ArutSiva

29/11/2023

சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் அருகில்
நெற்குப்பை to மகிபாலன்பட்டி
சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று
உலகம் முழுவதும்
உச்சரிக்கப்படுகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர்....

இதன் முதல் வரி மட்டுமே பிரபலமாகி வருகிறது.
பாடலின்
எல்லா வரிகளும் வாழ்வின்
முழு தத்துவத்தைச்
சொல்கிறது.....

முழு பாடலும்... அதன் பொருளும்....

*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*
*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*
*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*
*சாதலும் புதுவது அன்றே;...*
*வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே;* *முனிவின் இன்னாது என்றலும் இலமே;*
*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*
*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*
*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*
*முறைவழிப் படூஉம் என்பது* *திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*
*ஆதலின் மாட்சியின்*
*பெயோரை வியத்தலும் இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*

– கணியன் பூங்குன்றனார்

*"யாதும் ஊரே யாவரும் கேளிர்*...."

எல்லா ஊரும்
எனது ஊர்....
எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,
அன்பே வாழ்வின் அடிப்படை,ஆதாரம் என்று
வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது............. சுகமானது......

*"தீதும் நன்றும் பிறர் தர வாரா*...."

தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை.......எனும் உண்மையை,உணர்ந்தால்,
சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.....

*"நோதலும் தனிதலும்*
*அவற்றோ ரன்ன...."*

துன்பமும் ஆறுதலும்கூட
மற்றவர் தருவதில்லை....
மனம் பக்குவப்பட்டால்,
அமைதிஅங்கேயேகிட்டும்...

*"சாதல் புதுமை யில்லை*.."

பிறந்த நாள் ஒன்று உண்டெனில் .....
இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*
இறப்பு புதியதல்ல....அது
இயற்கையானது....
எல்லோருக்கும்*
*பொதுவானது....
இந்த உண்மையை
உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால்....
எதற்கும் அஞ்சாமல்,
வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.......

*"வாழ்தல்இனிதுஎன* *மகிழ்ந்தன்றும் இலமே*
*முனிவின் இன்னாது என்றலும் இலமே....."*

இந்த வாழ்க்கையில்
எது, எவர்க்கு, எப்போது,
என்னாகும் என்று
எவர்க்கும் தெரியாது.....
இந்தவாழ்க்கை மிகவும்
நிலை அற்றது.....
அதனால்,இன்பம் வந்தால்
மிக்க மகிழ்வதும் வேண்டாம்...
துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம்......
வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்......

*"மின்னோரு* *வானம்* *தண்துளி தலைஇ* *ஆனாதுகல்பொருது* *இரங்கும்வ மல்லல்* *பேர்யாற்று நீர்வழிப்* *படூஉம் புணைபோல்* *ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம்* ....."

இந்த வானம் நெருப்பாய்,
மின்னலையும் தருகிறது....
நாம் வாழ
மழையையும்
தருகிறது.....இயற்கை வழியில்அது,அது
அதன் பணியை செய்கிறது....

ஆற்று வெள்ளத்தில்,
கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல,
வாழ்க்கையும்,சங்கடங்களில் அவர்,அவர் ஊழ்படி அதன் வழியில்
அடிபட்டு போய்கொண்டு
இருக்கும்....
இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...

*"ஆதலின்* *மாட்சியின்*
*பெரியோரை வியத்தலும்* *இலமே;*
*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே*...."

இந்த தெளிவு
பெற்றால்.....,
பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து
மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம்...
சிறிய நிலையில் உள்ள
சிறியவர்களைப் பார்த்து
ஏளனம் செய்து இகழ்வதும்
வேண்டாம்.....
அவரவர் வாழ்வு
அவரவர்க்கு.....
அவற்றில் அவர்,அவர்கள்
பெரியவர்கள்...

*இதை விட வேறு எவர்*
*வாழ்க்கைப் பாடத்தை*
*சொல்லித் தர முடியும்?*

16/01/2023
29/03/2022
11/12/2021
25/10/2021

'Her dad told her, "If you marry that man you will never set foot in this house again." Mary soon learned that most people felt the same way. The first years of their marriage living in Birmingham were hell-- no one would speak to them, they couldn’t find anywhere to live because no one would rent to a black man, and they had no money. But they didn't give up.

Gradually life became easier. Mary got teaching jobs, ending up as a deputy head teacher. Jake worked in a factory and then got a job at the Post Office. Slowly they made friends, but it was difficult. Mary used to tell people, "before I invite you to my home.... my husband is black." Some would never talk to her again.

Last year they celebrated their 70th anniversary and they are still very much in love, and never regretted what they did.'

Via Humanists

25/10/2021
22/01/2020

Here in this article, we will be discussing the major types of Hindu meditation and their meanings. You can also learn how different Hindu meditation techniques can be beneficial for you and how you…

01/09/2019

Today, Todd Brooks is a success. He's the owner of Brooks Gourmet Burgers & Dogs, a restaurant that brings in millions and is ranked the No. 2 burger joint in America by TripAdvisor.

10/02/2019

*"வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை:"*

👇👇👇👇 👇 👇

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,.*

*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*

*தேவைக்கு செலவிடு........*

*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*

*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*

*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*

*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*

*ஆகவே.......*

*அதிகமான சிக்கனம் அவசியமில்லை...*

*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*

*உயிர் பிரிய தான் வாழ்வு......*

*ஒரு நாள் பிரியும்.....*

*சுற்றம்,*

*நட்பு,*

*செல்வம்..*

*எல்லாமே பிரிந்து விடும்...*

*உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு......*

*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*

*உன் குழந்தைகளை பேணு......*

*அவர்களிடம் அன்பாய் இரு.......*

*அவ்வப்போது பரிசுகள் அளி......*

*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*

*அடிமையாகவும் ஆகாதே.........*

*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட,*

*பாசமாய் இருந்தாலும்,*

*பணி* *காரணமாகவோ,*

*சூழ்நிலை கட்டாயத்தாலோ,*

*உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம் புரிந்து கொள்.......!!!*

*அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் உன் சொத்து பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*

*உன் சொத்தை தான் அனுபவிக்க,*

*நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம்..*

*பொறுத்துக் கொள்..*

*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*

*கடமை,*

*அன்பை அறியார்,*

*அவரவர் வாழ்வு,*

*அவரவர் விதிப்படி என அறிந்துகொள்..*

*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*

*ஆனால்......*

*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு..*

*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு பின்*
*கை ஏந்தாதே,*

*எல்லாமே இறந்த பிறகு என,*

*உயில் எழுதி*
*வைத்திராதே..*

*நீ எப்போது இறப்பாய்*
*என - எதிர்பார்த்து*
*காத்திருப்பர்..*

*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*

*தரவேண்டியதை பிறகு கொடு..*

*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*

*மற்றவர் குடும்ப நிலை கண்டு பொறாமையால் வதங்காதே.....!!!*

*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*

*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*

*நண்பர்களிடம் அளவளாவு.*

*நல்ல உணவு உண்டு.....*

*நடை பயிற்சி செய்து.....*

*உடல் நலம் பேணி......*

*இறை பக்தி கொண்டு......*

*குடும்பத்தினர் - நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..*

*இன்னும்......*

*இருபது,*

*முப்பது,*

*நாற்பது ஆண்டுகள்..*

*சுலபமாக ஓடிவிடும்...!!*

*வாழ்வை கண்டு களி...!!*

*ரசனையோடு வாழ்.....!!*

*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*

*நான்கு நபர்களை புறக்கணி!*

🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!*

😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்காரன்
😏மமதை பிடித்தவன்

*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!*

😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!*

💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!*

🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

*நான்கு நபர்களை வெறுக்காதே!*

👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

*நான்கு விசயங்களை குறை!*

👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

*நான்கு விசயங்களை தூக்கிப்போடு!*

🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!*

👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

*நான்கு விசயங்கள் செய்!*

🌷 தியானம் ,யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்

☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘

*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....*

*பிடிச்சிருந்தா நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..!!*

*🙏ப🙏கி🙏ர🙏வு🙏ம்🙏*

Address

Singapore

Alerts

Be the first to know and let us send you an email when ArutSiva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ArutSiva:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram