Sitharkal Ulagam

Sitharkal Ulagam Our Ancient Sidha's Technologiy

11/03/2025

🙏🏽குருவே சரணம் நற்பவி🙏🏽
🙏🏽தனஞ்செயனே போற்றி🙏🏽

இறைவன் எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பதில்லை என்பது தவறான சிந்தனை..இறைவன் யாரிடமும் பாரபட்சம் காட்டுவதில்லை.. எல்லோருக்கும் சமமாகவே கொடுக்கிறான்..ஆனால் அதை பெறுவதில் தான் நாம் வித்தியாசப்படுகிறோம்..

நம் சிந்தனைகளாலும் செயல்களாலும் இறைவன் கொடுப்பதை பெறுவதில் நாம் வித்தியாசப்படுகிறோம்..அவ்வளவுதான்..

எல்லாம் பெறுவதற்கு உண்டான எல்லா தகுதிகளும் இருப்பவர்க்கே மனிதப்பிறவி அமைகிறது..நமக்கு எல்லாம் பெறுவதற்கு தகுதி இருக்கிறது என்பது மட்டும் நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை..

உங்கள் எண்ணங்களால் மட்டுமே உங்கள் வாழ்க்கை கட்டமைக்கப்படுகிறது..உங்களுக்கு தேவையானதை நீங்களே விதித்துக்கொள்கிறீர்கள்..

இறைவன் மங்களகரமானவன் என்றால் அன்பின் வடிவம் என்றால் அவனுக்கு நன்மையை மட்டுமே கொடுக்க தெரியும் என்பது தான் உண்மை..நமக்கான தீமைகளை நாம் தான் உருவாக்குகிறோம்..

ஆகச்சிறந்த படைப்பாளியான இறைவன் தான் படைத்த அனைத்திற்கும் தேவையான அனைத்தையும் சேர்த்தே படைத்துவிட்டான் என்பது தான் சாத்தியமான உண்மை..

உங்களுக்கு என்ன தேவை என்பதை புத்திசாலித்தனமாக தீர்மானியுங்கள்..அதை நீங்கள் தேடவேண்டாம் அதுவே உங்களை நோக்கி வரும்..ஆம் ஒத்தவை ஒத்தவற்றையே ஈர்க்கும்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
முனைவர் போகர் வசீகரன்
போகர் சித்தாந்த சபை
அமரபூண்டி
பழனி

27/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி 🌷

உலகில் நீங்கள் முக்கியமான மனிதனாக இருப்பது பெரிய விஷயமல்ல. ஆனால் முக்கியமான பெரிய விஷயம் நீங்கள் மனிதனாக இருப்பது தான்..மனிதம் இருப்பவர் மட்டுமே மனிதனாக இருக்க முடியும்..

பிறர்க்கு கொடுக்க பணம் இல்லை என்று வருந்தாதீர்கள். பணத்தை கொடுப்பவர் மட்டுமே வள்ளல் என்றில்லை..கொடுக்கும் குணத்தில் தான் ஒருவர் வள்ளலாக முடியும்.. பிறரைக் கெடுக்கும் குணம் உங்களிடம் இல்லை என்றால் குணத்தில் நீங்கள் தான் கோடீஸ்வரர்

பணத்தை விட அதிக மதிப்புடையது மகிழ்ச்சி அதை யாரும் உங்களுக்கு கடனாகக் கூட தரமாட்டார்கள்.ஆனால் நீங்கள் அதை நிறைய கொடுங்கள்..ஏனெனில் கொடுப்பவை பன்மடங்காக திரும்ப கிடைக்கும்.

உங்களுக்கு தெரிந்தது மிகவும் குறைவு என்பதை புரிந்து கொள்ள நீங்கள் பலரை கடந்து செல்லுங்கள். பாடங்கள் தராத அறிவினை பயணங்கள் தந்துவிடும்.

ஆற்றில் வெள்ளம் வந்து செல்லும்போது தான் தான் நதிகள் சுத்தமாகும். வாழ்க்கையில் துன்பங்களை வந்து சென்ற பிறகு தான் மனது தெளிவடைகிறது...இன்பத்தில் குதூகலிக்கும்..ஆனால் துன்பத்தில் மட்டும் தான் மனம் ஞானம் அடையும்..

சலனம் இல்லாத நீரில்தான் பிம்பம் தெளிவாக தெரியும். மனம் அமைதியாக இருந்தால் தான் புத்தி தெளிவாக இருக்கும்.புலன்கள் ஆரோக்கியமாக இருப்பவருக்கு மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

என்ன வருமோ என ஒவ்வொரு நிமிடமும் சந்தேகத்துடனும் பயத்துடனும் இருப்பவர்கள் தான் வாழும் வாழ்க்கையின் நிம்மதியை தொலைக்கிறார்கள்.. வருவது வரட்டும் வாழ்ந்து காட்டுவோம் என்ற மன உறுதி இருப்பவர்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

25/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🔥 தீபாவளி 🔥

முதலில் மெய்யன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

மங்களங்களையும் சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் அற்புத திருநாள்..தீபாவளி

நாம் பிரபஞ்சத்தை கொண்டாட மறந்தாலும் பிரபஞ்சம் நம்மை எப்போதும் காக்க மறந்ததில்லை..ஆம் நம் உடலாகிய சிற்றண்டத்தில் என்ன குறை எப்போது வரும் தெரிந்து அதை சரிசெய்ய ஒரு காலக்கெடு வைத்தும் உள்ளது பிரபஞ்சம் .. அதைத்தான் நாம் திருவிழாக்களாக கொண்டாடி வருகிறோம்..

உதாரணமாக சித்ரா பௌர்ணமி,வைகாசி விசாகம்,ஆடி வெள்ளி,ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,புரட்டாசி சனி,ஐப்பசி தீபாவளி,பெரிய கார்த்திகை.மார்கழி சொர்க்கவாசல்,திருவாதிரை,தை மாதம்,தை அமாவாசை,மகாசிவராத்திரி,மாசிமகம், என வரிசை கட்டி நிற்கிறது திருவிழாக்கள்.அத்தனையும் இயற்கை நம்மோடு பேசும் திருநாட்கள்..நமக்காக இயற்கை நம்மோடு இணையும் அற்புத திருநாட்கள்..

அதில் ஒரு அற்புத திருநாள் தான் தீபாவளி..
தீபாவளி..தீப ஆ வளி.. தீபம் ஈசானன் எனும் காற்றை குறிக்கிறது..ஆ தனஞ்செயனை குறிக்கிறது..ஆ என்றால் பசு என்பதாகும்..பசு என்றால் தனஞ்செயன் ஆகும்..வளி என்றால் காற்று.. ஆக தனஞ்செயனும் ஈசானனும் இணைவதற்கான ஒரு காற்று அங்கே உருவாகிறது என்பதுதான்.தனஞ்செயனுந் ஈசானனுன் இணைந்தால் அதை அர்த்தநாரீஸ்வரம் என்று நாம் சொல்வதுண்டு..

அர்த்தநாரீஸ்வரம் என்றால் ஆண் தன்மையும் பெண் தன்மையும் இணைந்தது என்று அர்த்தமாகிறது..இயக்கம் என்பதாகும்..ஐஸ்வர்யம் என்பதாகும்.மகாலட்சுமி என்பதாகும்..நீங்கள் பலகாலம் செய்த முயற்சிகள் பலனளிக்காமல் போயிருக்கலாம்..அந்த இரண்டு காற்றையும் எப்படி இணைப்பது என உங்களுக்கு தெரியாமல் கூட போயிருக்கலாம்..ஆனால் இயற்கை உங்களுக்காக அந்த வேலையை செய்கிறது..ஆம் அந்த இரண்டு காற்றுகளையும் தீபாவளி நாளில் இணைக்கிறது..சகலவிதமான சக்திகளையும் அள்ளி கொடுக்கிறது..

நரன் எனப்படும் மனிதனுக்குள் அவனை முன்னேற விடாமல் நல்வழியில் செல்ல விடாமல் தடுத்து அவனை கெடுக்கும் அசுர குணத்தை ஈசானனும் தனஞ்செயனும் இணைந்து அந்த குணம் மேலெழும்ப விடாமல் செயல்படவிடாமல் தடுத்து நம்மை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் அற்புத நாள்..ஆம் நரகாசுரன் அழியும் நாள்..மகாலட்சுமி வெளிப்படும் நாள்..உங்கள் வாழ்வில் சகலவிதமான சக்திகளும் ஐஸ்வர்யமும் திரும்ப பெறும் நாள்..சகலவிதமான செல்வங்களையும் அளவில்லாமல் பெறும் நாள்..வெற்றிகளும் நன்மைகளையும் ஆரோக்கியமும் பெறும் நாள்..

தீபாவளி அன்று என்ன செய்ய வேண்டும்..?
நமது சபையில் பிரம்ம முத்தி யோகா உபதேசம் பெற்றவர்கள் அதில் உபதேசமாக கிடைத்த ராஜ மந்திரத்தை ஒரு முகூர்த்த வேளை அதாவது 1.30 மணி நேரம் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்..ஐப்பசி மாத அமாவாசை திதி தொடங்கிய நேரம் முதல் முடியும் நேரத்திற்குள்ளாக எந்த நேரத்திலும் செய்யலாம்..அதிலும் மாலை நேரம் அல்லது காலை சூரிய உதய நேரத்திற்குள்ளாக என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும்...

இன்னும் சிறந்த பலன் கிடைக்க தற்போது நமது சபை உபதேசமாக கொடுத்துவரும் அர்த்தநாரீஸ்வர பீஜம் அல்லது கனகசிந்தாமணி மந்திரத்தை ஜெபித்தால் இன்னும் வெகுசிறப்பான பலனை பெற முடியும்..

தீபாவளி என்றால் எண்ணை தேய்த்து குளித்து தின்பண்டங்களை தின்றுவிட்டு அசைவ உணவுகளை நன்றாக ஒருபிடி பிடித்துவிட்டு மல்லாக்க படுத்து தூங்கி ஓய்வெடுக்க மட்டுமல்ல.நம் வாழ்வை வெகுசிறப்பாக வாழ்வதற்கு பிரபஞ்சம் கொடுக்கும் செய்திகளை உணர்ந்து அதை கெட்டியாக பிடித்துக்கொள்வதற்கும்தான்..

தீபாவளி அன்று இந்த பயிற்சியை செய்வதற்கு நேரம்..
அக்டோபர் 31 மாலை 4.30 மணி முதல் நவம்பர் 1 மாலை 6.20 வரை ( 31/10/2024 4.30 pm to 01/11/2024 6.30 pm ) இடைப்பட்ட நேரத்தில் எந்த நேரத்திலும் செய்யலாம்..
பயிற்சி முடிந்த உடன் தனஞ்செயன் விபூதியை தண்ணீரில் கலந்து வீடு மற்றும் கடைகள் முழுவதும் தனஞ்செயன் மந்திரம் சொல்லி தெளித்து விடலாம்..

நம்மிடம் எந்த உபதேசமும் இதுவரை பெறாதவர்கள் ஓம் ரீங் தனஞ்செயனே போற்றி என்று மட்டும் ஒருமுகூர்த்த வேளை சொல்லலாம்..

முறையாக சொல்லி பலனை பெற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒரு அற்புத வாய்ப்பு வரும் 27/10/2024 - Sunday அன்று பழனியில் விபஞ்சகா உபதேசம் நடைபெற உள்ளது..அன்று கனகசிந்தாமணி மந்திரம்,அர்த்தநாரீஸ்வர மந்திரம்,பஞ்சபூத சிந்தாமணி மந்திரம் உபதேசமாக கிடைக்கும்..கூடவே தனஞ்செயன் விபூதியும் கிடைக்கும்.. பயன்படுத்திக்கொள்ளலாம்..

அல்லாதவர்கள் மேலே சொன்ன மாதிரி தனஞ்செயன் மந்திரம் மட்டும் சொல்லலாம்..

செய்முறை..

பயிற்சி செய்யும் இடத்தில் இரண்டு விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள்.. விளக்கில் விளக்கெண்ணெய் மற்றும் நெய் கலந்து திரி இட்டு தீபம் ஏற்றுங்கள்..
வசம்பு மற்றும் வாசனையான பூக்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாசனையான பத்தி சாம்பிராணி கொளுத்தி வைத்துக்கொள்ளுங்கள்..
தனஞ்செயன் விபூதி அருகில் வைத்துக்கொள்ளுங்கள்..
மந்திரத்தை மணி நேரம் ஜெபம் செய்யுங்கள்..
அவ்வளவுதான்..
இனி வெற்றியும் சந்தோஷமும் ஐஸ்வர்யமும் உங்களுடன் தான்..

நற்பவி
தனஞ்செயனே போற்றி
நற்பவி

25/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி 🌷

பணிவு என்பது அடிமைத்தனம் அல்ல. பணிவு பிறரை அடிமைத்தனம் செய்யாது..பணிவு என்பது தோல்வியின் உணர்வு அல்ல. பணிவுக்கு பெருமையோ ஆணவமோ தெரியாது.

ஆணவமும், அழிவும் இரட்டைக் குழந்தைகள். இரண்டாவது குழந்தை மெதுவாக வளரும் அவ்வளவு தான்.ஆனால் இரண்டுமே மனிதனின் வாழ்வை சிதைப்பவைதான்..

தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவர்கள் தான் மிக எளிதாக ஏமாந்து போகிறார்கள்.

ஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும் வாழ்வை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அவரவர் பாதை, அவரவர் மனம், அவரவர் வாழ்க்கை.அவரவர் கர்மா..

எவரும் உங்கள் வாழ்க்கை பயணத்தை புரிந்து கொள்ளப் போவதில்லை. நீங்கள் பிறந்தது உங்களது வாழ்க்கையை வாழத்தானே தவிர ஒவ்வொருவரும் உங்களை புரிந்து கொள்வதற்காக அல்ல.உங்கள் வாழ்க்கையை உங்களுக்காக வாழுங்கள்..பிறருக்காக வாழ முற்படாதீர்கள்..

ஒரு முறைதான் வாழ்வு ஆனால் அதை வாழ ஓராயிரம் முறை யோசித்தே பயணப்பட வேண்டியதுள்ளது. சின்ன கல்தான் ஆனால் பெரிய கண்ணாடியை உடைக்கும்.சின்னதாய் நுழையும் ஒரு சிறிய கவலைதான் உங்களின் மிகப்பெரிய தன்னம்பிக்கையை உடைத்தெறியும்..

எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்று கொள்ளுங்கள். ஏனெனில் எல்லாமும் எல்லோரும் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.மாற்றங்கள் தானே எல்லாம்..

நம்பி கையை ஊன்றுங்கள் நம்பிக்கையுடன்..நம்பிய கைகள் வேர்களாய் மாறும்..விருட்சமாய் எழுவீர்கள்

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

🙏🏼 குருவே சரணம் நற்பவி 🙏🏼🙏🏼 தனஞ்செயனே போற்றி 🙏🏼ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மெய்யன்பர்களுடன் ஒரு இனிய சந்திப்பு மனநிறைவுட...
24/10/2024

🙏🏼 குருவே சரணம் நற்பவி 🙏🏼
🙏🏼 தனஞ்செயனே போற்றி 🙏🏼

ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மெய்யன்பர்களுடன் ஒரு இனிய சந்திப்பு மனநிறைவுடன்..
Online வழி சத்சங்கம் வாயிலாக..

👉🏼 Date :- 26/10/2024 - சனிக்கிழமை காலை
👉🏼 Time - 5 Am (Indian Time)

🔥 Topic: அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும்.. ( அபூர்வ சித்த ரகசியங்களுடன்.) 🔥

Join Our Zoom Meeting. Link 👇🏻
https://us02web.zoom.us/j/5707961146?pwd=eUk4UEMrOEJGbFRITm9XdUxNdHFjZz09

Meeting ID: 570 796 1146
Passcode: Guru1977

சமுதாய மாற்றம் கலாச்சார விழிப்புணர்வை விரும்பும் அன்பர்களுக்கு இதை பகிரலாமே..
இதற்கு கட்டணம் கிடையாது..உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கு இதை பகிரலாமே..

சத்சங்கம் Zoom app வழியாக நடக்கும்.. Zoom app இல்லாதவர்கள் Download செய்து வைத்துக்கொள்ளவும்..
இணைப்பில் 10 நிமிடங்களுக்கு முன்னதாக இணைந்துவிடவும்..

🙏🏼நன்றிகள்🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼🔥பழனியில் விபஞ்சகா பயிற்சி முகாம்..🔥நமது உடலில் பிரம்மா என்றும் ஆதிசேஷன் என்...
23/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🔥பழனியில் விபஞ்சகா பயிற்சி முகாம்..🔥

நமது உடலில் பிரம்மா என்றும் ஆதிசேஷன் என்றும் விநாயகன் என்றும் மகாலட்சுமி என்றும் சிவம் என்றும் அழைக்கப்படும் தனஞ்செயன் எனும் காற்றையும் ஆதிசக்தி என்றும் அருட்பெரும்ஜோதி என்றும் ஆதிபராசக்தி என்றும் சக்தி என்றும் வாலை என்றும் அழைக்கப்படும் ஈசானன் எனும் காற்றையும் நாற்சந்தி என்றும் நால்வேதம் என்றும் தலையெழுத்து என்றும் அழைக்கப்படும் முக்கியன்,வைரவன்,பிரவஞ்சனன் அந்தர்யாமி எனும் நான்கு காற்றுகளையும் மனிதனை மனிதனாக அடையாளம் காட்டும் விவஸ்தன் எனும் காற்றையும் மட்டுமே அடையாளப்படுத்த அபூர்வ பயிற்சி முறை..

நாம் மறந்துவிட்ட அற்புத கலாச்சார பொக்கிஷம் திருத்தப்பட்ட முறையில்..
ஆதிசேஷன் கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் விபஞ்சகம் என்பார்கள்..
ஆதிசேஷனாகிய தனஞ்செயனின் ஆதிசுவாசத்தை தான் விபஞ்சகம் என்பார்கள்..
விபஞ்சகம் என்றால் பஞ்சபூதங்களுக்கெல்லாம் தலைவன் என்று அர்த்தமாகிறது..
அப்படிப்பட்ட அபூர்வ சுவாமுறையை அடையாளப்படுத்தும் பயிற்சிமுறை ..
உலகில் முதன்முறையாக நமது போகர் சித்தாந்த சபையால்..

பஞ்சபூத சிந்தாமணி மந்திர உபதேசம்..
கனகசிந்தாமணி மந்திர உபதேசம்..
அகத்தியர் அருளிய அபூர்வ தனஞ்செயன் விபூதியுடன்..
மேருதந்த்ரா,சதுர்முகி,தனஞ்செயா,வஜ்ரா எனும் நால்வகை மூச்சுப்பயிற்சிகளுடன்..

விபஞ்சகா உபதேசம் வகுப்பு பழனியில் வரும் 27/10/2024-ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது..
இது காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடக்கும்..
இதற்கான கட்டணம் :- 5000/-

முன்பதிவு செய்வது மிகவும் அவசியம்.
🌷 முன்பதிவுக்கு
👉🏼 7094511381

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

சாலை விபத்தில் மரணம்..பழனி BVB பள்ளியில் 7 வது படிக்கும் மாணவன் இன்று சாலை விபத்தில் மரணம்..காரணம் ஒழுக்கக்கேடான சமுதாயம...
19/10/2024

சாலை விபத்தில் மரணம்..

பழனி BVB பள்ளியில் 7 வது படிக்கும் மாணவன் இன்று சாலை விபத்தில் மரணம்..காரணம் ஒழுக்கக்கேடான சமுதாயம்..

அரசு விதி சொல்கிறது ஒரு வாகனத்திற்கு மற்றொரு வாகனத்திற்கும் இடையே 10 அடி இடைவெளி தேவை என்று எவனாவது கேட்கிறானா.?
வளைவுகளில் முந்தாதே என்கிறது அரசு விதி எவனாவது கேட்கிறானா.? குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதே என்கிறது எவனாவது கேட்கிறானா.?
இடதுபுறமாக ஓவர்டேக் எடுக்காதே என்கிறது எவனாவது கேட்கிறானா.?
செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டாதே என்கிறது எவனாவது கேட்கிறானா.?

இதோ இன்று ஒரு இளந்தளிர் உயிரை விட்டுவிட்டது..காரணம் வளைவில் முந்த நினைத்தது..மற்றொன்று அருகருகே இடைவெளி இல்லாமல் வண்டியை ஒட்டிக்கொண்டு ஓட்டியபடி வந்தது..பல கனவுகளை சுமந்த அந்த இளந்தளிர் உதிர்ந்துவிட்டது..தன் பெற்றோரின் கனவை சிதைத்து சென்று விட்டது..

சமீப காலமாக திறனற்ற ஆட்சியாளர்களின் மீதான அரசியலால் சட்டங்கள் வலுவிழந்து போய் மக்களின் நேர்மையும் ஒழுக்கமும் கேள்விக்குறியாகிவிட்டது..

உலகிற்கே நாகரீகத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்த பாரத தேசம் இன்று ஒழுக்கம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு கேடுகெட்டு திரிகிறது..

வெளிநாடுகளில் சாலைகளில் வாகனங்கள் செல்லும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்..
இங்கே சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கே பயந்து சாக வேண்டியுள்ளது..எவன் எந்த பக்கத்தில் இருந்து வருவானோ என்று பயந்துகொண்டே வாகனம் ஓட்டவேண்டியாதாக உள்ளது..

எவன் வீட்டில் எழவு விழுந்தால் நமக்கு என்ன.எவனுக்கு என்ன நடந்தால் நமக்கென்ன..நாம் நம்முடைய குணத்தை மாற்றவேண்டாம்..
அதே வேகம்..அதே ஒழுக்கக்கேடு..அப்படியே செல்லட்டும்..

இழந்த உயிர் உன்னுடையதாக இருந்தால் அப்பொழுது தெரியும் இழப்பின் வேதனை என்னவென்று..
கேடுகெட்ட சமுதாயம்..
இன்று யாருக்கோ நடந்தது நமக்கு நடக்க வெகுநேரம் ஆகாது..
சாலை விதிகளை கடைபிடிப்போம்..
சாலை ஒழுங்கை கடைபிடிப்போம்..
வீட்டிலும் வெளியிலும் ஒழுங்கை கடைபிடிப்போம்..
உலகிற்கு உதாரணமாக வாழ்வோம்..

அந்த சிறுவனுக்கு கண்ணீரை அஞ்சலியாக செலுத்துவதை அன்றி வேறு வழி தெரியவில்லை..
மன்னித்துவிடு தம்பி..

18/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி 🌷

முடியுமா என்றவர்களும் முடியாது என்றவர்களும் தோற்றுப்போனார்கள்.. முடியும் என நம்பியவர்கள் அனைவருமே வரலாறு படைத்தார்கள்..ஆம் அழிக்க முடியாத வரலாறு படைத்தார்கள்..

மரணத்தை வெல்ல முடியுமா.? தலையெழுத்தை மாற்ற முடியுமா.? விதியை மாற்ற முடியுமா.? நினைப்பது எல்லாம் நடந்துவிடுமா.? இப்படி முடியுமா முடியுமா.? என கேட்டுக்கொண்டே இருந்தவர்களால் தான் வாழ்ந்ததற்கான ஒரு அடையாளத்தையும் அவர்களால் விட்டுச்செல்ல முடியவில்லை..ஏனெனில் அவர்களால் எவ்வித சாதனையும் செய்ய முடியவில்லை..

ஆனால் அப்படியே சித்தர்களை திரும்பி பாருங்கள்..ஏன் நம்மால் முடியாது..? என்று யோசித்தார்கள்..பல அற்புதங்களை செய்தார்கள்.. அவர்களும் நம்மைப்போல் பிறரை குறை கூறிக்கொண்டு நம்மால் எப்படி முடியும் நம்மால் முடியுமா.? என்றெல்லாம் யோசித்திருந்தால் இன்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வாசி யோகம் குண்டலினி யோகம் மூச்சுப்பயிற்சி ஆசனங்கள் தியானம் முத்திரைகள் மந்திரங்கள் தந்திரங்கள் வான சாஸ்திரங்கள் ஜோதிட ஞானம் உடலியல் எல்லாம் நமக்கு கிடைத்திருக்குமா.?

நாம் எப்படிப்பட்ட கலாச்சார பின்னணி கொண்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்பதை நாம் என்றைக்காவது யோசித்திருப்போமா.? நம் முன்னோர்கள் யார் ? அவர்களின் தனித்தன்மை என்ன.?அவர்கள் நமக்காக விட்டுச்சென்றது என்ன.? என்பது பற்றியெல்லாம் நாம் என்றைக்காவது யோசித்திருப்போமா.? யோசித்திருந்தால் நமக்குள் ஒளிந்துள்ள அந்த அற்புத ஆற்றல் வெளிப்பட்டு இருக்குமே..இல்லையே..

சித்தர்களை கூட உதாரணத்திற்கு எடுக்க வேண்டாம்..நமது சபையை எடுத்துக்கொள்ளுங்களேன்.. சித்தர்கள் சென்ற பாதையை பின்பற்றி தன்னுடைய சொந்த முயற்சியில் சுமார் 120 வகையான முத்திரைகளை கண்டறிந்துள்ளோம்..காற்றுகளை பற்றிய அபூர்வ ரகசியங்களை கண்டறிந்துள்ளோம்..நாடிகளை பற்றிய அபூர்வ ரகசியங்களை கண்டறிந்துள்ளோம்..சில யோகா ரகசியங்களை கண்டறிந்துள்ளோம்.. எப்படி நம்மால் மட்டும் முடிந்தது.? யோசியுங்கள்..வெற்றிக்கான சூத்திரம் தெரியும்..

ஆம் அன்பர்களே நம்மால் முடியுமா,? நம்மால் முடியாது.? என்ற வார்த்தைகளை கைவிடுங்கள்..முயற்சி செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்யுங்கள்..

எத்தனையோ மேதைகளை மகான்களை தந்த பூமி நம் தேசம்..அதன் தொடர்ச்சியாக வந்த நாம் மட்டும் மக்கு சாம்பிராணிகளாக ஆகிவிடக்கூடாது..நம்முள் ஒளிந்து கிடைக்கும் அபூர்வ சக்திகளை உயிர்ப்பிக்க வேண்டும்..நம் தேசத்திற்கு மீண்டும் உயிரூட்ட வேண்டும்..
பிறரை விமர்சிப்பதை விட்டு நாம் ஏன் இப்படி இருக்க்கிறோம் என்றும் நாம் ஏன் தோற்றுக்கொண்டு இருக்கிறோம் என்றும் யோசியுங்கள்.. குறைந்தபட்சமாக உங்களால் புதிய விஷயங்களை கண்டுபிடிக்க முடியாவிட்டால் கூட ஏற்கனவே உள்ள விஷயங்களின் வேர்களையாவது கண்டறியலாமே..

இயற்கை படைக்கும்போது சித்தர்கள் என்று கூட்டத்தையோ மகான்கள் என்று ஒரு கூட்டத்தையோ ஞானிகள் என்று கூட்டத்தையோ தனியாக படைக்கவில்லை..மனித இனத்தை சம திறனுடன்தான் படைத்தது.. எந்த மனிதன் தனக்குள் கேள்விகள் கேட்டானோ எந்த மனிதன் தன்னை நம்பினானோ எந்த மனிதன் இயற்கையை நேசித்து அது பேசுவதையே கேட்டானோ அவனெல்லாம் மேதையாகிவிட்டான்.. தன்னைக்கு திறமை இல்லை என்றும் தன் படைப்பே அவ்வளவுதான் என்றும் தன்னால் முடியாது என்றும் நினைத்த மனிதன் தன் வாழ்வையே சூனியமாக்கிக்கொண்டான்..அவ்வளவுதான்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

17/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி 🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

தடைகளை உற்று உற்றுப் பார்க்காதீர்கள்.. அதனால் உங்கள் குறிக்கோளை அடைய முடியாமல் போகலாம். குறிக்கோளை உற்றுப் பாருங்கள் தடைகள் மறைந்துவிடும் உத்வேகம் தானாக வரும்.

முயற்சிகளை விதைத்தவுடன் வெற்றிகள் முளைப்பதில்லை முயற்சியை விடாமல் பயணம் செய்து கொண்டேயிருந்தால் வெற்றிகள் வெகுதூரமில்லை.

உங்களால் முடியாது என முடிவு செய்யப்பட்டு முடங்கிவிட்டால் அது வேதனையில் முடியும். என்னால் எதுவும் முடியும் என்று எழுந்துவிட்டால் அதுவே சாதனையாக மாறும்.

தளராத இதயம் கொண்டவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை.

படைத்தவன் நம்மை உலகிற்கு அனுப்பும் போதே அழுகையோடுதான் அனுப்பி வைக்கிறான். வழி நெடுகும் விழ வைத்து தான் நடை பழக்கினான்..அதனால் அழுகையும் விழுவதும் நமக்கு புதிதல்ல.. எழுந்திருங்கள் வெற்றிக்காக ஒருமுறை முயற்சிப்போம்..

கஷ்ட காலங்களின் வலிகளை கடந்தால் தான் நம்மால் எதையும் துணிந்து எதிர் கொள்ளக் கூடிய வலிமையை பெற முடியும்.வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கடினமான காலங்கள் உண்டு. அதை கடந்து வந்தால் தான் நல்ல பாதைகளை காண முடியும்.

கடினம் என நினைத்தால் கரைசேரமுடியாது. கடந்து பார்ப்போம் என நினைத்து முன்னேறுங்கள். உங்களால் எதையும் அடைய முடியும்.

பணத்தை வைத்து எந்தவொறு உறவையும், நட்பையும் தாழ்வாக கருதாதீர்கள். ஏனெனில் வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் இல்லாதது நொடியில் எதுவும் மாறிவிடும்.

நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் என்பது உங்கள் பிறப்பிலோ, படிப்பிலோ அல்லது உங்கள் பணத்திலோ, அறிவிலோ அல்லது உங்கள் புகழ்ச்சியிலோ இல்லை. மற்றவர்களை நீங்கள் எப்படி மதிக்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது.

எவ்வளவு பேர் மதிக்கும் படி வாழ்ந்தோம் என்பதை விட, எவ்வளவு பேரின் மனதில் வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

நமது திறமைகளையும், ஆற்றல்களையும் மனநிறைவிற்காகவும் பலரது அமைதிக்காகவும் செலவழித்தால் அதுதான் உண்மையில் ஆனந்தமான வாழ்வாகும்.

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

14/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி 🌷

கலிகாலத்தில் நல்ல வேலையும் பையில் பணமும் இல்லை என்றால் சரியானதை செய்தாலும் சொன்னாலும் அது தவறாகவே எடுத்துக்கொள்ளப்படும் சூழ்நிலையாகவே உள்ளது...

மனம் குழப்பத்தில் இருக்கும் போது மௌனமாக இருக்க பழகுங்கள்.. மனக்கஷ்டம் வரும் போது தைரியமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பிரச்சனைகள் ஏற்படும் பொழுது காரங்களை தேடிக்கொண்டு இருக்காதீர்கள்..முதலில் அதற்கான தீர்வை தேடும்படி உங்கள் மனதை பழக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால், உங்கள் மனதை விட வலிமையான துணை இந்த உலகில் உங்களுக்கு வேறு எதுவுமில்லை.

சில வாழ்வியல் சூழ்நிலைகளை கடந்து செல்ல உடல் வலிமையை விட மன வலிமைதான் தேவை.

தான் இளைப்பாற முடியாது அல்லது பலனை அனுபவிக்க முடியாது என தெரிந்தும் மரம் வைப்பவனே உண்மையில் வாழ்வை உணர்ந்தவன். தனக்குள் மனிதம் உள்ளவன்..

நம்முடைய மனம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா.? வெட்டி எறிந்தாலும் மீண்டும் வேரூன்றி வெட்டியவனுக்கே நிழல் தரும் மரம் போன்ற மனம் வேண்டும் நமக்கு.

புகழ்ந்தால் மயங்காமலும், இகழ்ந்தால் தளராமல் இருக்கும் மனம் வேண்டும்.வசதியில் அடக்கமும் கஷ்டத்தில் புன்னகையும் காட்டும் குணம் வேண்டும்..

பல நேரங்களில் மூளையின் புத்திசாலித்தனத்தை விட இதயங்களின் தூய்மை தான் மிகவும் சிறந்தது.அறிவை விட ஞானமே சிறந்தது..

தான் உயர வேண்டும் என நினைப்பவன் மனிதன்.. தன்னோடு இருப்பவர்களும் சேர்ந்து உயர வேண்டும் என நினைப்பவனே மாமனிதன்.

இயற்கையின் இயல்பை புரிந்தவன் மனிதன்..ஆனால் இயற்கையுடன் இணைந்து வாழ்கிறவன் மாமனிதன்..இயற்கையை புரிந்துகொண்டால் நோயின்றி வாழலாம்..ஆனால் இயற்கையுடன் இணைந்துகொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

12/10/2024

🙏🏼குருவே சரணம் நற்பவி🙏🏼
🙏🏼தனஞ்செயனே போற்றி 🙏🏼

🌷அமுதமொழி 🌷

ஏமாற்றம் என்பது வேறு ஒன்றுமில்லை. இனி அடுத்தவரிடம் எச்சரிக்கையாய் பழக ஓர் அலாரம்.அவ்வளவுதான்..ஒரு அலாரத்தில் விழித்துக்கொள்ளுங்கள்..

இழந்ததை விடுங்கள் மிச்சம் என்ன இருக்கிறது என்று பாருங்கள். அதிலிருந்து தொடருங்கள் இன்னும் இருக்கிறது வாழ்க்கை நீங்கள் வாழ்வதற்கு.

நல்லவனாய் இருங்கள். ஆனால் மிகவும் கவனமாய் இருங்கள்.
உலகின் அத்தனை ஏமாற்று பேர்வழிகளும் நல்லவர்களைத் தான் தேடுகிறார்கள்.

யாரிடமும் ஏமாறாமல் வாழும் வாழ்க்கையை விட யாரையும் ஏமாற்றாமல் வாழும் வாழ்க்கையே சிறந்தது.

உயிர்களை தன் பக்கம் இழுக்க உலகில் ஏதேனும் காந்தம் இருக்கும் எனில் அது அன்பு மட்டுமே.

தவறுகள் பெரும்பாலும் மன்னிக்கப்படும் இடம் அன்பு நிறைந்த நெஞ்சங்களில் மட்டுமே.

நாம் ஒருவரை நேசித்தால் அது அன்பு..அதே அன்பு நமக்கு அவரால் திருப்பி கிடைத்தால் அதுவே பேரன்பு..அன்பை கொடுங்கள்..பேரன்பை பெறுங்கள்..

பணத்தைக் கொண்டு நாய் வேண்டுமானால் வாங்கிவிடலாம் ஆனால் அதன் வால் அன்பினால் மட்டுமே அசையும்..

நன்றிகள் நற்பவி
தனஞ்செயனே போற்றி
அன்புடன்
போகர் சித்தாந்த சபை
பழனி
9488008816

🙏🙏குருவே சரணம் நற்பவி 🙏🙏🙏🙏தனஞ்செயனே போற்றி 🙏🙏புண்ணியத்தை சேர்ப்பதால் மட்டுமே சகல நன்மைகளை பெறுவதுடன் அதை அனுபவிக்கவும் ம...
11/10/2024

🙏🙏குருவே சரணம் நற்பவி 🙏🙏
🙏🙏தனஞ்செயனே போற்றி 🙏🙏

புண்ணியத்தை சேர்ப்பதால் மட்டுமே சகல நன்மைகளை பெறுவதுடன் அதை அனுபவிக்கவும் முடியும்..
குருவின் கருணையாலும் அன்பர்கள் துணையாலும் வெற்றிகரமான

🌷 373 வது வாரம்

நமது போகர் சித்தாந்தசபை மூலமாக வியாழன்தோறும் செய்யப்படும் அன்னதானத்தில் சுமார் 800 நபர்களுக்கு காலை உணவாக இட்லியும் மதிய உணவாக சாப்பாடும் வழங்கப்பட்டது.மனம் நிறைவாக..

இது சாதனையாக மாற குருவின் கருணையும் அன்பர்களின் துணையும் மட்டுமே காரணமாக.... புண்ணியம் செய்யுங்கள்.. புனிதராகுங்கள்..

நன்றியுடன்
போகர் சித்தாந்தசபை
பழநி.
7094511381

👇👇👇

Address

Pengkalan Weld, Pulau Pinang
George Town
10300

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Sitharkal Ulagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sitharkal Ulagam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category