சிக்காக வருகை தந்த வைத்தியர்களுக்கான அறிமுகப்பயிற்சி 27.10.2021 மற்றும் 28.10.2021 நடைபெற்றறு.

உள்ளக மருத்துவப் பயிற்சிக்காக புதிதாக வருகை தந்த வைத்தியர்களை வரவேற்பதுடன் இவ்வளவு காலமும் சிறப்பாக சேவையாற்றி, தங்களுடைய உள்ளக மருத்துவப் பயிற்சியை எமது வைத்தியசாலையில் வெற்றிகரமாக பூர்த்தி செய்த வைத்தியர்களும் வைத்தியசாலை சமூகம் சார்பாக அவர்களின் சேவையை பாராட்டி, வாழ்த்தி ,நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

District General Hospital Vavuniya
Vavuniya Town
43000

Alerts

Be the first to know and let us send you an email when District General Hospital Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to District General Hospital Vavuniya:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category